தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணைய தலைவர் உள்ளிட்ட பதவி நியமனங்களுக்கு காலக்கெடு எதுவும் இல்லை: மத்திய அரசு

சென்னை: தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணைய தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான நியமனங்களை மேற்கொள்ள காலக்கெடு எதுவும் வகுக்கப்படவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், சமூக நீதி பேரவை தலைவரான வழக்கறிஞர் கே.பாலு தாக்கல் செய்துள்ள மனுவில், தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தின் தலைவர், துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவிகள் கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 28-ம் தேதியுடன் காலாவதியாகி விட்டது. கடந்த 9 மாதங்களாக … Read more

கள்ளக்குறிச்சி பள்ளி கட்டிடம் விசாரணைக்கு தேவையா? – சிபிசிஐடி விளக்கமளிக்க ஆணை!

கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில், பள்ளி கட்டிடம் புலன் விசாரணைக்கு தேவைப்படுகிறதா என விளக்கம் அளிக்க சிபிசிஐடிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி மரணத்தை கண்டித்து கடந்த ஜூலை மாதம் 17 ஆம் தேதி நடந்த போராட்டம் வன்முறையில் முடிந்தது. பள்ளியில் உள்ள பொருட்கள் சேதப்படுத்தப்பட்டன; பேருந்துகள் தீ வைத்து ஏரிக்கபட்டன. பள்ளி அமைந்துள்ள பகுதி கலவரப் பகுதியாக மாறியதை அடுத்து, பள்ளி மூடப்பட்டது. தற்போது பள்ளி வளாகம் முழுவதும் … Read more

மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு தொடர்பாக மதுரையில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை

மதுரை: மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு தொடர்பாக மதுரையில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். மதுரை டவுன்ஹால்ரோடு, கட்ராபாளையம் பகுதிகளில் தங்கும் விடுதிகள், உணவகங்களில் விசாரணை நடந்தது.

மதுரை: ஒரே வாகனத்தில் 130 மாணவிகளை ஏற்றிச்சென்றதால் நிகழ்ந்த விபரீதம்!

மதுரை திருப்பாலை பகுதியில் தனியார் பள்ளி வாகனத்தில் அளவுக்கு அதிகமானோரை ஏற்றி சென்றதால் 10 மாணவிகளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. 4 பேருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மதுரை திருப்பாலை பகுதியில் நல்லமணி யாதவ பெண்கள் மேல்நிலைப்பள்ளி இயங்கிவருகிறது. அப்பள்ளியை சேர்ந்த 130 மாணவிகளை, நேற்று மாலை ஒரே பள்ளி வாகனத்தில் அழைத்து சென்றபோது, நெரிசலில் சிக்கிய 10 மாணவிகளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனையடுத்து மூச்சுத்திணறல் ஏற்பட்ட மாணவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், … Read more

பயணிகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு.. மெட்ரோ சொன்ன குட் நியூஸ்..!

கடந்த மாதம் சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்தவர்களில் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்ட 30 பயணிகளுக்கு பரிசு வழங்கப்படவுள்ளது என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு ஒவ்வொரு மாதமும் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான பரிசு கூப்பன் அல்லது பரிசுப் பொருள் வழங்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்திருந்தது. அதன்படி, கடந்த அக்டோபர் மாதம் 21-ம் தேதி முதல் நவம்பர் மாதம் 20-ம் தேதி வரை பயணம் … Read more

மின்சார வாகனங்களுக்கு ‘மாஸ்டர் பிளான்’ – சென்னை மாநகராட்சி மெகா திட்டத்தின் முதற்கட்ட அம்சங்கள்

சென்னை: சென்னை மாநகராட்சியில் மின்சார வாகனங்களின் எண்ணிக்கை மற்றும் சார்ஜிங் நிலையங்கள் தொடர்பாக மாஸ்டர் பிளான் தயாரிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. சென்னை மாநகராட்சி போன்ற பெருநகரங்களில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளவும், காற்று மாசுபாட்டைக் குறைக்கவும் எரிபொருள் வாகனங்களுக்கு மாற்றாக மின்சார வாகனங்களை பயன்படுத்த பல்வேறு மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. தமிழக அரசு முதல் கட்டமாக சென்னையில் மின்சார பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளது. மின்சார பேருந்துகளை வாங்க டெண்டர் கோரப்பட்டுள்ளது. இதைத் … Read more

போலீஸ் தேடுவோர் அடைகலம் அடையும் இடமாக பாஜக… முத்தரசன் பகிரங்க குற்றச்சாட்டு!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். பல்வேறு விஷயங்கள் குறித்து அப்போது அவர் கூறியது: அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமாகவும், அரசியலமைப்புக்குட்பட்டு செயல்பட வேண்டிய அமைப்புகளை பா.ஜ.க அரசு தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வருகிறது என தொடர்ச்சியாக குற்றம்சாட்டி வந்தோம். தலைமை தேர்தல் ஆணையர் நியமனத்தில் உச்ச நீதிமன்றமே மத்திய பாஜக அரசுக்கு கண்டனம் தெரிவித்து விளக்கம் கேட்டுள்ளது. பாஜக அரசின் மீதான எதிர்கட்சிகளின் குற்றம்சாட்டு உண்மை என்று தற்போது நிரூபணமாகி … Read more

இந்தியாவைவிட தமிழ்நாட்டில் பணவீக்கம் குறைவே… டெல்லியில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அதிரடி

கோவிட் உருவாகி அனைவரையும் சிறைப்படுத்திய பிறகு ஒன்றிய அரசு தாக்கல் செய்யவிருக்கும் பட்ஜெட் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. கோவிட் தொடுத்த போர் ஒருபக்கம் எனில் ரஷ்யா – உக்ரைன் போர் மறுபக்கம். இதனால் உணவு மற்றும் எரிபொருள் விலை அதிகரித்துள்ளது. மேலும் இந்த இக்கட்டான நிலைகளால் உலகம் முழுவதும் பணவீக்கம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பணவீக்கத்தை கட்டுப்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளதால் மக்களும் இன்னலுக்கு ஆளாகியிருக்கின்றனர். இந்தச் சூழலில் வேலை வாய்ப்பை உருவாக்கி … Read more

விருப்பம் இல்லாத மனைவியை கட்டாயப்படுத்தி தாம்பத்யம்: வாலிபர், பெற்றோர் மீது வழக்கு

திருவெறும்பூர்: திருச்சி ஓலையூரை சேர்ந்த கண்ணன் மகள் பிரியதர்ஷினி(27). இவருக்கு கடந்த மார்ச் மாதம் கடலூர் மஞ்சக்குப்பத்தை சேர்ந்த தியாகராஜன் மகன் குமரன்(30) என்பவருடன் திருமணம் நடந்தது.  தம்பதி இருவரும் பெங்களூருவில் வசித்து வந்தனர். குமரனுடன் 15 நாட்கள் மட்டுமே குடும்பம் நடத்திய பிரியதர்ஷினி, குடும்ப தகராறு காரணமாக ஓலையூரில் உள்ள தனது தந்தை வீட்டுக்கு வந்து விட்டார். இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன் திருவெறும்பூர் அனைத்து மகளிர் போலீசில் பிரியதர்ஷினி புகார் செய்தார். அதில், … Read more

ஆக்ஸிஸ், இன்ஃபோசிஸ், ஐடிசி பங்குகள் உயர்வு.. வங்கி நிஃப்டி 43,000க்குள் சரிவு

ஆக்ஸிஸ், இன்ஃபோசிஸ், ஐடிசி பங்குகள் உயர்வு.. வங்கி நிஃப்டி 43,000க்குள் சரிவு Source link