மகா விகாஸ் அகாடி கூட்டணி 100 இடங்களுக்கு மேல் வெல்லும்: சஞ்சய் ராவத்

மராட்டியம்: சட்டசபை தேர்தல் இன்று நடத்தப்பட்டால் மகா விகாஸ் அகாடி கூட்டணி 100 இடங்களுக்கு மேல் வெல்லும் என்று சஞ்சய் ராவத் கூறியுள்ளார். அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் எங்கள் பக்கம் திரும்பி வருவார்கள் என்று சிவசேனா எம்.பி.சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். 

”இந்த ரேட்டுக்கு வீடே வாங்கிரலாம்” : Uber கார் கட்டணத்தால் ஆடிப்போன மும்பைவாசிகள்!

இந்தியாவில் எந்த நகரத்தில் இருந்தாலும் டிராஃபிக்கில் சிக்குவது பெரும் சிக்கல்தான். அதுவும் மழை காலமென்றால் என்னத்தச் சொல்ல என அதிருப்தி தெரிவிக்காதவர்களே இருக்கமாட்டார்கள். ஒரு பக்கம் மழை, ஒரு பக்கம் டிராஃபிக்கை சமாளிக்க cab, auto பிடித்தாவது வீட்டுக்கு சென்றிடலாம் என எண்ணி அதற்காக செயலியில் புக் செய்ய முற்பட்டால் விண்ணை முட்டும் அளவுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருக்கும். அப்படியான சம்பவம் குறித்துதான் இப்போது பார்க்கப் போகிறோம்.  மும்பையில் அண்மை நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் அலுவலகங்களுக்கு … Read more

பிரதமர் ஹெலிகாப்டர் அருகே பறந்த கருப்பு பலூன்களால் போலீஸ் அதிர்ச்சி

பீமவரம்: பீமவரம் அருகே உள்ள பேத அமிரம் பகுதியில் சுதந்திர போராட்ட வீரர் அல்லூரி சீதாராம ராஜுவின் சிலை திறப்பு விழாவில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, விழா முடிந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னவரம் சென்றார். பிரதமர் நரேந்திர மோடி பயணம் செய்த ஹெலிகாப்டர் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது சில கருப்பு பலூன்கள் வானத்தில் பறந்து வந்து ஹெலிகாப்டர் அருகே நெருங்கின. இந்த கருப்பு பலூன்கள் பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் பறந்ததால் போலீஸார் அதிர்ச்சி … Read more

மும்பையை மிரட்டும் கனமழை – 2 நாட்களுக்கு வெளியே வராதீங்க!

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் பெய்த கன மழை காரணமாக, பல்வேறு சாலைகளில் வெள்ள நீர் தேங்கி உள்ளது. மகாராஷ்டிர மாநிலத் தலைநகர் மும்பையில் நேற்றிரவு முதல் விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது. கனமழை காரணமாக, மாவட்டத்தின் பல்வேறு சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் தேங்கி உள்ளது. சியான், அந்தேரி உள்ளிட்ட பகுதிகளில், மழை நீர் முழங்கால் அளவு தேங்கி உள்ளது. பலத்த காற்றுடன் பெய்த கனமழை காரணமாக, சாலையோரங்களில் இருந்த மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. … Read more

தகாத வார்த்தைகளால் இந்திய ரசிகர்களை திட்டிய இங்கிலாந்து ரசிகர்கள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என இங்கி. கிரிக்கெட் வாரியம் உறுதி.!

பர்மிங்ஹாம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது இனவெறியுடன் நடந்து கொண்டவர்கள் மீது உரிய விசாரணை நடத்தப்படும் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் உறுதி அளித்துள்ளது. எட்ஜ்பஸ்டனில் நடைபெறும் போட்டியில் இங்கிலாந்து அணி வலுவான நிலையில் உள்ளது. வெற்றிக் கொண்டாட்டத்தில் இருந்த இங்கிலாந்து ரசிகர்கள், இந்திய ரசிகர்களிடம் இனவெறியுடன் நடந்து கொண்டதோடு, தகாத வார்த்தைகளாலும் திட்டினர். மைதானத்தில் இருந்த காவலர்களிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காதது குறித்து இந்தியர்கள் பலர் டிவிட்டரில் பதிவிட்ட நிலையில், நடவடிக்கை எடுக்கப்படும் என … Read more

தெலுங்கானாவில் வங்கி லாக்கரை உடைத்து கொள்ளை: ரூ.4 கோடி மதிப்புள்ள 8.3 கிலோ தங்க நகைகள் திருட்டு

ஹைத்ராபாத்: தெலுங்கானாவில் வங்கி லாக்கரை உடைத்து, கொள்ளையர்கள் நகைகளையும், பணத்தையும் அள்ளிச்சென்றது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தில் உள்ள பூசாப்பூரில், தெலுங்கானா கிராமிய வங்கி உள்ளது. தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள இந்த வங்கியில், கடந்த சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் வங்கி பூட்டப்பட்டது. நேற்று வழக்கம் போல், அதிகாரிகள் வங்கியை திறப்பதற்காக வந்தபோது, வங்கியின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த ஊழியர்கள், உள்ளே சென்று பார்த்தபோது, அங்கிருந்த வங்கி லாக்கர் கேஸ் … Read more

மகாராஷ்டிராவில் 6 மாநிலங்களில் கனமழை எச்சரிக்கை: மும்பையில் ரயில், சாலை போக்குவரத்து பாதிப்பு

மும்பை: மகாராஷ்டிராவில் 6 மாநிலங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை அதிகாலை முதலே பெய்துவரும் கனமழையால் ரயில் மற்றும் சாலைப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. நகரின் பல பகுதிகளிலும் மழை நீர் தேங்கியுள்ளது. புதிய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே வெள்ள அபாயம் உள்ள பகுதிகளில் இருந்து பொதுமக்களை அப்புறப்படுத்திப் பத்திரமான இடங்களில் தங்கவைக்குமாறு உத்தரவிட்டுள்ளார். 5 தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள் மும்பைக்கு மும்பை மழை: முக்கியத் தகவல்கள் 1. தானே, பால்கர், ரத்னகிரி, சிந்துதுர்க், கோலாபூர் உள்ளிட்ட … Read more

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வீட்டிற்குள் புகுந்த சரக்கு லாரி.!

இமாச்சல பிரதேசத்தின் மண்டி மாவட்டத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு லாரி சாலையோர வீட்டிற்குள் புகுந்தது. இந்த கோர விபத்தில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த மூன்று பேர் உயிரிழந்தனர். முன்னதாக, நேற்று குலு பகுதியில் தனியார் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 10 பள்ளி மாணவர்கள் உள்பட 16 பேர் உயிரிழந்த நிலையில், இமாச்சல பிரதேசத்தில் ஒவ்வொரு ஆண்டும் சாலை விபத்துகளில் 3,000 பேர் உயிரிழப்பதாக ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது Source link

இந்தியாவில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 13,086 ஆக பதிவு… 19 பேர் பலி… ஒன்றிய சுகாதாரத்துறை தகவல்!!

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 4 கோடியை தாண்டியது. இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:* புதிதாக 13,086 பேர் பாதித்துள்ளனர்.* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,35,15,547 ஆக உயர்ந்தது.* புதிதாக 19 பேர் இறந்துள்ளனர்.* இதனால், … Read more

'அட… இத்தனை பேருந்துகள் தகுதியற்றவையா?'- கர்நாடகாவில் வெளியான பகீர் தகவல்

கர்நாடக மாநிலத்தில் ஓட்டுவதற்கு தகுதியற்ற 3,768 பேருந்துகளை கே.எஸ்.ஆர்.டி.சி. இயக்கி வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடக அரசு போக்குவரத்துக் கழகம் (கே.எஸ்.ஆர்.டி.சி.) சார்பில் கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா மற்றும் மராட்டியத்திற்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் சமீபகாலமாக கர்நாடக அரசு பேருந்துகள் அடிக்கடி விபத்தில் சிக்கி கொள்ளும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. அவ்வாறு விபத்தில் சிக்கும் பெரும்பாலான அரசு பேருந்துகள் 9 லட்சம் கிலோ மீட்டருக்கு மேல் ஓடியவை என்று கூறப்படுகிறது. பொதுவாக … Read more