காமராஜர் பல்கலைகழகத்தில் மாணவிகளிடம் தரக்குறைவாக பேசிய பேராசிரியர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது..!

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மாணவிகளை சாதியைக் குறிப்பிட்டு தரக்குறைவாக பேசியதாக, பேராசிரியர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். தென்காசியைச் சேர்ந்த சண்முகராஜா, இக்கல்லூரியில் வரலாற்றுத்துறை பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது துறையில் பயிலும் மாணவ, மாணவிகளை சாதியைக் குறிப்பிட்டு ஒருமையில் தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மாணவிகளின் பெற்றோர், கடந்த பிப்ரவரி 17ம் தேதி பேராசிரியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கியதாக வீடியோவும் வெளியானது. இது தொடர்பாக மாணவி ஒருவர் அளித்த புகாரின் பேரில் … Read more

நாட்டின் சமூகநீதிக்கு வழிகாட்டிய போராட்டம் – கேரளாவில் வைக்கம் நூற்றாண்டு விழா கொண்டாட்டம்

சென்னை: நாட்டின் சமூகநீதிக்கு வழிகாட்டியது வைக்கம் போராட்டம் என்று கேரளாவில் நடைபெற்ற வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் வைக்கத்தில் நேற்று `வைக்கம் சத்தியாகிரகப் போராட்ட நூற்றாண்டு விழா’ நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக நேற்று காலை சென்னையில் இருந்து கொச்சி சென்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை, கேரள தொழில் துறை அமைச்சர் பி.ராஜீவி, மாவட்ட ஆட்சியர் எஸ்.கே.உமேஷ், திமுக கேரள மாநிலச் செயலாளர் முருகேஷ், தலைவர் மோகன்தாஸ் … Read more

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எப்படி? மூன்று வாரங்களில் கிடுகிடு ஏறுமுகம்!

கொரோனா வைரஸ் என்றாலே ஒருவித கலக்கம் மனதிற்குள் இருக்கத்தான் செய்கிறது. மூன்று அலைகள், பல லட்சம் உயிர்கள், தீராத மன உளைச்சல், பெரும் பொருளாதார இழப்பு என சொல்லிக் கொண்டே போகலாம். எல்லாம் முடிந்தது. இனி கொரோனா வராது என நம்பிக்கை நிலவிய சூழலில் 2023ஆம் ஆண்டு சற்றே பதற்றத்தை கூட்டியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது ஏப்ரல் மாதம் தொடங்கியுள்ள நிலையில் கடந்த மூன்று வாரங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக ஏறுமுகத்தை நோக்கி சென்றுள்ளது. … Read more

தீண்டாமை வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்டோரின் ஆட்சேபத்தை ஜாமீனுக்கு முன் பரிசீலிக்க வேண்டும்: 2 ஆண்டுக்கு முன் வழங்கிய ஜாமீன் ரத்து

மதுரை: தீண்டாமை வன்கொடுமை வழக்கில் ஜாமீன் வழங்கும் முன் பாதிக்கப்பட்டோரின் ஆட்சேபத்தை பரிசீலிக்க வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டம், மேலூர் அருகே சாம்பிராணிபட்டியில் உள்ள நிலத்தின் மீதான உரிமை தொடர்பாக இரு தரப்பினரிடையே பிரச்னை இருந்துள்ளது. கடந்த 24.2.2020ல் அந்த நிலத்தை அளவீடு செய்து வேலி அமைக்கும் பணியில் ஒரு தரப்பினர் ஈடுபட்டனர். அப்போது இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஒரு தரப்பைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் மீது எஸ்சி – எஸ்டி … Read more

துபே மந்தமான பேட்டிங், இம்பேக்ட் கொடுக்காத தேஷ்பாண்டே: சி.எஸ்.கே தோல்விக்கு இதுதான் காரணமா?

துபே மந்தமான பேட்டிங், இம்பேக்ட் கொடுக்காத தேஷ்பாண்டே: சி.எஸ்.கே தோல்விக்கு இதுதான் காரணமா? Source link

விபத்தில் கணவரை  இழந்த பெண்ணின் மறுமணத்தை காரணம் காட்டி இன்சூரன்ஸ் தொகையை மறுக்க முடியாது ஹைகோர்ட் அதிரடி!

திருமணமான பெண்ணின் கணவர் எதிர்பாராத விதமாக இறந்து விடும் நிலையில், சம்பந்தப்பட்ட பெண்ணின் மறுமணத்தை மட்டும் ஒரு காரணமாக வைத்து, இறந்த அவரின் கணவருக்கு கிடைக்க வேண்டிய பணத்தை இன்சூரன்ஸ் நிறுவனம் தர மறுக்க முடியது என்று , மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2010 ஆம் ஆண்டு நடந்த இருசக்கர வாகன விபத்தில் 19 வயது இளம் பெண்ணின் கணவர் கணேஷ் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.  கணேஷ் உயிருடன் இருந்த பொழுது இப்ஃகோ டோக்கியோ இன்சூரன்ஸ் … Read more

தீயாய் பரவும் வீடியோ.! தீவிரமாய் தேடும் போலீஸ்..!

சமீப காலமாக ரீல்ஸ் வீடியோ மோகத்திற்கு ஆசைபட்டு போக்குவரத்து விதிமுறைகளை மீறி ஆபத்தான சாகசங்களை பொது வெளியில் செய்யும் சம்பவங்கள் அதிகாரித்து வருகிறது. அப்படி ஒரு சம்பவம் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இளைஞர் ஒருவர் இரு பெண்களை பைக்கில் வைத்து செய்த சாகசம் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு இளைஞர் தனது பைக்கில் முன் பகுதியில் ஒரு பெண்ணையும் பின் பகுதியில் ஒரு பெண்ணையும் வைத்து நடுவே இவர் அமர்ந்து வேகமாக வண்டி ஓட்டுகிறார். மூன்று … Read more

குழாயடி சண்டையில் வீடு புகுந்து பெண்ணை கட்டிலின் மீது தள்ளி சரமாரியாக தாக்கிய சம்பவத்தில் தாய், மகள் கைது..!

கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே குழாயடி சண்டையில் பெண்ணை, ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் வீடு புகுந்து தாக்கிய காட்சி செல்போனில் வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மூங்கில்விளை காலனியை சேர்ந்த ரமேஷின் மனைவி மஞ்சுவுக்கு வீட்டின் முன்பு உள்ள தெருக்குழாயில் குடிநீர் பிடிப்பது தொடர்பாக அதே பகுதியை சேரந்த மகேஸ்வரி என்பவருடன் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 29ம் தேதி மதிமகேஸ்வரி மற்றும் அவரது கணவர் கோபாலகிருஷ்ணன், தாய் தமிழ்செல்வி ஆகியோர் ரமேஷின் வீட்டிற்கு … Read more

8 புதிய மாவட்டங்கள் உருவாக்க பரிசீலனை – முதல்வர் முடிவெடுப்பார் என தகவல்

சென்னை: தமிழகத்தில் புதிதாக 8 மாவட்டங்களை உருவாக்குவது தொடர்பான கோரிக்கைகள் வந்துள்ளதாகவும், அவற்றைப் பரிசீலிப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவெடுப்பார் என்றும் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறினார். சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, “ஆரணியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படுமா?” என்று அதிமுக உறுப்பினர் சேவூர் ராமச்சந்திரன் கேள்வி எழுப்பினார். அதேபோல, “கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்கப்படுமா?” என்று திருவிடைமருதூர் உறுப்பினரும், அரசு கொறடாவுமான கோவி.செழியன் கேள்வி எழுப்பினார். இவற்றுக்குப் பதில் அளித்து … Read more

டோல்கேட் கட்டண உயர்வை கண்டித்து லாரி உரிமையாளர்கள் கப்பலூரில் ஆர்ப்பாட்டம்

திருமங்கலம்: மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே கப்பலூர் டோல்கேட்டில் நேற்று முதல் 10 சதவீத சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டது. இதற்கு வாகன ஓட்டுநர்கள், பொதுமக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். டோல்கேட் கட்டண உயர்வினை ரத்து செய்ய வலியுறுத்தி, தமிழ்நாடு லாரி உரிமையாளர் சங்கம் சார்பில்  நேற்று கப்பலூர் டோல்கேட் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில துணைத்தலைவர் சாத்தையா தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு ,சுங்கக்கட்டண உயர்வினை ஒன்றிய அரசு உடனடியாக ரத்து செய்யவேண்டும் என கோஷங்கள் … Read more