திருநங்கைகளுக்கு காட்டுக்குள் நடந்த கொடுமை! அதிரடி காட்டிய போலீஸ்! என்ன நடந்தது?

Attack Transgender in Tuticorin: தூத்துக்குடியில் திருநங்கைகளுக்கு முடியை வெட்டி துன்புறுத்திய இளைஞர்களை கைது செய்துள்ளதாக தமிழக தென்மண்டல காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம். தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை பகுதியில் திருநங்கை ஒருக்கு முடியை வெட்டி இளைஞர்கள் சிலர் கொடுமைப்படுத்திய வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. கழுகுமலையை சேர்ந்த இளைஞர்கள் சிலர் அந்த பகுதியில் உள்ள இரண்டு திருநங்கைகளை காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அதில் ஒரு  திருநங்கையின் முடியை வெட்டி … Read more

காட்பாடி திருவலம் அருகே முதியவர்களை துன்புறுத்திய விவகாரம்: கருணை இல்லத்துக்கு சீல்

வேலூர்: காட்பாடி திருவலம் அருகே குகையநல்லூர் கிராமத்தில் முதியவர்களை துன்புறுத்திய விவகாரம் தொடர்பாக கருணை இல்லத்துக்கு சீல் வைக்கப்பட்டது. புனித ஜோசப் கருணை இல்லத்துக்கு காட்பாடி வட்டாட்சியர் ஜெகன் டி.எஸ்.பி. பழனி தலைமையிலான குழு சீல் வைத்தது.

மது போதையில் போகாத ஊருக்கு டிக்கெட் கேட்டு நடத்துனருடன் வாக்குவாதம்! வீடியோ

ராசிபுரத்தில் அரசு பேருந்தில் செல்லாத இடத்திற்கு டிக்கெட் கேட்டு நடத்துனருடன் ஏற்பட்ட கைகலப்பில் ஒருவரையொருவர் தாக்கிக் கொள்ளும் காட்சி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து காரவள்ளியை நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது மது போதையில் பேருந்தில் ஏறிய ஒருவர், பேருந்து செல்லாத இடத்திற்கு நடத்துனரிடம் பயண சீட்டு கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், வாக்குவாதம் முற்றவே மது போதையில் இருந்தவர் கண்மூடித்தனமாக நடத்துனரை தாக்கியுள்ளார். இதையடுத்து கீழே … Read more

தீபாவளிக்கு நீங்க ரெடியா ? வாயில் போட்டால் உருகும் கடலை மாவு பர்பி செய்து அசத்துங்க

தீபாவளிக்கு நீங்க ரெடியா ? வாயில் போட்டால் உருகும் கடலை மாவு பர்பி செய்து அசத்துங்க Source link

ராமஜெயம் கொலை வழக்கில் புதிய புகார்! அத்துமீறும் விசாரணை குழு!

விசாரணை கைதிகளை அடித்து துன்புறுத்துவதாக மனித உரிமை ஆணையத்தில் புகார்!  தமிழக அமைச்சர் கே.என் நேருவின் சகோதரர் ராமஜெயம் 2012ம் ஆண்டு மார்ச் 29ம் தேதி திருச்சியில் நடைப்பயிற்சி சென்ற போது படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரின் உடல் திருச்சி கல்லணை சாலையில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் காணப்பட்டது. தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை தொடர்பாக முதலில் திருச்சி மாநகர போலீசார் விசாரித்து வந்த நிலையில் சிபிசிஐடி … Read more

இன்றைய பெட்ரோல் – டீசல் விலை என்ன தெரியுமா..?

சென்னையில் இன்று 145-வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. அந்த வகையில், கடந்த 144 நாட்களாக சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், … Read more

குடும்ப விபரங்களை நண்பரிடம் பகிர்ந்ததால் ஏற்பட்ட விபரீதம்.. மன உளைச்சலால் பெண் தற்கொலை.. பேருந்து ஓட்டுநர் கைது!

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெண் தற்கொலை வழக்கில் பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். காரியாவிளை பகுதியைச் சேர்ந்த சஜிலா என்பவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் சுபின் என்பவர் நண்பராகியுள்ளார். சஜிலா தனது குடும்ப விபரங்களையும் தனது கணவரின் குடிப்பழக்கம் குறித்தும் அவரிடம் கூறியதை சாதகமாக பயன்படுத்திய சுபின் அப்பெண்ணிடம் தன்னை மறு திருமணம் செய்யும்படி அடிக்கடி தொந்தரவு செய்ததாகக்கூறப்படுகிறது. சஜிலா இதற்கு மறுப்பு தெரிவித்த நிலையில் குடிபோதையில் அவரிடம் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதில் மன … Read more

மழையால் பாதிக்கப்படாத வகையில் 11 லட்சம் டன் நெல் சேமிக்க கிடங்குகள் தயார்: அமைச்சர் சக்கரபாணி தகவல்

சென்னை: பருவமழையால் பாதிக்கப்படாத வகையில், 11 லட்சம் டன் நெல்லை சேமிக்க கிடங்குகள் தயார் நிலையில் உள்ளதாக உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார். இதுகுறித்து சென்னை கலைவாணர் அரங்கில் செய்தியாளர்களிடம் உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி நேற்று கூறியதாவது: மத்திய அரசு அனுமதியுடன் தமிழகத்தில் செப்.1-ம் தேதி முதல் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. 1,436 நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. டெல்டா மாவட்டங்களில் 3.60 லட்சம் டன் உட்பட தமிழகத்தில் 4.88 லட்சம் டன் … Read more

கோபி அருகே கலிங்கியம் ஊராட்சியில் 15 வயது சிறுமியை கடத்தி திருமணம் செய்தவர் கைது

கோபி : கோபி அருகே கலிங்கியம் ஊராட்சியில் 15 வயது சிறுமியை கடத்தி திருமணம் செய்தவர் கைது செய்யப்பட்டார். 15 வயது சிறுமியை கடத்தி திருமணம் செய்த செல்லிபாளையத்தை சேர்ந்த இளைஞர் சஞ்சய் கைது செய்யப்பட்டார்.

’ஏண்டா சரியா படிக்க மாட்டிங்கிற’.. கண்டித்த தாய் மீது 14 வயது மகன் செய்த வெறிச்செயல்!

சரிவர படிக்காத மகனை கண்டித்த தாயை அவர் தூங்கிக் கொண்டிருந்த போது தலையில் கல்லை போட்டு 14 வயது மகன் கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் சத்தியமங்கலம் அருகே நிகழ்ந்துள்ளது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள சுங்கக்காரன்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் அருள்செல்வன். சிவில் காண்ட்ராக்டரான இவருக்கு யுவராணி என்ற மனைவியும், சஞ்சய் என்ற மகனும், தர்ஷினி ஸ்ரீ என்ற மகளும் உள்ளனர். யுவராணி புஞ்சை புளியம்பட்டியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் வணிக உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இவரது … Read more