கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் வேலைநிறுத்த போராட்டம்.!

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கோவை மாநகராட்சியில் 3,600 ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு தினக்கூலி அடிப்படையில் ஊதியம் அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், குப்பைகள் அகற்றிட தூய்மைப் பணிகளை தனியார் வசம் ஒப்படைக்க உள்ளதாகவும், அதற்காக ஒப்பந்தப்புள்ளி திறக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியானது.  இதைத்தொடர்ந்து தூய்மைப் பணியில் தனியார் மயத்தை கைவிட வேண்டும் என்றும், ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களின் … Read more

ஒட்டன்சத்திரம் | பூத்துக்குலுங்கும் சின்ன வெங்காயப் பூக்கள்: ஒரு கிலோ விதை ரூ.3,000-க்கு விற்பனை

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் பகுதியில் நடவு செய்துள்ள சின்ன வெங்காயப் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. வெங்காய பூக்களில் இருந்து எடுக்கப்படும் விதைகள் ஒரு கிலோ ரூ.3 ஆயிரம் விற்பனையாகிறது. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகளவில் வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. சின்ன வெங்காயம் இரண்டு முறைகளில் சாகுபடி செய்யப்படுகிறது. வெங்காயத்தை நடவு செய்து சாகுபடி செய்வது ஒரு வகை. வெங்காய விதைகளை நாற்றாக வளர்த்து, நடவு செய்வது இன்னொரு வகை.இரண்டாவது வகையில் சாகுபடி … Read more

மாதேஷ் கேட்ட மன்னிப்பு; சுக்கு நூறான பிம்பம்… நெறியாளர்கள் ஏன் தடம் புரள்கின்றனர்?

ஊடகவியலாளர்கள், யூடியூபர்கள், நடுநிலையாளர்கள், அரசியல் விமர்சகர்கள் உள்ளிட்டோர் பணம், பரிசுப் பொருட்களை வாங்கிக் கொண்டு வேலை செய்ததாக மதன் ரவிச்சந்திரன் ஸ்டிங் ஆபரேஷன் நடத்தி வீடியோக்கள் வெளியிட்டார். இதில் பலரது முகங்கள் அம்பலமாகின. குறிப்பாக ஆதன் தமிழ் யூடியூப் சேனலின் நெறியாளர் மாதேஷ் முக்கியமான நபராக வெளிப்பட்டார். அவரை வைத்து பலர் சிக்க வைக்கப்பட்டது தெரியவந்தது. நெறியாளர் மாதேஷ் இதனால் மாதேஷ் மீது தமிழர்கள் வைத்திருந்த நடுநிலையான எண்ணங்கள் சுக்கு நூறாக உடைந்தன. மதன் ரவிச்சந்திரன் ஸ்டிங் … Read more

மாமியாரின் கள்ளக்காதலனை வெட்டிக் கொன்ற மருமகன்

இந்த காலகட்டத்தில் கள்ளக்காதல் அதிகளவு பெருகி கொண்டே வருகிறது. வயது வரம்பு இன்றி கள்ள காதலால் அதிகளவு வன்முறைகள் நடந்து கொண்டே இருப்பது தொடர்கதையான ஒன்றாகி வருகிறது. இது போன்ற முறையற்ற உறவு பலரது வாழ்க்கையை சீரழித்து விடுகிறது.இது போன்ற ஒரு சம்பவம் தான் இங்கு அரங்கேறியுள்ளது. பொதுவாக மருமகன் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதை மாமியார் கண்டிப்பது வழக்கம், ஆனால் இங்கோ மாமியாரின் கள்ளத்தொடர்பை மருமகன் கண்டித்ததையடுத்து, அந்த நபரை கொலையும் செய்து பரபரப்பை … Read more

கடலூர் அரசு கூர் நோக்கு இல்லத்தில் இருந்து தப்பி ஓடிய 6 சிறுவர்களில் 2 பேர் பிடிபட்டனர்!!

கடலூர் : கடலூர் சாவடி பகுதியில் உள்ள அரசு கூர் நோக்கு இல்லத்தில் இருந்து 6 சிறுவர்கள் தப்பி ஓடிவிட்டனர். போலீசார் நடத்திய வாகன சோதனையில் அதில் 2 பேர் பிடிபட்டனர். புதுப்பாளையத்தில் உள்ள தனியார் காப்பகத்தில் இருந்தும் 5 பேர் தப்பி ஓடிவிட்டனர். இவர்கள் விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமத்தில் இருந்து அழைத்து வரப்பட்டு, இங்கு சேர்க்கப்பட்டவர்கள்.

வனப்பகுதி சாலையோரம் கொட்டப்படும் மருத்துவ கழிவுகள்! வனவிலங்குகள் உட்கொள்ளும் அபாயம்!

திருத்தனி அருகே வனப்பகுதி சாலையோரம் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகளால், வன விலங்குகள் பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ஒன்றியம் கன்னிகாபுரம் ஊராட்சிக்குட்பட்டது பி.சி.என்.கண்டிகை கிராமம். இந்த கிராமத்திற்கு திருத்தணி-மாம்பாக்கசத்திரம் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் இருந்து வனப்பகுதி சாலை வழியாக மக்கள் நடந்தும், வாகனங்கள் மூலம் சென்று வருகின்றனர். இதுதவிர இச்சாலை வழியாக அரசு பஸ்கள் குருவராஜப்பேட்டை, மின்னல் மற்றும் அன்வர்த்திகான்பேட்டை வரை செல்கிறது. இந்நிலையில் திருத்தணி பகுதியில் இயங்கி வரும் தனியார் மருத்துவமனை மற்றும் … Read more

மாமல்லபுரம் : பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நபர் கடலில் குதித்து தற்கொலை.!

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ரெனால்டு ஜாக்ஜங்கோஸ் என்பவர் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் உள்ள மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வந்து  இங்குள்ள சிற்பங்களின் அழகில் மயங்கி சொந்த நாட்டுக்கு செல்லாமல் மாமல்லபுரத்திலேயே தங்கியுள்ளார்.  பின்னர் மாமல்லபுரம் ஊர், இங்குள்ள மக்களின் அன்பு, அரவணைப்பு உள்ளிட்டவற்றை பார்த்து மகிழ்ச்சியடைந்த அவர், வடக்கு மாமல்லபுரம் பகுதியை சேர்ந்த ஸ்டெல்லாமேரி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.  இதையடுத்து, ஜாக்ஜங்கோஸ் மாமல்லபுரத்திலேயே நிரந்தரமாக தங்கி ஒத்தவாடை … Read more

செல்போன் அழைப்புக்கு பின்னர் தான் தாக்குதல் நடத்தினர்.. தாக்குதலுக்குள்ளான தலைமை ஆசிரியர் குருவம்மாள் பேட்டி

தங்களிடம் நன்றாக பேசிக்கொண்டு இருந்தவர்கள் ஒரு செல்போன் அழைப்புக்கு பின்னர் தான் தாக்குதல் நடத்தினர் என்றும் அந்த செல்போனில் பேசிய மர்ம நபர் யார் என்று கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும் என்றும் தலைமை ஆசிரியர் குருவம்மாள் கேட்டுக் கொண்டுள்ளார்.  தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள கீழநம்பிபுரத்தில் உள்ள அரசு உதவி பெறும் இந்து தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் குருவம்மாள் மற்றும் ஆசிரியர் பாரத் மீது கடந்த 21ந்தேதி அப்பள்ளியில் 2ஆம் வகுப்பு படிக்கும் மாணவனின் பெற்றோர் … Read more