காரைக்கால் நடுக்கடலில் மீனவர்களை இரும்பு பைப்பால் தாக்கி வலைகள் பறிப்பு: இலங்கை கடற்கொள்ளையர் அட்டகாசம்

காரைக்கால்: காரைக்கால் மாவட்டம், காரைக்கால் மேடு கிராமத்தை சேர்ந்த தனசீலன், மணியன், சதீஸ், மாதேஷ், ஐயப்பன், மணிபாலன் அபிலாஷ் ஆகிய மீனவர்கள் கடந்த 13ம் தேதி கடலுக்கு பைபர் படகில் மீன் பிடிக்க சென்றனர்.  நேற்று முன்தினம் இரவு கோடியக்கரை அருகில் மீன்பிடித்து கொண்டிருந்த போது அங்கு 4 படகுகளில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் 20க்கும் மேற்பட்டோர், படகை சுற்றி வளைத்து தாக்குதலில் ஈடுபட்டனர். இரும்பு பைப்பால் தாக்கியதில் மீனவர்கள் 7 பேரும் படுகாயம் அடைந்தனர். பின்னர் … Read more

நான் மிகவும் நொறுங்கி உள்ளேன் -மாணவி சத்யாவை குறித்து மனவேதனையை வெளிப்படுத்திய முதல்வர்

ஆண்கள் வலிமையானவர்களாக இருக்கலாம் ஆனால் அந்த வலிமை பெண்களை மதிக்கவும் பாதுகாப்பை தரக்கூடியதாகவும் இருக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை ஏற்பாட்டில் நடத்தப்படும் தனியார் வேலைவாய்ப்பு முகாமில் தேர்வானவர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கும் நிகழ்வு சென்னை ராயப்பேட்டையிலுள்ள நியூ கல்லூரியில் நடைபெற்றது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இதில் கலந்துகொண்டு, ஒரு லட்சமாவது பணி நியமன ஆணையினை வழங்கி மாணவர்கள் மத்தியில் பேசினார். “ தங்கள் … Read more

கொளத்தூர் உட்பட 234 தொகுதிகளிலும் வேலைவாய்ப்பு முகாம்: அமைச்சரிடம் முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை

சென்னை: கொளத்தூர் உட்பட 234 தொகுதிகளிலும் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்த வேண்டும் என்று தொழிலாளர் நலத்துறை அமைச்சரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்தார். 300-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கு பெற்ற இளைஞர்களுக்கான தனியார் வேலைவாய்ப்பு முகாம் சென்னையில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு வேலைவாய்ப்பு முகாமை தொடங்கி வைத்து 1 லட்சமாவது நபருக்கு பணி ஆணையை வழங்கினார். இதன்பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “என் தொகுதியில் இதுபோன்ற வேலைவாய்ப்பு முகாம்களை நடத்த … Read more

தீபாவளி போனஸில் கை வைப்பது எந்த வகையில் நியாயம்? டிடிவி தினகரன் கேள்வி!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர்களுக்கு போனஸ் அறிவித்துள்ளது. பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றி வரும் C மற்றும் D பிரிவு ஊழியர்களுக்கு 8.33% போனஸ் மற்றும் 1.67% கருணை தொகை என மொத்தம் 10% போனஸ் (கருணைத் தொகை உள்பட) வழங்குவதற்கு உத்தரவிட்டு தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மிகக் குறைவாக போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளதாக அரசு ஊழியர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். பல்வேறு அரசியல் கட்சியினர் போனஸை உயர்த்தி வழங்க கோரிக்கை விடுத்து … Read more

பரங்கிமலை மாணவி சத்யா கொலை வழக்கு – தொடங்கியது சிபிசிஐடி விசாரணை!

பரங்கிமலை ரயில் நிலையத்தில் மாணவியை தள்ளிவிட்டு கொலைசெய்த சம்பவத்தில் சிபிசிஐடி விசாரணை தொடங்கியது. தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய பரங்கிமலை ரயில்வே நிலையத்தில் கல்லூரி மாணவி சத்யாவை ரயில் முன் தள்ளிவிட்டு கொலைசெய்த சதீஷ்குமார் கைது செய்யப்பட்டு 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே மூன்று முறை புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்காமல் சமரசம் பேசிவிட்ட காவல்துறையினரின் அலட்சியமே இரு உயிரிழப்பிற்கு காரணம் என சத்யா குடும்பத்தார் சார்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. … Read more

அரசு மருத்துவமனைகளில் நிலவும் செவிலியர் பற்றாக்குறையை விரைந்து சரிசெய்க: சீமான்

சென்னை: ” தமிழ்நாட்டிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நிலவும் கடுமையான செவிலியர் பற்றாக்குறையினால் நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்படுவது மிகுந்த வேதனை அளிக்கிறது. புதிதாகச் செவிலியர்களை நியமிக்காமல் காலம் தாழ்த்திவரும் தமிழ்நாடு அரசின் செயல் வன்மையான கண்டனத்திற்குரியது” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “தமிழ்நாட்டிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நிலவும் கடுமையான செவிலியர் பற்றாக்குறையினால் நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்படுவது மிகுந்த வேதனை அளிக்கிறது. புதிதாகச் … Read more

எடப்பாடி பழனிச்சாமி ஷாக்; எகிறி பாயும் முக்கிய தளபதி!

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக தலைமை பதவிக்கான மோதல் விஸ்வரூபம் எடுத்து உள்ளது. எடப்பாடி பழனிசாமி ஒரு அணியாகவும், மற்றொரு அணியாகவும் இயங்கி வருகின்றனர். இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. மேலும் இரு தரப்பினரும் மாறி மாறி கொடுத்த புகார்களின்பேரில் தேர்தல் ஆணையமும் தீவிரமாக ஆராய்ந்து வருகிறது. இந்த வழக்கை விசாரித்து முடிக்கும் வரை அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தப்படக் கூடாது என, உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் யாருடைய அதிமுக கட்டுப்பாட்டில் இருக்கிறது என, புரியாமல் … Read more

முதன்முறையாக தி.நகரில் பொருத்தப்பட்டுள்ள FRC கேமராக்கள்; எதற்காக இந்த கேமராக்கள்?

தீபாவளி பண்டிகையை தொடர்ந்து சென்னை தியாகராய நகர் முழுவதும் 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் 300 சிசிடிவி கேமரா காட்சிகள் மூலம் நொடிக்கு நொடி கண்காணிக்கப்பட்டு வருகிறது. கூட்டத்தை பயன்படுத்தி திருட்டில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டறிய மப்டியில் குற்றப்பிரிவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளதாக சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.  தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் துணிகள், பட்டாசு மற்றும் வீட்டுக்கு தேவையானப் பொருட்களை வாங்குவதற்காக சென்னைவாசிகள் உட்பட பல்வேறு மாவட்டங்களைச் … Read more

போலி டாக்டர்கள் மீது கடும் நடவடிக்கை – தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தலைவர் எச்சரிக்கை

மதுரை: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இன்று தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தலைவர் டாக்டர் க.செந்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது: நேஷனல் மெடிக்கல் கமிஷன் சட்டம் 2019 பிரிவு 34 மற்றும் 54-ன் படி தமிழ்நாடு மருத்துவ கவுன்சில், போலி டாக்டர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்துவருகிறது. இந்த புதிய சட்டத்தின்படி முறையாக எம்பிபிஎஸ் பட்டப்படிப்பு படிக்காமல், தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் பதிவுபெறாமல், அலோபதி மருத்துவம் செய்யும் போலி மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம். … Read more

வாடகைத் தாய் விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி: நயன்தாரா – விக்னேஷ் சிவன் அதிரடி!

வாடகைத் தாய் விவகாரத்தில், மருத்துவ விசாரணைக் குழுவிடம் விக்னேஷ் சிவன் – நயன்தாரா தம்பதி ஆதாரங்களை சமர்ப்பித்தனர். நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் தம்பதி, இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோர் ஆகி உள்ளனர். இந்த செய்தியை விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார். அதில், “நயனும் நானும் அம்மா, அப்பா ஆகிவிட்டோம். இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளன. முன்னோர்களின் ஆசீர்வாதங்களும், பிரார்த்தனைகளும் ஒருங்கிணைந்து இரட்டை குழந்தைகளின் வடிவத்தில் எங்களுக்கு கிடைத்துள்ளன. உங்கள் அனைவரின் ஆசீர்வாதமும் … Read more