டாஸ்மார்க் கடையில் மது அருந்துவதற்கு பணம் தர மறுத்த தாயை, மகனே கொடூரமாக அடித்து உதைத்த சம்பவம்!

கன்னியாகுமரி அருகே மது குடிக்க பணம் தராத ஆத்திரத்தில், பெற்ற தாயை நண்பர்களுடன் சேர்ந்து தாக்கிய மகனை போலீசார் தேடி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம், இலந்தவிளை பகுதியை சேர்ந்தவர் மேரி மார்கிரட். இவரின் மகன் ஷர்லின் ஜோஸ் மதுப்பழக்கத்துக்கு அடிமையான இவர், அடிக்கடி வீட்டில் இருக்கும் பணம், தாயிடம் இருக்கும் பணத்தை மிரட்டி பறித்து மது குடித்து வந்ததாக சொல்லப்படுகிறது. மேலும் நண்பர்களுடன் ஊர் சுற்றுவதை வழக்கமாகக் கொண்டுள்ள ஷர்லின் ஜோஸ், மதுபோதையில் ரகளையில் ஈடுபடுவதாகவும் சொல்லப்படுகிறது. … Read more

காவல் துறையின் சிறப்பான செயல்பாட்டால் தமிழகத்தில் இரு ஆண்டுகளாக சட்டம் ஒழுங்கு பிரச்சினை இல்லை: டிஜிபி சைலேந்திரபாபு

ஶ்ரீவில்லிபுத்தூர்: காவல் துறையின் சிறப்பான செயல்பாட்டால் தமிழகத்தில் கடந்த இரு ஆண்டுகளாக ஜாதி கலவரம், மத கலவரம் உள்ளிட்ட எந்த சட்ட ஒழுங்கு பிரச்சினையும் இல்லை என டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்தார். ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மொட்டமலை பகுதியில் உள்ள ராஜபாளையம் 11-வது பட்டாலியன் படைப்பிரிடில் டிஜிபி சைலேந்திரபாபு ஆய்வு செய்தார். அப்போது அவர் பேசுகையில், ‘இந்தியாவில் புலன் விசாரணையில் முதல் இடத்தில் தமிழக காவல்துறை உள்ளது. மத்திய பிரதேசத்தில் நடந்த காவல் துறையினருக்கான தேசிய அளவிலான பணித்திறன் … Read more

எடப்பாடியை வீழ்த்த சசிகலா, டிடிவியுடன் கைகோர்க்கும் ஓபிஎஸ்: அமமுகவுடன் விரைவில் இணைப்பு?…போஸ்டர் அடித்து தொண்டர்கள் உற்சாகம்

பெரியகுளம்:  எடப்பாடியை வீழ்த்த ஓபிஎஸ் அணி, அமமுக இணைய வேண்டும் என, இருதரப்பிலும் கோரிக்கை வலுத்துள்ளது. இதை வெளிப்படுத்தும் விதமாக பெரியகுளம் பகுதியில் போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர். ஜெயலலிதா இறந்தபின், அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. ஓபிஎஸ் பிரிந்து மீண்டும் இணைந்தாலும் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓபிஎஸ்க்கும் தொடர்ந்து பல்வேறு பிரச்னைகள் எழுந்தன. அதிமுக ஆட்சியின்போது நடந்த நாடாளுமன்ற தேர்தல், தொடர்ந்து நடந்த உள்ளாட்சி தேர்தல்களிலும் அதிமுக படுதோல்வியை தழுவியது. கடந்த சட்டமன்ற தேர்தலிலும் … Read more

அம்ரித் பாரத் ரயில் நிலைய திட்டம்.. புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் அதிகாரிகள் அதிரடி ஆய்வு

மதுரை கோட்டத்தில் 85 சதவீதம் மின் மயமாக்கும் பணிகள் முடிவடைந்துள்ளது என்று மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார். அம்ரித் பாரத் ரயில் நிலைய திட்டத்தின் கீழ் புதுக்கோட்டை ரயில் நிலையத்தை மேம்படுத்துவதற்கு உண்டான அறிவிப்பை, மத்திய அரசு கடந்த வாரம் வெளியிட்டு இருந்தது. அதன்படி, மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் ஆனந்த் தலைமையில், ரயில்வே அதிகாரிகள் இன்று புதுக்கோட்டை ரயில் நிலையத்தை ஆய்வுசெய்து, அம்ரித் பாரத் ரயில் நிலைய திட்டத்தின் கீழ், என்னென்ன பணிகள் … Read more

தமிழக கல்வித் துறையில் 4136 பணியிடங்களை நிரப்ப உத்தரவா? தீயாய் பரவிய தகவலுக்கு அரசு விளக்கம்

தமிழக கல்வித் துறையில் 4136 பணியிடங்களை நிரப்ப உத்தரவா? தீயாய் பரவிய தகவலுக்கு அரசு விளக்கம் Source link

#கோவை | வாயில் அடிபட்ட நிலையில் சுற்றி வந்த பெண் யானை! கடைசிவரை போராடியும் சிகிச்சை பலனின்றி பலி!

கோயம்புத்தூர் : கடந்த வாரம் மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியான வெள்ளியங்காடு பகுதியில் வாயில் காயத்துடன் சுற்றித் திரிந்தது.  காயம் காரணமாக நீர், உணவு உண்ண முடியாமல் தவித்தவந்த யானை உடல் மெலிந்த நிலையில் காணப்படுவதாக அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த வனத்துறையினர் யானையின் வாய்ப்பகுதியில் உள்ள காயம் காரணமாக நீர், உணவு உண்ண முடியாமல் பட்டினியாலும், வலியாலும் தவிப்பதை உறுதி செய்தனர். இதனையடுத்து, வனத்துறையினர் கும்கி யானை உதவியுடன் மயக்க ஊசி … Read more

கரும்பு வெட்ட கமிஷன் கேட்கும் பண்ணாரி சர்க்கரை ஆலை..! கையறு நிலையில் விவசாயிகள்

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பகுதியில் பண்ணாரி அம்மன் சர்க்கரை ஆலை நிர்வாகத்தின் மெத்தனபோக்கு காரணமாக கரும்பு வெட்டுவது தாமதமாவதால் கரும்புகள் காய்ந்து அவதி அடைவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். திருக்கோவிலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் 20 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள கரும்புகள் பண்ணாரி அம்மன் சுகர் லிமிடெட் என்னும் சர்க்கரை ஆலை மூலமாக வெட்டப்படுகின்றன. வெட்டுக்கான அனுமதி வழங்கி இரண்டு மாதங்கள் ஆகியும் இன்று வரை கரும்பை வெட்டாததால் கரும்புகள் காய்ந்து வருவதாகவும், அதேபோல் … Read more

முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரு போராளியாக ஜெயித்திருக்கிறார்: 70 ஆண்டு பொதுவாழ்வு கண்காட்சியை பார்த்த நடிகர் வடிவேலு பிரமிப்பு

மதுரை: “முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரு போராளியாக ஜெயித்திருக்கிறார்” என்று அவரின் 70 ஆண்டு பொதுவாழ்க்கை குறித்த புகைப்பட கண்காட்சியை பார்த்த நடிகர் வடிவேலு பிரமிப்பு தெரிவித்துள்ளார். மதுரை நத்தம் சாலை மேனேந்தல் மைதானத்தில் நடந்த மு.க.ஸ்டாலின் “புகைப்பட கண்காட்சி”யை நடிகர் வடிவேல் பார்வையிட்டார். அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70 ஆண்டுகால பொது வாழ்க்கை குறித்த புகைப்படக் கண்காட்சி பிரமிப்பாக இருக்கிறது. கண்காட்சியில் உள்ள அனைத்தும் புகைப்படம் இல்லை நிஜம். படிப்படியாக அவர் வாழ்ந்த … Read more

திருவாடானை அருகே கோயில் ஆலமரம் தீப்பிடித்து கருகியது

திருவாடானை: ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே சலுகை கிராமத்தில் மிகவும் பழமையான தர்ம முனீஸ்வரர் கோயில் உள்ளது. சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள், தர்ம முனீஸ்வரரை குலதெய்வமாக வழிபாடு செய்து வருகின்றனர். இந்த கோயிலுக்கு வரும் பக்தர்கள், பொங்கலிட்டு வழிபாடு செய்வது வழக்கம். கோயில் வளாகத்தில் மிகவும் பழமையான ஆலமரம் உள்ளது. இந்த மரத்து நிழலில் பொங்கல் வைத்து, கிராம மக்கள் தர்ம முனீஸ்வரரை வழிபடுவது வழக்கம். நேற்று முனீஸ்வரர் கோயிலுக்கு வந்து வழிபட்ட … Read more

”சேதமடைந்த வீட்டில் வாழ்கிறேன்”.. மாற்றுத்திறனாளி நீச்சல் வீராங்கனையின் கண்ணீர் கோரிக்கை!

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி நீச்சல் வீராங்கனையான பூலட்சி, தமக்கு ஒரு வீட்டை தமிழக அரசு இலவசமாய் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். இரண்டு குழந்தைகளுக்கு தாய்.. ஆனாலும் சாதனை செய்யும் பெண்! கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியை அடுத்த பூதிமூட்லு கிராமத்தைச் சேர்ந்தவர் பூலட்சுமி (35). இவர், அங்கன்வாடி மையத்தில் உதவியாளராகப் பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இவரது மகள் கார்த்திகா(17), மகன் பிரதீப்குமார்(16). இவர்கள் முறையே வேப்பனப்பள்ளி அரசுப் … Read more