நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்திக்கு சம்மன் எதிரொலி; நாடு முழுவதும் போராட்டம் நடத்த காங்கிரஸ் முடிவு.!

புதுடெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்திக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதை தொடர்ந்து நாடு முழுவதும் போராட்டம் நடத்த காங்கிரஸ் கட்சியினர் முடிவு செய்துள்ளனர். நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தின் பங்குகளை சோனியா, ராகுல் பங்குதாரர்களாக உள்ள யங் இந்தியா நிறுவனத்துக்கு மாற்றினர். நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை நடத்திய நிறுவனத்துக்கு கொடுத்த கடனுக்காக இந்த பங்கு பரிமாற்றம் நடந்தது. இதில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்ததாக அமலாக்க பிரிவு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் கடந்த மாதம் 13, 14, … Read more

பயன்படுத்தக் கூடாத வார்த்தைகள்; எதிர்கட்சிகள் கொந்தளிப்பு-மக்களவை சபாநாயகர் விளக்கம்

நாடாளுமன்றத்தில் குறிப்பிட்ட சில வார்த்தைகள் பயன்படுத்த அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்தில், எதிர்கட்சிகள் தேவையில்லாத சர்ச்சையை ஏற்படுத்துவதாகவும், இது வழக்கமான நாடாளுமன்ற அலுவல் பணி தான் எனவும் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா விளக்கம் அளித்துள்ளார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் வருகிற 18-ம் தேதி முதல் துவங்குகிறது. இதனை முன்னிட்டு மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரு அவைகளிலும்  பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள் அடங்கிய தொகுப்பை மக்களவை செயலகம் வெளியிட்டுள்ளது. அந்தப் பட்டியலில் ‘பாலியல் துன்புறுத்தல்’, ‘வெட்கம்’, ‘துஷ்பிரயோகம்’, ‘துரோகம்’, … Read more

குரங்கு அம்மை பாதிப்பு: அனைத்து மாநிலங்களும் தயார் நிலையில் இருக்க மத்திய அரசு அறிவுறுத்தல்

இந்தியா: குரங்கு அம்மை நோய் பாதிப்பு எதிரொலியாக அனைத்து மாநிலங்களையும் மருத்துவ வசதிகளை தயார் நிலையில் வைத்திருக்க மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. குரங்கு அம்மை நோய் பாதிப்பு எதிரொலியாக அனைத்து மாநிலங்களையும் மருத்துவ வசதிகளை தயார் நிலையில் வைத்திருக்க மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூசன் அனைத்து மாநில சுகாதாரத் துறை செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் “50 நாடுகளில் ஜனவரி ஒன்றாம் தேதி முதல் ஜூன் 22ம் தேதி … Read more

நீட் தேர்வை தள்ளி வைக்க முடியாது – டெல்லி நீதிமன்றம் அதிரடி…

நீட் தேர்வை தள்ளி வைக்க கோரி அனுபா ஸ்ரீவாஸ்தா என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் பருவ மழை பெய்து வருவதாகவும் அதனால் ஜூலை17ம் தேதி நடைபெற உள்ள நீட் தேர்வை தள்ளி வைக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டு இருந்தார். இத்தேர்வை மீண்டும் நடத்தவும் குறுப்பிட்டு இருந்தார். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க கோரி டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ் சந்திர சர்மா தலைமையினலான அமர்வு முன் வழக்கறிஞர் மம்தா … Read more

ஒருவருக்கு குரங்கு அம்மை உறுதி: கேரளாவுக்கு விரைகிறது ஒன்றிய குழு

கேரள: கேரளாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை உறுதியான நிலையில் அம்மாநிலத்துக்கு சுகாதாரத்துறை ஒன்றிய குழு விரைந்து செல்கிறது என தகவல் தெரிவிக்கப்பட்டது. கேரள சுகாதாரத்துறைக்கு உதவுவதற்காக ஒன்றிய சுகாதாரத்துறை சார்பில் குழு அனுப்பி வைக்கப்பட்டது. 

நீட் தேர்வை தள்ளிவைக்க கோரிய மனு தள்ளுபடி – டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

ஜூலை 17ம் தேதி நடைபெறவுள்ள நீட் தேர்வினை தள்ளிவைக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம். ஜூலை 17ம் தேதி அகில இந்திய மருத்துவ படிப்புகளுக்கான இளநிலை நீட் தேர்வு நடைபெற உள்ளது. ஏற்கனவே இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடைந்துவிட்ட நிலையில்  உத்தரப் பிரதேசம்,கேரளா, அசாம், ஜார்க்கண்ட், தெலுங்கானா, பீகார், ஹரியானா இமாச்சல் பிரதேசம், மகாராஷ்டிரா என பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 15 மாணவர்கள், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பருவமழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால் மாணவர்களால் … Read more

கனரா வங்கி, மகாராஷ்டிரா வங்கியில் மோசடி செய்ததாக மெகுல் சோக்சி மற்றும் பலர் மீது வழக்கு

டெல்லி: கனரா வங்கி, மகாராஷ்டிரா வங்கியில் மோசடி செய்ததாக மெகுல் சோக்சி மற்றும் பலர் மீது வழக்கு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரூ.55.27 கோடி மோசடி செய்து வெளிநாடுகளுக்கு தப்பியோடிய மெகுல் சோக்சி மற்றும் பலர் மீது சிபிஐ புதிய வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குஜராத் கனமழை: வெள்ளத்தில் நகருக்குள் அடித்து வரப்பட்ட முதலை!

குஜராத்தில் கொட்டி வரும் கனமழை காரணமாக தேசிய, மாநில நெடுஞ்சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. வெள்ளம் பாதித்த பகுதிகளில், தேசிய பேரிடர் மீட்புப் படையினர் களமிறக்கப்பட்டுள்ளனர். இதுவரை 31 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பத்திரமாக மீட்கப்பட்டு, முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கட்ச், சவுராஷ்டிரா ஆகிய பகுதிகளில் பொழியும் அதி கனமழையாலும் வெள்ள பாதிப்புகளாலும் 14 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் வதோதரா நகர்ப்புறப்பகுதிகளில் முதலை ஒன்றின் நடமாட்டம் காணப்படுவதாக தகவல் பரவியது. மீட்புப் படையினர் வந்து சோதனையிட்டதில் வதோதராவின் புஜா கார்டன் … Read more

“நாடாளுமன்றத்தில் எந்த வார்த்தைக்கும் தடைவிதிக்கவில்லை-ஓம் பிர்லா விளக்கம்

சில வார்த்தைகள் நாடாளுமன்றத்தில் பேச தடைவிதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், எந்த வார்த்தைக்கும் தடைவிதிக்கப்படவில்லை என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, கடந்த காலங்களில் நாடாளுமன்றத்தின் அவை குறிப்பிலிருந்து நீக்கப்பட்ட வார்த்தைகள் பட்டியலே தற்போதும் வெளியிடப்பட்டுள்ளது என்றார். கடந்த காலங்களில் புத்தக வடிவில் வெளியான வார்த்தை தொகுப்புகள், காகிகத்தை சேமிக்கும் வகையில் மின்னணு முறையில் வெளியிடப்பட்டுள்ளதாக அவர் விளக்கம் அளித்தார். Source link

பங்குசந்தை முறைகேடு வழக்கில் தேசிய பங்குச்சந்தை முன்னாள் தலைவர் சித்ரா ராமகிருஷ்ணாவை கைது செய்தது அமலாக்கத்துறை

டெல்லி: பங்குசந்தை முறைகேடு வழக்கில் தேசிய பங்குச்சந்தை முன்னாள் தலைவர் சித்ரா ராமகிருஷ்ணாவை அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர். ஏற்கனவே சித்ரா ராமகிருஷ்ணாவை சிபிஐ கைது செய்திருந்த நிலையில் தற்போது அமலாக்கத்துறையும் தனது விசாரணையை தொடங்கியுள்ளது. டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட சித்ரா ராமகிருஷ்ணாவை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு டெல்லி நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. சித்ரா ராமகிருஷ்ணா சுமார் 20 வருடங்களாக முகம் தெரியாத ஒரு இமயமலை சாமியார் ஒருவருக்கு ஈமெயில் மூலம் பல்வேறு … Read more