ஆழியார் அணையில் குறைந்த நீர்மட்டம்! வெளியே தெரியும் ஆங்கிலேயர் கல்பாலம்!

ஆனைமலை அருகே உள்ள ஆழியாரில் விரிந்து பரந்து கடல் போல் கிடக்கும் ஆழியார் அணையை பற்றி எல்லோருக்கும் தெரியும். இந்த அணையின் நடுப்பகுதியில் 1941 ஆம் ஆண்டு லேம் என்னும் ஆங்கிலேய இன்ஜினியர் கட்டிய கல் பாலம் இன்னும் அழியாமல் உள்ளது. கோடை காலங்களில் அணையின் நீர்மட்டம் குறையும் போது கல்பாலம் மற்றும் அதன் வழியாக வால்பாறைக்கு செல்லும் கருங்கல் சாலையும் தெரிவது உண்டு.1957 ஆம் ஆண்டு ஆழியார் அணை கட்டத் தொடங்கியபோது,ஏற்கனவே அணையின் நடுப்பகுதி வழியாக … Read more

திண்டுக்கல் அருகே ஓட்டுநருடன் லாரியை கடத்தி ரூ.12 லட்சம் வழிப்பறி; மர்ம கும்பலுக்கு போலீஸ் வலை..!!

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே ஓட்டுநருடன் லாரியை கடத்தி 12 லட்சம் ரூபாய் கொள்ளையடித்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள விக்கிரமசிங்கபுரத்தை சேர்ந்தவர் 54 வயது பாலகிருஷ்ணன். லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவர் ஓசூரில் இருந்து தக்காளி லாரி ஏற்றிக்கொண்டு திருநெல்வேலியில் இறக்கிவிட்டார். பின்னர் அங்கிருந்து தக்காளி விற்பனை செய்த பணம் ரூ.11 லட்சத்து 65 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு மீண்டும் ஓசூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அவருடன் தருமபுரி … Read more

தி.மு.க கூட்டணியில் கமல்; அ.தி.மு.க- பா.ஜ.க கூட்டணியில் திருமா: பாண்டே கூறும் கணக்குகள்

தி.மு.க கூட்டணியில் கமல்; அ.தி.மு.க- பா.ஜ.க கூட்டணியில் திருமா: பாண்டே கூறும் கணக்குகள் Source link

ஊரு விட்டு ஊரு வந்து கைவரிசையை காட்டிய பாஜக நிர்வாகி.! காட்டிக்கொடுத்த சிசிடிவி., கையும் களவுமாக கைது.!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பாஜக நிர்வாகி ஒருவர் தொடர் திரட்டில் ஈடுபட்டு வந்த நிலையில் அவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி அருகே திருக்கோவிலூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் அடிக்கடி திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதாக காவல்துறைக்கு புகார்கள் வந்து கொண்டே இருந்தன. இதனை தொடர்ந்து சம்பவ இடங்களில் அமைந்துள்ள சிசிடிவி காட்சிகளின் வீடியோவை ஆராய்ந்த போலீசார் இந்த தொடர் திரட்டில் ஈடுபட்டது கடலூர் மாவட்டத்தில் உள்ள நெல்லிக்குப்பத்தைச் சேர்ந்த பாஜக நிர்வாகியான அறிவழகன் என்பதை கண்டறிந்தனர். … Read more

தொடரும் சோகம்..!! மீண்டும் ஒரு ஆழ்த்துணை கிணற்றில் விழுந்த 8 வயது சிறுவன் பலி..!!

மத்தியப் பிரதேச மாநிலம் விதிஷா மாவட்டத்தில் கடந்த (மார்ச் 14) செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் 60 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த எட்டு வயது சிறுவனை மீட்கும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. இந்நிலையில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 8 வயது சிறுவன் உயிரிழந்துள்ளான். 60 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் 43 அடியில் சிக்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டான். மத்தியப் பிரதேசத்தின் அகமதுநகர் மாவட்டத்தில் இதேபோன்ற ஒரு சம்பவத்தில், ஐந்து … Read more

ஆஸ்கர் வென்ற ஆவணப்படத்தில் இடம்பெற்ற தம்பதி முதலமைச்சருடன் சந்திப்பு

ஆஸ்கர் விருது பெற்ற “தி எலிபேண்ட் விஸ்பரர்ஸ்” என்ற ஆவணப்படத்தில் இடம்பெற்ற பொம்மன் – பெல்லி தம்பதியை, சென்னை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இருவருக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொம்மன் – பெல்லி தம்பதி, தாயை பிரிந்த குட்டி யானைகளை தங்களது குடும்பத்தில் ஒருவர் போல நினைத்து வளர்த்ததாகவும், குறும்படம் ஆஸ்கர் வென்றது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தனர். ரகு குட்டி யானையை … Read more

17,705 மெகாவாட்: ஒரே மாதத்தில் 2வது முறை உச்சத்தை தொட்ட மின்சார பயன்பாடு!

சென்னை: தமிழகத்தில் நேற்று அதிகபட்சமாக 17,705 மெகாவாட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று (மார்ச்.14) மின்சார பயன்பாடு உச்சத்தை தொட்டுள்ளது. இது தொடர்பாக அமைச்சர் செந்தில்பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நேற்று 14/03/2023 தமிழகத்தில் மின் நுகர்வு அதிகபட்சமாக மெகாவாட் அளவில் 17,705 MW. இந்த தேவை எந்த மின் தடையுமின்றி ஈடு செய்யப்பட்டது. இதற்கு முந்தைய உட்சபட்ச நுகர்வு 10/03/2023ல் 17,647 MW”என்று அதில் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தின் தற்போதைய மின் தேவை 16,500 … Read more

தமிழகத்தில் பள்ளிகள் விடுமுறை எப்போது? அமைச்சர் அளித்த விளக்கம்!

தமிழ்நாட்டில் இன்ஃப்ளுயன்சா வைரஸ் பரவல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுமா என்ற கேள்விக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலளித்துள்ளார். கொரோனா பரவல் காரணமாக உலகம் முழுவதும் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. கொரோனா தடுப்பூசிகள் பரவலாக செலுத்தப்பட்ட பின்னரே கொரோனா பரவலிலிருந்து விடுதலை கிடைத்தது. இந்த சூழலில் இன்ஃப்ளுயன்ஸா ஹெச்1 என் 1 புதிய வகை வைரஸ் பரவல் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இந்த வைரஸால் பாதிக்கப்படுபவர்கள் தொண்டை வலி, உடல் வலி … Read more

சிங்கம்புணரி வாரச்சந்தையில் தீ விபத்து: ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்

சிங்கம்புணரி: சிங்கம்புணரி வாரச்சந்தையில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில், ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன. சிங்கம்புணரி பேருந்து நிலையம் அருகே வாரச்சந்தை உள்ளது. இந்த வாரச்சந்தை கட்டிடங்கள் கடந்த ஆண்டு ரூ.3 கோடி மதிப்பில் புனரமைப்பு செய்யப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இதில் 150க்கும் மேற்பட்ட கடைகளில் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து வியாபாரிகள் வியாழன்தோறும் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்து வந்தனர். இந்நிலையில் நேற்று மதியம் வாரச்சந்தையின் உட்பகுதியில் திடீரென தீப்பிடித்து எரியத் … Read more

பிரசாந்த் கிஷோர வெச்சி கேஸ் போட்ருக்காங்க; தமிழர்கள பத்தி அவருக்கு என்ன தெரியும்? – சீமான்

வடமாநில மக்கள் குறித்து பேசிய வீடியோவை திட்டமிட்டு பிரஷாந்த் கிஷோர் மூலம் பரப்பி வழக்குப்பதிவு செய்திருப்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியிருக்கிறார். ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி உடனடியாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னை பல்லவன் இல்லம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சீமான் கலந்து கொண்டு பேசினார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில், ”வடமாநில தொழிலாளர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர். சமீபத்தில் ராமேஸ்வரம் மற்றும் கரூரில் இதுபோன்று … Read more