வடமாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பின்விளைவு தெரியாமல் எப்படி பாஜ நிர்வாகி பதிவிட்டார்? ஐகோர்ட் கிளை நீதிபதி சரமாரி கேள்வி

மதுரை: வடமாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி வெளியிட்ட விவகாரத்தில் சமூகத்தின் உயர் பொறுப்பில் உள்ள பாஜ நிர்வாகி, பின்விளைவு தெரியாமல் எப்படி பதிவிட முடியும். ஒவ்வொருவருக்கும் சமூக பொறுப்பு இருக்க வேண்டுமென நீதிபதி கூறியுள்ளார். தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பியதாக உத்தரப்பிரதேச பாஜ செய்தி தொடர்பாளர் பிரசாந்த் குமார் உம்ராவ் மீது தூத்துக்குடி மத்தியம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் கேட்டு பிரசாந்த்குமார் உம்ராவ், ஐகோர்ட் மதுரை … Read more

விதவை உதவித் தொகை அதிகரிப்பு… பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் : புதுவை முதல்வர் புதிய அறிவிப்பு

விதவை உதவித் தொகை அதிகரிப்பு… பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் : புதுவை முதல்வர் புதிய அறிவிப்பு Source link

எந்த அமைப்புக்கு விசாரணையை மாற்றினாலும் எதுவும் நடக்கப் போவதில்லை – மதுரை உயர்நீதிமன்றம் கிளை.!

மதுரை உயர்நீதிமன்றத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வேங்கைவயல் கிராமத்தில் உள்ள நீர்த்தேக்க தொட்டியில் மலம் கழித்த கழிவு நீர் கலந்து தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி புதுக்கோட்டை ஆலங்குடி பகுதியைச் சேர்ந்த திருமுருகன் என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வேங்கைவயல் இறையூர் பஞ்சாயத்தில் சுமார் பத்தாயிரம் லிட்டர் அளவு கொண்ட நீர்த்தக்க தொட்டி அமைந்துள்ளது. இந்தத் தொட்டியில் கழிவு நீர் கலக்கப்பட்டுள்ளது. இந்த நீரை குடித்த குழந்தைகளுக்கு … Read more

தென்காசியில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 2 பேர் போக்சோவில் கைது!

தென்காசியில் நண்பர்களுடன் சேர்ந்து சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக காதலன் உள்ளிட்ட இருவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். தென்காசி ஆட்டோ ஓட்டுநரான மாதவன் என்பவர் 17 வயது சிறுமி ஒருவரை காதலித்துள்ளார். கடந்த 14-ஆம் தேதி அவர் அச்சிறுமியை தென்காசி – இலஞ்சி சாலையிலுள்ள சிற்றாற்று பாலம் பகுதிக்கு அழைத்துச் சென்று தன் நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. தென்காசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமி அளித்த புகாரின் … Read more

இருதய நோயால் பாதிக்கப்பட்ட பெருநாழி சிறுவன் – முதல்வரிடம் உதவிகேட்ட 24 மணி நேரத்திற்குள் தேடிவந்த அதிகாரிகள்

ராமநாதபுரம்: கமுதி அருகே பெருநாழியைச் சேர்ந்த 4 வயது சிறுவன் இருதய நோய் சிகிச்சைக்கு முதல்வர் உதவி செய்ய வேண்டும் என வீடியோ வெளியிட்ட 24 மணி நேரத்தில் சுகாதாரத்துறையினர் வீட்டிற்கு வந்து சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனர். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பெருநாழி சண்முகபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ரஞ்சித், சரண்யா தம்பதியினர். இவர்களுக்கு கஜன் (4) என்ற மகன் உள்ளார். சிறுவன் கஜனுக்கு இதயத்தில் துளை மற்றும் இதயத்திற்கு வந்து செல்லும் ரத்தம் மாற்று குழாயில் … Read more

ஸ்டாலினுக்கு கல்தா.. அகிலேஷ் புது ரூட்.. பிரதமர் கனவு அம்போ.!

எதிர்கட்சிகளின் ஒற்றுமை குறித்து பேசி வரும் தமிழக முதல்வர் ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட , மூன்றாம் கூட்டணிக்கு ஆதரவளித்தது தற்போது பேசு பொருளாகியுள்ளது. வருகிற 2024 நாடாளுமன்ற தேர்தல் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. மீண்டும் மூன்றாவது முறையாக ஆட்சியமைக்க பிரதமர் மோடியும், பாஜகவும் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதில் முக்கியமானது எதிர்கட்சிகளின் ஒற்றுமையை சீர்குழைப்பது. காங்கிரஸ், திமுக, பீகாரின் நிதிஷ்குமார் ஆகியோர் காங்கிரஸ் அல்லாத மூன்றாவது முன்னனி கூட்டணி பாஜகவிற்கு … Read more

பரமக்குடி மாணவி கூட்டு பலாத்கார வழக்கு முக்கிய ஆவணங்கள் பறிமுதல்: அதிமுக கவுன்சிலருக்கு சொந்தமான இடங்களில் நடந்த சோதனையில் சிக்கியது

ராமநாதபுரம்: பரமக்குடி பள்ளி மாணவி கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் கைதான அதிமுக கவுன்சிலர் உட்பட 5 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், முக்கிய தடயங்களை சிக்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் 9ம் வகுப்பு படித்து வரும் பள்ளி மாணவி கூட்டு பலாத்காரம் செய்த வழக்கில், பரமக்குடியை சேர்ந்த நகராட்சி 3வது வார்டு அதிமுக உறுப்பினர் சிகாமணி (44),  மறத்தமிழர் சேனை அமைப்பின் நிறுவனர் புதுமலர் பிரபாகரன் (42), ஜவுளிக்கடை உரிமையாளர் ராஜா முகம்மது(34), … Read more

மாமல்லபுரம் டு கன்னியாகுமரி: ரூ 24000 கோடிக்கு கிழக்கு கடற்கரை சாலை திட்ட மதிப்பீடு ரெடி

மாமல்லபுரம் டு கன்னியாகுமரி: ரூ 24000 கோடிக்கு கிழக்கு கடற்கரை சாலை திட்ட மதிப்பீடு ரெடி Source link

தமிழக மீனவர்கள் 10 பேரை கைது செய்த இந்திய கடலோர காவல்படை.. காரனம் என்ன?

தடை செய்யப்பட்ட டால்பின் மற்றும் சுறாவகை மீன்களை வேட்டையாடியதற்காக தமிழக மீனவர்கள் 10 பேரை இந்திய கடலோர காவல் படையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூர் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் ஆண்டனி. இந்த நிலையில் இவருக்கு சொந்தமான விசைப்படகில் 10-க்கும் மேற்பட்ட மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளனர். இந்த நிலையில், குஜராத் ஆழ்கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இந்திய கடலோர காவல் படையினர் தமிழக மீனவர்கள் படகில் சோதனை நடத்தினர். அந்த படகில் … Read more

10 வருடம் கழித்து ஒரு ஹிட்டு கொடுத்த சசிக்கு வந்த சோதனை..! அயோத்தி பட கதை திருட்டாம்.?

சசிக்குமார் நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் அயோத்தி படத்தின் கதை சிங்கப்பூர் சரவணன் என்ற தனது நாவலை தழுவி படமாக்கப்பட்டிருப்பதாக கூறி நாவலாசிரியர் மில்லத் அகமது குற்றம்சாட்டியுள்ளார். குட்டிப்புலிக்கு அப்புறம் பாலுமகேந்திராவுக்காக தலைமுறைகள் என்ற படத்தை தயாரித்து வழுக்கிய சசிக்குமார், பாலாவின் தாரைதப்பட்டையால் பெரும் கடனாளியானார். அந்த கடன்களை அடைக்க கதாநாயகன், கவுரவ வேடம், குணச்சித்திர நடிகர் என்று 21 படங்கள் நடித்த சசிக்குமாரின் திரை வாழ்க்கையில் 10 வருடங்கள் கழித்து அண்மையில் வெளியான அயோத்தி … Read more