பாஜக-வின் நுபுர் சர்மா விவகாரத்தில் மாநில அரசுகள் விழிப்புடன் இருக்க வேண்டும்.: ஒன்றிய அரசு அறியுறுத்தல்

டெல்லி: மாநில அரசுகள் விழிப்புடன் இருக்க வேண்டும் என ஒன்றிய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது. பாஜக-வின் நுபுர் சர்மாவை கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் நடக்கும் நிலையில் உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

கழுகை காப்பாற்ற முயற்சித்தபோது வேகமாக வந்த கார் மோதி விபத்து! இருவர் பரிதாப பலி!

மும்பையில் காருக்கடியில் சிக்கிய கழுகை காப்பாற்ற முயற்சித்தபோது, வேகமாக வந்த மற்றொரு கார் மோதியதில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். மும்பையைச் சேர்ந்த 43 வயதான அமர் மணீஷ் ஜரிவாலா மே 30 அன்று பாந்த்ரா-வொர்லி கடல் இணைப்பு பாதை வழியாக சென்று கொண்டிருந்தபோது கழுகு அவரது காரின் கீழ் வந்தது. ஜரிவாலா தனது டிரைவரான ஷியாம் சுந்தரிடம் காரை நிறுத்தச் சொன்னார். காயமடைந்த பறவையை மீட்க இருவரும் காரிலிருந்து இறங்கினர். This is shocking… #bandraworlisealink.#Mumbai.@RoadsOfMumbai @mumbaitraffic … Read more

ஜூலை 18-ல் தேர்தல்: குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவது எப்படி?

நாட்டின் அடுத்த குடியரசுத் தலைவருக்கான தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெறும் எனவும், தேவைப்பட்டால் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூலை 21-ம் தேதி நடத்தப்படும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. புதிய குடியரசுத் தலைவர் ஜூலை 25-ம் தேதி பதவி ஏற்க உள்ளார். தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 2017-ல் தேர்வு செய்யப்பட்டார். இவரது பதவிக் காலம் ஜூலை 24-ம் தேதியுடன் முடிவடைகிறது. Source link

இந்தியாவில் 2030க்குள் எய்ட்ஸை முழுவதுமாக ஒழிக்கும் பணி சவால் மிகுந்தது – ஐ.நா. துணை பிரதிநிதி ஆர்.ரவிந்திரா

இந்தியாவில் பொது சுகாதாரத்திற்கு அச்சுறுத்தலாக விளங்கும் எய்ட்ஸ் நோயை 2030 ஆம் ஆண்டுக்குள் முழுவதுமாக ஒழிக்கும் பணிகள் தொடர்ந்து சவால் மிகுந்ததாகவே உள்ளதாக ஐ.நா.வுக்கான நிரந்தர துணை பிரதிநிதியான இந்திய துாதர் ஆர். ரவிந்திரா தெரிவித்துள்ளார். ஐ.நா.வில் நடைப்பெற்ற எய்ட்ஸ் சம்பந்தமான உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர்அடுத்த 10 ஆண்டு காலத்திற்குள் எய்ட்ஸ் நோயை முற்றிலுமாக ஒழிக்க உலக சுகாதார அமைப்பு உள்ளிட்ட அனைத்து பங்குதாரர்களுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா தயாராக இருப்பதாகவும் அவர் … Read more

வீட்டில் யானை தந்தங்கள் பறிமுதல்; மோகன்லால் மீதான வழக்கை வாபஸ் பெற நீதிமன்றம் மறுப்பு: கேரள அரசின் மனு தள்ளுபடி

திருவனந்தபுரம்: நடிகர் மோகன்லாலின் வீட்டில் யானை தந்தங்கள் கைப்பற்றப்பட்டது தொடர்பான வழக்கை ரத்து செய்ய அனுமதி கோரி கேரள அரசு தாக்கல் செய்த மனுவை பெரும்பாவூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. கடந்த 2012ம் ஆண்டு நடிகர் மோகன்லாலின் சென்னை, கொச்சி உள்பட பல்வேறு இடங்களில் உள்ள வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது கொச்சியில் உள்ள அவரது வீட்டில் இருந்து 2 யானை தந்தங்கள் கைப்பற்றப்பட்டன. வருமான வரித்துறை … Read more

துப்பாக்கியில் சுட்ட 16 வயது மகன் -உயிருடன் துடிதுடித்த தாய்; கொலையை மறைக்க ரூ.5,000 பேரம்

பப்ஜி விளையாடுவதை தடுத்ததற்காக தனது தாயை 16 வயதே ஆன மகன் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த விவகாரத்தில், நாளுக்கு நாள் அதிர்ச்சிக்கரமான தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. உத்தரப்பிரதேச மாநிலம் தலைநகர் லக்னோவைச் சேர்ந்த ராணுவ அதிகாரி ஒருவர், மேற்கு வங்க மாநிலத்தில் பணியாற்றி வரும் நிலையில், அவரின் மனைவி, 10-ம் வகுப்பு படிக்கும் 16 வயதான மகன் மற்றும் 10 வயதான மகள் ஆகிய 3 பேர் மட்டும் லக்னோவில் தனியாக வசித்து வந்துள்ளனர். … Read more

மேகாலயாவில் கனமழையினால் நிலச்சரிவு; 4 பேர் பலி: பாலங்கள் சேதம்

மேகாலயாவின் கரோ பகுதியில் கனமழையினால் ஏற்பட்ட நிலச்சரிவில் இதுவரை 4 பேர் பலியாகினர். இவர்களில் மூவர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், நிலச்சரிவு காரணமாக கரோ பகுதியில் உள்ள முக்கிய பாலங்கள் சேதமடைந்துள்ளன. இதில் ஜெபல்கிரே கிராமத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 3 பேர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்.கரோனாவின் பிற பகுதிகளான துரா, தாலு, புராகாஸியா ஆகிய பகுதிகளும் கனமழையினால் பலத்த சேதம் அடைந்துள்ளன. அடுத்த சில நாட்களுக்கு இப்பகுதியில் கனமழை … Read more

போக்குவரத்து போலீசாருடன் வாக்குவாதம் செய்த பாஜக எம்.எல்.ஏ., மகள்!

கர்நாடக மாநில பாஜக எம்.எல்.ஏ., அரவிந்த் லிம்பவளியின் மகள் அண்மையில் தனது பிஎம்டபிள்யூ சொகுசு காரில் தனது நண்பர்களுடன் சென்றுள்ளார். அப்போது அவர், சிக்னலில் நிற்காமல் சென்றதாக தெரிகிறது. இதையடுத்து அவரை தடுத்து நிறுத்திய போக்குவரத்து காவலர்கள் அபராதம் கேட்டுள்ளனர். இதனால், கோபமான அவர் அபராதம் கேட்ட போக்குவரத்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும், எம்.எல்.ஏ.வின் வாகனங்கள் சிக்னலில் நிற்க வேண்டிய தேவை இல்லை எனவும் அவர் கூறியதாக தெரிகிறது. அத்துடன் இதனை படம் பிடிக்க முயன்ற … Read more

வியட்நாமில் பயிற்சிக் கருவிகள் வாங்க இந்தியா சார்பில் 50 இலட்ச ரூபாய் காசோலை வழங்கினார் அமைச்சர் ராஜ்நாத் சிங்.!

வியட்நாம் சென்றுள்ள பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அங்குள்ள தொலைத்தொடர்புப் பல்கலைக்கழகத்தைப் பார்வையிட்டார். வியட்நாம் ராணுவத்தில் பணியாற்றுவோருக்குத் தொலைத்தொடர்புப் பயிற்சி அளிப்பதற்காக நா டிராங் என்னுமிடத்தில் உள்ள பல்கலைக்கழகத்தைப் பார்வையிட்ட ராஜ்நாத் சிங், பயிற்சிக்கான கருவிகள் வாங்க இந்தியாவின் உதவியாக 50 இலட்ச ரூபாய்க்கான யை வழங்கினார். முன்னதாக விமானப்படை அதிகாரிகள் பயிற்சிப் பள்ளிக்கு 10 இலட்சம் டாலர் நிதியுதவியையும் ராஜ்நாத் சிங் வழங்கினார்.  Source link

புதுமண தம்பதிகளாக திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்த நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடி..!!

ஆந்திரா: நேற்று திருமணம் செய்துகொண்ட புதுமண தம்பதியான நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் ஜோடி கல்யாண உற்சவ சேவையில் பங்கேற்பதற்காக திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்றனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெறும் கல்யாண உற்சவ சேவையில் பங்கேற்க ஏற்கனவே முன்பதிவு செய்திருந்த நயன்தாரா தம்பதி, திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்றிருந்தனர். அவர்கள் பக்தர்களுக்கான சுபதம் நுழைவு வாயிலில் ஏழுமலையான் கோயிலுக்குள் சென்றனர். கல்யாண உற்சவ சேவையில் பங்கேற்ற பின்னர் ஏழுமலையானை நயன்தாரா, விக்னேஷ் சிவன் தம்பதி … Read more