கனிமொழி மீதான பயத்தாலேயே அவருக்கு துணை பொதுச்செயலாளர் பதவி : டிடிவி விமர்சனம்

மின்கட்டண உயர்வை கண்டித்து, சென்னையில் டிடிவி தினகரன் தலைமையில் அமமுக-வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை ராஜாஜி சாலையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய டிடிவி தினகரன், தவறு செய்யும் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மவுனமாக இருப்பதாக குற்றம்சாட்டினார். ஜெயலலிதாவாக இருந்தால், உடனடியாக தவறு செய்யும் அமைச்சர்களை பதவி நீக்கியிருப்பார் என்றும் அவர் கூறினார். கனிமொழி மீதான பயத்தாலேயே அவருக்கு துணை பொதுச்செயலாளர் பதவியை ஸ்டாலின் வழங்கியிருப்பதாகவும் டிடிவி தினகரன் தெரிவித்தார். Source … Read more

மகனுக்கு சாதி சான்றிதழ் பெறமுடியாததால் விரக்தி – நீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்தவர் மரணம்

சென்னை: ஐந்து ஆண்டுகளாகப் போராடியும், தனது மகனுக்கு பழங்குடி இனத்தவர் (எஸ்.டி.) சாதிச் சான்றிதழ் பெறமுடியாத விரக்தியில் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்த தொழிலாளி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையைச் சேர்ந்தவர் வேல்முருகன்(49). தொழிலாளியான இவருக்கு மனைவி சித்ரா, 10-ம் வகுப்பு பயிலும் ஒரு மகன் மற்றும் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்துக்கு வந்த வேல்முருகன், திடீரென தனது உடலில் பெட்ரோல் ஊற்றி, … Read more

மணவாளக்குறிச்சி அருகே சோகம் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த பெண் போலீஸ் விபத்தில் பலி: வயிற்றில் இருந்த குழந்தையும் இறந்தது

குளச்சல் : மணவாளக்குறிச்சி அருகே நேற்று முன் தினம் இரவு இரு பைக்குகள் மோதி நடந்த விபத்தில் நிறை மாத கர்ப்பிணியாக இருந்த பெண் போலீஸ் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே உள்ள அம்மாண்டிவிளை கட்டைக்காடு பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர் (38). தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி உஷா (37). இவர் வெள்ளிச்சந்தை காவல் நிலையத்தில் போலீசாக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு திருமணமாகி 8 … Read more

திருவள்ளூர் | 51 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்: அமைச்சர் சா.மு.நாசர் தகவல்

திருத்தணி: வள்ளூர் மாவட்டத்தில் மே 2021 முதல் தற்போது வரை 51 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன என, பால்வளத் துறை மைச்சர் சா.மு.நாசர் தெரிவித்துள்ளார். சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, திருவள்ளூர் மாவட்ட அளவில் குழந்தை திருமணத்தை தடுப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று திருத்தணியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் நடந்த இந்த நிகழ்வில், பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் தலைமையில், … Read more

காட்பாடி அருகே திருவலத்தில் 69 முதியவர்கள் மீட்கப்பட்ட கருணை இல்லத்திற்கு ‘சீல்’: கலெக்டர் உத்தரவு

திருவலம்: திருவலத்தில் இயங்கிய கருணை இல்லத்தில் உணவு வழங்காமல் சித்ரவதை செய்யப்பட்டு 69 முதியவர்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், அந்த இல்லத்திற்கு சீல் வைக்க கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டுள்ளார். வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே திருவலம் இபி கூட்ரோடு பகுதியில் கடந்த 2017ம் ஆண்டு தனியார் அமைப்பின் கருணை இல்லம் தொடங்கப்பட்டது. இங்கு பல்வேறு பகுதிகளை சேர்ந்த முதியோர், ஆதரவற்றவர்கள் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் கடந்த 2018ம் ஆண்டு மார்ச் மாதம் கருணை இல்லத்தில் இருந்து இரவு … Read more

பிரசவத்துக்கு லீவு எடுக்கனும்னு சொன்ன 8 மாத கர்ப்பிணி போலீஸ்… விபத்தில் பரிதாப பலி

பிரசவத்துக்கு லீவு எடுக்கனும்னு சொன்ன 8 மாத கர்ப்பிணி போலீஸ்… விபத்தில் பரிதாப பலி Source link

#BREAKING | தமிழக பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நேரில் ஆஜராக வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

உயர்நீதிமன்ற உத்தரவுப்படி பண பலன் வழங்காததை எதிர்த்து, ஆசிரியர் தொடர்ந்த வழக்கில், தமிழக பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நாளை நேரில் ஆஜராக வேண்டும் என்று, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் அனைத்து வகையான ஆசிரியர்களுக்கும் ஒரே வகையான பண பலன் நிர்ணயித்து கடந்த 1993 ஆம் ஆண்டு தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. தொடர்ந்து 2013 ஆம் ஆண்டு அரசு ஆசிரியர்களுக்கான பண பலன் வழங்க கோரி நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த … Read more

சென்னை | சாதி சான்றிதழ் வழங்க கோரி நீதிமன்ற வளாகத்தில் இளைஞர் தீக்குளிப்பு

சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை சிறுமாத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் வேல்முருகன் (45). இவருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில், இவர் நேற்று சென்னை உயர் நீதிமன்றத்துக்கு சென்றார். பின்னர், நீதிமன்ற வளாகத்தில் உள்ள சட்ட உதவி மையம் அருகே, மலைக்குறவர் இனத்தைச் சேர்ந்த தன் இனத்தினருக்கு ஜாதி சான்றிதழ் கிடைக்கவில்லை. அதை உடனே வழங்க வேண்டும் என கூறியவாறு தயாராக கொண்டு வந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த … Read more

டாஸ்மாக் விற்பனை நேர குறைப்பு சாத்தியமா? அரசு தரப்பில் விளக்கமளிக்க உத்தரவு

மதுரை: டாஸ்மாக் விற்பனை நேரத்தை குறைக்க சாத்தியமுள்ளதா என்பது குறித்து அரசுத் தரப்பில் விளக்கமளிக்க வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கறிஞர் ஒருவர் தாக்கல் செய்த மனுவில், ‘‘தமிழகத்தில் பகல் 12 மணி முதல் இரவு 10 வரை டாஸ்மாக் கடைகள் செயல்படுகின்றன. மது போதையில் வாகனம் ஓட்டுபவர்களால் விபத்துகள், உயிரிழப்பு ஏற்படுகின்றன. எனவே, தமிழகத்தில் 21 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மதுபானம் விற்கக் கூடாது. மதுவின் தீமைகள் குறித்த அறிவிப்புகளை பொதுமக்களுக்கு … Read more