தாய்மார்கள் பாலூட்டும் அறைகள் பயன்பாடின்றி பூட்டிக் கிடக்கும் அவல நிலை: இபிஎஸ் சாடல்
சென்னை: “தமிழகத்தில் பேருந்து நிலையங்களில் எவ்வித பயன்பாடுமின்றி பூட்டிக் கிடக்கும் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தாய்மார்கள் பாலூட்டும் அறைகளை உடனடியாக சீர்செய்து, மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவர அரசை வலியுறுத்துகிறேன்” என்று அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “கட்சியின் நிறுவனர் எம்ஜிஆர் காலம் தொட்டே அதிமுக பெண்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு செயல்பட்டு வருகிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெண்களின் நலன் காக்க … Read more