கோவை ஈஷா மையத்திற்கு ஷாரிக் உடன் வந்தது யார்? கால் டாக்ஸி டிரைவர் சொன்ன அதிர்ச்சி தகவல்!

மங்களூரில் ஆட்டோவில் குக்கர் குண்டு வெடிக்க வைத்து தீவிரவாத தாக்குதல் முயற்சியில் முகமது ஷாரிக் என்பவன் ஈடுபட்டான். இந்த சம்பவம் அரங்கேறும் பொழுது எதிர்பாராத விதமாக குண்டு வெடித்ததில் படுகாயம் அடைந்த முகமது ஷாரிக் தற்பொழுது மருத்துவமனையில் சிகிச்சை வருகிறான். இந்த நிலையில் இந்த குண்டுவெடிப்பில் தொடர்புடைய ஷாரிக் கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்திற்கு சென்றது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். … Read more

சுங்கச்சாவடி கட்டணம் 40% வரை குறையும்: அமைச்சர் எ.வ.வேலு தகவல்

வேலூர்: சுங்கச்சாவடி கட்டணம் 40 சதவீதம் வரை குறைக்கப்போவதாக மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளதாக தமிழக நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். வேலூர் அரசினர் தொழிற் பயிற்சி வளாகத்தில் தொழிற்சாலைகளின் தொழில்நுட்பத்திற்கு ஏற்ற பயிற்சி பணிமனை கட்டுமானப் பணிகள் ரூ.3.73 கோடியில் நடைபெற்று வருகிறது. இதனை பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று காலை ஆய்வு செய்தார். இந்த ஆய்வு தொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் எ.வ.வேலு கூறும்போது, ”தமிழகத்தில் … Read more

கட்டணம் செலுத்தாத மாணவர்களை தேர்வு எழுத அனுமதி மறுப்பு: கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து போராட்டம்

தாம்பரம்: தாம்பரம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் கட்டணம் செலுத்தாத மாணவ, மாணவிகளை செமஸ்டர் தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டது. இதை கண்டித்து மாணவர்கள் போராட்டம் ஈடுபட்டனர். தாம்பரம் அடுத்த புது பெருங்களத்தூர் ஜி.கே.எம் நகர் பகுதியில் தனியார் கல்லூரி உள்ளது. இங்கு, ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரியில் நேற்று செமஸ்டர் தேர்வுகள் நடைபெற்றது. அப்போது, தேர்வு எழுத வந்த மாணவ, மாணவிகள் சிலரை, கட்டணம் செலுத்தாததால், கல்லூரி நிர்வாகம் தேர்வு எழுத … Read more

அப்போவும், இப்போவும் விசாரணை மட்டுமே… மோசடி வழக்கில் நடிகர் சூரி வேதனை

அப்போவும், இப்போவும் விசாரணை மட்டுமே… மோசடி வழக்கில் நடிகர் சூரி வேதனை Source link

17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது.!

கோவை மாவட்டத்தில் 17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபரை போக்சோவில் போலீசார் கைது செய்தனர். கோவை மாவட்டம் குப்பம்பாளையம் பகுதியை சேர்ந்த 21 வயது வாலிபருக்கும், அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமிக்கும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதையறிந்த சிறுமியின் பெற்றோர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் கடந்த ஆண்டு சிறுமியை வாலிபர் திருமணம் செய்து கொண்டார். ஆனால் சிறுமிக்கு தற்பொழுது 17 வயதான … Read more

எதிர்கால சந்ததியினருக்காக தொல்லியல் சின்னங்களை பாதுகாக்க வேண்டும்: உயர் நீதிமன்றம்

மதுரை: எதிர்கால சந்ததியினருக்காக தொல்லியல் சின்னங்களை பாதுகாக்க வேண்டியது அரசுகளின் கடமை என உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. திருச்சி மலைக்கோட்டை பொதுநலச் சங்கச் செயலாளர் ஆர்.சவுந்தராஜன் தாக்கல் செய்த மனு: திருச்சியின் அடையாளமான மலைக்கோட்டையில் தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள பல்லவர் குகைக் கோயில் உள்ளது. இந்த குகைக் கோயிலை ஒட்டி கட்டிடம் கட்டப்படுகிறது. இந்தக் கட்டிடத்தால் குகைக் கோயிலுக்கு பாதிப்பு ஏற்படும். எனவே, குகைக் கோயிலை ஒட்டியுள்ள கட்டுமானங்களை அகற்ற உத்தரவிட வேண்டும் … Read more

அரசு மருத்துவமனைகளில் இதய அறுவை சிகிச்சை இரவிலும் செய்யக்கோரி வழக்கு: அரசு செயலர் பதிலளிக்க உத்தரவு

மதுரை: அரசு மருத்துவமனைகளில் இரவிலும் இதய அறுவை சிகிச்சை செய்யும் வசதியை ஏற்படுத்தக் கோரிய வழக்கில், அரசு செயலர் பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை, கே.கே.நகரைச் சேர்ந்த வெரோனிகா மேரி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: என் கணவருக்கு இரவில் நெஞ்சுவலி ஏற்பட்டது. மதுரை அரசு மருத்துவமனை இதயப்பிரிவில் உரிய வல்லுநர்கள் இல்லாததால் காலையில் தான் அறுவை சிகிச்சை செய்ய முடியும். அவசரத்திற்கு தனியார் மருத்துவமனை அழைத்துச் செல்லுமாறு கூறினர். அரசு மருத்துவமனைகளில் … Read more

ஒப்பந்த செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய முடியாது: மா.சுப்பிரமணியன் தகவல்

புதுக்கோட்டை: அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த முறையில் பணிபுரியும் செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய முடியாது என மாநில மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டையில் இன்று (நவ.24) ஆட்சியர் கவிதா ராமு தலைமையில், பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் முன்னிலையில் மருத்துவக் கட்டிடங்கள் திறப்பு விழா நடைபெற்றது. விழாவில், ஆதனக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.48 லட்சத்தில் கட்டப்பட்ட புறநோயாளிகள் பிரிவு, கொடும்பாளூரில் ரூ.25 லட்சத்தில் கட்டப்பட்ட செவிலியர் குடியிருப்பு … Read more

டெய்சி, சூர்யா சிவா.. 3 மணி நேரத்தில் பஞ்சாயத்து கிளியர்!

திமுக எம்.பி திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா. தற்போது தமிழ்நாடு பாஜக ஓபிசி பிரிவு மாநில பொதுச்செயலாளராக உள்ளார். பாஜவுக்கு சென்ற பிறகு திமுக தலைமை மற்றும் முக்கிய நிர்வாகிகள் குறித்து கடுமையாக விமர்சித்து பேசி வருகிறார். இந்நிலையில் தமிழ்நாடு பாஜக சிறுபான்மையினர் அணி தலைவராக உள்ள டெய்சி சரண் என்பவரை ஆபாசமாக பேசியும், அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையிலும் சூர்யா சிவா பேசி உள்ள ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. … Read more

தனியார் பள்ளி பஸ் கவிழ்ந்து 18 மாணவர்கள் படுகாயம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே 40 மாணவர்களுடன் தனியார் பள்ளி பஸ்சை நீலமங்கலத்தை சேர்ந்த கணேசன்(58) நேற்று மாலை ஓட்டி சென்றார். சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, மினி டெம்போ மோதுவதுபோல் சென்றதால் பஸ்சை டிரைவர் திருப்பினார். அப்போது எதிர்பாராதவிதமாக செண்டர் மீடியன் மீது மோதி கவிழ்ந்தது. உள்ளே இருந்த மாணவர்கள் கூச்சலிட்டனர். அவ்வழியாக சென்ற பொதுமக்கள் திரண்டு பஸ் கண்ணாடிகளை உடைத்து மாணவர்களை வெளியேற்றினர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. கலெக்டர் ஷ்ரவன்குமார், எஸ்பி பகலவன் வந்து … Read more