குழந்தையா, வேலையான்னு மனைவியை கணவன் நிர்பந்திக்க கூடாதாம்!

மகாராஷ்டிர மாநில தலைநகர் மும்பையைச் சேர்ந்த ஒரு தம்பதி, குடும்பப் பிரச்னையில் பிரிந்து வாழ்ந்து லருகின்றனர். அவர்களின் 9 வயது மகள், தாயுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில், அந்த தாய்க்கு, ஐரோப்பிய நாடான போலந்தில் பணிபுரிய வாய்ப்பு கிடைத்துள்ளது உடனே குழந்தையுடன் போலந்து செல்ல அவர் திட்டமிட்டுள்ளார். ஆனால் இதற்கு குழந்தையின் தந்தை எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே மீண்டும் கருத்து வேறுபாடு ஏற்படவே விவகாரம் நீதிமன்றம் வரை செல்கிறது. இந்த வழக்கில் இகுதரப்பு … Read more

கடன்களுக்கான வட்டி விகிதத்தை அதிகரித்தது ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா..!

கடன்களுக்கான வட்டி விகிதத்தை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா இன்று முதல் அதிகரித்துள்ளது. ஓராண்டுக்கான வட்டி விகிதம் 7.40 சதவிகிதத்திலிருந்து 7.50 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இதனால் வீடுகள், கார்கள், தனிநபர் கடன்கள் அதிகரிப்பதோடு, மாதந்தோறும் செலுத்தும் இ.எம்.ஐ.யும் அதிகரிக்கும் எனத் தெரிகிறது. Source link

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நலம் விசாரித்தார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி.!

டெல்லி: கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சோனியா காந்தி உடல் நலம் விசாரித்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெறும் முதல்வர் ஸ்டாலினிடம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நலம் விசாரித்தார். உடல்நிலை, சிகிச்சை விவரம் உள்ளிட்டவை குறித்தும் கேட்டறிந்தார்.முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு கடந்த செவ்வாய்கிழமை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் மு.க.ஸ்டாலின் தனிமைப்படுத்திக் கொண்டார்.இந்த நிலையில் 2 நாட்கள் தனிமைபடுத்தி கொண்டிருந்த நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட முதல் அமைச்சர் … Read more

’அனுமதியின்றி வெளிநாடு செல்லக்கூடாது’ – பத்திரிக்கையாளர் முகமது ஜுபைருக்கு நிபந்தனை ஜாமீன்

ஆல்ட் நியூஸ் பத்திரிகையாளர் முகமது ஜுபைருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. AltNews செய்தி இணையதளத்தின் இணை நிறுவனரான முகம்மது ஜுபைர், மதம் சார்ந்த விஷயங்கள் பற்றி தொடர்ச்சியாக ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தார். இந்நிலையில் இவர் மதம் சார்ந்த சிலரது நம்பிக்கைகளை புண்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து டெல்லி சிறப்பு பிரிவு போலீசார் ஜுபைரை கைது செய்தனர். இவர் மீது டெல்லி போலீசார் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்திய தண்டனை … Read more

2018 சர்ச்சை ட்வீட் வழக்கு: முகமது ஜுபைருக்கு டெல்லி நீதிமன்றம் ஜாமீன்

புதுடெல்லி: ட்விட்டரில் சர்ச்சைக்குரிய பதிவு காரணமாக டெல்லி போலீஸாரால் கைது செய்யப்பட்ட செய்தி இணையதளத்தின் இணை நிறுவனரான முகம்மது ஜுபைருக்கு டெல்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. பொதுமக்களின் மத உணர்வை தூண்டி, வெறுப்புணர்வை ஏற்படுத்த முயன்றதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கில் நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியுள்ளது. வழக்கு பின்னணி: முஸ்லிம்களின் இறைத்தூதர் முகம்மது நபியை பாஜக செய்தித் தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா விமர்சித்திருந்தார். இதையடுத்து, நாடு முழுவதிலும் சமூக வலைதளங்களை டெல்லி போலீஸார் … Read more

டெல்லி அலிபூரில் குடோன் ஒன்றிய சுவர் இடிந்து விழுந்ததில் 4 பேர் பலி

டெல்லி: டெல்லி அலிபூரில் குடோன் ஒன்றிய சுவர் இடிந்து விழுந்ததில் 4 பேர் உயிரெழுந்துள்ளார். தலை நகரமான டெல்லியில், புறநகர் பகுதியான அலிபூரில் குடோனில் 20 பேர் வேலை பாத்து கொண்டுருந்த போது அந்த குடோனில் சுவர் ஒன்று ஒருபக்கமாக சாய்ந்து விழுந்துள்ளது. இதில் 4 பேர் உயிரெழுந்ததாக தீயணைப்பு வீரர்கள் அதிகரபுராணமாக தெரிவித்தனர். கிட்டதட்ட 10 பேர் தற்பொழுது வரை மீட்டு அவர்களை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சிலர் சிக்கி இருக்கலாம் … Read more

இளைஞரின் கட்டளைக்கேற்ப செயல்படும் சேவல்.. வைரலான வீடியோவால் ஜாக்பாட்அடித்த சினிமா வாய்ப்பு

கேரளாவில் உரிமையாளரின் கட்டளைக்கு ஏற்ப செயல்படும் சேவல் கோழி வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கேரளா மாநிலம் கோழிக்கோடு ராமநாட்டின்கரை பகுதியை சேர்ந்தவர் நவநீதன். பள்ளி மாணவரான இவர் கழிந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன் சாலை ஓரம் விற்பனை செய்யப்பட்ட ஒயிட் லக்கான் வகை சேவல் கோழி குஞ்சு ஒன்றை வாங்கி சிவராமன் என்று பெயரிட்டு வீட்டில் வளர்த்து வந்துள்ளார்.  நான்கரை மாத குஞ்சு கோழியாக இருந்த சிவராமன் நடவடிக்கைகள் வித்தியாசமாக இருப்பதை கண்ட நவநீதன் அதற்கு … Read more

பாகிஸ்தான் பத்திரிகையாளர் நுஸ்ரத் மிர்சாவை அழைக்கவில்லை – அன்சாரி மீண்டும் திட்டவட்டம்

புதுடெல்லி: பாகிஸ்தான் பத்திரிகையாளர் நுஸ்ரத் மிர்சாவை 2010-ம் ஆண்டு தீவிரவாதம் குறித்த எந்த மாநாட்டிற்கும் அழைத்ததில்லை என முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி மீண்டும் கூறியுள்ளார். ஈரான் தூதராக ஹமீத் அன்சாரி பணியாற்றிய காலத்தில் உளவு வேலை பார்த்ததாக பாகிஸ்தான் பத்திரிகையாளர் நுஸ்ரத் மிர்சா குற்றம் சாட்டினார். மேலும், ஹமீத் அன்சாரி குடியரசுத் துணைத் தலைவராக இருந்தபோது, அவரது அழைப்பில் பேரில், டெல்லியில் நடந்த தீவிரவாதம் குறித்த மாநாட்டில் பங்கேற்க தான் இந்தியா வந்ததாகவும், … Read more

கேரளாவில் நெய்யாறு பகுதியில் இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதி விபத்து: மாணவி படுகாயம்

திருவனந்தபுரம்: கேரளாவில் நெய்யாறு பகுதியில் இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் இருந்த மாணவி நிலைத்தடுமாறி விழுந்து படுகாயம் அடைந்தார். இருசக்கர வாகனத்தின் பக்கவாட்டில் பேருந்து  இடித்த சிசிடிவி காட்சிகள் வெளியானது. படுகாயமடைந்த மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

டெல்லி அலிப்பூரில் குடோனின் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்ததில் 4 பேர் உயிரிழப்பு

டெல்லி: டெல்லி அலிப்பூரில் குடோனின் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்ததில் 4 பேர் உயிரிழந்தனர். இடிபாடுகளில் இருந்து 10 பேர் மீட்கப்பட்ட நிலையில் வேறு யாரும் சிக்கியுள்ளனரா என தேடும் பணியில் தீவிரமாக உள்ளனர்.