இந்தியாவில் பரவும் தக்காளி காய்ச்சல்; தமிழகத்துக்கு எச்சரிக்கை

புதுடெல்லி: இந்தியாவில் புதிதாக தக்காளி காயச்சல் என்ற நோய் பரவி வருகிறது. கொரோனா, குரங்கம்மை உட்பட உலகளவில் உருவாகும் அனைத்து நோய்களும் முதலில் கண்டறியப்படும் மாநிலமாக கேரளா இருக்கிறது. கொரோனாவால் இந்த மாநிலம் ஏற்கனவே கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், ‘தக்காளி காய்ச்சல்’என்ற புதிய நோய், சிறுவர்களிடையே வேகமாக பரவி வருகிறது. கடந்த மே மாதம் 5ம் தேதி கேரளாவில் உள்ள கொல்லத்தில் இந்த நோய் முதன் முதலில் கணடறியப்பட்டது. தற்போது வரையில் அங்கு 82 சிறுவர்கள் … Read more

பார்வையாளர்கள் முன் அநாகரிகம்; விஜய் தேவரகொண்டாவுக்கு சிக்கல்

ஐதராபாத்: பார்வையாளர்கள் முன் அநாகரிகமாக நடந்துகொண்டதாக விஜய் தேவரகொண்டாவுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. லைகர் படம் தொடர்பான புரமோஷன் நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். ரசிகர்களும் அரங்கில் நிரம்பி வழிந்தனர். இந்த நிகழ்ச்சியில் விஜய் தேவரகொண்டாவும் அனன்யா பாண்டேவும் கலந்துகொண்டனர். அப்போது நாற்காலியில் அமர்ந்தபடி பேசிக்கொண்டிருந்த விஜய் தேவரகொண்டா, திடீரென தனது இரண்டு கால்களையும் எடுத்து அங்கிருந்த மேஜை மீது வைத்துக்கொண்டு பேசிக்கொண்டிருந்தார். அருகில் இருந்த பார்வையாளர்களுக்கு இது அசவுகரியமாக பட்டது. இந்த புகைப்படம் இணையதளங்களில் … Read more

தனது கனவு இல்லத்தை 500 அடி இடமாற்றி வைக்கும் பஞ்சாப் விவசாயி: காரணம் என்ன?

சண்டிகர்: பஞ்சாப் மாநிலம் சங்ரூர் கிராமத்தைச் சேர்ந்த விவாசயி ஒருவர், தன்னுடைய வீடு இருக்கும் இடத்தின் வழியாக தேசிய நெடுஞ்சாலை அமைக்க இருப்பதால், தனது இரண்டுமாடி வீட்டை அது இருக்கின்ற இடத்தில் இருந்து 500 அடி தள்ளி வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். சங்ரூர் மாவட்டம் ரோஷன்வாலா கிராமத்தைச் சேர்ந்தவர் சுக்விந்தர் சிங் சுகி. இவர் தனக்குச் சொந்தமான இடத்தில் தனது கனவு இல்லமான இரண்டு மாடி வீடு ஒன்றை கட்டியுள்ளார். இந்த நிலையில், மத்திய அரசின் பாரத்மாலா … Read more

8 வாரங்கள் கழித்தே ஓடிடிக்கு படம்; தெலுங்கு தயாரிப்பாளர்கள் கறார்

ஐதராபாத்: தியேட்டரில் வெளியாகும் படத்தை 8 வாரங்கள் கழித்தே ஓடிடிக்கு வழங்க வேண்டும் என தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது. தெலுங்கு சினிமாவில் தற்போது படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளது. ஓடிடிக்கு படம் வழங்குதல், தியேட்டர் கட்டணம், நடிகர்களின் சம்பளம் உள்ளிட்ட பிரச்னைகள் தொடர்பாக பேசி முடிவு செய்துவிட்டு இதில் சுமூக முடிவுகள் எடுக்கப்பட்டால் படப்பிடிப்புகள் தொடங்கும் என தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்து இருந்தது. அதன்படி தற்போது தெலுங்கு படப்பிடிப்புகள் நடைபெறவில்லை. இந்நிலையில் ஓடிடிக்கு படம் வழங்குவது தொடர்பாக … Read more

மலையாள படம் போல யதார்த்தமான கதையில் நடிக்க பாலகிருஷ்ணா விருப்பம்

ஐதராபாத்: மலையாள படத்தை போல ஒரு யதார்த்தமான கதையில் நடிக்க பாலகிருஷ்ணா விரும்புகிறார் என்றார் ஹனிரோஸ். தெலுங்கு சினிமாவில் மாஸ் மசாலா பட ஜானருக்கு பெயர் போனவர் பாலகிருஷ்ணா. இவரது படங்களில் லாஜிக் இருக்காது. ஆக்‌ஷன் காட்சிகளில் பலவித வித்தைகள் செய்வார். ஹீரோயிச பில்டப் அதிகம் இருக்கும். பி அண்ட் சி சென்டரில் இவரது படங்கள் பெரிய ஹிட் அடிக்கும். இவருக்கான ரசிகர்கள் பட்டாளமும் ஏராளம். கடைசியாக இவர் நடித்த அகண்டா படம் ரூ.200 கோடிக்கு மேல் … Read more

மதுபானக் கொள்கை விவகாரம்: மணீஷ் சிசோடியா மீது அமலாக்கத்துறை விசாரணை துவக்கம்

மதுபானக் கொள்கை விவகாரத்தில் மணீஷ் சிசோடியா வழக்கில் அமலாக்கத்துறை தனது விசாரணையை துவக்கியுள்ளது. தற்போது சிபிஐ அதிகாரிகளிடம் வழக்கு விவரங்களை அமலாக்கத்துறை கேட்டுள்ளது. சட்டவிரோத பண பரிவர்த்தனை குறித்து அமலாக்கத்துறை விரைவில் தீவிர விசாரணை நடத்தும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. மதுபான விற்பனை கொள்கை முறைகேட்டில் கையூட்டு பணம் எப்படி பரிவர்த்தனை செய்யப்பட்டது என்பது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. மதுபானக் கொள்கை முறைகேட்டால் டெல்லி அரசுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு குறித்து சிபிஐ விசாரணை நடத்தி … Read more

13 ஆண்டுகளுக்கு முன் நடத்தப்பட்டதுபோல் மும்பையை மீண்டும் தாக்குவோம்: பாகிஸ்தானில் இருந்து வந்த மிரட்டலால் பீதி

மும்பை: ‘மும்பையில் கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி நடந்த பயங்கரமான தீவிரவாத தாக்குதலைப் போன்ற மற்றொரு தாக்குதல் நடத்தப்படும்’ என பாகிஸ்தான் எண்ணிலிருந்து மிரட்டல்கள் வந்திருப்பதால், மும்பையில் போலீசார் உஷார்படுத்தப்பட்டு, கடலோ பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் போக்குவரத்து போலீசாரின் கட்டுப்பாட்டு அறை ஒர்லி பகுதியில் இயங்கி வருகிறது. இங்குள்ள, வாட்ஸ் அப் ஹெல்ப்லைன் எண்ணுக்கு பாகிஸ்தான் தொலைபேசி எண்ணிலிருந்து நேற்று முன்தினம் சில குறுந்தகவல்கள் வந்துள்ளன. அதில், ‘மும்பையில் 26/11 போன்ற … Read more

இமாச்சலப் பிரதேசத்தில் கனமழையால் நிலச்சரிவு: 19 பேர் உயிரிழப்பு; 5 பேர் மாயம்

இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த 24 மணிநேரமாக தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் நிலச்சரிவு, கடும் வெள்ளப்பெருக்கு மற்றும் மேகவெடிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி 19 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 5 பேர் காணாமல் போயுள்ளனர் என அம்மாநில பேரிடர் மேலாண்மை துறை இயக்குநர் சுதேஷ் குமார் மோக்தா தெரிவித்துள்ளார். மாண்டி, காங்க்ரா மற்றும் சாம்பா மாவட்டங்களில் அதீத பாதிப்பு ஏற்பட்டுள்ளது எனவும், இதுவரை 36 வானிலை தொடர்பான சம்பவங்கள் அம்மாநிலத்தில் நடந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் மாண்டி மாவட்டம் … Read more

உரசிய பாஜக; உச்சந்தலையில் கை வைத்த ஆம் ஆத்மி!

டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணிஷ் சிசோடியா ஆகியோரது தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடந்து வருகிறது. இந்த ஆட்சிக்கு மக்கள் மத்தியிலும் ஏகோபித்த ஆதரவு உள்ளது. இந்நிலையில் டெல்லியில் மதுபான கடைகளுக்கு உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக துணை முதல்வர் மணிஷ் சிசோடியா வீடு உள்ளிட்ட 21 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது அதிகாரிகளின் வீடுகளில் இருந்து முக்கிய ஆவணங்கள் சிக்கி … Read more

ஒவ்வொரு யுபிஐ பரிவர்த்தனைக்கும் கட்டணம்? ரிசர்வ் வங்கியின் முடிவால் பயனர்கள் அதிர்ச்சி

இந்தியாவில் முதன்முறையாக யுபிஐ (Unified Payment Interface) மூலம் பணப்பரிவர்த்தனை செய்யும் வசதி, 2016ம் ஆண்டு ஏப்ரல் 11 அன்று அப்போதைய ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜனால் தொடங்கப்பட்டது. கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கு மாற்றாக அறிமுகப்படுத்தப்பட்ட யுபிஐ பரிவர்த்தனை சேவை, பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு இந்தியாவில் மிகவும் பிரபலமடைந்தது. இந்தியாவில் கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் யுபிஐ மூலம் 600 கோடி பரிவர்த்தனை நடந்து சாதனை படைத்துள்ளதாக பிரதமர் மோடியும் நெகிழ்ச்சியுடன் தமது … Read more