போராட்டம் நடத்தியது பிஎஃப்ஐ.. ரூ.5.06 கோடி கேட்குது மாநில அரசு..!

‘கேரளாவில், பிஎஃப்ஐ அமைப்பினர் நடத்திய போராட்டத்தில் சேதப்படுத்தப்பட்ட பொருட்களுக்கு ரூ.5.06 கோடி இழப்பீடு பெற்றுத்தர வேண்டும்’ என, கேரள மாநில சாலை போக்குவரத்துக் கழகம் உயர்நீதிமன்றத்தில் கோரியுள்ளது. பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டுதல், தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆள் சேர்த்தல், பயிற்சி நடத்தல் உள்ளிட்ட புகாரின் அடிப்படையில் தேசிய புலனாய்வு முகமை மற்றும் அமலாக்கத்துறை இணைந்து கேரளா, தமிழகம் உட்பட நாடு முழுவதும் கடந்த 22-ம் தேதி சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது 100-க்கும் மேற்பட்ட … Read more

ஆம்னி பேருந்து கட்டணம்: உயர் நீதிமன்ற உத்தரவுகளை செயல்படுத்துக: அன்புமணி ராமதாஸ்

சென்னை: “தமிழக அரசு அதற்குரிய அதிகாரத்தை பயன்படுத்தி ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை குறைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக கடந்த காலங்களில் உயர் நீதிமன்றம் பிறப்பித்த அனைத்து ஆணைகளையும் செயல்படுத்தவும் அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “தமிழ்நாட்டில் ஆம்னி பேருந்துகளின் கட்டணங்கள் விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ள நிலையில், கடுமையான நடவடிக்கைகளை எடுத்து அதைக் கட்டுப்படுத்த வேண்டிய தமிழக அரசு, … Read more

அன்பில் மகேஷுக்கு பன்றிகாய்ச்சல் பாதிப்பு: உறுதிபடுத்திய மா.சுப்பிரமணியன்

காய்ச்சல் காரணமாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இன்ஃப்ளுயன்சா காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி இன்று (செப்டம்பர் 28) 2022-2023 ஆம் ஆண்டிற்கான மருத்துவ பட்ட மேற்படிப்பு / பட்டைய படிப்பு (MD-MS/DIPLOMA) மற்றும் பல் மருத்துவர் படிப்பு (MDS) மற்றும் தேசிய வாரிய பட்ட படிப்பிற்கான (DNB) … Read more

பாட்டில் மற்றும் கேன்களில் பெட்ரோல், டீசல் விற்பனை செய்ய விதிக்கப்பட்ட தடையால் விவசாய பணிகள் பாதிப்பு

சிவகங்கை: பாட்டில் மற்றும் கேன்களில் பெட்ரோல், டீசல் பொருட்களை விற்பனை செய்ய தடை விதிக்கபட்டதால் விவசாய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மற்றும் திருபுவனம் வட்டாரத்தில் நெல் நடவு பணிகள் தொடங்கியுள்ளன. டிரக்டர், பவர் டிரின்னர்கள், மருந்து தெளிக்கும் சாதனங்களுடன் விவசாய பணிகள் நடைபெற்றுவருகின்றன. இதில் டிரக்டர் தவிர மற்ற வாகனங்களின் பெட்ரோல், டீசல் டங்குகள் சிறிதானவை மற்றும் அவற்றை சாலைகளில் இயக்க முடியாது. எனவே பிளாஸ்டிக் கேன்களில் பெட்ரோல், டீசல் … Read more

`மழைநீர் வடிக்கால் பணிகளை போர்க்கால அடிப்படையில் விரைந்து முடிக்கவும்’- தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழைக்கு பின்னரே புதிய பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் பணிகளுக்கு ஒப்புதல் அளிக்கும்படி, சம்பந்தப்பட்ட துறைகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மழைநீர் கால்வாய் பணிகளை விரைந்து முடிக்க ஒப்பந்ததாரர்களுககு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மழை பாதிப்புகளை குறைக்க சில முக்கிய பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால், மழைநீர் கால்வாய் அமைத்தல், சிறு பாலங்களுக்கு அடியிலுள்ள கழிவுகளை அகற்றுதல் உள்ளிட்ட பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டுமென்றும் அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் அடுத்த மாதம் … Read more

பிரபல நடிகை திடீரென மருத்துவமனையில் அனுமதி..!

பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நேற்றிரவு திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாலிவுட் திரையுலகில் பிரபல நடிகையான தீபிகா படுகோனேவுக்கு திடீரென நேற்று உடல்நலக் குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவர் மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதன்பின் அவருக்கு தொடர்ச்சியாக பல மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு உள்ளன. டாக்டர்களின் சிகிச்சைக்கு பின்பு அவர் உடல்நலம் தேறி வருகிறார் என அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த ஜூன் மாதம் ஹைதராபாத்தில் நடிகர் பிரபாஸ் … Read more

பிஎஃப்ஐ-க்கு தடை | சென்னையில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவு

சென்னை: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு மற்றும் அதன் துணை அமைப்புகளுக்கு மத்திய அரசு 5 ஆண்டுகள் தடை விதித்துள்ளதைத் தொடர்ந்து, சென்னையில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த காவல்துறையினருக்கு சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். கடந்த 2006-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்புக்கு நாடு முழுவதும் 24 மாநிலங்களில் கிளைகள் உள்ளன. பல்வேறு கலவரங்கள், படுகொலைகளில் இந்த அமைப்பின் நிர்வாகிகளுக்கு தொடர்பு இருப்பதாக புகார் எழுந்துள்ளது. இதன்பேரில், … Read more

துப்பாக்கி குண்டு vs பெட்ரோல் குண்டு… இன்னுமா புரியல? திமுக எடுத்த பாடம்!

தமிழகத்தில் பி.எஃப்.ஐ அமைப்பினரை குறிவைத்து நடத்தப்பட்ட ரெய்டு, அதன் தொடர்ச்சியாக பாஜக, ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரை குறிவைத்து நடந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் என அரசியல் களம் அனல் பறந்து கொண்டிருக்கிறது. இந்த சூழலில் திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் ”சிலந்தி” பகுதியில் ‘துப்பாக்கி குண்டு vs பெட்ரோல் குண்டு’ என்ற பெயரில் நையாண்டி செய்யும் வகையில் உரையாடல் இடம்பெற்றுள்ளது. அதாவது, மேற்குறிப்பிட்ட இரண்டுக்கும் இடையில் நடக்கும் உரையாடலாக வெளியிட்டுள்ளனர். அதில், துப்பாக்கிக்குள் இருந்து பாய்வது மட்டுமின்றி … Read more

கடந்த 10 ஆண்டு காலத்தில் அதிமுக எதுவும் செய்யவில்லை – அமைச்சர் கே.என்.நேரு

சென்னை தெற்கு மாவட்டம் சோழிங்கநல்லூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அரவிந்த்ரமேஷ் தலைமையில் திமுக முப்பெரும் விழா சோழிங்கநல்லூர் கலைஞர் கருணாநிதி சாலையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு, மருத்துவம் மற்றும் மக்கள் நல் வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மேலும் இதில் பெண்கள் உள்ளிட்ட சுமார் 2000 பேர் கலந்துகொண்டனர். இதில் பேசிய மருத்துவம் மற்றும் மக்கள் நல் வாழ்வுத்துறை அமைச்சர் … Read more