ஈரோடு || 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் போக்சோவில் கைது.!

ஈரோடு மாவட்டத்தில் 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைநரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பூசாரிபாளையம் பகுதியை சேர்ந்தவர் தனசேகர் (22). இவர் கோபிசெட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமியுடன் பழகி வந்துள்ளார். இந்நிலையில் அந்த சிறுமியிடம் தனசேகர், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து கோபிசெட்டிபாளையம் அனைத்து மகளிர் காவல் … Read more

பழனியில் பரபரப்பு.. பாறையில் மோதியது ரோப் கார்..!

பழனியில், பக்தர்களை ஏற்றிச் சென்ற ரோப் கார் பாறையில் மோதி பாதி வழியில் நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதில், பக்தர்களுக்கு பாதிப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் ரோப் கார் மூலமாக மலைக்கு சென்று சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்த நிலையில், உச்சிகால பூஜை தரிசனத்திற்காக ஒரு குழுவினர் இன்று ரோப் கார் மூலம் மலைக்கு சென்றனர். அப்போது அதிக பாரம் ஏற்றியதாக கூறப்படுகிறது. இதன் … Read more

மரத்தை ஏன் வெட்டுகிறார்கள்…அது பாவம் இல்லையா…? மழலை மொழியில் சிறுமி கேட்கும் கேள்வி..

மரத்தை ஏன் வெட்டுகிறார்கள், அது பாவம் இல்லையா? என ஒரு சிறுமி மழலை மொழியில் கேட்கும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. சீர்காழி மாரிமுத்து நகரில் வசிக்கும் ஜெகநாதன் என்பவரது வீட்டில் பராமரிப்பு பணிக்காக மரத்தை வெட்டியுள்ளனர். ஜன்னல் வழியாக இதனை பார்த்த ஜெகநாதனின் இரண்டரை வயது மகள் மயூரி, மரத்தை ஏன் வெட்டுகிறார்கள் அது பாவம் இல்லையா? என இரக்கத்துடன் கேட்டதை, அவரது தந்தை வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார்.  Source link

“நீங்கள் படித்த காலத்தில் இந்தி திணிக்கப்படாததற்கு காங். ஆட்சியே காரணம்” – அண்ணாமலைக்கு கே.எஸ்.அழகிரி பதிலடி

சென்னை: “கடந்த காலத்தில் பிரதமர் நேரு இந்தி பேசாத மக்களுக்கு கொடுத்த உறுதிமொழியைப் போல மீண்டும் அத்தகைய உறுதிமொழியை பிரதமர் மோடியிடமிருந்து பெறுவதற்காக அண்ணாமலை முயற்சி செய்வாரா?” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “இந்தியாவில் ஆட்சி மொழியாக இந்தியை எதிர்க்கிற திமுகவும், இந்தியை திணித்த காங்கிரஸ் கட்சியும் கூட்டணி வைத்திருப்பது எந்த அடிப்படையிலானது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியிருக்கிறார். வரலாற்றை அறியாமல் அரசியல் … Read more

மலைக்குறவர் சமூக மக்களை பழங்குடியினராக அறிவியுங்க! – சீமான் வலியுறுத்தல்!

தொல்குடி தமிழர்களான மலைக்குறவர் சமூக மக்களை பழங்குடியினராக அறிவிக்க தமிழ்நாடு அரசு வழிவகை செய்து, அவர்களுக்கு உடனடியாக பழங்குடியினருக்கான சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது: காஞ்சிபுரம் படப்பை பகுதியில் வசித்துவந்த மலைக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த சகோதரர் வேல்முருகன் தன்னுடைய இருபிள்ளைகளின் கல்விக்காகச் சாதி சான்றிதழ் கேட்டுப் போராடி வந்த நிலையில், சான்றிதழ் வழங்காமல் அலைக்கழிக்கப்பட்டதால் மனமுடைந்து … Read more

தரம் மற்றும் பாதுகாப்புக்கு நாங்க கேரண்டி: வாடிக்கையாளர்களுக்கு உறுதி அளித்த KFC

இரு நாட்களாக வேகாத சிக்கன் விவகாரம் புகழ்பெற்ற KFC நிறுவனத்துக்கு சிக்கலை உருவாக்கி வந்தது. சென்னை அம்பத்தூரை சேர்ந்த சேகர் என்பவர் ஸ்விக்கி ஆன்லைன் உணவு டெலிவரி தளம் மூலம் KFC-ல் SMOKY GRILLED CHICKEN ஆர்டர் செய்துள்ளார். சிறிது நேரத்தில் ஆர்டர் செய்யப்பட்ட உணவு வந்தவுடன் அதனை வாங்கி திறந்து பார்த்துள்ளார். அதில், சிக்கன் வேகாமல்  இருந்ததை கண்டு அவர் அதிர்ச்சியடைந்துள்ளார். இந்த சம்பவம் பற்றிய தகவல் இணையத்தில் பகிரப்பட்டு வைரல் ஆன நிலையில், தற்போது … Read more

ஓசூரில் அரசு நடுநிலை பள்ளிகளில் மாணவர்களுக்கு மூச்சுத்திணறல்: போலீஸ் விசாரணை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இயங்கி வரும் மாநகராட்சி பள்ளியில் சுமார் 1,300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். அந்த பள்ளியில் இன்று மதியம் திடீரென ஒரு சில மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த மாணவர்கள் ஓசூர் அரசு மருத்துவனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். அந்த மாணவர்கள் தங்களுக்கு வித்தியாசமான வாசனை தெரிந்ததாகவும், அதன் பிறகே வாந்தி, மயக்கம் ஏற்பட்டதாகவும் கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து அந்த பள்ளியில் படிக்கும் பிற மாணவர்களுக்கும் அதே போன்ற … Read more

சட்டப்பேரவை கூட்டத்தொடரை எதிர்கொள்ள எதிர்கட்சிகள் வசம் உள்ள 13 முக்கிய பிரச்னைகள்!!

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் திங்கட்கிழமை தொடங்க உள்ள நிலையில், எதிர்கட்சிகள் பல்வேறு பிரச்சனைகளை பேரவையில் எழுப்பத் திட்டமிட்டுள்ளனர். முக்கியமான பிரச்சனைகளை கவன ஈர்ப்பு தீர்மானம் மூலம் அளித்து விவாதத்திற்கு எடுத்து கொள்ள எதிர்கட்சிகள் வலியுறுத்தும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 1. சொத்துவரி உயர்வு 2. மின் கட்டண உயர்வு 3. தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாதது. 4. தமிழகத்தில் பால் பொருட்களின் விலை உயர்வு. 5. சட்டம் ஒழுங்கு பிரச்சனை ( சமீபத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்த … Read more