ரயில் முன்பு பாய்ந்த காதல் ஜோடி! காதலியை தொடர்ந்து காதலன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

சென்னை பரங்கிமலை பகுதியில் காதல் ஜோடி ஒன்று தற்கொலைக்கு முயன்ற நிலையில், காதலி இறந்ததை தொடர்ந்து மருத்துவனையில் வைக்கப்பட்டிருந்த காதலனும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கடந்த 26ஆம் தேதி காதல் ஜோடி ஒன்று ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றதில், காதலி சம்பவ இடத்திலேயே இறந்தார். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த காதலனும் பலனின்றி உயிரிழந்தார். சென்னை உள்ளகரம் ஏரிக்கரை பகுதியை சேர்ந்த அஜித்குமார் சிங் என்பவரின் மகள் சிம்ரன். இவர் மடிப்பாக்கத்தில்  உள்ள ஒரு பள்ளியில் … Read more

முகூர்த்த நாளையொட்டி சரிந்த தங்கம்- வெள்ளி விலை: இல்ல அரசிகளுக்கு குட் நியூஸ்

முகூர்த்த நாளையொட்டி சரிந்த தங்கம்- வெள்ளி விலை: இல்ல அரசிகளுக்கு குட் நியூஸ் Source link

முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறாக பதிவிட்ட சிவசக்தி சேனா நிறுவனர் கைது..!!

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் “கள ஆய்வில் முதலமைச்சர்” என்ற புதிய திட்டத்தைத் தொடங்கி வைத்து, முதற்கட்டமாக பிப்ரவரி 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசுத் திட்டங்கள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளவுள்ளார். முதல்வரின் வருகையொட்டி திமுக கட்சியினரும் அரசு அதிகாரிகளும் பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இந்த நிலையில் வேலூர் மாவட்டம் தொரப்பாடியைச் சேர்ந்த சிவசக்தி சேனா அமைப்பின் நிறுவனர் ராஜகோபால் என்பவர் … Read more

அமைச்சரை சுட்டுக்கொன்றது ஏன்? – பரபரப்பு வாக்குமூலம்!!

ஒடிஷாவில் நவீன் பட்நாயக் தலைமையிலான அரசில், சுகாதாரத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்து வந்த நபா தாஸ், ஜார்சுகுடா மாவட்டம் பிரஜராஜ்நகர் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ளச் சென்றிருந்தார். அப்போது அவர் காரை விட்டு இறங்கியதும், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த உதவி காவல் ஆய்வளர் கோபால் தாஸ் என்பவர் அமைச்சரின் மார்பை குறிவைத்து துப்பாக்கியால் சுட்டார். குண்டடிப்பட்ட அமைச்சர் சரிந்து கீழே விழுந்தார். அப்போது உள்ளூர் காவல்நிலைய ஆய்வாளர் உள்ளிட்ட இருவர் மீது துப்பாக்கிச்சூடு … Read more

கடத்தல் உள்ளிட்ட முக்கிய வழக்குகளில் எஃப்ஐஆர் பதிவு செய்ய எஸ்.பி. அனுமதி தேவையில்லை: டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு

சென்னை: கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் தொடர்பாக சில மாவட்டங்களில் போலீஸார் சம்பந்தப்பட்ட எஸ்.பி.க்களின் உத்தரவுக்காகக் காத்திருப்பதாகவும், இதனால் பிரச்சினை பெரிதாகி, சட்டம்-ஒழுங்கில் பாதிப்பு ஏற்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்தப் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், டிஜிபி சைலேந்திரபாபு அனைத்து காவல் துறை அதிகாரிகளுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில், கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்ய எஸ்.பி.க்களின் அனுமதிக்காக காத்திருக்க வேண்டாம். அது தேவையும் இல்லை. … Read more

நிலக்கரி இயந்திரங்கள் முதல்வர் மு. க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

தூத்துக்குடி: தூத்துக்குடி துறைமுகத்தில் புதியதாக நிறுவப்பட்டுள்ள நிலக்கரி கையாளும் இயந்திரங்களை முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் தூத்துக்குடி துறைமுகத்தில் புதிய இயந்திரங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஆதார் மூலம் இனி யுபிஐ கணக்கை ‘ஆக்டிவேட்’ செய்யலாம்..!

டெபிட் கார்டு இல்லாமல் ஆதார் ஓடிபி மூலம் யுபிஐ கணக்கை ஆக்டிவேட் செய்யும் வசதியை அறிமுகம் செய்துள்ளதாக பஞ்சாப் நேஷனல் பேங்க் தெரிவித்துள்ளது. பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் பேங்க் வாடிக்கையாளர்கள் முன்னதாக யுபிஐ செயலியில் ஆக்டிவேட் செய்ய டெபிட் கார்டுடன், அதற்குரிய செல்போன் எண்ணுக்கு அனுப்பப்படும் ஓடிபி எண்ணும் தேவை. இது டெபிட் கார்டு கையில் வைத்திருக்காத பல வாடிக்கையாளருக்கு யுபிஐ சேவையை பயன்படுத்த தடையாக இருந்தது. இந்நிலையில், டிஜிட்டல் பணபரிவர்த்தனையை அனைவருக்கும் சேர்க்கும் வகையில் … Read more

அண்ணன் – தம்பியை கத்தியால் குத்தி கொலை செய்த தாய்மாமன்.. சொத்துப் பிரச்னை காரணமாக நடந்த விபரீதச் சம்பவம்!

ஈரோட்டில் சொத்து தகராறு காரணமாக அண்ணன் மற்றும் தம்பியை சொந்த தாய்மாமன் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முனிசிபல் காலனியைச் சேர்ந்த லோகநாதன் என்பவரின் மகன்களான கார்த்தி மற்றும் கௌதம் மற்றும் தாய்மாமா ஆறுமுகசாமி ஆகியோர் இடையே சொத்து பிரச்சினை காரணமாக தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று  மீண்டும் இவர்கள்3 பேர் இடையேயும் தகராறு ஏற்பட்டதில் ஆறுமுகசாமி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கார்த்திக் மற்றும் … Read more

புதிதாக விண்ணப்பிப்போருக்கு பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய வாக்காளர் அட்டை: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

சென்னை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு நேற்று கூறியதாவது: கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து பெயர் நீக்கம், திருத்தம், பெயர் சேர்த்தல் மற்றும் புதிய வாக்காளர் அடையாள அட்டைக்காக 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். வாக்காளர் அடையாள அட்டையைப் பொறுத்தவரை, 3 வகையான பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டள்ளன. அதாவது, க்யூஆர் கோடு, ஹோலோகிராம் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. போலி அட்டையை உருவாக்க முடியாதபடி, அதில் பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதமே … Read more