ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் ஜூலை 24ல் முடிகிறது ஜூலை 18ல் ஜனாதிபதி தேர்தல்: தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு

புதுடெல்லி தற்போதைய  ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் அடுத்த மாதம் 24ம் தேதி முடிவதை தொடர்ந்து, புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன்படி, ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் 15ம் தொடங்குகிறது. அடுத்த மாதம் 18ம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது. இந்தாண்டு தொடக்கத்தில் உத்தர பிரதேசம் உட்பட 5 மாநில சட்டப்பேரவைகளுக்கு தேர்தல் நடந்தது. இதில், பஞ்சாப் தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி பெற்று ஆட்சியை … Read more

குஜராத் | தன்னைத் தானே திருமணம் செய்துகொண்டார் ஷாமா பிந்து

அகமதாபாத்: குஜராத்தைச் சேர்ந்த ஷாமா பிந்து என்ற பெண் தன்னைத் தானே திருமணம் செய்து கொண்டார். பாஜக தலைவர் ஒருவரின் எச்சரிக்கையை பொருட்படுத்தாமல், அவர் இந்து திருமணச் சடங்கு முறையைப் பின்பற்றினார். குஜராத்தின் வதோதராவைச் சேர்ந்தவர் ஷாமா பிந்து. 24 வயதான பிந்து , ”திருமணம் செய்துகொள்ள நினைக்கவில்லை. ஆனால், என்னை மணமகளாக பார்க்க வேண்டும் என்று விரும்புகிறேன். அதனால் இந்தத் திருமணத்தை செய்து கொள்கிறேன்” என்று கூறி இருந்தார். இவரின் இந்த அறிவிப்புக்கு பல விமர்சனங்கள் … Read more

கேரளாவில் கலவரத்தை தூண்ட சதி; தங்கராணி சொப்னா, முன்னாள் எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு

திருவனந்தபுரம்: கேரள அரசியலில் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தங்கக் கடத்தல் வழக்கு இப்போது மீண்டும் சூடுபிடித்து உள்ளது. இந்த வழக்கில் முக்கிய குற்றச்சாட்டுக்கு ஆளான சொப்னா, நீதிமன்றத்தில் தொடர்ந்து 2 நாள் ரகசிய வாக்குமூலம் அளித்தார். அதன் பிறகு முதல்வர் பினராயி விஜயன் சூட்கேசில் துபாய்க்கு கட்டுக்கட்டாக பணத்தை கடத்தினார் என்றும், அமீரக துணைத் தூதர் தங்கி இருந்தபோது அவரது வீட்டில் இருந்து பெரிய, பெரிய பிரியாணி பாத்திரங்களில் வீட்டுக்கு தங்கம் … Read more

தங்கக்கடத்தல் விவகாரத்தில் தொடர்பு? கேரள முதல்வர் பதவி விலகக்கோரி காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

தங்கக் கடத்தல் விவகாரத்தில் கேரள முதல்வர் பினராய் விஜயன் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு தொடர்பு இருப்பதாக இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டிருந்த ஸ்வெப்னா நேற்று வாக்குமூலம் அளித்து இருந்த நிலையில், முதல்வர் பினராய் விஜயன் பதவி விலக கோரி திருவனந்தபுரத்தில் காங்கிரஸ் கட்சியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. கேரள மாநிலம் திருவனந்தபுரம் சா்வதேச விமான நிலையத்தில் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில் கடத்தி வரப்பட்ட ரூ.15 கோடி மதிப்பிலான தங்கம் கடந்த ஆண்டு ஜூலை 5-ஆம் … Read more

TTDC: திருப்பதி ஏழுமலையான் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

தமிழ்நாட்டை சேர்ந்த ஏழுமலையான் பக்தர்களின் வசதிக்காக சென்னையில் இருந்து திருப்பதிக்கு, தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டு கழகம் சார்பில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பயணத்தை மேற்கொள்ள விரும்பும் பக்தர்கள், தாங்கள் பயணம் மேற்கொள்ள உள்ள தேதிக்கு குறைந்தபட்சம் இரண்டு நாட்களுக்கு முன்னர் பயண டிக்கெட்டை ஆன்லைனில் பதிவு செய்யும் நடைமுறை தற்போது உள்ளது. இந்த நிலையில், திருப்பதிக்கு வருகைதரும் வெளிமாநில பக்தர்களின் ஆன்லைன் டிக்கெட் புக்கிங் குறைத்த விவரங்கள், அவர்கள் பயண மேற்கொள்ளும் தினத்துக்கு ஏழு நாட்களுக்கு … Read more

கேரள தங்க கடத்தல்: ஸ்வப்னா சுரேஷ் முன் ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு

திருவனந்தபுரம்: கேரள தங்கக்கடத்தல் வழக்கில் தொடர்புடைய ஸ்வப்னா சுரேஷ் முன் ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள அதன் தூதரகத்திற்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வந்த பார்சலில் தங்கம் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து, சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு தூதரக முன்னாள் அதிகாரி ஸ்வப்னா சுரேஷ் உட்பட 20-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர். இந்த வழக்கில் முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் அவரது … Read more

மருத்துவ முதுநிலை படிப்புக்கு சிறப்பு கலந்தாய்வு நடத்த கோரிய மனு: நாளை நீதிமன்ற தீர்ப்பு!

காலியாக உள்ள மருத்துவ முதுநிலைப் படிப்புகளுக்கான இடங்களை நிரப்புவதற்கு சிறப்பு கலந்தாய்வு நடத்த கோரிய மனு மீதான தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம். நாளை தீர்ப்பு வழங்கப்படும் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. 1,456 மருத்துவ முதுநிலை படிப்புகளுக்கான இடங்கள் காலியாக உள்ள நிலையில், அதனை நிரப்புவதற்கு சிறப்பு கலந்தாய்வு நடத்த கோரி மருத்துவர்கள் சிலர் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து இருந்தார்கள். இந்த மனு நேற்று உச்சநீதிமன்ற விடுமுறைக் கால சிறப்பு அமர்வு நீதிபதி எம்.ஆர்.ஷா தலைமையிலான … Read more

சேனல்களால் நாட்டுக்கு தர்மசங்கடம்.. ‘எடிட்டர்ஸ் கில்டு’ குற்றச்சாட்டு..!

மகாராஷ்டிராவை சேர்ந்த பாஜக செய்தி தொடர்பாளர் நூபுர் சர்மா சமீபத்தில் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது அவர் முஸ்லிம் மதத்திற்கு எதிராக அவதூறான கருத்துக்களை தெரிவித்தார். இதற்கு நாடு முழுவதும் கடும் கண்டனம் எழுந்தது. பல்வேறு முஸ்லிம் நாடுகளும் கண்டனத்தை பதிவு செய்தன. இதையடுத்து, உத்தரப் பிரதேசத்தின் கான்பூரில் மிகப்பெரிய கலவரம் வெடித்தது. இரு சமூகத்தினர் வெடிகுண்டுகளை வீசி தாக்கிக் கொண்டனர். நாடு முழுதும் சலசலப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்துக்கு எடிட்டர்ஸ் கில்டு ஆஃப் … Read more

எதிர்க்கட்சி அல்ல.. ஆளும்கட்சியே இலக்கு.. அதிரடி காட்டிய அண்ணாமலை..!

சேலம் மாவட்டம் ஏற்காடு நாகலூர் கிராமத்தில் பாஜக சார்பில் மலைவாழ் மக்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “மலைவாழ் மக்களின் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மலைவாழ் மக்கள் ஒருங்கிணைந்து அறக்கட்டளை ஒன்றை தொடங்கி மத்திய அரசின் நிதியை பெற்று பயனடைய வேண்டும்” என்று அறிவுறுத்தினார். பின்னர், மலைவாழ் மக்களின் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். அதன் பின்னர், … Read more

இந்தியாவில் முதல்முறையாக… தன்னைத் தானே திருமணம் செய்து கொள்ளும் இளம்பெண்!

ஆணும், பெண்ணும் திருமணம் செய்து கொண்டு இல்லற வாழ்வில் இன்புற்றிருப்பதே இயற்கை வகுத்துள்ள நியதி. இந்த நியதிக்கு மாறாக ஆணும், ஆணும் திருமணம் செய்து கொள்வது, பெண்ணும், பெண்ணும் மணம் புரிந்து கொள்ளும் போக்கு உலக அளவில் அவ்வபோது நிகழ்ந்து வருகிறது. இதற்கெல்லாம் ஒரு படி மேலே சென்று ஒரு ஆண் தன்னைதானே திருமணம் செய்து கொள்ளும் கொடுமையும் தற்போது நிகழ்ந்து வருகின்றன. ஆண்கள் மட்டும்தான் இப்படி செய்வாங்க? ஏன் நாங்க இப்படி செய்யக்கூடாதா என்று தங்களைதாங்களே … Read more