சிறுத்தை உயிரிழப்பு: ரவீந்திரநாத் எம்.பி-யை விசாரிக்க அனுமதி கோரி சபாநாயகருக்கு வனத்துறை கடிதம்

சிறுத்தை உயிரிழப்பு: ரவீந்திரநாத் எம்.பி-யை விசாரிக்க அனுமதி கோரி சபாநாயகருக்கு வனத்துறை கடிதம் Source link

ராசிபுரம் அருகே ஆயிரக்கணக்கான அட்டை பூச்சிகள் வீடுகளுக்குள் படையெடுப்பதால் பொதுமக்கள் கடும் அவதி..!!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த மங்களபுரம் ஊராட்சியில் தாண்டாகவுண்டம் பாளையம் உள்ளது. இங்கு சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ராசிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதிகள் எங்கும் பச்சைபசேலென பச்சை நிற போர்வை போல காட்சியளிக்கிறது. இதற்கிடையே, தொடர் மழை காரணமாக தண்டாகவுண்டம் பாளையம் அருகில் உள்ள மலைப் பகுதியிலுள்ள மரங்களில் இருந்து மர அட்டைகள் எனப்படும் சிவப்பு அட்டை … Read more

சாலையின் மறுபக்கம் செல்ல முயன்ற நபர் தவறி விழுந்து லாரியின் சக்கரத்தில் சிக்கி உயிரிழப்பு..!

திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையத்தில் சென்டர் மீடியனில் ஏறி, சாலையின் மறுபுறம் செல்ல முயன்ற நபர், கால் இடறி தவறி விழுந்ததில், லாரியின் சக்கரத்தின் சிக்கி உயிரிழந்த பதைபதைக்கும் காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது. பனியன் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வந்த காங்கேயத்தைச் சேர்ந்த மகாதேவன், நேற்று மதியம் தனது நண்பருடன், சாலை விதிகளை மீறி, சென்டர் மீடியனில் ஏறி சாலையின் மறுபக்கம் செல்ல முயன்றார். அப்போது கால் இடறி கீழே விழுந்த மகாதேவன் மீது அவ்வழியாக வந்த லாரியின் … Read more

எம்ஏஎம்ஆர்.முத்தையாவை சுவீகாரம் எடுத்தது செல்லாது – இளையாத்தங்குடி கைலாசநாதர் சுவாமி கோயில் டிரஸ்ட் அறிவிப்பு

செட்டிநாடு குழும தலைவரான எம்.ஏ.எம்.ஆர்.முத்தையாவை மறைந்த எம்.ஏ.எம்.ராமசாமி செட்டியார் சுவீகாரம் எடுத்தது செல்லாது என இளையாத்தங்குடி ஸ்ரீகைலாசநாத சுவாமி நித்யகல்யாணி அம்மன் தேவஸ்தானம் முறைப்படி மீண்டும் அறிவித்திருக்கிறது. செட்டிநாடு குழுமத்தின் முன்னாள் தலைவரான எம்.ஏ.எம்.ராமசாமி செட்டியார் ஒக்கூரைச் சேர்ந்த ஐயப்பன் செட்டியார் என்பவரை சுவீகாரம் எடுத்திருந்தார். செட்டிநாட்டு நகரத்தார்கள் (செட்டியார்கள்) சுவீகாரம் எடுப்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால், இதற்கென கண்டிப்பான சில விதிமுறைகளை அவர்கள் வைத்திருக்கிறார்கள். அதில் முக்கியமானது, சுவீகாரம் எடுப்பவரும் கொடுப்பவரும் ஒரேபிரிவைச் சேர்ந்தவர்களாக இருக்க … Read more

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை எதிரொலி மேட்டூர் அணையில் நீர்திறப்பு 55,000 கனஅடியாக அதிகரிப்பு

மேட்டூர்: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை வலுத்துள்ளதால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் காலை, விநாடிக்கு 28,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று பிற்பகல் 55,000 கனஅடியாக அதிகரித்தது. அணையின் நீர்மட்டம் 120 அடியாகஉள்ளது. அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால், உபரிநீர் அப்படியே காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது. காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி, வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

ஈரோடு அரசு போக்குவரத்துக் கழக பிஆர்ஓ சடலம் அழுகிய நிலையில் மீட்பு

ஈரோடு: ஈரோட்டில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் (பிஆர்ஓ) உடல் அழுகிய நிலையில் சடலமாக கிடந்ததையடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை, குனியமுத்தூர், பி.கே.புதூர், ராமானுஜம் நகரை சேர்ந்தவர் காந்தி (57). இவர், தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்பு துறையில் விழுப்புரம் உள்பட பல்வேறு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பணியாற்றி வந்தார். இறுதியாக, ஈரோட்டில் உள்ள அரசு போக்குவரத்து கழக மண்டல தலைமை அலுவலகத்தில் பிஆர்ஓவாக பணியாற்றி … Read more

ஷாகின் ஷா அப்ரிடி: இந்திய ஸ்டார்களுக்கு காத்திருக்கும் சவால்; சமாளிப்பார்களா?

ஷாகின் ஷா அப்ரிடி: இந்திய ஸ்டார்களுக்கு காத்திருக்கும் சவால்; சமாளிப்பார்களா? Source link

“சிபிசிஐடி விசாரணையில் முழு நம்பிக்கை இல்லை” – கள்ளக்குறிச்சி மாணவியின் தாய்

புதுச்சேரி: சிபிசிஐடி விசாரணையில் நம்பிக்கையில்லை என்பதால் முதல்வர் ஸ்டாலினை சந்திக்க உள்ளதாக, உயிரிழந்த கள்ளக்குறிச்சி மாணவியின் தாய் தெரிவித்தார். இவ்வழக்கில் சிறப்பு வழக்கறிஞராக செயல்படக் கோரி ப.பா மோகனை சந்தித்து உயிரிழந்த மாணவியின் பெற்றோர் புதுச்சேரி நீதிமன்ற வளாகத்தில் பேசினர். அவரும் ஒப்புகை கடிதம் தர முடிவு எடுத்துள்ளார். கடலூர் மாவட்டம் வேப்பூரை அடுத்த பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மகள் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள பள்ளி விடுதியில் தங்கி பிளஸ்-2 … Read more

ஓசூர் அரசு பள்ளியில் 120 மாணவ, மாணவிகளுக்கு திடீர் மூச்சுத்திணறல், வாந்தி- மயக்கம்: விஷ வாயு கசிவா என விசாரணை; அரசு மருத்துவமனையில் பெற்றோர் குவிந்ததால் பரபரப்பு

ஓசூர்: ஓசூர் அரசு பள்ளியில் மூச்சுத்திணறல், வாந்தி மயக்கம் காரணமாக 120 மாணவ, மாணவிகள் ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விஷவாயு கசிவா என அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் காமராஜர் காலனியில் அரசு நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. சுமார் 1,300 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று பள்ளியின் முதல் தளத்தில் உள்ள வகுப்பறையில் திடீரென துர்நாற்றம் வீசியது. இதனால், மாணவ, மாணவிகள் சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அவர்களுக்கு மூச்சுத்திணறலுடன், … Read more