மோடியுடன் பாஜக நிர்வாகிகளின் நீண்ட நேர சந்திப்புக்கு என்ன காரணம்?

பிரதமர் நரேந்திர மோடியுடன் பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் பேசியது என்ன? சுவாரஸ்யமான தகவல்கள் – உங்களுக்காக இதோ. இரண்டு நாள் பயணமாக, சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடி செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவில் பங்கேற்றார். அதை முடித்துக் கொண்டு இரவு 8.40 மணிக்கு ஆளுநர் மாளிகைக்கு வந்த பிரதமர் இரவு அங்கேயே தங்குவதற்கான திட்டமிடல்கள் செய்யப்பட்டிருந்தன. பிரதமர் வருவதற்கு முன்பாகவே பாரதிய ஜனதா கட்சியின் மாநில மையக்குழு என்ற உச்சபட்ச அதிகாரம் மற்றும் … Read more

குஜராத்தில் போதை மாஃபியாவை எந்த ஆளும் சக்தி பாதுகாக்கிறது? – ராகுல் கேள்வி

புதுடெல்லி: குஜராத்தில் போதைப் பொருள் மாபியா கும்பலுக்கு எந்த ஆளும் சக்தி பாதுகாப்பு அளிக்கிறது என காங்கிரஸ் எம்.பி. ராகுல் கேள்வி எழுப்பியுள்ளார். குஜராத்தின் போடாட் மாவட்டத்தில் ரோஜிட் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கள்ளச் சாராயம் குடித்த பலருக்கு மறுநாள் அதிகாலையில் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து இவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். விஷச் சாராயத்துக்கு 40 பேர் வரை உயிரிழந்துள்ளனர். 97 பேர் மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். … Read more

கொரோனா சிறப்பு முகாமில் ஒரே ‘சிரிஞ்ச்’ மூலம் 39 மாணவர்களுக்கு தடுப்பூசி; மத்திய பிரதேச நர்சிங் மாணவர் கைது

சாகர்: மத்திய பிரதேசத்தில் நடந்த கொரோனா சிறப்பு முகாமில் ஒரே சிரிஞ்ச் மூலம் 39 மாணவர்களுக்கு தடுப்பூசி போட்ட நர்சிங் மாணவரை போலீசார் கைது செய்துள்ளனர். மத்திய பிரதேச மாநிலம் சாகரில் செயல்படும் மேல்நிலைப் பள்ளியில் கொரோனா மெகா தடுப்பூசி முகாம் நடந்தது. மருத்துவ அதிகாரிகளின் மேற்பார்வையில், அரசு மற்றும் தனியார் நர்சிங் கல்லூரி மாணவர்கள் பள்ளி, மாணவ மாணவியருக்கு தடுப்பூசி போட்டனர். 15 வயதுக்கு மேற்பட்ட ஒன்பதாம் வகுப்பு முதல் 12ம்  வகுப்பு வரை உள்ள … Read more

உ.பி: மாணவர்கள் அமைத்த நாற்காலி பாலத்தில் மழைநீர் படாமல் சொகுசாக சென்ற ஆசிரியை சஸ்பெண்ட்!

உத்தரப்பிரதேசத்தில் வெள்ளத்தால் சூழப்பட்ட அரசுப்பள்ளியில், மாணவர்கள் அமைத்த நாற்காலி பாலத்தில் சொகுசாக நடந்து வந்த ஆசிரியை வீடியோ வைரலானதை அடுத்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் மதுராவில் பல்தேவ் கிராம பஞ்சாயத்து தகெட்டாவில் செயல்பட்டு வரும் ஆரம்பப் பள்ளி கனமழை காரணமாக வெள்ளத்தால் முழுவதுமாக சூழப்பட்டுள்ளது. இருப்பினும் பள்ளி செயல்படத் துவங்கிய நிலையில், மாணவர்கள் தேங்கிய மழைநீரில் நடந்து வகுப்பறையை அடைந்துள்ளனர். ஆனால் அவர்களுக்கு பாடம் எடுக்கும் ஆசிரியை, மாணவர்கள் பிளாஸ்டிக் நாற்காலிகளை கொண்டு அமைத்த … Read more

“சென்னை நினைவுகள்… மறக்கமுடியாத பயணத்திற்கு நன்றி” – பிரதமர் மோடி வெளியிட்ட சுவாரஸ்ய வீடியோ

சென்னை: இரண்டுநாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்த பிரதமர் மோடி, சென்னை நிகழ்வுகள் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி, நேற்று தனி விமானம் மூலம் சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஐஎன்எஸ் கடற்படைத் தளத்திற்கு சென்ற பிரதமர், அங்கிருந்து கார் மூலம் தொடக்க விழா நடந்த நேரு உள்விளையாட்டரங்கத்திற்கு சென்றார். அங்கு நடைபெற்ற கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவைகளை … Read more

‘நக பாலிஷ்’ ஆர்ட்டிஸ்ட் முதல் சினிமா தயாரிப்பாளர் வரை பணம் குவித்தது எப்படி? அமைச்சருடன் ஏற்பட்ட தொடர்பு குறித்து பரபரப்பு தகவல்

கொல்கத்தா: ஆசிரியர் நியமன ஊழல் விவகாரம் தொடர்பாக தமிழ் நடிகை அர்பிதா முகர்ஜியிடம் இதுவரை ரூ.53.21 கோடி பறிமுதல் செய்ததாக அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறினர். மேற்குவங்க மாநிலத்தில் ஆசிரியர் நியமன ஊழல் விவகாரம் தொடர்பாக கொல்கத்தா நாக்தலா பகுதியில் வசிக்கும் அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த வாரம் சோதனை நடத்தினர். அதேநேரத்தில் பார்த்தாவின் நெருங்கிய உதவியாளரும் தமிழ் நடிகையுமான அர்பிதா முகர்ஜி வீட்டிலும் சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் அர்பிதாவின் வீட்டில் மறைத்து … Read more

'ராஷ்ட்ரபத்தினி' சர்ச்சை: கடும் அமளியால் முடங்கிய நாடாளுமன்றம்! திங்கள் வரை ஒத்திவைப்பு!

அதிர் ரஞ்சன் சௌதுரியின் “ராஷ்ட்ரபத்தினி” சர்ச்சையால் நாடாளுமன்றத்தில் ஆளும் கூட்டணி – எதிர்க்கட்சிகள் மோதல் வெள்ளிக்கிழமையான இன்று மேலும் தீவிரமடைந்து மக்களவை மற்றும் மாநிலங்களவையை முழுமையாக முடக்கியது. ஒரு மசோதாவைக் கூட பரிசீலனைக்கு எடுக்க முடியாத சூழலில் இரண்டு அவைகளும் திங்கள்கிழமை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன. வாரந்தோறும் வெள்ளிக்கிழமை விவாதிக்கப்படும் தனிநபர் மசோதாக்கள் கூட பரிசீலனைக்கு வரவில்லை என்கிற அளவுக்கு கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. மக்களவை வெள்ளிக்கிழமை காலையில் கூடியதும் அதிர் … Read more

ஸ்மிருதி இரானி மகள் குறித்த பதிவுகளை நீக்க காங். தலைவர்களுக்கு டெல்லி ஐகோர்ட் உத்தரவு

புதுடெல்லி: மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, அவரது மகள் குறித்த அவதூறான சமூகவலைதளப் பதிவுகளை காங்கிரஸ் தலைவர்கள் மூவரும் 24 மணி நேரத்திற்குள் நீக்க வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தன் மீதும், தனது மகள் மீதும் காங்கிரஸ் தலைவர்கள் பவன் கேரா, ஜெய்ராம் ரமேஷ் மற்றும் நேட்டா டிசோஷா ஆகியோர் ஆதாரம் இல்லாமல் குற்றம்சாட்டியிருக்கின்றனர் என்றும், தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதற்காக நஷ்டஈடு தர வேண்டும் என்றும் … Read more

அமைச்சர் பிறந்தநாள் கொண்டாட்டத்தை தவிர்த்த ஊழியர்கள் சஸ்பெண்ட் – என்ன நடந்தது தெரியுமா ..?

ஜூலை 24 அன்று நடந்த தெலுங்கானா நகராட்சி நிர்வாக அமைச்சர் கே.டி.ராமராவ் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ளத் தவறியதற்காக, தெலுங்கானாவில் உள்ள மஞ்சேரியல் மாவட்டத்தில் உள்ள பெல்லம்பள்ளி முனிசிபல் கவுன்சில் ஆணையர், நான்கு அரசு மருத்துவமனை ஊழியர்களுக்கு மெமோ ஒன்றை வழங்கியுள்ளார். அறிவிப்பைப் பெற்ற 24 மணி நேரத்திற்குள் விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டுள்ளார். நகராட்சி ஆணையர் கோபு கங்காதர் வெளியிட்டுள்ள குறிப்பில், “மேற்கண்ட குறிப்புடன், மாண்புமிகு நகராட்சி அமைச்சர் கே. தாரக ராமராவ் பிறந்தநாள் விழா 24.07.2022 … Read more

அதிக சேமிப்பு திறன் கொண்ட பேட்டரிகள் உற்பத்தியில் களமிறங்கும் மூன்று நிறுவனங்கள்..!

இந்தியாவில் மின்சார வாகனங்களின் உற்பத்தியை ஊக்குவிக்கவும், தரமான அதிக சேமிப்பு திறன் கொண்ட பேட்டரிகளை உற்பத்தி செய்யவும், மத்திய அரசால் செயல்படுத்தப்படும் 18,000 கோடி ரூபாய் மதிப்பிலான உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத் தொகை திட்டத்தில் இந்தியாவின் ரிலையன்ஸ் நியூ எனர்ஜி, ஓலா எல்க்ட்ரிக் மற்றும் ராஜேஷ் எக்ஸ்போர்ட் ஆகிய நிறுவனங்கள் களம் இறங்குகின்றன. இதன்படி, மேம்பட்ட வேதியியல் சேமிப்பு செல் பேட்டரிகளை தயாரிக்கும் தொழிலில் இந்த நிறுவனங்கள் ஈடுபடும். தரமான அதிக சேமிப்பு திறன் கொண்ட பேட்டரி … Read more