“நாடாளுமன்ற நடவடிக்கையில் சிபிஐ தலையிடுகிறது” – சபாநாயகருக்கு கார்த்தி சிதம்பரம் கடிதம்

சிபிஐயின் நடவடிக்கை தனது நாடாளுமன்ற செயல்பாடுகளில் நேரடியாக தலையிடுவதாக உள்ளது உள்ளதாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிற்கு நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் கடிதம் எழுதியுள்ளார். நாடாளுமன்றத்தின் சிறப்புரிமையை மீறும் வகையில் உள்ள இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கார்த்திக் சிதம்பரம் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் தனது வீட்டில் அலுவல் சார்ந்த முக்கிய ஆவணங்களை சிபிஐ அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கார்த்தி சிதம்பரம் கடிதம் எழுதியுள்ளார். நாடாளுமன்ற உரிமை … Read more

பாலியல் தொழிலாளரை துன்புறுத்த கூடாது – போலீஸுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: பாலியல் தொழிலாளர்களை போலீஸார் துன்புறுத்தக்கூடாது. அவர்களை கண்ணியத்துடன் நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கரோனா பெருந்தொற்று காலத்தில் பாலியல் தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு ரேஷனில் உணவுப் பொருள்கள், நிதியுதவி வழங்க வேண்டும் என்று கோரி தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய், ஏ.எஸ்.போபண்ணா அமர்வு விசாரித்து வருகிறது. இவ்வழக்கு அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது தொண்டு … Read more

ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் நிரபராதி?

மும்பை சொகுசுக் கப்பலில் நடைபெற்ற கேளிக்கை விருந்தின்போது போதைப்பொருள் பயன்படுத்தியதாக பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உள்பட 8 பேரை என்.சி.பி. அதிகாரிகள் கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக மொத்தம் 20 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஷாருக்கான் மகன் ஆர்யன் கான், அர்பாஸ் மெர்ச்சண்ட், முன்முன் தமேச்சா, கோமித், மோஹக் உள்ளிட்டோர் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். இதனிடையே, வழக்கில் தனக்கு ஜாமீன் கோரி ஆர்யன் … Read more

இந்திய டிரோன் திருவிழாவை பிரதமர் தொடக்கி வைத்தார்.!

டெல்லியில் இந்திய அளவிலான டிரோன் திருவிழாவைத் தொடக்கி வைத்த பிரதமர் மோடி, வளர்ச்சித் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து டிரோன்களின் உதவியுடன் ஆய்வு செய்யப் போவதாகத் தெரிவித்துள்ளார்.  டெல்லி பிரகதி மைதானத்தில் இன்றும் நாளையும் இந்திய அளவிலான டிரோன் திருவிழா நடைபெறுகிறது. டிரோன் திருவிழாவைத் தொடக்கி வைத்த பிரதமர் மோடி, ரிமோட் மூலம் டிரோன்களை இயக்கும் பயிற்சி பெற்ற 150 பேருக்குச் சான்றிதழ்களையும் வழங்கினார்.   நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, டிரோன் தொழில்நுட்பம் பற்றிய ஆர்வம் இந்தியாவில் … Read more

தமிழ்நாடு வந்தது மறக்க முடியாதது- பிரதமர் மோடி டுவிட்டர் பதிவு

புதுடெல்லி: பிரதமர் மோடி நேற்று மாலை சென்னை வந்தார். நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று ரூ.31,500 கோடி மதிப்புள்ள திட்டங்களை தொடங்கி வைத்தார். சென்னை வந்த பிரதமர் மோடிக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. சென்னை நேப்பியர் பாலத்தில் இருந்து நேரு ஸ்டேடியம் வரை தொண்டர்கள் ஏராளமானோர் திரண்டு நின்று அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். மோடியின் சென்னை வருகை தமிழகம் முழுவதும் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தமிழகம் வந்தது தொடர்பாக பிரதமர் மோடி … Read more

நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் நிரபராதி; போதை பொருள் தடுப்பு பிரிவு அறிக்கை

மும்பை: நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் நிரபராதி என்று போதை பொருள் தடுப்பு பிரிவு அறிக்கை வெளியிட்டுள்ளது. போதிய ஆதாரம் இல்லாததால் கோர்டேலியா போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஆர்யன் கான், அவின் சாஹு மற்றும் 4 நிகழ்ச்சி அமைப்பாளர்கள் மீது வழக்கு எதுவும் இல்லை என போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

போதைப்பொருள் வழக்கில் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆரியன் கான் நிரபராதி

போதைப்பொருள் வழக்கில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆரியன் கான் நிரபராதி என குற்றப்பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆரியன் கான் வழக்கில் தேசிய போதைப்பொருள் தடுப்பு அமைப்பு குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. இந்த குற்றப்பத்திரிகையில் ஆரியன்கான் நிரபராதி என தேசிய போதைப்பொருள் அமைப்பு கூறியுள்ளது. முன்னதாக, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 12ஆம் தேதி கோவா சென்ற சொகுசு கப்பலில் போதை பொருள் தடுப்பு பிரிவினர் சோதனை நடத்தி, போதை பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஷாருக்கானின் மகன் … Read more

பேரவையில் அநாகரீகமாக பேச கூடாது – அகிலேஷ் யாதவுக்கு ஆதித்யநாத் அறிவுரை

லக்னோ: உத்தரபிரதேச சட்டப்பேரவையில், முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசின் 2-வது ஆட்சி காலத்தின் முதல் நிதிநிலை அறிக்கை நேற்று தாக்கல் செய்யப்பட்டது. ரூ.6.15 லட்சம் கோடி மதிப்பிலான நிதிநிலை அறிக்கையை உ.பி நிதியமைச்சர் சுரேஷ் குமார் கண்ணா தாக்கல் செய்தார். பின்னர் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நேற்று தொடங்கியது. அப்போது பேசிய துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா, ‘‘அகிலேஷ் யாதவ், தான் முதல்வராக இருந்தபோது மேற்கொள்ளப்பட்ட பணிகளை புகழ்ந்து கொண்டிருக்கிறார். … Read more

தனது மனைவி தினமும் தன்னை குச்சி, கிரிக்கெட் மட்டையால் தாக்குவதாக கணவர் காவல்நிலையத்தில் பரபரப்பு புகார்..!

ராஜஸ்தானில், தனது மனைவியால் கடந்த ஒரு வருடமாக தாக்குதலுக்கு ஆளாகிய பள்ளி முதல்வர் மனைவி மீது புகாரளித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி முதல்வராக இருப்பவர் அஜித் யாதவ். இவர் தனது மனைவி சுமன் தன்னை தினமும் குச்சி, கிரிக்கெட் மட்டை போன்ற பொருட்களால் அடித்துள்ளார். கடந்த ஒரு வருடமாக தாக்குதல் அதிகமானதைத் தொடர்ந்து யாதவ் வீட்டில் சிசிடிவி கேமரா பொருத்தி இருக்கிறார். மனரீதியாக பாதிக்கப்பட்ட அஜித் யாதவ் பலவீனமாக உள்ளதாக சிசிடிவி … Read more

கணவரை ஓட ஓட விரட்டி அடித்து துவைத்த காதல் மனைவி- வீடியோ வெளியிட்டு பாதுகாப்பு கேட்ட கணவர்

ராஜஸ்தான் மாநிலம் பிவாடி நகரில் வசித்து வரும் அஜித்சிங் அங்குள்ள பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த சுமன் என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். காதல் திருமணம் அஜித்சிங்குக்கு இனிமையானதாக அமையவில்லை. திருமணத்துக்கு பின்னர்தான் சுமன் எப்படிப்பட்டவர் என்பது தெரிய வந்தது. வீட்டில் ஏற்படும் சின்ன சின்ன பிரச்சினைகளுக்கெல்லாம் கோபப்பட்டு கையில் கிடைப்பதை தூக்கி கணவரை தாக்க தொடங்கினார் சுமன். ஆரம்பத்தில் இதனை பெரிதாக எடுத்துக் கொள்ளாத அஜித்சிங் … Read more