சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டு கடுங்காவல் தண்டனை: போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: ஐந்து வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை பெரவள்ளூர் பகுதியை சேர்ந்த 29 வயது இளைஞர் அருகில் உள்ள வீட்டில் தாயுடன் வசித்து வந்த ஐந்து வயது சிறுமியை, கத்தியைக் காட்டி மிரட்டி, பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுதொடர்பாக சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், பெரவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. … Read more

தமிழில் பெயர் பலகை வைக்காத நிறுவனங்கள் மீதான நடவடிக்கை என்ன?..தொழிலாளர் நலத்துறை செயலர் அறிக்கையளிக்க உத்தரவு

மதுரை: தமிழில் பெயர் பலகை வைக்காத தனியார் நிறுவனங்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து, தொழிலாளர் நலத்துறை செயலர் தரப்பில் அறிக்கையளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், மோர்பண்ணையைச் சேர்ந்த வக்கீல் தீரன் திருமுருகன், ஐகோர்ட் மதுரை கிளையில் கடந்த 2018ல் தாக்கல் செய்த மனுவில், ‘‘தமிழ்நாட்டிலுள்ள அரசு அலுவலகங்கள், தனியார் கடைகள், தொழிற்சாலைகள் உள்ளிட்டவற்றின் பெயர் பலகைகளை அரசாணைப்படி, தூய தமிழிலேயே வைக்க வேண்டுமென்ற அரசாணையை நிறைவேற்ற ஐகோர்ட் கிளை ஏற்கனவே … Read more

வேட்பாளரை நிறுத்த வேண்டாம் என ஓ.பி.எஸ் இடம் கோரிக்கை வைத்தேன்: ஏ.சி சண்முகம்

வேட்பாளரை நிறுத்த வேண்டாம் என ஓ.பி.எஸ் இடம் கோரிக்கை வைத்தேன்: ஏ.சி சண்முகம் Source link

திருவேற்காடு அருகே பள்ளி மாணவியை ஆபாச படம் எடுத்த வாலிபர் கைது.! 

சென்னை திருவேற்காடு அடுத்த அயனம்பாக்கம் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில், உதவியாளராக அதே பகுதியைச் சேர்ந்த சசிகுமார் என்ற எட்வின் என்பவர் பணிபுரிந்து வருகிறார்.  இவர் நேற்று முன்தினம் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவியிடம் பேசி கொண்டு இருந்துள்ளார். இதை அந்த வழியாக வந்த பள்ளியின் முதல்வர் பார்த்துள்ளார்.  இதையடுத்து, பள்ளியின் முதல்வர் சசிகுமாரின் செல்போனை வாங்கி சோதனை செய்தார். அந்த செல்போனில், மாணவியின் ஆபாச படங்களை எடுத்து வைத்திருப்பது தெரியவந்தது.  … Read more

புதுச்சேரி | பறிமுதல் செய்யப்பட்ட 2 டன் பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு தார் சாலை அமைப்பு

புதுச்சேரி: புதுச்சேரி அரசு ஒருமுறை பயன்படுத்தும் பாலித்தீன் பைகள், பிளாட்டிக் குவளைகள், தெர்மாகோல் தட்டுகள், தண்ணீர் பாக்கெட், பிளாஸ்ட்டிக் உறிஞ்சு குழல் (ஸ்டா), பிளாஸ்டிக் கொடி உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்துள்ளது. இருப்பினும் இப்பொருட்களை சில தொழிற்சாலைகள் ரகசியமாக உற்பத்தி செய்து வருகின்றன. இத்தகைய தொழிற்சாலைகளை புதுச்சேரி மாசுக்கட்டுப்பாட்டு குழுமம் ஆய்வு செய்து, அத்தகைய பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றது. உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளின் மின் இணைப்பு துண்டிக்கப்படுகிறது. குறிப்பாக கடந்த 3 மாதங்களில் மட்டும் … Read more

அரசின் நிதிநிலைக்கு ஏற்ப புதிய வேளாண்மை கல்லூரி: அமைச்சர் தகவல்

நெல்லை: அரசின் நிதி நிலைக்கு ஏற்ப,  புதிய வேளாண்மை கல்லூரிகள் அமைக்கும் வாய்ப்பு  உருவாகும் என நெல்லையில் வேளாண்மைத்துறை  அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தெரிவித்தார். 2023-24ம் ஆண்டுக்கான வேளாண்மை  பட்ஜெட் தயாரிப்பது தொடர்பாக, நெல்லை, தூத்துக்குடி,  தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய 5 மாவட்ட விவசாயிகள்  சங்க பிரதிநிதிகள், வேளாண்மைத் துறை அதிகாரிகளுடன் கருத்து கேட்பு கூட்டம் தமிழ்நாடு வேளாண்மை துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம், சபாநாயகர் அப்பாவு தலைமையில் நேற்று நடந்தது. பின்னர் அமைச்சர் … Read more

இந்த ரிஸ்க் தேவையா? கிணற்றுக்குள் தலை கீழாக தொங்கியபடி கொடூர பாம்பை காப்பாற்றும் இளைஞர்!

இந்த ரிஸ்க் தேவையா? கிணற்றுக்குள் தலை கீழாக தொங்கியபடி கொடூர பாம்பை காப்பாற்றும் இளைஞர்! Source link

திருவண்ணாமலை : முன் விரோதத்தில் சித்தப்பாவை சுட்டுக்கொன்ற வாலிபர் கைது.!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஜமுனாமுத்தூர் அடுத்த மந்தைவெளி கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை. இவர் முன் விரோதத்தால் தன் சித்தப்பாவை துப்பாக்கியால் சுட்டு கொன்றுள்ளார்.  இந்த வழக்கில் ஏழுமலையை குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் மாவட்ட ஆட்சியர் முருகேஷிடம் பரிந்துரை செய்தார். இந்நிலையில் நேற்று ஏழுமலையை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தார்.  அந்த உத்தரவின் படி, ஏழுமலையை வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இதேபோன்று, போளூர் போலீசார் … Read more

தெலங்கானா மற்றும் புதுச்சேரியில் குடியரசு தினத்தில் தேசியக் கொடியேற்றும் ஆளுநர் தமிழிசை

புதுச்சேரி: குடியரசு தினத்தன்று தெலங்கானா மற்றும் புதுச்சேரியில் தேசியக்கொடியை ஆளுநர் தமிழிசை ஏற்றுகிறார். நாட்டிலேயே இரு மாநிலங்களில் தேசியக் கொடியேற்றும் ஒரே ஆளுநர் இவர்தான். நாட்டின் 74வது குடியரசு தினவிழா புதுச்சேரி கடற்கரை சாலையில் வரும் 26ல் நடைபெறுகின்றது. இவ்விழாவில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை தேசியக்கொடி ஏற்றி வைத்து காவல் துறையினரின் பல்வேறு படைப்பிரிவினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கின்றார். இதனையொட்டி புதுச்சேரி கடற்கரைசாலையில் இன்று காவல் துறையினரின் பல்வேறு படைப்பிரிவுகள், முப்படைகளை சேர்ந்த என்.சி.சி … Read more

ஸ்டாலின் தூக்கத்தில் கல் எறிந்த நாசர்: மறுபடியும் முதல்ல இருந்தா?

தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் நாசர் திமுக தொண்டர் ஒருவரை கல்லைக் கொண்டு எறியும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருவதோடு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திமுக பொதுக்குழுவில் கட்சி நிர்வாகிகளிடம் தனது நிலையை மிக வெளிப்படையாக எடுத்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின் . “ ஒரு பக்கம் தி.மு.கவின் தலைவர். மற்றொரு பக்கம் தமிழ்நாட்டின் முதலமைச்சர். மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் அடி என்பதைப் போல இருக்கிறது என்னுடைய நிலைமை. இத்தகைய சூழ்நிலையில் இருக்கும் என்னை மேலும் துன்பப்படுத்துவது … Read more