இந்தியை திணிப்பது இந்தி பேசாத மக்கள் மீதான போர்: புதுவை எதிர்க்கட்சித் தலைவர் சிவா பேச்சு

புதுச்சேரி: புதுச்சேரி மாநில திமுக இளைஞர் மற்றும் மாணவர் அணி சார்பில் இந்தி திணிப்பை கண்டித்து போராட்டம் இன்று நடைபெற்றது. சுதேசி பஞ்சாலை அருகே நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவரும், மாநில திமுக அழைப்பாளருமான சிவா தலைமை தாங்கினார். எம்எல்ஏக்கள் அனிபால் கென்னடி, சம்பத், செந்தில்குமார் மற்றும் திமுகவினர் பலர் கலந்து கொண்டனர். இதில் அமைப்பாளர் சிவா பேசியதாவது:‘‘மாநில மொழிகளை அழித்து இந்தி மொழிக்கு மட்டும் முக்கியத்துவம் அளிப்பது நாட்டுக்கு மிகப்பெரிய கேடாக முடியும். … Read more

திமுகவுக்கு தாவும் கே.பி.முனுசாமி?; தமிழக அரசியலில்.. திடீர் பரபரப்பு!

தமிழகத்தில் ஆட்சியை இழந்த பிறகு அதிமுகவில் ஒற்றைத்தலைமை பேச்சு விஸ்வரூபம் எடுத்து உள்ளது. இதன் தொடர்ச்சியாக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இடையே ஏற்பட்ட மோதலால் இருவரும் தனித்தனி அணிகளாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் அதிமுக விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக பாஜக தீவிரம் காட்டி வருவதாக சொல்லப்படுவதால் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு தெரிவித்து வந்த நிர்வாகிகள் தங்களது நிலைப்பாட்டை மாற்றி வருகின்றனர். அதன்படி இதுநாள் வரை எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருந்து வந்தவர்கள் ஓபிஎஸ் … Read more

செவிலியர் பற்றாக்குறையை சரிசெய்யுங்கள் – சீமான் வலியுறுத்தல்

இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழ்நாட்டிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நிலவும் கடுமையான செவிலியர் பற்றாக்குறையினால் நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்படுவது மிகுந்த வேதனை அளிக்கிறது. புதிதாகச் செவிலியர்களை நியமிக்காமல் காலம் தாழ்த்திவரும் தமிழ்நாடு அரசின் செயல் வன்மையான கண்டனத்திற்குரியது. தமிழ்நாட்டில் ஏற்கனவே உள்ள சென்னை மருத்துவக் கல்லூரி (MMC), கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி (KMC), ஸ்டான்லி மருத்துவக் கல்லூரிகளுடன் புதிதாக 11 மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. ஏற்கனவே உள்ள … Read more

சேதமடைந்த தடுப்பணையை சீரமைக்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை

திருப்புவனம்: திருப்புவனம் புதூருக்கும், மடப்புரம் வைகை ஆற்றின் கரையில்  கானூர் கண்மாய் கால்வாய் முகப்புக்கும் குறுக்கே ஆற்றில்  தடுப்பணை 2005ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த தடுப்பணை சுமார் ஒரு கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டது. பின்னர் வைகை அணையிலிருந்து திறந்து விடப்பட்ட  தண்ணீரால் அடுத்த சில நாட்களிலேயே தடுப்பணை இடிந்துவிட்டது. இதனால் சிறிதளவு கூட தண்ணீர் தேங்காமல் வெளியேறியதால் நிலத்தடி நீர்மட்டம் உயரவில்லை.  அதனைத்தொடர்ந்து  லாடனேந்தல் அருகே புதிய தொழில் நுட்பத்துடன் ரூ.8 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை கட்டப்பட்டது. … Read more

ஊட்டி மலை ரயிலுக்கு புது என்ஜின்! திருச்சியில் தயாரான என்ஜினுக்கு இவ்வளவு சிறப்பம்சங்களா?

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் டீசலை எரிபொருளாக பயன்படுத்தி, முதன்முறையாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட புதிய மலை ரயில் என்ஜினின் சோதனை ஓட்டம் வெற்றியடைந்தது. மலை ரயில் என்ஜினால் சுற்றுச்சூழல் பாதிப்பு: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து தினசரி ஊட்டிக்கு நூற்றாண்டு பழமை வாய்ந்த நீலகிரி மலை ரயில் தினமும் காலை மற்றும் மாலை என இரு வேளைகளிலும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த மலை ரயிலில் நிலக்கரியை எரிபொருளாகக் கொண்டிருந்ததால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக புகார் இருந்து வந்தது. இதன் காரணமாக நிலக்கரிக்கு … Read more

“எப்போதும் மாப்பிள்ளை போல் இருக்க ‘மாப்பிள்ளை சம்பா’ சாப்பிடுங்க” – அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ருசிகர பேச்சு

மதுரை: “எப்போதும் மாப்பிள்ளைபோல் இருக்க வேண்டுமா? மாப்பிள்ளை சம்பா ரகம் சாப்பிடுங்கள். இது சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் என்பதால் இப்போது அனைவரும் சாப்பிடுவதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது பாரம்பரிய நெல் ரகங்களை சாப்பிட மக்கள் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர்” என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ருசிகரமாக பேசினார். தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் பொன்விழா ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு இன்று மதுரை ஒத்தக்கடையிலுள்ள வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் மாநில உழவர் தின விழா நடைபெற்றது. வணிக … Read more

நயன்தாரா – விக்னேஷ் சிவன் மீது புகார்!

திரைப்பட நடிகை நயன்தாரா – இயக்குநர் விக்னேஷ் சிவன் தம்பதி இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோராகி உள்ளனர். இந்த செய்தியை விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். கடந்த ஜூன் 9ஆம் தேதியன்று இருவருக்கும் திருமணம் நடைபெற்ற நிலையில், வெறும் நான்கு மாதங்களில் எப்படி குழந்தை பிறக்கும்? வாடகைத் தாய் மூலமாக குழந்தை பெற்றனரா? அல்லது தத்து எடுத்துக் கொண்டனரா? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். வாடகைத்தாய் மூலமாக குழந்தை பெற்றுக் கொள்வதற்கு சில விதிமுறைகள் … Read more

காட்பாடி- திருவலம் சாலையை ரூ47 கோடியில் 4 வழியாக அகலப்படுத்தும் பணி ஆய்வு

வேலூர்: ரூ47 கோடியில் நடைபெற்று வரும் காட்பாடி-திருவலம் 4 வழியாக சாலை அகலப்படுத்தும் பணியை கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு செய்தார். வேலூர் மாநில நெடுஞ்சாலை கோட்டத்தின் கீழ் வேலூர், காட்பாடி, குடியாத்தம் ஆகிய உட்கோட்டங்கள் உள்ளன. இவற்றில் சுமார் 900 கிலோ மீட்டர் சாலைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் காட்பாடி உட்கோட்டத்தில் முதல்வரின் சாலை மேம்பாடு திட்டம் 2021-22ன் கீழ் காட்பாடி- திருவலம் சாலை ரூ47 கோடி செலவில் நான்கு வழி சாலையாக அகலப்படுத்தும் பணி நடந்து … Read more

கன்று ஈன சிரமப்பட்ட பசு மாடு! – மனிதநேய செயலால் பார்த்தோரை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய நபர்!

திருத்துறைப்பூண்டி அருகே சாலையில் கன்று ஈன்றுவதற்கு சிரமப்பட்டு கொண்டிருந்த மாட்டிற்கு, மனிதநேயத்துடன் பிரசவம் பார்த்தவரின் வீடியோ வைரலாகி வருகிறது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி மடப்புரத்தைச் சேர்ந்தவர் முருகானந்தம். இவர் மகனை அழைப்பதற்காக அந்த ஊரிலுள்ள மேட்டு தெருவிற்கு சென்றுள்ளார். அப்போது அங்கே நின்றிருந்த மாட்டை, தெரு நாய்கள் விரட்டி கொண்டிருந்தன. இதைப் பார்த்த முருகானந்தம் மாட்டின் அருகே சென்று பார்த்தபோது பசு மாடு கன்று ஈன்றுவதற்காக சிரமப்பட்டு கொண்டிருந்ததை கவனித்துள்ளார். உடனடியாக முருகானந்தம் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உதவியுடன் … Read more

புதுச்சேரி | நவ.27, 30 தேதிகளில் தேசிய அளவிலான அறிவியல் திறனறித் தேர்வு

புதுச்சேரி: இளம் விஞ்ஞானிகளை கண்டறிய தேசிய அளவில் அறிவியல் திறனறித் தேர்வு நவம்பர் 27, 30 தேதிகளில் நடைபெற உள்ளது என்று புதுச்சேரி வித்யார்த்தி விஞ்சான் மந்தன் மாநில ஒருங்கிணைப்பாளர் அருண் நாகலிங்கம் கூறியுள்ளார். இது தொடர்பாக புதுச்சேரி வித்யார்த்தி விஞ்சான் மந்தன் மாநில ஒருங்கிணைப்பாளர் அருண் நாகலிங்கம் கூறியதாவது: ‘‘இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் விஞ்ஞான் பிரச்சார் நிறுவனம், விபா நிறுவனம், என்.சி.இ.ஆர்.டி (NCERT, GOVT.OF INDIA) இணைந்து, பள்ளி … Read more