அதிமுக ஓஹோ என வளரும் – எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை: திமுகவுக்கு சரியான போட்டி!

அதிமுகவில் புதிய உறுப்பினர்களைச் சேர்க்க கோரி விண்ணப்பங்களை அதிமுக பொதுச் செயலாளர் விநியோகித்தார். அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் கட்சியைப் பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் கட்சியில் புதிதாக ஐம்பது லட்சம் பேரை நியமிக்க வேண்டும் என்று கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். உறுப்பினர் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவங்களை முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், செங்கோட்டையன், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர், காமராஜ், பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் மாவட்டச் செயலாளர்களுக்கு … Read more

5 இளம் அர்ச்சகர்கள் பலி! குவிந்த போலீஸ்… முதலமைச்சர் இரங்கல் – என்ன நடந்தது?

Chennai Nanganallur Five Priest Died: சென்னை நங்கநல்லூர் அருகே உள்ள மூவரசன்பேட்டையில் தர்மலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த தர்மலிங்கேஸ்வரர் கோயிலில் பல்லாக்கு தூக்கிக் கொண்டு ஊர்வலமாக சென்ற அர்ச்சகர்களாக பணிபுரியும் இளைஞர்கள், பங்குனி உத்தர தீர்த்தவாரி நிகழ்வையொட்டி, கோயில் அருகே உள்ள குளத்தில் சென்றுள்ளனர். இதனையடுத்து, இளைஞர்கள் குளத்தில் இறங்கியபோது, 2 பேர் எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிகளுக்கு சென்றதால் தண்ணீரில் மூழ்கினர். இதனைப் பார்த்த அருகில் இருந்த மூவரும் தண்ணீரில் மூழ்கிய, இருவரை காப்பாற்ற … Read more

தனியார் பால் விலை உயர்வை அரசு கட்டுப்படுத்த வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: தமிழக அரசு உடனடியாக தனியார் பால் விலையைக் கட்டுப்படுத்தவும், ஆவின் பால் தட்டுப்பாட்டை போக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழகத்தில் தனியார் பால் விலை மீண்டும் லிட்டருக்கு ரூ.2 வீதமும், தயிர் விலை ரூ.8 வீதமும் உயர்த்தப்பட்டிருக்கின்றன. கடந்த 15 மாதங்களில் இது ஆறாவது விலை உயர்வு. கடந்த 3 மாதங்களில் இது இரண்டாவது … Read more

அமித் ஷா – தம்பிதுரை சந்திப்பு; இரட்டை இலை பிளஸ் ஓபிஎஸ் டீலிங்… கசிந்த அரசியல் சீக்ரெட்!

அதிமுகவின் உச்சபட்ட அதிகாரம் கொண்ட நாற்காலியில் அமர்ந்துவிட்டார். பொதுச் செயலாளர் பதவி கிடைத்துவிட்டதால் எல்லா பிரச்சினைகளும் தீர்ந்து விட்டதா? என்றால் இல்லை. சட்டப் போராட்டம் எஞ்சியுள்ளது. தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க வேண்டும். மக்கள் மன்றம் ஏற்றுக் கொள்ள வேண்டும். இன்னும் சொல்லப் போனால் ஏ பார்ம், பி பார்மில் கையெழுத்து போட எப்போது அங்கீகாரம் கிடைக்கிறதா? தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அப்போது தான் பொதுச் செயலாளர் என்ற பதவியும் உறுதிபடுத்தப்படும். இத்தகைய சூழலில் டெல்லியில் மத்திய உள்துறை … Read more

'காவிரிப் படுகையில் நிலக்கரி எடுக்க ஏலம்' போராட்டங்கள் எரிமலையாக வெடிக்கும்: வைகோ எச்சரிக்கை

Coal Blocks In Cauvery Delta: பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம், அதை சுற்றியுள்ள விளை நிலங்கள் பகுதிகளில் ஒன்றிய பாஜக அரசின் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டங்களை பாஜக அரசு உடனடியாக கைவிட வேண்டும் என ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ கோரிக்கை வைத்துள்ளார். மேலும் இந்த திட்டத்தை அமல்படுத்த முயற்ச்சித்தால், கடும் மக்கள் போராட்டம் வெடிக்கும் என எச்சரித்துள்ளார். ஒன்றிய பாஜக அரசின் காவிரிப் படுகையில் நிலக்கரி ஏலம் குறித்து வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார். அதுக்குறித்து பார்ப்போம். … Read more

மகன் இறந்த துக்கத்தில் தந்தை விபரீத முடிவு: திருமுல்லைவாயலில் சோகம்.!

திருமுல்லைவாயலில் மகன் இறந்த துக்கத்தில் தந்தை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருமுல்லைவாயல் பகுதியை சேர்ந்தவர் டிரைவர் கண்ணப்பன் (33). இவரது மனைவி மீனா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இவர்களது மூத்த மகன் ஜஸ்வந்த் (5), இறந்துவிட்டார். இதனால் மனமுடைந்த கண்ணப்பன் சரியாக வேலைக்குச் செல்லாமல், மதுவுக்கு அடிமையாகியுள்ளார். இதையடுத்து கணவன்-மனைவி இடையே இது தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு … Read more

“முதல்வர் கடிதம் எழுதுவதால் நிலக்கரி சுரங்கப் பிரச்சினை தீராது. ஏனெனில்…” – இபிஎஸ் விளக்கம்

சென்னை: “நிலக்கரி சுரங்க விவகாரத்தை, திமுக எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் எழுப்ப வேண்டும். அப்போதுதான் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணமுடியும். அதை விடுத்து கடிதம் எழுதுவது, அமைச்சரை சந்தித்தார் என்பதெல்லாம் வெறும் சாக்குபோக்கு சொல்வதுதான்” என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். சட்டப்பேரவை வளாகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி புதன்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “ஏற்கெனவே என்எல்சி நிறுவனத்துக்காக கிட்டத்தட்ட 105 கிராமங்களில் நிலம் கையகப்பட்டுத்தப்பட்டுவிட்டன. அந்தப் பகுதியில் உள்ள விவசாயிகளை … Read more

தமிழ் வழி படித்தவர்கள் உரிமை பறிக்கப்படுகிறதா? வேடிக்கை பார்க்கிறாரா முதல்வர்?

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் ஆணையை நிறைவேற்ற வேண்டும் என பாமக நிறுவனர் வலியுறுத்தியுள்ளார் இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய முதுநிலை பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆசிரியர் பணி மறுக்கப்பட்டிருக்கிறது. ஆசிரியர் தேர்வு வாரியமும், பள்ளிக் கல்வித்துறையும் செய்த தவறுகள் தான் அனைத்துக் குழப்பங்களுக்கும் காரணம் எனும் நிலையில், அதற்காக தவறு இழைக்காத தமிழ் வழி பட்டதாரிகளை … Read more

சாதிப்பிரிவுகள் அதிகரித்துவிட்டன… அதுதான் பிரச்னையே – ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து!

Governor RN Ravi Speech: கோவையில் உள்ள கே.ஜி. பவுண்டேஷன் அமைப்பின் சார்பில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஆளுமைகளுக்கு விருதுகள் வழங்கும் விழா சரவணம்பட்டியில் உள்ள கே.ஜி.ஐ.எஸ்.எல் (KGISL) வளாகத்தில் இன்று (ஏப். 5) நடைபெற்றது. இந்நிகழ்வில், சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார்.  ‘கம்பர் போன்று’ இந்நிகழ்வில் உரையாற்றிய ஆர்.என். ரவி,”சமூகத்திற்கு பல்வேறு வகையில் பங்களிப்புகளை செலுத்தி வரும், இன்று விருது பெற்ற ஆளுமைகளுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். … Read more

திருச்சி மாத்தூர் அருகே பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து.. 22 மாணவ, மாணவிகள் காயம்!

திருச்சி மாவட்டம் மாத்தூர் அருகே மாணவ, மாணவிகளை ஏற்றிக்கொண்டு வேகமாக வந்த கேந்திர வித்யாலயா பள்ளி வேன், சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்ததில், அதிலிருந்த 22 பேர் காயமடைந்தனர். குறுகலான சாலையில் வேனை வேகமாக இயக்கியதால் விபத்து நேரிட்டதாக தெரியவந்துள்ள நிலையில், வேன் டிரைவர் பக்ருதீன் என்பவர் விசாரணைக்குப்பிறகு கைது செய்யப்படுவார் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Source link