வேதனை.. பெட்டி பெட்டியாக தக்காளிகளை சாலையோரம் கொட்டிச் செல்லும் விவசாயிகள்..!

கோவை மாவட்டம், மதுக்கரை ஒன்றியத்துக்கு உட்பட்ட நாச்சிபாளையத்தில் காய்கறி கமிஷன் மண்டிகள் இயங்கி வருகிறது. இந்த மார்க்கெட்டில் 50-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளது. இந்த மார்க்கெட்டுக்கு நாச்சிபாளையத்தை சுற்றியுள்ள வழுக்குபாறை, வேலந்தாவளம், கண்ணமநாயக்கனூர், திருமலையம் பாளையம், பிச்சனூர், சொக்கனூர், அரிசிபாளையம், பாலத்துறை, மதுக்கரை போன்ற பகுதியில் இருந்து தினமும் 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் காய்கறிகள் கொண்டு வருகின்றனர். குறிப்பாக தக்காளி அதிகளவில் வருகிறது. கடந்த சில தினங்களாக மார்க்கெட்டில் தக்காளியின் விலை கடுமையாக குறைந்தே காணப்பட்டது. இதனால் … Read more

ஓபிஎஸ் எந்த நிவாரணமும் பெற தகுதி இல்லாதவர்: பொதுக்குழு வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் இபிஎஸ் பதில் மனு

புதுடெல்லி: கட்சி அலுவலகத்தை சூறையாடிய ஓ.பன்னீர்செல்வம் எந்த நிவாரணமும் பெற தகுதி இல்லாதவர் என்று உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவுக்கு எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், “அதிமுக கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்களில் பெரும்பான்மையினர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக உள்ளனர். எனவே, ஓ.பன்னீர்செல்லம் தாக்கல் … Read more

மாற்றுத்திறன் மாணவர்களுக்கான பயிற்சியாளர்களுக்கு ஊதிய உயர்வு? அன்புமணி ராமதாஸ் கோரிக்கை!

மாற்றுத்திறன் மாணவர்களுக்கான பயிற்சியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலைவர் வலியுறுத்தியுள்ளார் இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்ட மாற்றுத்திறன் மாணவர்களுக்கான பயிற்சியாளர்கள் தங்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக வலியுறுத்தி வரும் போதிலும், அவர்களின் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றாதது வருத்தமளிக்கிறது. ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தில் பணியாற்றும் பிற பணியாளர்கள் அனைவருக்கும் 10.11.2021, 10.11.2022 ஆகிய … Read more

காவல் துறைக்கு சுதந்திரம் கொடுங்கள் – அரசுக்கு பழனிசாமி வலியுறுத்தல்

இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “சென்னை எழும்பூர் காவல் நிலைய வாசலிலேயே, விக்கி என்ற விக்னேஷ் என்ற வாலிபர் மர்மநபர்களால் நேற்று வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த படுபாதக செயலை காவல் நிலையத்தில் இருந்த போலீசார் சி.சி.டி.வி. கேமரா மூலம் பார்த்துக் கொண்டிருந்த நிலையில் கொலையை தடுக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. சாலையில் செல்லும் யாருடைய உயிருக்கும் பாதுகாப்பில்லாத நிலையில், இந்த ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு அடைந்துள்ளது வெட்கக்கேடானதாகும். கடந்த ஓரிரு நாட்களில் மட்டும் எழும்பூர் காவல் … Read more

பரமக்குடி சுகாதாரத்துறை சார்பில் நூற்றாண்டு நினைவுச்சின்ன வடிவில் ஆயிரம் ஊழியர்கள் நின்று சாதனை: 15 நிமிடங்களில் அசத்தல்

பரமக்குடி: பரமக்குடி சுகாதாரத்துறை சார்பில் நூற்றாண்டு நினைவுச்சின்ன வடிவில் ஆயிரம் ஊழியர்கள் 15 நிமிடங்களில் நின்று சாதனை நிகழ்த்தினர். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில், பொது சுகாதார மாவட்ட நூற்றாண்டு விழா நடைபெற்றது. கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமை வகித்தார். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் விழாவை துவக்கி வைத்து நூற்றாண்டு மலரை வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து, பரமக்குடி பொது சுகாதாரத்துறை நூற்றாண்டு விழாவை … Read more

எம்எல்ஏ ஆக வேண்டும்: ஓபிஎஸ்-க்கு ஷாக் கொடுத்த 6 வயது சிறுவன்

எம்எல்ஏ ஆக வேண்டும் ஓபிஎஸ்ஸை சந்தித்து விருப்பம் தெரிவித்து 6 வயது சிறுவன் ஆச்சரியப்படுத்தினான். தேனி மாவட்டம் கைலாசப்பட்டியில் உள்ள பண்ணை வீட்டில் கட்சி நிர்வாகிகளை சந்திப்பதற்காக ஓ.பன்னீர்செல்வம் தனது பண்ணை வீட்டிற்கு வருகை தந்தார். அப்போது கட்சியின் நிர்வாகிகளுடன் வந்த ஆறு வயது சிறுவனை நலம் விசாரித்த ஓபிஎஸ், நீ என்ன ஆகப்போற என்று கேட்டார். அதற்கு அந்த ஆறு வயது சிறுவன் எம்எல்ஏ ஆக வேண்டும் எனக் கூறியதை கேட்டு புன்னகையுடன் அங்கிருந்து நகர்ந்து … Read more

மானியம் வேணும்னா இதைப் பண்ணுங்க… மின்சார கணக்கீடு- ஆதார் இணைப்பது எப்படி?

மானியம் வேணும்னா இதைப் பண்ணுங்க… மின்சார கணக்கீடு- ஆதார் இணைப்பது எப்படி? Source link

"கூகுள் பே மூலம் பணம் அனுப்பு." ஸ்மார்ட் திருடர்களால் பீதியில் கோவை.! இருட்டில் அரங்கேறும் பகீர் சம்பவங்கள்.! 

சமீபகாலமாகவே கோவை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வழிப்பறி கொள்ளை போன்ற சம்பவங்கள் அதிகமாக நடந்து வருகிறது. இது பற்றி, போலீசார் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும் கூட இந்த குற்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்தபடியே இருக்கிறது. அந்த வகையில் கோவை மாவட்டம் நீலாம்பூர் செல்லும் சாலையில் வாகன ஓட்டிகளை ஒரு கும்பல் தொடர்ந்து அச்சுறுத்தி வருவதாக கூறப்படுகிறது. இரவு 10 மணிக்கு மேல் பணி முடித்துவிட்டு வீட்டிற்கு செல்லும் நபர்களை குறி வைத்து இந்த … Read more

காதலனுடன் ஓட்டம் பிடித்த மகள்: மருந்து குடித்து பெற்றோர் தற்கொலை..!

சிதம்பரம் அருகே, நாளை நிச்சயதார்த்தம் நடக்க இருந்த நிலைடில் மகள் காதலனுடன் சென்றதால் வேதனையடைந்த பெற்றோர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே வேலங்கிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி(65). இவர், தனது மனைவி சுமதியுடன் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். சேகர் என்பவருக்கு சொந்தமான வயலில் இறந்து கிடந்த இருவரது உடலையும் மீட்ட புதுச்சத்திரம் போலீசார், பிரேத பரிசோதனைக்காக பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் … Read more

தமிழகம் முழுவதும் 1080 மையங்களில் நடைபெற்ற குரூப் 1 தேர்வு..!

தமிழகம் முழுவதும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் குரூப் 1 முதல் நிலை தேர்வு நடைபெற்றது. 18 துணை ஆட்சியர்கள், 26 துணை காவல் கண்காணிப்பாளர்கள், 25 வணிகவரித்துறை உதவி ஆணையர்கள் உள்ளிட்ட 92 காலி பணியிடங்களுக்கான தேர்வு 1080 தேர்வு மையங்களில் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் 3 லட்சத்து 22 ஆயிரத்து 414 பேர் தேர்வு எழுதினர். சென்னையில் மட்டும் 149 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்ட நிலையில் அதில், 45,939 பேர் தேர்வு எழுதினர். … Read more