தாய்மார்கள் பாலூட்டும் அறைகள் பயன்பாடின்றி பூட்டிக் கிடக்கும் அவல நிலை: இபிஎஸ் சாடல்

சென்னை: “தமிழகத்தில் பேருந்து நிலையங்களில் எவ்வித பயன்பாடுமின்றி பூட்டிக் கிடக்கும் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தாய்மார்கள் பாலூட்டும் அறைகளை உடனடியாக சீர்செய்து, மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவர அரசை வலியுறுத்துகிறேன்” என்று அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “கட்சியின் நிறுவனர் எம்ஜிஆர் காலம் தொட்டே அதிமுக பெண்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு செயல்பட்டு வருகிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெண்களின் நலன் காக்க … Read more

சில தகவல்கள் மிகுந்த மனவேதனை அளிக்கிறது- அமைச்சர் பிடிஆர் வருத்தம்!

மதுரை மாநகர் மாவட்டத்தின் சார்பில் மாவட்ட செயலாளர்களுக்கான தேர்தல் நடைபெற்ற முடிவடைந்து அதில் மாவட்ட செயலாளராக கோ.தளபதி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் ஏற்கனவே தேர்தலின் போது மாவட்ட செயலாளரான கோ. தளபதி அணியினரும், மற்றொரு அணியாக அதலை செந்தில் அணியினராக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அணியினரும் இரண்டு தரப்பினராக மோதிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் இன்று நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தலைமையில் திமுக தலைவராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டதை முன்னிட்டு, மதுரை மடீட்சியா அரங்கில் … Read more

டிடிவி தினகரனுடன் கூட்டணியா?… ஜெயக்குமார் விளக்கம்

சென்னை காமராஜர் சாலையில் உள்ள உயர் கல்வி மன்றம் வளாகத்தில் இருக்கும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சிலைக்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரும் 17ஆம் தேதி மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார். அதற்கு அனுமதி கேட்டு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பொதுப்பணித் துறை தலைமை பொறியாளர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மனு அளித்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார்ம் “ தீய சக்தி என்ற கருணாநிதி குடும்பத்திலிருந்து தமிழகம் விடுபட … Read more

சென்னையில் வீட்டில் விளையாடும் போது விசிலை விழுங்கிய குழந்தை உயிரிழப்பு

பூந்தமல்லி: சென்னையில் வீட்டில் விளையாடும் போது விசிலை விழுங்கிய குழந்தை உயிரிழந்துள்ளது. சென்னை பூந்தமல்லி லட்சுமிபுரம் ரோடு பத்மாவதி நகர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தராஜ் (38), காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி வனஜா. இவர்களுக்கு தர்சன் (3), என்ற மகனும், கயல்விழி என்ற 1 வயது பெண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் வழக்கம் போல் குழந்தை வீட்டில் விளையாட்டு பொருட்களை வைத்து விளையாடி கொண்டிருந்தது. அப்போது அங்கிருந்து விசிலை எடுத்து விழுங்கியதில் மூச்சு திணறல் … Read more

பாம்பன் பாலத்தில் அதிவேகத்தில் வரும் வாகனங்கள்-சிசிடிவி பொருத்தி நடவடிக்கை எடுக்க கோரிக்கை

பாம்பன் பாலத்தில் 30 கிலோமீட்டர் வேகத்தில்தான் வாகனங்கள் செல்ல வேண்டும் என்று விதிமுறைகள் இருந்தும் அசுர வேகத்தில் செல்லும் வாகனங்களால் அடிக்கடி ஏற்படும் விபத்துகளை கட்டுப்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர். மண்டபம் நிலப்பரப்பையும், ராமேஸ்வரம் தீவையும் இணைப்பதற்காக கடந்த 1988-ம் ஆண்டு பாம்பன் சாலை பாலம் கட்டி முடிக்கப்பட்டு போக்குவரத்து பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் கடந்த 1997-ம் ஆண்டு அரசுப் பேருந்து ஒன்று பாம்பன் பாலத்தின் தடுப்புச் சுவர்களில் மோதி … Read more

8 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் மோதல்: பொங்கலை குறி வைக்கும் விஜய் அஜித் படங்கள்?

8 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் மோதல்: பொங்கலை குறி வைக்கும் விஜய் அஜித் படங்கள்? Source link

#BREAKING:- சென்னையில் ஓடும் ரயில் முன் கல்லூரி மாணவியை தள்ளிவிட்டு படுகொலை ..!!

சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருபவர் சத்யா(20). வழக்கம் போல் இன்று பரங்கிமலை ரயில் நிலையத்தில் ரயிலுக்காக நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சதீஷ் (23) என்பவர் ரயில் வந்தபோது சத்யாவை தண்டவாளத்தில் தள்ளிவிட்டு தப்பியுள்ளார். இளைஞர் தள்ளியதில் நிலைதடுமாறி தண்டவாளத்தில் விழுந்த பெண் மீது ரயில் ஏறியதில் மாணவி உடல் நசுங்கி பலியானார். ரயில் சென்ற பிறகு தண்டவாளத்தில் கிடந்த மாணவியின் உடலை போலீசார் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி … Read more

‘புதிய தடுப்பணைகள்’ – நிலத்தடி நீரை மேம்படுத்த சிறப்புத் திட்டங்களுக்கு மத்திய அரசுடன் தமிழக அரசு ஆலோசனை

சென்னை: நிலத்தடி நீரை மேம்படுத்த சிறப்புத் திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாக மத்திய அரசுடன் தமிழக அரசு ஆலோசனை மேற்கொண்டுள்ளது. தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் ஜல் ஜீவன் திட்ட பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மத்திய நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திரசிங் செகாவத் தலைமையில் இன்று (அக்.13) சென்னையில் நடைபெற்றது. இதில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள … Read more

ஸ்டாலின் பேச்சு… கிண்டல் செய்து திமுக உடன்பிறப்புகளை சீண்டிய அண்ணாமலை!

திமுக பொதுக்குழு கூட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை ( அக்டோபர் 9) சென்னையில் நடைபெற்றது. இதில் கட்சியின் தலைவர் ஸ்டாலின் பேசும்போது, ” தினமும் காலை கண்விழிக்கும்போது நம்மவர்கள் (திமுக நிர்வாகிகள்) யாரும் இன்று புது பிரச்னைகள் எதையும் உருவாக்கி இருக்கக்கூடாதே என்ற நினைப்புடன்தான் கண் விழிக்கிறேன். இந்த எண்ணமே சமயத்தில் என்னை தூங்கவிடாமல்கூட செய்து விடுகிறது” என்று பேசியிருந்தார். பொது இடங்களில் தங்களது சர்ச்சையான பேச்சுகள், செயல்பாடுகளால் கட்சிக்கும், கட்சித் தலைமைக்கும் தர்மசங்கடத்தை ஏற்படுத்திவரும் மூத்த அமைச்சர்களான … Read more

திமுக இனிமேல் எந்த ஒரு தேர்தலிலும் வெற்றி பெற முடியாத ஓர் சூழலுக்கு தள்ளப்படும்: வி.சோமசுந்தரம்

காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சார்பில்‌ அதிமுகவின் பொன்விழா ஆண்டு மற்றும் 51 ஆம் ஆண்டு துவக்க விழாவை  முன்னிட்டு காஞ்சிபுரம் ஒரிக்கை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான வி.சோமசுந்தரம் தலைமையில் ஆலோசனை கூட்டம்  நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அதிமுக அமைப்புச் செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன், மாவட்ட செயலாளர் வி.சோமசுந்தரம் ஆகியோர் பல்வேறு ஆலோசனைகளை நிர்வாகிகளுகும் தொண்டர்களுக்கும் வழங்கினர். இந்நிலையில் தமிழக அதிமுக முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான வி.சோமசுந்தரம் … Read more