நிதி மோசடி வழக்குகளில் கைது செய்ய அமலாக்கத் துறைக்கு அதிகாரம் உள்ளது – உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் சம்மன் அனுப்புதல் மற்றும் கைது செய்யும் அமலாக்கத்துறையின் அதிகாரத்தை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. அமலாக்கத்துறை இயக்குநரகத்தின் சம்மன், கைது, பறிமுதல் மற்றும் விசாரணை நடவடிக்கைகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில் கூறியிருப்பதாவது: நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை இயக்குநரகத்துக்கு உள்ள கைது, பறிமுதல், ஜாமீன் அளிக்கும் அதிகாரங்கள் எல்லாம் குற்றவியல் நடைமுறை சட்ட விதிமுறை வரம்புக்கு அப்பாற்பட்டவையாக உள்ளன. … Read more

ஒரு முறை பயன்படுத்தும் சிரிஞ்சை கொண்டு 30 மாணவர்களுக்கு தடுப்பூசி… மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்

மத்திய பிரதேச மாநிலம் சாகரில் ஒரு முறை பயன்படுத்தக் கூடிய சிரிஞ்சை கொண்டு 30 மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்திய சம்பவம் அரங்கேறி உள்ளது. ஒரு சிரிஞ்சை கொண்டு தடுப்பூசி செலுத்தியது குறித்து கேள்வி கேட்ட மாணவர்களின் பெற்றோரிடம், தன் மேலதிகாரிகள் ஒரு சிரீஞ்ச் மட்டும் கொடுத்ததாகவும், அதைக் கொண்டே அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த உத்தரவிட்டதாகவும் செவிலியர் கூறும் வீடியோ வெளியாகி உள்ளது. வீடியோ ஆதாரத்தைக் கொண்டு செவிலியர் ஜிதேந்திரா மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து … Read more

தேசிய நெடுஞ்சாலைகளில் அடிக்கடி பயணிக்கும் வாகனங்களுக்கு சுங்கக்கட்டணத்தில் சலுகை : ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்!!

டெல்லி : தேசிய நெடுஞ்சாலைகளில் அடிக்கடி பயணிக்கும் வாகனங்களுக்கு சுங்கச்சாவடிகளில் கட்டண சலுகை வழங்கும் வகையில் மாதாந்திர பயண அட்டைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்களுக்கு விதிக்கப்படும் சுங்க கட்டணம் தொடர்பாக பாராளுமன்ற மாநிலங்களவையில் உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு, ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி எழுத்து பூர்வமாக பதில் அளித்தார். அதில் தெரிவித்துள்ளதாவது:’தேசிய நெடுஞ்சாலை … Read more

நாடாளுமன்றத்துக்கு வெளியே போராடும் எம்.பி.க்களை அலறவிடும் கொசுக்கள்!

நாடாளுமன்றத்துக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சஸ்பெண்ட் எம்.பி.க்களை கொசுக்கள் அலற விட்டுள்ளன. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த 19-ம் தேதி தொடங்கியது. கூட்டத்தொடர் ஆரம்பித்த நாள் முதலாக அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, ஜிஎஸ்டி வரி அதிகரிப்பு உள்ளிட்ட பிரச்னைகளை எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் மக்களவையும், மாநிலங்களவையும் தொடர்ந்து முடங்கி வருகின்றன. இதனிடையே, மக்களவை மற்றும் மாநிலங்களவையில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு அவை மாண்பை சீர்குலைத்ததாக கூறி காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், திமுக, … Read more

மேற்குவங்க ஆசிரியர் நியமன ஊழல் | நடிகை வீட்டை மினி வங்கியாக பயன்படுத்திய அமைச்சர் – விசாரணையில் புது தகவல்கள்

கொல்கத்தா: மேற்கு வங்க மாநில ஆசிரியர் நியமன ஊழல் தொடர்பாக கடந்த 22-ம் தேதி அமலாக்கத் துறை அதிகாரிகள், மாநிலத் தலைநகர் கொல்கத்தாவின் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர். அப்போது மாநில அமைச்சர் பார்த்தா சட்டர்ஜிக்கு நெருக்கமான நடிகை அர்பிதா முகர்ஜியின் வீட்டில் இருந்து ரூ.21 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி, நடிகை அர்பிதா முகர்ஜி ஆகியோர் கடந்த 23-ம் தேதி கைது செய்யப்பட்டனர். இருவரையும் 10 நாட்கள் போலீஸ் … Read more

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி… தொடக்க விழாவிற்காக சென்னைக்கு வர ஆவலுடன் காத்திருக்கிறேன் : பிரதமர் மோடி ட்வீட்

டெல்லி: 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவிற்காக சென்னைக்கு வர ஆவலுடன் காத்திருக்கிறேன் என பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.இந்தியாவில் முதல்முறையாக  என்ற பெருமையுடன்,  உலகை வியக்க வைக்கும்  வகையில் பிரமாண்ட ஏற்பாடுகளுடன்  44வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையில் இன்று மாலை 6 மணிக்கு தொடங்குகிறது. செஸ் போட்டிகள் மாமல்லபுரத்தில் நடந்தாலும் தொடக்க விழா,  பல்வேறு கலை நிகழ்ச்சிகள், கண்கவர் நடனங்களுடன்  இன்று  மாலை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடக்கிறது.  … Read more

புற்றுநோயை எதிர்த்து போராடும் மாணவி 12-ம் வகுப்பில் 98% மதிப்பெண் பெற்று சாதனை

லக்னோ: புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதை எதிர்த்து போராடும் மாணவி 12-ம் வகுப்பில் 98% மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார். உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோவைச் சேர்ந்தவர் பிரமிதா திவாரி (17). கடந்த ஆண்டு 12-ம் வகுப்பு (சிஐஎஸ்சி) படித்து வந்த இவருக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மேற்கொண்ட மருத்துவ பரிசோதனையில் ரத்த மற்றும் எலும்பு மஜ்ஜை புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், பின்னர் குருகிராமில் … Read more

டிவி.யில தானே நீங்க வேலை பாக்குறீங்க…. மோடியிடம் சிறுமி கேள்வி

புதுடெல்லி: மத்திய பிரதேசத்தில் உள்ள உஜ்ஜைன் மக்களவை தொகுதி பாஜ எம்பி.யாக இருப்பவர் அனில் பிரோஜியா. பிரதமர் மோடியை சந்திப்பதற்காக நேற்று இவர் தனது  மனைவி, மகளை நாடாளுமன்றத்துக்கு  அழைத்து வந்தார்.  மோடியை அவர்கள் சந்தித்தபோது, அனிலின் 8 வயது மகள் ஆஹானாவிடம், ‘நான் யார் என்று தெரியுமா?’ என மோடி கேட்டார். அதற்கு அந்த சிறுமி, ‘தெரியுமே… நீங்கள்தான் மோடிஜி. உங்களை எனக்கு நன்றாக தெரியும். நீங்கள்  டிவி.யில் தானே வேலை பார்க்கிறீர்கள்…’ என்று கேட்டாள். … Read more

வெளிநாட்டு இருக்கைகளில் பேராசிரியர் நியமனம் – தமிழ் மொழியை புறக்கணிக்கும் மத்திய அரசு

புதுடெல்லி: வெளிநாடுகளில் இந்திய பேராசிரியர் இருக்கைகள் நிரப்ப, இந்திய கலாச்சார உறவுக்கான கவுன்சிலின் (ஐசிசிஆர்) விளம்பரம் வெளியாகி உள்ளது. இதில்,போலந்தின் 2 வருகை தரு தமிழ்ப் பேராசிரியர் இருக்கைகள் இடம்பெறவில்லை. மத்திய கலாச்சாரத் துறையின் கீழ் செயல்படும் ஐசிசிஆர் நிறுவனத்தில், 1970-ம் ஆண்டு முதல் வெளிநாட்டு கல்வி நிறுவனங்களில் இந்திய பேராசிரியர்களுக்கான வருகை தரு இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஐசிசிஆர் மூலம் தேர்வாகும் இவர்களுக்கான ஊதியத்தை மத்திய அரசு வழங்கும். உணவு மற்றும் தங்குமிடங்களை சம்பந்தப்பட்ட நாடுகளின் கல்வி … Read more

நாடாளுமன்ற வளாகத்தில் 20 எம்பிக்கள் விடிய விடிய தர்ணா.. இடைநீக்கம் ரத்து செய்யக் கோரி 50 மணி நேரமாக போராட்டம்..!

சஸ்பெண்ட் செய்யப்பட்ட 20 எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் 50 மணி நேரத்துக்கும் அதிகமாக தொடர் தர்ணாப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இரவு முழுவதும் அவர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் கழித்தனர். ஆறு திமுக எம்பிக்கள், ஏழு திரிணாமூல் காங்கிரஸ் எம்.பிக்கள், டி.ஆர்எஸ். மார்க்சிஸ்ட் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளைச் சேர்ந்த எம்பிக்கள் இந்தப் போராட்டத்தில் கலந்துக் கொண்டு தங்களை இடைநீக்கம் செய்த உத்தரவை ரத்து செய்யக் கோரினர். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் எம்பிக்களுக்கு இட்லி சாம்பார், மதிய உணவு … Read more