குடியரசுத் தலைவர் தேர்தல் | திரவுபதி முர்மு வேட்புமனு தாக்கல் – பிரதமர், கூட்டணி தலைவர்கள் பங்கேற்பு

புதுடெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் பாஜக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்மு (64), தனது வேட்புமனுவை நேற்று தாக்கல் செய்தார். பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள், கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் உடன் இருந்தனர். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் ஜூலை 24-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, புதிய குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுக்க ஜூலை 18-ம் தேதி தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்தத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய … Read more

அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு தகுதி நீக்க நோட்டீஸ் – 27க்குள் பதிலளிக்க உத்தரவு!

சிவசேனா அதிருப்தியாளர் ஏக்நாத் ஷிண்டேவுடன் தங்கி உள்ள 16 எம்எல்ஏக்களுக்கு தகுதி நீக்க நோட்டீசை, மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவை துணை சபாநாயகர் அனுப்பி உள்ளார். மகாராஷ்டிர மாநிலத்தில், முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா – காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய மாநில அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன், அசாம் மாநிலம் கவுகாத்தியில் முகாமிட்டு உள்ளார். … Read more

போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 20 லட்சம் மதிப்புள்ள 13000 மது பாட்டில்கள் அழிப்பு

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் கடந்த 2 மாதங்களில் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான அண்டை மாநில மதுபாட்டில்கள் அழிக்கப்பட்டன. தெலங்கானா, கர்நாடகாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 13 ஆயிரம் மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அவை இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில் சாலையில் அடுக்கப்பட்டு பொக்லைன் இயந்திரம் மூலம் அழிக்கப்பட்டன. Source link

கேரளாவில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியது

திருவனந்தபுரம்: கேரளாவில் நேற்று கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியது. 10 பேர் மரணமடைந்தனர். இந்தியாவில் 3 மாத இடைவெளிக்குப் பிறகு கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக கேரளா, மகாராஷ்டிரா, டெல்லி, கர்நாடகா உள்பட மாநிலங்களில் நோய் பரவல் அதிகமாக உள்ளது. இந்தியாவில் நேற்று நோயாளிகள் எண்ணிக்கை 17 ஆயிரத்தை தாண்டியது. இந்த நிலையில் கேரளாவில் நேற்று நோயாளிகள் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியது. நேற்று 22,770 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. … Read more

‘’செய்யாத குற்றத்திற்காக 16வயதிலேயே பாலியல் குற்றவாளி என்ற பழி”..உ.பியில் ஒரு கண்ணீர் கதை!

உத்தரபிரதேசத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டுக்கு ஆளான நபர் ஒருவர் 22 ஆண்டுகளுக்கு குற்றவாளி இல்லை என நிரூபணமாகியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் அலிகாரில் 2000ஆம் ஆண்டு ஆக்ஸ்ட் 26ஆம் தேதி 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக 16 வயது சிறுவன் சிறார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறார் பள்ளியிலும் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அப்போதே அவருக்கு ஜாமீன் கிடைத்து வெளிவந்தார். இருப்பினும், தீர்ப்பு வெளியாகும் வரை அவர் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு வந்தார். … Read more

ஏவுகணை சோதனை வெற்றி – மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து

புதுடெல்லி: தரையில் இருந்து பாய்ந்து சென்று வானில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் விஎல் – எஸ்ஆர்எஸ்ஏஎம் ரக ஏவுகணையை ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தயாரித்துள்ளது. ஒடிசா மாநிலம் சந்திப்பூர் கடல் பகுதியில் போர்க்கப்பலில் இருந்து நேற்று இந்த ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட இலக்கை ஏவுகணை துல்லியமாக தாக்கி அழித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த வகை ஏவுகணை, வான்வெளி மற்றும் இதர போரக்கப்பல்களின் தாக்குதலிலிருந்து நமது கப்பலை பாதுகாக்கும் … Read more

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடாததால் சர்ச்சை

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெறும் மத்திய அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த் தாய் வாழ்த்து பாட வேண்டுமென புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார். புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சர்வதேச பொது சுகாதார பள்ளியை மத்தியமைச்சர் மன்சுக் மாண்டவியா திறந்து வைத்தார். தொடக்க விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் நிகழ்ச்சி தொடங்கப்பட்ட நிலையில், தமிழிசை செளந்தரராஜன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க நிகழ்ச்சியின் நடுவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. இனி வருங்காலங்களில் ஜிப்மர் … Read more

மும்பையில் இன்று முதல் ஜூலை 10ம் தேதி வரை 144 தடை உத்தரவு அமல்: காவல்துறை அறிவிப்பு

மும்பை: மும்பையில் இன்று முதல் ஜூலை 10ம் தேதி வரை 144 தடை உத்தரவு அமலுக்கு வருவதாக காவல்துறை தெரிவித்திருக்கிறது. மராட்டியத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசை கவிழ்க்க முயற்சிப்பதாக மும்பையில் சிவசேனா தொண்டர்கள் கொந்தளித்துள்ளனர். பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள், போராட்டங்கள், அசம்பாவித சம்பவங்களை தடுக்கவும் தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

சிவசேனா பாலாசாஹேப் கட்சி | அதிருப்தி குழுவுக்கு பெயர் வைத்த ஏக்நாத் ஷிண்டே ஆதரவாளர்கள்

மகாராஷ்டிரா அரசியலில் நிமிடத்திற்கு நிமிடம் பரபரப்பு கூடிக் கொண்டே இருக்கிறது. 40 எம்எல்ஏ.,க்கள் ஆதரவுடன் அசாமில் முகாமிட்டுள்ளார் ஏக்நாத் ஷிண்டே. இந்நிலையில் அந்தக் குழுவிற்கு சிவசேனா பாலாசாஹேப் என்று அதிருப்தி எம்எல்ஏ.,க்கள் தரப்பில் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அதிருப்தி அணியில் உள்ள சிவசேனா எம்எல்ஏ தீபக் குமார் கேசர்கர், எங்கள் குழுவானது சிவசேனா பாலாசாஹேப் குழு என்றழைக்கப்படும். நாங்கள் எந்த கட்சியுடனும் சேர மாட்டோம் என்றார். கோரிக்கையும் பிடிவாதமும்: மகாராஷ்ட்ரா அரசியல் நிலவரம் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. இதுவரை 37 … Read more

அடித்து நொறுக்கப்பட்ட அதிருப்தி எம்.எல்.ஏ. அலுவலகம்!

மகாராஷ்டிர மாநிலத்தில், முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா – காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய மாநில அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன், அசாம் மாநிலம் கவுகாத்தியில் முகாமிட்டு உள்ளார். ஏக்நாத் ஷிண்டே உடன் சுயேச்சை எம்எல்ஏக்கள் உட்பட சுமார் 50 எம்எல்ஏக்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. அதில், சிவசேனா கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்கள் மட்டும் 40 … Read more