ரேஷன் கடைகாரர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!!

ரேஷன் ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்ட விபரத்தை அனுப்புமாறு மண்டல இணை பதிவாளர்களுக்கு, கூட்டுறவுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் அனுப்பியுள்ள கடிதத்தில், சென்னை உயர்நீதிமன்ற ஆணையில் தகுதியுள்ள விற்பனையாளர் மற்றும் கட்டுநர்களுக்கு பதவி உயர்வு வழங்கி பின்னர் ஏற்படும் காலிப்பணியிடங்களுக்கு மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் மூலம் நிரப்பிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி தங்கள் மண்டலத்தில் பணிபுரியும் தகுதியுள்ள விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்ட விவரத்தினை அனுப்பிடுமாறு கேட்டுக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, நியாயவிலைக் … Read more

தேவாலயத்துக்கு வரும் பெண்களுக்கு பாலியல் தொல்லை- மத போதகர் அரெஸ்ட்

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே, தேவாலயத்துக்கு வரும் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மத போதகர் கைது செய்யப்பட்டார். சிவகாமிபுரத்தில் உள்ள தேவாலயத்தில் மத போதகராக பணியாற்றுபவர் ஸ்டான்லி குமார். இவர், வயிற்று வலிக்காக ஜெபம் செய்யக்கூறி தேவாலயத்திற்கு வந்த பெண்ணை தங்க வைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. பெண்ணின் உறவினர்கள் தட்டிக் கேட்ட போது, பெண்ணிடம் மன்னிப்பு கோரிய ஸ்டான்லி, புகாரளித்தால் தான் தற்கொலை செய்துக் கொள்வேன் என்றும் மிரட்டியதாக சொல்லப்படுகிறது. இதே போல, … Read more

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகளை ஆய்வு செய்து நடவடிக்கை: அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்

காஞ்சிபுரம்:“காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பட்டாசு ஆலைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, தவறு இருந்தால் நிச்சயமாக ஆலை உரிமையாளர்கள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்” என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறியுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் குருவிமலை அருகே உள்ள வளத்தோட்டத்தில் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் படுகாயமடைந்து காஞ்சிபுரம் மாவட்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருபவர்களை அமைச்சர் தா.மோ.அன்பரசன் புதன்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: “இந்த வெடி விபத்தில் … Read more

காதல் திருமணம் செய்த வாலிபர் படுகொலை: கோர்ட்டில் சரணடைந்த மாமனாரை கஸ்டடி எடுத்து விசாரிக்க முடிவு.! இன்று உடல் பிரேத பரிசோதனை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே காதல் திருமணம் செய்த வாலிபர் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக, கோர்ட்டில் சரணடைந்த மாமனாரை கஸ்டடி எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். கொலை செய்யப்பட்டவரின் உடல் இன்று பிரேத பரிசோதனை செய்யப்படுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு மருத்துவமனையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கிருஷ்ணகிரி அருகேயுள்ள கிட்டம்பட்டியை சேர்ந்தவர் சின்னபையன். இவரது மகன் ஜெகன் (28). டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. இவரும், கிருஷ்ணகிரி அவதானப்பட்டி பகுதியை சேர்ந்த சங்கர் என்பவரது மகள் சரண்யாவும் (21) காதலித்து … Read more

புதுச்சேரியில் தனியார் பள்ளிகள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை; அமைச்சர் எச்சரிக்கை

புதுச்சேரியில் தனியார் பள்ளிகள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை; அமைச்சர் எச்சரிக்கை Source link

அண்ணாமலையார் கோவிலில் கத்தியுடன் நுழைந்த ஆசாமி.! தெறித்து ஓடிய பக்தர்கள்.!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அண்ணாமலையார் கோவிலில் ராஜகோபுரம், திருமஞ்சன கோபுரம் மற்றும் அம்மணியம்மன் கோபுரம் உள்ளிட்ட மூன்று வாயில் வழியாக பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். இதனால், அந்த பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று பலத்த பாதுகாப்பையும் மீறி தெற்கு கோபுரமான திருமஞ்சன கோபுரம் வழியாக போதை ஆசாமி ஒருவர் கோவிலுக்குள் கத்தியுடன் நுழைந்து பின்னர் கத்தியை காட்டி பக்தர்களை மிரட்டியுள்ளார். இதைப்பார்த்து பயந்து போன பக்தர்கள் அங்கிருந்து அலறியடித்து அங்கும் இங்கும் ஓடி … Read more

இறுதி வரை போராடி 21 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி..!!

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் மும்பையில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்திலும், விசாகப்பட்டினத்தில் நடந்த 2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 10 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது. இந்த நிலையில் இவ்விரு அணிகளில் கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி … Read more

விருதுநகர் இ.குமாரலிங்கபுரத்தில் ரூ.2,000 கோடியில் அமைகிறது பி.எம்.மித்ரா ஜவுளி பூங்கா- ஒப்பந்தம் கையெழுத்து

இந்தியாவின் முதல் பி.எம்.மித்ரா ஜவுளி பூங்கா, விருதுநகர் இ.குமாரலிங்கபுரத்தில் தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. 1,052 ஏக்கரில், 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஜவுளி பூங்கா அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் முன்னிலையில் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. நிகழ்ச்சியில் பேசிய பியூஷ் கோயல், உலங்கெங்கும் வாழும் இந்தியர்கள், திருமணம் போன்ற நிகழ்வுகளுக்கு காஞ்சிபுரம் பட்டு ஆடைகளை வாங்குவது நம் பெருமை என கூறினார். பின்னர் பேசிய முதலமைச்சர், 2030-31ஆம் ஆண்டிற்குள் தமிழகம் ஒரு … Read more

தமிழக பாம்பு பிடி வீரர்களுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்த குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு

புதுடெல்லி: தமிழக பாம்பு பிடி வீரர்களான வடிவேல் கோபால்- மாசி சடையன் ஆகியோருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பத்மஸ்ரீவிருது வழங்கி கவுரவித்தார். குடியரசு தினத்தை முன்னிட்டு கடந்த ஜனவரி 25-ம் தேதி 2023-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் 106 பேருக்கு அறிவிக்கப்பட்டன. இந்தப் பட்டியலில் 6 பேருக்கு பத்ம விபூஷண், 9 பேருக்கு பத்ம பூஷண் மற்றும் 91 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல திரைப்பட பின்னணி … Read more

அந்தியூரில் துப்பாக்கியால் சுடப்பட்டு நாட்டு நாய் கொலை

ஈரோடு: அந்தியூர் அருகே ஏர் கன் எனும் துப்பாக்கியால் சுடப்பட்டு நாட்டு நாய் கொலை செய்யப்பட்டது. மைக்கேல் பாளையத்தில் தோட்டத்தில் இருந்த நாயை மோகன்ராஜ் என்பவர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். தோட்ட உரிமையாளர் மாணிக்கம் புகாரில் தலைமறைவான மோகன்ராஜ், அண்ணாதுரையை போலீசார் தேடிவருகின்றனர்.