2 மடங்கு உயரப்போகுது ஆட்டோ கட்டணம்.. வெளியானது அதிர்ச்சி தகவல்..!

ஆட்டோக்களில் குறைந்தபட்ச கட்டணத்தை 50 ரூபாயாக உயர்த்த வேண்டும் என மனிதநேய தொழிலாளர் சங்கம் சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மனிதநேய தொழிலாளர் சங்க மாநில செயலாளர் அ.சாதிக் பாஷா வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆட்டோக்களில் குறைந்தபட்ச கட்டணமாக 25 ரூபாயும், கிலோ மீட்டருக்கு 12 ரூபாயும் தமிழக அரசின் சார்பில் 2013-ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்டது. அப்போதைய பெட்ரோல் விலை ரூ.60.50. ஆனால், தற்போது பெட்ரோல் விலை ரூ100.19 ஆக உயர்ந்துள்ளது. ஆட்டோவை ஆண்டுதோறும் புதுப்பிக்கும் … Read more

மனநலம் பாதிக்கப்பட்ட மகனை விடுதியில் சேர்க்க கோரி ஆட்சியர் அலுவலகத்தில் தாயார் தீக்குளிக்க முயற்சி..!

காஞ்சிபுரத்தில், மனநலம் பாதிக்கப்பட்ட மகனுடன் ஆட்சியர் அலுவலகம் வந்த பெண்மணி, திடீரென மகனுடன் சேர்ந்து தீக்குளிக்க முயன்றார். கைம்பெண்ணான லட்சுமி, மனநலம் பாதிக்கப்பட்ட 23 வயது மகனை பனையூரிலுள்ள தனியார் விடுதியில் இலவசமாக தங்க வைத்துள்ளார். அங்கு அவருக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் விடுதி நிர்வாகிகள் அவரை அழைத்து சென்றுவிடுமாறு லட்சுமியிடம் கூறியுள்ளனர். மகனை மீண்டும் விடுதியில் சேர்த்துக்கொள்ள பரிந்துரைக்குமாறு ஆட்சியரிடம் மணு கொடுக்க வந்த லட்சுமி, திடீரென மண்னெண்ணெய்யை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அங்கிருந்த … Read more

விசைத்தறி தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்: ராஜபாளையத்தில் தினமும் ரூ.10 லட்சம் வரை உற்பத்தி பாதிப்பு

ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே தளவாய்புரம் பகுதியில் கூலி உயர்வு கேட்டு விசைத்தறி தொழிலாளர்கள் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். ராஜபாளையம் அருகே தளவாய்புரம் பகுதியில் 500க்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்கள் இயங்கி வருகிறது. இதில் சேலை ரகங்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த விசைத்தறி கூடங்களில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த சுமார் 2 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர். விசைத்தறி தொழிலாளர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு வழங்கப்படும். அதன்படி 2018 … Read more

சேலம் திமுகவில் அதிரடி நீக்கம்… சிக்கிய ஒன்றிய செயலாளர் மாணிக்கம்!

சேலம் கிழக்கு மாவட்டம் தெற்கு ஒன்றியத்தை சேர்ந்த கழக செயலாளர் டி.மாணிக்கம். இவர் பஞ்சாயத்து தலைவராகவும் இருக்கிறார். இந்நிலையில் திருமலைகிரி பகுதியில் கோயிலுக்குள் சென்ற தலித் இளைஞரை டி.மாணிக்கம் கடுமையாக திட்டியுள்ளார். உனக்கு யார் இவ்வளவு தைரியம் கொடுத்தது? உன் பல்லை உடைத்து விடுவேன். திமுக பிரமுகர் செயல் நீ என்ன பெரிய புத்திசாலினு நினைத்தாயா? மற்றவர்கள் யாரும் இங்கு நன்றாக வாழ வேண்டும் என விரும்பவில்லையா? உன்னை யார் கோயிலுக்கு செல்ல சொன்னது? என சரமாரியாக … Read more

புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய வாக்காளர் அடையாள அட்டைகள்!

சென்னை: 16 லட்சம் புதிய வாக்காளர் அடையாள அட்டைகள் புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் அச்சிடப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ திங்கள்கிழமை தெரிவித்துள்ளார். ஈரோடு (கிழக்கு) சட்டமன்றத் தொகுதியில் முதற்கட்டமாக வாக்காளர்களுக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும் என்றும், பழைய அட்டை வைத்திருப்பவர்கள் புகைப்படம் மற்றும் இதர விவரங்களை மாற்றி புதிய அட்டையைப் பெறலாம் என்றும் அவர் தெரிவித்தார். புதிய வாக்காளர் அடையாள அட்டையில் QR குறியீடு வசதியுடன் மிகச் சிறிய எழுத்து … Read more

அம்மன் கோயிலில் பொங்கல் வைக்க ஒரு பிரிவினருக்கு அனுமதி மறுப்பு: தண்டராம்பட்டு அருகே போலீஸ் குவிப்பு

தண்டராம்பட்டு: தண்டராம்பட்டு அருகே இன்று அம்மன் கோயிலில் பொங்கல் வைக்க அனுமதி மறுத்தவர்களிடம் எஸ்பி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். பதற்றம் நிலவுவதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த தென்முடியனூர் ஊராட்சியில் அறநிலையத்துறைக்கு சொந்தமான முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. இந்த ஊராட்சியில் பல்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். இதில் ஒரு சமுதாயத்ைத சேர்ந்தவர்கள் அறநிலையத்துறைக்கு சொந்தமான முத்துமாரியம்மன் கோயிலில் பொங்கல் வைத்து சுவாமி கும்பிட அனுமதிக்கும்படி அறநிலையத்துறையிடம் மனு அளித்துள்ளனர். இதையறிந்த மற்றொரு … Read more

‘பக்கத்து வீட்டுக்காரருடன் தகராறு.. பாஜகவில் சேரப்போகிறேன்’ – தாடி பாலாஜியின் மனைவி பேட்டி

லஞ்சம் கேட்டு கொடுக்காததால் போலீசார் தன்னை கைது செய்ததாக தாடி பாலாஜியின் மனைவி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். சென்னை கொளத்தூர் சாஸ்திரி நகர் தெருவில் வசித்து வரும் நடிகர் தாடி பாலாஜியின் மனைவி நித்தியாவுக்கும், வீட்டருகே வசித்து வரும் ஓய்வுபெற்ற ஆசிரியர் மணி என்பவருக்கும் இடையே சில நாட்களாக பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த 28ஆம் தேதி மணியின் காரை நித்தியா கற்களால் சேதப்படுத்தியதாக சிசிடிவி காட்சி ஒன்று … Read more

ரூ.30 ஆயிரம் கோடி ரூ.60 ஆயிரம் கோடியாக உள்ளது.. அதானி பங்குகள்.. எல்.ஐ.சி விளக்கம்

ரூ.30 ஆயிரம் கோடி ரூ.60 ஆயிரம் கோடியாக உள்ளது.. அதானி பங்குகள்.. எல்.ஐ.சி விளக்கம் Source link

திருவள்ளூர் அருகே சோகம்.! தந்தை கண்டித்ததால் கல்லூரி மாணவர் எடுத்த விபரீத முடிவு.!

திருவள்ளூர் மாவட்டத்தில் கல்லூரிக்கு செல்லாமல் ஊர் சுற்றியதை தந்தை கண்டித்ததால் கல்லூரி மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் கோபாலபுரம் பகுதியில் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவரது மகன் துளசிதாஸ் (17). திருத்தணி அரசு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று துளசிதாஸ் கல்லூரிக்கு செல்லாமல் ஊர் சுற்றியதால், தந்தை சுந்தரமூர்த்தி அதனை கண்டித்துள்ளார். இதனால் மனவேதனையடைந்த துளசிதாஸ் தற்கொலை செய்து கொள்வதற்காக வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சிக்கொல்லி மருந்தை … Read more

‘இ டாய்லெட்’களை காணவில்லை.. சென்னை மாமன்றக் கூட்டத்தில் புகார்..!

கடந்த அதிமுக ஆட்சியின்போது சென்னையில் கட்டப்பட்ட ‘இ டாய்லெட்’களை காணவில்லை என மாமன்றக் கூட்டத்தில் கணக்குக் குழு தலைவர் தனசேகரன் குற்றம் சாட்டினார். சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் கேள்வி நேரத்தின் போது பேசிய கணக்கு குழு தலைவர் தனசேகரன், “கடந்த அதிமுக ஆட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 348 இ டாய்லெட்கள் கட்டுவதற்கு 4 நிறுவனத்திடம் ஒப்பந்தம் வழங்கி பணிகள் நடைபெற்றது. தற்போது அந்த இ டாய்லெட்கள் எங்கேயும் காணவில்லை. கடந்த அதிமுக ஆட்சியில் … Read more