75 பேருக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணை – முதலமைச்சர் வழங்கினார்..!

தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவித்திருப்பதாவது,  “சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரிந்து பணிக்காலத்தில் உயிரிழந்த 75 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு பட்டியல் எழுத்தர், அலுவலக உதவியாளர், எடையாளர், காவலர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணை வழங்கிடும் அடையாளமாக இரண்டு பேருக்கு பணி நியமன ஆணைகளை  வழங்கினார்.  இதையடுத்து, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தற்காலிகமாகப் … Read more

மழைநீர் வடிகால் | ஒப்பந்ததாரர்களின் பணிகளைக் கண்காணிக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

சென்னை: “அரசிடமிருந்து அனைத்து நிதிகளும் உரிய நேரத்தில் விடுவிக்கப்படுகிறது. குறிப்பாக பணி ஆணை வழங்கப்பட்டப்பின் அதனைப் பயன்படுத்தி பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பணிகளை விரைவாக முடித்திட வேண்டும்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை ஆய்வுக் கூட்டத்தில் பேசியுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (அக்.12) நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முதல்வர் பேசுகையில், … Read more

நடப்பாண்டில் 2வது முறையாக நிரம்பியது மேட்டூர் அணை: 16 கண் மதகு வழியாக உபரிநீர் திறப்பு

மேட்டூர்: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால், ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்தது. நீர்வரத்து அதிகரித்ததால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர தொடங்கியது. நடப்பு நீர்ப்பாசன ஆண்டில், 2வது முறையாக மேட்டூர் அணை, நேற்று அதிகாலை 3.30 மணியளவில் முழு கொள்ளளவான 120 அடியை எட்டி நிரம்பியது. அணை நிரம்பியதால் எச்சரிக்கை சங்கு ஒலிக்கப்பட்டு, 25 நாட்களுக்கு பிறகு உபரிநீர் போக்கியான 16 கண் மதகுகள் அதிகாலை 5.30 … Read more

போதிய சாக்குப்பைகள் இல்லாததால் தாமதமாகும் கொள்முதல்! தவிக்கும் விருத்தாச்சலம் விவசாயிகள்!

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் போதிய அளவு சாக்குப்பைகள் கையிருப்பு இல்லாததால் விவசாயிகளும், வியாபாரிகளும் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். 2 ஆயிரம் சாக்குப்பைகளுக்கு 700 சாக்குப்பைகள் தான் உபயோகிக்கும் நிலையில் இருப்பதாக அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நெல், உளுந்து, மணிலா, கம்பு உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட தானியங்கள் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. இந்த நிலையில் தற்போது கம்பு வரத்து அதிகரித்து உள்ளதால் விவசாயிகளின் சாக்கு மூட்டையில் இருந்து … Read more

விருதுநகர் அருகே சோகம்.! லாரி மோதி அரசு பேருந்து ஓட்டுநர் உயிரிழப்பு.!

விருதுநகர் மாவட்டத்தில் லாரி மோதிய விபத்தில் அரசு பேருந்து ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்து உள்ளார். விருதுநகர் மாவட்டம் சத்திரரெட்டியபட்டி பகுதியை சேர்ந்தவர் அரசு பேருந்து ஓட்டுநர் சீனிவாசராகவன் (52). இவரது மனைவி சித்ரா. இந்நிலையில், சீனிவாசராகவன் மோட்டார் சைக்கிளில் விருதுநகர்-சத்திரரெட்டியபட்டி சாலையில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அவழியாக எதிரே வந்த லாரி ஒன்று எதிர்பாராத விதமாக இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சீனிவாச ராகவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். … Read more

வெல்டிங் வைத்தபோது திடீரென தீ பிடித்த லாரி.. நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு தீ கட்டுப்படுத்தப்பட்டது..!

விழுப்புரம் அருகே வெல்டிங் வைத்தபோது லாரியில் பற்றிய தீ நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு கட்டுப்படுத்தப்பட்டது. புதுச்சேரியில் இருந்து, மகாராஷ்டிராவுக்கு எம்.ஆர்.எப். டயர்களை ஏற்றிக்கொண்டு சென்ற லாரி, பம்பர் பகுதியில் ஏற்பட்ட பழுதால், கோலியனூர் கூட்டுச்சாலையில் உள்ள ஒரு கடையில் நிறுத்தப்பட்டு, வெல்டிங் வைக்கும் பணி நடைபெற்றது. தகவலின்பேரில் தீயணைப்புத்துறையினர் வந்து, தீயை கட்டுப்படுத்தினர். எனினும் விபத்தில் சுமார் 150 டயர்கள் எரிந்து வீணாகின. எர்த் வைக்காமல் வெல்டிங் வைத்ததால், ஸ்பார்காகி, தீ பற்றியிருக்கலாம் என கூறப்படுகிறது. … Read more

டாஸ்மாக் திறக்கும் நேரத்தை மாற்றி அமைக்கலாமா? – அரசு பதில் தெரிவிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை: தமிழகத்தில் டாஸ்மாக் கடை திறந்திருக்கும் நேரத்தை மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை என மாற்றியமைக்கலாமா? என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தமிழகத்தில் 21 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மதுபானம் விற்க தடை விதித்தும், டாஸ்மாக் விற்பனை நேரத்தை மதியம் 2 மணி முதல் 8 மணி வரை என மாற்றியமைக்கவும் உத்தரவிடக்கோரி திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த … Read more

சட்டப்பேரவை வரும் 17ம் தேதி கூடும் நிலையில் இபிஎஸ், ஓபிஎஸ் கடிதம் குறித்து நியாயமான முடிவு: நெல்லையில் சபாநாயகர் அப்பாவு பேட்டி

நெல்லை: தமிழக சட்டப்பேரவை வருகிற 17ம் தேதி கூடும் நிலையில் இபிஎஸ், ஒபிஎஸ் கடிதம் தொடர்பாக, படித்து பார்த்து நியாயமான முறையில் முடிவு எடுக்கப்படும் என நெல்லையில்  நடந்த விழாவில் தமிழக சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவை வருகிற 17ம் தேதி கூடுகிறது. இந் நிலையில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான தன்னைக் கேட்டுத் தான் முடிவுகள் எடுக்க வேண்டும் என ஓபிஎஸ் சட்டப்பேரவையில் கடிதம் அளித்துள்ளார். அதேபோன்று இபிஎஸ், எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஆர்.பி. உதயகுமாரை அங்கீகரிக்க … Read more

தீபாவளி போனஸ் தராத கடைமுன் குப்பைகளை கொட்டிய தூய்மை பணியாளர்-வெளியானது சிசிடிவி காட்சிகள்!

கோவையில் தீபாவளி போனஸ் தராத கடையின் முன்பு மாநகராட்சி தூய்மை பணியாளர் ஒருவர் குப்பைகளை கொட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. கோவை ஆர்.எஸ். புரம் ராமச்சந்திரா ரோட்டில் உள்ள தனியார் எல்.இ.டி கடை நடத்தி வருபவர் ஜேம்ஸ். இவரிடம், மாநகராட்சி தூய்மை பணியாளர் ஒருவர் தீபாவளி போனஸ் கேட்டதாக கூறப்படுகிறது. அப்போது ஜேம்ஸ் “20 ஆம் தேதிக்கு மேல் வாங்க தருகிறேன்” என அந்த தூய்மை பணியாளரிடம் கூறியுள்ளார். ஆனால், அதன் பின்னரும், அந்த தூய்மை … Read more