கங்கனா வழக்கில் மூதாட்டிக்கு நோட்டீஸ்: விவசாயிகள் போராட்டம் குறித்து சர்ச்சை பதிவு

சண்டிகர்: விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்ற மூதாட்டி குறித்து சர்ச்சை கருத்து கூறிய நடிகை கங்கனா வழக்கில், மூதாட்டிக்கு பஞ்சாப் உயர் நீதிமன்றம் ஒரு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பஞ்சாப் மாநிலம் பதிண்டா அடுத்த ஃபதேகர் ஜந்தியா கிராமத்தைச் சேர்ந்த மகிந்தர் கவுர் என்ற 70 வயது மூதாட்டி, புதிய வேளாண் சட்டத்துக்கு எதிராக நடந்த போராட்டத்தில் பங்கேற்றார். அவரைப் பற்றி கங்கனா தனது சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய கருத்து களைப் பதிவிட்டார். இதற்கு மகிந்தர் கவுர் கடும் கண்டனம் … Read more

கியான்வாபி மசூதி வழக்கில் திருப்பம்: முஸ்லிம்களுக்கு சாதகமாக இந்து தரப்பு வழக்கறிஞர் செயல்படுவதாக புகார்

புதுடெல்லி: உத்தர பிரதேசம், வாரணாசியில் பழம்பெரும் காசி விஸ்வநாதர் கோயிலை ஒட்டியபடி கியான்வாபி மசூதி அமைந்துள்ளது. அங்கிருந்த கோயிலை இடித்து முகலாய மன்னர் அவுரங்கசீப், மசூதி கட்டியதாகக் கூறப்படுகிறது. இதன் மீதானவழக்குகள் நடைபெற்று வரும் நிலையில், காசி விஸ்வநாதர் கோயிலில் இருக்கும் சிங்காரக் கவுரி அம்மனை தினமும் வழிபட அனுமதி கோரி வழக்கு தொடுக்கப்பட்டது. இது, மசூதியின் வளாக சுவரில் அமைந்திருப்பதால் ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் அம்மனை வழிபட அனுமதி வழங்கப்படுகிறது. இந்த வழக்கில் வாரணாசி … Read more

டுனா மீன் ஏற்றுமதியில் ரூ.9 கோடி மோசடி லட்சத்தீவு எம்பி வீடுகளில் சிபிஐ சோதனை

புதுடெல்லி: தேசியவாத காங்கிரஸ் கட்சியின் லட்சத்தீவு நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளவர் முகமது பைசல். இவரது மருமகன் அப்துல் ராசிக் தங்கல், இலங்கையில் ‘எஸ்ஆர்டி ஜெனரல் மெர்ச்சன்ட்ஸ்’ என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இதற்கு லட்சத்தீவில் இருந்து டுனா மீன் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதற்காக, ‘லட்சத்தீவு கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு லிமிடெட்’ என்ற போலி நிறுவனத்தை 2016-2017ம் ஆண்டு உருவாக்கி, லட்சத்தீவை சேர்ந்த மீனவர்களிடம் 287 மெட்ரிக் டன் டுனா மீன்களை கொள்முதல் செய்து, அதிக விலைக்கு ஏற்றுமதி … Read more

தேசிய சின்னத்துக்கு அவமதிப்பா? – சிற்பி சுனில் தியோர் விளக்கம்

புதுடெல்லி: புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் அமைக்கப்பட்டுள்ள தேசியச் சின்னத்துக்கு அவமதிப்பு என்று எதிர்க்கட்சியினர் குற்றச்சாட்டுகளை வைத்துள்ள நிலையில், அதற்கு தேசியச் சின்னத்தை உருவாக்கிய சிற்பி சுனில் தியோர் விளக்கம் அளித்துள்ளார். டெல்லியில் புதிதாக கட்டப்பட்டு வரும் நாடாளுமன்ற கட்டிடத்தின் மேற்பரப்பில் தேசியச் சின்னம் நிறுவப்பட்டுள்ளது. இதை நேற்று முன்தினம்பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்தப் புதிய சின்னம் மாற்றியமைக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டுள்ளதாக திரிணமூல்காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் மாநிலங்களவை எம்.பி ஜவஹர் சிர்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் … Read more

டோல்கேட் ஊழியர் கன்னம் ‘பழுத்தது’: கிரேட் காளி ஆக்ரோஷம்

சண்டிகர்: பஞ்சாப்பில் டோல்கேட் ஊழியர் கன்னத்தில் மல்யுத்த வீரர் காளி அறைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த தாலிப் சிங் ரானா எனப்படும், ‘கிரேட் காளி’ என்ற மல்யுத்த வீரர், பஞ்சாபின் ஜலந்தரில் இருந்து அரியானாவில் உள்ள கர்னாலுக்கு நேற்று காரில் சென்றார். அப்போது, லோதோவால் டோல்கேட்டில் காளியின் வாகனத்தை நிறுத்திய ஊழியர்கள், கட்டணம் கேட்டனர். அதற்கு அவர், ‘நான் பிரபல மல்யுத்த வீரர்’ என கூறியுள்ளார். அவர்கள் அவரது அடையாள அட்டையை … Read more

முதலாவது ஐ2யு2 மாநாடு: காணொலி வாயிலாக பிரதமர் மோடி பங்கேற்கிறார்

புதுடெல்லி: முதலாவது இந்தியா- இஸ்ரேல், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் அமெரிக்கா (ஐ2யு2) காணொலி மாநாடு வியாழக்கிழமை நடைபெற உள்ளது. இம்மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். இஸ்ரேல் பிரதமர் யாகிர் லாபிட், ஐக்கிய அரபு அமீரக அதிபர் முகமது பின் சையத் அல் நஹ்யான் மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆகியோர் இதில் பங்கேற்கின்றனர். இம்மாநாட்டில் ஐ2யு2 வகுத்துள்ள வரம்பிற்குள் மேற்கொள்ளக்கூடிய திட்டப் பணிகள் மற்றும் உறுப்பு நாடுகளின் பொதுவான நலத் திட்டப் பணிகள் … Read more

ஜனாதிபதி தேர்தலில் திருப்பம் பாஜ வேட்பாளர் முர்முவுக்கு தெலுங்கு தேசம் திடீர் ஆதரவு: நட்புக்கரம் நீட்டுகிறார் சந்திரபாபு

திருமலை: தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, ஜனாதிபதி தேர்தலில் பாஜ வேட்பாளர் திரவுபதி முர்முவுக்கு திடீரென ஆதரவு அளித்துள்ளார். கடந்த 2014 மக்களவை தேர்தலின் போது பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தெலுங்கு தேசம் கட்சி இருந்தது. ஒன்றிய அரசிலும் தெலுங்கு தேசம் அமைச்சர்கள் இடம் பெற்றனர். பிரதமர் மோடிக்கும், அமித்ஷாவுக்கும் மிக நெருக்கமாக இருந்த சந்திர பாபு, பின்னர் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கூட்டணியில் இருந்து விலகினார். நாடாளுமன்றத்தில் மோடிக்கு எதிராக … Read more

கார்த்தி சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது ஆகஸ்ட் 18-ல் விசாரணை

புதுடெல்லி: ஆகஸ்ட் 18-ம் தேதி காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறவுள்ளது. கடந்த 2011-ல் ப. சிதம்பரம் மத்திய உள்துறை அமைச்சராக இருந்தபோது, 263 சீனர்களுக்கு கார்த்தி சிதம்பரம் முறைகேடாக விசா பெற்றுத் தந்ததாகப் புகார் எழுந்தது. இதற்காக அவர் ரூ.50 லட்சம் லஞ்சமாக பெற்றதாகவும் புகார் கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், கார்த்தி … Read more

நாடாளுமன்ற கட்டிடத்தில் பிரதமர் மோடி திறந்து வைத்த பிரமாண்ட தேசிய சின்னத்தில் ஆக்ரோஷமான சிங்கங்கள்: பழைய சிங்கம் போல் இல்லை; எதிர்க்கட்சிகள் கண்டனம்

புதுடெல்லி: புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் பிரதமர் மோடி திறந்து வைத்த தேசிய சின்னத்தில் ஆக்ரோஷமான சிங்கங்கள் இடம் பெற்றிருப்பதாகவும், இது தேசிய சின்னத்தையே சிதைப்பதாக இருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. டெல்லியில் ரூ.1,250 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் மேற்கூரையில், 9,500 கிலோ எடை கொண்ட 20 அடி உயர பிரமாண்ட வெண்கல தேசிய சின்னத்தை பிரதமர் மோடி நேற்று முன்தினம் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படாதது குறித்து பல்வேறு … Read more

கேரளாவில் முதல்முறை ஓணம் பம்பர் லாட்டரி முதல் பரிசு ரூ.25 கோடி: டிக்கெட் விலை ரூ.500

திருவனந்தபுரம்: கேரளாவில் ஓணம், சித்திரை விஷு, கிறிஸ்துமஸ், புத்தாண்டு உட்பட பண்டிகைகளை முன்னிட்டு பம்பர் லாட்டரி பரிசு அறிவிக்கப்படுவது வழக்கம். கடந்த 3 வருடங்களாக ஓணம் பம்பர் முதல் பரிசு ரூ. 12 கோடியாக இருந்தது. இந்நிலையில், இந்த வருடம் பரிசுத்தொகையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டது. இதன்படி, முதல் பரிசாக ரூ.25 கோடி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 2வது பரிசாக ரூ.5 கோடியும், மூன்றாவது பரிசாக 10 பேருக்கு ரூ.1 கோடியும் கிடைக்கும். டிக்கெட் விலை ரூ.500 ஆக … Read more