பஞ்சமி நிலத்தில் முரசொலி அலுவலகம் : வழக்கில் திடீர் திருப்பம்! அதிர்ச்சி கொடுத்த உயர்நீதிமன்ற நீதிபதி! 

பஞ்சமி நிலத்தில் முரசொலி அலுவலக இடம் தொடர்பான வழக்கில் இருந்து, உயர்நீதிமன்ற நீதிபதி எம் தண்டபாணி விலகியுள்ளார். வழக்கை வேறு நீதிபதி முன்பு பட்டியலிடவும், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்து உள்ளார் நீதிபதி எம் தண்டபாணி. முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் இருப்பதாக வந்த நோட்டீசை எதிர்த்து, முரசொலி அறக்கட்டளை வழக்கு தொடர்ந்திருந்தது நிலையில், நீதிபதி விளக்கியுள்ளார். வழக்கு விவரம் : சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள திமுகவின் அதிகாரபூர்வ நாளேடான முரசொலியின் அலுவலகம் அமைந்துள்ளது. … Read more

காதலியின் கை, கால்களை கட்டி கிணற்றில் வீசிய காதலன்!!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே காதலிக்கும் போது கர்ப்பமான கல்லூரி மாணவி மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொங்கர்பாளையம் பகுதியில் கிணறு ஒன்றில் சாக்கு மூட்டையில் கட்டப்பட்ட நிலையில் சடலம் கிடப்பதாக பங்களாப்புதூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். அதில், கிணற்றில் சாக்கு மூட்டையில் கால் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட பெண் நாய்க்கன்காடு பகுதியை சேர்ந்த ஸ்வேதா(21) என்பது தெரியவந்தது. கடந்த 28ஆம் … Read more

வீட்டில் பிறந்த 13 குழந்தைகள்… அரசு மருத்துவ குழுவுக்கு பயந்து காட்டில் பதுங்கிய பெண்.. கணவரை கூட்டிச்சென்று கஜக்…!

13 குழந்தைகளை வீட்டு பிரசவத்தில்  பெற்றெடுத்த பெண் குடும்ப கட்டுப்பாடு செய்ய மறுத்த நிலையில் அவரது கணவரை அழைத்துச்சென்று சுகாதாரத் துறையினர் குடும்பக் கட்டுப்பாடு செய்துவிட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது. ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ளது பர்கூர் மலைப்பகுதி, இங்குள்ள ஒன்னகரை கிராமத்தை சேர்ந்த சின்னமாதன் மனைவி சாந்தி தான் வீட்டுபிரசவத்தில் 13 குழந்தைகளை பெற்ற மகராசி..! சோழகர் பழங்குடியின இனத்தைச் சேர்ந்த இந்த தம்பதியினர் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ளனர், இவர்கள் … Read more

திருநெல்வேலி எஸ்.பி சரவணன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்: அரசு உத்தரவு

சென்னை: திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி சரவணனை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏஎஸ்பி பல்வீர் சிங், விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திர ரெட்டி வெளியிட்டுள்ள உத்தரவில், தூத்துக்குடி மாவட்ட எஸ்பியான பாலாஜி சரவணனுக்கு, திருநெல்வேலி மாவட்ட எஸ்பியாக கூடுதல் பொறுப்பு வழங்கப்படுகிறது. அதேசமயம், திருநெல்வேலி மாவட்ட எஸ்பியாக இருந்துவரும் சரவணன் கட்டாய காத்திருப்பு … Read more

தென்னாட்டின் ஜாலியன் வாலாபாக் தெரியுமா.? – பொதுக்கூட்டத்திற்கு அழைக்கும் தமிழ் தேசிய அமைப்பு.!

தென்னகத்தின் ஜாலியன் வாலாபாக் என்று அழைக்கப்படும் பெருங்காம நல்லூர் போராட்டம் தொடர்பாக பொதுக்கூட்டம் நடத்தப்பட உள்ளது. தமிழ் தேசிய அமைப்பான மே 17 இயக்கம் வெளியிட்ட அறிவிப்பில், ‘‘ஆங்கிலேயர்கள் கொண்டு வந்த குற்றப்பரம்பரை சட்டம் அல்லது ரேகைச் சட்டம், தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சில சமூகத்தினரின் முன்னோர்கள் குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள் என்று அடையாளப்படுத்தி, அவர்களின் வாரிசுகளும் குற்றவாளிகளே என்று முத்திரை குத்தியது. இவ்வாறு வகைப்படுத்தபட்டவர்கள், இரவில் வீட்டில் தங்காது, ஊரின் மத்தியில் உள்ளிட்ட காவல்துறையின் சாவடியில் தங்க … Read more

கொல்லிமலை அடிவாரத்தில் வேடன் வடிவில் அருள்பாலிக்கும் கூவை மலை பழனியாண்டவர்

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அடிவாரத்தில் இருக்கிறது புராணங்கள் போற்றிய கூவைமலை பழனியாண்டவர் கோயில். மூலவர் பழனியாண்டவர் தனியாக வேடன் ரூபத்தில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். மூலவரை நேருக்கு நேராக நின்று வணங்கினால் வேடனை போலவும், வலதுபுறம் நின்று வணங்கினால் ஆண் வடிவமாகவும், இடதுபுறமாக நின்று வணங்கினால் பெண் வடிவமாகவும் காட்சியளிப்பது வியப்பு. தலையில் கொண்டையும், வேங்கைமலர் கிரீடமும், கொன்றை மலரும் சூடிய முருகன், ருத்ராட்ச மாலை அணிந்துள்ளார். காலில் காலணியும், வீரத்தண்டையும் அணிந்துள்ள முருகன், இடுப்பில் கத்தியும் … Read more

அருந்ததியர் இட ஒதுக்கீடு.. 6 சதவீதமாக உயர்த்துக.. தமிழக அரசுக்கு கோரிக்கை!

தமிழக அரசால் நியமிக்கப்பட்டு பரிந்துரைக்கப்பட்ட நீதிபதி ஜனார்த்தனம் கமிஷன் பரிந்துரையின்படி கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அருந்ததியர் இடஒதுக்கீட்டை 3 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக உயர்த்த வேண்டும் என சமூக நீதி மக்கள் கட்சி மாநில நிறுவனர் மற்றும் தலைவர் வடிவேல் ராமன் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். சமூகநீதி மக்கள் கட்சியின் சார்பில் மாநில அளவிலான முதல் மாநாட்டு நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழக அரசுக்கு பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன. அதில் “அருந்ததியர்கள் தூய்மை பணிகளை … Read more

தங்கம் வாங்க இது சரியான நேரம்!!

தங்கம் விலையில் கடந்த 2 நாட்களாக எந்த மாற்றமும் இல்லாத நிலையில், இன்று அதிரடியாக சரிந்துள்ளது. தங்கம் விலையானது ஏற்ற, இறக்கமாகவே இருந்து வரும் நிலையில், சிறந்து முதலீடு என்பதால் மக்கள் தங்கம் வாங்கி குவிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.25 குறைந்து 5,535 ரூபாய் ஆகவும், சவரன் ஒன்றுக்கு ரூ.200 குறைந்து ரூ.44,280 ஆகவும் விற்பனையாகிறது. 18 காரட் … Read more

அரசுப் பேருந்தும், ஜல்லி ஏற்றி வந்த லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் பலி..!

சிவகங்கை மாவட்டம் குயவன்வலசை பகுதியில் அரசுப்பேருந்தும் ஜல்லி ஏற்றிச் சென்ற லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பெண்கள் உயிரிழந்தனர். ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியிலிருந்து மதுரைக்குச் சென்றுக் கொண்டிருந்த அரசுப் பேருந்து திருமாஞ்சோலை அருகே சென்ற போது எதிரே வந்த லாரியுடன் மோதி விபத்திற்குள்ளானது. லாரி அதே இடத்தில் கவிழ்ந்த நிலையில், பேருந்து சாலையிலிருந்து வலதுபுறமாக கீழே இறங்கி சில அடி தூரம் சென்றது. விபத்தில், பேருந்தில் பயணித்த கீழக்கோட்டையை சேர்ந்த மூதாட்டி திருப்பதி, ராகினிபட்டியைச் … Read more