எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமான கான்ட்ராக்டர் ரூ.2,000 கோடி சொத்து குவித்தது அம்பலம்: புதுக்கோட்டை வீட்டில் 2வது நாளாக ரெய்டு

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமான கான்ட்ராக்டர் வீட்டில் வருமான வரித்துறையினர் நேற்று 2வது  நாளாக சோதனை நடத்தினர். இதில் ரூ. 2,000 கோடிக்கு சொத்து குவித்துள்ளது அம்பலமாகி உள்ளது. புதுக்கோட்டை பெரியார் நகரை சேர்ந்தவர் பாண்டிதுரை (47). நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட அலுவலக உதவியாளர். இவர், முதற்கட்டமாக நெருக்கமானவர்களுக்கு நெடுஞ்சாலையோரம் உள்ள மரங்களுக்கு வர்ணம் பூசும் பணியை கொடுத்து வந்துள்ளார். பின்னர் படிப்படியாக வளந்து வந்த இவருக்கு, கடந்த அதிமுக ஆட்சியில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்த … Read more

இந்து மதம் குறித்து அவதூறாக பேசியதாக ஆ.ராசா மீது நடவடிக்கை கோரி உயர் நீதிமன்றத்தில் மனு

சென்னை: இந்து மதம் மற்றும் இந்துக்கள் குறித்து அவதூறாக பேசியதாக திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் 6-ம் தேதி சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக துணை பொதுச் செயலாளருமான ஆ.ராசா இந்து மதம் மற்றும் இந்து பெண்கள் குறித்து பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக … Read more

இணையதளம் மூலம் பணம் வசூல் கோயில் வழிபாட்டிற்கானது வியாபார தலமாக்க முடியாது: ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கருத்து

மதுரை: கோயில் பொது வழிபாட்டிற்கானது. இதை வியாபாரத்தலமாக்க முடியாது என ஐகோர்ட் கிளை கூறியுள்ளது. ராமநாதபுரத்தை சேர்ந்த சுப்ரமணியன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘கோயில்கள்  பெயர்களில் போலியாக செயல்படும் இணையதளங்களை முடக்கவும், சம்பந்தப்பட்டோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்யநாராயண பிரசாத் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீராகதிரவன் ஆஜராகி, ‘‘கோயில் பெயரில் செயல்படும் தனியார் … Read more

திருநெல்வேலி || சாமி சிலையை சேதப்படுத்திய சம்பவம் – மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்..!

திருநெல்வெலி மாவட்டம் களக்காடு அருகே உள்ள மலையடி புதூரில் ஊய்காட்டு சுடலைமாட சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் சுடலை, மாசானசுவாமி, பேச்சியம்மன் உள்ளிட்ட தெய்வங்கள் எழுந்தருளியுள்ளனர். சுடலை உள்ளிட்ட தெய்வங்களுக்கு தனித்தனியாக கற்சிலைகளும் அமைக்கப்பட்டுள்ளது.  இந்தக் கோவிலில் ஆண்டு தோறும் ஆனி மாதம் கொடை விழா மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்நிலையில் நேற்று இந்தக் கோவிலில் உள்ள மாசானசுவாமி கற்சிலை கீழே தள்ளப்பட்டு, சேதப்படுத்தப்பட்டுள்ளது.  இதையறிந்த ஊர்மக்கள் கோவிலுக்கு சென்று சேதமடைந்த சாமி சிலையை … Read more

‘பாரதியார் இன்று இருந்திருந்தால் நீதித்துறைக்கு எதிராக வெகுண்டு எழுந்திருப்பார்’ – நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பேச்சு

மதுரை: ‘பாரதியார் இன்று இருந்திருந்தால் நீதித்துறைக்கு எதிராக வெகுண்டு எழுந்திருப்பார்’ என உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பேசினார். உயர் நீதிமன்ற மதுரை கிளையில் எம்எம்பிஏ சார்பில் பாரதி விழா மற்றும் கவிதைப் போட்டி இன்று எம்எம்பிஏ தலைவர் ஸ்ரீநிவாச ராகவன் தலைமையில் நடைபெற்றது. இதில், ‘பாரதி இன்று இருந்திருந்தால்’ என்ற தலைப்பில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பேசியதாவது: தமிழர்கள் பாரதியை மறக்கவில்லை. பாரதியை பற்றிய பேச்சும், நினைப்பும் அதிகரித்து வருகிறது. பாரதி கவிஞர், புரட்சியாளர், … Read more

அரக்கோணம் கடற்படை விமானதளத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்து 2 தொழிலாளிகள் படுகாயம்

அரக்கோணம்: அரக்கோணத்தில் உள்ள ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமான தளத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்து 2 தொழிலாளிகள் படுகாயம் அடைந்தனர். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமான தளம் உள்ளது. இங்குள்ள விமான ஓடுபாதை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் புற்கள் முளைத்து காணப்படுகிறது. இவற்றை அறுத்து சுத்தம் செய்வதற்காக, அரக்கோணம் அடுத்த பெருமூச்சு பகுதியை சேர்ந்த செல்வி (45), சங்கர் (40) உள்ளிட்ட சிலர் ஒப்பந்தத் தொழிலாளர்களாக நேற்று முன்தினம் வேலைக்கு சென்றுள்ளனர். அங்கு … Read more

50 வருடங்களாக பயன்படுத்தி வந்த வழி அடைப்பு: பிணத்துடன் போராட்டம்

கிருஷ்ணகிரி ஊத்தங்கரை அருகே இருளர் இன மக்கள் சுடுகாட்டுக்கு வழி இல்லாமல் இரண்டு நாட்களாக சடலத்தை வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கல்லாவி பனமரத்துப்பட்டியில் வசிக்கும் இருளர் இன மக்கள் நீண்ட காலமாக பயன்படுத்தி வந்த சுடுகாட்டுக்கு வழி இல்லாமல், இரண்டு நாட்களாக சடலத்தை வைத்து நூதன முறையில் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஊத்தங்கரை அடுத்த பனமரத்துப்பட்டி இருளர் இன மக்கள், 250 க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். கடந்த மூன்று … Read more

கேரளாவில் கள்ளிபாரா மலைகளில் பூத்துக் குலுங்கும் அரிய வகை நீலக் குறிஞ்சி மலர்கள்!

கேரளாவில் கள்ளிபாரா மலைகளில் பூத்துக் குலுங்கும் அரிய வகை நீலக் குறிஞ்சி மலர்கள்! Source link

திருப்பத்தூர் || ஓட்டல்களில் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தக் கூடாது – ஓட்டல்கள் உரிமையாளர் சங்கம் அதிரடி உத்தரவு..!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ராஜா ராணி ரெசிடென்சியில், நகர ஓட்டல்கள் உரிமையாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம்  நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு ஓட்டல் சங்கத் தலைவர் ஜி .ரங்கநாதன் தலைமை தாங்கியநிலையில், இணைச் செயலாளர் சிவசண்முகம் அனைவரையும் வரவேற்றார். இக்கூட்டத்தில் நகரப் பொருளாளர் ராஜா ராணி பி தாமோதரன், துணைத்தலைவர் டி. புக் ராஜ்குமார், செயலாளர் அமானுல்லா, என். சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  இந்நிகழ்ச்சியில் அவர்கள் தெரிவித்ததாவது, “ஓட்டல்களில் பிளாஸ்டிக் பைகளை உபயோகிக்க கூடாது என்றும், பார்சல் … Read more