ஆந்திர தலைநகர் மீது துளிர் விடும் நம்பிக்கை: அமராவதியில் சென்னை ஐஐடி குழு ஆய்வு

அமராவதி: புதிய ஆந்திர மாநிலத்தின் தலைநகரமாக அமராவதி அறிவிக்கப்பட்டு, கடந்த 2015 அக்டோபரில் அடிக்கல் நாட்டப்பட்டது. தற்காலிக பேரவை மற்றும் தலைமைச் செயலக கட்டிடங்கள் கட்டப்பட்டு, அங்கிருந்தே ஆட்சி தொடங்கியது. நிரந்தர கட்டிடங்களுக்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தன. ஆனால் 2019-ல் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சிக்கு வந்ததும், 3 தலைநகரங்கள் அமைக்கும் திட்டத்தை அறிவித்து, அதிர்ச்சியூட்டினார். இதனால் அமராவதிக்கு நிலம் வழங்கிய விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் சட்டப் போராட்டமும் நடத்தி, 3 தலைநகர திட்டத்துக்கு முட்டுக்கட்டை … Read more

வயநாடு மலை உச்சியின் குகையில் சிக்கியிருந்த 4 குழந்தைகள் உட்பட 6 பேரை மீட்ட வனத் துறை அதிகாரிகள்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மீட்புப் படையினரும் ராணுவமும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இதுவரை 300-க்கும் மேற்பட்டோர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் உள்ள ஒரு மலை உச்சியின் குகையில் சிலர் சிக்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, கல்பெட்டா ரேஞ்ச் வன அதிகாரி கே.ஹாஷிஸ் தலைமையிலான 4 பேர் … Read more

“காங்கிரஸ் – கம்யூனிஸ்டுகளால் உருவாக்கப்பட்டது வயநாடு பேரழிவு” – பாஜக எம்பி குற்றச்சாட்டு

பெங்களூரு: கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் நிகழ்ந்திருப்பது இயற்கை பேரழிவு அல்ல என்றும் அது காங்கிரஸ் -கம்யூனிஸ்டுகளால் உருவாக்கப்பட்டது என்றும் பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள தேஜஸ்வி சூர்யா, “கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் நிகழ்ந்திருப்பது இயற்கை பேரழிவு அல்ல. அது காங்கிரஸ் – கம்யூனிஸ்டு கட்சிகளால் உருவாக்கப்பட்டது. மேற்குத் தொடர்ச்சி மலையின் சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலங்களில் கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் சட்டவிரோத வணிகமயமாக்கல், … Read more

உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தில் போலீஸார் ஆய்வு

புதுடெல்லி: ஈரானில் ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்ட நிலையில் உளவுத்துறையின் எச்சரிக்கையைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம், சாபாத் ஹவுசின் பாதுக்காப்பினை காவல்துறை பலப்படுத்தியுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்தவர்களின் கூற்றுப்படி, தேசிய தலைநகர் டெல்லியில் உள்ள இரண்டு இஸ்ரேலிய கட்டிடங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பினை உறுதி செய்வது குறித்து மூத்த அதிகாரிகள் கூட்டம் ஒன்றை நடத்தினர். ஏற்கெனவே அந்தப் பகுதிகளில் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அந்த இரண்டு கட்டிடங்களிலும் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. தேவைப்பட்டால் கூடுதல் … Read more

“இது ஒன்றும் மதரஸா அல்ல” – உ.பி.யில் தாடியுடன் பள்ளிக்கு வந்த மாணவர் நீக்கப்பட்டதால் சர்ச்சை

புதுடெல்லி: உத்தரப் பிரதேச மாநிலத்தில் தாடியுடன் வகுப்புக்கு வந்த மாணவரும், அவருக்கு ஆதரவாக இருந்த சகோதரரும் பள்ளியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். மேலும், “மதரஸாவை போல் தாடி வளர்க்க பொதுக் கல்வி நிலையத்தில் அனுமதி இல்லை” என அப்பள்ளி முதல்வர் மாணவர்களை கண்டித்துள்ளார். உத்தரப் பிரதேசத்தின் மேற்குப் பகுதியிலுள்ள பரேலியை அடுத்த நயி பஸ்தியை சேர்ந்தவர் ஜிஷான் அலி. இவர், தம் வீட்டின் அருகிலுள்ள ஒரு மேல்நிலைப் பள்ளியில் ப்ளஸ் ஒன் வகுப்பு படிக்கிறார். இவர் கடந்த ஒரு … Read more

வயநாடு நிலச்சரிவு பலி 350 ஆக அதிகரிப்பு: கடற்படையின் மீட்புப் பணி நிலவரம் என்ன? – அரசு விளக்கம்

புதுடெல்லி / வயநாடு: கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 350 ஆக அதிகரித்துள்ள நிலையில், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் தொடரும் கடற்படையின் பங்களிப்பு குறித்து மத்திய அரசு விவரித்துள்ளது. இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘மோசமான வானிலை, கடினமான நிலப்பரப்பு அமைப்புகளுக்கு மத்தியில், வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இந்திய கடற்படை மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை முழு வீச்சில் தீவிரமாகத் தொடர்கிறது. … Read more

நாட்டு மக்கள் அனைவரும் தேசியக் கொடியை வீடுகளில் ஏற்றுமாறு அமித் ஷா வேண்டுகோள்

புதுடெல்லி: நாட்டு மக்கள் அனைவரும் வரும் 9-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை மூர்வணக் கொடியை தங்கள் வீடுகளில் ஏற்றுமாறு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வேண்டுகோள் விடுத்க்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “நமது தேசியக் கொடியான மூர்ணக்கொடி தியாகம், விசுவாசம் மற்றும் அமைதியின் சின்னமாகும். சுதந்திர தினத்தை ஒட்டி நாட்டு மக்கள் தங்கள் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என்ற வேண்டுகோளை பிரதமர் நரேந்திர மோடி கடந்த … Read more

இலவச LIVE கிரிக்கெட்… JIO TV மீது கடுப்பான கேபிள் டிவி ஆபரேட்டர்கள்: TRAI-க்கு பாய்ந்த கடிதம்

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் ஒருநாள் தொடர் ஜியோ டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது குறித்து, அனைத்து உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் சங்கம் டெல்லி (ALCOA INDIA) TRAI க்கு கடிதம் எழுதி தனது அதிருப்தியை தெரிவித்துள்ளது. கடிதத்தில் கூறப்பட்டுள்ள விவரங்களை இங்கே காணலாம். 

வயநாடு துயரம்: இறுதிக்கட்டத்தில் மீட்புப் பணிகள், 206 பேரை காணவில்லை – பினராயி விஜயன் விளக்கம்

திருவனந்தபுரம்: பேரிடர் பாதித்த வயநாட்டில் தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளது என்றும், எனினும் இன்னும் 206 பேரை காணவில்லை என்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பினராயி விஜயன், “இதுவரை 215 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதில் 87 பெண்கள், 98 ஆண்கள், 30 குழந்தைகள். இதுவரை 148 உடல்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இன்னும் 206 பேர் காணவில்லை. 81 பேர் காயமடைந்துள்ளனர். பல்வேறு மருத்துவமனைகளில் அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். … Read more

வயநாடு நிலச்சரிவு பலி 350 ஆக அதிகரிப்பு: கடற்படையின் மீட்புப் பணி நிலவரம் என்ன? – அரசு விளக்கம்

புதுடெல்லி / வயநாடு: கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 350 ஆக அதிகரித்துள்ள நிலையில், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் தொடரும் கடற்படையின் பங்களிப்பு குறித்து மத்திய அரசு விவரித்துள்ளது. இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘மோசமான வானிலை, கடினமான நிலப்பரப்பு அமைப்புகளுக்கு மத்தியில், வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இந்திய கடற்படை மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை முழு வீச்சில் தீவிரமாகத் தொடர்கிறது. … Read more