லடாக் எல்லைப் பகுதியில் தனது படை பலத்தையும், ஆயுத பலத்தையும் சீனா பல மடங்கு உயர்த்தியுள்ளதாக தகவல்!

லடாக் எல்லைப் பகுதியில் தனது படை பலத்தையும், ஆயுத பலத்தையும் சீனா பல மடங்கு உயர்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கவச வாகனங்கள், ஆயுத தளவாடங்கள் மற்றும் நவீன ரக ஏவுகணைகளை லடாக் எல்லைப் பகுதிகளுக்கு இந்திய ராணுவம் நிலைநிறுத்தி, கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில், லடாக்கின் மேற்கு பகுதியில் 100 கிலோ மீட்டரைச் சுற்றி படைகளை குவித்துள்ள சீனா, உடனடியாக லடாக்குக்கு ராணுவத் தளவாடங்களை கொண்டுவரும் வகையில் சுரங்க சாலைகள், விமான ஓடுபாதைகளையும் அமைத்துள்ளது. 50 … Read more

மகாராஷ்டிராவில் முற்றும் மோதல்; ‘மத்திய பாதுகாப்பு படையை தயார் நிலையில் வைத்திருங்கள்’.! ஒன்றிய உள்துறை செயலாளருக்கு கவர்னர் கோஷ்யாரி கடிதம்

மும்பை: மத்திய பாதுகாப்பு படையை தயார் நிலையில் வைத்திருங்கள் என்று ஒன்றிய உள்துறை செயலாளர் அஜய் குமார் பல்லாவுக்கு, மகாராஷ்டிரா மாநில கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி கடிதம் எழுதியுள்ளார்.மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா கட்சியை சேர்ந்த அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில், அக்கட்சியின் எம்எல்ஏக்கள் 40 பேர், முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக திரண்டுள்ளனர். மேலும் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகா விகாஸ் அகாடி கூட்டணியில் இடம் பெற்றிருந்த சுயேச்சை எம்எல்ஏக்கள் சிலரும், ஏக்நாத் ஷிண்டேவுடன் உள்ளனர். அதிருப்தி … Read more

"பிரச்சினையை திசை திருப்ப திட்டமிடுகிறார் பிரதமர் மோடி" – ராகுல் காந்தி

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் பல்வேறு கொள்கைகளை ராகுல் காந்தி தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். மேலும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி உள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில், “முழுமையாக திசைதிருப்பும் அறிவியலில் திறமை வாய்ந்தவர் பிரதமர் மோடி. ஆனால் அவரது அந்தத் திறமையால், ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் மதிப்பு ரூ.1.33 லட்சம் கோடி சரிவு, 30 ஆண்டுகளில் இல்லாத … Read more

“தலையையே வெட்டினாலும் கவுகாத்தி செல்ல மாட்டேன்”.. அமலாக்கத்துறை நோட்டீஸ் குறித்து சஞ்சய் ராவத் கருத்து!

தனது தலையையே வெட்டினாலும் கவுகாத்தி செல்லமாட்டேன் என சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். நில மோசடி வழக்குத் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு சஞ்சய் ராவத்துக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், அமலாக்கத்துறையின் நோட்டீஸ் என்ற சதி மூலம் தன்னை தடுக்க முடியாது என தெரிவித்துள்ளார்.  Source link

அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மீதான தகுதிநீக்க நோட்டிஸ்: பதிலளிக்க அவகாசம் அளிப்பு

மகாராஷ்டிரா: மகாராஷ்டிராவில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மீதான தகுதிநீக்க நோட்டிஸ் குறித்து பதிலளிக்க அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. ஜூலை 12-ம் தேதி வரை அதிருப்தி எம்.எல்.ஏ.களுக்கு அவகாசம் அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  ஜூலை 11-ம் தேதி வரை சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.களை தகுதி நீக்கம் செய்யக்கூடாது எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

'மனதின் குரல்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி சென்னை வீரருக்கு பாராட்டு

புது டெல்லி: ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி சென்னையை சேர்ந்த பளுதூக்குதலில் தங்கம் வென்ற வீரர் குறித்து பேசியுள்ளார். ஒலிம்பிக் போட்டிகளில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற இந்தியாவின் நீரஜ் சோப்ரா, சமீபத்தில் பின்லாந்தில் நடந்த சர்வதேச குவார்டேன் போட்டிகளிலும் தங்கம் வென்றுள்ளார். பாவோ நுர்மி போட்டிகளில் வெள்ளி வென்றுள்ளார். இதன்மூலம் மீண்டும் ஒருமுறை நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார். இளைஞர்களுக்கான கெலோ இந்தியா போட்டிகளில் பல்வேறு புதிய சாதனைகள் படைக்கப்பட்டன. இந்திய விளையாட்டுத் துறை புதிய … Read more

பெரும்பான்மையை இழந்த மகாராஷ்டிர அரசு – அதிருப்தி அமைச்சர்களின் இலாகா பறிப்பு!

மகாராஷ்டிர மாநிலத்தில், முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகா விகாஸ் அகாதி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெறுவதாக, சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில், முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா – காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய மாநில அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன், அசாம் மாநிலம் … Read more

“இந்திய மாங்கனீசு நிறுவனத்தைத் தனியார் மயமாக்குவதிலிருந்து நான்தான் காப்பாற்றினேன்” – மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

பொதுத்துறையைச் சேர்ந்த இந்திய மாங்கனீசு நிறுவனத்தைத் தனியார் மயமாக்குவதில் இருந்து தான் காப்பாற்றியதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். அரசின் பங்கு விற்பனைப் பட்டியலில் நாக்பூரைச் சேர்ந்த இந்திய மாங்கனீசு நிறுவனமும் இடம் பெற்றிருந்ததாகவும், அதை விட்டுவிட வேண்டும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் தான் கேட்டுக் கொண்டதாகவும் தொழிற்சங்க நிகழ்ச்சியில் பங்கேற்ற நிதின் கட்கரி தெரிவித்தார். Source link

சிறுவன் தண்ணீர் குடித்ததில் தகராறு இருபிரிவினர் பயங்கர மோதல்-விஜயநகரம் மாவட்டத்தில் பரபரப்பு

திருமலை: ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் சிறுவன் தண்ணீர் குடித்த தகராறில் இரு பிரிவினர் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது.ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம் நெல்லிமர்லா மண்டலம் மால்யடா கிராமத்தில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் பிற்படுத்தப்பட்டோர் வசிக்கும் பகுதிகளில் உள்ள ஆழ்துளை குழாயில்  தண்ணீர் குடித்ததால் சிறுவனை தாக்கியதாகவும், அதனால் பதிலுக்கு அவர்களும் தாக்குதலில் ஈடுப்பட்டதாகவும் இதனால் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதாக  போலீசார் கூறுகின்றனர்.  மலையடா கிராமத்தில் இரு பிரிவினரும் ஒருவரையொருவர் கட்டை … Read more

தொடங்கியது ஆள்சேர்ப்பு – அக்னிபாத் திட்டத்தில் இளைஞர்கள் இணைவது எப்படி?

இந்திய ராணுவத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அக்னிபாத் திட்டத்தில் இளைஞர்கள் எப்படி சேர வேண்டும் என்பது குறித்து இங்கு காணலாம். இந்திய ராணுவத்தில் 4 ஆண்டுகள் இளைஞர்களை பணியமர்த்தும் அக்னிபாத் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்திற்கு பரவலாக எதிர்ப்பு எழுந்த போதிலும், தற்போது ஆள்சேர்ப்பு நடவடிக்கையை ராணுவம் தொடங்கியுள்ளது. தரைப்படை, விமானப்படை, கடற்படை ஆகிய முப்படைகளில் தங்களுக்கு எதில் விருப்பமோ, அதில் இளைஞர்கள் சேர்ந்து கொள்ள முடியும். 17.5 முதல் 21 வயது வரை உள்ளவர்கள் … Read more