3% அகவிலைப்படி உயர்வு வழங்காததை கண்டித்து தமிழகம் முழுவதும் மின்வாரிய ஓய்வூதியதாரர்கள் தர்ணா..!!

சென்னை: 3% அகவிலைப்படி உயர்வு வழங்காததை கண்டித்து பாளை மின்சார வாரிய அலுவலகம் முன் ஓய்வூதியதாரர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். திருச்சி, ஈரோடு, கோவையிலும் மின்வாரிய ஓய்வூதியதாரர்கள் தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடலூர் || பள்ளி வேன்கள் மோதிய விபத்தில் 20 மாணவர்கள் காயம்.!

கடலூர் மாவட்டத்தில் 2 பள்ளி வேன்கள் மோதிய விபத்தில் 20 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே உள்ள கோபாலபுரத்தில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இப்பள்ளியை சேர்ந்த 2 வேன்கள் பெண்ணாடத்திலிருந்து இன்று காலை மாணவர்களை ஏற்றிக் கொண்டு வந்து கொண்டிருந்தது. அப்பொழுது இரண்டு வேன் ஓட்டுநர்களும் போட்டி போட்டுக் கொண்டு வாகனங்களை இயக்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், விருதாச்சலம் அடுத்த கோ.ஆதனூர் அருகே 2 வேன்களும் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டது. இதில் நிலைதடுமாறி … Read more

ஆதரவற்ற 32 பேரின் உடல்கள் அடக்கம்.. தஞ்சை போலீசாருக்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்கில், தஞ்சை மருத்துவக் கல்லூரி, தஞ்சை மேற்கு, தஞ்சை தாலுகா, தஞ்சை கிழக்கு, ஒரத்தநாடு, புதுக்கோட்டை காவல் நிலையங்களின் எல்லைக்குட்பட்ட அடையாளம் தெரியாத மற்றும் உரிமை கோரப்படாத 24 ஆண்கள், 6 பெண்கள், 2 குழந்தைகள் என மொத்தம் 32 உடல்கள் வைக்கப்பட்டிருந்தன. இந்த உடல்களுக்கு யாரும் உரிமை கோராவிட்டால் ஒரு வாரத்தில் அடக்கம் செய்யப்படும் என காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால், மாதக்கணக்கில் ஆகியும் இந்த உடல்களுக்கு யாரும் உரிமை … Read more

12-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலிடெக்னிக் மாணவர் தாலிக்கட்டிய வீடியோவை பேஸ்புக்கில் வெளியிட்ட நபர் கைது…

சிதம்பரத்தில் பேருந்து நிலையத்தில் வைத்து பள்ளி மாணவிக்கு, பாலிடெக்னிக் மாணவர் தாலி கட்டும் வீடியோவை, பேஸ்புக்கில் வெளியிட்ட நபர் கைது செய்யப்பட்டார். இணையதளத்தில் வீடியோ வைரலான நிலையில், அதை வெளியிட்ட கோவிலாம்பூண்டியை சேர்ந்த பாலாஜி கணேசிடம் மாணவியின் பெற்றோர் தட்டிக் கேட்டபோது, அவர்களை பாலாஜி திட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து பாலாஜியை போலீசார் கைது செய்தனர். இதனிடையே, மாணவர் மற்றும் மாணவியிடம் போலீசார் … Read more

இந்தி பேசாத மக்கள் மீதான போர்: நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைக்கு வைகோ கண்டனம்

சென்னை: “இந்தியாவின் பன்முகத்தன்மையைச் சிதைத்து, ஒரே நாடு; ஒரே மதம்; ஒரே பண்பாடு என்று கூப்பாடு போட்டு வரும் இந்துத்துவ சக்திகள், இந்து ராஷ்டிரத்தை கட்டி எழுப்பி, “ஒரே மொழி; அது சமஸ்கிருதம் அல்லது அதன் சாயலில் உள்ள இந்தி மொழி” என்பதை நிலைநாட்ட ஆட்சி அதிகாரத்தின் துணைகொண்டு கட்டாயமாக திணிக்க முனைந்து இருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது” என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய அரசின் உள்துறை அமைச்சர் … Read more

நீலகிரி அருகே தேயிலை தொழிற்சாலையில் இயற்கை உரத்தை வெளி சந்தையில் விற்பனை செய்த 4 பேர் சஸ்பெண்ட்..!!

நீலகிரி: நீலகிரி அருகே தேயிலை தொழிற்சாலையில் இயற்கை உரத்தை வெளி சந்தையில் விற்பனை செய்த 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். பத்மநாபன், சிங்காரம், சிவராஜ், ரமேஷ் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து நிர்வாக இயக்குநர் ரவிச்சந்திரன் நடவடிக்கை எடுத்துள்ளார்.

தீபாவளி: 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி.. கட்டுப்பாடுகள் என்ன?

தீபாவளி: 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி.. கட்டுப்பாடுகள் என்ன? Source link

கடலூர் || கையில் ஆப்ரேஷன் செய்த பெண் உயிரிழப்பதற்கு காரணம் என்ன?.

கடலூர் மாவட்டம் பாரதி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில், சாவடி பகுதியை சேர்ந்த மீனா என்பவர் கடந்த சனிக்கிழமையன்று கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.  அப்போது அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவிக்க அதற்கு உறவினர்கள் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து மீனாவிற்கு  ஞாயிற்றுக்கிழமையன்று கையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, பிறகு சாதாரன வார்டுக்கு மாற்றப்பட்டார்.  இந்நிலையில் நேற்று பிற்பகல் மீனா உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதை கேட்டு அதிர்ச்சி … Read more

பெண் திடீர் உயிரிழப்பு.. ஆஸ்பத்திரியை அடித்து நொறுக்கிய உறவினர்கள்..!

கடலூர் மாவட்டம் சாவடி பகுதியைச் சேர்ந்தவர் மீனா (58). இவர், கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சைக்காக கடந்த சனிக்கிழமை கடலூர் பாரதி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கூறவே அதற்கு உறவினர்கள் ஒப்புக்கொண்டனர். ஞாயிற்றுக்கிழமை மீனாவின் கையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு சாதாரன வார்டுக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில், நேற்று (திங்கட்கிழமை) பிற்பகலில் மீனா உயிரிழந்து விட்டதாக மருத்துவமனை நிர்வாகம தெரிவித்துள்ளது. இதைக் கேட்ட உறவினர்கள் … Read more