கட்டண உயர்வை திரும்ப பெற கோரிக்கை..!!

தமிழகத்தில் மட்டும் 49 சுங்க சாவடிகள் உள்ளன. இந்த சுங்கச்சாவடிகளில் ஆண்டுக்கு ஒரு முறை 5 சதவீதத்தில் இருந்து 10 சதவீதம் வரை உயர்த்தி வசூலிக்கப்படுகிறது. மத்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய ஒப்பந்தபடி 1992-ம் ஆண்டு போடப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் மாதமும், 2008-ம் ஆண்டு போடப்பட்ட சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் மாதமும் கட்டணம் உயர்த்தப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முதல் சுங்க சாவடிகளில் 5 முதல் 10 விழுக்காடு வரை கட்டணத்தை … Read more

பாஜகவின் சாதனைகள் மக்களிடம் சென்றடைய வேண்டும் – நிர்வாகிகளுக்கு அண்ணாமலை அறிவுறுத்தல்

சென்னை: பாஜக தொடக்க நாளான ஏப்ரல் 6 முதல் 14 வரை சமூக நீதி வாரமாக கடைபிடித்து, பாஜகவின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என நிர்வாகிகளுக்கு அண்ணாமலை அறிவுறுத்தி உள்ளார். ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 6-ம் தேதி பாஜக தொடங்கப்பட்ட நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், பாஜகவின் தொடக்க நாளான வரும் ஏப்ரல் 6-ம் தேதி முதல் ஒரு வாரம் சமூக நீதி நாளாக கடை பிடித்து பாஜகவின் சாதனைகளை மக்களிடம் கொண்டு … Read more

ஓ.பன்னீர்செல்வம் அடுத்த மூவ்; நாலா பக்கமும் சிக்கல்… அதிமுகவை நெருங்க முடியுமா?

அதிமுகவின் பொதுச் செயலாளராக உச்சபட்ச அதிகாரம் கொண்ட நாற்காலியில் அமர்ந்துவிட்டார். இவரை எதிர்த்து தொடர்ந்த வழக்குகளில் எந்த ஒரு சாதகமான தீர்ப்பும் கிடைக்கவில்லை. ஆனாலும் அவர் சட்டப் போராட்டத்தை விடுவதாக இல்லை. இப்படியே போனால்… இதுக்கே ஒரு எண்டே இல்லையா சார்? என்ற கேள்வி தான் எழுகிறது. அரசியல் எதிர்காலம் பொதுவாக அரசியல் கட்சிகளின் எதிர்காலத்தை தீர்மானிப்பது நீதிமன்றங்கள் இல்லை எனச் சொல்லப்படுவது உண்டு. ஒரு இடைக்கால நிவாரணமாக சில உத்தரவுகள் வேண்டுமானால் கிடைக்கலாம். ஆனால் கட்சிக்கான … Read more

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சதுரகிரி மலைக் கோயில் செல்ல பக்தர்களுக்கு 4 நாட்களுக்கு அனுமதி!

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சதுரகிரி மலைக் கோயில் செல்ல பக்தர்களுக்கு 4 நாட்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பங்குனி மாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமியையொட்டி நாளை முதல் 6ம் தேதி வரை மலையேற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதி உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை, செங்கல்பட்டு, சேலம், கோவை… தமிழகத்தில் கொரோனா படிப்படியாக அதிகரிப்பு

சென்னை, செங்கல்பட்டு, சேலம், கோவை… தமிழகத்தில் கொரோனா படிப்படியாக அதிகரிப்பு Source link

கலாஷேத்ரா கல்லூரி பாலியல் புகார் விவகாரம்…உதவி பேராசிரியர் தலைமறைவு.!

சென்னை திருவான்மியூரில் இயங்கிவரும் கலாஷேத்ரா அறக்கட்டளையின் கலை கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு பேராசிரியர் ஒருவர் தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வருவதாக மாணவிகள் புகார் கொடுத்துள்ளனர். இதுகுறித்து புகார் அளித்து கல்லூரி நிர்வாகம் கண்டுகொள்ளாமல் அலட்சியமாக செயல்பட்டதால், சமூக வலைத்தளங்களில் மாணவிகள் தங்களின் குற்றச்சாட்டுகளை பதிவிட்டனர். இதையடுத்து தேசிய மகளிர் ஆணையம் தலையிட்டு, காவல்துறை இதை உரிய முறையில் சரியாக விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டது இது தொடர்பாக கல்வி நிறுவனம் எல்லைக்குட்பட்ட … Read more

வீட்டு கடன்களுக்கான வட்டி விகிதம் உயர்கிறது..!!

புதிய நிதி ஆண்டான ஏப்ரல் 1-ம் தேதியையொட்டி நேற்று முதல் பல்வேறு புதிய திட்டங்கள் அமலுக்கு வந்துள்ளன. தபால் நிலையத்தில் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் (எஸ்.சி.எஸ்.எஸ்.) முதியவர்கள் ரூ.30 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இதற்கு முன்பு அதிகபட்ச வரம்பு ரூ.15 லட்சமாக இருந்தது. அது நேற்று முதல் ரூ.30 லட்சமாக உயர்த்தப்படுகிறது. இந்த சேமிப்பு திட்டத்தில் 8 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. தபால் அலுவலகத்தில் நேற்று முதல் ரூ.1000 செலுத்தினால் ரூ.67,750 பெறக்கூடிய திட்டம் … Read more

ரூ 40 கோடி சுருட்டிய காவலர் குடும்பம்.. தவிக்கும் காவலர்கள்..! போலீசிடமே சுருட்டலா..?

காஞ்சிபுரத்தில் ஆருத்ரா கோல்டு நிறுவனத்தைப் போல அதிக வட்டி தருவதாக கூறி நிதிதிரட்டி 40 கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டதாக, இரு காவலர்கள் உள்பட அவரது குடும்பத்தினர் 8 பேரை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர். காஞ்சிபுரம், ஏனாத்தூர் புதுநகர் பகுதியைச் சேர்ந்தவர் சகாயபாரத். இவர் மாமல்லபுரம் துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவலராக பணி செய்து வருகிறார். இவர் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து ஆருத்ரா பாணியில் சொந்தமாக அதிக வட்டி தரும் நிதி நிறுவனம் … Read more

உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் மூலமாக குறைந்த விலையில் இணைய சேவை – அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்

சென்னை: உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் மூலம் குடும்பங்களுக்கு குறைந்தவிலையில் அதிவேக இணைய சேவைகளை ரூ.100 கோடி செலவில் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என்று அமைச்சர் த.மனோ தங்கராஜ் தெரிவித்தார். சட்டப்பேரவையில் நேற்று, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறைமானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இதில் உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்து, துறையின் அமைச்சர் த.மனோ தங்கராஜ் பேசியதாவது: சென்னை, ஓசூர், கோவையில் உலகத் தரத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய ஹைடெக் சிட்டி வரவுள்ளது. பார்த் நெட் திட்டம் … Read more

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த மண்டபம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்

ராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த மண்டபம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியுள்ளனர். ரோந்து படகை வைத்து இலங்கை கடற்படை மோதியதில் மீனவர்களின் விசைப்படகு சேதம் அடைந்துள்ளது.