தமிழ்நாடு முழுவதும் இன்று இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்..!!

புதிய கல்விக்கொள்கை மூலம் மத்திய அரசு இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியை திணிக்க முயன்று வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இந்தி திணிப்புக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன. இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் இன்று நடைபெறும் என தமிழக உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை நேற்று சந்தித்த அமைச்சர் பொன்முடி கூறியதாவது: தமிழ்நாடு முழுவதும் இன்று இந்தி திணிப்பு எதிர்ப்பு … Read more

புதுக்கோட்டையில் 3 நாட்களாக நீடித்து வந்த வருமான வரிசோதனை முடிவு.. பெட்டி, பெட்டியாக பணம், முக்கிய ஆவணங்கள் பறிமுதல்

புதுக்கோட்டை நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர் வீட்டில் வருமானவரித்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் பெட்டி, பெட்டியாக பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. புதுக்கோட்டை பெரியார் நகரில் நெடுஞ்சாலை துறை ஒப்பந்ததாரர் பாண்டித்துரை வீட்டில் கடந்த 3 நாட்களாக வருமான வரி துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டனர். இந்த நிலையில் சோதனை முடிவடைந்ததை அடுத்து அங்கிருந்து கைப்பற்றப்பட்ட முக்கிய ஆவணங்கள் மற்றும் பணம் ஆகியவை பத்துக்கும் மேற்பட்ட பெட்டிகளில் அடுக்கி வைக்கப்பட்டு பெரிய வாகனத்தில் ஏற்றப்பட்டு விசாரணைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது. … Read more

நெல் ஈரப்பதம் குறித்த ஆய்வு: மத்திய குழு இன்று தமிழகம் வருகை

சென்னை: தமிழகத்தில் மழையால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில், நெல்லின் ஈரப்பதம் குறித்து ஆய்வுமேற்கொள்வதற்காக மத்திய அரசு அதிகாரிகள் இன்று தமிழகம் வருகின்றனர். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருச்சி,கடலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், மாநில அரசால் கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பதத்தில் கடந்த ஆண்டு மத்திய அரசு சில தளர்வுகளை அளித்தது. அதாவது, நெல்லின் ஈரப்பதம் 17 சதவீதத்துக்குப் பதிலாக 19 சதவீதம் வரை இருக்கலாம் என தெரிவித்தது. இந்நிலையில், தற்போது வடகிழக்குப் பருவமழையின் காரணமாக காற்றில் … Read more

காவிரி கரையோர மக்களுக்கு நீர்வளத்துறை வெள்ள அபாய எச்சரிக்கை

திருச்சி: காவிரி கரையோர மக்களுக்கு நீர்வளத்துறை வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் 1,10,000 கன அடிக்கு மேல் நீர் திறக்க வாய்ப்பு உள்ளது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

உரிய ஆவணங்களின்றி திருப்பூரில் தங்கியிருந்ததாக வங்கதேசத்தினர் கைது

உரிய ஆவணங்கள் இன்றி திருப்பூரில் தங்கியிருந்த வங்கதேச நாட்டை சேர்ந்த 5 பேரை திருப்பூர் மாநகர போலீஸார் கைது செய்தனர். திருப்பூர் மாநகர் மங்கலம் சாலையில் நேற்றிரவு சோதனைச் சாவடியில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் வடமாநில இளைஞர்களை போன்று சுற்றித்திரிந்த 5 பேரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பேசியதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து அவர்களிடம் ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை வாங்கி சோதனை செய்துள்ளனர். இதில், அவர்கள் வங்கதேச நாட்டை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. முறைகேடாக … Read more

பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.1500 உதவித்தொகை.. இன்று காலை 12 மணி வரை மட்டுமே.!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பள்ளி மாணவர்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்களின் தமிழ் மொழி திறனை மேம்படுத்தும் விதமாக அக்டோபர் 15 ஆம் தேதி திறனறி தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு மாதம் தோறும் 1500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இதற்கு நடப்பு கல்வி ஆண்டில் அரசு பள்ளி மற்றும் அனைத்து … Read more

இல்லத்தரசிகள் ஷாக்..!! முட்டை விலை கிடு கிடு உயர்வு..!!

கோழித் தீவன மூலப்பொருட்கள் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் முட்டை விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. முட்டை ஒன்றின் நேற்றைய பண்ணைக் கொள்முதல் விலையான ரூ.4.35 ல் இருந்து 5 காசுகள் உயர்த்தி ரூ.4.40 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு அறிவித்துள்ளது.சில்லறை விற்பனையில் முட்டை ஒன்றின் விலை 5 ரூபாய் 50 பைசா வரை விற்பனை செய்யப்படுகிறது. விலை உயர்வு குறித்து பண்ணையாளர்கள் கூறுகையில், புரட்டாசி மாதம் துவக்கத்திலேயே பண்ணைகளில் … Read more