கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட கல்லூரி மாணவியின் உடல்… காவல் நிலையத்தை முற்றுகையிட்ட உறவினர்கள்

கோபிச்செட்டிப்பாளையம் அருகே கல்லூரி மாணவியின் தற்கொலை வழக்கை கொலை வழக்காக மாற்றக் கோரி அவரது உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். சுவேதா என்ற அந்த மாணவியின் உடல், சாக்குப் பையில் மூட்டையாகக் கட்டப்பட்ட நிலையில் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டது. அவரை தற்கொலைக்குத் தூண்டி, சடலத்தை மறைத்ததாக காதலன் லோகேஷ் கைது செய்யப்பட்டார். சடலத்தை லோகேஷ் மட்டுமே மூட்டையாகக் கட்டிக் கொண்டுவந்து கிணற்றில் வீசியிருக்க வாய்ப்பில்லை என்றும் அவனுடன் மேலும் சிலர் சம்மந்தப்பட்டிருக்கலாம் என்று குற்றஞ்சாட்டிய மாணவியின் உறவினர்கள் முதலில் … Read more

திருவள்ளூரில் செல்போன் கோபுரம் அமைக்க தடை கோரிய வழக்கு தள்ளுபடி

சென்னை: திருவள்ளூரில் செல்போன் கோபுரம் அமைக்க தடை கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், திருவள்ளூரைச் சேர்ந்த உதயகுமார் தாக்கல் செய்த பொதுநல மனுவில், திருவள்ளூர் மாவட்டம் மோரையை அடுத்த பூரணி நகர் பகுதியில் ரிலையன்ஸ் நிறுவனம் செல்போன் கோபுரம் அமைக்க திட்டமிட்டு வருகிறது. செல்போன் கோபுரம் அமைக்க திட்டமிட்டுள்ள பகுதியை சுற்றி ஏராளமான குழந்தைகள் மற்றும் முதியவர்கள் வசித்து வருவதால் செல்போன் கதிர்வீச்சினால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட … Read more

மத்திய அரசால் தமிழ்நாட்டில் தடுப்பூசி இல்லை… சொன்னது அமைச்சர் மா. சுப்பிரமணியன்

Covid Vaccines In Tamil Nadu: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். கொரானோ நோய் பரவுதல் அதிகரித்து வரும் நிலையில், இன்று முதல் அரசு மருத்துவமனைகளில் முக கவசம் கட்டாயமாக்கபட்டுள்ளது.  எனவே, அந்த உத்தரவு முறையாக பின்பற்றப்படுகிறதா என ஆய்வு செய்த அமைச்சர் மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவு, பிரசவ வார்டு, பொதுப்பிரிவு போன்ற பகுதிகளிலும் ஆய்வு நடத்தி முகக்கவசம் அணியாதவர்களுக்கு முகக்கவசம் வழங்கினார். தனியார் … Read more

கோவையில் முதல் பேருந்து ஓட்டுநர் ஆனார் இளம்பெண்: பணியை தொடங்கிய சர்மிளாவிற்கு குவியும் பாராட்டு

கோவை: கோவை மாவட்டத்தில் முதல் பேருந்து ஓட்டுனரான இளம்பெண் சர்மிளாவிற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. கோவை மாவட்டம் வடவள்ளியை சேர்ந்தவர் சர்மிளா இவருக்கு சிறு வயது முதலே வாகனங்களை இயக்குவதில் அதீத ஆர்வம் இருந்துள்ளது. அதன் காரணமாக கடந்த 2019ம் ஆண்டு லோட் ஆட்டோ ஓட்ட கற்று கொண்ட சர்மிளா அதற்கான உரிமத்தை பெற்றார். அதை தொடர்ந்து கனரக வாகனங்களை இயக்கவும் கற்றுக்கொண்ட சர்மிளா மக்களுக்காக பேருந்து ஓட்ட வேண்டும் என்ற லட்சியம் … Read more

பாகுபலித் தோற்றத்தில் காட்சி அளிக்கும் எடப்பாடி பழனிசாமி.! வலைத்தளங்களில் வைரலாகும் புகைப்படம்.!!

பல போராட்டங்களுக்கு பிறகு அதிமுகவின் எட்டாவது பொது செயலாளராக போட்டியில்லாமல் எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியை பெரிதும் வரவேற்ற அதிமுகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும், மேளதாளத்துடன் நடனமாடியும் கொண்டாடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள விளாங்குறிச்சி பகுதியில் அதிமுகவினர் “பாகுபலி” கெட்டப்பில் எடப்பாடி பழனிச்சாமிக்கு பேனர் வைத்து தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து வருகின்றனர். அந்த பேனரில் பாகுபலி திரைப்படத்தில் நடித்துள்ள பிரபாஸ் வேடத்தில் எடப்பாடி நிற்பது போன்றுள்ளது.  மேலும், … Read more

காரைக்கால் கைலாசநாதர் கோயிலின் சாமி ஊர்வலத்தை 10 நாட்களும் நடத்த ஐகோர்ட் உத்தரவு

சென்னை: காரைக்கால் கைலாசநாதர் கோயிலின் சாமி ஊர்வலத்தை திருவிழாவின் அனைத்து நாட்களிலும் நடத்த உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், தடுப்பவர்கள் மீது எவ்வித இரக்கமும் காட்டாமல் நடவடிக்கை எடுக்க புதுச்சேரி அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் காரைக்காலில் உள்ள ஸ்ரீ கைலாசநாதர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பங்குனி உத்திர திருவிழாவில், பத்து நாட்களும் ஸ்ரீ சோமாஸ்கந்தர், ஸ்ரீ உமையாம்பிகை, ஸ்ரீ கந்தர் சிலைகளை ஒரே வாகனத்தில் வைத்து கோயிலைச் சுற்றி, உலா வருவது வழக்கம். இது தொடர்பாக … Read more

பல் பிடுங்கி சஸ்பெண்ட் ஆன ஏஎஸ்பி பல்வீர்சிங்கிற்கு ஆதரவாக `பேனர்’ வைத்த கிராம மக்கள்

நெல்லை: நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி ஆக இருந்தவர் பல்வீர்சிங். இவர் மீது குற்ற வழக்குகளில் விசாரணைக்கு ஆஜராக வந்தவர்களின் பற்களை பிடுங்கியதாக குற்றச்சாட்டு எழுந்ததால் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்நிலையில் ஏஎஸ்பி பல்வீர்சிங் அம்பாசமுத்திரம் சரகத்தில் இருந்தபோது அவர் செய்த சாதனைகள், அப்பகுதியில் குற்றச் சம்பவங்கள் குறைந்திருப்பது குறித்த தகவல்கள் வாட்ஸ்அப்பில் வைரலானது. மேலும் சட்டம், ஒழுங்கை பராமரிப்பதற்காக சிசிடிவி கேமராக்கள் அமைக்க முயற்சி எடுத்தது ஆகியவையும் சமூக வலைதளங்களில் வைரலானது. பொட்டல் கிராமம், சுப்பிரமணியபுரம் பகுதியை … Read more