கேரள முதல்வருக்கு எதிராக சமூக ஊடகப் பிரச்சாரம்

திருவனந்தபுரம்: வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக முதலமைச்சரின் பேரிடர் நிவாரண நிதிக்கு அனைவரும் நிதியுதவி அளிக்க வேண்டும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் முகநூலில் அழைப்பு விடுத்திருந்தார். இந்த கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என எக்ஸ் சமூக வலைதளத்தில் ‘கோயிகோடன்ஸ் 2.0’ என்ற முகவரியில் இருந்து பிரச்சாரம் செய்யப்பட்டது. இது தொடர்பாக மாநில காவல் துறை ஊடகப் பிரிவு நேற்று கூறுகையில், “இந்தப் பிரச்சாரம் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை தடுக்கும் நோக்கம் கொண்டது. … Read more

எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில் அருந்ததியருக்கு உள்ஒதுக்கீடு அளித்தது செல்லும்: உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு

புதுடெல்லி: பட்டியலினத்தவர், பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் இருக்கிறது. அந்த வகையில், அருந்ததியர் உள்ஒதுக்கீடு தொடர்பான தமிழக அரசின் சட்டம் செல்லும் என்று உச்ச நீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துஉள்ளது. தமிழகத்தில் கடந்த 2009-ம் ஆண்டில் திமுக ஆட்சியின்போது, பட்டியலின மக்களுக்கான இடஒதுக்கீட்டில் அருந்ததியருக்கு 3 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதுதொடர்பான தமிழக அரசின் சட்டத்தை எதிர்த்து புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, சென்னை உயர் … Read more

“தப்பிச் செல்ல முற்பட்டேன்!” – உடற்கூராய்வு மருத்துவர் பகிரும் வயநாடு பெருந்துயர் அனுபவம்

வயநாடு: வயநாடு பெருந்துயரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அந்தத் துயரத்தின் உண்மையான சோகத்தை வலியுடன் பகிர்கிறார் அரசு மருத்துவர் ஒருவர். உள்ளூர் மருத்துவமனை ஒன்றுக்கு உடற்கூராய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட அப்பெண் மருத்துவர், தான் இதுவரை காணாத காட்சிகளைக் கண்டிருக்கிறார். தனது வாழ்வில் அடுத்தமுறை நிகழக்கூடாது என நினைக்கும் அத்துயர்மிகு வலிகள் குறித்து அம்மருத்துவர் கூறியது: “நான் உடற்கூராய்வு செய்வதற்கு என்னை பழக்கப்படுத்திக் கொண்டேன். ஆனால், இப்போது நடப்பது போன்ற ஒன்றுக்கு எதுவும் என்னை … Read more

வயநாடு நிலச்சரிவில் இதுவரை 295 பேர் பலி: 1,500+ மீட்பு; 200 பேரின் கதி என்ன? – முழு விவரம்

வயநாடு: கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 295 ஆக அதிகரித்துள்ளது. மீட்புப் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இதுவரை 1500-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள முண்டக்கை, சூரல்மலை உள்ளிட்ட பகுதிகளில் திங்கள்கிழமை ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவால் ஏராளமான மக்கள் மண்ணில் புதைந்தனர். இதைத் தொடர்ந்து தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையினர், கேரள போலீஸார், தீயணைப்பு படையினர் ஆகியோருடன் ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய … Read more

“ராகுல் தைத்த செருப்பை கோடி ரூபாய் கொடுத்தாலும் விற்கமாட்டேன்” – உ.பி. தொழிலாளி நெகிழ்ச்சி

ரேபரேலி: ராகுல் காந்தி தைத்த செருப்பை பலரும் அதிக விலைக்கு கேட்பதாகவும், கோடி ரூபாய் கொடுத்தால் கூட அந்த காலணிகளை விற்கமாட்டேன் என்றும் உத்தர பிரதேசத்தை சேர்ந்த காலணி தைக்கும் தொழிலாளி ராம் சைத் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். உத்தர பிரதேசத்தை சேர்ந்த காலணி தைக்கும் ஏழை தொழிலாளி ராம் சைத். இவர் சுல்தான்பூரில் வசிக்கிறார். தனது ஏழ்மை நிலையை கூறி உதவி செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு தகவல் அளித்திருந்தார். இதனைத் தொடர்ந்து … Read more

“என் தந்தையை இழந்தபோது அடைந்த அதே துக்கம்…” – வயநாட்டில் ராகுல் காந்தி உருக்கம்

வயநாடு: வயநாட்டில் நிலச்சரிவால் பாதித்த மக்களுக்கு நேரில் ஆறுதல் கூறிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “என் தந்தையை இழந்தபோது எவ்வளவு துக்கமடைந்தேனோ, அதே துக்கத்தில்தான் இப்போது இருக்கிறேன்” என்று உருக்கமாக குறிப்பிட்டுள்ளார். கேரளாவில் மலைப் பிரதேசங்கள் நிறைந்த வயநாடு மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக கடந்த 30-ம் தேதி பெரும் நிலச்சரிவு ஏற்பட்டு பலர் உயிரிழந்தனர். இந்த எண்ணிக்கை தற்போது 295 ஆக அதிகரித்துள்ளது. 200-க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ள நிலையில், அவர்களைத் தேடும் … Read more

‘லெபனானுக்கு வர வேண்டாம்’ – இந்தியர்களுக்கு தூதரகம் எச்சரிக்கை

பெய்ரூட்: மறு அறிவிப்பு வரும் வரை இந்தியர்கள் யாரும் லெபனானுக்கு பயணம் செய்ய வேண்டாம் என லெபனானில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக லெபனானில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “இந்த பிராந்தியத்தில் தற்போது அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளதால் மறு அறிவிப்பு வரும் வரை இந்திய குடிமக்கள், லெபனானுக்குப் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அதோடு, லெபனானில் உள்ள இந்திய குடிமக்கள் அனைவரும் லெபனானை விட்டு வெளியேறுமாறு கடுமையாக அறிவுறுத்தப்படுகிறார்கள். ஏதேனும் ஒரு … Read more

வியட்நாம் பிரதமர் உடன் பிரதமர் மோடி பேச்சு: பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒப்பந்தம் கையெழுத்து

புதுடெல்லி: வியட்நாம் பிரதமர் பாம் மின் சின் உடன் பிரதமர் மோடி நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து, இரு நாடுகளுக்கு இடையே விவசாயம், சட்டம், மருந்து உள்பட பல்வேறு துறைகளில் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இந்தியா வந்துள்ள வியட்நாம் பிரதமர் பாம் மின் சின், பிரதமர் நரேந்திர மோடியை இன்று (ஆக. 1) சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தைக்குப் பிறகு, இரு தலைவர்களும் வியட்நாமின் Nha Trang இல் உள்ள தொலைத்தொடர்பு பல்கலைக்கழகத்தில் ராணுவ மென்பொருள் பூங்காவை திறந்து … Read more

ராணுவ மருத்துவ சேவைகள் பிரிவின் முதல் பெண் தலைமை இயக்குநராக சாதனா சக்சேனா நாயர் பொறுப்பேற்பு

புதுடெல்லி: ராணுவ மருத்துவ சேவைகள் பிரிவின் முதல் பெண் தலைமை இயக்குநராக லெப்டினன்ட் ஜெனரல் சாதனா சக்சேனா நாயர் பொறுப்பேற்றுள்ளார். இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: லெப்டினன்ட் ஜெனரல் சாதனா சக்சேனா நாயர், ஆகஸ்ட் 01, 2024 அன்று, ராணுவத்தின் மருத்துவ சேவைகள் பிரிவின் தலைமை இயக்குநராக பதவி ஏற்றுக்கொண்டார். இந்த மதிப்புமிக்க பதவிக்கு நியமிக்கப்பட்ட முதல் பெண் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு, ஏர் மார்ஷல் நிலையில் மருத்துவமனை சேவைகள் … Read more

வயநாட்டில் நிலச்சரிவு உருவான இடம்… இஸ்ரோ வெளியிட்ட புகைப்படங்கள் – முழு விளக்கம் இதோ!

Wayanad Landslides: இஸ்ரோ இன்று வெளியிட்டுள்ள உயர் தர செயற்கைகோள் புகைப்படங்கள் வயநாட்டில் ஏற்பட்டுள்ள உக்கிரமான பாதிப்புகளை வெளிக்காட்டுகின்றன.