கரூர், திண்டுக்கல் மாவட்டங்களில் இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயம் – 11 ஆயிரம் ஹெக்டேரில் அமைக்கப்பட்டுள்ளது

சென்னை: தமிழக அரசு சார்பில் கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில், 11 ஆயிரத்து 806 ஹெக்டேர் பரப்பளவில் இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயம் அமைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: விவசாயிகளுக்கு நன்மை பயப்பவை தேவாங்குகள் சிறிய, இரவு நேர பாலூட்டிகள். அவை மரவகை இனத்தைச் சார்ந்தவை. தங்கள் வாழ்நாளின் பெரும்பகுதியை மரங்களில் கழிக்கின்றன. இந்த இனம், விவசாய பயிர்களுக்கு சேதம் உண்டாக்கும் பூச்சிகளை வேட்டையாடி விவசாயிகளுக்கு நன்மை பயக்கின்றன. சுற்றுச்சூழல் மற்றும் … Read more

பாம்பன் பாலத்தில் ஆம்னி பஸ் மோதி விபத்து: கடலுக்குள் கவிழாமல் தப்பியது; டிரைவர், கண்டக்டர் உள்பட பத்து பேர் படுகாயம்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் இருந்து மதுரை நோக்கி அரசு பஸ் நேற்று காலை சுமார் 30க்கும் அதிகமான பயணிகளுடன் புறப்பட்டது. பாம்பன் அன்னை இந்திரா காந்தி சாலைப்பாலத்தில் காலை 7 மணியளவில் பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது பாலத்தின் மையப்பகுதியில் சென்னையில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி வந்து கொண்டிருந்த ஆம்னி பஸ், எதிர்பாராதவிதமாக அரசு பஸ் மீது மோதியது. மோதிய வேகத்தில் நிலைதடுமாறிய ஆம்னி  பஸ் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் நடைமேடையில் ஏறி, தடுப்புச்சுவர்  மீது மோதி நின்றது.  … Read more

கோவை: ஒரு கையில் சிலம்பம் சுற்றிய சிறுமி… 2 கிலோ மீட்டர் தூரம் கடந்து புதிய உலக சாதனை!

கோவை: ஒரு கையில் சிலம்பம் சுற்றிய சிறுமி… 2 கிலோ மீட்டர் தூரம் கடந்து புதிய உலக சாதனை! Source link

2023ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசு விடுமுறை நாட்களின் பட்டியல் வெளியீடு.!

வரும் 2023 ஆம் ஆண்டில், தமிழகத்தில் 24 நாட்கள் பொது விடுமுறை நாட்களாக அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ்ப் புத்தாண்டு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  மேலும், இந்த 24 விடுமுறை நாட்களில் ஆங்கில புத்தாண்டு, தைப்பொங்கல்,  தைப்பூசம், விநாயகர் சதுர்த்தி மற்றும் தீபாவளி உள்ளிட்ட முக்கிய பண்டிகைகள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமையில் வருகின்றன. தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலர் இறையன்பு வெளியிட்டுள்ள அறிவிக்கையின்படி, 24 விடுமுறை நாட்களில் பட்டியல். ஜனவரி ஆங்கிலப் … Read more

கனிமொழி மீதான பயத்தாலேயே அவருக்கு துணை பொதுச்செயலாளர் பதவி : டிடிவி விமர்சனம்

மின்கட்டண உயர்வை கண்டித்து, சென்னையில் டிடிவி தினகரன் தலைமையில் அமமுக-வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை ராஜாஜி சாலையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய டிடிவி தினகரன், தவறு செய்யும் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மவுனமாக இருப்பதாக குற்றம்சாட்டினார். ஜெயலலிதாவாக இருந்தால், உடனடியாக தவறு செய்யும் அமைச்சர்களை பதவி நீக்கியிருப்பார் என்றும் அவர் கூறினார். கனிமொழி மீதான பயத்தாலேயே அவருக்கு துணை பொதுச்செயலாளர் பதவியை ஸ்டாலின் வழங்கியிருப்பதாகவும் டிடிவி தினகரன் தெரிவித்தார். Source … Read more

மகனுக்கு சாதி சான்றிதழ் பெறமுடியாததால் விரக்தி – நீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்தவர் மரணம்

சென்னை: ஐந்து ஆண்டுகளாகப் போராடியும், தனது மகனுக்கு பழங்குடி இனத்தவர் (எஸ்.டி.) சாதிச் சான்றிதழ் பெறமுடியாத விரக்தியில் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்த தொழிலாளி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையைச் சேர்ந்தவர் வேல்முருகன்(49). தொழிலாளியான இவருக்கு மனைவி சித்ரா, 10-ம் வகுப்பு பயிலும் ஒரு மகன் மற்றும் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்துக்கு வந்த வேல்முருகன், திடீரென தனது உடலில் பெட்ரோல் ஊற்றி, … Read more

மணவாளக்குறிச்சி அருகே சோகம் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த பெண் போலீஸ் விபத்தில் பலி: வயிற்றில் இருந்த குழந்தையும் இறந்தது

குளச்சல் : மணவாளக்குறிச்சி அருகே நேற்று முன் தினம் இரவு இரு பைக்குகள் மோதி நடந்த விபத்தில் நிறை மாத கர்ப்பிணியாக இருந்த பெண் போலீஸ் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே உள்ள அம்மாண்டிவிளை கட்டைக்காடு பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர் (38). தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி உஷா (37). இவர் வெள்ளிச்சந்தை காவல் நிலையத்தில் போலீசாக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு திருமணமாகி 8 … Read more

திருவள்ளூர் | 51 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்: அமைச்சர் சா.மு.நாசர் தகவல்

திருத்தணி: வள்ளூர் மாவட்டத்தில் மே 2021 முதல் தற்போது வரை 51 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன என, பால்வளத் துறை மைச்சர் சா.மு.நாசர் தெரிவித்துள்ளார். சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, திருவள்ளூர் மாவட்ட அளவில் குழந்தை திருமணத்தை தடுப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று திருத்தணியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் நடந்த இந்த நிகழ்வில், பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் தலைமையில், … Read more

காட்பாடி அருகே திருவலத்தில் 69 முதியவர்கள் மீட்கப்பட்ட கருணை இல்லத்திற்கு ‘சீல்’: கலெக்டர் உத்தரவு

திருவலம்: திருவலத்தில் இயங்கிய கருணை இல்லத்தில் உணவு வழங்காமல் சித்ரவதை செய்யப்பட்டு 69 முதியவர்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், அந்த இல்லத்திற்கு சீல் வைக்க கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டுள்ளார். வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே திருவலம் இபி கூட்ரோடு பகுதியில் கடந்த 2017ம் ஆண்டு தனியார் அமைப்பின் கருணை இல்லம் தொடங்கப்பட்டது. இங்கு பல்வேறு பகுதிகளை சேர்ந்த முதியோர், ஆதரவற்றவர்கள் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் கடந்த 2018ம் ஆண்டு மார்ச் மாதம் கருணை இல்லத்தில் இருந்து இரவு … Read more