அதானி துறைமுகத்தில் ரூ.500 கோடி கோகைன் பறிமுதல் போதை பொருட்கள் கடத்தல் தலைநகராக மாறும் குஜராத்: வெளிநாட்டில் இருந்து வந்த கன்டெய்னர்களில் பதுக்கல்

புஜ்: ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அமைத்தபிறகு, சர்வதேச சந்தைகளில் அதிக விலை மதிப்புமிக்க போதை பொருட்களின் கடத்தல் அதிகமாகி இருக்கிறது. குறிப்பாக, போதை பொருட்கள் கடத்தலின் தலைநகரமாக குஜராத்தும் மாறி வருகிறது. கடந்தாண்டு செப்டம்பரில் முந்த்ரா துறைமுகத்திற்கு கப்பலில் கடத்தி வரப்பட்ட  3 ஆயிரம் கிலோ ஹெராயின் போதை பொருள் சிக்கியது. இதன் சர்வதேச மதிப்பு ரூ.21 ஆயிரம் கோடி. இந்தியாவில் இதற்கு முன் இந்தளவுக்கு பெரியளவில் போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது கிடையாது. ஒன்றியத்தில் பாஜ … Read more

ஆட்டோவில் சென்ற நடிகையை அவமதித்த இன்ஸ்பெக்டர்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

திருவனந்தபுரம்: மலையாளத்தில் ‘நீலத்தாமரை’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் அர்ச்சனா கவி. பிறகு சால்ட் அன்ட் பெப்பர், பெஸ்ட் ஆப் லக், ஸ்பானிஷ் மசாலா, நாடோடி மன்னன் உள்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தமிழில் அரவான், ஞானக்கிறுக்கன் ஆகிய படங்களில் நடித்துள்ள இவர் தெலுங்கிலும் நடித்துள்ளார். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு கொச்சியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு இரவில் தன்னுடைய தோழிகளுடன் வீட்டுக்கு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அப்போது வழியில் ஆட்டோவை மறித்த மட்டஞ்சேரி … Read more

டெல்லி ஸ்டேடியத்தில் வீரர்களை விரட்டியடித்து நாயுடன் வாக்கிங் சென்ற ஐஏஎஸ் தம்பதி இடமாற்றம்: ஒன்றிய அரசு அதிரடி

புதுடெல்லி: டெல்லி தியாகராஜா ஸ்டேடியத்தில் வீரரர்களை விரட்டியடித்து நாயுடன் வாக்கிங் செல்ல ஐஏஎஸ் அதிகாரி தம்பதி அதிரடியாக ஒன்றிய அரசு இடமாற்றம் செய்துள்ளது. டெல்லியில் விளையாட்டு வீரா்கள், குறிப்பாக தடகள வீரர்கள் பயிற்சி பெறுவதற்கு தியாகராஜா மைதானம் உள்ளது. இங்கு வீரர்கள் இரவு 8.30 மணி வரையும் பயிற்சி மேற்கொள்வார்கள். இந்த சூழலில் டெல்லி அரசின் வருவாய்துறை முதன்மை செயலாளர் சஞ்சீவ் கிர்வார் மற்றும்  அவருடைய மனைவியும், ஐஏஎஸ் அதிகாரியுமான ரிங்கு துக்கா ஆகியோர் அங்கு நாயுடன் … Read more

'நாடாளுமன்றத்தில் சுயேச்சை குரல் ஒலிக்க வேண்டியது அவசியம்' – காங்கிரஸில் இருந்து விலகினார் கபில் சிபல்

லக்னோ: காங்கிரஸ் அதிருப்தி தலைவர்களில் ஒருவரான கபில் சிபல் (73) அக்கட்சியிலிருந்து விலகுவதாக நேற்று அறிவித்தார். மேலும் சமாஜ்வாதி ஆதரவுடன் மாநிலங்களவை தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்தார். காங்கிரஸ் மூத்த தலைவரும் பிரபல வழக்கறிஞருமான கபில் சிபல், மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் (2004 – 2014) பல்வேறு முக்கிய துறைகளின் அமைச்சராக பதவி வகித்தார். 2016-ம் ஆண்டு முதல் உ.பி. சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். இவரது பதவிக்காலம் வரும் ஜூலை … Read more

விசாரணையில் ஆளுங்கட்சியினரின் தலையீடா? நடிகை புகாரில் விளக்கம் அளிக்க கேரள அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

திருவனந்தபுரம்: பிரபல மலையாள நடிகை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு எர்ணாகுளத்தில் உள்ள தனி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் உயர் நீதிமன்றத்தின் அனுமதியுடன் தொடர் விசாரணையும் நடக்கிறது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட நடிகை கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரள உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், ‘பலாத்கார வழக்கில் முதலில் இருந்த வேகம் தற்போது இல்லை. விசாரணையில் ஆளுங்கட்சியினர் தலையிடுவதுதான் இதற்கு காரணம். எனவே, உயர் நீதிமன்றம் தலையிட்டு முறையாக … Read more

சகோதரர்களுக்கு மாதந்தோறும் ரூ.10 லட்சம் அனுப்பிய தாவூத் – அமலாக்கத் துறையிடம் சாட்சி வாக்குமூலம்

மும்பை: மகாராஷ்டிர மாநில சிறுபான்மையினத்தவர் நலத்துறை அமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் நவாப் மாலிக். மும்பை தொடர் குண்டுவெடிப்பில் முக்கிய குற்றவாளியான நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமின் கூட்டாளிகளுடன் நவாப் மாலிக் சட்ட விரோதப் பண பரிவர்த்தனை நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அமலாக்கத் துறையினர் வழக்குப் பதிவு செய்து அவரிடம் விசாரணை நடத்தி கைது செய்தனர். காலித் உஸ்மான் ஷேக் என்பவரின் சகோதரர், தாவூத் சகோதரர் இக்பால் கஸ்கருடன் சிறுவயது முதலே நண்பராக … Read more

ஜம்முவில் பிரபல டிவி நடிகை சுட்டுக்கொலை: தீவிரவாதிகள் வெறியாட்டம்

ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் பிரபல டிவி நடிகையை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படைகள் எடுத்து வரும் கடும் நடவடிக்கைகளில், தீவிரவாதிகள் வேட்டையாடப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகளான லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமதுவை சேர்ந்த தீவிரவாதிகள் தொடர்ந்து கொல்லப்பட்டு வருகின்றனர். நேற்றும் கூட, குப்வாரா மாவட்டத்தில் 3 லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். கடந்த ஒரு மாதத்தில் மட்டுமே ஜம்மு காஷ்மீரில் வெளிநாடுகளை சேர்ந்த 26 தீவிரவாதிகளை … Read more

கியான்வாபி மசூதி வழக்கில் இந்துக்களின் 3 மனுக்கள் விரைவு நீதிமன்றத்திற்கு மாற்றம் – மே 30-ம் தேதி விசாரணை

புதுடெல்லி: கியான்வாபி மசூதி வழக்கில் இந்துக்கள் தரப்பில் நேற்று 3 புதிய மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இவற்றை வாரணாசி விரைவு நீதிமன்றத்திற்கு மாவட்ட நீதிமன்றம் மாற்றியுள்ளது. இம்மனுக்கள் வரும் 30-ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளன. உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலை ஒட்டியுள்ள கியான்வாபி மசூதி சுவரில் சிங்கார கவுரி அம்மனை தினமும் தரிசிக்க உத்தரவிட கோரி கடந்த ஆண்டு ஆகஸ்ட் 18-ல் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில், கோயிலை ஒட்டியுள்ள கியான்வாபி மசூதியில் களஆய்வு … Read more

ஆந்திராவில் ஆம்புலன்ஸ் வாகனத்தில் செம்மரக்கட்டைகளை கடத்த முயன்ற 11 பேர் கைது.!

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் ஆம்புலன்ஸ் வாகனத்தில் செம்மரக்கட்டைகளை கடத்த முயன்ற 11 பேரை போலீசார் கைது செய்தனர். நேற்றிரவு சித்தூர் – வேலூர் நெடுஞ்சாலையில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் விதமாக வந்த ஆம்புலன்ஸை போலீசார் சோதனையிட்ட போது அதனுள்ளே செம்மரக்கட்டைகள் இருந்துள்ளன. ஆம்புலன்ஸில் இருந்து 4 பேர் தப்பி ஓடிய நிலையில் எஞ்சிய 11 பேரை போலீசார் கைது செய்தனர். இதே போல் சித்தூர் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் டாடா ஏஸ் வாகனத்தில் கடத்தப்பட்ட 36 செம்மரக்கட்டைகளை … Read more

வளர்ப்பு நாய் நடை பயிற்சிக்கு விளையாட்டு மைதானத்தை பயன்படுத்திய அதிகாரி மீது மத்திய அரசு நடவடிக்கை

புதுடெல்லி: டெல்லியில் ஐ.ஏ.எஸ்.அதிகாரியாக பணிபுரியும் சஞ்சீவ் கிர்வாரும்,  அதிகாரியாக உள்ள அவரது மனைவி ரிங்கு டுக்காவும், தியாகராஜ விளையாட்டு மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த  வீரர்களை உடனடியாக வெளியேறுமாறு கூறியதாக புகார் எழுந்தது.  பின்னர் தனது வளர்ப்பு நாயுடன் அவர்கள் அந்த மைதானத்தில் நடந்து செல்லும் புகைப்படம் சமூக வலைதங்களில் வைரலானது.   தியாகராஜ் ஸ்டேடியத்தில் உள்ள வசதிகளை சஞ்சய் கிர்வார் மற்றும் அவரது மனைவி ரிங்கு துக்கா தவறாகப் பயன்படுத்தியது தொடர்பாக ஊடங்களின் வெளியான செய்திகளின் அடிப்படையில் அறிக்கை … Read more