சென்னை மழை நீரை கண்காணிக்க கிளவுட் சோர்சிங்! ஐஐடி மாணவர்களுடன் இணைந்த மாநகராட்சி!

சென்னை நகரில் மழை நீர் தேங்குவதை கண்காணிக்க கிளவுட் சோர்சிங் மூலம் வாட்ஸ் அப் தகவல்கள் அனுப்புவதற்கான திட்டத்தை சென்னை மாநகராட்சியுடன் இணைந்து சென்னை ஐஐடி தொடங்கியுள்ளது. இதன் மூலம் நிகழ்நேர வெள்ள முன்னெச்சரிக்கைக்கு உதவும் என தெரிவிக்கப்படுகிறது. 200 வார்டுகளும் 15 மண்டலங்களும் கொண்ட சென்னை மாநகராட்சி கடந்த 20 வருடங்களில் திட்டமிடப்படாமல் அப்போதைய தேவைக்கு ஏற்றார் போல உருவாக்கப்பட்டது. இதனால் நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்குவதும், தாழ்வான பகுதிகளில் கட்டுமானங்கள் எழுவதும் வழக்கமாகி … Read more

கால்பந்து வீராங்கனை பிரியா மரணத்தை பா.ஜ.க அரசியலாக்க வேண்டாம்; அமைச்சர் மா.சு

கால்பந்து வீராங்கனை பிரியா மரணத்தை பா.ஜ.க அரசியலாக்க வேண்டாம்; அமைச்சர் மா.சு Source link

விரும்பிய கட்டணத்தில் வாடகை காரை தேர்ந்தெடுத்து பயணிக்க புதிய செயலி – சென்னையில் அறிமுகம்

விரும்பிய கட்டணத்தில் வாடக காரைத் தேர்ந்தெடுக்க புதிய செயலி சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை போன்ற பெருநகரங்களில் வசிப்பவர்களில் பெரும்பாலானவர்கள் அவசர பயணத்திற்காக ஓலா, ஊபர், ரேபிடோ போன்ற வாடகை கார்களை பயன்படுத்துவார்கள். ஆனால் மழை மற்றும் போக்குவரத்து நெரிசல் மற்றும் தேவை அதிகரிக்கும் போது வாடகை கார்கள் கட்டணத்தை உயர்த்துவதும் உண்டு. இதனால் வாடிக்கையாளர்கள் பல்வேறு சிரமங்களை எதிர் கொண்டு சில சமயம் வாடகை கட்டணம் தொடர்பாக டிரைவர்கள் இடையே வாய் தகராறு ஏற்படுவதும் உண்டு. இந்நிலையில் … Read more

16,000 பேருக்கு வேலை வாய்ப்பு – அமைச்சர் தங்கம் தென்னரசு..!!

உலகிலேயே மிகப்பெரிய ஐபோன் தொழிற்சாலை சீனாவில் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் மூடப்படும் நிலையில் இந்தியாவில் புதிய ஆலை தொடங்கப்படுகிறது. இந்தியாவிலேயே மிகப்பெரிய ஐ-போன் தயாரிப்பு தொழிற்சாலை ஓசூரில் தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 60,000 பேர் ஒரே இடத்தில் பணிபுரியும் வகையில் பிரம்மாண்டமான தொழிற்சாலையை டாடா குழுமம் அமைக்கிறது. இந்நிலையில் ஓசூரில் அமைய உள்ள புதிய ஆலை பிரமாண்டமாக அமையவுள்ளதாகவும், மூன்று மாதங்களில் 16 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படுகிறதாகவும் தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு … Read more

அரை மயக்கத்தில் திருமணம்.. ஆபாச வீடியோ மிரட்டல்.. 17 வயது சிறுமி தற்கொலை..! உடலை வாங்க மறுத்து போராட்டம்

பெரம்பலூர் அருகே மயக்க மருந்து கொடுத்து ஆட்டோவில் கடத்திச்சென்று கட்டாய திருமணம் செய்து வைக்கப்பட்ட சிறுமி மீட்கப்பட்ட நிலையில் , ஆபாச வீடியோவை இணையதளத்தில் வெளியிடுவதாக இளைஞரின் உறவினர் மிரட்டியதால் சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியை பக்கத்து வீட்டை சேர்ந்த மணி என்ற இளைஞர் காதலித்து வந்தார். கடந்த ஆகஸ்டு மாதம் 31 ந்தேதி சிறுமியை ஆட்டோவில் கடத்திச்சென்று, சமயபுரம் கோவிலில் வைத்து … Read more

சான்றிதழ் சரிபார்ப்பு: மருத்துவ படிப்பு தேர்வு குழுவுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

மருத்துவ மேற்படிப்பில் வெளிநாடு வாழ் இந்தியர் ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்கும் அனைத்து விண்ணப்பதாரர்களின், வெளிநாடு வாழ் இந்தியருக்கான சான்றிதழ்களை சரிபார்க்க வேண்டும் என மருத்துவ படிப்பு தேர்வு குழுவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ மேற்படிப்பில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்த கிரீஷ்மா கோபால், ரோஹன் மகேஷ் உள்பட ஏழு பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு, தற்காலிக ஒதுக்கீட்டு பட்டியலை தேர்வுக்குழு வெளியிட்டது. இந்த பட்டியலை ரத்து செய்து, … Read more

சீர்காழி, தரங்கம்பாடி பகுதியில் 1.06 லட்சம் பேருக்கு மழை நிவாரணம்: அமைச்சர் மெய்யநாதன் அறிவிப்பு

கொள்ளிடம்: மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அடுத்த வேம்பகுடி, வேட்டங்குடி, இருவக்கொல்லை பகுதிகளில் மழை பாதிப்புகளை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது அவர் அளித்த பேட்டி: கொள்ளிடம் ஒன்றியத்தின் கிழக்கு பகுதி, சீர்காழி ஒன்றிய கிழக்கு பகுதி, கடற்கரையோர கிராமங்களில் மழைநீர் சூழ்ந்திருக்கிறது. முகாம்களில் பொதுமக்களை தங்க வைத்து உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் கொஞ்சம் கொஞ்சமாக இயல்புநிலை திரும்பி வருகிறது. கொள்ளிடத்தில் 10,000 ஹெக்டேர், சீர்காழியில் 10,500 ஹெக்டேர், செம்பனார்கோயிலில் … Read more

கரூர்: கழிவுநீர் தொட்டியில் சிக்கிய 3 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழப்பு

கான்கிரீட் கழிவுநீர் தொட்டியில் இறக்கப்பட்ட கட்டிட தொழிலாளியும், அவரை காப்பாற்ற முயன்ற இருவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அவர்களுக்கு நீதிகேட்டு ஊர்மக்களும் உறவினர்களும் போராட்டத்தில் இறங்கியுள்லனர். கரூரில் புதிய வீடொன்றுக்காக கான்கிரீட் கழிவுநீர் தொட்டி கட்டி முடிக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளது. அதில் கான்கிரீட் அமைக்க பயன்படுத்தப்பட்ட மரச்சாரமொன்று சிக்கியிருந்திருக்கிறது. அதை அகற்றுவதற்காக, தான்தோன்றி மலை பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளியான மோகன்ராஜ் என்பவர் இறங்கியுள்ளார். அப்போது கழிவுநீர் தொட்டியிலேயே மயக்கம் அடைந்திருக்கிறார் மோகன்ராஜ். அவரை காப்பாற்றுவதற்காக, தோரணக்கல்பட்டியை சேர்ந்த சிவா மற்றும் சிவக்குமார் ஆகியோரும் … Read more

கைலாஸா நாட்டில் ஓராண்டு பயிற்சியுடன் வேலைவாய்ப்பு!

நித்தியானந்தா கைலாஸா எனும் இந்து நாடு உருவாக்கி அதற்கு தானே அதிபராகவும் அறிவித்துக் கொண்டார். நித்தியானந்தாவை தேடப்படும் நபராக இந்தியா அறிவித்துள்ளது. தன் சீடர்களுக்கு அவ்வப்பொழுது சமூக ஊடகங்கள் மூலம் தோன்றி அருள் வழங்குவார். இந்த நிலையில் கைலாசாவில் வேலை வாய்ப்பு என்று வெளியான அறிவிப்பு தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.  இந்தியாவில் உள்ள பல்வேறு கைலாச கிளைகளுக்கு தகுந்த ஊதியத்துடன் கூடிய வேலைவாய்ப்பு என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஒரு வருட பயிற்சிக்குப் … Read more

காதலி கொலை.. உடலை 35 துண்டுகளாக வெட்டி வீசிய காதலன் பரபரப்பு வாக்குமூலம்..!

மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டம் வசாய், மாணிக்பூர் பகுதியை சேர்ந்த விகாஷ் என்பவரின் மகள் ஷ்ரத்தா (26). இவர், மும்பை மலாடு பகுதியில் உள்ள கால்சென்டரில் வேலை செய்தபோது, அப்தாப் அமீன் பூனாவாலா (28) என்ற இளைஞருடன் காதல் ஏற்பட்டது. இருவரும் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இவர்களின் காதலுக்கு பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் ஷ்ரத்தா, பெற்றோரை பிரிந்து வசாய் பகுதியில் காதலனுடன் தனியாக வசித்து வந்துள்ளனர். பின்னர் டெல்லி சென்று குடியேறியுள்ளனர். திருமணம் … Read more