வானிலை முன்னறிவிப்பு: நவ.21, 22 தேதிகளில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் வரும் 21 மற்றும் 22 ஆம் தேதிகளில் 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதன் அருகில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக் கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகக்கூடும். பின்னர் … Read more

காலை 10.30 மணிக்கு ஆஜராக வேண்டும்: சவுக்கு சங்கருக்கு என்ன நிபந்தனை!

நீதித்துறையில் ஊழல் நிறைந்து இருப்பதாக சமூக வலைதளத்தில் பதிவிட்ட அரசியல் விமர்சகரும், பத்திரிகையாளருமான சவுக்கு சங்கர் தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, சவுக்கு சங்கருக்கு 6 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்தனர். இதையடுத்து, மதுரை சிறையில் அடைக்கப்பட்ட அவர், கடலுார் சிறைக்கு மாற்றப்பட்டார். தொடர்ந்து, தனக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் மேல்முறையீடு செய்தார். அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை … Read more

தமிழகத்தில் மழை தொடருமா? வானிலை ஆய்வு மையம் ரிப்போர்ட்

கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. மழை அதிகம் பெய்த மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று தென்கிழக்கு வங்கக்கடல்  மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே பகுதிகளில் நிலவுகிறது. இது மேற்கு – வடமேற்கு  திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்தியமேற்கு வங்க கடல் பகுதிகளில் அடுத்த  … Read more

பெரியார் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி இயக்ககத்தில் முறைகேடு: பல்கலைக்கழக துணை பதிவாளர் பணிநீக்கம்

சேலம் : அதிமுக ஆட்சியில் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி இயக்ககத்தில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக பல்கலைக்கழகத்தின் துணை பதிவாளர் ராமன் என்பவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தொலைதூரக் கல்வி இயக்ககத்தில் கடந்த 2013-ம் ஆண்டு பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக புகார்கள் எழுந்தன. உரிய அங்கீகாரம் இல்லாத தொழிநுட்பப் படிப்புகள் நடத்தியது, கல்வித் தகுதி இல்லாத வெளிமாநில மாணவர்களை தொலைதூரக் கல்வியில் சேர்த்தது. படிப்பு முடித்ததற்கான சான்றிதழ் வழங்கியது … Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – அமைச்சர் முக்கிய அறிவிப்பு.!

திருவாரூர் மாவட்டத்தில் 69ஆவது இந்திய கூட்டுறவு வார நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பயனாளிகளுக்கு கடன் உதவிகளை வழங்கினார். தொடர்ந்து பேசிய அமைச்சர், தற்போது ரேஷன் கடைகளில் விரல் ரேகை பதிவு மூலம் பொருட்கள் வழங்கப்படுகிறது. ஆனால் கூலி வேலைக்கு செல்வோர் மற்றும் முதியவர்களின் விரல் ரேகை சரியாக பதிவு ஆகாததால் பொருட்கள் வாங்குவதில் பிரச்சினை இருக்கிறது. இந்த நிலையில் இந்த சிரமத்தை தவிர்க்கும் வகையில் கருவிழி பதிவு மூலம் ரேஷன் பொருட்கள் … Read more

தொடரும் சோகம்..!! மருத்துவக் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை!!

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் வசித்து வருபவர் அருள்மணிகுமார். இவரது மகன் நிர்மல் குமார் (25). இவர் சேலம் அரியானூர் அருகே உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் பிசியோதெரபி 2-ம் ஆண்டு படித்து வந்தார். தினமும் ஊருக்கு சென்று வர முடியாது என்பதால், கல்லூரிக்கு எதிரே உள்ள தனியார் விடுதியில் ரூம் எடுத்து தங்கி படித்து வந்தார். நிர்மல்குமாரை, தினமும் பெற்றோர் செல்போனில் தொடர்பு கொண்டு பேசுவார். அதுபோல் நேற்று முன்தினம் காலையில் இருந்து நிர்மல்குமாருக்கு செல்போனில் … Read more

ஒரு குழந்தைகூட துன்புறுத்தப்படாமல் பாதுகாப்போம்: அமைச்சர் அன்பில் மகேஸ்

சென்னை: ஒரு குழந்தைகூட துன்புறுத்தப்படாமல் பாதுகாப்போம் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். சர்வதேச குழந்தைகளுக்கு எதிரான வன்முறை தடுப்பு தினத்தை முன்னிட்டு தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நவ.19 சர்வதேச குழந்தைகளுக்கு எதிரான வன்முறை தடுப்பு தினம். குழந்தைகளை உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் துன்புறுத்துவது தண்டனைக்குரிய குற்றம். குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்து அவர்களின் கல்விக்கு உதவ வேண்டியது நமது கடமை. எந்தக் குழந்தையும் … Read more

தம்மாத்துண்டு செடி பாஜக.. கிழி கிழினு கிழித்த சீமான்.. அண்ணாமலை அப்செட்

செய்தியார்களை சந்தித்த சவுக்கு சங்கர் ஜாமீன் மற்றும் பாஜகவை குறித்த கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். குறிப்பாக தமிழகத்தில் பாஜக மூன்றாவது கட்சியாக உயர்ந்துள்ளதாக அக்கட்சி கருதுகிறதாக கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சீமான், பாஜக அப்படி சொல்லிக்க வேண்டியதுதான். அப்படி பெருமை பேசும் பாஜக வரும் 2024 தேர்தலில் அல்லது அதிமுகவின் முதுகு பின்னாடி நின்று போட்டியிடப்போகிறது. நீங்கள் ஏன் வளரும் கட்சி என்று சொல்கிறீர்கள். என்னை பொறுத்தவரையில் பாஜக எனது மரத்தின் நிழலில் வளரும் குட்டை செடி, … Read more

பேருந்து மோதி பெண் உயிரிழப்பு!

திருவல்லிக்கேணி நல்லதம்பி தெருவில் வசித்து வருபவர் சிவாரெட்டி(27). இவரது மனைவி லலிதா (22). ஆந்திராவை பூர்விகமாக கொண்ட இவர்களுக்கு திருமணமாகி 1 ஆண்டுகள் ஆகிறது. மெரினா கடற்கரையில் அமைந்துள்ள INS அடையார் கடற்படை தளத்தில் சிவாரெட்டி பணியாற்றி வருகிறார். நேற்று மாலை தனது 8 மாத கர்ப்பிணியான மனைவி லலிதாவுடன் இருசக்கர வாகனத்தில் மெரினா கடற்கரைக்கு சென்றுள்ளார். பின்னர் கடற்கரையில் இருந்துவிட்டு இரவு 8.30.மணியளவில் இருவரும் பைக்கில் புறப்பட்டு வீட்டிற்கு சென்ற போது, காமராஜர் சாலை மாநிலக்கல்லூரி … Read more

பசுமை நடை, சைக்கிள் பயிற்சி பாதை, படகு உணவகம்; சுற்றுலா மையமாகிறது புத்தேரி பெரிய குளம்: ரூ.4 கோடியில் திட்டம்; கலெக்டர்,ஆணையர் ஆய்வு

நாகர்கோவில்: ரூ.4 கோடியில் படகு உணவகம், அலங்கார பசுமை நடை பாதைகள், சைக்கிள் பயிற்சி பாதைகளுடன், புத்தேரி பெரிய குளம் சுற்றுலா மையமாக உருவாக்கப்பட உள்ளது. நாகர்கோவில் மாநகராட்சி மிகவும் குறுகலான நெருக்கடியான நகரம் என்பதால், பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ள போதுமான இடம் இல்லை. அண்ணா விளையாட்டரங்கம் மற்றும் எஸ்.எல்.பி பள்ளி மைதானத்தில் நடை பயிற்சி மேற்கொண்டாலும், அங்கும் அடிக்கடி பயிற்சி மேற்கொள்ள முடிவதில்லை.  பொதுமக்கள் பொழுது போக்க வேண்டும் என்றால், வேப்பமூடு சர்.சி.பி. ராமசாமி ஐயர் … Read more