தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் தடையா? திமுக கொண்டுவந்த கவன ஈர்ப்பு தீர்மானம்!

தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரி சட்டப்பேரவையிலும் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்திற்கு தடை விதிக்க கோரி, எதிர்க்கட்சிகள் கவனயீர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்துள்ளன. தமிழக சட்டப்பேரவையில் இன்று ஆன்லைன் சூதாட்டத்திற்கு மீண்டும் தடை சட்டம் கொண்டுவர தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் மசோதா தாக்கல் செய்து உள்ளார். அவரின் உரையில், “ஆன்லைன் சூதட்டத்தால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை, முதலில் இயற்றப்பட்ட சட்ட மசோதா, ஆளுநர் எழுப்பிய கேள்விகள் ஆகியவை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரிவாக தெரிவித்துள்ளார். மேலும், “மாநில எல்லைக்குள் … Read more

இந்திய கிரிகெட் ரசிகர்களுக்கு இது செம உற்சாகமான நியூஸ்..!!

உலகம் முழுவதும் கால்பந்து விளையாட்டுக்கு தான் ரசிகர்கள் அதிகம் இருந்தாலும், கிரிக்கெட் விளையாட்டிற்கு தான் அதிக செலவும், விளம்பரமும் செய்யப்படுகிறது. இளைஞர்களிடையே கிரிக்கெட் விளையாட்டு ஒரு எழுச்சியை உருவாக்கி உள்ளது. கபில்தேவ், அசாருதின், கங்குலி, சச்சின், சேவாக், தோனி, கோஹ்லி என அடுத்தடுத்து தங்களது ஆதர்ஷ வீரர்கள் மாறினாலும், இளைஞர்களை விளையாட்டை நோக்கி உற்சாகப்படுத்தியதில் இவர்களின் பங்கு அளப்பரியது. இந்த உலகக் கோப்பையை வெல்வதற்காக தற்போது அனைத்து அணிகளும் முழுஅளவில் தயாராகி வருகின்றன. இந்தியாவில் கடந்த 1987, … Read more

தமிழக வேளாண் பட்ஜெட் அறிவிப்புகள்: அரசியல் தலைவர்களின் ஆதரவும், எதிர்ப்பும்

சென்னை: தமிழக வேளாண் பட்ஜெட் குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் ஆதரித்தும், எதிர்ப்பு தெரிவித்தும் கருத்துகளை கூறியுள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கை: எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி: இந்த பட்ஜெட் மக்களை ஏமாற்றும் பட்ஜெட்டாக உள்ளது.வேளாண் மானிய கோரிக்கையில் உள்ளதே இதில் இடம் பெற்றுள்ளது. விவசாயிகளுக்கு எந்த நன்மையும் கிடைப்பதாகத் தெரியவில்லை. சட்டப்பேரவை தேர்தலின்போது முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுகஆட்சிக்கு வந்தவுடன் கரும்புக்கு ரூ.4 ஆயிரம் ஆதார விலை வழங்கப்படும் என்றார். தற்போது டன்னுக்கு ரூ.195 தரப்படும் கூறப்பட்டுள்ளது. … Read more

அண்ணாமலை: ஒரு ரூபா லஞ்சம் வாங்கியதை நிரூபிச்சு காட்டுங்க பார்க்கலாம்!

தமிழக பாஜகவில் அண்ணாமலை முன்வைத்த அதிமுக கூட்டணி தொடர்பான கருத்து உட்கட்சி பூசலுக்கு வித்திட்டது. கட்சியின் சீனியர்கள் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் அண்ணாமலை தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார். அதன்பிறகு டெல்லியில் இருந்து வந்த எச்சரிக்கையால் சலசலப்பு அடங்கியது. கூட்டணி குறித்து கட்சி மேலிடம் உரிய நேரத்தில் அறிவிக்கும் என்று கூறிவிட்டார். அண்ணாமலைக்கு எதிர்ப்பு இருப்பினும் அண்ணாமலைக்கு எதிராக ஒரு கூட்டம் வேலை செய்து வருகிறது என்றும், அவரை பதவியில் இருந்து நீக்க மும்முரம் காட்டி வருவதாக … Read more

கிருஷ்ணகிரி கொலை: குற்றவாளி அதிமுகவை சேர்ந்தவர் – ஸ்டாலின் அளித்த பதிலால் அவையில் அமளி!

CM Stalin About Krishnagiri Youth Muder Case: தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. பட்ஜெட் மீதான விவாதம் இன்று முதல் நடைபெறுகிறது. இன்றைய நிகழ்வின் தொடக்கத்தில்,  முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மாரிமுத்து, தங்கவேலு, உபயதுல்லா, சீனிவாசன் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு அவை உறுப்பினர்கள் இரண்டு நிமிடம் அஞ்சலி செலுத்தப்பட்டது. பிரபல பாடகி வாணி ஜெயராம் மறைவிற்கும் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதை தொடர்ந்து, கிருஷ்ணகிரியில் காதல் திருமணம் செய்த இளைஞர் நடுரோட்டில் காதலியும், … Read more

கோடை காலம் தொடங்கியதால் விற்பனை தீவிரம்; தொற்று நோய் ஏற்படுத்தும் தரமற்ற ஐஸ் கட்டிகள்: சுகாதாரமற்ற குடிநீர் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு

வேலூர்:  கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் சுகாதாரமற்ற குடிநீரினால் தயாரிக்கப்படும் ஐஸ் கட்டிகளால் தொற்று நோய் பரவ வாய்ப்பு உள்ளதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கோடைக்காலம் தொடங்கி உள்ளதால் சாலையோரம் புதிதாக பழச்சாறு, ஜூஸ் கடைகள் முளைத்துள்ளன. இந்த கடைகளில் பயன்படுத்தப்படும் ஐஸ் கட்டிகள் தரமானதுதான என்ற கேள்வி எழுகிறது. இதுகுறித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கூறியதாவது: சுகாதாரமற்ற குடிநீரினால் தயாரிக்கப்படும் ஐஸ் கட்டிகளைக் கொண்டு உருவாகும் குளிர்பானம், பழச்சாறு, சர்பத் போன்றவற்றை … Read more

ஆன்லைன் சூதாட்டத்திற்கு மீண்டும் தடை சட்டம்! மசோதாவை தாக்கல் செய்தார் முதல்வர் ஸ்டாலின்!

தமிழக சட்டப்பேரவையில் சற்றுமுன் ஆன்லைன் சூதாட்டத்திற்கு மீண்டும் தடை சட்டம் கொண்டுவர தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் மசோதா தாக்கல் செய்து, உரையாற்றி வருகிறார்.    அவரின் உரையில், “ஆன்லைன் சூதட்டத்தால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை, முதலில் இயற்றப்பட்ட சட்ட மசோதா, ஆளுநர் எழுப்பிய கேள்விகள் ஆகியவை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரிவாக தெரிவித்துள்ளார். மேலும் அவரின் உரையில், “மாநில எல்லைக்குள் மக்கள் அனைவரையும் காக்க, மாநில அரசுக்கு உரிமை உண்டு. மீண்டும் சொல்கிறேன் மாநில அரசுக்கு … Read more

விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரம முறைகேடுகள் | தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணை: 20 பேரிடம் வாக்குமூலம்

விழுப்புரம்: காப்பகத்தில் இருந்த ஆதரவற்றவர்கள் காணாமல் போனது, பாலியல் சித்திரவதை, போதை மருந்து கொடுத்தது உள்ளிட்ட புகார்களில் சிக்கியிருக்கும் அன்புஜோதி ஆசிரமம் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் குழுவினர் 3 நாள் விசாரணையை நேற்று தொடங்கினர். விழுப்புரம் அருகே குண்டலபுலியூரில் கடந்த 15 ஆண்டுகளாக இயங்கி வந்த அன்பு ஜோதி ஆசிரமத்தில் தங்க வைக்கப்பட்டவர்களில் சிலர் காணாமல் போனதாக புகார் எழுந்தது. இதையடுத்து கடந்த மாதம் 10-ம் தேதி போலீஸ், வருவாய்த் துறையினர் நடத்திய விசாரணையில் … Read more

மீண்டும் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா – டெல்லி செல்லும் ஆளுநர் ஆர்.என்.ரவி

Tamil Nadu Legislative Assembly: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இரண்டு நாள் பயணமாக இன்று காலை 10 மணிக்கு டெல்லி செல்கிறார். அதே நேரத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும் இன்று டெல்லி செல்கிறார். இன்று சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மீண்டும் தாக்கலாக உள்ள நிலையில் டெல்லி பயணம் மேற்கொள்கிறார். இருவரும் ஒரே நாளில் டெல்லிக்கு செல்வதால் தமிழக அரசியலில் அடுத்த மாற்றம் என்னவாக இருக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.  அதேநேரத்தில் இன்று … Read more