ரயிலில் தள்ளி மாணவி கொலை: தந்தை மரணத்தில் திடீர் திருப்பம்..!

பரங்கிமலையில், காதலனால் ரயிலில் தள்ளி கொலை செய்யப்பட்ட மாணவியின் தந்தை மாரடைப்பால் இன்று உயிரிழந்தார் எனக் கூறப்பட்ட நிலையில், அவருடைய மரணத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. சென்னை ஆலந்தூர் காவலர் குடியிருப்பு பகுதியில் வசித்து வந்தவர் சத்யா என்ற சத்ய ப்ரியா(20). இவர் தி.நகரில் உள்ள ஜெயின் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், கல்லூரிக்கு செல்வதற்காக நேற்று மதியம் 1.15 மணியளவில் பரங்கிமலை ரயில் நிலையத்திற்கு தனது தோழிகளுடன் வந்துள்ளார். அப்போது அங்கு வந்த … Read more

மாநிலம் முழுவதும் 510 கிடங்குகளில் 3.75 லட்சம் டன் விளைபொருள் சேமிக்கலாம்: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தகவல்

சென்னை: மாநிலம் முழுவதும் 284 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில், 510 சேமிப்பு கிடங்குகள் மூலம் 3.75 லட்சம் டன் விளைபொருட்களைச் சேமிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது. அப்போது அமைச்சர் பேசியதாவது: விளைபொருட்களைச் சேமித்து வைத்து நல்ல விலை கிடைக்கும் காலங்களில் விற்பனை செய்ய மாநிலம் முழுவதும் 284 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் 510 … Read more

தேவர் தங்க கவசம்; முந்திக்கொண்ட இபிஎஸ்; ஓபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன?

ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 30 ஆம் தேதி, தேவை குருபூஜை ஜெயந்தி நடைபெறுவது வழக்கம். அந்த நாளில், ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்திற்கு பொதுமக்கள் மற்றும் தேவர் சமூகத்தை சேர்த்தவர்கள் செல்வர். கடந்த 2014 ஆம் ஆண்டு, ஜெயலலிதாவால் தேவர் சிலைக்கு 13 கிலோ எடை கொண்ட தங்க கவசம் வழங்கப்பட்டது. இந்த 5 கோடி மதிப்பிலான கிரீடம் மற்றும் கவசம் ஒவ்வொரு ஆண்டும் தேவர் ஜெயந்தி அன்று, சிலைக்கு அணிவிக்கப்பட்டு பின்னர் … Read more

பொது சுகாதாரத்துறை நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சுகாதார பணியாளர்களுக்கு விளையாட்டு போட்டிகள்-துணை இயக்குநர் தொடங்கி வைத்தார்

திருவண்ணாமலை : பொது சுகாதாரத்துறையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, திருவண்ணாமலையில் விளையாட்டு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்தது.தமிழகத்தில் பொது சுகாதாரத்துறை கடந்த 1922ம் ஆண்டு தொடங்கப்பட்டது. மக்கள் சேவையில் வெற்றிகரமாக 100 ஆண்டுகளை பொது சுகாதாரத்துறை தொட்டிருக்கிறது. அதையொட்டி, நூற்றாண்டு விழா தற்போது மாநிலம் முழுவதும் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் கடந்த 10ம் தேதி தொடங்கி வைக்கப்பட்ட நூற்றாண்டு விழா ேஜாதி, அனைத்து மாவட்டங்களுக்கும் பயணிக்கிறது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் பொது சுகாதாரத்துறை சார்பில் … Read more

சரிவிலிருந்து மீளும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் நிதிநிலை!

மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு கொடுக்க வேண்டிய நிலுவைத் தொகைகளை தவணை முறையில் வட்டி இல்லாமல் செலுத்தலாம் என மத்திய அரசு தெரிவித்ததற்குப் பிறகு, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் (டான்ஜெட்கோ) நிதிநிலை மெதுவாகவும், அதே வேளையில் சீராகவும் உயர்ந்து வருகிறது. மத்திய அரசின் உத்தரவை தொடர்ந்து பல்வேறு மின் உற்பத்தியாளர்களுக்கு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (டான்ஜெட்கோ) வழங்க வேண்டிய நிலுவையில் உள்ள 17,191 கோடி ரூபாய் 48 மாதங்களில் திருப்பி … Read more

கடலூர் || மாட்டுக்கொட்டகையில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்து – 8 மாடுகள் பலி

கடலூர் மாவட்டத்தில் மாட்டு கொட்டகையில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 மாடுகள் உயிரிழந்துள்ளன. கடலூர் மாவட்டம் உடையூர் பகுதியை சேர்ந்தவர் விவசாயி ஜெயகோபால். இவர் பத்துக்கும் மேற்பட்ட கறவை மாடுகளை வளர்த்து வருகிறார். இந்த மாடுகளை வழக்கம்போல் நேற்று இரவு ஜெயகோபால் வீட்டின் அருகே உள்ள கொட்டாயில் அடைத்துள்ளார். பின்பு வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக ஜெயகோபால் சென்றுள்ளார். இதையடுத்து இரவு கொட்டாயில் திடீரென தீப்பிடித்து எறிந்துள்ளது. இதனால் அங்கு அடைக்கப்பட்டிருந்த மாடுகள் அனைத்தும் சத்தம் போட்டதால் அக்கம் … Read more

தண்டவாளத்தில் தள்ளி மாணவி கொலை: அதிர்ச்சியில் தந்தையும் உயிரிழப்பு..!

பரங்கிமலையில், காதலனால் ரயிலில் தள்ளி கொலை செய்யப்பட்ட மாணவியின் தந்தை மாரடைப்பால் இன்று உயிரிழந்தார். சென்னை ஆலந்தூர் ராஜா தெரு காவலர் குடியிருப்பில் வசித்து வந்தவர் மாணிக்கம் (47). இவர், ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வந்தார். இவருடைய மகள் சத்தியப்பிரியா (20). இவர், தியாகராயநகரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.சி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் தினமும் மதியம் பரங்கிமலை ரயில் நிலையம் வந்து, அங்கிருந்து மின்சார ரயில் மூலம் தியாகராயநகர் செல்வது … Read more

வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த 2 வயது குழந்தை மீது டி.வி விழுந்து, பரிதாபமாக உயிரிழப்பு..!

திருத்தணி அருகே, வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த 2 வயது குழந்தை மீது தொலைக்காட்சி பெட்டி விழுந்து, பரிதாபமாக உயிரிழந்தது. சதாம் உசேன் என்பவரது 2 வயது ஆண் குழந்தை சூபியன், நேற்றிரவு வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த நிலையில், வீட்டில் இருந்தவர்கள் ஹாலில் அமர்ந்து டி.வி பார்த்துக் கொண்டிருந்துள்ளனர். அப்போது டி.வி ஸ்டாண்டை பிடித்து குழந்தை இழுத்தபோது, எதிர்பாராத விதமாக டி.வி, குழந்தையின் மார்பு மீது விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் உடனே பெற்றோர், திருத்தணி அரசு … Read more

‘வெளிநாட்டில் அதிக சம்பளத்தில் வேலை’ – வலை விரிக்கும் நிறுவனங்களிடம் உஷார்: டிஜிபி சைலேந்திரபாபு அறிவுரை

சென்னை: வெளிநாட்டில் அதிக சம்பளத்துடன் வேலை வாங்கித் தருவதாக ஆசையைத் தூண்டி பல போலி நிறுவனங்கள் வலை விரித்து வருகின்றன. எனவே, பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும் என டிஜிபி சைலேந்திரபாபு எச்சரித்துள்ளார். ஏழ்மை நிலையில் உள்ளவர்கள், குடும்பத்தை முன்னேற்றத் துடிப்பவர்கள், வாழ்க்கையில் எப்படியாவது முன்னேறி விட நினைப்பவர்கள், விரைவில் பணம் சம்பாதிக்கும் ஆசை கொண்டவர்கள் ஆகியோர் வெளிநாடு செல்ல அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இந்த ஆர்வத்தைப் புரிந்துகொள்ளும் சில தனியார் நிறுவனங்கள் மற்றும் முகவர்கள் வெளிநாடுகளில் … Read more

தீபாவளி முன்பணம் வழங்காததை கண்டித்து தோட்டக்கலைத்துறை ஊழியர்கள் 600 பேர் உள்ளிருப்பு போராட்டம்

உதகை: தீபாவளி முன்பணம் வழங்காததை கண்டித்து தோட்டக்கலைத்துறை ஊழியர்கள் 600 பேர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னுர் சிம்ஸ் பூங்கா உள்ளிட்ட 14 அரசு பண்ணைகளில் பணியாற்றும் 600 பேர் போராட்டம் நடத்தினர்.