திடீர் பனிச்சரிவு… சுற்றுலா பயணிகள் 6 பேர் பலி.! 80பேர் கதி என்ன?

இந்தியா – சீனா எல்லை பகுதியில் சிக்கிம் மாநிலத்தை ஒட்டி அமைந்துள்ள பகுதி நாதுலா. மிக முக்கிய சுற்றுலாத் தலமாக திகழந்து வருகிறது. இந்நிலையில் நாதுலா எல்லை பகுதியில் இன்று பிற்பகல் திடீரென மிகப்பெரிய அளவில் பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த பனிச்சரிவில் 150க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் சிக்கினர். இதுகுறித்து தகவல் அறிந்து உடனடியாக மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பனிச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போதைய நிலையில் சிக்கிம் பனிச்சரிவில் … Read more

அதிக வட்டித் தருவதாக கூறி ரூ.40 கோடி மோசடி… ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 காவலர்கள் உட்பட 3 பேர் சஸ்பெண்ட்

காஞ்சிபுரத்தில் அதிக வட்டி தருவதாக கூறி 40 கோடி ரூபாய் வரை மோசடி செய்த வழக்கில் கைதான ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு காவலர்கள் உட்பட 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். ஏனாத்தூரைச் சேர்ந்த ஜோசப் – மரியச் செல்வி தம்பதியின் மூத்த மகன் சகாய பாரத், மாமல்லபுரம் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவலராகவும், 2வது மகன் ஆரோக்கிய அருண் போக்குவரத்து காவலராகவும், மூன்றாவது மகன் இருதயராஜ் பள்ளிக் கல்வித்துறையிலும் பணிபுரிந்து வந்தனர். இவர்கள் பல்வேறு … Read more

நீரிழிவு நோயை இயலாமையாக கருதி மருத்துவப் படிப்பில் இடஒதுக்கீடு கோரிய மாணவியின் மனு தள்ளுபடி

சென்னை: நீரிழிவு நோயை இயலாமையாகக் கருதி, எம்பிபிஎஸ் படிப்பில் இடஒதுக்கீடு கோரி மாணவி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. நீட் தேர்வு எழுதி, மருத்துவ படிப்புக்கு விண்ணப்பித்த மாணவி ஒருவர், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட தன்னுடைய இயலாமையாகக் கருதி, இடஒதுக்கீடு வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், “ஒரு நாளுக்கு இரண்டு முறை … Read more

தமிழ்நாட்டில் 3 நிலக்கரி சுரங்கம்; வேளாண் மண்டலத்திற்கு பேரழிவு – அன்புமணி

தமிழ்நாட்டில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான தஞ்சையிலும் நிலக்கரி ஆய்வு மேற்கொள்ள ஒன்றிய அரசு திட்டமிட்டிருப்பதாக அறிவிப்பு வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் நிலக்கரி சுரங்கத்திற்கான ஏலத்தில் டெல்டா பகுதிகளை சேர்க்கக்கூடாது என்று ஒன்றிய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மேலும், நிலக்கரி சுரங்கங்களை ஏலம் விடும் முன் மாநில அரசிடம் ஒப்புதலும் ஆலோசனையும் பெறவில்லை என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் 3 நிலக்கரி சுரங்கங்களுக்கு … Read more

தமிழகத்தில் 91% பேருக்கு XBB வகை கொரோனா தொற்று.. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்..!!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக ஒற்றை இலக்கத்தில் இருந்து வந்த தினசரி கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை தற்போது 150க்கு மேல் சென்றுள்ளது. நேற்று மட்டும் தமிழகத்தில் 186 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது. இந்தியாவில் நேற்று ஒரே நாளில் புதிதாக 3,038 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தொற்று பாதித்து சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை … Read more

நிலக்கரி ஏல ஒப்பந்த அறிவிப்பில் டெல்டா பகுதிகளை நீக்குக: பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

சென்னை: தமிழகத்தின் நிலக்கரிக்கான ஏல ஒப்பந்த நடைமுறையிலிருந்து டெல்டா பகுதிகளை நீக்கிடவும், உணவு பாதுகாப்பினை உறுதி செய்திடவேண்டிய தேவையை வலியுறுத்தியும் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், “தமிழகத்தின் முக்கிய உணவு உற்பத்தி மண்டலமான காவிரி டெல்டாப் பகுதிகளில் நிலக்கரி மற்றும் பழுப்பு நிலக்கரி தொடர்பாக சமீபத்திய ஏல அறிவிப்பு ஏற்படுத்தக்கூடிய ஒரு தீவிரமான பிரச்சனையை உங்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். நிலக்கரி சுரங்கங்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டம், 2005, … Read more

வீடு மாறும் உதயநிதி: அப்பாவுடன் இருப்பதில் என்ன பிரச்சினை?

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள தனது இல்லத்தில் வசித்து வருகிறார். இங்கு தான் அமைச்சரும் முதல்வரின் மகனுமான தனது மனைவி, குழந்தைகளுடன் வசித்து வருகிறார். முதலமைச்சரான உடன் அரசு இல்லத்தில் மு.க.ஸ்டாலின் தங்குவார், அல்லது அது அவரது முகாம் அலுவலகமாக செயல்படும் என கூறப்பட்டது. ஆனால் அவர் தனது இல்லத்தில் ஒரு பகுதியையே முகாம் அலுவலகமாக மாற்றி அங்கேயே முக்கிய சந்திப்புகளை நிகழ்த்தி வருகிறார். டிசம்பர் மாதம் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் … Read more

கொரோனா பாதிப்பு பெரிய அளவில் இல்லை என்றாலும் அலட்சியம் வேண்டாம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

திண்டுக்கல் மாவட்ட செய்திகள்: தமிழக முதல்வரின் துரித நடவடிக்கையின் காரணமாக 11 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 7000 படுக்க வசதிகள் புதிதாக அமைக்கப்பட்டு உள்ளது என திண்டுக்கல்லில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி அளித்துள்ளார். மேலும் தமிழ்நாட்டில் கொரோனா வைரல் தொற்று குறித்தும் எச்சரித்துள்ளார். செய்தியாளர்கள் மத்தியில் அவர் பேசியது குறித்து பார்ப்போம். திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ119.6 கோடி செலவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய  கட்டிடத்தை … Read more

கரோனா பாதிப்பு குறித்து மக்கள் பீதியடையத் தேவையில்லை: காரைக்கால் ஆட்சியர்

காரைக்கால்: காரைக்கால் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு குறித்து மக்கள் பீதியடையும் அளவுக்கு எதுவுமில்லை எனவும், முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்படவில்லை என்றும் மாவட்ட ஆட்சியர் ஏ.குலோத்துங்கன் கூறியுள்ளார். காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 35 வயது பெண் ஒருவர், மூளையில் ஏற்பட்ட கட்டி காரணமாக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். அவருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் கரோனா தொற்று இருப்பது கடந்த 1-ம் தேதி கண்டறியப்பட்டது. 2-ம் தேதி இரவு அவர் உயிரிழந்தார். இதையடுத்து மாவட்டத்தில் பொது இடங்களில் … Read more