தரம் மற்றும் பாதுகாப்புக்கு நாங்க கேரண்டி: வாடிக்கையாளர்களுக்கு உறுதி அளித்த KFC

இரு நாட்களாக வேகாத சிக்கன் விவகாரம் புகழ்பெற்ற KFC நிறுவனத்துக்கு சிக்கலை உருவாக்கி வந்தது. சென்னை அம்பத்தூரை சேர்ந்த சேகர் என்பவர் ஸ்விக்கி ஆன்லைன் உணவு டெலிவரி தளம் மூலம் KFC-ல் SMOKY GRILLED CHICKEN ஆர்டர் செய்துள்ளார். சிறிது நேரத்தில் ஆர்டர் செய்யப்பட்ட உணவு வந்தவுடன் அதனை வாங்கி திறந்து பார்த்துள்ளார். அதில், சிக்கன் வேகாமல்  இருந்ததை கண்டு அவர் அதிர்ச்சியடைந்துள்ளார். இந்த சம்பவம் பற்றிய தகவல் இணையத்தில் பகிரப்பட்டு வைரல் ஆன நிலையில், தற்போது … Read more

ஓசூரில் அரசு நடுநிலை பள்ளிகளில் மாணவர்களுக்கு மூச்சுத்திணறல்: போலீஸ் விசாரணை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இயங்கி வரும் மாநகராட்சி பள்ளியில் சுமார் 1,300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். அந்த பள்ளியில் இன்று மதியம் திடீரென ஒரு சில மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த மாணவர்கள் ஓசூர் அரசு மருத்துவனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். அந்த மாணவர்கள் தங்களுக்கு வித்தியாசமான வாசனை தெரிந்ததாகவும், அதன் பிறகே வாந்தி, மயக்கம் ஏற்பட்டதாகவும் கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து அந்த பள்ளியில் படிக்கும் பிற மாணவர்களுக்கும் அதே போன்ற … Read more

சட்டப்பேரவை கூட்டத்தொடரை எதிர்கொள்ள எதிர்கட்சிகள் வசம் உள்ள 13 முக்கிய பிரச்னைகள்!!

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் திங்கட்கிழமை தொடங்க உள்ள நிலையில், எதிர்கட்சிகள் பல்வேறு பிரச்சனைகளை பேரவையில் எழுப்பத் திட்டமிட்டுள்ளனர். முக்கியமான பிரச்சனைகளை கவன ஈர்ப்பு தீர்மானம் மூலம் அளித்து விவாதத்திற்கு எடுத்து கொள்ள எதிர்கட்சிகள் வலியுறுத்தும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 1. சொத்துவரி உயர்வு 2. மின் கட்டண உயர்வு 3. தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாதது. 4. தமிழகத்தில் பால் பொருட்களின் விலை உயர்வு. 5. சட்டம் ஒழுங்கு பிரச்சனை ( சமீபத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்த … Read more

விழுப்புரம்: மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி விபத்து – 2 விவசாயிகள் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் 2 விவசாயிகள் உயிரிழந்த சம்பவம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் மாவட்டம் கி.முத்தாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் ரவி(47), ராஜவேல்(35). விவசாயிகளான இவர்கள், ஊருக்கு அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தங்களது விளை நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக ஒரே மோட்டார் சைக்கிளில் இன்று காலை சென்றனர். பின்பு விளைநிலத்தில் இருந்து ஊருக்கு வந்து கொண்டிருந்தபோது, சென்னை நெடுஞ்சாலையில் எதிரே வந்த கார் ஒன்று … Read more

 பேருந்தில் நடந்த குண்டுவெடிப்பில் 11 பேர் பலி..!!  

மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் ஐ.எஸ்.ஐ.எஸ்., அல்கொய்தா ஆதரவு பயங்கரவாத குழுக்கள் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த பயங்கரவாத குழுக்கள் பொதுமக்களை குறிவைத்து தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். மாலி நாடு 2012-ல் இருந்து பாதுகாப்பு, அரசியல் மற்றும் பொருளாதார பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது. ஐ.நா., பிரெஞ்சு மற்றும் ஐரோப்பிய வீரர்கள் மாலியில் முகாமிட்டிருந்த போதிலும் கிளர்ச்சிகள், இனங்களுக்கு இடையேயான வன்முறைகளால் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஏராளமானோர் இடம்பெயர்ந்துள்ளனர். இந்நிலையில், அந்நாட்டின் மொப்தி மாகாணத்தில் உள்ள பாண்டியாகரா மற்றும் … Read more

பூட்டிக் கிடக்கும் விடுதி, பேராசிரியர்கள் பற்றாக்குறை: புதுச்சேரி சட்டக் கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்

புதுச்சேரி: முதல்வர் ரங்கசாமி வாக்குறுதி தந்து ஓராண்டாகியும் பூட்டிக் கிடக்கும் விடுதிகளை திறக்காதது, பேராசிரியர்கள் பற்றாக்குறையால் சட்டக் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணிக்கும் போராட்டத்தை இன்று துவக்கியுள்ளனர். புதுவை காலாப்பட்டில் டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி உள்ளது. இங்கு 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இன்று வகுப்புகளை புறக்கணித்து சட்டக் கல்லூரி மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் தொடர்பாக மாணவர்கள் கூறியது: ”சட்டக் கல்லூரியில் பேராசிரியர் பற்றாக்குறை நிலவுகிறது. இதனயைடுத்து … Read more

தெரியல… புஹாஹாஹா… அந்த ஒற்றை ’குபீர்’ சிரிப்பால் அண்ணாமலைக்கு சீமான் பதிலடி!

அமெரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தெற்கு கலிபோரியாவில் இந்திய வம்சாவளி மக்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது பேசுகையில், நம்ம அண்ணன் இருக்கிறார். காலையில் வீட்டில் இருந்து கிளம்பி வெளியே வருவார். நாலு பத்திரிகையாளர்கள் மாட்டுவார்கள். சீமானை பார்த்தவுடன் மைக்கை நீட்டுவார்கள். அண்ணன் இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன? என்பார்கள். உலகத்தில் இருக்கும் எல்லா விஷயங்களுக்கும் கருத்து வைத்திருப்பார். குரங்கு ஏன் குட்டிப் போட்டுச்சு? ஒரு கருத்து. குரங்கு ஏன் குட்டிப் போடல? … Read more

இந்திக்கு எதிரானவர்கள் நாங்கள் இல்லை – அமைச்சர் பொன்முடி

பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து இந்தியை அனைத்து வழிகளிலும் திணிக்க முயல்கிறதென்று எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டிவருகின்றன. இப்படிப்பட்ட சூழலில், மத்தியப் பல்கலைக்கழகங்கள் உள்பட அனைத்து தொழில்நுட்ப மற்றும் தொழில்நுட்பம் அல்லாத கல்வி நிறுவனங்களிலும் பயிற்று மொழியாக இந்தியை கட்டாயமாக்க வேண்டும் என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழு பரிந்துரைத்துள்ளது. கடந்த மாதம், குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிடம் அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழு இதுகுறித்த அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. அந்த அறிக்கையில், ஆங்கிலம் … Read more

தஞ்சையில் சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்: அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தார்.

தஞ்சாவூர்: தஞ்சை பூதலூர் செல்லப்பன்பேட்டையில் சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம் நிகழ்வினை துவக்கி வைத்து, முன்னோடி கால்நடை வளர்ப்பு விவசாயிகளுக்கு விருதுகள் வழங்கி கெளரவித்தோம் என்று கூறியுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வட்டாரம் செல்லப்பன்பேட்டை கிராமத்தில் இன்று சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இந்த முகாமை தொடங்கி வைத்தார் . இந்த முகாமில் நோய்வாய்ப்பட்ட கால்நடைகளுக்கு உரிய சிகிச்சை, கன்றுகள் மற்றும் ஆடுகளுக்கு … Read more