வேலை தேவை! இல்லாவிட்டால் கருணைக்கொலை செய்யவும்: கண்ணீருடன் கலெக்டரிடம் மனு கொடுத்த கைம்பெண்

கும்பகோணம்: கணவனை இழந்து இரண்டு சிறிய குழந்தைகளுடன் உள்ள ஆதரவற்ற விதவை ஆகிய தனக்கு கருணை அடிப்படையில் கிராம உதவியாளர் பணி நியமனம் வழங்க வேண்டும் என கும்பகோணம் ,  விட்டலூர் கிராமத்தை சேர்ந்த ஜெனிபர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம் மனு அளித்தார். எனது குழந்தைகளை காப்பாற்ற எனக்கு அரசு பணி வழங்குங்கள் , இல்லையேல் எங்களை கருணைக்கொலை செய்துவிடுங்கள் என்று ஆதரவற்ற கைம்பெண் கண்ணீருடன் முதலமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்து அந்த பெண் கடிதம் எழுதியிருக்கிறார். … Read more

காட்டு யானை தாக்கி முதியவர் பலி; உடலை எடுத்துசெல்ல விடாமல் தொழிலாளர்கள் போராட்டம்: கூடலூர் அருகே பரபரப்பு

கூடலூர்: கூடலூர் அருகே காட்டு யானை தாக்கி முதியவர் உயிரிழந்தார். அவரது உடலை எடுத்து செல்ல விடாமல் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கூடலூரை அடுத்த ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட டெல்ஹவுஸ் தனியார் தேயிலை தோட்டத்தில் தொழிலாளர் குடியிருப்பில் ஓய்வு பெற்ற தொழிலாளி சிவனாண்டி (62). இவர் தனது மனைவி பெருமாயி, மகன்கள் சிவகுமார், ராஜகுமார் ஆகியோருடன் வசித்து வந்தார். நேற்று காலை சிவனாண்டி, விறகு எடுத்து வருவருதாக கூறி வெளியே சென்றார். மதியம் ஆகியும் … Read more

வேங்கை வயல் கிராமத்தில் சவுக்கு சங்கர்: ‘எல்லா சமூகத்திற்கும் பொதுவான குடிநீர் தொட்டி தேவை’

வேங்கை வயல் கிராமத்தில் சவுக்கு சங்கர்: ‘எல்லா சமூகத்திற்கும் பொதுவான குடிநீர் தொட்டி தேவை’ Source link

வயதானவர்கள் நடைமேடைக்கு செல்ல ரெயில் நிலையங்களில் லிப்ட் வசதி.!

சென்னையிலுள்ள புறநகர் மின்சார ரெயில் பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் கர்ப்பிணிகள் தங்கள் உடமைகளுடன் நடை மேம்பாலத்தை கடந்து செல்வதற்கு மிகவும் சிரமப்படுகிறார்கள்.  இந்த நிலையில், அவர்கள் எளிதாக ரயில் நடைமேடைக்கு செல்வதற்கு வசதியாக லிப்ட் வசதி செய்யப்படுகிறது. அதன் படி, அரக்கோணம், வில்லிவாக்கம், பேசின்பாலம், வியாசர்பாடி, ஆவடி, கொரட்டூர் உள்ளிட்ட இருபது ரெயில் நிலையங்களில் லிப்ட் வசதி அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.  … Read more

அண்ணாமலைக்கு எதிராக சக்தி யாத்திரை..!! எப்போ ? எங்கே தெரியுமா ?

பாஜகவில் இருந்து விலகிய நடிகை காயத்ரி ரகுராம் தினமும் தனது டுவிட்டர் பதிவுகள் மூலம் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை விமர்சித்து வருகிறார். இந்நிலையில் அண்ணாமலை செல்லும் யாத்திரைக்கு எதிராக அதே நாளில் எனது யாத்திரையை நான் தொடங்குவேன் என நடிகை காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மக்களின் ஆதரவுடனும், ஆசியுடனும் எனது சக்தி யாத்திரை ஏப்ரல் 14 ஆம் தேதி சென்னை முதல் கன்னியாகுமரி வரை தொடங்கவுள்ளது. pic.twitter.com/RuYh7kI8ae — Gayathri Raguramm (@Gayatri_Raguram) January … Read more

ஈரோடு கிழக்குத் தொகுதியில் தேமுதிக சார்பில் வேட்பாளர் அறிவிப்பு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில், தேமுதிக சார்பில், ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளர் ஆனந்தன் போட்டியிடுவார் என, அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார். சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் இடைத்தேர்தல் தொடர்பான மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா, இடைத்தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடுவதாகவும், கட்சியின் பலத்தை நிரூபிக்க தனியாக களம் காண்பதாகவும் தெரிவித்தார். Source link

தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தேர்தலை நடத்த புதிய சட்டம்: தமிழக அரசுக்கு ஐகோர்ட் கால அவகாசம்

சென்னை: தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தேர்தலை நடத்த ஏதுவாக 1914-ம் ஆண்டு சட்டத்துக்கு பதிலாக புதிய சட்டம் கொண்டு வரப்படும் என்ற அரசு தரப்பு வாதத்தை ஏற்று 3 மாத கால அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் நிர்வாகிகள் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்தலை அறிவிப்பை ரத்து செய்து, உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஆன்லைன் மூலம் வாக்குப்பதிவு நடத்த உத்தரவிடக் கோரியும், ஒரு முறை பயன்படுத்தும் பாஸ்வேர்டு மூலம் … Read more

'சுதந்திர போராட்ட வரலாறு மாற்றி எழுதப்படணும்!' – ஆளுநர் ஆர்.என்.ரவி

“சுதந்திர போராட்ட வரலாறு மாற்றி எழுதப்பட வேண்டும்,” என, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்து உள்ளார். சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 126 ஆவது ஆண்டு பிறந்த தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. சுபாஷ் சந்திர போஸின் பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் ஜனவரி 23 ஆம் தேதி பராக்கிரம தினமாக கொண்டாடப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்த நாளை முன்னிட்டு, … Read more

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த வெளிநாட்டு பெண் சிவ தாண்டவம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், துருக்கி நாட்டு பெண் சிவ தாண்டவம் ஆடியதை பக்தர்கள் வியந்து ரசித்து பார்த்தனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஞாயிறு விடுமுறை தினமான நேற்று அதிகாலையில் இருந்தே தரிசன வரிசையில் பக்தர்கள் அதிகளவு வந்திருந்தனர்.கோயில் வெளி பிரகாரம் வரை பொது தரிசன வரிசை நீண்டிருந்தது. அதனால், சுமார் 3 மணி நேரம் முதல் 4 மணி நேரம் வரை வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். இந்நிலையில் துருக்கி நாட்டை சேர்ந்த பெண் பக்தர் … Read more