அரை மயக்கத்தில் திருமணம்.. ஆபாச வீடியோ மிரட்டல்.. 17 வயது சிறுமி தற்கொலை..! உடலை வாங்க மறுத்து போராட்டம்

பெரம்பலூர் அருகே மயக்க மருந்து கொடுத்து ஆட்டோவில் கடத்திச்சென்று கட்டாய திருமணம் செய்து வைக்கப்பட்ட சிறுமி மீட்கப்பட்ட நிலையில் , ஆபாச வீடியோவை இணையதளத்தில் வெளியிடுவதாக இளைஞரின் உறவினர் மிரட்டியதால் சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியை பக்கத்து வீட்டை சேர்ந்த மணி என்ற இளைஞர் காதலித்து வந்தார். கடந்த ஆகஸ்டு மாதம் 31 ந்தேதி சிறுமியை ஆட்டோவில் கடத்திச்சென்று, சமயபுரம் கோவிலில் வைத்து … Read more

சான்றிதழ் சரிபார்ப்பு: மருத்துவ படிப்பு தேர்வு குழுவுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

மருத்துவ மேற்படிப்பில் வெளிநாடு வாழ் இந்தியர் ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்கும் அனைத்து விண்ணப்பதாரர்களின், வெளிநாடு வாழ் இந்தியருக்கான சான்றிதழ்களை சரிபார்க்க வேண்டும் என மருத்துவ படிப்பு தேர்வு குழுவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ மேற்படிப்பில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்த கிரீஷ்மா கோபால், ரோஹன் மகேஷ் உள்பட ஏழு பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு, தற்காலிக ஒதுக்கீட்டு பட்டியலை தேர்வுக்குழு வெளியிட்டது. இந்த பட்டியலை ரத்து செய்து, … Read more

சீர்காழி, தரங்கம்பாடி பகுதியில் 1.06 லட்சம் பேருக்கு மழை நிவாரணம்: அமைச்சர் மெய்யநாதன் அறிவிப்பு

கொள்ளிடம்: மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அடுத்த வேம்பகுடி, வேட்டங்குடி, இருவக்கொல்லை பகுதிகளில் மழை பாதிப்புகளை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது அவர் அளித்த பேட்டி: கொள்ளிடம் ஒன்றியத்தின் கிழக்கு பகுதி, சீர்காழி ஒன்றிய கிழக்கு பகுதி, கடற்கரையோர கிராமங்களில் மழைநீர் சூழ்ந்திருக்கிறது. முகாம்களில் பொதுமக்களை தங்க வைத்து உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் கொஞ்சம் கொஞ்சமாக இயல்புநிலை திரும்பி வருகிறது. கொள்ளிடத்தில் 10,000 ஹெக்டேர், சீர்காழியில் 10,500 ஹெக்டேர், செம்பனார்கோயிலில் … Read more

கரூர்: கழிவுநீர் தொட்டியில் சிக்கிய 3 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழப்பு

கான்கிரீட் கழிவுநீர் தொட்டியில் இறக்கப்பட்ட கட்டிட தொழிலாளியும், அவரை காப்பாற்ற முயன்ற இருவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அவர்களுக்கு நீதிகேட்டு ஊர்மக்களும் உறவினர்களும் போராட்டத்தில் இறங்கியுள்லனர். கரூரில் புதிய வீடொன்றுக்காக கான்கிரீட் கழிவுநீர் தொட்டி கட்டி முடிக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளது. அதில் கான்கிரீட் அமைக்க பயன்படுத்தப்பட்ட மரச்சாரமொன்று சிக்கியிருந்திருக்கிறது. அதை அகற்றுவதற்காக, தான்தோன்றி மலை பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளியான மோகன்ராஜ் என்பவர் இறங்கியுள்ளார். அப்போது கழிவுநீர் தொட்டியிலேயே மயக்கம் அடைந்திருக்கிறார் மோகன்ராஜ். அவரை காப்பாற்றுவதற்காக, தோரணக்கல்பட்டியை சேர்ந்த சிவா மற்றும் சிவக்குமார் ஆகியோரும் … Read more

கைலாஸா நாட்டில் ஓராண்டு பயிற்சியுடன் வேலைவாய்ப்பு!

நித்தியானந்தா கைலாஸா எனும் இந்து நாடு உருவாக்கி அதற்கு தானே அதிபராகவும் அறிவித்துக் கொண்டார். நித்தியானந்தாவை தேடப்படும் நபராக இந்தியா அறிவித்துள்ளது. தன் சீடர்களுக்கு அவ்வப்பொழுது சமூக ஊடகங்கள் மூலம் தோன்றி அருள் வழங்குவார். இந்த நிலையில் கைலாசாவில் வேலை வாய்ப்பு என்று வெளியான அறிவிப்பு தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.  இந்தியாவில் உள்ள பல்வேறு கைலாச கிளைகளுக்கு தகுந்த ஊதியத்துடன் கூடிய வேலைவாய்ப்பு என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஒரு வருட பயிற்சிக்குப் … Read more

காதலி கொலை.. உடலை 35 துண்டுகளாக வெட்டி வீசிய காதலன் பரபரப்பு வாக்குமூலம்..!

மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டம் வசாய், மாணிக்பூர் பகுதியை சேர்ந்த விகாஷ் என்பவரின் மகள் ஷ்ரத்தா (26). இவர், மும்பை மலாடு பகுதியில் உள்ள கால்சென்டரில் வேலை செய்தபோது, அப்தாப் அமீன் பூனாவாலா (28) என்ற இளைஞருடன் காதல் ஏற்பட்டது. இருவரும் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இவர்களின் காதலுக்கு பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் ஷ்ரத்தா, பெற்றோரை பிரிந்து வசாய் பகுதியில் காதலனுடன் தனியாக வசித்து வந்துள்ளனர். பின்னர் டெல்லி சென்று குடியேறியுள்ளனர். திருமணம் … Read more

மலேசிய காதலியை கரம் பிடித்த ராமநாதபுரம் இளைஞர்..! இந்திய கலாசாரத்தின்படி தாலி கட்டி டும் டும் டும்…

மலேசிய காதலியை ராமநாதபுரம் இளைஞர் இந்திய கலாசாரத்தின் படி திருமணம் செய்துக் கொண்டார். ராமநாதபுரம் மாவட்டம் பிள்ளைமடத்தைச் சேர்ந்த அருண்செல்வம் மாலத்தீவில் ஹோட்டலில் வேலைப்பார்த்த போது அங்கு மேலாளராக பணிபுரிந்த மலேசிய பெண் யீஷ்யானை காதலித்தார். இந்திய கலாசாரத்தின் மீது விருப்பம் கொண்ட யீஷ்யான் தமிழகத்தில் திருமணம் செய்துக்கொள்ள விரும்பியதால் இரண்டு குடும்பத்தார் சம்மதத்துடன் ராமநாதபுரத்தில் வைத்து இந்து முறைப்படி தாலி கட்டி திருமணம் நடந்தது. மணமகன் செண்டை மேளம் இசைக்க, மணமகள் சிங்கியும் இசைத்து மகிழ்ந்தனர். … Read more

“இத்தனை காலம் பணிபுரிந்த கவுரவ விரிவுரையாளர்களுக்கு தேர்வு எழுதுவதில் என்ன பிரச்சினை?” – பொன்முடி

சென்னை: “இவ்வளவு காலமாக ஆசிரியர்களாக இருந்த கவுரவ விரிவுரையாளர்களுக்கு தேர்வு எழுதுவதில் என்ன பிரச்சினை?” என்று உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையில் உள்ள கலை, அறிவியல் கல்லூரி முதல்வர்களுடன் தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி இன்று ஆலோசனையில் ஈடுபட்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: “காலை மற்றும் மாலை என இரண்டு வேளைகளில் கல்லூரிகளில் வகுப்பு நடத்தும் திட்டத்தை கொண்டுவந்தது திமுக அரசுதான். மாணவர்களுக்கு கல்லூரிகளில் இடம் … Read more

அடி மடியில்..கை வைத்த சேகர் பாபு; அரண்டுபோய் கிடக்கும் தீட்சிதர்கள்!

சென்னை தண்டையார்பேட்டையில் மாநகராட்சி சார்பில், சாலையோரம் குடியிருக்கும் மக்களுக்கு கொசுவலை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் இந்து அறநிலைய துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு கலந்து கொண்டு மக்களுக்கு கொசுவலைகளை வழங்கினார். இதன் பிறகு அமைச்சர் பி.கே.சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது: தமிழ்நாட்டில் கொரோனா காலத்திற்கு பிறகு, இந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் கோவில்களில் திருமணம் நடத்த அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. எந்த கோவிலில் அனுமதி வழங்கவில்லை என்றாலும் குறைந்த அளவு திருமணங்களை … Read more

தமிழகத்தில் 4 நாள்களுக்கு மழை தொடரும்: எச்சரிக்கும் வானிலை மையம்

கேரள பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல் நாளை மறுநாள் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 19 ஆம் … Read more