நைட் க்ளப்பில் பெண்ணிடம் பாலியல் தொல்லை -நண்பர்கள் மீது தாக்குதல்: பவுன்சர்கள் அட்டூழியம்

நைட் கிளப்புக்கு வந்த நண்பர்களை பவுன்சர்கள் தாக்கிய சம்பவம் குறித்த வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. ஹரியானா மாநிலம் குருக்ரம் மாவட்டத்தில் உள்ள நைட் க்ளப் ஒன்றுக்கு நண்பர்களாக சேர்ந்து ஒரு டீம் சென்றுள்ளது. அப்போது அந்த டீமில் இருந்த இளம்பெண் ஒருவரை அந்த க்ளப்பில் வேலை செய்து வரும் பவுன்சர்களில் ஒருவர் தவறாக தொட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து நண்பர்கள் பவுன்சர்களிடம் வாக்குவாதம் செய்துள்ளனர். அப்போது நைட் க்ளப் மேலாளர் நண்பர்களாக வந்தவர்களை அப்புறப்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து பவுன்சர்கள் … Read more

பில்லி, சூனிய மந்திர விமர்சனம்: பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கண்டனம்

கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி நாட்டில் அதிகரித்துள்ள விலைவாசி, பணவீக்கம் மற்றும் வேலைவாய்ப்பின்மையை கண்டித்து காங்கிரஸ் சார்பில் நாடு தழுவிய போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, காங்கிரஸ் முன்னாள் அமைச்சர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். இந்தப் போராட்டத்தில் அனைவரும் கருப்புச் சட்டை அணிந்து பங்கேற்றனர். இந்நிலையில் நேற்று பிரதமர் மோடி ஒரு ட்வீட் பகிர்ந்திருந்தார். அதில் காங்கிரஸ் கட்சியைக் குறிப்பிடாமல், “சிலர் ஆகஸ்ட் 5ஆம் தேதி பில்லி, சூனிய … Read more

வாழ்த்து சொன்ன ஸ்டாலின்: அண்ணனுக்கு நன்றி சொன்ன தேஜஸ்வி

பிகாரில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறிய நிதிஷ் குமார், ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளுடன் இணைந்து புதிய கூட்டணி ஆட்சியை அமைத்துள்ளார். அதன்படி, நேற்று மாநில முதல்வராக நிதிஷ் குமார் மீண்டும் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். பிகார் முதல்வராக அவர் பதவியேற்பது இது 8ஆவது முறை. நிதிஷ் குமாரைத் தொடர்ந்து மாநிலத்தின் துணை முதல்வராக ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் தேஜஸ்வி யாதவ் பதவியேற்றுக் கொண்டார். … Read more

ரக்சா பந்தன்.. புனிதமான சகோதர பந்தம்

சகோதரத்துவத்தைப் போற்றும் ரக்சா பந்தன் பண்டிகை, நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. ஒரு கொடியில் பூத்த இரண்டு மலர்களின் பாச பந்தம்தான் அண்ணன்-தங்கை உறவு. ஒரே தாயிடம் பிறந்து ஒன்றாக வளர்ந்து, அன்புக்கும் அரவணைப்புக்கும் பிணைப்புக்கும் ஆளாகும் உறவை, மேலும் பலப்படுத்தி இனிக்க வைக்கும் திருவிழா தான் ரக்சா பந்தன். ஆண்டுதோறும் ஆவணி மாதம் பவுர்ணமி நாளில் ரக்சா பந்தன் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்நாளில் பெண்கள் தங்கள் சகோதரர்கள் மற்றும் சகோதரர்களாகக் கருதுவோரின் மணிக்கட்டில் மஞ்சள் … Read more

உச்சநீதிமன்றத்தில் அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும்: தலைமை நீதிபதி என்.வி.ரமணா உத்தரவு..

டெல்லி: உச்சநீதிமன்றத்தில் அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும் என தலைமை நீதிபதி என்.வி.ரமணா உத்தரவு பிறப்பித்துள்ளார். வழக்கறிஞர்கள் அனைவரும் மாஸ்க் அணிந்து வாதங்களை முன்வைக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

74 நாட்கள் மட்டுமே தலைமை நீதிபதி பதவி – யார் இந்த யு.யு.லலித்?

புதுடெல்லி: நாட்டின் 49-வது தலைமை நீதிபதியாக உதய் உமேஷ் லலித்தை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நியமித்துள்ளார். யு.யு.லலித் வரும் 27-ம் தேதி பதவியேற்பார். 74 நாட்கள் மட்டுமே இவர் இந்தப் பதவியில் இருப்பார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா இம்மாதம் 26-ம் தேதி பணி ஓய்வு பெறுகிறார். இதையொட்டி அடுத்த தலைமை நீதிபதியின் பெயரை பரிந்துரைக்குமாறு தலைமை நீதிபதி என்.வி.ரமணாவுக்கு மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கடந்த 3-ம் தேதி … Read more

2 ஆண்டுகளுக்கு பின் உள்நாட்டு விமான கட்டணங்களுக்கான உச்ச வரம்பை நீக்கிய ஒன்றிய அரசு: ஆக.31 முதல் அமல்..பயணிகள் கவலை..!!

டெல்லி: விமான பயணிகளிடம் கட்டணம் வசூலிப்பது தொடர்பான கட்டுப்பாட்டை ஒன்றிய அரசு நீக்க முடிவு செய்துள்ளதால் இனி விமான சேவை நிறுவனங்கள் தங்கள் விருப்பம் போல கட்டணத்தை நிர்ணயிக்கும் சூழல் உருவாகியுள்ளது. கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வந்த போது 2020ம் ஆண்டு மே 25ம் தேதி மீண்டும் விமானங்கள் இயக்க அனுமதி அளிக்கப்பட்டது. அப்போது பயண நேரத்தின் அடிப்படையில் கட்டணத்தின் மீது உச்ச வரம்பு நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி 40 நிமிடங்களுக்கு குறைவான பயண நேரத்தை கொண்ட … Read more

குவாண்டம் இயக்கத்தை கண்டுபிடித்தது பிரேக்கிங் பேட் வால்டரா? – பஞ்சாப் பள்ளியால் சர்ச்சை!

குவாண்டம் இயக்கவியலை கண்டுபிடித்த விஞ்ஞானிகளில் ஒருவரான வெர்னர் ஹைசன்பெர்க் படத்திற்கு பதில் பிரபல வெப் சீரிஸ் கதாப்பாத்திரத்தில் நடித்த நடிகரின் படத்தை மாற்றி வைத்திருந்தது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. மாணவர்களோ, பொதுமக்களோ இந்த தவறை தெரியாமல் செய்திருந்தால் ஏற்றுக்கொள்வது சரியாகப்படலாம். ஆனால் இதனை செய்ததில் பாடம் கற்பிக்கும் பள்ளியில் நடந்திருக்கிறது என்பதுதான் சர்ச்சைக்கு வித்திருக்கிறது. பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பள்ளியில்தான் இந்த மாபெரும் தவறை செய்திருக்கிறார்கள் என்பது வைரலான வீடியோவின் மூலம் … Read more

காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு: ராணுவ வீரர்கள் மூவர் வீரமரணம்; 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்: காஷ்மீரில் ரஜோரி மாவட்டத்தில் உள்ள ராணுவ முகாமுக்குள் நுழைய முயன்ற இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலின் போது மூன்று ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். ரஜோரி மாவட்டத்தில் உள்ள தர்ஹால் ராணுவ முகாமில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. இன்று அதிகாலை நடந்த இச்சம்பவம் குறித்து காவல்துறை கூடுதல் இயக்குநர் ஜெனரல் முகேஷ் சிங் கூறுகையில், “பார்கல் ராணுவ முகாமில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பு வேலியைத் தாண்ட சிலர் முயன்றனர். அவர்களை ராணுவ வீரர்கள் … Read more

இந்தியாவில் ஒரே நாளில் 16,299 பேருக்கு கொரோனா… 53 பேர் பலி: ஒன்றிய சுகாதாரத்துறை அறிக்கை!!

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 4 கோடியை தாண்டியது. இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:* புதிதாக 16,299 பேர் பாதித்துள்ளனர்.* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,42,06,996ஆக உயர்ந்தது.* புதிதாக 54 பேர் இறந்துள்ளனர்.* இதனால், நாட்டின் … Read more