இன்று முதல் தொடர்ந்து 6 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை..!!

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இக்கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கார்த்திகை தீபத்திருவிழா கோவில் வளாகத்திற்கு உள்ளேயே நடைபெற்றது. சாமி உலா, தேரோட்டம் ஆகியவை கோவிலின் 5-ம் பிரகாரத்தில் நடைபெற்றது. கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வு செய்யப்பட்டு உள்ளதால் வழக்கம் போல் கார்த்திகை தீபத் திருவிழா … Read more

புழல் பகுதிகளில் சட்டவிரோத கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: புழல் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள தொழிற்சாலை கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு 4 வாரங்களி்ல் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுகா கண்ணம்பாளையம் காங்கிரஸ் கட்சியைச்சேர்ந்த எம்.மல்லிகா, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருந்ததாவது: புழல் ஊராட்சி ஒன்றியத்தில் கவுன்சிலராக உள்ளேன். எங்கள் பகுதியில் எந்த அனுமதியும் இன்றிதொழிற்சாலைகளுக்கான கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. புழல் பகுதி, சிஎம்டிஏ … Read more

வெள்ளி பெரிய ரிஷப வாகனத்தில் அண்ணாமலையார் பவனி: கடும் குளிரிலும் பக்தர்கள் தரிசனம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழாவின் 5ம் நாள் உற்சவ விழாவில்  வெள்ளி பெரிய ரிஷப வாகனத்தில் உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், கடந்த 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தீபத்திருவிழாவின் 5ம் நாள் உற்சவத்தில் சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. காலை 11 மணியளவில், கண்ணாடி ரிஷப வாகனத்தில் விநாயகரும்,  சந்திரசேகரரும் எழுந்தருளி, பவனி … Read more

இனி மின் இணைப்புக்கு 'ரெசிடுயல் கரென்ட் டிவைஸ்' கட்டாயம் – மின்சாரத்துறை அதிரடி உத்தரவு!

மின் கசிவால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுப்பதற்காக புதிய மின் இணைப்பு பெறுபவர்கள் ‘ரெசிடுயல் கரென்ட் டிவைஸ்’ என்ற கருவியை பொறுத்த வேண்டும் என்று, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிவிப்பில், தமிழ்நாட்டில் மின் பழுது மற்றும் மின்கசிவினால் ஏற்படும் மின்விபத்துகளால் உண்டாகும் மனித உயிரிழப்புகளை தடுக்க, தமிழ் நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம், மின்சாரப் பகிர்மான விதித் தொகுப்பு 16(2A)ன் படி, புதிய மின்னிணைப்பு பெறுபவர்கள் ஆர்.சி.டி (RCD) என்றழைக்கக்கூடிய ரெசிடுயல் … Read more

நண்பன் பட பாணியில் அழையா விருந்தாளியாக சென்ற வாலிபருக்கு நேர்ந்த கொடுமையை பாருங்க..!

விஜய் நடிப்பில் வெளியான ‘நண்பன்’ திரைப்படத்தில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் ஆகியோர் திருமணத்திற்கு அழைக்கப்படாமல் வரும் காட்சியை நினைவில் வைத்திருக்க வேண்டும். பின்னர் அவர்கள் அழைக்கப்படாமல் நடந்த திருமணம், அவர்களது சொந்த கல்லூரி முதல்வரின் மகளின் திருமணம் என்பது தெரியவரும். இதேபோன்ற ஒரு சம்பவம் போபாலில் நிகழ்ந்துள்ளது. மத்திய பிரதேச மாநிலம் போபாலில் எம்பிஏ படிக்கும் மாணவர் ஒருவர் இதேபோன்ற முயற்சியில் சிக்கினார். அவர் அழைக்கப்படாமல் ஒரு திருமணத்திற்குள் நுழைந்து பிடிபட்டார். அப்புறம் என்ன, திருமண வீட்டார் … Read more

புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்: டிசம்பர் 8-ம் தேதி தமிழகத்தை நெருங்கும்

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் டிசம்பர் 5-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். இது அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும். பின்னர், மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து, டிசம்பர் 8-ம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதிகளை நெருங்கும். … Read more

மணக்குள விநாயகர் கோயிலுக்கு புதிய யானையை அரசு வாங்காது: முதல்வர் ரங்கசாமி பேட்டி

புதுச்சேரி: புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயிலுக்கு புதிய யானையை அரசு வாங்காது என்று முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமி பக்தர்களின் செல்லப்பிள்ளையாக இருந்து வந்தது. கடந்த சில ஆண்டுகளாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்த லட்சுமி நேற்று முன்தினம் காலை நடைபயணம் மேற்கொண்டபோது, திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தது. ஆயிரக்கணக்கானோர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தியபின், உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகரின் கோயிலுக்கு பெருமை சேர்க்கும் வகையில் … Read more

திருநங்கைகள் என்றாலே கடுமையான ஜெயில் தண்டனை தரப்படுகிறது – கல்கி சுப்பிரமணியம்

திருநங்கைகள் என்றாலே கடுமையான ஜெயில் தண்டனை தரப்படுகிறது – கல்கி சுப்பிரமணியம் Source link

சட்ட விரோதமாக தள்ளு வண்டியில் மது விற்பனை.! 3 பேர் கைது.!

ஈரோடு மாவட்டத்தில் சட்ட விரோதமாக தள்ளுவண்டியில் மது விற்பனை செய்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதை தடுப்பதற்காக காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் சிலர் பல்வேறு வகைகளில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் ஈரோடு மாவட்டம் கடத்தூர் பகுதியில் சிலர் தள்ளுவண்டிகளில் மது விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலையடுத்து கடத்தூர் போலீசார், அப்போ கூதியில் தீவிர ரோந்து பணியில் … Read more