வைரல் வீடியோ!!கார் கூரையின் மீது அமர்ந்து காதலர்கள் அட்டூழியம்..!!

லக்னோவில் ஒரு ஜோடி ஸ்கூட்டரில் ஒருவரையொருவர் காதலிக்கும் வீடியோ இணையத்தில் வைரலானது. இந்த வீடியோ விவாதப் பொருளாக மாறியதுடன், அந்த ஜோடியும் தண்டிக்கப்பட்டனர். இப்போது, ​​லக்னோவில் இருந்து மற்றொரு வீடியோ வைரலாகி வருகிறது, அதில் காதலர்கள் தங்கள் காதலை காரின் உச்சிக்கு எடுத்துச் செல்வதைக் காணலாம். வீடியோவில், ஹூண்டாய் வெர்னா போன்று நகரும் செடானில் ஒரு ஜோடி, சன்ரூப்பில் இருந்து வெளியே வந்து, வாகனம் ஓடிக்கொண்டிருக்கும்போது ஒருவரை ஒருவர் கட்டிப்பிடிப்பதைக் காணலாம். கிளிப் மேலும் நகரும்போது, ​​ஓட்டுநர் … Read more

பொதுமக்கள் தாமாக முன்வந்து மானியத்தை விட்டுக்கொடுக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் – மின்வாரிய அதிகாரிகள் தகவல்

சென்னை: மின்சார மானியத்தை பொதுமக்கள் தாமாக முன்வந்து விட்டுக்கொடுக்கும் திட்டத்தை அமல்படுத்த மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஏற்கெனவே ஒப்புதல் அளித்துள்ள நிலையில், விரைவில் இத்திட்டத்தை மின்வாரியம் செயல்படுத்த உள்ளது. தமிழகத்தில் உள்ள 2.34 கோடி வீட்டு மின் இணைப்புகளுக்கு 100 யூனிட் வரைஇலவசமாகவும், 500 யூனிட் வரை மானியவிலையிலும் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இதுதவிர, 9.75 லட்சம் குடிசைவீடுகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. வீடுகளுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவதால், மின்வாரியத்துக்கு ரூ.450 கோடி செலவாகிறது. … Read more

இது எங்கள் தேர்தல் இல்லை: ஒதுங்கிக் கொண்ட அண்ணாமலை

பாஜக, அதிமுக கூட்டணியில் அதிமுக பலமான கட்சியாக உள்ளது. முன்னாள் அமைச்சர்கள் உள்ளனர். பல வேட்பாளர்களை நிறுத்தி வாக்குகளை பிரிக்க வேண்டாம் என்று அண்ணாமலை கூறியுள்ளார். தேர்தல் ஆணையம் எவ்வளவு நடவடிக்கை எடுத்தாலும் தமிழக அமைச்சர்கள் 20 மாதங்களாக சம்பாதித்த பணமெல்லாம் இடைத்தேர்தலில் வெளிவர தான் போகிறது. இது பாஜகவிற்கான தேர்தல் இல்லை. பலம் வாய்ந்த கூட்டணி வேட்பாளரை நிறுத்தி வெற்றி பெற செய்வோம். பாஜக தனியாக வேட்பாளர் நிறுத்த வேண்டிய அவசியம் இல்லை. திமுக வேட்பாளரை … Read more

முதல்வர் மு.க.ஸ்டாலினை தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் அழைப்பு..!!

2014-ம் ஆண்டு ஆந்திர பிரதேசத்தில் இருந்து 10 மாவட்டங்களை பிரித்து தெலுங்கானா தனி மாநிலமாக உருவாக்கப்பட்டது. இம்மாநிலத்திற்கு ஐதராபாத் தலைநகரமாக உள்ளது. இங்கு தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக அக்கட்சியின் சந்திரசேகர ராவ் (கேசிஆர்) உள்ளார். இந்த நிலையில், புதிதாக கட்டப்பட்டுள்ள தெலுங்கானா மாநில தலைமைச் செயலகம் வரும் பிப்ரவரி 17-ம் தேதி திறக்கப்படவுள்ளது. தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் கனவுத் திட்டம் என்று கூறப்படும், இந்த புதிய தலைமைச் செயலகம், 7 லட்சம் … Read more

ஊழியர் வேலைநிறுத்தம் காரணமாக இடையில் ஒருநாள் தவிர வங்கிகள் நாளை முதல் 5 நாட்கள் செயல்படாது

சென்னை: குடியரசு தின விழா மற்றும் ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக, இடையில் ஒரு நாள் தவிர நாளை முதல் வங்கிகள் 5 நாட்கள் செயல்படாது. இதனால், வங்கி சேவைகள் கடுமையாக பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தொழில் நிறுவனங்கள், வர்த்தகர்கள், அரசு கருவூலங்கள் மற்றும் பொதுமக்களின் தினசரி பணப் பரிவர்த்தனைக்கு வங்கிகள் முக்கியப் பங்காற்றி வருகின்றன. ஒருநாள் வங்கிக்கு விடுமுறை விடப்பட்டாலே பணப் பரிவர்த்தனை, காசோலை சேவைகள் பாதிக்கப்படுகின்றன. அத்துடன், மறு நாள் அனைத்து வங்கிகளிலும் … Read more

நாளை தமிழகம் முழுவதும் சிறப்பு கிராம சபைக் கூட்டம்..!!

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும், குடியரசு தினமான ஜனவரி 26-ம் தேதி அன்று கிராமசபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன. கூட்டம் நடைபெறும் இடம், நேரம் ஆகியன கிராம ஊராட்சி அலுவலகங்களின் தகவல் பலகையில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த குடியரசு தினத் திருநாளில் சுதந்திரத்திற்காக உழைத்த நம் முன்னோர்களின் தியாகத்தை நினைவு கூர்ந்து ஊராட்சி அலுவலகங்களில் தேசியக் கொடியினை ஏற்றிட வேண்டும். கிராம ஊராட்சிகளில் தலைமைப் பொறுப்பு வகிக்கும் அனைத்து ஊராட்சி தலைவர்கள் … Read more

சந்தையில் சிப் தட்டுப்பாடு காரணமாக மடிக்கணினி வழங்குவதில் தாமதம் – அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம்

சென்னை: சந்தையில் நிலவும் சிப் தட்டுப்பாடு காரணமாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்குவதில் தாமதம் நிலவுவதாக பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவதற்கு அதற்குரிய விவரங்களை நிதித்துறையின் வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். ஆனால், தொழில்நுட்பக் கோளாறால் ஆசிரியர்கள் தகவல்களை பதிவேற்றுவதில் சிரமம் இருந்தது. இந்த விவரத்தை நிதித்துறைக்கு தெரிவித்து சிக்கல் சரிசெய்யப்பட்டது. தற்போது … Read more

முன்னாள் முதல்வரின் முகத்தை நெஞ்சில் பச்சை குத்திய விஷால்.. அரசியல் என்ட்ரியா?

முன்னாள் முதல்வரின் முகத்தை நெஞ்சில் பச்சை குத்திய விஷால்.. அரசியல் என்ட்ரியா? Source link

அஜித் பட பாணியில் கொள்ளை சம்பவம்..!! வங்கிகுள் புகுந்த திண்டுக்கல் இளைஞர் கைது..!!

திண்டுக்கல் – தாடிக்கொம்பு சாலையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி இயங்கி வருகிறது. வங்கியில் காலை 4 பேர் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திண்டுக்கல் பூச்சி நாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த கலீல் ரகுமான் (25) என்பவர் கையில் மிளகாய் பொடி, ஸ்பிரே, கட்டிங் பிளேடு உட்பட ஆயுதங்களுடன் வங்கி உள்ளே சென்றுள்ளார். பணியில் இருந்த ஊழியர்கள் மீது மிளகாய் பொடி தூவி ஸ்பிரே அடித்துள்ளார். பின்னர் தான் கொண்டு வந்த கயிற்றால் வங்கி ஊழியர்கள் 3 பேரை கையை … Read more

ஈரோடு கிழக்கில் மாதிரி வாக்குப்பதிவு – கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மின்னணு இயந்திரங்கள் சரிபார்ப்பு

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குப்பதிவு இயந்திரங்களில், அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் நேற்று மாதிரி வாக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதை பார்வையிட்ட ஆட்சியரும், மாவட்டத் தேர்தல் அலுவலருமானஎச்.கிருஷ்ணன் உன்னி கூறியதாவது: ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள 238 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்துவதற்காக 500 … Read more