சாலை பாதுகாப்பு உறுதிமொழியை முதல்வர் வாசிக்க பள்ளி மாணவர்கள் ஏற்றுக் கொண்டனர்..!!

தமிழ்நாடு அரசுடன் இணைந்து கோயம்புத்தூர் உயிர் அறக்கட்டளை அமைப்பு ‘குட்டி காவலர்’ என்ற மாணவர்களுக்கான சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு திட்டத்தை தொடங்கி உள்ளது. இந்த திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். கோவை கொடிசியாவில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 5 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்றனர். மேலும் சுமார் 5 லட்சம் மாணவர்கள் பள்ளிகளில் இருந்தவாறே பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில், தலைமைச் செயலகத்திலிருந்து மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை … Read more

தமிழகத்தில் அமைகிறது இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயம்..!

இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயம் தமிழகத்தின் கரூர், திண்டுக்கல் மாவட்டங்களுக்கு இடைப்பட்ட கடவூரில் அமைக்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அழிந்து வரும் தேவாங்கு இனத்தை பாதுகாக்கும் நோக்கில், தேவாங்குகளின் முக்கிய வாழ்விடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ள, 11 ஆயிரத்து 806 ஹெக்டேர் பரப்பளவில் உள்ள வனப்பகுதியில் தேவாங்கு சரணாலயம் அமைக்கப்படவுள்ளது. Source link

பல்வேறு மாவட்டங்களில் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் 4 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் பரவலாக லேசானது முதல் மிதமான மழையும், பல்வேறு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: குமரிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 4 நாட்களுக்கு பெரும்பாலான இடங்களில் இடியுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். 13-ம் … Read more

வால்பாறை முன்னாள் எம்எல்ஏ கோவை தங்கம் காலமானார்

கோவை: கோவை சாயிபாபாகாலனியை சேர்ந்தவர் கோவை தங்கம் (74). இவருக்கு நேற்று அதிகாலை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்தார். இவருக்கு தில்லைநாயகி என்ற மனைவியும், ஸ்ரீவிஷ்ணு என்ற மகனும், ஸ்ரீசத்யா என்ற மகளும் உள்ளனர். மறைந்த கோவை தங்கம், கடந்த 2001 முதல் 2011-ம் ஆண்டு வரை வால்பாறை தொகுதி எம்எல்ஏவாக இருந்தார். காங்கிரஸ் கட்சியில் இருந்த இவர், த.மா.கா உதயமானபோது அதில் இணைந்தார். சமீபத்தில், அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் … Read more

பள்ளி குழந்தைகளுக்கு புரிதலை உருவாக்கும்  'ஊஞ்சல்', 'தேன்சிட்டு' இதழ் – முதலமைச்சர் ஸ்டாலின் வெளியீடு..!

தமிழக அரசு செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவித்திருப்பதாவது:- “முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், பள்ளிக்கல்வித் துறை சார்பில் நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான ‘ஊஞ்சல்’ என்ற இதழையும், ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கான ‘தேன்சிட்டு’ என்ற இதழையும், ஆசிரியர்களுக்கான ‘கனவு ஆசிரியர்’ என்ற இதழையும் வெளியிட்டார்.  குழந்தைகளின் அறிவுக்கண்களைத் திறப்பது வாசிப்புப் பழக்கம். அந்த வகையில், ஏட்டுக்கல்வி மட்டுமின்றி இவ்வுலகை அறிந்து கொள்ளவும், சமூகம் குறித்த புரிதலை மாணவர்களிடையே உருவாக்கவும் … Read more

2023-ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை நாட்கள் வெளியானது..!!

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் முக்கிய தினங்கள் மற்றும் மத ரீதியான பண்டிகைகள் காரணமாக, அரசு பொது விடுமுறைகள் வழங்கப்படுவது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் தொடங்குவதற்கு சில மாதங்களுக்கு முன்பே பொது விடுமுறை பட்டியல் வெளியிடப்படும். அதன்படி, 2023-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசு விடுமுறை பட்டியல் வெளியாகி உள்ளது. இதில் வாராந்திர ஞாயிற்றுக் கிழமைகள் தவிர்த்து, 24 நாட்கள் விடுமுறைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக அரசு தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், பொது விடுமுறை … Read more

நீலகிரி மலை ரயிலுக்காக உருவாக்கப்பட்ட புதிய டீசல் என்ஜின் சோதனை ஓட்டம்..!

நீலகிரி மலை ரயிலுக்காக புதிதாக உருவாக்கப்பட்ட  டீசல் என்ஜின், மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரை சோதனை ஓட்டம் விடப்பட்டது. ஏற்கனவே ஃபர்னஸ் எண்ணெய்  மூலம் இயக்கப்பட்ட என்ஜின் சேவையில் அதிக புகை எழும்புவதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து  உள்நாட்டு தொழில் நுட்பத்துடன் புதிய என்ஜின் 9 கோடியே 30 லட்சம்  ரூபாய் மதிப்பில்  உருவாக்கப்பட்டது. கடந்த 4 நாட்களுக்கு முன்பு லாரி மூலம் என்ஜின் மேட்டுப்பாளையம் கொண்டு வரப்பட்டு, சோதனை ஓட்டமாக ஹில்குரோ … Read more

கரூர், திண்டுக்கல் மாவட்டங்களில் இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயம் – 11 ஆயிரம் ஹெக்டேரில் அமைக்கப்பட்டுள்ளது

சென்னை: தமிழக அரசு சார்பில் கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில், 11 ஆயிரத்து 806 ஹெக்டேர் பரப்பளவில் இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயம் அமைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: விவசாயிகளுக்கு நன்மை பயப்பவை தேவாங்குகள் சிறிய, இரவு நேர பாலூட்டிகள். அவை மரவகை இனத்தைச் சார்ந்தவை. தங்கள் வாழ்நாளின் பெரும்பகுதியை மரங்களில் கழிக்கின்றன. இந்த இனம், விவசாய பயிர்களுக்கு சேதம் உண்டாக்கும் பூச்சிகளை வேட்டையாடி விவசாயிகளுக்கு நன்மை பயக்கின்றன. சுற்றுச்சூழல் மற்றும் … Read more

பாம்பன் பாலத்தில் ஆம்னி பஸ் மோதி விபத்து: கடலுக்குள் கவிழாமல் தப்பியது; டிரைவர், கண்டக்டர் உள்பட பத்து பேர் படுகாயம்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் இருந்து மதுரை நோக்கி அரசு பஸ் நேற்று காலை சுமார் 30க்கும் அதிகமான பயணிகளுடன் புறப்பட்டது. பாம்பன் அன்னை இந்திரா காந்தி சாலைப்பாலத்தில் காலை 7 மணியளவில் பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது பாலத்தின் மையப்பகுதியில் சென்னையில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி வந்து கொண்டிருந்த ஆம்னி பஸ், எதிர்பாராதவிதமாக அரசு பஸ் மீது மோதியது. மோதிய வேகத்தில் நிலைதடுமாறிய ஆம்னி  பஸ் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் நடைமேடையில் ஏறி, தடுப்புச்சுவர்  மீது மோதி நின்றது.  … Read more