“ஆவின் பால் உற்பத்தியாளர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தவேண்டும்”: ராமதாஸ், ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

“ஆவின் பால் உற்பத்தியாளர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தவேண்டும்”: ராமதாஸ், ஜி.கே.வாசன் வலியுறுத்தல் Source link

இன்று முதல் கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட கட்டணம்..!!

கீழடியில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் நடைபெற்ற 8 கட்ட அகழாய்வு பணிகளின் போது பழங்கால தமிழர்கள் பயன்படுத்திய தொல்பொருட்கள் ஏராளமாக கிடைத்தன. இவை அனைத்தும் 2600 ஆண்டுகள் பழமையானவை என ஆய்வுகளின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. அகழாய்வு பணிகளின்போது கிடைத்த தொல்பொருட்கள் ரூ.18.42 கோடியில் கட்டப்பட்டுள்ள அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த அருங்காட்சியகத்தை கடந்த 5-ந் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் திறந்து வைத்து பார்வையிட்டார். இந்த அருங்காட்சியகம் தினமும் காலை 9 மணி முதல் இரவு 7 … Read more

“தனியார் கொள்ளைக்கு மத்திய அரசு பச்சைக்கொடி” – சுங்கச் சாவடி கட்டண உயர்வுக்கு முத்தரசன் கண்டனம்

சென்னை: “தனியார் நிறுவனங்கள் ஆண்டுக்கு இருமுறை கட்டணங்களை உயர்த்தி சட்டபூர்வமாக கொள்ளையடிக்க பாஜக ஒன்றிய அரசின் தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம் பச்சைக் கொடி காட்டியுள்ளது” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ரத்த நாளங்களாக விளங்குவது சாலை போக்குவரத்தாகும். வாகனங்கள் பெருகி வரும் எண்ணிக்கைக்கு தக்கபடி சாலைகள் அமைப்பது, விரிவு படுத்துவது, மேம்பாலங்கள் போன்ற கட்டமைப்புகள் மேம்படுத்துவது என அத்தியாவசியப் … Read more

என்எல்சி விவகாரம் : கடலூர் ஆட்சியர் செயலுக்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

விவசாயிகள் குறை தீர்வு கூட்டத்தில் என்.எல்.சி. விவகாரம் குறித்து பேச கடலூர் மாவட்ட ஆட்சியர் தடை விதித்தது கண்டிக்கத்தக்கது என்று பாமக தலைவர் கூறியுள்ளார். இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற உழவர் குறைதீர்க்கும் கூட்டத்தில் பெ. ரவீந்திரன் தலைமையில் என்.எல்.சி நிலப்பறிப்பு குறித்து உழவர்கள் சிக்கல் எழுப்ப முயன்றபோது, அதற்கு கடலூர் மாவட்ட ஆட்சியர் தடை விதித்திருக்கிறார். இது கண்டிக்கத்தக்கது. உழவர் … Read more

உதகையில் குதிரை பந்தயத்துடன் தொடங்கியது கோடை விழா: இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்த குதிரைகள்

உதகை: உதகையில் பிரசித்திபெற்ற குதிரை பந்தயத்துடன் கோடை சீசன் தொடங்கி இருக்கிறது. போட்டியில் பங்கேற்ற குதிரைகள் இலக்கைநோக்கி சீறிப்பாய்ந்து ஓடுவதை ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டுகளிக்கின்றனர். மலைகளின் அரசியான உதகையில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மே மாதங்களில் கோடை சீசன் மாதங்களாகும். அப்போது சுமார் 10 லட்சம் சுற்றுலா பயணிகள் வருவதால் கோடை விழா நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம். குறிப்பாக கோடை சீசனின் தொடக்கமாக பிரசித்தி பெற்ற குதிரை பந்தயம் நடத்தப்படும் அந்த வகையில் 136 … Read more

#திருவள்ளூர் | 9ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை.! அதிர்ச்சியில் பெற்றோர்..!

திருவள்ளூர் மாவட்டத்தில் 9ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருவெற்றியூர் பகுதியை சேர்ந்தவர் பரிமளராஜ். இவருடைய மகன் ரிஷி(15) எண்ணூர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் ரிஷிக்கு சரியாக படிப்பு வராததால் பெற்றோர், ரிஷியை ஒழுங்காக படிக்கும்படி கூறியுள்ளனர். மேலும் உறவினர்களும் ரிஷியிடம் படிக்குமாறு கூறியுள்ளனர். இதனால் மன வேதனையடைந்த ரிஷி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து, … Read more

கை, கால் கட்டி சாக்கு பையில் சடலமாக கிடந்த கல்லூரி மாணவி..!!

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள நாயக்கன்காடு கண்ணகி வீதியில் வசித்து வருபவர் குமார். இவரது மகள் ஸ்வேதா (21). இவர் கோபியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. கணினி அறிவியல் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் கடந்த 28-ம் தேதி கல்லூரி செல்வதாக வீட்டில் கூறிவிட்டு் சென்றவர் அதன்பின்னர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து ஸ்வேதாவின் தாய் மஞ்சுளாதேவி தனது மகளை காணவில்லை என்று கோபி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் … Read more

கிழக்கு – மேற்கு தாம்பரம் பகுதிகளை இணைக்க  நடை மேம்பாலம் அமைக்க திட்டம்

சென்னை: கிழக்கு – மேற்கு தாம்பரத்தை இணைக்கும் வகையில் நடை மேம்பாலம் அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருவதாக நெடுஞ்சாலைத் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இன்று (ஏப்.1) நெடுஞ்சாலைத் துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை தொடர்பான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது. அப்போது தாக்கல் செய்யப்பட்ட கொள்கை விளக்கக் குறிப்பில், கிழக்கு – மேற்கு தாம்பரத்தை இணைக்கும் வகையில் … Read more

வீடுகளுக்கு குறைந்த விலையில் அதிவேக இணைய சேவை: தமிழக அரசு அறிவிப்பு!

தமிழ்நாடு சட்ட மன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இன்று (ஏப்ரல் 1) தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை தொடர்பான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது. இதில் பதில் அளித்த பேசிய அமைச்சர் மனோ தங்கராஜ் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். முக்கியமாக அதிவேக இணைய இணைப்பு தொடர்பான அறிவிப்பு கவனம் பெற்றுள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களுக்கு அதிவேக இணைய இணைப்பை வழங்குதல் தொடர்பான … Read more