விக்னேஷ் சிவன் – நயன்தாரா தம்பதி இரட்டை குழந்தைகள் பெற்றெடுத்த விவகாரத்தில் விதிமீறல்கள் நடந்ததா? -அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

விக்னேஷ் சிவன் – நயன்தாரா தம்பதி, வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பெற்ற விவகாரத்தில், குழந்தைகள் பிறந்த மருத்துவமனை கண்டறியப்பட்டுள்ளதாக, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூர் குடும்ப நல பயிற்சி மையத்தில் நடைபெற்ற மாற்றுப்பாலினத்தோரின் உடல், மன ஆரோக்கியம் குறித்த கருத்தரங்கில் பங்கேற்றபின் பேட்டியளித்த அமைச்சர், சட்ட விதிகளுக்கு உட்பட்டு, இரட்டை குழந்தைகளை பெற்றார்களா? என விசாரித்து, ஒரு வாரத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றார். நடிகை நயன்தாரா, விக்னேஷ் எந்த மருத்துவமனையை அணுகி … Read more

சென்னையில் தேங்கும் மழைநீர் முன்பு போல் அல்லாமல் 24 மணி நேரத்தில் வெளியேற்றப்படும்: மேயர் பிரியா உறுதி

சென்னை: வடகிழக்கு பருவமழைக்கு முன்பாக பணிகள் முடிக்கப்படும் என்றும், கடந்த ஆண்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் இந்த ஆண்டு இருக்காது என்றும் சென்னை மேயர் பிரியா தெரிவித்தார். சென்னை ரிப்பன் மாளிகையில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள், குடிநீர் வழங்கல், மின்வாரிய துறை போன்ற பல்வேறு துறை அதிகாரிகளுடன் மாநகராட்சி மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி ஆகியோர் ஆலோசனையில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மேயர் … Read more

தமிழக அரசு ஊழியர்களுக்கு 20% போனஸ் – விரைவில் ஹேப்பி நியூஸ்?

பொதுத் துறை பணியாளர்களுக்கு குறைந்தது 20 சதவீத போனஸ் வழங்க வேண்டும் என, பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் வலியுறுத்தி உள்ளார். பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு ஊழியர்களுக்கு தீபாவளி பண்டிகையை ஒட்டி தமிழக அரசு 10 சதவீத போனஸ் அறிவித்து அரசாணை வெளியிட்டு உள்ளது. கடந்த ஆண்டு 10 சதவீத போனஸ் வழங்கப்பட்டதை போல் இந்த ஆண்டும் அதே போல் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், பொதுத் துறை பணியாளர்களுக்கு … Read more

பழநியில் சாலையில் சுற்றி திரிந்த 71 ஆதரவற்றோர் மீட்பு: காவல்துறை, நகராட்சி நடவடிக்கை

பழநி: பழநியில் சாலையில் சுற்றி திரிந்த 71 ஆதரவற்றவர்களை மீட்டு காப்பகத்தில் காவல்துறை மற்றும் நகராட்சி அதிகாரிகள் சேர்த்தனர். கோயில் நகரான பழநிக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இவ்வாறு வரும் பக்தர்களில் சிலர் தங்களது வீடுகளில் பராமரிக்க முடியாமல் உள்ள வயது முதிர்ந்தோர், மாற்றுத்திறனாளிகள், உடல் நலம் பாதிக்கப்பட்டோர் போன்றோரை பழநிக்கு அழைத்து வந்து விட்டு சென்று விடுகின்றனர். இவர்கள் பழநி நகரில் உள்ள … Read more

”நரபலி கொடுக்கிறோம் தொந்தரவு செய்யாதீர்கள்”-கதவை உடைத்த போலீசார்..ஆரணியில் பகீர் சம்பவம்!

பேயை விரட்டுவதாக கூறி மூன்று நாள் கதவை பூட்டிவிட்டு உள்ளே பில்லி சூனியம் செய்து, நரபலி கொடுக்க இருந்த நபர்களை கதவை உடைத்து உள்ளே புகுந்து போலீசார் தடுத்து நிறுத்திய சம்பவம் ஆரணியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த எஸ்வி நகரம் தசரா பேட்டை பகுதியைச் சேர்ந்த தவமணி. இவர் நெசவு தொழிலாளி. இவருடைய மனைவி காமாட்சி மூத்த மகன் பூபாலன். பூபாலன் தாம்பரம் ஆயுதப்படை பிரிவில் போலீசராக பணிபுரிந்து வருகின்றார். இரண்டாவது மகன் … Read more

30% தள்ளுபடி உடன் 500 வகை புடவைகளை அறிமுகம் செய்துள்ளது கோ-ஆப் டெக்ஸ்!

தமிழகம் முழுவதும் கோ-அப்டெக்ஸ் நிறுவனம் சார்ந்த 150 ஜவுளி கடைகள்! தீபாவளியை முன்னிட்டு தமிழக அரசின் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனதின் தீபாவளி சிறப்பு விற்பனை மற்றும் விற்பனை வளாகத்தை அமைச்சர் காந்தி இன்று சென்னையில் தொடங்கி வைத்தார். விற்பனையை தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் காந்தி பேசியதாவது ” பொதுவாக தீபாவளி முன்னிட்டு 30% தள்ளுபடி உடன் ஆடைகள் விற்பனை செய்வது வழக்கம். அதேபோல் இந்த வருடமும் விற்பனையை தொடங்கி வைக்க வந்துள்ளேன். தமிழகம் முழுவதும் … Read more

முன்னாள் அமைச்சர் மீது புகார் கூறிய பிரபல நடிகை மருத்துவமனையில் அனுமதி..!!

நாடோடிகள் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை சாந்தினி. இவர் சமீபத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பாலியல் புகார் அளித்திருந்தார். அந்தப் புகாரில், என்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறிய முன்னாள் அமைச்சர் மணிகண்டன், தன்னை ஏமாற்றிவிட்டார். நாங்கள் இருவரும் ஒரே வீட்டில் கடந்த 5 ஆண்டுகளாகக் கணவன், மனைவியாக வாழ்ந்து வந்தோம். இந்த காலத்தில் மூன்று முறை நான் கருவுற்றேன். என்னைக் கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ய வைத்துவிட்டார்” என்று புகார் அளித்திருந்தார். இந்நிலையில் … Read more

காதல் ஜோடியிடம் பணம் வசூல்.. 3 காவலர்கள் பணியிடை நீக்கம்..

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில், காதல் ஜோடியிடம் பணம் பறித்ததாக எழுந்த புகாரில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யபப்பட்டனர். கடந்த மாதம் பெருமாநல்லூரில் சாலையோரம் காரில் பேசிக்கொண்டிருந்த காதல் ஜோடியிடம், ரோந்து பணியில் இருந்த காவலர்கள் தனபால், கதிரவன், தமிழ் ஆகியோர் காரின் ஆவணங்கள் உள்ளிட்டவற்றை சரிபார்த்ததோடு, அவர்களை மிரட்டி 34,500 ரூபாய் வரை பணம் பறித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட காதல் ஜோடி தரப்பில்,  திருப்பூர் எஸ்.பி., சேஷாங்சாய்யிடம் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், ஒழுங்கீனமாக நடந்து … Read more

மாணவி சத்யா கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்: டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு

சென்னை: சென்னை – பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி சத்யா படுகொலை செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். மாணவி சத்யாவை கொலை செய்துவிட்டு தப்பியோடிய சதீஷை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டிருந்தன. இதையடுத்து, போலீஸார் ஈசிஆரில் சதீஷை கைது செய்தனர். தொடர்ந்து அவர் நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்தப்படுப்பட்டார். அவரை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு … Read more