புதுச்சேரி திமுக எம்.எல்.ஏ.வுக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

சென்னை: புதுச்சேரி மாநிலம் நிரவி தொகுதி திமுக எம்எல்ஏவுக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. கடந்த 2021ம் ஆண்டு புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில், நிரவி – டி.ஆர்.பட்டிணம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட என். நாக தியாகராஜன் 5511 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். தோல்வியடைந்த பாஜக வேட்பாளர் மனோகரன், திமுக எம்எல்ஏ, நாக தியாகராஜனின் வெற்றி செல்லாது என அறிவிக்க கோரி தேர்தல் வழக்கு தொடர்ந்திருந்தார். அவரது மனுவில், … Read more

இந்து சமய அறநிலையத்துறை புதிய அறிவிப்புகள்… சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர்பாபு வெளியீடு!

தமிழக சட்டமன்றத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு பேசுகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு பொறுப்பேற்ற பின்னர், கடந்த 2021 – 22, 2022 – 23 மற்றும் 2023 – 24 மானியக் கோரிக்கை அறிவிப்புகளில் 4,137 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 16,108 பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. கோயில் திருப்பணிகள் உபயதாரர்கள் தாமாக முன் வந்து 583 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருப்பணிகளை மேற்கொள்கின்றனர். இந்த ஆண்டு மொத்தம் 249 அறிவிப்புகள். … Read more

தனியார் பள்ளிகளில் இலவசக்கல்வி… நாளை முதல் விண்ணப்பிக்கலாம்!!

கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகளில் சேர நாளை முதல் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து, வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி 2023 – 24ஆம் கல்வியாண்டிற்கு 25% இட ஒதுக்கீட்டின் கீழ் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் நுழைவுநிலை வகுப்பில் சேர்க்கைக்கு வரும் ஏப்ரல் 20ஆம் தேதி முதல் மே 18ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். rte.tnschools.gov.in … Read more

“சொத்துப் பட்டியல் விவகாரத்தில் நானும் அண்ணாமலை மீது வழக்கு தொடர்வேன்” – கனிமொழி

மதுரை: “சொத்துப் பட்டியல் விவகாரத்தில் நானும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது நிச்சயம் வழக்கு தொடருவேன். அவர் பதில் சொல்லியாக வேண்டும்” என்று கனிமொழி எம்.பி கூறினார். தூத்துக்குடி செல்ல சென்னையிலிருந்து விமானம் மூலம் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி இன்று ( ஏப்.19) மாலை மதுரைக்கு வந்தார். அப்போது விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “திமுகவினருக்கு எதிராக சொத்துப் பட்டியல் குறித்து தகவல் வெளியிட்ட பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு … Read more

ஸ்டாலினுக்கு போன் செய்த மம்தா.. ‘பஞ்சாயத்த கூட்டுங்க’.. அப்படி என்ன பேசிகிட்டாங்க.?

ஆளுநர்கள் செயல்பாடுகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தை தொடர்ந்து மம்தா பானர்ஜி இன்று தொடர்பு கொண்டார். ரயில் நிலையம் முன்பு தமிழக ஆளுநர் ரவியை கண்டித்து மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்!! அரசு VS ஆளுநர் பாஜக நேரடியாகவோ அல்லது கூட்டணியிலோ ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளுநர்களின் செயல்பாடு என்பது பெரும் விவாதத்திற்கு உள்ளாகி வருகிறது. எதிர்கட்சி தலைவர்கள் ஆளும் மாநிலங்களில், அரசு தரப்பில் கொண்டு வரும் முக்கியமான கோப்புகளில் கையெழுத்திடாமல் ஆளுநர்கள் செயல்பட்டு வருகின்றனர். … Read more

அண்ணாமலைக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கெடு!!

அவதூறு கருத்து பரப்பியதற்கு அண்ணாமலைக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரூ.50 கோடி இழப்பீடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். முன்னதாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பில் அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதில், திமுக கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பது, திமுகவின் இரண்டு கோடி உறுப்பினர்களில் ஒவ்வொருவரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதற்கு சமம். இதனால் அமைப்புச் செயலாளர் என்ற முறையில், எங்கள் கட்சிக்காரர் உங்கள் மீது அவதூறுக்காக தகுந்த வழக்குத் தொடர உரிமை உண்டு. எனவே, … Read more

இலவச ஏர் ஆம்புலன்ஸ்களை இயக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரிய வழக்கு தள்ளுபடி

சென்னை: நாடு முழுவதும் இலவச ஏர் ஆம்புலன்ஸ் சேவையை வழங்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா என்பவர் தாக்கல் செய்த மனுவில், “சாலை விபத்துகளில் உலகிலேயே இந்தியா முதலிடத்தில் உள்ளது. இதனால் விபத்து காலத்தில் கோல்டன் ஹவர்ஸ் எனப்படும் நேரத்தில் உடனடி சிகிச்சை கிடைக்காமல் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் ஏர் ஆம்புலன்ஸ் … Read more

‘பல் பிடுங்கி’ பல்வீர் சிங்.. டிஜிபி எடுத்த சூப்பர் ஆக்‌ஷன்.. நியாயம் கிடைக்குமா.?

காவல் அதிகாரி பல்வீர் சிங் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டுள்ளார். கீழ விழுந்து பல் உடைஞ்சுதா? என்ன நடந்தது? சூர்யா பேட்டி! பல்பிடுங்கி போலீஸ் விசாரணையின் போது பாத்ரூமில் வழுக்கி விழுந்து கை, கால்கள் உடைந்த சம்பவங்கள் நடந்ததுண்டு. ஆனால் வழுக்கி விழுந்து பற்கள் உடைந்த சம்பவத்தை திருநெல்வேலி மாவட்டத்திற்கு அறிமுகப்படுத்தியவர் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பல்வீர்சிங். அம்பாசமுத்திரம் பகுதியில் விசாரணைக்காக அழைத்து வரப்படுபவர்களை கட்டிங் பிளேயரால் பற்களை பிடுங்குவது, வாய்க்குள் ஜல்லி கற்களை கொட்டி … Read more

அண்ணாமலை ஒரு நகைச்சுவை மன்னர் – தொல். திருமாவளவன்!

பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை ஒரு நகைச்சுவை மன்னர் என வி.சி.க.தலைவர் தொல். திருமாவளவன் பேட்டி அளித்துள்ளார்.