திமுக இனிமேல் எந்த ஒரு தேர்தலிலும் வெற்றி பெற முடியாத ஓர் சூழலுக்கு தள்ளப்படும்: வி.சோமசுந்தரம்

காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சார்பில்‌ அதிமுகவின் பொன்விழா ஆண்டு மற்றும் 51 ஆம் ஆண்டு துவக்க விழாவை  முன்னிட்டு காஞ்சிபுரம் ஒரிக்கை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான வி.சோமசுந்தரம் தலைமையில் ஆலோசனை கூட்டம்  நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அதிமுக அமைப்புச் செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன், மாவட்ட செயலாளர் வி.சோமசுந்தரம் ஆகியோர் பல்வேறு ஆலோசனைகளை நிர்வாகிகளுகும் தொண்டர்களுக்கும் வழங்கினர். இந்நிலையில் தமிழக அதிமுக முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான வி.சோமசுந்தரம் … Read more

குமரி மாவட்டம் மண்டைக்காடு பகுதியில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் ஒருவர் கைது..!!

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகுதியில் கல்யாணசுந்தரம் என்பவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார். கடந்த 24ம் தேதி கல்யாணசுந்தரம் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய இழுப்பவிளை பகுதியை சேர்ந்த ஸமீல்கான் கைது செய்யப்பட்டார். பெட்ரோல் குண்டு வீசிய ஸமீல்கானை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் போலீஸ் கைது செய்தது.

கோலம் போட்டுக்கொண்டிருந்த பெண்ணின் செயினை பறிக்க முயற்சி – முகமூடி கொள்ளையனுக்கு தர்ம அடி

வாசலில் கோலம் போட்டுக்கொண்டிருந்தெ பெண்ணிடமிருந்து செயின் பறிக்கவந்த முகமூடி திருடனை பொதுமக்களே பிடித்து அடித்து போலீசில் ஒப்படைத்தனர். நெல்லை மாவட்டம் இட்டமொழி அருகே உள்ள மனக்காவலபுரம் பகுதியில் வசித்து வருபவர் செல்வி. இவர் இன்று காலை ஏழு மணி அளவில் மெயின் ரோடு பக்கம் அமைந்துள்ள தனது வீட்டின் முன்பு வாசல் பெருக்கி கோலம் போடும் பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்துள்ளார். அப்போது அவ்வழியே முகமூடி அணிந்தபடி இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் செல்வியின் கழுத்தில் … Read more

#சென்னை | தலையை வெட்டி போட்டாலும், போட்டு கொடுக்க மாட்டேன்! இரவில் வீடு புகுந்த போதை ஆசாமி, அடங்கமறுத்து அத்துமீறல்!

சென்னை அருகே மது போதையில் நண்பர்களுடன் பந்தயம் கட்டி விட்டு, அருகில் உள்ள வீடுகளின் கதவை தட்டி, பெண்களிடம் தவறாக நடக்க முயற்சித்த போதை ஆசாமியை, கட்டிவைத்து தர்ம அடி கொடுத்த பொதுமக்கள், போலீஸிடம் ஒப்படைத்தனர். சென்னை அடுத்த அம்பத்தூர் கள்ளிகுப்பம் பகுதியில், நேற்று இரவு ஒரு வீட்டிற்கு புகுந்த மர்ம நபர், பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சித்துள்ளார். பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து, தவறாக நடக்க முயன்ற போதை ஆசாமியை … Read more

பிரபல தயாரிப்பாளர் காலமானார்: முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி..!

எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி அர்ஜூன் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் நடித்த படங்களின் தயாரிப்பாளர் ஈ.வி.ராஜன் காலமானார். அவருக்கு வயது 83. எம்.ஜி.ஆர் நடித்த குமரிப் பெண், சிவாஜி நடித்த தங்கச்சுரங்கம், ரஜினி நடித்த குப்பத்து ராஜா, அர்ஜூன் நடித்த கல்யாண கச்சேரி மற்றும் சட்டம் சிரிக்கிறது உட்பட 15 படங்களை தமது ஈ.வி.ஆர். பிக்சர்ஸ் சார்பில் தயாரித்தவர் ஈ.வி.ராஜன். பழம்பெரும் நடிகை ஈ.வி.சரோஜாவின் சகோதரரும், பழம்பெரும் இயக்குநர் டி.ஆர்.ராமண்ணாவின் மைத்துனருமான ஈ.வி.ராஜன், சென்னை கொட்டிவாக்கத்தில் குடும்பத்தினருடன் வசித்து … Read more

டிஆர்பி மூலம் தேர்வு செய்யப்பட்ட 2849 பேருக்கு பணிநியமன ஆணைகள்: முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: பள்ளிக்கல்வித் துறையில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வாயிலாக தேர்வு செய்யப்பட்ட 2849 நபர்களுக்கும், கருணை அடிப்படையில் 269 நபர்களுக்கும் பணிநியமன ஆணைகளை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார். இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்தி: அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வி நலன் கருதி பள்ளிகளின் வகுப்பறைக் கட்டிடங்கள், குடிநீர் வசதி, கழிவறைகள், மின்சாதன வசதிகள் போன்ற அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், இணைய வசதிகளைப் பள்ளிகளில் ஏற்படுத்துதல், 1 முதல் 5ஆம் வகுப்பு வரை … Read more

பச்சையப்பன் கல்லூரி உதவி பேராசியர்கள்: கல்லூரி கல்வி இயக்குனருக்கு உத்தரவு!

பச்சையப்பன் கல்வி அறக்கட்டளைக்கு சொந்தமான கல்லூரிகளில் கடந்த 2013, 2014 மற்றும் 2015ம் ஆண்டுகளில் 254 உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இந்த 254 பேரில் 152 பேர் உரிய தகுதியை பெற்றிருக்கவில்லை எனவும், தேர்வு நடைமுறைகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இதையடுத்து, அறக்கட்டளையை நிர்வகித்த ஓய்வுபெற்ற நீதிபதி, 152 உதவிப் பேராசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இது சம்பந்தமான வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், கடந்த 2013, 2014 … Read more

மாணவியை ஓடும் ரயில் முன் தள்ளிவிட்டு காதலன் கொலை; பரங்கிமலை ரயில் நிலையத்தில் நடந்த பயங்கரம்!

சென்னை கிண்டி அடுத்தா ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்(23), அதே பகுதியைச் சேர்ந்தவர் சத்தியா (20) தனியார் கல்லூரியில் பிகாம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. வழக்கம்போல் இன்று இருவரும் பரங்கிமலை ரயில் நிலையத்தில் நின்று பேசிக்கொண்டு இருந்து உள்ளனர். அப்போது இருவருக்கும் சண்டை ஏற்பட்டு வாக்குவாதம் ஆகியுள்ளது. அப்போது பரங்கிமலை ரயில் நிலையத்திற்கு வந்து கொண்டிருந்த மின்சார ரயில் முன்பு சதீஷ் சத்யாவை தண்டவாளத்தில் தள்ளிவிட்டுள்ளார். இதில் … Read more

ஆந்திராவில் இருந்து தஞ்சாவூருக்கு குடும்பமாக வந்து கூடாரம் அமைத்து வாத்து மேய்ப்பு: வாத்துக்களின் எச்சம் உரமாகிறது

வல்லம்: ஆந்திராவில் இருந்து தஞ்சாவூருக்கு குடும்பம், குடும்பமாக வந்து கூடாரம் அமைத்து வாத்துக்களை மேய்க்கின்றனர். இதில் வாத்துகளின் எச்சங்கள் வயலுக்கு இயற்கை உரமாக பயன்படுகிறது. தஞ்சாவூர் மாவட்டம் ராமநாதபுரம், 8.கரம்பை, ஆலக்குடி, கல்விராயன்பேட்டை, சித்திரக்குடி உட்பட பல பகுதிகளில் குறுவை அறுவடை முடிந்துள்ளது. இந்த வயல்கள் தற்போது சேறும், சகதியுமாய் காணப்படுகிறது. இந்த வயல்களில் தான் ஆயிரக்கணக்கான வாத்துக்கள் “பக்..பக்..” என்ற ஒலியெழுப்பி வயல்களில் காணப்படும் புழு, பூச்சிகள், நத்தைகள், சிதறிக்கிடக்கும் நெல்மணிகள் போன்றவற்றை தங்களின் உணவாக்கி … Read more