கியூட் நுழைவுத் தேர்வை ஏற்க ஒன்றிய பல்கலை.கள் தயக்கம்: யுஜிசி அதிருப்தி

புதுடெல்லி: ஒன்றிய பல்கலைக் கழகங்களில் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கு கியூட் எனும் பொது நுழைவுத்தேர்வு மூலம் மட்டுமே இந்த ஆண்டு முதல் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவித்தது. மாணவர் சேர்க்கைக்கு மாநில அரசுகளால் நடத்தப்படும் பிளஸ் 2 மதிப்பெண் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது என அறிவிக்கப்பட்டது. இதற்கு தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. எனினும், ஒன்றிய பல்கலைக்கழகங்கள் மட்டுமின்றி பிற பல்கலைக்கழகங்களும் கியூட் … Read more

வழக்கில் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை ஷாரூக் மகன் ஆர்யன் கான் நிரபராதி: தேசிய போதை பொருள் தடுப்பு துறை தகவல்

மும்பை: போதைப்பொருள் வழக்கில் நடிகர் ஷாரூக்கான் மகன் ஆர்யன் கான் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை என்று, தேசிய போதைப்பொருள் தடுப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் இந்த வழக்கில் இருந்து ஆர்யன் கான் விடுதலை செய்யப்படுகிறார். மும்பை அருகே சொகுசு கப்பலில் போதை விருந்து நடப்பதாக வந்த தகவலின்பேரில், போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கடந்த அக்டோபர் 2ம் தேதி திடீர் ரெய்டு நடத்தினர். இதில் ஷாரூக்கான் மகன் ஆர்யன் கான் உள்பட 8 பேர் … Read more

அதிகபட்ச வேலைவாய்ப்புகளை கொண்டதாக ட்ரோன் துறை உள்ளது  – பிரதமர் மோடி

புதுடெல்லி: பொதுமக்களுக்கு தொழில்நுட்பம் செல்லும் போது அதன் பயன்பாட்டு வாய்ப்புகளும் அதிகரிக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நாட்டின் மிகப் பெரிய ட்ரோன் திருவிழாவான “பாரத் ட்ரோன் மகோத்ஸவத்-2022” –ஐ பிரதமர் இன்று(வெள்ளிக்கிழமை) தொடங்கி வைத்து இதனைத் தெரிவித்தார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அரசு செய்திக்குறிப்பு: இந்தியாவின் மிகப் பெரிய ட்ரோன் திருவிழாவான பாரத் ட்ரோன் மகோத்ஸவத்-2022-ஐபிரதமர் நரேந்திர மோடி இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி வைத்தார். கிசான் ட்ரோன் விமானிகளுடன் கலந்துரையாடிய அவர் வான்வெளி ட்ரோன் செயல்விளக்க காட்சிகளை … Read more

நடிகையை கொன்ற சம்பவத்தில் தொடர்புடையவர்கள் உட்பட 3 நாளில் 10 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை: ஜம்மு காவல் அதிகாரி தகவல்

ஜம்மு: இன்று அதிகாலை 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், கடந்த மூன்று நாளில் 10 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக ஜம்மு காவல் அதிகாரி தெரிவித்தார்.  ஜம்மு – காஷ்மீரின் சோர் பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக போலீஸாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார், ராணுவ வீரர்கள், துணை ராணுவப் படையினர் அடங்கிய பாதுகாப்புப் படையினர் அப்பகுதிக்கு நேற்று இரவு சென்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது குறிப்பிட்ட கட்டடத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. … Read more

இந்தியாவின் பணக்கார எம்பியாக இருக்கும் பண்டி பார்த்தசாரதி.. சொத்து மதிப்பு ரூ.3909 கோடி என வேட்பு மனுவில் தகவல்..!

ஹைதராபாத்தை சேர்ந்த ஹிடேரோ (hetero)மருந்து தயாரிப்பு நிறுவன தலைவர் பண்டி பார்த்த சாரதி ரெட்டி (Bandi Partha Saradhi), இந்தியாவின் பணக்கார எம்பியாக இருக்கிறார். மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி சார்பில் அவர் வேட்பு மனு தாக்கல் செய்திருக்கிறார். அவரது சொத்து மதிப்பு 3909 கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குடும்பத்தினரின் மொத்த சொத்து மதிப்பு 5 ஆயிரத்து 300 கோடி ரூபாய் என குறிப்பிடப்பட்டுள்ளது. பண்டி பார்த்த சாரதியின் பெரும்பாலான சொத்துக்கள் … Read more

மோடி பேசுவதை தவிர வேறு எதுவும் செய்யவில்லை: தேவகவுடாவை சந்தித்த பின் சந்திரசேகர ராவ் புகார்

புதுடெல்லி: தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி தலைவரும், தெலங்கானா மாநில முதல்வருமான சந்திர சேகர ராவ், நேற்று பெங்களூருவில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவை சந்தித்தார். அப்போது மதசார்பற்ற ஜனதா தளம் தலைவரும், முன்னாள் முதல்வருமான குமாரசாமி உடனிருந்தார். இந்த சந்திப்புக்கு பின் சந்திரசேகர ராவ் கூறுகையில், ‘நாடு மோசமான நிலையை நோக்கி செல்வதால், நாம் நாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல வேண்டியது அவசியம். விவசாயிகள், தலித்துகள், என யாரும் மகிழ்ச்சியாக இல்லை. பிரதமர் மோடி பேசுவதை … Read more

டிரோன் நிறுவனப் பங்குகளை வாங்கும் அதானி..!

டிரோன் தயாரிப்பு நிறுவனத்தின் 50 விழுக்காடு பங்குகளை வாங்குவதற்கான உடன்பாட்டில் அதானி நிறுவனம் கையொப்பமிட்டுள்ளது. பெங்களூரைச் சேர்ந்த ஜெனரல் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் வேளாண்மைக்குப் பயன்படும் டிரோன்களைத் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் 50 விழுக்காடு பங்குகளை விலைக்கு வாங்க அதானி டிபென்ஸ் சிஸ்டம்ஸ் அண்டு டெக்னாலஜீஸ் நிறுவனம் உடன்பாடு செய்துள்ளது. இதன்மூலம் பாதுகாப்புத் துறைக்குத் தேவையான டிரோன்களைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது. Source link

சட்டசபைக்குள் செல்பி எடுக்க தடை – உ.பி. சபாநாயகர் அதிரடி

லக்னோ: உத்தர பிரதேசம் மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ.க. அரசு செயல்பட்டு வருகிறது. நேற்று உ.பி., சட்டசபையில் மாநில பட்ஜெட் தாக்கலானது. அப்போது எம்.எல்.ஏக்கள் பலரும் போட்டி போட்டுக் கொண்டு புகைப்படம் எடுத்தனர். இதனால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டது. இந்நிலையில், சபாநாயகர் சதீஷ் மஹானா இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: சட்டசபைக்குள் எம்.எல்.ஏக்கள் செல்பி எடுத்தாலோ, புகைப்படம் எடுத்தாலோ மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்படும்.  சட்டசபை கூட்டத்தொடர் சமயத்தின்போது, சட்டசபை வளாகத்தில் தனிப்பட்ட கேமராவை பயன்படுத்தவும் … Read more

8 ஆண்டு பாஜக ஆட்சியின் தோல்வி ஓராண்டில் ரு.30 லட்சம் கோடி சம்பாதித்த 142 பணக்காரர்கள்: காங்கிரஸ் தலைவர்கள் குற்றச்சாட்டு

புதுடெல்லி: கோவிட் காலத்தில் ஓராண்டில் ரூ.30 லட்சம் கோடி லாபத்தை 142 பெரும் பணக்காரர்கள் ஈட்டியுள்ளதாக காங்கிரஸ் தலைவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு ஆட்சிக்கு வந்து எட்டு ஆண்டுகள் முடியும் நிலையில், ‘எட்டு ஆண்டுகள் – 8 சூழ்ச்சிகள் – பாஜக அரசு தோல்வி’ என்ற தலைப்பில் சிறு கையேட்டை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அஜய் மாகேன், ரந்தீப்சிங் சுர்ஜேவாலா ஆகியோர் கூறுகையில், ‘ஆட்சிக்கு வருவதற்கு … Read more

இறந்து போன தனது குட்டி யானையை தூக்கிக்கொண்டு சென்ற தாய் யானை

மேற்குவங்க மாநிலம் ஜல்பைகுரி மாவட்டத்தில் உள்ள அம்பாரி தேயிலை தோட்ட பகுதியில் தாய் யானை ஒன்று இறந்து போன தனது குட்டி யானையை தூக்கிக்கொண்டு சென்ற காட்சிகள் வெளியாகி உள்ளன. தகவல் அறிந்து சென்ற பின்னாகுரி நகர வனவிலங்குகள் பாதுகாப்பு குழுவினர் அந்த யானைக்குட்டியை மீட்பதற்குள் அந்த தாய் யானை குட்டியை சுமந்து கொண்டு ரெட்பேங்க் தேயிலை தோட்டப்பகுதிக்கு சென்றுள்ளது. யானைக்குட்டி உயிரிழந்ததற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.