மேயர் உள்ளிட்டோரின் எதிர்ப்பு எதிரொலி | விருப்ப மாறுதலில் சென்ற சிவகாசி மாநகராட்சி ஆணையர்
சிவகாசி: சிவகாசி மாநகராட்சியில் நிலவி வரும் தொடர் சர்ச்சை காரணமாகவும், திமுக கவுன்சிலர்களின் எதிர்ப்பு காரணமாகவும் ஆணையர் கிருஷ்ணமூர்த்தி விருப்ப மாறுதலில் கடலூர் மாநகராட்சிக்கு மாற்றப்பட்டார். சிவகாசி, திருத்தங்கல் நகராட்சிகள் இணைக்கப்பட்டு கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. அப்போது நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை இணை இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டார். மாநகராட்சி பொறுப்புகளை நகராட்சியில் பணியாற்றிய அலுவலர்களே கூடுதலாக கவனித்து வந்தனர். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் … Read more