ஓசூரில் பள்ளியில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி வந்துள்ளார்

ஓசூர்: ஓசூரில் பள்ளியில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி வந்துள்ளார். பள்ளியில் உள்ள கிரிக்கெட் விளையாட்டு மைதானத்தை மகேந்திர சிங் தோனி திறந்து வைக்க வந்துள்ளார்.

'தாமதமாக சான்றிதழ்கள் சமர்ப்பித்ததற்காக பணி நியமனத்தை மறுக்க முடியாது' – உயர் நீதிமன்றம்

கலப்பு மணம் புரிந்து கொண்டதற்கான சான்றிதழ்களை தாமதமாக சமர்ப்பித்தவருக்கு பணி நியமனம் மறுக்கப்பட்ட வழக்கில், தாமதமாக சான்றிதழ்களை சமர்ப்பித்தார் என்பதற்காக பணி நியமனம் மறுக்க முடியாது எனத் தெரிவித்து பணி நியமனம் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் பள்ளிக்கல்வித்துறைக்கு உத்தரவிட்டு்ள்ளது. அரசுப் பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வு நடைமுறைகளை பள்ளிக்கல்வித் துறை 2015ஆம் ஆண்டு மேற்கொண்டது. வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அடிப்படையிலும், நேரடியாகவும் தேர்வு நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த தேர்வில் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாகவும், நேரடியாகவும் பங்கேற்ற … Read more

10 வருசத்தில என்ன செஞ்சிருக்காங்க?.. தி.மு.க சாயம் வெளுக்காது: ஜெயக்குமாருக்கு அமைச்சர் கே.என்.நேரு பதிலடி

10 வருசத்தில என்ன செஞ்சிருக்காங்க?.. தி.மு.க சாயம் வெளுக்காது: ஜெயக்குமாருக்கு அமைச்சர் கே.என்.நேரு பதிலடி Source link

லாரி மீது கார் மோதிய பயங்கர விபத்தில் பள்ளி மாணவர் உட்பட 3 பேர் பலி.!

தர்மபுரி மாவட்டத்தில் லாரி மீது கார் மோதிய விபத்தில் பள்ளி மாணவன் உட்பட மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர். தர்மபுரி மாவட்டம் பாடி பகுதியை சேர்ந்தவர் வஜ்ரவேல். இவரது மகன் லேப் டெக்னீசியன் ராகுல்(22) மற்றும் குமாரசாமிபேட்டை பகுதியை சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவன் சந்தோஷ் (15) துரை என்பவரது மகன் கவியரசு (21), ஜீவபாரதி (21) மற்றும் கார்த்திக் (22) ஆகிய 5 பேரும் நேற்று இரவு டீ அருந்திவிட்டு வரலாம் என்று காரி … Read more

ஐபோன், தங்கம், வெளிநாட்டு கரன்சி.. பெண்ணிடம் ரூ.17 லட்சம் அபேஸ்..!

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் பிரம்மாவரை அடுத்த சாந்தாரு கிராமத்தைச் சேர்ந்தவர் லவீனா ஜெனிஃபர் மோராஸ். சில நாட்களுக்கு முன்பு ‘ஜோவன்-871’ என்ற இன்ஸ்டாகிராம் கணக்கு மூலம் லவீனாவை தொடர்பு கொண்ட ஒருவர், தன்னை டாக்டர் என்று அறிமுகம் செய்துள்ளார். கனடாவில் பணிபுரிந்து வருவதாக கூறி பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார். இந்நிலையில், கடந்த 2-ம் தேதி மீண்டும் லவீனாவை தொடர்பு கொண்ட அந்த நபர், தன்னிடம் ஐபோன், தங்கம், வௌிநாட்டு பணம் இருப்பதாக கூறினார். அதை இந்தியாவிற்கு … Read more

தீபாவளியை முன்னிட்டு பட்டாசு வெடிக்கும் நேரத்தில் மாற்றம் இல்லை -தமிழக மாசுகட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு

பட்டாசு வெடிக்கும் நேரத்தில் மாற்றம் இல்லை தீபாவளியை முன்னிட்டு பட்டாசு வெடிக்கும் நேரத்தில் மாற்றம் இல்லை என தமிழக மாசுகட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு காலை 6 மணி முதல் 7 மணி வரை மற்றும் இரவு 7 மணி முதல் எட்டு மணி வரை பட்டாசு வெடிக்க அனுமதி 2 மணி நேரம் மட்டும் பட்டாசு வெடிக்கலாம் – மாசுகட்டுப்பாட்டு வாரியம் Source link

நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியிடம் விளக்கம் பெறப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: விக்னேஷ் சிவன் – நயன்தாரா தம்பதியினர் வாடகைத்தாய் சட்ட விதிகளை முறையாகப் பின்பற்றினார்களா என்று ஊரக மருத்துவ இயக்குநரகம் மூலம் விளக்கம் பெறப்படும் என்று தமிழக மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை – கிண்டியில் உள்ள எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் டாக்டர் சண்முகசுந்தரம் பெயரில் புதிய இருக்கை அமைக்கப்பட்டுள்ளது. இந்த இருக்கையை தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி மற்றும் மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் துவக்கி வைத்தனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை … Read more

சோழர் பாசன திட்டம்: நடை பயணம் அறிவித்த அன்புமணி

தலைவர் அன்புமணி அரியலூர் மாவட்டத்தில் சோழர் பாசன திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி நடைபயணம் மேற்கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவிரி பாசன மாவட்டங்களுக்கு இணையான வளத்தையும், வளர்ச்சியையும் கொண்டிருக்க வேண்டிய அரியலூர் மாவட்டம், அவற்றில் கடைநிலை மாவட்டங்களில் ஒன்றாக தடுமாறிக் கொண்டிருக்கிறது. மற்ற மாவட்டங்களில் இல்லாத அளவுக்கு பாசனக் கட்டமைப்புகள் அரியலூர் மாவட்டத்தில் சோழர் காலத்திலேயே உருவாக்கப்பட்டுள்ள போதிலும் அவை பராமரிக்கப்படாதது தான் இதற்குக் காரணமாகும். தமிழ்நாட்டில் 1000 ஏக்கருக்கும் கூடுதலான … Read more

நயன்தாராவுக்கு இரட்டை குழந்தைகள் விவகாரம் : அரசு எடுத்திருக்கும் முடிவு!

சென்னை கிண்டியில் உள்ள எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் டாக்டர் சண்முகசுந்தரம் பெயரில் புதிய இருக்கை அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ள முதல் இருக்கை. இதில் பணியமர்த்தப்படும் பேராசிரியர் தற்போது இங்கிலாந்து நாட்டில் பணியாற்றி வருகிறார். இவர் ஆண்டுக்கு ஒரு முறை இணைப்பு கல்வி நிறுவனங்களுக்கு சென்று பயிற்சி வழங்குவார்.  இந்த இருக்கையை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்துகொண்டு இன்று (அக். 10) துவக்கி வைத்தனர். இதனை தொடர்ந்து பேசிய ஆளுநர் … Read more

கமுதியில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 60-வது குருபூஜை விழா

ராமநாதபுரம்: கமுதியில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 60-வது குருபூஜை விழாவில் கலந்துகொள்பவர்கள் வரும் 21-ம் தேதி மாலை 5.45-க்குள் ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் அறிவித்துள்ளார்.