மாணவிகளிடம் சிலுமிசத்தில் ஈடுபட்ட அரசு பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது..!

திருவண்ணாமலை மாவட்டத்தில், மாணவிகளிடம் முறைதவறி நடந்துக்கொண்டதாக அரசுப்பள்ளி ஆங்கில ஆசிரியரை, போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். செய்யாறு வட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்த முருகன், மாணவிகளின் தலையில் ஜாமண்டரிபாக்சினால் தட்டுவது, பக்கத்தில் சென்று நிற்பது, உரசுவது போன்ற சில்மிஷத்தில் ஈடுபடுவது குறித்து தலைமை ஆசிரியரிடம் மாணவிகள் புகார் தெரிவித்துள்ளனர். அவர் செய்யாறு போலீசில் அளித்த தகவலின் பேரில் போலீசார், மாணவிகளிடம் விசாரணை நடத்தி, வாக்குமூலங்களை பதிவு செய்த பின்னர், ஆசிரியரை … Read more

தமிழகத்தின் அனைத்து கிராம பஞ்சாயத்துகளும் ஓராண்டுக்குள் பாரத்நெட் மூலம் இணைக்கப்படும்: அரசு தகவல்

சென்னை: தமிழகத்தில் பாரத்நெட் திட்டத்தில் இதுவரை 2,007 கிராமப் பஞ்சாயத்துகள் கண்ணாடி இழை வடம் மூலம் அருகில் உள்ள வட்டார ஊராட்சி ஒன்றிய அலுவலக தலைமையிடத்துடன் இணைக்கப்பட்டு, அதன் செயல்பாடுகள் சென்னையிலுள்ள வலையமைப்பு இயக்க மையத்தில் தெரியும்படி செய்யப்பட்டுள்ளது என்று தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் தொடர்பாக, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் கூறியிருப்பதாவது: பாரத்நெட் திட்டத்தினை, தமிழ்நாடு கண்ணாடி … Read more

வாடகைத் தாய் மூலம் குழந்தை தகுதிச்சான்றிதழ் வழங்க வாரியம்: மாவட்டந்தோறும் அமைக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: வாடகைத்தாய் மூலம் குழந்தை பெறுவோருக்கு தகுதிச்சான்றிதழ் வழங்க மாவட்டந்தோறும் வாரியம் அமைக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. குழந்தையில்லா தம்பதியர், வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள தங்களுக்கு தகுதி உண்டு என மாவட்ட மருத்துவ வாரியத்தின் சார்பில் சான்றிதழ் வழங்கக்கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தனர். இந்த மனுவை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்தார். இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: மலட்டுத்தன்மை மறு உருவாக்க உதவிக்கான ஒழுங்குமுறை சட்டம் மற்றும் வாடகைத் தாய் ஒழுங்கு முறை … Read more

பல்கலைக்கழக விடுதி மாடியில் இருந்து விழுந்த மாணவி தற்கொலை..!

தேனி மாவட்டம் குப்பிநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மகள் மகேசுவரி (25). இவர் நாகமலைபுதுக்கோட்டை அருகே உள்ள மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் எம்.எட். 2-ம் ஆண்டு படித்து வந்தார். மகேசுவரி அங்குள்ள விடுதியில் தங்கி இருந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு விடுதியின் மேல்தளத்தில் மகேசுவரி செல்போனில் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இரவு 11.30 மணியளவில் திடீரென மரக்கிளைகள் ஒடிந்து விழுவது போன்ற சத்தம் கேட்டது. அலறி துடிப்பது போன்ற சத்தமும் கேட்டதால், அங்கிருந்த … Read more

ஹிஜாவு நிறுவன மோசடி பணத்தில் சொத்துகளை வாங்கி குவித்த தம்பதி..!

ஹிஜாவு நிறுவன மோசடி வழக்கில் கைதான அதன் இயக்குனர்கள் ரவிச்சந்திரன், கலைச்செல்வி தம்பதி, மோசடி பணத்தில் சொகுசுக் கார்கள், ஏழு கோடி மதிப்பிலான நிலம் ஆகியவற்றை வாங்கி குவித்திருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். சுமார் 4400 கோடி ரூபாய் வரை மோசடி செய்த ஹிஜாவு நிறுவனம் தொடர்பான வழக்கில் இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், நேற்று அதன் இயக்குநர்களான ரவிசந்திரன் – கலைச்செல்வி தம்பதி கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஹிஜாவு மோசடி பாணியில் … Read more

சென்னையில் 2-வது தகவல் தொழில்நுட்ப விரைவுச் சாலை அமைக்க ஆய்வு

சென்னை: சென்னையில் 2-வது தகவல் தொழில்நுட்ப விரைவுச் சாலை அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்படும் என்று நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு அறிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இன்று (ஏப்.1) பொதுப்பணி, நெடுஞ்சாலைத் துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை தொடர்பான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது. இதற்கு பதில் அளித்து பேசிய பிறகு அமைச்சர் எ.வ.வேலு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். இதில் சென்னைக்கு வெளியிட்டுள்ள புதிய … Read more

கீழடி அருங்காட்சியகத்தை நடிகர் சூர்யா, ஜோதிகா குடும்பத்துடன் பார்த்தனர்

திருப்புவனம்: கீழடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகத்தை நடிகர் சிவக்குமார், அவரது மனைவி லட்சுமி சிவக்குமார், நடிகர் சூர்யா, அவரது மனைவி ஜோதிகா ஆகியோர் நேற்று பார்வையிட்டனர். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் தொல்லியல் துறை சார்பில் நடந்த அகழாய்வில் சேகரிக்கப்பட்ட தொல்லியல் பொருட்களின் அருங்காட்சியகம் ரூ.18 கோடியே 41 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதனை கடந்த மார்ச் 5ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின்  திறந்து வைத்தார். நேற்று முன்தினம் வரை பொதுமக்கள், பள்ளி, … Read more

இந்தியா – இலங்கை இடையே பயணிகள் கப்பல் சேவை; பொதுப்பணி, நெடுஞ்சாலைத் துறையின் அறிவிப்புகள்

இந்தியா – இலங்கை இடையே பயணிகள் கப்பல் சேவை; பொதுப்பணி, நெடுஞ்சாலைத் துறையின் அறிவிப்புகள் Source link

சென்னையில் டிராஃபிக் தொல்லை இனி இல்லை… – சிக்னல்களை இயக்க வருகிறது ‘ஏஐ’ டிரான்ஸ்போர்ட் சிஸ்டம்

சென்னை: சென்னையில் ஒருங்கிணைந்த போக்குவரத்து மேலாண்மை திட்டம், செயற்கை நுண்ணறிவு என்ற ‘ஏஐ’ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி செயல்படுத்தப்பட உள்ளது. சென்னை மாநகராட்சி, மாநகர போக்குவரத்து கழகம், சென்னை காவல் துறை இணைந்து, ‘ஒருங்கிணைந்த போக்குவரத்து மேலாண்மை திட்டத்தை’ ரூ.645 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்த உள்ளது. இதற்காக, ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை 465 கோடி ரூபாயும்,மீதமுள்ள தொகையை தமிழக அரசும் வழங்குகிறது. இது, ‘ஏஐ’ தொழில்நுட்பம் கொண்ட போக்குவரத்து மேலாண்மை திட்டமாக உருவாக்கப்பட உள்ளது. சென்னை … Read more

ஒரே நாளில் 400க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களுக்கு அனுமதி பணியில் இருந்து தாம்பரம் ஆர்டிஓ விடுவிப்பு: ஆய்வாளர் அதிரடி சஸ்பெண்ட்

தாம்பரம்: தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், புரோக்கர்கள் மூலம் வருபவர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பதாகவும், அனைத்து பணிகளுக்கும் முக்கியமான பேப்பர் இருந்தால் மட்டுமே பணிகள் நடப்பதாகவும் புகார் வந்ததின் பேரில் கடந்த அக்டோபர் மாதம் சென்னை ஊழல் தடுப்பு கண்காணிப்பு துறை டிஎஸ்பி தமிழ்மணி தலைமையில் லஞ்ச ஒழிப்பு துறையினர் தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சோதனை நடத்தினர். அங்கிருந்த புரோக்கர்களிடம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை செய்ததில் வட்டார போக்குவரத்து அலுவலர் செந்தில்வேலன், முதல்நிலை ஆய்வாளர் சிவகுமார் … Read more