கோவையில் தனியார் ரசாயன கிடங்கில் பயங்கர தீ விபத்து!

கோவை மாவட்டம் சரவணம்பட்டி அடுத்த கரட்டுமேடு விசுவாசபுரத்தை சேர்ந்த ரங்கசாமியின் மகன் குமார் அப்பகுதியில் ஆர்பிகே கெமிக்கல்ஸ் என்ற கம்பெனியை நடத்தி வருகிறார். அதில் பெயிண்டில் கலக்கக்கூடிய தின்னரை மொத்தமாக பேரலில் வாங்கி தனி பாட்டிலில் அடைத்து கோயம்புத்தூர் முழுவதும் பெயிண்ட் கடைகளுக்கு சப்ளை செய்து வருகிறார். இந்நிலையில் இன்று மாலை அவரது கம்பெனியில் திடீரென விபத்து ஏற்பட்டுள்ளது.   இந்த தீ விபத்தில் கம்பெனியின் மேல் கூரை உடைந்து விழுந்து உள்ளது. கம்பெனியில் வேலையில் இருந்த … Read more

தொடர் மழை காரணமாக கிராமத்திற்குள் படையெடுக்கும் சிவப்பு அட்டை பூச்சிகள்..

நாமக்கல் மாவட்டம் மங்களபுரம் ஊராட்சியில் உள்ள தாண்டா கவுண்டம் பாளையம் கிராமத்தில்  தொடர் மழை காரணமாக அருகில் உள்ள மலைப்பகுதியில் இருந்து சிவப்பு நிற மர அட்டைகள் ஆயிரக்கணக்கில் ஊருக்குள் படையெடுத்துள்ளன. உணவு பொருட்களில் இந்த அட்டை பூச்சிகள் விழுந்து விடுவதாலும், உடலில் ஒட்டிக்கொண்டு ரத்தத்தை உறிஞ்சுவதாலும், தூங்கி கொண்டிருக்கும் போது காதுக்குள் நுழையும் தன்மையை கொண்டுள்ளதாலும், கிராம மக்கள் கடும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். . Source link

“தெலங்கானாவிலும் மக்களை சந்தித்து வருகிறேன்” – நாராயணசாமிக்கு ஆளுநர் தமிழிசை கடிதம்

புதுச்சேரி: “தெலங்கானா மக்கள் என் மீது மிகுந்த அன்பும், நம்பிக்கையும் கொண்டிருக்கிறார்கள். யாரும் என்னை விரட்டவும் இல்லை. அதற்கான அவசியமும் இல்லை” என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி எழுப்பிய கேள்விக்கு, பதிலளித்து ஆளுநர் தமிழிசை கடிதம் அனுப்பியுள்ளார். “மக்கள் குறை கேட்கின்றேன் என்ற பெயரில் ஆளுநர் தமிழிசை தர்பார் நடத்தியிருக்கிறார். கிரண்பேடியை போல் தமிழிசையும், அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிட ஆரம்பித்துள்ளார். இதனை தட்டிக் கேட்க முடியாமல் முதல்வர் ரங்கசாமி வாயை மூடிக்கொண்டிருக்கிறார். இதேபோன்று தெலங்கானாவில் … Read more

தமிழ் பாடம் கட்டாயம்; உயர்க்கல்வி துறை அதிரடி!

தமிழக உயர் கல்வித்துறை முதன்மை செயலாளர் கார்த்திகேயன் இன்று வெளியிட்டு இருக்கும் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: பாரதிதாசன் பல்கலைக்கழகம், அன்னை தெரசா பல்கலைக் கழகம் மற்றும் பெரியார் பல்கலைக்கழகம் ஆகிய மூன்று பல்கலைக்கழகங்கள் தவிர மற்ற அனைத்து பல்கலைக் கழகங்களில் பி.காம், பி.பி.ஏ, பி.சி.ஏ பாடப்பிரிவுகளுக்கு 2ம் ஆண்டில் தமிழ் மொழி பாடத்திட்ட தேர்வு இடம்பெறவில்லை. அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஒரே நடைமுறையை பின்பற்றக்கூடிய வகையில் இந்த மூன்று பாடப்பிரிவுகளிலும் இரண்டாம் ஆண்டு செமஸ்டர் தேர்வுகளில் இனி தமிழ் பாடமும் … Read more

ஒகேனக்கல்லில் நீர்வரத்து 50ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு: மேட்டூர் அணையில் இருந்து 45 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு

மேட்டூர்: ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 50ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ள நிலையில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 45ஆயிரம் கனஅடியாக நீடிக்கிறது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை வலுத்துள்ளதால் ஒகேனக்கல், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஒகேனக்கல் காவிரியில் நேற்று காலை 32,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து படிப்படியாக உயர்ந்து இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 50ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. … Read more

கோவை: இந்து முன்னணி பிரமுகரின் காருக்கு தீ வைத்த இருவர் மீது பாய்ந்த என்எஸ்ஏ சட்டம்

கோவையில் இந்து முன்னணி பிரமுகரின் காருக்கு தீவைக்கப்பட்ட வழக்கில் கைதான இருவர் மீது தேசிய பாதுகாப்புச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.  கோவை மாவட்டத்தில் கடந்த மாதம் 22ஆம் தேதி இரவு முதல் கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு மேலாக பதற்றமான சூழல் நிலவியது. கோவை மாவட்ட பாஜக அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இந்து முன்னணி அமைப்புகளை சேர்ந்தவர்கள் கார்கள் சேதப்படுத்தப்பட்டது. அதுமட்டுமன்றி இந்து அமைப்புகளின் உப அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்களின் வீடுகள் மீது எரிபொருள் குண்டுகள் வீசப்பட்டன. … Read more

மீண்டும் திரும்பிய 2017.. குஜராத்துக்கு ஏன் தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை?

மீண்டும் திரும்பிய 2017.. குஜராத்துக்கு ஏன் தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை? Source link

திருவாரூரில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையில் சிக்கிய 75 லட்சம் ரூபாய்!

தமிழக முழுவதும் இன்று நெடுஞ்சாலைத்துறை, ஊரக வளர்ச்சித் துறை, உள்ளாட்சித் துறை அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். திருவாரூர் நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையை டிஎஸ்பி நந்தகோபால் தலைமையில் ஆய்வாளர் சித்ரா, ஆய்வாளர் அருள் பிரசாத் உள்ளிட்ட ஏழுக்கு மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சோதனையில் நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் உள்ள ரகசிய அறையில் ரூ. 75 லட்சத்தை … Read more

விக்னேஷ் சிவன் – நயன்தாரா தம்பதி இரட்டை குழந்தைகள் பெற்றெடுத்த விவகாரத்தில் விதிமீறல்கள் நடந்ததா? -அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

விக்னேஷ் சிவன் – நயன்தாரா தம்பதி, வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பெற்ற விவகாரத்தில், குழந்தைகள் பிறந்த மருத்துவமனை கண்டறியப்பட்டுள்ளதாக, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூர் குடும்ப நல பயிற்சி மையத்தில் நடைபெற்ற மாற்றுப்பாலினத்தோரின் உடல், மன ஆரோக்கியம் குறித்த கருத்தரங்கில் பங்கேற்றபின் பேட்டியளித்த அமைச்சர், சட்ட விதிகளுக்கு உட்பட்டு, இரட்டை குழந்தைகளை பெற்றார்களா? என விசாரித்து, ஒரு வாரத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றார். நடிகை நயன்தாரா, விக்னேஷ் எந்த மருத்துவமனையை அணுகி … Read more

சென்னையில் தேங்கும் மழைநீர் முன்பு போல் அல்லாமல் 24 மணி நேரத்தில் வெளியேற்றப்படும்: மேயர் பிரியா உறுதி

சென்னை: வடகிழக்கு பருவமழைக்கு முன்பாக பணிகள் முடிக்கப்படும் என்றும், கடந்த ஆண்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் இந்த ஆண்டு இருக்காது என்றும் சென்னை மேயர் பிரியா தெரிவித்தார். சென்னை ரிப்பன் மாளிகையில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள், குடிநீர் வழங்கல், மின்வாரிய துறை போன்ற பல்வேறு துறை அதிகாரிகளுடன் மாநகராட்சி மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி ஆகியோர் ஆலோசனையில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மேயர் … Read more