அக்னிபாத் திட்டத்தின் கீழ் கடற்படை பணிக்கு 20% பெண்கள் முதல் தொகுப்பில் சேர்க்கப்படுவார்கள்; இந்திய கடற்படை

டெல்லி: அக்னிபாத் திட்டத்தின் கீழ் கடற்படை பணிக்கு 20% பெண்கள் முதல் தொகுப்பில் சேர்க்கப்படுவார்கள் என இந்திய கடற்படை அறிவித்துள்ளது. பணிக்கு தேர்வாகும் பெண்கள் பல இடங்களில் கடற்படை தளங்களுக்கு பயிற்சிக்கு அனுப்பபடுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

`இந்துக்கடவுள் உள்ள நியூஸ்பேப்பரில் அசைவம் மடித்து கொடுக்கிறார்’- கைது செய்த உ.பி போலீஸ்

உத்தரப் பிரதேச மாநிலத்தில் சாம்பல் என்ற பகுதியில் ஹோட்டல் நடத்திவந்த ஒருவர், `வேண்டுமென்றே இந்துக் கடவுள்கள் படம் பதிந்த நியூஸ்பேப்பரில் சிக்கன் வைத்து மடித்துக்கொடுத்தார்’ என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அதைத்தொடர்ந்து  அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை உ.பி.யை சேர்ந்த தலிப் ஹூசைன் என்பவர், தனது கறிக்கடையில் கறிகளை கடவுள் படம் இருக்கும் நாளிதழில் வைத்து மடித்து விற்பதாக இணையம் வழியாக சிலர் பதிந்திருந்தனர். அவர் வேண்டுமென்றே இந்துக்களின் மனதை புண்படுத்துவதாக கூறி அவரது புகைப்படத்தையும், அவருடைய கடையிலிருந்த புகைப்படத்தையும் சிலர் … Read more

பழங்குடியினரின் உற்பத்தி பொருட்களை சர்வதேச சந்தையில் விற்பனை செய்ய நடவடிக்கை – பிரதமர் மோடி உறுதி

பீமவரம்: ஆந்திர மாநிலம் பீமவரம் அருகே உள்ள பேத அமிரம் பகுதியில், பழங்குடி இனத்தை சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர் அல்லூரி சீதாராம ராஜுவின் 125-வது ஜெயந்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. அப்போது, ரூ.3 கோடியில் 30 அடி உயரத்தில் உருவாக்கப்பட்ட அல்லூரி சீதாராம ராஜுவின் சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். அதன் பின்னர் அவர், தெலுங்கில் தனது உரையை தொடங்கினார். இதனை கேட்டு மக்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது: … Read more

'பெட்ரோல் விலை உயர்வுக்கு தாஜ்மகால் தான் காரணம்' – அசாதுதீன் ஒவைசி

ஷாஜகான் தாஜ்மகாலைக் கட்டியிருக்காவிட்டால் இன்று பெட்ரோல் லிட்டர் 40 ரூபாய்க்கு விற்பனையாகி இருக்கும் என ஹைதராபாத் எம்.பி. அசாதுதீன் ஒவைசி மத்திய அரசைக் கேலி செய்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில், அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் கட்சித் தலைவரும், ஹைதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி பேசியதாவது: நாட்டின் அனைத்து பிரச்னைகளுக்கும் முகலாயர்கள் மற்றும் முஸ்லிம்களை மத்திய அரசு குற்றம் சாட்டுகிறது. நாட்டில் இளைஞர்கள் வேலையின்றி உள்ளனர். பணவீக்கம் அதிகரித்து வருகிறது. டீசல் லிட்டருக்கு 102 ரூபாய்க்கு … Read more

படிகட்டில் தவறி விழுந்து காயம் லாலு ஐசியுவில் அனுமதி

பாட்னா: ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் படிக்கட்டில் தவறி விழுந்ததில் காயமடைந்ததை அடுத்து நேற்று அதிகாலை ஐசியுவில் அனுமதிக்கப்பட்டார். பீகார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ், மாட்டுத்தீவன முறைகேடு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், சிறுநீரக கோளாறு பிரச்னையால் அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டார். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்காக அவர் வெளிநாடு செல்ல வேண்டும் என்பதால் கடந்த மாதம் ஜாமீனில் … Read more

மத்திய பிரதேசத்திலும் பீச் இருக்கு? தெரியுமா உங்களுக்கு? இந்த வீடியோவை பாருங்க!

மத்திய பிரதேச மாநிலத்தில் பஞ்சாயத்து மற்றும் நகர்ப்புற அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அனுப்பூர் பகுதியில் உள்ள மக்கள் விநோதமான போராட்டம் ஒன்றை கையிலெடுத்துள்ளது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. அதன்படிம் அனுப்பூர் மற்றும் பிஜுரி மனேந்திரகர் பகுதியை இணைக்கும் சாலை முழுவதும் குண்டும் குழியுமாக உள்ளதை, வாக்கு கேட்டு வரும் அரசியல் கட்சியினருக்கு உணர்த்தும் வகையில் சாலையில் இறங்கி போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். சாலையில் போராடுவது வழக்கமானதுதான் என கேள்வி எழலாம். … Read more

'மத உணர்வுகளைப் புண்படுத்துவதில் எனக்கு உடன்பாடில்லை' – காளி போஸ்டர் சர்ச்சையில் நுஷ்ரத் ஜஹான் கருத்து

மத உணர்வுகளைப் புண்படுத்துவதில் எனக்கு உடன்பாடில்லை என்று ‘காளி’ போஸ்டர் சர்ச்சை குறித்து நடிகையும் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.யுமான நுஷ்ரத் ஜஹான் கூறியுள்ளார். காளி போஸ்டர் சர்ச்சை: நேற்று, இயக்குநர் லீனா மணிமேகலையின் ‘காளி’ ஆவணப்பட போஸ்டர் வெளியானது. அதில் காளியின் கையில் ஒரு சிகரெட் இருப்பது போல் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. மேலும் காளிதேவியின் கையில் திரிசூலம், அரிவாள் ஆகிய ஆயுதங்களுடன் LGBTQ+ சமூகத்தினரின் (தன்பாலின உறவாளர்கள்) பெருமித அடையாளக் கொடியும் இருக்கிறது. இந்தப் படம் இணையத்தில் வைரலானது. … Read more

திருப்பதி உண்டியல்: வரலாறு காணாத கலெக்‌ஷன்!

திருப்பதி திருமலையில் வீற்றிருக்கும் ஏழுமலையானை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் நாள்தோறும் செல்லும் நிலையில், கொரோனா காரணமாக கடந்த சில மாதங்களாக பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ள காரணத்தால், மாநில அரசு அளித்துள்ள தளர்வுகளின்படி, திருப்பதியில் சுவாமி தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால், கூட்டம் அலைமோதி வருகிறது. பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திருப்பதியில் தினமும் ரூ.300 ஆன்லைன் தரிசனத்தில் 25,000 பக்தர்களும், ஸ்ரீவாணி அறக்கட்டளை இதர சேவைகள் மூலம் … Read more

மோசமான வானிலையால் அமர்நாத் யாத்திரை ரத்து.. குகைகோயிலுக்கு செல்ல அனுமதி மறுப்பு..!

பருவமழையால் ஏற்பட்டுள்ள மோசமான வானிலை காரணமாக, அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால், பஹல்காம் முகாமில் இருந்து குகை கோயிலுக்கு செல்ல யாத்ரீகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதுவரை 5 ஆயிரம் பேர் குகை கோயிலில் தரிசனம் மேற்கொண்டுள்ள நிலையில், ஜம்முவிலிருந்து 6 ஆயிரத்து 351 யாத்ரீகர்கள் அமர்நாத் யாத்திரைக்கு புறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Source link

ஊழல் வழக்கை விசாரித்தற்காக பணிமாறுதல் கிடைத்தாலும் கவலையில்லை: கர்நாடக ஐகோர்ட் நீதிபதி சந்தேஷ் பேட்டி

கர்நாடக: ஊழல் வழக்கை விசாரித்தற்காக பணிமாறுதல் கிடைத்தாலும் கவலையில்லை என கர்நாடக ஐகோர்ட் நீதிபதி சந்தேஷ் கூறியுள்ளார். அரசு அதிகாரிகளுக்கு எதிரான கர்நாடக மாநில லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு விசாரணையின் போது நீதிபதி சந்தேஷ் பேட்டியளித்துள்ளார். அதிகாரிகளுக்கு எதிராக கருத்து கூறியதால் எனக்கு பணிமாறுதல் தண்டனையாக கிடைக்கும் என நீதிபதி என்னிடம் கூறினார்கள். எந்த அச்சுறுத்தலுக்கும் அடிப்பணிய மாட்டேன், அரசியல் சாசனத்தை பாதுகாப்பதே என் கடமை என நீதிபதி சந்தேஷ் தெரிவித்துள்ளார்.