திருப்பூர் || பருவ மழை சாகுபடி.! மானிய விலையில் உரங்கள்..!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குடிமங்கலம் பகுதிகளில் பருவ மழை துவங்கியுள்ள நிலையில் விவசாயிகள் உழவுப்பணியை ஆரம்பித்துள்ளனர். அதனால், பயிர் சாகுபடிக்கு தேவையான, விதை, உரம் உள்ளிட்ட பொருட்கள் குடிமங்கலம் வேளாண் விரிவாக்க மையத்தில் மானிய விலையில் வழங்கப்படுகிறது. இது குறித்து குடிமங்கலம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் வசந்தா தெரிவித்ததாவது:- “விவசாயிகளுக்கு உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கம், தமிழக முதல்வரின் மானாவாரி மேம்பாட்டு இயக்கம் மற்றும் விதை கிராமத்திட்டத்தின் மூலமாக  வேளாண் இடுபொருட்களான, விதைகள், நுண்ணுயிர் … Read more

“இது கொடுமை அல்லவா?” – மக்கள் நலப் பணியாளர்கள் வழக்கில் தமிழக அரசிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி

புதுடெல்லி: மக்கள் நலப் பணியாளர்களை நிரந்தரமாக பணியமர்த்துவது தொடர்பாக தமிழக அரசின் கருத்து மற்றும் நிலைப்பாடு என்ன என்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2011-ம் ஆண்டும் பணி நீக்கம் செய்யப்பட்ட 13,500 மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்குவது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி அஜய் ரஸ்தோஹி தலைமையிலான அமர்வில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசின் புதிய … Read more

எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமான கான்ட்ராக்டர் ரூ.2,000 கோடி சொத்து குவித்தது அம்பலம்: புதுக்கோட்டை வீட்டில் 2வது நாளாக ரெய்டு

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமான கான்ட்ராக்டர் வீட்டில் வருமான வரித்துறையினர் நேற்று 2வது  நாளாக சோதனை நடத்தினர். இதில் ரூ. 2,000 கோடிக்கு சொத்து குவித்துள்ளது அம்பலமாகி உள்ளது. புதுக்கோட்டை பெரியார் நகரை சேர்ந்தவர் பாண்டிதுரை (47). நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட அலுவலக உதவியாளர். இவர், முதற்கட்டமாக நெருக்கமானவர்களுக்கு நெடுஞ்சாலையோரம் உள்ள மரங்களுக்கு வர்ணம் பூசும் பணியை கொடுத்து வந்துள்ளார். பின்னர் படிப்படியாக வளந்து வந்த இவருக்கு, கடந்த அதிமுக ஆட்சியில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்த … Read more

இந்து மதம் குறித்து அவதூறாக பேசியதாக ஆ.ராசா மீது நடவடிக்கை கோரி உயர் நீதிமன்றத்தில் மனு

சென்னை: இந்து மதம் மற்றும் இந்துக்கள் குறித்து அவதூறாக பேசியதாக திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் 6-ம் தேதி சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக துணை பொதுச் செயலாளருமான ஆ.ராசா இந்து மதம் மற்றும் இந்து பெண்கள் குறித்து பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக … Read more

இணையதளம் மூலம் பணம் வசூல் கோயில் வழிபாட்டிற்கானது வியாபார தலமாக்க முடியாது: ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கருத்து

மதுரை: கோயில் பொது வழிபாட்டிற்கானது. இதை வியாபாரத்தலமாக்க முடியாது என ஐகோர்ட் கிளை கூறியுள்ளது. ராமநாதபுரத்தை சேர்ந்த சுப்ரமணியன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘கோயில்கள்  பெயர்களில் போலியாக செயல்படும் இணையதளங்களை முடக்கவும், சம்பந்தப்பட்டோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்யநாராயண பிரசாத் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீராகதிரவன் ஆஜராகி, ‘‘கோயில் பெயரில் செயல்படும் தனியார் … Read more

திருநெல்வேலி || சாமி சிலையை சேதப்படுத்திய சம்பவம் – மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்..!

திருநெல்வெலி மாவட்டம் களக்காடு அருகே உள்ள மலையடி புதூரில் ஊய்காட்டு சுடலைமாட சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் சுடலை, மாசானசுவாமி, பேச்சியம்மன் உள்ளிட்ட தெய்வங்கள் எழுந்தருளியுள்ளனர். சுடலை உள்ளிட்ட தெய்வங்களுக்கு தனித்தனியாக கற்சிலைகளும் அமைக்கப்பட்டுள்ளது.  இந்தக் கோவிலில் ஆண்டு தோறும் ஆனி மாதம் கொடை விழா மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்நிலையில் நேற்று இந்தக் கோவிலில் உள்ள மாசானசுவாமி கற்சிலை கீழே தள்ளப்பட்டு, சேதப்படுத்தப்பட்டுள்ளது.  இதையறிந்த ஊர்மக்கள் கோவிலுக்கு சென்று சேதமடைந்த சாமி சிலையை … Read more

‘பாரதியார் இன்று இருந்திருந்தால் நீதித்துறைக்கு எதிராக வெகுண்டு எழுந்திருப்பார்’ – நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பேச்சு

மதுரை: ‘பாரதியார் இன்று இருந்திருந்தால் நீதித்துறைக்கு எதிராக வெகுண்டு எழுந்திருப்பார்’ என உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பேசினார். உயர் நீதிமன்ற மதுரை கிளையில் எம்எம்பிஏ சார்பில் பாரதி விழா மற்றும் கவிதைப் போட்டி இன்று எம்எம்பிஏ தலைவர் ஸ்ரீநிவாச ராகவன் தலைமையில் நடைபெற்றது. இதில், ‘பாரதி இன்று இருந்திருந்தால்’ என்ற தலைப்பில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பேசியதாவது: தமிழர்கள் பாரதியை மறக்கவில்லை. பாரதியை பற்றிய பேச்சும், நினைப்பும் அதிகரித்து வருகிறது. பாரதி கவிஞர், புரட்சியாளர், … Read more

அரக்கோணம் கடற்படை விமானதளத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்து 2 தொழிலாளிகள் படுகாயம்

அரக்கோணம்: அரக்கோணத்தில் உள்ள ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமான தளத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்து 2 தொழிலாளிகள் படுகாயம் அடைந்தனர். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமான தளம் உள்ளது. இங்குள்ள விமான ஓடுபாதை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் புற்கள் முளைத்து காணப்படுகிறது. இவற்றை அறுத்து சுத்தம் செய்வதற்காக, அரக்கோணம் அடுத்த பெருமூச்சு பகுதியை சேர்ந்த செல்வி (45), சங்கர் (40) உள்ளிட்ட சிலர் ஒப்பந்தத் தொழிலாளர்களாக நேற்று முன்தினம் வேலைக்கு சென்றுள்ளனர். அங்கு … Read more

50 வருடங்களாக பயன்படுத்தி வந்த வழி அடைப்பு: பிணத்துடன் போராட்டம்

கிருஷ்ணகிரி ஊத்தங்கரை அருகே இருளர் இன மக்கள் சுடுகாட்டுக்கு வழி இல்லாமல் இரண்டு நாட்களாக சடலத்தை வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கல்லாவி பனமரத்துப்பட்டியில் வசிக்கும் இருளர் இன மக்கள் நீண்ட காலமாக பயன்படுத்தி வந்த சுடுகாட்டுக்கு வழி இல்லாமல், இரண்டு நாட்களாக சடலத்தை வைத்து நூதன முறையில் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஊத்தங்கரை அடுத்த பனமரத்துப்பட்டி இருளர் இன மக்கள், 250 க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். கடந்த மூன்று … Read more