சிறுத்தை தாக்கியதில் வனப்பாதுகாவலர் காயம்

தேனி: தேனி வனச்சரகத்தில் சோலார் மின்வேலியில் சிக்கியிருந்த சிறுத்தையை மீட்கச் சென்ற உதவி வனப்பாதுகாவலர், சிறுத்தை தாக்கியதில் காயமடைந்தார். தேனி வனச்சரகம், வரட்டாறு பீட்டில் கைலாசநாதர் கோயில் மலைக்கு பின்புறம் மலைக்காப்பு காடு உள்ளது. இங்குள்ள தென்னந்தோப்பு பகுதியில் அடிக்கடி சிறுத்தை நடமாடுவதால் வனப்பாதுகாவலர்கள் அதனை பிடித்து காட்டுப்பகுதிக்குள் விடுவது வழக்கம். இப்பகுதியில் வனவிலங்குகள் விவசாய தோட்டப்பகுதிக்குள் வராமல் தடுக்க வனத்துறை மூலமாக சோலார் மின்வேலி அமைக்கப்பட்டுள்ளது. நேற்று இந்த மின்வேலியில் சிறுத்தை ஒன்று அகப்பட்டிருப்பதாக வனத்துறைக்கு … Read more

கோவை: இந்து முன்னணி பிரமுகர் கார் சேதப்படுத்தப்பட்ட சம்பவம் – அதே அமைப்பை சேர்ந்தவர் கைது!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இந்து முன்னணி பிரமுகர் ஹரிஷ் கார் சேதப்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக , அதே அமைப்பைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவரையும் அவரது நண்பர் ஹரிஹரன் என்பவரையும் கைது செய்துள்ளதாக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் தெரிவித்தார். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை நகர இந்து இளைஞர் முன்னணி அமைப்பின் செயலாளராக இருப்பவர் ஹரிஷ். நேற்று இவரது கார் கண்ணாடி கல்வீசி தாக்கப்பட்டு உடைக்கப்பட்டிருந்தது. நேற்று காலை கார் கண்ணாடி உடைக்கப்பட்டதை பார்த்த ஹரிஷ் … Read more

சிலிண்டர் பதிவு 15% அதிகரிப்பு.. காரணம் என்ன தெரியுமா..?

பொதுத்துறை நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்களுக்கு தமிழகத்தில் 2.40 கோடி வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் வாடிக்கையாளர்கள் உள்ளனர். அவர்களுக்கு, தினமும் சராசரியாக 4 முதல் 5 லட்சம் சிலிண்டர்கள் டெலிவரி செய்யப்படுகின்றன. இதில், இந்தியன் ஆயில் நிறுவனம் மட்டும் சென்னையில் 80 ஆயிரம் உட்பட மாநிலம் முழுவதும் 2.50 லட்சம் சிலிண்டர்களை டெலிவரி செய்கிறது. பெரும்பாலான காஸ் ஏஜன்சிகள் வார விடுமுறையான ஞாயிற்றுக் கிழமைகளில் செயல்படுவதில்லை. இதனால், அன்று … Read more

மகளின் நிச்சயதார்த்த நிகழ்வுக்கு விடுப்பு மறுப்பு: உதவி ஆய்வாளருக்கு டிஜிபி மனம் வருந்தி கடிதம்

சென்னை: மகளின் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு விடுப்பு மறுக்கப்பட்ட காவல் உதவி ஆய்வாளருக்கு, மனம் வருத்தத்துடன் டிஜிபி சைலேந்திர பாபு கடிதம் எழுதியுள்ளார். சிவகங்கை மாவட்ட, திருப்புவனம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணி புரிந்து வருபவர் சந்தான ராஜ். இவர் தனது மகளின் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விடுப்பு அளிக்க கோரி விண்ணப்பம் அளித்துள்ளார். ஆனால், உயர் அதிகாரிகள் விடுப்பு வழங்காத காரணத்தால் அவரால் நிகழ்ச்சியை நடத்த முடியவில்லை. இந்நிலையில், இவருக்கு ஆறுதல் தெரிவித்து … Read more

ரூட் தல… மிரட்டிய மாணவனுக்கு நிபந்தனை முன் ஜாமீன்!

ரூட் தல என்று கூறி புறநகர் ரயிலில் பயணிகளை கத்தியுடன் மிரட்டிய பச்சையப்பன் கல்லூரி மாணவன் குட்டிக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரூட் தல எனக் கூறி புறநகர் ரயிலில் பயணிகளை கத்தி மற்றும் கற்களை காட்டி மிரட்டியதாக பச்சையப்பன் கல்லூரி மாணவன் குட்டி மீது ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் குட்டி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி ஜெகதீஷ் … Read more

ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி மறுப்பு; உள்துறை செயலாளர், டிஜிபிக்கு நோட்டீஸ்

காந்தி ஜெயந்தியான அக்டோபர் 2 ஆம் தேதி தமிழகம் முழுவதும் 51 இடங்களில் பேரணி நடத்துவதற்கு ஆர்எஸ்எஸ் சார்பில் தமிழக காவல்துறையிடம் அனுமதி கோரப்பட்டது. இந்திய சுதந்திரத்தின் 75ஆம் ஆண்டு, அம்பேத்கர் நூற்றாண்டு, விஜயதசமி ஆகியவற்றையொட்டி இந்த பேரணி நடத்துவதற்கு ஆர்எஸ்எஸ் அமைப்பு, இந்த பேரணிக்கு ஏற்பாடு செய்துள்ளது. இதற்கு தமிழக காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தனிநீதிபதி முன்பாக வந்த இந்த வழக்கு விசாரணையின்போது, சென்னை உயர்நீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளுடன் … Read more

பல பெண்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டு கொடுமைப்படுத்துகிறார்: மாஜி டிஜிபி திலகவதி மகன் மீது மருமகள் சேலம் போலீசில் புகார்

சேலம்: பல பெண்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டு தன்னை கொடுமைப்படுத்துவதாக கூறி தமிழக மாஜி டிஜிபி திலகவதியின் மகன் மீது மருமகள் சேலம் போலீசில் புகார் கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக முன்னாள் டிஜிபி திலகவதியின் மகன் பிரபு திலக் (48). இவரின் மனைவி சுருதி திலக் (40). இவரின் பெற்றோர் வீடு சேலம் அழகாபுரம் பிருந்தாவன ரோட்டில் உள்ளது. இன்று சுருதி திலக், தனது தந்தை கண்ணுசாமியுடன் சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்து கண்ணீர் … Read more

2 மணி நேரமாக காத்திருந்த மக்கள்.. எம்எல்ஏ வராததால் நூலகத்தை அவர்களே திறந்துவைத்த சம்பவம்!

நியாய விலை கடை மற்றும் நூலகம் திறப்பு விழாவிற்கு எம்.எல்.ஏ வராததால் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக காத்துக் கிடந்த பொதுமக்கள், அவர்களே நியாய விலை கடை திறந்து வைத்துள்ள சம்பவம் மேல்மருவத்தூர் அருகே நடந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே கீழ்மருவத்தூர் ஊராட்சிக்குட்பட்ட சக்தி ஸ்ரீநகர், எஸ்.வி.எஸ். நகர் ஆகிய பகுதியில் குடியிருப்புக்கான ரூபாய் 7 லட்சம் மதிப்பீட்டில் நியாய விலை கடை மற்றும் நூலகம் சக்தி ஸ்ரீ நகரில் கட்டப்பட்டது. இந்த நியாய விலை … Read more

மாணவர்களே மறந்துடாதீங்க.. நாளை மதியம் 12 மணிக்கு ஹால் டிக்கெட்..!

தனித்தேர்வர்களுக்கான 8-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்குரிய ஹால் டிக்கெட் நாளை வெளியிடப்படவுள்ளது என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து தேர்வுத்துறை இயக்குநர் சா.சேதுராமவர்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு அக்டோபர் 10 முதல் 14-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களுக்கான ஹால் டிக்கெட்கள் நாளை (செப். 29-ம் தேதி) மதியம் 12 மணிக்கு வெளியிடப்பட உள்ளது. தனித்தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் சென்று பதிவெண், பிறந்த தேதியை உள்ளீடு செய்து தங்களுக்கான ஹால்டிக்கெட்களை … Read more

பெரியார், அம்பேத்கர் சிலைகள் அமைக்க மக்கள் நிச்சயம் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள்: உயர் நீதிமன்ற நீதிபதி கருத்து

மதுரை: தமிழகத்தில் பெரியார், அம்பேத்கர் சிலை அமைக்க மக்கள் யாரும் நிச்சயம் எதிர்ப்பு தெரிவிக்கமாட்டார்கள் என்று உயர் நீதிமன்றக் கிளை கருத்து தெரிவித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் மேல் மாந்தையைச் சேர்ந்த திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர் பி.காலாடி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், “என் வீட்டின் அருகே எனக்கு சொந்தமான இடத்தில் தந்தை பெரியார், அம்பேத்கர் ஆகியோரின் சிலைகளை நிறுவியிருந்தேன். 2007ல் கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்க பணி நடைபெற்றதால் இரு சிலைகளும் … Read more