கன்னையா லால் கொலையாளிகளுக்கு தீவிரவாத அமைப்புடன் தொடர்பு.. மேலும் 3 பேர் கைது..!

உதய்பூரில் தையல்காரர் கன்னையா லாலை படுகொலை செய்த கொலைகாரர்கள்இ பாகிஸ்தானின் தாவத் இ ஸ்லாமி தீவிரவாத அமைப்புடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கொலையாளிகளில் ஒருவன் 2014 ஆம் ஆண்டு கராச்சிக்கு சென்று அந்த தீவிரவாத அமைப்பினரை சந்தித்து வந்துள்ளதாக ராஜஸ்தான் டிஜிபி லாத்தெர் ஜெய்பூரில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். கொலையாளிகளுடன் தொடர்பில் இருந்த மேலும் 3 பேரை கைது செய்து விசாரித்து வருவதாகவும் அவர் கூறினார்.  Source link

ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை நிறுத்தம்?.. முடிவெடுக்காமல் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நிறைவடைந்ததால் பல்வேறு மாநிலங்கள் அதிர்ச்சி..!

டெல்லி: ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை வழங்குவதை நீட்டிக்க ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படாதது பல்வேறு மாநிலங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 2017ம் ஆண்டில் சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்பட்ட போது மாநிலங்களுக்கு ஏற்படும் வரி வருவாய் இழப்பை தவிர்க்க இழப்பீட்டு தொகை வழங்கப்படும் என ஒன்றிய அரசு தெரிவித்தது. 2015-16ம் நிதியாண்டின் வருவாயை அடிப்படையாக கொண்டு ஒவ்வொரு ஆண்டும் மாநிலங்களில் வரி வருவாய் 14% உயர்வது உறுதி செய்யப்படும் என்றும், அதில் குறையும் தொகையை … Read more

மிரட்டுகிறார்கள்; பாதுகாப்பு தாருங்கள் – நபிகளை அவதூறாக பேசிய நவீன் ஜிண்டால் கோரிக்கை

தனக்கு கொலை மிரட்டல் தொடர்ந்து வருவதால் பாதுகாப்பை அதிகரிக்குமாறு நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பதிவிட்ட முன்னாள் பாஜக நிர்வாகி நவீன் ஜிண்டால் கோரிக்கை விடுத்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரைச் சேர்ந்த கன்னையா லால் என்பவரை இரண்டு பேர் நேற்று முன்தினம் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்தனர். மேலும், அதனை வீடியோ எடுத்தும் அவர்கள் வெளியிட்டனர். நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசிய பாஜக நிர்வாகி நுபுர் சர்மாவை ஆதரித்து கருத்து பதிவிட்டதால் கன்னையா லாலை … Read more

பிஹாரில் ஒவைசி கட்சியின் 4 எம்எல்ஏ ஆர்ஜேடியில் ஐக்கியம்

பாட்னா: பிஹாரில் அசாதுதீன் ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சியைச் சேர்ந்த 4 எம்எல்ஏ.க்கள் லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தில் (ஆர்ஜேடி) சேர்ந்தனர். பிஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் – பாஜக கூட்டணி ஆட்சி நடக்கிறது. எதிர்க்கட்சியாக ஆர்ஜேடி உள்ளது. இந்நிலையில், அசாதுதீன் ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சியைச் சேர்ந்த ஷாநவஸ் ஆலம் (ஜோகிஹட் தொகுதி), முகமது அன்சர் நயீமி ((பஹதூர்பூர்), முகமது இசார் அஸ்பி (கோச்சாதாமன்) சையித் ருக்னுதீன் அகமது (பைசி) ஆகிய … Read more

டெல்லியில் இன்று காலை முதல் கனமழை.. சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியது..!

தலைநகர் டெல்லியில் இன்று காலை கனமழை பெய்தது. நகரின் பல்வேறு பகுதிகளிலும் விடாமல் மழை பெய்ததால் பணிக்கு செல்வோர் சிரமத்திற்குள்ளாகினர். இதேபோல் உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்திலும் கனமழை பெய்தது. நேற்று இரவு பெய்த கனமழையில் பெரும்பாலான சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியது. மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ள பகுதிகளை அடையாளம் கண்டு அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக ருத்ரபிரயாக் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆயுஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.     Source link

ட்விட்டா் நிறுவனத்துக்கு ஜூலை 4 வரை கெடு விதித்தது ஒன்றிய அரசு

டெல்லி: ஒன்றிய அரசின் உத்தரவுகளை முழுமையாக பின்பற்ற ட்விட்டா் நிறுவனத்துக்கு ஜூலை 4ம் தேதி வரை ஒன்றிய அரசு கெடு விதித்தது. உத்தரவுகளை பின்பற்றாவிடில் ட்விட்டா் நிறுவனம் சட்டப் பாதுகாப்பை இழக்க நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுத்தது.

உத்தவ் தாக்கரே ராஜினாமாவால் பாஜகவினர் கொண்டாட்டம் – முதல்வராகிறார் ஃபட்னாவீஸ்

மகாராஷ்டிரா முதல்வர் பதவியை உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்ததை அடுத்து அங்கு பாஜகவினர் பெரும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனாவின் 39 எம்எல்ஏக்கள் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக அணி திரண்டுள்ளனர். இதனால் ஆட்சியில் இருப்பதற்கான பெரும்பான்மையை சிவசேனா இழந்தது. இதையடுத்து, முக்கிய எதிர்க்கட்சியான பாஜகவின் பரிந்துரையின் பேரில் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு அம்மாநில ஆளுநர் கோஷ்யாரி உத்தரவிட்டார். இந்த உத்தரவுக்கு எதிராக சிவசேனா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. 16 அதிருப்தி எம்எல்ஏக்களை … Read more

மகாராஷ்டிரா அடுத்த முதல்வர் யார்?- இரவு முழுவதும் அடுத்தடுத்து நடந்த அரசியல் திருப்பங்கள்

மும்பை: மகாராஷ்டிர முதல்வர் பதவியில் இருந்து உத்தவ் தாக்கரே விலகியுள்ள நிலையில் நேற்று இரவு முழுவதும் அடுத்தடுத்து அரசியல் திருப்பங்கள் நடந்தன. அடுத்த முதல்வரை முடிவு செய்ய பாஜக மற்றும் அதிருப்தி சிவசேனா எம்எல்ஏக்களின் கூட்டம் இன்று நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிவசேனா கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 38 எம்எல்ஏக்கள் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். அவர்கள் அசாம் மாநிலம் குவாஹாட்டியில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கி இருந்தனர். மகாராஷ்டிர … Read more

ஆந்திராவில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்: முதல்வர் ஜெகன் அறிவிப்பு

அமராவதி: மின்சாரம் தாக்கி உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் ஜெகன்மோகன்ரெட்டி தெரிவித்தார். ஆந்திர மாநிலம் ஸ்ரீ சத்தியசாய் மாவட்டத்தில் ஆட்டோ மீது மின்கம்பி அறுந்து விழுந்ததில் மின்சாரம் பாய்ந்து தீப்பிடித்து எறிந்த விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

‘மழை பெஞ்சா என்ன? சிறுவனை நாங்க கைவிடமாட்டோம்’- ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன் மீட்பு

மத்தியப் பிரதேசத்தில் மூடப்படாத ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 5 வயது சிறுவன், சுமார் 8 மணி நேர போராட்டத்துக்குப்பின் பத்திரமாக மீட்கப்பட்டார். சத்தர்பூர் மாவட்டம் நாராயண்பூர் கிராமத்தில் அகிலேஷ் யாதவ் என்பவரின் 5 வயது மகன் திபேந்திரா யாதவ், ஆழ்துளைக்கிணற்றில் விழுந்தார். சுமார் 30 அடி ஆழத்தில் சிக்கியிருந்த அச்சிறுவனை மீட்க, தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் போராடினர். இடையே மழை பெய்ததால், மீட்புப் பணிகள் சவாலானதாக அவர்களுக்கு அமைந்தது. எனினும் விடாமுயற்சியுடன் செயல்பட்ட … Read more