திருவனந்தபுரம் அருகே 2 வாலிபர்கள் பலி உயிரை பறித்த பைக் ரேஸ்: நேருக்கு நேர் மோதி விபத்து

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் அருகே விழிஞ்ஞம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை புறவழிச்சாலை உள்ளது. இந்த சாலையில் அடிக்கடி வாலிபர்கள் பைக் ரேஸ் நடத்துவது வழக்கம். அதன்படி வழக்கமான போக்குவரத்து சமயத்திலேயே, வாகனங்களில் செல்லும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பைக் ரேஸ் நடத்திவந்தனர். பலமுறை பொதுமக்கள் புகார் கொடுத்தும் போலீசாரும் கண்டு கொள்ளாமல் இருந்து வந்தனர்.இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை வழக்கம்போல சாலையில் பைக் ரேஸ் நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற 25க்கும் மேற்பட்ட வாலிபர்கள் சாலையில் சீறிப்பாயும் வேகத்துடன் … Read more

முதல் முறையாக கொலம்பியாவில் இடதுசாரி ஆட்சி

பொகோடா: கொலம்பியாவில் முதல் முறையாக இடதுசாரி கட்சியை சேர்ந்த முன்னாள் கிளர்ச்சியாளர் கஸ்டவோ பெட்ரோ வெற்றி பெற்றுள்ளார்.தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் பொருளாதார நெருக்கடியால் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில், அங்கு கடந்த மாதம் அதிபர் தோ்தல் நடைபெற்றது. இதில், இடதுசாரி கட்சியை சோ்ந்த கஸ்டாவோ பெட்ரோ, ரியல் எஸ்டேட் அதிபர் ரோடோல்போ ஹெர்னாண்டஸ் போட்டியிட்டனர். வாக்கு எண்ணிக்கையில், 50.48 சதவீத வாக்குகளுடன் கஸ்டாவோ வெற்றி பெற்றுள்ளார். ஹெர்னாண்டஸ் 47.26 சதவீதம் ஓட்டுகளை … Read more

அக்னி பாதை | ஜூலை முதல் விண்ணப்பிக்கலாம் – கல்வித் தகுதி, வழிமுறைகளை வெளியிட்டது ராணுவம்

புதுடெல்லி: ‘அக்னி பாதை’ திட்டத்தில் சேர அடுத்த மாதம் முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று இந்திய ராணுவம் அறிவித்துள்ளது. ராணுவம், கடற்படை, விமானப்படையில் ஒப்பந்த அடிப்படையில் 4 ஆண்டுகள் பணியாற்றும் ‘அக்னி பாதை’ திட்டம், கடந்த 16-ம் தேதி அறிவிக்கப்பட்டது. புதிய திட்டத்தை எதிர்த்து வடமாநிலங்களில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தச் சூழலில் அக்னி பாதை திட்டத்தில் வீரர்களை தேர்வு செய்வதற்கான அறிவிக்கையை இந்திய ராணுவம் நேற்று வெளியிட்டது. அதில் கூறியிருப்பதாவது: அக்னி பாதை திட்டத்தில் … Read more

அக்னிபாதை திட்டத்தின் கீழ் ஆன்லைன் விண்ணப்பம் அடுத்த மாதம் வெளியீடு: ராணுவம் அறிவிப்பு

புதுடெல்லி: அக்னிபாதை திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்புக்காக ஆன்லைன் விண்ணப்பம் அடுத்த மாதம் வெளியிடப்படும் என ராணுவம் அறிவித்துள்ளது. அக்னிபாதை திட்டத்திற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ள நிலையில், இத்திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்புக்கான நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. வரும் 24ம் தேதி முதல் விமானப்படை ஆன்லைன் விண்ணப்ப பதிவை தொடங்க உள்ளதாக நேற்று முன்தினம் அறிவித்தது. இதைத் தொடர்ந்து, ராணுவம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘அக்னிபாதை திட்டத்தின் கீழ் சேர்வதற்கு விரும்பும் அனைவரும் ஆட்சேர்ப்பு இணையத்தில் விண்ணப்பிப்பது … Read more

போராட்ட களத்துக்கு சென்ற தொண்டரை தனது காரில் அழைத்துச் சென்ற பிரியங்கா காந்தி..

டெல்லியில் போராட்டக் களத்துக்குச் சென்ற காங்கிரஸ் தொண்டரை, பிரியங்கா காந்தி தனது காரில் அழைத்துச் சென்றார். நேஷனல் ஹெரால்டு வழக்கில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி ஜந்தர் மந்தரில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் பங்கேற்பதற்காக சென்று கொண்டிருந்த காங்கிரஸ் தொண்டர் ஒருவரை, காங்கிரஸ் பொதுச் செயலாளரான பிரியங்கா காந்தி தனது காரில் அழைத்துச் சென்றார்.  Source link

அக்னிபாதை திட்டத்திற்கு எதிராக நாடு தழுவிய பாரத் பந்த் போராட்டம்

* பீகார், உபி, ஜார்க்கண்ட்டில் போலீஸ் குவிப்பு * 600 ரயில்கள் ரத்து, பள்ளிகளுக்கு விடுமுறைபுதுடெல்லி: அக்னிபாதை திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் நேற்று பாரத் பந்த் போராட்டம் நடத்தப்பட்டது. இதையொட்டி, பீகார், உத்தரப்பிரதேசம், ஜார்க்கண்ட் மாநிலங்களில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். 600 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. பந்த் காரணமாக, சில மாநிலங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. முப்படைகளில் 4 ஆண்டு குறுகிய கால சேவையில் வீரர்களை சேர்க்கும் புதிய அக்னிபாதை திட்டத்துக்கு … Read more

காஷ்மீரில் ஒரே நாளில் 7 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை..

காஷ்மீரில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நான்கு பேர் உள்பட 7 தீவிரவாதிகள் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். குப்வாராவின் குல்காம், புல்வாமா மாவட்டங்களில் போலீசாருடன் இணைந்து ராணுவ வீரர்கள் நடத்திய ஆப்ரேஷனில், தீவிரவாதிகளின் ஊடுருவல் முறியடிக்கப்பட்டுள்ளது. கடந்த 20 நாட்களில் மட்டும் 24 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக காஷ்மீர் காவல்துறை தலைவர் விஜய குமார் தெரிவித்தார். Source link

நாடு முழுவதும் சிறப்பு ஏற்பாடுகள் இன்று சர்வதேச யோகா தினம்: மைசூரு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்பு

புதுடெல்லி: சர்வதேச யோகா தினம் இன்று கடைபிடிக்கப்படுவதையொட்டி, மைசூருவில் நடக்கும் யோகா நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரதமர் மோடி பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார். நாட்டின் 75 முக்கிய இடங்களில் அமைச்சர்களும் கலந்து கொள்கின்றனர்.சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்படுவதையொட்டி, மைசூரு அரண்மனை வளாகத்தில் 15,000 பேர் பங்கேற்கும் சர்வதேச யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இது குறித்து பிரதமர் மோடி தமிழ் உள்பட பல்வேறு மொழிகளில் தனது டிவிட்டரில், “இந்தாண்டு சர்வதேச யோகா தினத்தின் கருப்பொருளாக … Read more

மகாராஷ்டிராவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேரின் சடலங்கள் கண்டெடுப்பு.!

மகாராஷ்டிராவின் சாங்லி மாவட்டத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மஹைசல் கிராமத்தில் பூட்டியிருந்த வீட்டிற்குள் மூன்று உடல்கள் ஒரு இடத்திலும், 6 பேரின் உடல்கள் வெவ்வேறு இடங்களிலும் இருந்ததாக போலீசார் கூறியுள்ளனர். இது, தற்கொலையாக இருக்கலாம் என சந்தேகித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  Source link

திருமலை ஏழுமலையான் கோயிலில் உண்டியல் காணிக்கை கணக்கிட 20 கோடியில் நவீன கட்டிடம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உண்டியல் காணிக்கை கணக்கிடுவதற்காக ₹20 கோடியில் நவீன கட்டிடம் கட்டும் பணியை தேவஸ்தானம் தொடங்கியுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் தங்கள் வேண்டுதலுக்கு ஏற்ப கோயிலில் உள்ள உண்டியல்களில் பணம் மட்டுமின்றி தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் உள்ளிட்டவற்றை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். இந்த உண்டியல் ஒருநாளைக்கு 2 முறை நிரம்பும். ஆனால் தற்போது பக்தர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருப்பதால் 9 முதல் … Read more