சாப்பாடு இல்லை என்று சொன்னதால் ஓட்டலை சூறையாடிய இளைஞர்கள்..!

தென்காசி மாவட்டத்தில், ஓட்டலுக்கு நள்ளிரவில் வந்த இளைஞர்களிடம் சாப்பாடு காலியாகிவிட்டது என்று ஓட்டல் உரிமையாளர் சொன்னதால் ஆத்திரமடைந்து அங்குள்ள பொருட்களை அடித்து நொறுக்கும் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. குற்றாலம் மெயின் அருவிக்கு செல்லும் பகுதியில் ராதாகிருஷ்ணன் என்பவர் நடத்திவரும் ஒட்டலுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை காசிமேஜர்புரம் கோயில் திருவிழாவில் கலந்து கொண்ட இளைஞர்கள் சாப்பாடு கேட்டு தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து நீலகண்டன் புகார் அளித்ததையடுத்து, ஐந்து பேரை கைது செய்த போலீசார் மேலும் சிலரை தேடி … Read more

கடலுக்குள் கருணாநிதி பேனா சின்னம் வைக்கக் கூடாது: அன்புமணி ராமதாஸ் கருத்து

திருவண்ணாமலை: “பலரும் சின்னங்கள் வைத்து கடலை நாசப்படுத்திவிடுவார்கள் என்பதால் கடலில் பேனா வைப்பது முன்னுதாரணமாக இருக்கக் கூடாது” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாமக 2.0 விளக்க பொதுக்கூட்டம் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த மாங்கால் கூட்டுச்சாலையில் நடைபெற்றது. கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் சிறப்புரையாற்றினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “குட்காவுக்கு விதிக்கப்பட்ட தடை சட்டத்தை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இதில் சட்ட திருத்தம் செய்ய வேண்டும். மத்திய அரசு … Read more

ஏழை மக்களை வஞ்சிக்கும் மோடி அரசின் பட்ஜெட் – சீமான் கண்டனம்!

மோடி அரசின் நிதிநிலை அறிக்கை என்பது வளர்ச்சிக்கு உதவாத வழக்கம் போல மக்களை வஞ்சிக்கும் நிதிநிலை அறிக்கையே என்று சீமான் தெரிவித்துள்ளார். இது குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய ஒன்றிய பாஜக அரசின் 2023 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் நாட்டின் வளர்ச்சியை முன்னிறுத்தும் எவ்வித திட்டங்களும் இல்லாதது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது. கடந்த 9 ஆண்டு கால மோடி ஆட்சியில் வெளியிடப்பட்ட நிதிநிலை அறிக்கைகளைப் போலவே இந்த நிதிநிலை அறிக்கையும் … Read more

திருப்பூர் நகைக்கடை கொள்ளை வழக்கு: குண்டர் சட்டத்தை எதிர்த்து கொள்ளையர்களின் மனு தள்ளுபடி

திருப்பூர் நகைக்கடை கொள்ளை வழக்கில் குண்டர் தடுப்பு சட்டம் போடப்பட்டதை ரத்து செய்யக் கோரி வடமாநில கொள்ளையர்கள் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. திருப்பூர் யூனியன் மில் சாலையில் உள்ள ஜே.கே ஜுவல்லரி நகை கடையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கடையை உடைத்து 3 கிலோ தங்கம், 28 கிலோ வெள்ளி, ரூ.25 லட்சம் ரொக்கம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இது தொடா்பாக கடையின் உரிமையாளர் ஜெயகுமாா் திருப்பூா் வடக்கு காவல் … Read more

தமிழ்நாட்டில் பல்வேறு ஊர்களில் மிதமான மழை: அலுவலகம், பள்ளி, கல்லூரி செல்வோர் கடும் பாதிப்பு

புதுக்கோட்டை: தமிழ்நாட்டில் பல்வேறு ஊர்களில் மிதமான மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான பெருங்குடி, வில்லாபுரம், அவனியாபுரம், சிந்தாமணி, சாமநத்தம் பகுதிகளில் காலை முதல் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. சாரல் மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 1 மணி நேரத்திற்கு மேலாக சாரல் மழை பெய்து வருகிறது. சோதனை சாவடி, … Read more

இதை கருணாநிதியின் நினைவிடத்தில் வெச்சுருங்க: முதல்வரிடம் பேனா வழங்கிய சிறுமி கோரிக்கை

முதல்வர் ஸ்டாலினிடம் பேனா ஒன்றை கொடுத்த 4 ஆம் வகுப்பு மாணவி, இதை கலைஞரின் நினைவிட்த்தில் வைத்து விடுங்கள் என்று சொன்னார். இதைக் கேட்டு முதல்வர் நெகிழ்ச்சியுற்றார். துமிழக முதல்வர் ஸ்டாலின் வேலூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆய்வு நடத்தி வருகிறார், இந்நிலையில், வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வை முடித்துவிட்டு முதல்வர் வெளியே வந்தார். அப்போது வேலூர் மாவட்டம் காட்பாடி வஞ்சூர் பகுதியைச் சேர்ந்த யாழினி என்ற 4 ஆம் வகுப்பு மாணவி, முதலமைச்சரிடம் பேனா … Read more

க்ளப்ஹவுஸ் ஆப் மூலம்.. ஆபாச சேட்.. 14 வயது சிறுமியிடம் அத்துமீறிய இளைஞரை அள்ளிய போலீஸ்.! 

சென்னை அயனாவரத்தில் 16 வயது சிறுமி காணாமல் போய்விட்டதாக அவருடைய தாய் போலீசில் புகார் கொடுத்தார். இதன் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் சிறுமி தாயின் செல்போனை எடுத்துக்கொண்டு சென்றார் என்பது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து போலீசார் அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசிய நிலையில் சிறுமி மறுநாளே வீட்டிற்கு வந்துள்ளார். பின் சிறுமியிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் சிறுமிக்கு கிளப் ஹவுஸ் ஆப் மூலமாக நிறைய நண்பர்கள் இருந்ததும் அப்படி ஒருவர் தான் … Read more

நீங்க படிச்சது உண்மைதான்… காதலர் தினம் கொண்டாட ஆணுறை இலவசமாக தரும் அரசு..!

காதலர் தினத்தைக் கொண்டாட ஆணுறைகள் இலவசமாக வழங்கப்படும் என்று தாய்லாந்து அரசு அறிவித்துள்ளது. தாய்லாந்து நாட்டுக்கு காதலர்களின் வருகை அதிகமாக இருக்கும். கேளிக்கை விடுதிகள், மசாஜ் நிலையம் என யூத்களின் சொர்க்கமாகவே தாய்லாந்தை மாற்றி, சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச அளவில் பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த காதலர் தினத்தில் காதலர்கள் சந்தித்துக் கொண்டு ஒருவருக்கு ஒருவர் அன்பை பரிமாறி கொள்வார்கள். பரிசுப்பொருட்களையும் அள்ளிக் கொடுப்பர். மேலும் ஆட்டம், … Read more

காப்புக்காடுகளைச் சுற்றி குவாரிகள் அமைக்கும் விதிகளில் தளர்வு – அரசாணையை எதிர்த்த வழக்கில் அரசு பதிலளிக்க உத்தரவு

சென்னை: தமிழ்நாட்டில் காப்புக்காடுகளைச் சுற்றி ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு குவாரி நடவடிக்கைகள் மேற்கொள்ள விதிக்கப்பட்டிருந்த தடையை தளர்த்தி பிறப்பிக்கப்பட்ட அரசாணையை எதிர்த்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள தேசிய பூங்காக்கள், சரணாலயங்கள், காப்புகாடுகள் அமைந்துள்ள பகுதிகளைச் சுற்றி ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு எந்த குவாரி நடவடிக்கைகளும் மேற்கொள்ளக் கூடாது என 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் … Read more