மதுரை: திருமணத்தில் விருப்பமில்லாததால் இளம் பெண் தீக்குளித்து தற்கொலை.!

மதுரை மாவட்டத்தில் திருமணத்தில் விருப்பமில்லாததால் இளம் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் அனுப்பானடி பாக்கியா நகர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகா. இவருக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்தனர். ஆனால் திருமணத்தில் கார்த்திகா விருப்பம் இல்லாமல் இருந்துள்ளார். இருப்பினும் கார்த்திகாவிற்கு பெற்றோர் நிச்சயதார்த்தம் செய்துனர். இந்நிலையில் பெற்றோர் வேலைக்கு சென்ற பிறகு வீட்டில் தனியாக இருந்த கார்த்திகா தற்கொலை செய்து கொள்வதற்காக உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி … Read more

சென்னை – மைசூரு இடையே வந்தே பாரத் ரயிலின் சேவை நவ.10ஆம் தேதியன்று தொடக்கம்..!

சென்னை –  மைசூரு இடையே நவம்பர் 10ஆம் தேதியன்று 5ஆவது வந்தே பாரத் ரயிலின் சேவை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நாட்டின் அதிவேக ரயிலான வந்தே பாரத் விரைவு ரயிலின் அதிகபட்ச வேகம் மணிக்கு 180 கிலோ மீட்டர் என்றும், 52 வினாடிகளில் 100 கிலோ மீட்டர் வேகத்தை எட்டக்கூடியது என்றும் ரயில்வேத்துறை தெரிவித்துள்ளது. அண்மையில் 3ஆவது மற்றும் 4ஆவது வந்தே பாரத் ரயில்களின் சேவை தொடங்கி வைக்கப்பட்ட நிலையில், அடுத்த மாதம் சென்னையில் … Read more

‘சி’, ‘டி’ பிரிவு ஊழியர்களுக்கு 10% தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு ஊழியர்களுக்கு தீபாவளி பண்டிகையையொட்டி தமிழக அரசு 10 சதவீத போனஸ் அறிவித்து அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், தமிழ்நாடு தேயிலைத் தோட்டம் உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு தொழிலாளர்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 10 சதவீத போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, … Read more

பிரச்னைக்குரிய வீடியோ பதிவுகளை நீக்கமுடியாது: ஐகோர்ட் கிளையில் சமூக வலைத்தளங்கள் தகவல்

மதுரை: பிரச்னைக்குரிய வீடியோ, பதிவுகளை நீக்க முடியாதென சமூக வலைத்தளங்கள் சார்பில் ஐகோர்ட் கிளையில் தெரிவிக்கப்பட்டது. யூடியூபர் சவுக்கு சங்கர் கடந்த ஜூலை 22ல் தனியார் யூடியூப் சேனலில் பேட்டி அளித்திருந்தார். இதன் அடிப்படையில் சவுக்கு சங்கருக்கு எதிராக, ஐகோர்ட் கிளை பதிவாளர் (நீதித்துறை) தரப்பில் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கடந்த செப். 15ல் சவுக்கு சங்கருக்கு 6 மாத சிறைத் தண்டனை விதித்தது. இந்த … Read more

கல்லூரி மாணவர்கள் 10 நிமிடத்தில் 25 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு கின்னஸ் உலக சாதனை முயற்சி..!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில், கல்லூரி மாணவர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் மாவட்டம் முழுவதும் 10 நிமிடத்தில் 25 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு கின்னஸ் உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டனர். அழகப்பா கல்வி நிறுவனங்களை சேர்ந்த மாணாக்கர்கள் மற்றும் மருத்துவர்கள் உள்ளிட்ட 15 ஆயிரம் பேர் கின்னஸ் சாதனை முயற்சியை மேற்கொண்டனர். Source link

பழனிவேல் தியாகராஜனுடன் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் வாக்குவாதம்… – கன்னத்தை கிள்ளி சமாதானப்படுத்திய அமைச்சர் மூர்த்தி

மதுரை: மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டத்தின் கீழ் சட்டமன்ற உறுப்பினர்கள் வழங்கிய 10 கோரிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அனீஷ் சேகர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், சட்டமன்ற உறுப்பினர்கள் செல்லூர் கே.ராஜு, வி.வி.ராஜன் செல்லப்பா, ஆர்.பி.உதயகுமார் என மாவட்டத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களின் தொகுதி பிரச்சனைகள் … Read more

செட்டில்மென்ட் தொகையை தராமல் ஏமாற்றியதாக அதிமுக மாஜி அமைச்சர் மணிகண்டன் வீடு முன்பு நடிகை தகராறால் பரபரப்பு: ரவுடிகளை ஏவி மிரட்டுவதாக ராமநாதபுரத்தில் குற்றச்சாட்டு

ராமநாதபுரம்: அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பாலியல் புகார் மனு அளித்த நடிகை சாந்தினி, ராமநாதபுரத்தில் உள்ள மணிகண்டன் வீடு முன் தகராறு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழ் சினிமாவில் நாடோடிகள் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சாந்தினி. இவர், கடந்த அதிமுக ஆட்சியில் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சராக இருந்த மணிகண்டன் மீது பரபரப்பு புகார் அளித்தார். ‘‘மணிகண்டனுடன் 5 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்தேன்; 3 முறை கர்ப்பமடைந்து, அவரது நெருக்கடியால் கர்ப்பத்தை கலைத்தேன். என்னை … Read more

பழனி || மலைக்கு செல்லும் ரோப் கார் பாறை மீது மோதியதில் பரபரப்பு..!

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள மலைக்கோவிலுக்கு பக்தர்கள் எளிதாக செல்லும் வகையில் ரோப்கார் சேவை செயல்பட்டு வருகிறது. ரோப் கார் சேவையானது காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்பட்டு வருவது வழக்கம்.  இதில் ஒரு பெட்டிக்கு நான்கு பேர் வீதம் மொத்தம் நான்கு பெட்டிகளில் 16 பேர் கீழிலிருந்து மேலே பயணம் செய்யலாம். இந்நிலையில் இன்று பழனிமலைக்கு செல்லும் ரோப் காரானது அதிக பாரத்தின் காரணமாக பாறை மீது உரசியதால் அப்பகுதியில் … Read more

வெல்லத்தை தண்ணீரில் கொதிக்க வைத்து ஒரு ஸ்பூன் லெமன் ஜூஸ்… இதில் இவ்ளோ நன்மை இருக்கு!

வெல்லத்தை தண்ணீரில் கொதிக்க வைத்து ஒரு ஸ்பூன் லெமன் ஜூஸ்… இதில் இவ்ளோ நன்மை இருக்கு! Source link

தேவர் ஜெயந்தி -தங்கக்கவசத்தை எடுத்துகொடுக்க வருமாறு எடப்பாடி பழனிசாமி சார்பில் அழைப்பு கடிதம்..!

ராமநாதபுரம் பசும்பொன்னில் நடைபெறவுள்ள தேவர் ஜெயந்திக்காக, தங்கக்கவசத்தை எடுத்து கொடுக்க வருமாறு, தேவர் நினைவிட பொறுப்பாளரிடம், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியின் சார்பாக, முன்னாள் அமைச்சர்கள் இன்று நேரில் அழைப்பு விடுத்தனர். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவாலயத்தில் இன்று, அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், ஓ.எஸ். மணியன், காமராஜ், செல்லூர் ராஜு உள்ளிட்டோர், முத்துராமலிங்க தேவர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர். … Read more