கொரோனா பாதுகாப்பு விதிகளில் அலட்சியமா? விமான பயணிகளை கீழே இறக்கி விடலாம்.! விமான போக்குவரத்து இயக்குனரகம் உத்தரவு

புதுடெல்லி: கொரோனா பாதுகாப்பு விதிகளை மீறும் பயணிகளை கீழே இறக்கி விடுங்கள் என்று விமான போக்குவரத்து இயக்குனரகம் உறுதி செய்ய வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டுள்ளது. நாட்டில் கொரோனா பாதிப்பு சில நாட்களாக அதிகரித்து வருகிறது. அதனால் பொது இடங்களில் மக்கள் மேற்கொள்ள வேண்டிய கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை முறையாக கடைப்பிடிக்க வலியுறுத்தப்படுகிறது. இதன்படி, விமான பயணிகள் கைகளை சுத்தமுடன் வைத்திருத்தல், முக கவசம் அணிதல் உள்ளிட்ட பயணத்தின்போது மேற்கொள்ள வேண்டிய கொரோனா பாதுகாப்பு கட்டுப்பாடுகளை முறையாக … Read more

`தேச விரோத நடவடிக்கையில் ஈடுபட்டார் பினராயி’- நீதிமன்றத்தில் ஸ்வப்னா சுரேஷ் வாக்குமூலம்

ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தில் தேசவிரோத நடவடிக்கைகளில் கேரள முதல்வர் பினராயி விஜயன் ஈடுபட்டதாக தங்கக் கடத்தல் வழக்கில் முதல் குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷ் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார். திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரக முகவரிக்கு, கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை மாதம் வந்த சரக்குப் பெட்டிகளில் 30 கிலோ கடத்தல் தங்கம் இருப்பது தெரியவந்தது. இந்தக் கடத்தலில் தீவிரவாத அமைப்புகளுக்கு தொடர்பிருக்கலாம் எனக் கருதப்பட்டதால், இவ்வழக்கானது தேசிய புலனாய்வு அமைப்பிடம் (என்ஐஏ) ஒப்படைக்கப்பட்டது. … Read more

தமிழகத்தில் தொடரும் நீர் நிலை சோகம்.. கண்மாயில் மூழ்கி 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் பலி..!

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசப்பட்டியில் முத்தாலம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இதை முன்னிட்டு, நிலக்கோட்டையை சேர்ந்த கட்டட தொழிலாளி லட்சுமணன், மூலச்சத்திரம் பகுதியை சேர்ந்த பாபு, மதுரையை சேர்ந்த பன்னீர்செல்வம் (25) ஆகியோர் தனது குடும்பத்துடன் கைலாசப்பட்டியில் உள்ள உறவினர் தர்மராஜ் வீட்டுக்கு இன்று வந்தனர். இந்நிலையில், இன்று மாலை கைலாசப்பட்டி அருகே உள்ள பாப்பியன்பட்டி கண்மாயில் குளிப்பதற்காக பன்னீர்செல்வம், லட்சுமணன் மகன் மணிமாறன்(12), பாபு மகன் சபரிவாசன்(11) ஆகியோர் சென்றுள்ளனர். அப்போது, கண்மாயில் … Read more

பிரின்ஸ் ஆகிறார் சிவகார்த்திகேயன்..!!

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த ‘டான்’ திரைப்படம் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளது. இந்நிலையில், அவரது அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.   இந்த படத்திற்கு  ‘பிரின்ஸ்’ என பெயரிடப்பட்டுள்ளது. இதனை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர். இந்த படத்தில் கதாநாயகியாக உக்ரைன் நாட்டு நடிகை மரியா ரியாபோஷாப்கா நடிக்கிறார்.முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர். தமன் இசையமைத்து வருகிறார்.தெலுங்கு திரைப்படமான ‘ஜாதி ரத்னாலு’ படத்தின் இயக்குநர் அனுதீப் இந்தப் … Read more

உயிரித் தொழில்நுட்ப புத்தொழில் கண்காட்சி.. 8 ஆண்டுகளில் 8 மடங்கு வளர்ச்சி.!

இந்தியாவின் உயிரித் தொழில்நுட்பப் பொருளாதாரம் கடந்த எட்டாண்டுகளில் எட்டு மடங்கு வளர்ச்சியடைந்துள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். டெல்லி பிரகதி மைதானத்தில் உயிரித் தொழில்நுட்ப புத்தொழில் நிறுவனங்களின் கண்காட்சி மத்திய அரசின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் நடைபெறும் இந்தக் கண்காட்சியில் நலவாழ்வு, மரபியல், உயிரிமருந்துகள், வேளாண்மை, மாசில்லா எரியாற்றல் உள்ளிட்ட பல பிரிவுகளில் முந்நூறு அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் கண்காட்சியைப் பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, உயிரித்தொழில்நுட்பச் … Read more

பிரதமர் மோடி நாளை குஜராத் பயணம்; ரூ.3,050 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.!

புதுடெல்லி: பிரதமர் மோடி நாளை குஜராத் பயணம் மேற்கொள்கிறார். அங்கு ரூ.3050 கோடி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். குஜராத் சட்டசபையின் பதவிக்காலம் வரும் டிசம்பர் மாதத்துடன் முடிவடைகிறது. அங்கு, ஆளும்  பாஜ ஆட்சியை தக்க வைக்க முயற்சிக்கிறது. பிரதான  எதிர்க்கட்சியான காங்கிரஸ் உட்கட்சி மோதலில் சிக்கியுள்ளது. இதனால்  பஞ்சாப் பாணியில் தேர்தல் களத்தில் ஆம் ஆத்மி களமிறங்கி உள்ளது.  இதனால் மும்முனை போட்டி நிலவும் நிலை உருவாகியுள்ளது. குஜராத்தில் எப்படியும் ஆட்சியை கைப்பற்றுவது என்பதில் ஆம் ஆத்மி … Read more

மகனின் சடலத்தை கொடுக்க ரூ.50 ஆயிரம் லஞ்சம் – பிச்சையெடுத்து பணம் சேகரிக்கும் பெற்றோர்

தங்கள் மகனின் சடலத்தை கொடுப்பதற்கு மருத்துவமனை ஊழியர் ரூ.50 ஆயிரம் லஞ்சம் கேட்டதால் வேறு வழியின்றி அவரது வயதான பெற்றோர் பிச்சையெடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பிஹார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சஞ்சீவ் தாக்குர் (35). சற்று மனநலம் பாதிக்கப்பட்டவரான இவர், கடந்த இரண்டு வாரங்களாக காணவில்லை எனக் கூறப்படுகிறது. இதனிடையே, கடந்த 6-ம் தேதி சஞ்சீவ் தாக்குரின் சடலம் முஸ்ரிகராரி பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து, அவரது பெற்றோரை அழைத்த போலீஸார், இறந்து போனது அவர்களின் மகன் … Read more

விண்ணப்பதாரர்களுக்கு டி.என்.பி.எஸ்.சி முக்கிய அறிவிப்பு..!

தமிழகத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பணிக்கான கணினி வழித் தேர்வு வரும் 19-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்தத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் www.tnpsc.gov.in   மற்றும் www.tnpscexams.in என்ற தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.   Source link

திருவிழாவுக்கு வந்த இடத்தில் தகராறு.. துப்பட்டாவால் கழுத்தை நெரித்து மனைவி கொலை..!

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த பங்களாமேடு பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் (31). இவரது மனைவி நந்தினி(27). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் நேற்று, நந்தினி தனது கணவர் மற்றும் மகள்களுடன் ஆம்பூர் அருகே தேவலாபுரத்தில் உள்ள கோவில் திருவிழாவில் கலந்து கொள்ள தாய் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, கணவன் – மனைவி இடையே திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. அவர்களை குடும்பத்தினர் சமாதானம் செய்து வைத்துள்ளனர். இந்த நிலையில் இன்று காலை குடும்பத்தினர் அருகே உள்ள கோவிலுக்கு … Read more

பப்ஜி கேம்… மகனை கண்டித்த தாய்க்கு நேர்ந்த கொடூர முடிவு!

உத்தரப் பிரதேச மாநிலம், யமுனாபுரம் காலனியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் ஒருவன் எந்த நேரமும் ஆன்லைனில் பப்ஜி கேம் ஆடுவதையே வழக்கமாக கொண்டிருந்துள்ளான். பப்ஜி விளையாட்டுக்கு அடிமையாகியுள்ள அந்த சிறுவனை அவரது தாய் சில தினங்களுக்கு கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த சிறுவன், அவரது தாயை துப்பாக்கியால் இதை கண்டித்த தாயை அந்த சிறுவன் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளான். தனது கொலைக் குற்றத்தை மறைக்க, இறந்த தாயின் உடலை ஒரு அறையில் மறைத்து வைத்துள்ளான் … Read more