Book Review: கடல்சார் தொல் வாழ்வியலைத் தேடும் “யாத்திரை” -எழுத்தாளர் ஆர்என் ஜோ டி குருஸ்

Writter RN Joe D Cruz: எழுத்தாளர் ஆர்.என்.ஜோ டி குருஸ் கடலோடியாக வாழ்ந்து வருபவர். இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழ் இலக்கிய உலகில் மீனவர்களின் வாழ்வியலை அழுத்தமாகப் பதிவு செய்து வருகிறார். தமிழ் இலக்கியத்தில் கடல்சார் வாழ்வியலைப் பதிவு செய்த எழுத்தாளர்களான ப.சிங்காரம், வண்ணநிலவன், ஹெப்சிபா யேசுதாசன், ராஜம் கிருஷ்ணன் போன்ற இன்னும் பிற எழுத்துலக ஆளுமைகளில் இருந்து தனித்துவமாக அடையாளப்படுத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. மேலும் சங்க காலம் தொட்டுச் சுமார் … Read more

வாலிபருக்கு திடீரென நடந்த அதிர்ச்சி சம்பவம்.! செல்போனால் நேர்ந்த விபரீதம்.!

சென்னையில் வீட்டு மாடியில் நின்று செல்போனில் பேசிக் கொண்டிருந்த வாலிபர் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஆதம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் தொழிலாளி ராமச்சந்திரன் (30). இவர் நேற்று இரவு வீட்டு மாடியில் நின்று செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்பொழுது எதிர்பாராத விதமாக நிலைதடுமாறி மாடியிலிருந்து ராமச்சந்திரன் கீழே, விழுந்துள்ளார். மேலும் இவர் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த ராமச்சந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் … Read more

பாம்பை பிடித்து துன்புறுத்தி கொன்று, அதை வீடியோவாக எடுத்து முகநூலில் பதிவிட்ட 3 பேர் கைது..!

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தில் பாம்பை பிடித்து துன்புறுத்தி கொன்று, அதன் தலையை கடித்து துப்பியதை வீடியோவாக எடுத்து முகநூலில் பதிவிட்ட நபர் உள்ளிட்ட 3 பேரை ஆற்காடு வனத்துறையினர் கைது செய்துள்ளனர். சின்ன கைனூர் பகுதியை சேர்ந்த எலக்ட்ரீசியன் மோகன் என்பவர், அவரது நண்பர்களான சூர்யா, சந்தோஷம் சேர்ந்து இந்த செயலில் ஈடுபட்ட நிலையில், வீடியோ இணையத்தில் பரவியது. இதுகுறித்து, வனவிலங்குகளுக்கான குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் வைல்ட் லைஃப் கிரைம் கண்ட்ரோலை சேர்ந்தவர்கள் ஆற்காடு வனச்சரக ரேஞ்சர் … Read more

தமிழகத்தில் தினசரி 11,000 கோவிட் பரிசோதனை: மாவட்ட வாரியாக இலக்கு நிர்ணயித்து அரசு உத்தரவு

சென்னை: தமிழகத்தில் தினசரி 11 ஆயிரம் கோவிட் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட நிர்வாகங்களுக்கு சுகாதாரத் துறை இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. தமிழகத்தில் ஒற்றை இலக்கத்தில் பதிவாகி வந்த தினசரி கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை தற்போது 150-ஐ கடந்துவிட்டது. இதன் காரணமாக, அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்களுக்கு வரும் நோயாளிகள், பார்வையாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ களப் பணியாளர்கள் அனைவரும் … Read more

அதிமுக ஓஹோ என வளரும் – எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை: திமுகவுக்கு சரியான போட்டி!

அதிமுகவில் புதிய உறுப்பினர்களைச் சேர்க்க கோரி விண்ணப்பங்களை அதிமுக பொதுச் செயலாளர் விநியோகித்தார். அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் கட்சியைப் பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் கட்சியில் புதிதாக ஐம்பது லட்சம் பேரை நியமிக்க வேண்டும் என்று கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். உறுப்பினர் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவங்களை முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், செங்கோட்டையன், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர், காமராஜ், பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் மாவட்டச் செயலாளர்களுக்கு … Read more

5 இளம் அர்ச்சகர்கள் பலி! குவிந்த போலீஸ்… முதலமைச்சர் இரங்கல் – என்ன நடந்தது?

Chennai Nanganallur Five Priest Died: சென்னை நங்கநல்லூர் அருகே உள்ள மூவரசன்பேட்டையில் தர்மலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த தர்மலிங்கேஸ்வரர் கோயிலில் பல்லாக்கு தூக்கிக் கொண்டு ஊர்வலமாக சென்ற அர்ச்சகர்களாக பணிபுரியும் இளைஞர்கள், பங்குனி உத்தர தீர்த்தவாரி நிகழ்வையொட்டி, கோயில் அருகே உள்ள குளத்தில் சென்றுள்ளனர். இதனையடுத்து, இளைஞர்கள் குளத்தில் இறங்கியபோது, 2 பேர் எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிகளுக்கு சென்றதால் தண்ணீரில் மூழ்கினர். இதனைப் பார்த்த அருகில் இருந்த மூவரும் தண்ணீரில் மூழ்கிய, இருவரை காப்பாற்ற … Read more

தனியார் பால் விலை உயர்வை அரசு கட்டுப்படுத்த வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: தமிழக அரசு உடனடியாக தனியார் பால் விலையைக் கட்டுப்படுத்தவும், ஆவின் பால் தட்டுப்பாட்டை போக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழகத்தில் தனியார் பால் விலை மீண்டும் லிட்டருக்கு ரூ.2 வீதமும், தயிர் விலை ரூ.8 வீதமும் உயர்த்தப்பட்டிருக்கின்றன. கடந்த 15 மாதங்களில் இது ஆறாவது விலை உயர்வு. கடந்த 3 மாதங்களில் இது இரண்டாவது … Read more

அமித் ஷா – தம்பிதுரை சந்திப்பு; இரட்டை இலை பிளஸ் ஓபிஎஸ் டீலிங்… கசிந்த அரசியல் சீக்ரெட்!

அதிமுகவின் உச்சபட்ட அதிகாரம் கொண்ட நாற்காலியில் அமர்ந்துவிட்டார். பொதுச் செயலாளர் பதவி கிடைத்துவிட்டதால் எல்லா பிரச்சினைகளும் தீர்ந்து விட்டதா? என்றால் இல்லை. சட்டப் போராட்டம் எஞ்சியுள்ளது. தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க வேண்டும். மக்கள் மன்றம் ஏற்றுக் கொள்ள வேண்டும். இன்னும் சொல்லப் போனால் ஏ பார்ம், பி பார்மில் கையெழுத்து போட எப்போது அங்கீகாரம் கிடைக்கிறதா? தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அப்போது தான் பொதுச் செயலாளர் என்ற பதவியும் உறுதிபடுத்தப்படும். இத்தகைய சூழலில் டெல்லியில் மத்திய உள்துறை … Read more

'காவிரிப் படுகையில் நிலக்கரி எடுக்க ஏலம்' போராட்டங்கள் எரிமலையாக வெடிக்கும்: வைகோ எச்சரிக்கை

Coal Blocks In Cauvery Delta: பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம், அதை சுற்றியுள்ள விளை நிலங்கள் பகுதிகளில் ஒன்றிய பாஜக அரசின் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டங்களை பாஜக அரசு உடனடியாக கைவிட வேண்டும் என ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ கோரிக்கை வைத்துள்ளார். மேலும் இந்த திட்டத்தை அமல்படுத்த முயற்ச்சித்தால், கடும் மக்கள் போராட்டம் வெடிக்கும் என எச்சரித்துள்ளார். ஒன்றிய பாஜக அரசின் காவிரிப் படுகையில் நிலக்கரி ஏலம் குறித்து வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார். அதுக்குறித்து பார்ப்போம். … Read more

மகன் இறந்த துக்கத்தில் தந்தை விபரீத முடிவு: திருமுல்லைவாயலில் சோகம்.!

திருமுல்லைவாயலில் மகன் இறந்த துக்கத்தில் தந்தை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருமுல்லைவாயல் பகுதியை சேர்ந்தவர் டிரைவர் கண்ணப்பன் (33). இவரது மனைவி மீனா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இவர்களது மூத்த மகன் ஜஸ்வந்த் (5), இறந்துவிட்டார். இதனால் மனமுடைந்த கண்ணப்பன் சரியாக வேலைக்குச் செல்லாமல், மதுவுக்கு அடிமையாகியுள்ளார். இதையடுத்து கணவன்-மனைவி இடையே இது தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு … Read more