பச்சையப்பன் கல்லூரி உதவி பேராசியர்கள்: கல்லூரி கல்வி இயக்குனருக்கு உத்தரவு!

பச்சையப்பன் கல்வி அறக்கட்டளைக்கு சொந்தமான கல்லூரிகளில் கடந்த 2013, 2014 மற்றும் 2015ம் ஆண்டுகளில் 254 உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இந்த 254 பேரில் 152 பேர் உரிய தகுதியை பெற்றிருக்கவில்லை எனவும், தேர்வு நடைமுறைகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இதையடுத்து, அறக்கட்டளையை நிர்வகித்த ஓய்வுபெற்ற நீதிபதி, 152 உதவிப் பேராசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இது சம்பந்தமான வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், கடந்த 2013, 2014 … Read more

மாணவியை ஓடும் ரயில் முன் தள்ளிவிட்டு காதலன் கொலை; பரங்கிமலை ரயில் நிலையத்தில் நடந்த பயங்கரம்!

சென்னை கிண்டி அடுத்தா ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்(23), அதே பகுதியைச் சேர்ந்தவர் சத்தியா (20) தனியார் கல்லூரியில் பிகாம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. வழக்கம்போல் இன்று இருவரும் பரங்கிமலை ரயில் நிலையத்தில் நின்று பேசிக்கொண்டு இருந்து உள்ளனர். அப்போது இருவருக்கும் சண்டை ஏற்பட்டு வாக்குவாதம் ஆகியுள்ளது. அப்போது பரங்கிமலை ரயில் நிலையத்திற்கு வந்து கொண்டிருந்த மின்சார ரயில் முன்பு சதீஷ் சத்யாவை தண்டவாளத்தில் தள்ளிவிட்டுள்ளார். இதில் … Read more

ஆந்திராவில் இருந்து தஞ்சாவூருக்கு குடும்பமாக வந்து கூடாரம் அமைத்து வாத்து மேய்ப்பு: வாத்துக்களின் எச்சம் உரமாகிறது

வல்லம்: ஆந்திராவில் இருந்து தஞ்சாவூருக்கு குடும்பம், குடும்பமாக வந்து கூடாரம் அமைத்து வாத்துக்களை மேய்க்கின்றனர். இதில் வாத்துகளின் எச்சங்கள் வயலுக்கு இயற்கை உரமாக பயன்படுகிறது. தஞ்சாவூர் மாவட்டம் ராமநாதபுரம், 8.கரம்பை, ஆலக்குடி, கல்விராயன்பேட்டை, சித்திரக்குடி உட்பட பல பகுதிகளில் குறுவை அறுவடை முடிந்துள்ளது. இந்த வயல்கள் தற்போது சேறும், சகதியுமாய் காணப்படுகிறது. இந்த வயல்களில் தான் ஆயிரக்கணக்கான வாத்துக்கள் “பக்..பக்..” என்ற ஒலியெழுப்பி வயல்களில் காணப்படும் புழு, பூச்சிகள், நத்தைகள், சிதறிக்கிடக்கும் நெல்மணிகள் போன்றவற்றை தங்களின் உணவாக்கி … Read more

”அவசர கதியில் நடைபெறும் வடிகால் பணிகளால் மழை காலத்தில் சென்னைக்கு ஆபத்து” – ஜெயக்குமார்

சென்னையில் மழைநீர் வடிகால் பணிகளை தகுந்த நேரத்தில் அவசர கதியில் மேற்கொள்வதால் வரும் பருவ மழை காலத்தில் சென்னைக்கு பெரும் ஆபத்து வரக்கூடும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னன் காமராஜர் சாலையில் உள்ள உயர் கல்வி மன்ற வளாகத்தில் அமைந்துள்ள மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் சிலைக்கு அதிமுக சார்பில் வரும் 17 ஆம் தேதி மாலை அணிவித்து மரியாதை செலுத்த அனுமதி கேட்டு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்., பொதுப்பணித் துறை அதிகாரிகளை சந்தித்து … Read more

எம்.ஜி.ஆர்- சிவாஜி என இரு துருவங்களை இணைத்த அந்தப் படம்… பின்னணியில் பிரபல கவர்ச்சிக் கன்னி!

எம்.ஜி.ஆர்- சிவாஜி என இரு துருவங்களை இணைத்த அந்தப் படம்… பின்னணியில் பிரபல கவர்ச்சிக் கன்னி! Source link

சென்னை வாசிகளே எச்சரிக்கை | தீபாவளி பட்டாசு வெடிக்கும்முன் இதை கவனத்தில் கொள்ளுங்கள் – போலீசார் விடுத்த அறிவிப்பு!

தீபாவளியை முன்னிட்டு மக்கள் நடமாடும் இடத்தில் கவனக்குறைவாக பட்டாசுகளை வெடிக்கக்கூடாது. பட்டாசு வெடிக்க அனுமதித்துள்ள நேரத்தில் மட்டுமே வெடிக்க வேண்டும் என்று, சென்னை பெருநகர காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து சென்னை பெருநகர காவலதுறை சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் : * சுற்றுச்சூழலுக்கு உகந்த இரசாயனப் பொருட்களால் தயாரிக்கப்பட்ட பசுமை பட்டாசுகள் மட்டும் விற்கப்படவும், வெடிக்கப்படவும் வேண்டும்.* பட்டாசுகள் வெடிக்கும் நேரம் காலை 06.00 மணி முதல் 07.00 மணி வரையிலும், மாலை 07.00 மணி முதல் 08.00 … Read more

நயன்-விக்கி குழந்தை விவகாரம்.. சட்டப்பூர்வ நடவடிக்கை: அமைச்சர் தகவல்..!

நடிகை நயன்தாராவுக்கும், இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் கடந்த ஜூன் மாதம் 9-ம் தேதி மாமல்லபுரத்தில் வெகு கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு முன்பே, வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வது என்று இருவரும் முடிவெடுத்து இருந்தனர். அதன் மூலம் இரட்டை குழந்தைகள் பிறந்தன. இந்த தகவலை விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார். நயன்தாரா -விக்னேஷ் சிவன் தம்பதி வாடகைத் தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பெற்றுக்கொண்டது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சர்ச்சை பல்வேறு … Read more

ஜெயலலிதா சிலைக்கு மரியாதை; மனுவை வாங்க யாரும் இல்லை: ஜெயக்குமார் குற்றச்சாட்டு

சென்னை: “சென்னை உயர்கல்வி மன்ற வளாகத்தில் உள்ள ஜெயலலிதா சிலைக்கு மரியாதை செலுத்த அனுமதி கோரி மனு அளிக்க வந்தேன், சந்திக்க நேரம் கொடுத்துவிட்டு மனுவை வாங்க யாரும் இல்லை” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “அதிமுக ஆட்சியின்போது உயர்கல்வி மன்ற வளாகத்தில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சிலை அமைக்கப்பட்டு தினந்தோறும் மாலை அணிவிக்கப்பட்டது. ஆனால், திமுக அரசு பொறுப்பேற்ற … Read more

கறுப்பு ஆடுகளை கட்டம் கட்டிய ஈபிஸ்… புதுசா வந்த லிஸ்ட்- சலசலப்பில் அதிமுக!

அதிமுகவில் பிளவு ஏற்பட்டு எடப்பாடி பழனிசாமி, தலைமையில் இரண்டு அணிகள் உருவாகியிருக்கின்றன. இதனால் கட்சி யார் பக்கம்? என்ற கேள்வி தொக்கி நிற்கிறது. கடைசியாக நடந்த பொதுக்குழு கூட்டத்தின் மூலம் நிர்வாகிகள் படை தன்பக்கம் இருப்பதாக தெளிவுபடுத்தியுள்ளார். ஆனால் தனது பங்கிற்கு புதிய நிர்வாகிகள், ஆதரவாளர்கள் படை என தீவிரம் காட்டி வருகிறார் ஓ.பன்னீர்செல்வம். இவருக்கு சாதகமாக கட்சியின் பொதுச் செயலாளர் தேர்தலை நடத்தக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. … Read more

KFC அனுப்பிய வேகாத சிக்கன்; ஸ்விகியில் ஆர்டர் செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

சென்னை அம்பத்தூரை சேர்ந்த சேகர் என்பவர் ஸ்விகி ஆன்லைன் உணவு டெலிவரி மூலம் KFC-ல் SMOKY GRILLED CHICKEN ஆர்டர் செய்துள்ளார். சிறிது நேரத்தில் ஆர்டர் செய்யப்பட்ட உணவு  வந்தவுடன் அதனை வாங்கி திறந்து பார்த்துள்ளார். அதில், சிக்கன் வேகாமல்  இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதுகுறித்து KFC அம்பத்தூர் கிளையில் புகாரளித்த நிலையில் எந்தவித பதிலும் அளிக்காமல் இருந்துள்ளனர்.  இதனை தொடர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் நடந்த சம்பவம் பற்றி பதிவிட்டு SWIGGY நிறுவனம்,KFC நிறுவனம் மற்றும் … Read more