#BREAKING:: குமரியில் பதற்றம்.. "சிறைச்சாலை முற்றுகை".. பாளையங்கோட்டை சிறைக்கு மாற்றப்படும் பாஜக நிர்வாகி..!!

சூரத் மாவட்ட நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்ட ராகுல் காந்தி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனை கண்டித்து கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள பாஜக மாவட்ட அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் பிரதமர் நரேந்திர மோடி குறித்து கடுமையான வார்த்தைகளால் விமர்சனம் செய்ததால் பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த … Read more

ஓடும் ரயிலில் பயணிகளுக்கு தீ வைத்த நபர் உத்தரபிரதேசத்தில் கைது..!!

கோழிக்கோடு மாவட்டம் எலத்தூர் அருகே, நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் ஆலப்புழா-கண்ணூர் இடையே சென்ற ஓடும் ரயிலில், மர்ம நபர் ஒருவர் சகபயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். தீ பற்றி எரிவதை பார்த்த சக பயணிகள் அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினர். அதற்குள்ளாக தீப்பற்றிய பயத்தில், ரயிலில் இருந்து குதித்த குழந்தை உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் காயமடைந்த 9 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். … Read more

தமிழகத்தில் புதிய நிலக்கரி திட்டங்களை நிறுத்தாவிட்டால் மாபெரும் போராட்டம்: வேல்முருகன் எச்சரிக்கை

சென்னை: “தமிழ்நாட்டில் புதிய நிலக்கரி திட்டங்களை விரிவுபடுத்துவதை ஒன்றிய அரசு நிறுத்தாவிட்டால், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கும்” என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் எச்சரித்துள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழ்நாட்டில் நெற்களஞ்சியமாக விளங்கும் டெல்டா பகுதிகளில் மீத்தேன், ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு மிகப் பெரிய எதிர்ப்பு எழுந்த பிறகு ஒன்றிய அரசு அதனை கைவிட்டது. தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள், அரசியல் அமைப்புகள், … Read more

ஆதார் – வாக்காளர் அட்டை இணைக்க முடிந்தது காலக்கெடு.. இனி அடுத்து என்ன..? முக்கிய "அப்டேட்"

சென்னை: ஆதார் எண்ணுடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைக்க விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைந்திருக்கும் நிலையில், தலைமைத் தேர்தல் அதிகாரி இதுதொடர்பான முக்கிய தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். இதுவரை தமிழகத்தில் 4.21 கோடி வாக்காளர்கள் தங்கள் ஆதார் எண்ணை, வாக்காளர் பட்டியலுடன் இணைக்க விண்ணப்பித்துள்ளதாகவும் அவர் கூறினார். வாக்காளர் பட்டியலில் இருந்து போலி வாக்காளர்கள், மரணமடைந்த வாக்காளர்கள் ஆகியோரை அடையாளம் கண்டு நீக்குவது தேர்தல் ஆணையத்துக்கு பெரும் சவாலாக இருந்து வந்தது. இதனால் … Read more

கலாஷேத்ரா பாலியல் சர்ச்சை: விசாரிக்க தனி குழு நியமனம்; 4 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்

கலாஷேத்ரா பாலியல் சர்ச்சை: விசாரிக்க தனி குழு நியமனம்; 4 ஆசிரியர்கள் சஸ்பெண்ட் Source link

அபாயகரமான வைரசாக மாறுகிறதா கோவிட்-19 ?

கோவிட் என்பது ஒரு அபாயகரமான வைரசாக மாறுகிறது. இந்தியாவில் இதுவரை 214 வெவ்வேறு வகையான வைரஸ்கள் கண்டறியப்பட்டுள்ளன. மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா, சமீபத்திய தொற்றுநோய்களை சமாளிக்க அரசாங்கம் தயாராக இருப்பதாக உறுதியளித்தார். ஐசியூ படுக்கைகள், ஆக்ஸிஜன் சப்ளை மற்றும் பிற முக்கியமான பராமரிப்பு ஏற்பாடுகள் உள்ளன. தயார்நிலை குறித்து வாராந்திர மதிப்பாய்வு இருப்பதாக அவர் கூறினார். கோவிட் எவ்வாறு பரவும் என்பதை கணிக்க இயலாது, ஆனால் இப்போது உருவாகியுள்ள துணை வைரஸ் வகைகள் பேரழிவை … Read more

வலியச்சென்று வம்பிழுத்த காங்கிரசாரை ஓட விட்ட பா.ஜ.கவினர் கல்வீச்சு..! பதிலுக்கு பதில் பறந்த கற்கள்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பாரதீய ஜனதா கட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட காங்கிரசாருக்கும், பாஜ.கவினருக்கும் இடையே நடந்த  கடுமையான கல்வீச்சு சம்பவம் தொடர்பாக 15 க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ள நிலையில், காரில் தப்பிச்சென்ற பாஜக மாவட்ட தலைவரை போலீசார் மடக்கிப்பிடித்த காட்சி வெளியாகி உள்ளது ராகுல் காந்தியை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ததை கண்டித்து நாகர்கோவிலில் திங்கட்கிழமை மாலை திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் நாகர்கோயிலில் அமைந்துள்ள பாஜக அலுவலகத்தை … Read more

ரூ.18 கோடியில் சீரமைக்கப்பட்ட சென்னை – செனாய் நகர் பூங்கா 12 ஆண்டுகளுக்கு பிறகு திறப்பு

சென்னை: சென்னையில் உள்ள மிகப் பழமையான பூங்காக்களில் ஒன்றான திரு.வி.க பூங்கா 12 ஆண்டுக்குப் பின் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. சென்னை மெட்ரோ ரயில் முதல் கட்ட திட்டம் 54.1 கி.மீ தொலைவிற்கு விம்கோ நகர் முதல் சென்னை விமான நிலையம் வரை, சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரை என இரண்டு வழித்தடங்களில் முழுமையாக செயல்பாட்டில் உள்ளது. இதில் செனாய் நகர் மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் காரணமாக செனாய் நகர், திரு.வி.க. பூங்கா 2011ம் … Read more

ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே அரசாங்கம் இந்தியாவில் திமுக மட்டும் தான் – ஈபிஎஸ்

முன்னாள் முதல்வர் தலைமையில் நடந்த அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொது செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கில் ஓ. பன்னீர்செல்வத்தின் மனு தள்ளுபடி செய்யப்பட்டு பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்களும், பொதுச்செயலாளர் தேர்தலும் செல்லும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் அதிமுக-வின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இருப்பினும், ஓபிஎஸ் அவ்வப்போது கழக ஒருங்கிணைப்பாளர் என்று குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில், … Read more

கொரோனா கட்டுப்பாடு: முகக்கவசம் அணிய தமிழக மக்களுக்கு அறிவுறுத்தல்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் XBB, BA2 வகை தொற்று வேகமாக பரவிக் கொண்டிருக்கிறது. இதனையொட்டி விமான நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வெளிநாட்டில் திரும்பும் பயணிகளுக்கு முதல்கட்ட பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மருத்துவமனைகளில் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலசோனை மேற்கொண்ட நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மருத்துவமனைகளில் இருக்க வேண்டிய மருத்துவ உபகரணங்கள் மற்றும் … Read more