டெல்லி அரசு தங்கும் விடுதியில் ஒரே மாதத்தில் 14 பேர் உயிரிழப்பு: நீதி விசாரணைக்கு உத்தரவு

புதுடெல்லி: டெல்லியில் உள்ள அரசு தங்கும் விடுதியான ஆஷா கிரண் தங்கும் விடுதியில் கடந்த ஜூலை மாதம் மட்டும் 14 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் குறித்து நீதித் துறை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக, அம்மாநில அமைச்சர் அதிஷி தெரிவித்துள்ளார். டெல்லியில் ரோஹினி பகுதியில் டெல்லி அரசு சார்பில் நடத்தப்பட்டு வரும் ஆஷா கிரண் தங்கும் விடுதியில் பல்வேறு மர்ம மரணங்கள் நிகழ்ந்திருப்பதாக வெளியான தகவலை அடுத்து அதிகாரிகள் அங்கு ஆய்வு மேற்கொண்டனர். கடந்த பிப்ரவரி … Read more

“நீதி முறைமையின் புதிய யுகம் ஆரம்பம்” – ஆளுநர்கள் மாநாட்டில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரை

புதுடெல்லி: குற்றவியல் நீதி பரிபாலனத்துடன் தொடர்புடைய மூன்று புதிய சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, நீதி முறைமையின் புதிய யுகம் நாட்டில் ஆரம்பமாகியுள்ளதாக ஆளுநர்கள் மாநாட்டை தொடங்கி வைத்து ஆற்றிய உரையில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்தார். குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தலைமையில் இரண்டு நாள் ஆளுநர்கள் மாநாடு குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று தொடங்கியது. இந்த மாநாட்டில் அனைத்து மாநில ஆளுநர்கள், குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, அமித் … Read more

100+ வீடுகள் கட்டித்தர காங்கிரஸ் குடும்பம் உறுதி: வயநாட்டில் ராகுல் காந்தி தகவல்

வயநாடு: வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகள் தொடர்பாக மத்திய அரசிடமும் கேரள அரசிடமும் வலியுறுத்தப் போவதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். வயநாட்டில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, “நேற்று முதல் நான் இங்கே இருக்கிறேன். நான் நேற்று சொன்னது போல், இது ஒரு பயங்கரமான சோகம். நேற்று நாங்கள் பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்றோம். முகாம்களுக்கு சென்றோம். அங்குள்ள நிலைமையை மதிப்பீடு செய்தோம். இன்று பேரூராட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினருடன் ஆலோசனை நடத்தினோம். எதிர்பார்க்கும் … Read more

வயநாடு நிலச்சரிவு: மீட்புப்பணியில் இறங்கிய சேவா பாரதி 

வயநாடு: கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவு பாதிப்பு உண்டான இடங்களில் சேவா பாரதி சார்பாக பல நூறு ஸ்வயம் சேவகர்கள் களத்தில் பணி செய்து கொண்டிருக்கின்றனர். இதில் மீட்புப்பணியில் நான்காம் நாளான இன்று மட்டும் 254 பேர் களத்தில் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பாக சேவா பாரதி விடுத்துள்ள செய்தியில், “நிலச்சரிவில் புதையுண்ட சடலங்களை தேடும் பணி, சடலங்களை அப்புறப்படுத்தும் பணியில் தேசிய பேரிடர் மேலாண்மை மற்றும் ராணுவத்திற்கு உதவி செய்வது, ராணுவம் மற்றும் தேசிய … Read more

“இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளோம்” – சீன தூதர்

மும்பை: இரு நாட்டு மக்களுக்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைக்க இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற சீனா தயாராக உள்ளது என அந்நாட்டு தூதர் காங் ஜியான்ஹுவா தெரிவித்துள்ளார். ஜூலை 24 அன்று பலத்த காயம் அடைந்து அதிக ரத்த இழப்பால் பாதிக்கப்பட்ட சீன கடற்படை வீரரை, இந்திய கடலோர காவல்படையும் இந்திய கடற்படையும் இணைந்து வெற்றிகரமாக மீட்டு அவருக்கு சிகிச்சை அளித்தது. இதையடுத்து, மும்பையில் உள்ள சீன துணை தூதரகத்தின் தூதர் காங் ஜியான்ஹுவா, இந்திய கடலோர … Read more

'நீட் தேர்வை ரத்து செய்ய இயலாது…' கட் அண்ட் ரைட்டாக சொன்ன உச்ச நீதிமன்றம் – காரணம் என்ன?

NEET Case: நீட் தேர்வை ரத்து செய்ய இயலாது என்றும் தேசிய தேர்வு மையம் அதன் குறைப்பாட்டை உடனடியாக நிவர்த்திச் செய்துகொள்ள வேண்டும் எனவும் நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

மணிப்பூரில் முகாம்களில் தங்கி உள்ள மக்கள் மறுவாழ்வு கோரி போராட்டம்: பாதுகாப்புப் படையினர் தடுத்ததால் மோதல்

இம்பால்: மணிப்பூரில் முகாம்களில் தங்கியிருக்கும் மக்கள் மறுவாழ்வு கோரி நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களை பாதுகாப்பு படையினர் தடுத்ததால் இருதரப்பினர் இடையே மோதல்எழுந்தது. மணிப்பூர் மாநிலத்தில் கடந்தாண்டு மே மாதம் இரு தரப்பினர் இடையே இனக் கலவரம் ஏற்பட்டது. இதில் 226 பேர் உயிரிழந்தனர். 11,133 வீடுகள் எரிக்கப்பட்டன. 59,000 பேர் தங்கள் வீடுகளைகாலி செய்து வேறு இடங்களுக்குசென்றுவிட்டனர். ஆயிரக்கணக்கானோர் நிவாரண முகாம்களில் இன்னமும் தங்கியுள்ளனர். இந்நிலையில் இம்பால் கிழக்கு மாவட்டத்தில் உள்ள அகாம்பட் என்ற இடத்தில் … Read more

வயநாடு நிலச்சரிவு பலி 318 ஆக உயர்வு: உயிர் பிழைத்தோரை தேட ட்ரோன்கள் யன்படுத்த முடிவு

வயநாடு: கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் பலியானோர் எண்ணிக்கை 318 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் உயிர் பிழைத்தோர் எங்கேனும் சிக்கியிருக்கிறார்களா என்பதை ட்ரோன்களில் ரேடார் கருவியைப் பொருத்தி அதன் மூலம் கண்டறிய திட்டமிடப்பட்டுள்ளது. முன்னதாக, பெருமழை காரணமாக முண்டக்கை, சூரல்மலை, அட்டமலை, நூல்புழா பகுதிகளில் கடந்த 30-ம் தேதி அதிகாலை பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், நூற்றுக்கணக்கான வீடுகள் மண்ணில் புதைந்தன. வீடுகள் இருந்த தடயமே தெரியாத அளவுக்கு அப்பகுதி முழுவதும் சேற்று மண்ணால் … Read more

வயநாடு மாவட்டம் முண்டக்கை பகுதியில் மிகப் பெரிய அளவில் மீட்புப் பணி

வயநாடு: கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட முண்டக்கை, சூரல்மலை, அட்டமலை, நூல்புழா பகுதிகளில் மீட்புப்பணிகள் நேற்று மூன்றாவது நாளாகநடைபெற்றது. சேறும் சகதியுமான இடங்கள்,கட்டிட இடிபாடுகள், மழை உள்ளிட்ட பாதகமாக சூழ்நிலையில் மீட்புக் குழுவினர் போராடி வருகின்றனர். இதில் முண்டக்கை பகுதிபரந்த அளவில் பாதிக்கப்பட்டுள்ளதால் அங்கு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நேற்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து மீட்புப் பணிகளை ஒருங்கிணைத்து வரும் மாநில வருவாய்த் துறை அமைச்சர் கே.ராஜன் கூறியதாவது: முண்டக்கை பகுதியில் ராணுவம், … Read more

கேதார்நாத் யாத்திரையில் சிக்கி தவித்த 1,500 யாத்ரீகர்கள் மீட்பு: உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தகவல்

டேராடூன்: உத்தராகண்ட் மாநிலத்தில் கனமழை கொட்டியதையடுத்து கேதார்நாத் யாத்திரையில் சிக்கிதவித்த 1,500யாத்ரீகர்களை பத்திரமாக மீட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி நேற்று தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: கனமழையால் சேதம் உத்தராகண்ட் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை இரவு கனமழை காரணமாக சாலைகள், தரைப் பாலங்கள், மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்புகள், விவசாய நிலங்கள் பெரிய அளவில் சேதமடைந்துள்ளன. இந்நிலையில் கேதார்நாத் வழித்தடத்தில் சிக்கித் தவித்த 1,500-க்கும் மேற்பட்ட யாத்ரீகர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். குறிப்பாக, … Read more