அனைத்து ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி: ஜனவரி 1 முதல் விநியோகம்..!

தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும், முன்னுரிமை, அந்தியோதயா கார்டுதாரர்களுக்கு வரும் ஜனவரி முதல் இரும்புச் சத்து உடைய செறிவூட்டப்பட்ட அரிசி வினியோகம் செய்யப்பட உள்ளது. தமிழகம் உட்பட நாடு முழுவதும் பெரும்பாலான மக்கள் போதிய அளவுக்கு இரும்புச் சத்து இல்லாமல் இருப்பதை மத்திய அரசு கண்டறிந்துள்ளது. இதனால், அவர்கள் ரத்த சோகை போன்ற ஊட்டச்சத்து குறைபாடுடன் உள்ளனர். தற்போது, ரேஷன் கடைகளில் வழங்கப்படும் புழுங்கல் அரிசி, பச்சரிசியில் மாவுச் சத்து, புரதச் சத்துக்கள் உள்ளன. எனவே, … Read more

வனப்பகுதி மேம்பாட்டிற்காக தமிழக அரசுக்கு ரூ.2,000 கோடி சிறப்பு நிதி தேவை: மாநிலங்களவையில் கனிமொழி சோமு கோரிக்கை

புதுடெல்லி: “வனவிலங்குகள் பாதுகாப்பில் நாட்டிலேயே முதன்மை மாநிலமாகவும் தமிழகம் திகழ்கிறது. தமிழக அரசின் சிறப்பான பணிகளை ஊக்கப்படுத்தும் விதமாக வனவிலங்குகள் பாதுகாப்பு மற்றும் வனப்பகுதி மேம்பாட்டிற்காக தமிழக அரசுக்கு 2,000 கோடி ரூபாய் சிறப்பு நிதியாக ஒதுக்க வேண்டும்” என்று மாநிலங்களவையில் திமுக எம்பி கனிமொழி என்.வி.என்.சோமு பேசியுள்ளார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் புதன்கிழமை தொடங்கியது. மாநிலங்களவையில் இன்று, வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதுதொடர்பான விவாதத்தில் திமுக எம்பி கனிமொழி என்.வி.என். … Read more

உடனே இத பண்ணுங்க..! – பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

2022 – 2023 ஆம் ஆண்டு முதல் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை படிக்கும் சிறுபான்மை மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மெட்ரிக் கல்விக்கு முந்தைய கல்வி உதவித்தொகையை ஒன்றிய அரசு திடீரென ரத்து செய்துள்ளதை கைவிட்டு மீண்டும் வழங்கிட வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது: மெட்ரிக் கல்விக்கு முந்தைய கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், … Read more

கணவர்களுக்கு டாக்டர் பட்டமே கொடுக்கலாம் – மேடையில் சுந்தர்.சி… தமிழிசை கலகலப்பு!

பூந்தமல்லி அடுத்த வேலப்பன்சாவடியில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் இன்று பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் மருத்துவம், கலை, அறிவியல் உள்ளிட்ட பல்வேறு பாட பிரிவுகளில் பயின்று முடித்த 2,241 மாணவ மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது.  இதில், அந்த பல்கலைக்கழகத்தின் நிறுவனர் ஏசி சண்முகம் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.  Tmt.Prema Subaskaran-Chairperson Lyca Health,Dr.V.G.Santhosam Chairman-VGP Group,Thiru.Sundar.C, Film Director … Read more

ஹெல்மெட் அணியாமல் வந்த போலீசாருக்கு ரூ.1000 அபராதம்

புதுச்சேரி: புதுச்சேரியில் ஹெல்மெட் அணியாமல் பணிக்கு வந்த போலீசாருக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டது. புதுச்சேரியில் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் பொதுமக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த உத்தரவு திரும்ப பெறப்பட்டது. இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் மீண்டும் கட்டாய ஹெல்மெட் சட்டம் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அத்துடன் இவற்றை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டுமென காவல் துறைக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆனால் பொதுமக்களிடம் இருந்து, மீண்டும் எதிர்ப்பு கிளம்பியதால் கட்டாய ஹெல்மெட் சட்டத்தை கண்டிப்புடன் … Read more

”அன்னுரில் ஒருபிடி மண்ணை எடுத்தாலும் சாகும்வரை உண்ணாவிரதம்” – அண்ணாமலை ஆவேச பேச்சு!

”அன்னுரில் ஒருபிடி மண்ணை எடுத்தாலும் சாகும் வரை உண்ணாவிரதம் போராட்டம் செய்வேன்” என கோவை கண்டன போராட்டத்தில் அண்ணாமலை ஆவேசமாக பேசியுள்ளார். கோவை புறநகர் பகுதியான அன்னூரில் சிட்கோ தொழில் பூங்கா அமைக்க தமிழக அரசு 3731 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த அரசாணை வெளியிட்டது. இதனை திரும்பப்பெற வலியுறுத்தி அன்னூர் விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் விவசாயிகளுக்கு ஆதரவாக அன்னூர் சந்திப்பில் ஓதிமலை சாலையில் பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாஜக மாநில … Read more

சென்னையில் கர்ப்பிணி பெண் குளிப்பதை வீடியோ எடுத்த இளைஞர் கைது.!

சென்னையில் கர்ப்பிணி பெண் குளிப்பதை வீடியோ எடுத்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். சென்னை மேற்கு மாம்பலம் பகுதியில் வசித்து வரும் ஸ்ரீராம் (22) கிண்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஸ்ரீராம் எதிர் வீட்டில் வசிக்கும் 24 வயதுடைய கர்ப்பிணி பெண் குளிப்பதை ரகசியமாக மறைந்திருந்து செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த இளம்பெண் இது குறித்து தனது கணவரிடம் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து நண்பர்களை வரவழைத்த அவர், ஸ்ரீராமிடம் இது … Read more

பெட்ரோல் விலை – பி.டி.ஆர். கேள்விக்கு அண்ணாமலை பதிலடி!

பெட்ரோல், டீசல் விலையை ஏன் குறைக்கவில்லை என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் எழுப்பிய கேள்விக்கு அண்ணாமலை பதில் அளித்துள்ளார். சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் கடுமையாக விலை சரிந்தும், பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவிடாமல் எந்த சக்தி தடுக்கிறது? என்று நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கேள்வி எழுப்பியதற்கு தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை பதிலளித்துள்ளார். சென்னையில் கடந்த 200 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் … Read more

சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையை மீண்டும் வழங்கிடுக: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் 

சென்னை: 2022-2023ஆம் ஆண்டு முதல் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை படிக்கும் சிறுபான்மை மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மெட்ரிக் கல்விக்கு முந்தைய கல்வி உதவித் தொகையை மீண்டும் வழங்கிட வலியுறுத்தி இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (டிச.7) கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில், மெட்ரிக் கல்விக்கு முந்தைய கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் சிறுபான்மை மாணவர்களுக்கு … Read more