தாத்தா.. ரெயில்வே மேம்பாலம் அமைத்து தங்க தாத்தா.! முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்த சிறுமி.!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியை சேர்ந்த சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் காரில் பள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது காரில் இருந்தபடி, வீடியோ ஒன்று எடுத்துள்ளார்.  அந்த வீடியோவில் அந்த சிறுமி தெரிவித்துள்ளதாவது, “சி.எம். தாத்தா” நான் சிவகாசியில இருந்து பேசுகிறேன். சிவகாசியில் ரெயில்வே மேம்பாலம் அமைத்து தாங்க தாத்தா. தினமும் பள்ளிக்கு போகும் போது ரெயில்வே கேட் போட்டுடுறாங்க தாத்தா.  அதனால நான் தினமும் பள்ளிக்கு தாமதமாக போகிறேன் தாத்தா.” என்று அந்த வீடியோவில் சிறுமி முதலமைச்சருக்கு … Read more

இபிஎஸ் – ஓபிஎஸ் இணைந்து செயல்பட வலியுறுத்தினோம்: பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி பேட்டி 

சென்னை: எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இணைந்து செயல்பட வலியுறுத்தினோம் என்று பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி தெரிவித்தார். பரபரப்பான அரசியல் சூழலில் அண்ணாமலை கடந்த 1 ஆம் தேதி இரவு டெல்லிக்கு அவசரமாக பயணப்பட்டார். டெல்லி சென்ற அண்ணாமலை பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை நேற்று (ஜன.2) காலை அவரது இல்லத்தில் சந்தித்தார். அப்போது அவர் தமிழக அரசியல் மற்றும் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் நிலவரம் தொடர்பாக நட்டாவிடம் எடுத்துரைத்ததாக தெரிகிறது. … Read more

உடைந்தது சீக்ரெட்… பாஜக வச்ச செம ட்விஸ்ட்; அதிமுகவில் தீராத குழப்பம்!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு 24 நாட்கள் இருக்கின்றன. அதில் பிப்ரவரி 3 மிகவும் பரபரப்பான நாளாக அமைந்துவிட்டது. டெல்லியில் இருந்து திரும்பிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, இன்றைய தினம் எடப்பாடி பழனிசாமி , ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரையும் தனித்தனியே சந்தித்து பேசினார். என்ன பேசினோம் என்பதை பிற்பகலில் நடக்கும் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவிக்கப்படும் என அண்ணாமலை கூறியிருந்தார். இந்நிலையில் சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில் தமிழக மேலிட பார்வையாளர் சி.டி.ரவி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். … Read more

இடைத்தேர்தல் சோதனை கெடுபிடிகள் பணம் கொண்டு செல்லும் வியாபாரிகளுக்கு ரசீது: உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துவரப்பட்ட ரூ. 1.74 லட்சம் பறிமுதல்

ஈரோடு: ஈரோடு, கருங்கல்பாளையம் மாட்டு சந்தையில் மாடுகளை விற்பனை செய்து பணம் கொண்டு செல்லும் வியாபாரிகள் மற்றும் விவசாயிகளுக்கு ரசீது வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஈரோடு கருங்கல்பாளையம் மாட்டு சந்தை வாரம் தோறும் வியாழக்கிழமை நடைபெற்று வருகின்றது. ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், திருச்சி, தேனி போன்ற மாவட்டங்களில் இருந்து மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றது. இதே போல மாடுகளை தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா,கர்நாடகா,தெலங்கானா போன்ற வெளிமாநிலங்களில் இருந்து வியாபாரிகள் வந்து மாடுகளை வாங்கி … Read more

ராணிப்பேட்டை: குடிபோதையில் தாக்கவந்த கணவனை வெட்டிக் கொலை செய்த மனைவி

வாலாஜாபேட்டை அருகே குடிபோதையில் தாக்கவந்த கணவரை, மனைவி வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த ஒழுகூர் கிராமம் வடமேட்டு தெருவைச் சேர்ந்தவர்கள் ஏழுமலை – கலைச்செல்வி தம்பதியர். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இந்நிலையில், கட்டிட மேஸ்திரியாக வேலைபார்த்து வந்த ஏழுமலை; அடிக்கடி குடித்துவிட்டு வீட்டுக்கு வருவது வழக்கம். இதனால் ஏழுமலைக்கும் அவரது மனைவி கலைச்செல்விக்கும் இடையே தகராறு நடப்பது வழக்கம். இந்நிலையில் நேற்றிரவு ஏழுமலை, அதிகமாக குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து தனது … Read more

கரும்புள்ளி, முகப்பரு தழும்பு நீங்க வாழைப்பழத் தோல்; நிபுணர்கள் சொல்வது என்ன?

கரும்புள்ளி, முகப்பரு தழும்பு நீங்க வாழைப்பழத் தோல்; நிபுணர்கள் சொல்வது என்ன? Source link

ரேக்ளா வண்டியில் மணமகளை ஊர்வலமாக அழைத்து வந்த மணமகன் – வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ.!

திருமணம் என்றால் உறவினர்கள் மணமக்களை ஆடம்பரமான கார்களில் ஊர்வலமாக அழைத்து வருவது வழக்கமாக உள்ள இந்த காலகட்டத்தில், ஒரு ஊரில் உறவினர்கள் மணமக்களை ரேக்ளா வண்டியில் ஊர்வலமாக அழைத்து சென்றது பெரும் வியப்பை ஏற்படுத்தியது. அந்த வகையில், திருவள்ளுவர் மாவட்டத்தில் உள்ள செங்குன்றத்தை அடுத்த வடபெரும்பாக்கம் செட்டிமேடு பகுதியை சேர்ந்தவர்கள் கோபால்-கண்ணகி தம்பதியினர். இவர்கள் மகன் விஜய். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஆனந்தன்-மேரி தம்பதியினரின் மகள் ரம்யாவுக்கும் திருமணம் நடைபெற்றது.  அதன் பிறகு உறவினர்கள், மணமகன் … Read more

கே.விஸ்வநாத் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் 

சென்னை: திரைக் கலைஞர், இயக்குநர் கலாதபஸ்வி விஸ்வநாத் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,”காலத்தால் அழியாத திரைக்காவியங்கள் மூலமாக இந்திய அளவில் மக்கள் மனமெங்கும் நிறைந்துள்ள மகா கலைஞர் இயக்குநர் கலாதபஸ்வி விஸ்வநாத் மறைவு மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. சங்கராபரணம், சலங்கை ஒலி உள்ளிட்ட இசையை அடிநாதமாகக் கொண்ட காவியங்களை திரையில் வடித்த கலைச் சிற்பியான கே. விஸ்வநாத், நாட்டின் மிக உயரிய விருதான தாதா சாகேப் … Read more

’நோ’ சொன்ன எடப்பாடி; பாஜக ஆட்டம் குளோஸ்- ஓபிஎஸ் டீம் வேற பிளான்!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் விவகாரத்தில் பிரிந்து நிற்கும் எடப்பாடி பழனிசாமி , ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரையும் ஒன்று சேர்க்க பாஜக முயற்சிக்கிறது. இதையொட்டியே டெல்லி சென்று விட்டு சென்னை திரும்பிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, ஈபிஎஸ், ஓபிஎஸ் என இருவரையும் தனித்தனியே சந்தித்து பேசினார். பாஜகவின் கணக்கு என்பது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அல்ல. வரவிருக்கும் 2024 மக்களவை தேர்தல். இதற்கு அச்சாரம் போடத் தான் அதிமுக இணைப்பில் தீவிரம் காட்டி வருகிறது. பாஜக முயற்சி … Read more

புதுக்கோட்டை அருகே மீனவர் வலையில் சிக்கிய வாலடியான் விஷப்பாம்பு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடி மீனவர் வலையில் அதிக விஷத்தன்மை கொண்ட 8 அடி நீளமுள்ள வாலடியான் பாம்பு சிக்கியது. புதுக்கோட்டை மாவட்டம், கட்டுமாவடி அருகே செம்பியன்மகாதேவிப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் சிவக்குமார், தினேஷ். இவர்கள் இருவரும் பைபர் படகில் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர். நேற்று காலை மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது வலையில் அதிக விஷத்தன்மை கொண்ட, 8 அடி நீளமுள்ள வாலடியான் என்ற பாம்பு சிக்கியது. உடனே அந்தப் பாம்பு அதிக ஆக்ரோஷத்துடனும், கடும் சீற்றத்துடனும் … Read more