பிரிட்ஜில் வைக்கப்படும் கறி, மீனில் 30 நாள் கொரோனா இருக்கும்; விஞ்ஞானிகள் எச்சரிக்கை

புதுடெல்லி: கொரோனா வைரஸ் பல்வேறு விதமாக உருமாற்றம் அடைந்து உலக மக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் பற்றி தொடர்ந்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆய்விலும் ஒவ்வொரு அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி வருகிறது. அதன்படி, ‘அப்ளைடு அண்ட் என்விரான்மென்டல் மைக்ரோபயாலஜி’ இதழில் சமீபத்தில் ஒரு ஆய்வறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. அதில், வீடுகள், கடைகளில் பயன்படுத்தப்படும் பிரிட்ஜ், பிரீசர்களில் வைத்து பாதுகாக்கப்படும் இறைச்சி, மீன்களில் 30 நாட்கள் வரையில் கொரோனா வைரஸ் உயிர் வாழும்,’ என்ற அதிர்ச்சி … Read more

திருப்பதி பிரமோற்சவத்தில் பக்தர்கள் பங்கேற்க அனுமதி; செப். 27ல் தொடங்கி 9 நாட்கள் நடக்கிறது

திருமலை: திருப்பதியில் செப்டம்பர் 27ம் தேதி கொடியேற்றத்துடன் பிரமோற்சவம் தொடங்கி 9 நாட்கள் நடக்கிறது. 2 ஆண்டுகளுக்கு பிறகு பிரமோற்சவத்தில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டம் தலைவர் சுப்பாரெட்டி தலைமையில் நேற்று முன்தினம் நடந்தது. பின்னர் சுப்பா ரெட்டி அளித்த பேட்டி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மிக பிரமாண்டமாக பிரமோற்சவம் நடைபெறுவது வழக்கம். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஏழுமலையானை தரிசிப்பார்கள். ஆனால், கொரோனாவால் கடந்த … Read more

குஜராத் முந்த்ரா துறைமுகத்தில் சுமார் 350 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்.!

குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் உள்ள முந்த்ரா துறைமுகத்தில் வெளிநாட்டில் இருந்து அண்மையில் வந்த கன்டெய்னரில் இருந்து சுமார் 350 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் போதைப்பொருளை தீவிரவாத தடுப்பு படையினர் கைப்பற்றினார்கள். கன்டெய்னரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 70 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இதே முந்த்ரா துறைமுகத்தில் சுமார் 21 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள 3 ஆயிரம் கிலோ ஹெராயின் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. Source link

கடந்த 6 மாதத்தில் மட்டும் ஒன்றிய துறைகள் மீது 5.59 லட்சம் புகார்கள்; நிதித் துறை முதலிடம்

புதுடெல்லி: ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளுக்கு எதிராக கடந்த 6 மாதங்களில் மட்டும் 5.59 லட்சம் புகார்கள் வந்துள்ளன. இதில், 5,32,662 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. ஒன்றிய அரசு துறைகளுக்கு எதிராக பொதுமக்கள் தங்களின் குறைகள், புகார்களை ஆன்லைன் மூலமாக,  ‘பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் கண்காணிப்பு’ அமைப்பில்  தெரிவிக்கலாம். இந்த புகார்கள் துறைகள் வாரியாக பிரிக்கப்பட்டு, அவற்றின் நடவடிக்கைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டு, குறைகள் தீர்க்கப்படுகிறது. இந்த ஆண்டில் ஜனவரி முதல் கடந்த மாதம் 25ம் … Read more

5ஜி அலைவரிசை ஏலம் : 4 நிறுவனங்கள் விண்ணப்பம்

5ஜி ஏலத்தில் பங்கேற்பதற்கு 4 நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளதாக இந்திய தொலைத் தொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. சுமார் 4 லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 72 ஆயிரத்து 97 மெகா ஹெர்ட்ஸ் 5ஜி தொழில்நுட்ப அலைவரிசை ஏலம் ஜூலை 26 ஆம் தேதி தொடங்குகிறது. இதில் பங்கேற்க Adani Data Networks Ltd, Reliance Jio Infocomm, Vodafone Idea Ltd மற்றும் Bharti Airtel Ltd ஆகிய நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன. தேர்ந்தெடுக்கப்படும் நிறுவனங்கள் 20 ஆண்டுகள் … Read more

கிழக்கு மாநிலங்கள் வளர்ச்சிக்கு உதவும் தியோகர் விமான நிலையம் திறந்து வைத்தார் மோடி; 12 கிமீ வாகனத்தில் பேரணி

தியோகர்: ‘புதிய விமான நிலையம் உட்பட பல்வேறு வளர்ச்சி பணிகள் கிழக்கு மாநிலங்களின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும்,’ என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஜார்கண்ட் மாநிலத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். தியோகரில் 12 கிமீ தூரத்துக்கு பிரதமர் மோடி வாகனத்தில் ஊர்வலமாக  சென்ற அவர், 657 ஏக்கர் பரப்பளவில் ரூ.401 கோடி மதிப்பில் கட்டப்பட்ட விமான நிலையத்தை திறந்து வைத்தார். பின்னர்,  ரூ.16,800 கோடி மதிப்புள்ள திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். … Read more

சுங்கச்சாவடி ஊழியர்களிடம் மல்யுத்த விளையாட்டு வீரர் கிரேட் காளி வாக்குவாதம்

பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மாவட்டத்தில் சுங்கச்சாவடி ஊழியர்களிடம் மல்யுத்த விளையாட்டு வீரர் கிரேட் காளி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பில்லூர் என்ற இடத்தில் சுங்கச்சாவடியை காரில் கடக்க முயன்றபோது ஊழியர்கள் சிலர், காளியை தடுத்து நிறுத்தி அடையாள அட்டையை கேட்டதாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த காளி, சுங்கச்சாவடி ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.   Source link

ஓட்டு பெட்டி, மை உள்ளிட்ட ஜனாதிபதி தேர்தல் பொருள் மாநிலங்களிடம் ஒப்படைப்பு; அதிகாரிகள் சென்னை கொண்டு வந்தனர்

புதுடெல்லி: ஜனாதிபதி தேர்தலுக்கான பெட்டிகள், மை உள்ளிட்ட உபகரணங்கள், மாநில தேர்தல் அதிகாரிகளிடம் டெல்லியில் தேர்தல் ஆணையம் ஒப்படைத்துள்ளது. புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல், வரும் 18ம் தேதி நடைபெறுகிறது. நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் இதற்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில், அந்தந்த மாநிலங்களை சேர்ந்த எம்பி.க்கள், எம்எல்ஏ.க்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகிறது. இந்நிலையில், வாக்குப்பதிவுக்கு தேவையான ஓட்டு பெட்டிகள், வாக்களிப்பதற்கு தேவையான சிறப்பு பேனா, வாக்குச்சீட்டு, தேர்தல் … Read more

மாநிலங்களின் வளர்ச்சியில் நாட்டை வளர்ச்சியடைய செய்யும் கொள்கையுடன் பணியாற்றுகிறோம் – பிரதமர் மோடி 

தேவ்கர்: சாமான்ய மக்களின் வாழ்க்கையை எளிதாக்கி மேம்படுத்த நடவடிக்கை எடுக்கும்போது தேசிய சொத்துகள் உருவாக்கப்படுவதோடு, தேச வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகள் உருவாகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்தார். ஜார்கண்ட் மாநிலம் தேவ்கர் நகரில் நடந்த விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடி செவ்வாய்க்கிழமை ரூ.16,800 கோடிக்கும் அதிகமான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கிவைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இந்த விழாவில் ஜார்க்கண்ட் ஆளுநர் ரமேஷ் பயஸ், முதல்வர் ஹேமந்த் சோரன், மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, … Read more

மத்திய உள்துறையில் வாரிசு வேலை பெறுவதற்கு புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு..!

துணை ராணுவப் படை உள்ளிட்ட மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் வரும் பணிகளில் கருணை அடிப்படையில் வாரிசு வேலை பெறுவதற்கான வழிகாட்டுதல்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. அதன்படி, குடும்பத்தில் சம்பாதிக்கும் உறுப்பினர்கள், குழந்தைகளின் வயது, நிதித் தேவைகள் உள்ளிட்டவை கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு, விண்ணப்பங்கள் வரிசைப்படுத்தப்படும். பின்னர் சிறப்பு அலுவலர் மூலம் விண்ணப்பதாரர்கள் நேரில் வரவழைக்கப்பட்டு வேலைக்கு சேருவதற்கு தேவையான ஆவணங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்படும். தொடர்ந்து 3 அதிகாரிகள் கொண்ட குழு அளிக்கும் பரிந்துரை பரிசீலிக்கப்பட்டு வேலை வழங்கப்படும் … Read more