கலாஷேத்ரா கல்லூரி பாலியல் புகார் விவகாரம்…உதவி பேராசிரியர் தலைமறைவு.!

சென்னை திருவான்மியூரில் இயங்கிவரும் கலாஷேத்ரா அறக்கட்டளையின் கலை கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு பேராசிரியர் ஒருவர் தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வருவதாக மாணவிகள் புகார் கொடுத்துள்ளனர். இதுகுறித்து புகார் அளித்து கல்லூரி நிர்வாகம் கண்டுகொள்ளாமல் அலட்சியமாக செயல்பட்டதால், சமூக வலைத்தளங்களில் மாணவிகள் தங்களின் குற்றச்சாட்டுகளை பதிவிட்டனர். இதையடுத்து தேசிய மகளிர் ஆணையம் தலையிட்டு, காவல்துறை இதை உரிய முறையில் சரியாக விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டது இது தொடர்பாக கல்வி நிறுவனம் எல்லைக்குட்பட்ட … Read more

வீட்டு கடன்களுக்கான வட்டி விகிதம் உயர்கிறது..!!

புதிய நிதி ஆண்டான ஏப்ரல் 1-ம் தேதியையொட்டி நேற்று முதல் பல்வேறு புதிய திட்டங்கள் அமலுக்கு வந்துள்ளன. தபால் நிலையத்தில் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் (எஸ்.சி.எஸ்.எஸ்.) முதியவர்கள் ரூ.30 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இதற்கு முன்பு அதிகபட்ச வரம்பு ரூ.15 லட்சமாக இருந்தது. அது நேற்று முதல் ரூ.30 லட்சமாக உயர்த்தப்படுகிறது. இந்த சேமிப்பு திட்டத்தில் 8 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. தபால் அலுவலகத்தில் நேற்று முதல் ரூ.1000 செலுத்தினால் ரூ.67,750 பெறக்கூடிய திட்டம் … Read more

ரூ 40 கோடி சுருட்டிய காவலர் குடும்பம்.. தவிக்கும் காவலர்கள்..! போலீசிடமே சுருட்டலா..?

காஞ்சிபுரத்தில் ஆருத்ரா கோல்டு நிறுவனத்தைப் போல அதிக வட்டி தருவதாக கூறி நிதிதிரட்டி 40 கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டதாக, இரு காவலர்கள் உள்பட அவரது குடும்பத்தினர் 8 பேரை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர். காஞ்சிபுரம், ஏனாத்தூர் புதுநகர் பகுதியைச் சேர்ந்தவர் சகாயபாரத். இவர் மாமல்லபுரம் துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவலராக பணி செய்து வருகிறார். இவர் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து ஆருத்ரா பாணியில் சொந்தமாக அதிக வட்டி தரும் நிதி நிறுவனம் … Read more

உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் மூலமாக குறைந்த விலையில் இணைய சேவை – அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்

சென்னை: உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் மூலம் குடும்பங்களுக்கு குறைந்தவிலையில் அதிவேக இணைய சேவைகளை ரூ.100 கோடி செலவில் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என்று அமைச்சர் த.மனோ தங்கராஜ் தெரிவித்தார். சட்டப்பேரவையில் நேற்று, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறைமானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இதில் உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்து, துறையின் அமைச்சர் த.மனோ தங்கராஜ் பேசியதாவது: சென்னை, ஓசூர், கோவையில் உலகத் தரத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய ஹைடெக் சிட்டி வரவுள்ளது. பார்த் நெட் திட்டம் … Read more

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த மண்டபம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்

ராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த மண்டபம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியுள்ளனர். ரோந்து படகை வைத்து இலங்கை கடற்படை மோதியதில் மீனவர்களின் விசைப்படகு சேதம் அடைந்துள்ளது.

காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டம்.. யாருக்கு, என்ன பயன்.. முழு விவரம் இதோ..!!

காவிரி ஆற்றை அக்னியாறு, தெற்கு வெள்ளாறு, மணிமுத்தாறு, வைகை மற்றும் குண்டாறு ஆகிய ஆறுகளுடன் இணைக்கும் திட்டம் தான் காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டமாகும். இந்த திட்டத்துக்காக மொத்தம் 263 கிலோ மீட்டர் நீளத்திற்கு கால்வாய் அமைக்கப்படவுள்ள நிலையில் மூன்று கட்டங்களாக பணிகள் நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக காவிரி கட்டளை கதவனை முதல் தெற்கு வெள்ளாறு வரை 119 கிலோ மீட்டர் தொலைவுக்கு கால்வாய் அமைக்கப்படவுள்ள நிலையில் இரண்டாம் கட்டமாக தெற்கு வெள்ளாறு முதல் வைகை வரை … Read more

இந்த 10 மாநிலங்களில் இயல்பைவிட அதிக வெப்பம் நிலவும்..!!

இந்திய வானிலை ஆய்வு மைய இயக்குநர் மிருத்யுஞ்சய் மஹாபத்ரா செய்தியாளர்களிடம் பேசியதாவது, ”பீகார், ஜார்க்கண்ட், உத்தரப் பிரதேசம், ஒடிசா, மேற்கு வங்கம், சத்தீஸ்கர், மகாராஷ்ட்டிரா, குஜராத், பஞ்சாப், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் வெப்ப அலைகள் வீசும் நாட்களின் எண்ணிக்கை வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இதேபோல், தென்னிந்திய தீபகற்ப பகுதிகள் மற்றும் சில வடமேற்கு இந்தியப் பகுதிகளைத் தவிர்த்து பிற பகுதிகளில் பொதுவாக இந்தக் காலகட்டத்தில் வெப்பம் வழக்கத்தைவிட அதிகரித்தே … Read more

தமிழகத்திலுள்ள 29 சுங்கச்சாவடிகளில் இன்று முதல் சுங்கக் கட்டணம் உயர்வு!

தமிழகத்தில் 29 சுங்கச்சவாடிகளில் 5 விழுக்காடு முதல் 10 விழுக்காடு வரை சுங்க கட்டண உயர்வு நடைமுறைக்கு வந்துள்ளது. ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும் ஆண்டுக்கு ஒருமுறை கட்டணத்தை உயர்த்திக் கொள்வதற்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அனுமதி வழங்கியுள்ள நிலையில், இந்த கட்டண உயர்வு நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. கார்கள் தொடங்கி கனரக வாகனங்களுக்கான சுங்கக் கட்டணங்கள் 5 ரூபாய் முதல் 55 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையைப் பொருத்தவரை, புறநகர்ப் பகுதிகளில் உள்ள பரனூர், வானகரம், செங்குன்றம், பட்டறை … Read more