மீண்டும் ஊரடங்கு என்பது வெறும் வதந்தி – சுகாதாரத் துறை அமைச்சர் விளக்கம்

சென்னை: தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்ற உத்தரவு நேற்று முதல் அமலுக்கு வந்தது. அதே நேரத்தில், கரோனா தொற்று அதிகரித்து வருவதால் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என்ற தகவல் வெறும் வதந்திதான் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 2020 மார்ச் மாதம் தொடங்கிய கரோனா வைரஸ் தொற்றால், இதுவரை 35.96 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 38,050 பேர் இறந்துள்ளனர். கரோனா தொற்றுடன் இணை நோய்கள் மற்றும் பிந்தைய பாதிப்புகளால் … Read more

கடன் தருவதாக பெண்களிடம் ஆதார், பான் கார்டு விவரம் சேகரிப்பு: பைனான்ஸ் ஊழியர்களுக்கு போலீஸ் எச்சரிக்கை

வாணியம்பாடி: திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த பெருமாள்பேட்டை பகுதியில் சிலர் மகளிர் குழுவினருக்கு  ரூ.1 லட்சம் வட்டியில்லா கடன் உதவி அளிப்பதாக கூறி, அப்பகுதியில் உள்ள பெண்களின் ஆதார் கார்டு, பான் கார்டு உள்ளிட்ட விவரங்களை சேகரித்து வருவதாக வாணியம்பாடி நகர போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அங்கு சென்ற வாணியம்பாடி நகர போலீசாரும் வருவாய்த்துறையினரும், விவரங்களை சேகரித்து கொண்டிருந்த 2 பெண்களை பிடித்து விசாரித்தனர். இதில், அவர்கள் சேலம் பகுதியை சேர்ந்த தனியார் நிதி நிறுவன … Read more

மார்ச் மாதம் 69.99 பயணிகளை சுமந்த சென்னை மெட்ரோ: செய்திக்குறிப்பு வெளியீடு

மார்ச் மாதம் 69.99 பயணிகளை சுமந்த சென்னை மெட்ரோ: செய்திக்குறிப்பு வெளியீடு Source link

நெல்லையில் பற்கள் பிடுங்கிய விவகாரம் : ஏஸ்பியைத் திரும்ப கேட்டு மற்றொரு தரப்பினர் ஆதரவு.!

திருநெல்வேலி மாவட்டத்தில் அம்பை பகுதியில் உள்ள காவல் நிலையங்களில் போலீசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்படுபவர்களின் பற்களை பிடுங்கி கொடுமை படுத்தியதாக பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் உயர் அதிகாரிகளுக்கு புகார் அளிக்கப்பட்டது.  அந்த புகார் குறித்து விசாரணை நடத்த நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவிட்டதன் படி, உதவி ஆட்சியர் முகமதுசபீர் ஆலம் விசாரணை செய்து வந்தார். இதற்கிடையே பற்களை பிடுங்கிய விவகாரத்தில் அம்பை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பல்பீர் சிங் பணியிடை நீக்கம் செய்யப்படுவார் என்று முதல் அமைச்சர் … Read more

அடச்சீ..!! 65 வயது மூதாட்டியை கற்பழித்து கொன்ற 19 வயது இளைஞர்.. !!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே செந்துறை அடுத்துள்ள ரெங்கய சேர்வைகாரன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மனைவி பெரியம்மாள் (65). கணவர் இறந்து விட்டார். இவரது மகனுக்கு திருமணமாகி வெளியூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். பெரியம்மாள் அதேபகுதியில் உள்ள கருவேலங்காட்டில் கடந்த மாதம் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார்.  இதுகுறித்து நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி, சப்-இன்ஸ்பெக்டர்கள் விஜயபாண்டியன், இசக்கிராஜா, ஜெய்கணேஷ் ஆகியோர் தலைமையிலான போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பெரியம்மாள் வீட்டிற்கு அருகில் … Read more

3 அடுக்குகளுடன் 3,700 பேர் அமரும் வசதி; 16 ஏக்கரில் மதுரையில் பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு அரங்கம்: பொதுப்பணித்துறை தகவல்

சென்னை: மதுரை அலங்காநல்லூர் பகுதியில் உள்ள கீழக்கரையில் 3 அடுக்குகளுடன் 16 ஏக்கரில் பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்கப்படும் என்று பொதுப்பணித்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு உலகப் புகழ்பெற்றது. உள்ளூர் பார்வையாளர்கள் முதல் உலகப் பார்வையாளர்கள் வரை இந்தப் போட்டியைக் காண திரள்வார்கள். ஆனால், ஜல்லிக்கட்டு போட்டி நடக்கும் இடமும், அதன் வாடிவாசலும் இடநெருக்கடியில் இருப்பதால் பார்வையாளர்கள் அனைவருமே இந்தப் போட்டியை கண்டு ரசிக்க முடியவில்லை. அதனால், … Read more

செய்யாறு அருகே அரசு பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை ஆசிரியர் போக்சோவில் கைது

செய்யாறு: செய்யாறு அருகே அரசு பள்ளியில் 9ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆங்கில ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த கூழமந்தலில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இங்கு காஞ்சிபுரம் டவுன் ராஜகோபால் தெருவை சேர்ந்த முருகன்(43) என்பவர்  ஆங்கில ஆசிரியராக உள்ளார். இவர் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு  கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என மிரட்டி வந்தாராம். இதேபோல் நேற்று … Read more

கோவையில் டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு ரூ10 உயர்வு; அமலுக்கு வந்தது புதிய சட்டம்

கோவையில் டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு ரூ10 உயர்வு; அமலுக்கு வந்தது புதிய சட்டம் Source link

குடும்பங்களுக்கு குறைந்த விலையில் அதிவேக இணைய சேவை: தமிழக தகவல் தொழில்நுட்ப துறையின் புதிய அறிவிப்புகள்

சென்னை: குடும்பங்களுக்கு ரூ.100 கோடியில் குறைந்த விலையில் அதிவேக இணைய சேவைகள் வழங்கப்படும் என்று தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இன்று (ஏப்.1) தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை தொடர்பான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது. இதில் பதில் அளித்து பேசிய பிறகு, புதிய அறிவிப்புகளை மனோ தங்கராஜ் வெளியிட்டார். இதன் விவரம்: ரூ.20 கோடியில் சோழிங்கநல்லூர் … Read more

வேலூர் அருகே மாடு விடும் விழா களத்தில் தடுமாறி ஓடிய காளை ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு

கே.வி.குப்பம்: வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த  வடுகன்தாங்கல் ஊராட்சி  இ.பி. காலனி பகுதியில் நேற்று  மாடுவிடும் விழா நடைபெற்றது. 235 காளகைள் பங்கேற்றன. காளைகள் வாடி வாசலில் இருந்து ஒன்றன்பின் ஒன்றாக கட்டவிழ்த்து விடப்பட்டன.   ஓடு பாதையில் ஓடிய காளைகளை இளைஞர்கள் சிலர் துன்புறுத்தியதால் 2 காளைகள் திக்குமுக்காடி தடுப்புகள் மீது மோதியதில்  லேசான காயம் ஏற்பட்டது. ஓடு பாதையின் அருகில்  ஏரி உள்ளது. ஏரியில் தண்ணீர் இருந்தும் முறையான தடுப்புகள் அமைக்காததால் சில காளைகள் தண்ணீரில் … Read more