ஊழியர்களுக்கு 20 சதவீத போனஸ்.. அரசுக்கு ஜி.கே.வாசன் கோரிக்கை..!

போனஸ் அறிவிப்பை தமிழக அரசு மறுபரிசீலனை செய்து, வழக்கம் போல் 20 சதவீத போனஸ் வழங்க வேண்டும் என ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு போக்குவரத்துக் கழகங்கள் உள்ளிட்ட பொதுத்துறை ஊழியர்களுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள 10 சதவீத போனஸ் போதுமானதல்ல. இந்த அறிவிப்பு மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. கடந்த கொரோனா காலங்களில் பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டு இருந்த நிலையில் கூட 10 சதவீத போனஸ் வழங்கப்பட்டது. … Read more

வானிலை முன்னறிவிப்பு | தமிழகத்தில் 2 நாட்களுக்கு 6 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் 2 நாட்களுக்கு 6 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வங்கக் கடலில் தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழக கடலோர பகுதிகளில் மேல் நிலவும் வளி மண்டல மேல் அடுக்கு சுழற்சி காரணமாக இன்று (அக்.15) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை … Read more

தமாஷா இருக்கு.. இந்தி திணிப்பு ஆர்ப்பாட்டத்தை கலாய்த்த எச். ராஜா

இந்தி திணிப்பு, நாடு முழுவதும் ஒரே பொது நூல் தேர்வு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பாக தமிழக முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று பல மாவட்டங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட திமுக இளைஞரணி செயலாளர் இந்திக்கு எதிராக காரசாரமாக பேசியுள்ளார். அவர் பேசியதாவது, இந்தி தெரியாது என உங்களிடம் சொல்லி கொண்டேதான் இருப்போம். எந்த … Read more

'பாஜகவை ஓட ஓட விரட்டியடிப்போம்… அடுத்து டெல்லியில்தான் போராட்டம்' – முஷ்டியை முறுக்கும் உதயநிதி!

மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் பயிற்று மொழியாக இந்தி மொழியை கட்டாயமாக்க மத்திய அரசு முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டியும் , பல்வேறு படிப்புகளுக்கு இந்தியளவில் ஒரே நுழைவுத்தேர்வு நடத்துவதைக் கண்டித்தும் திமுக இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று (அக். 15) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டப்பேரவை உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மத்திய அரசுக்கு எதிராக … Read more

ஜோலார்பேட்டை நகராட்சியில் ₹17.20 லட்சத்தில் உயர் கோபுர மின்விளக்கு அமைக்க பூமி பூஜை-எம்எல்ஏ பங்கேற்பு

ஜோலார்பேட்டை :  ஜோலார்பேட்டை நகராட்சியில் ₹17.20 லட்சம் மதிப்பில் உயர் கோபுர மின்விளக்குகள் அமைக்கும் பணியை எம்எல்ஏ பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பொதுமக்கள் முக்கியமான இடங்களில் உயர் கோபுர மின்விளக்குகள் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். அதன் அடிப்படையில் நகராட்சிக்கு உட்பட்ட 4 இடங்களில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ₹17.20 லட்சம் மதிப்பில் உயர் கோபுர மின்விளக்குகள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சமூக … Read more

பெரும் மாற்றத்துக்கான சிறு துளியாக தெறிக்கும் வேலூரின் `ஆட்டோ நூலகம்’ கான்செப்ட்!

மக்களிடையே வாசிக்கும் பழக்கத்தை மீட்டெடுக்கும் வகையில் தனியார் கலை கல்லூரி சார்பாக ஆட்டோக்களில் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு நொடி, ஒரு வார்த்தை மனிதனின் வாழ்வில் பெரும் மாற்றத்தை உண்டாக்கும். அந்த ஒரு நொடி, ஒரு வார்த்தை இதுவாக இருக்கலாம் என்ற நோக்கத்தில் மாற்றத்தை நோக்கிய கனவின் முதல் படியாக வேலூரில் துவங்கப்பட்டுள்ளது ‘ஆட்டோ நூலகம்’. வேலூரை சேர்ந்தவர்கள் கிரிதரன், அன்பரசன். சமூக செயற்பாட்டாளர்களான இவர்களும், காட்பாடியில் உள்ள தனியார் மகளிர் கலைக் கல்லூரியும் இணைந்து பொது மக்கள் … Read more

சமூகத்திற்கு தவறான முன்னுதாரணம்: நயன்-விக்கி மீது கமிஷனர் ஆபீசில் புகார்..!

நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் தம்பதி, சட்டத்தை மீறி வாடகைத் தாய் மூலம் இரட்டை குழந்தை பெற்றெடுத்துள்ளதாக சர்ச்சைகள் கிளம்பி வருகிறது. இதுகுறித்து தமிழ்நாடு சுகாதாரத்துறை சார்பில் குழு அமைக்கப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில், மத்திய மற்றும் மாநில சட்ட விதிகளை பின்பற்றாமல் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுள்ளதாக நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் மீது வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு … Read more

கல்வராயன் மலையில் கனமழை; சாலைகள் துண்டிப்பால் கிராம மக்கள் அவதி: ஆட்சியர் நேரில் ஆய்வு

கள்ளக்குறிச்சி: கல்வராயன் மலையில் பெய்த கனமழையால் வாய்க்கால்களில் ஏற்பட்ட வெள்ளத்தால் தரைப்பாலம் மூழ்கி சாலைகள் துண்டிக்கப்பட்டதால் 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் நேற்று முன்தினம் மாலை பெய்த கனமழையால் மணலாறு, வெள்ளாறு, காட்டாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து மலைப்பகுதி முழுவதம் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. கனமழை காரணமாக தொரடிப்பட்டு உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 200 ஏக்கர் நெல், கரும்பு, மக்காச்சோளம்,மரவள்ளி, பீன்ஸ் பயிர்கள் வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டன. … Read more

சுங்கச் சாவடி ஊழியர்கள் போராட்டம்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் போராட்டம் நடத்தும் சுங்கச்சாவடிகளில் இரண்டு வார காலத்திற்கு வீடியோ கேமராக்களை வைத்து பதிவு செய்ய சுங்கச்சாவடி நிறுவனத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் செங்குறிச்சி மற்றும் பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை ஆகிய இடங்களில் உள்ள சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் வசூலிக்கும் நிறுவனத்திலிருந்து 50 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட உத்தரவுகளை திரும்பப்பெறக் கோரி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது சுங்கச்சாவடியில் இருந்த கண்காணிப்பு கேமராக்கள், ஃபாஸ்டாக் தொழில்நுட்ப … Read more

ராஜராஜ சோழன் காலத்தில் இந்தியாவே இல்லை இதுல எங்க இந்து… சீமான் அதிரடி பேச்சு

குடிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் மதுரை பழங்காநத்தத்தில் பொதுக்கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் கொட்டும் மழையில் சீமான் கட்சியினரோடு அமர்ந்திருந்தார். இதனையடுத்து பேசிய அவர், “குடிவாரி கணக்கெடுப்பு தான் சாதி ஒழிப்பிற்கான முயற்சி.குடிவாரி கணக்கெடுப்பு நடத்தி இட ஒதுக்கீடு வழங்காவிட்டால் சமூக நீதி குறித்து பேசக்கூடாது, தமிழக அரசு குடிவாரி கணக்கெடுத்து கல்வி, வேலைவாய்ப்புகளை வழங்க வேண்டும். நாடு முன்னேறுகிறது என மோடி பேசும் பொய்யைவிட திமுகவினர் பேசும் சமூகநீதி என்பது … Read more