மணவாளக்குறிச்சி அருகே மொபட்-பைக் மோதல்; நிறைமாத கர்ப்பிணி போலீஸ் பலி.! வயிற்றில் இருந்த சிசுவும் இறந்தது
குளச்சல்: கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே நேற்றிரவு நடந்த விபத்தில், நிறைமாத கர்ப்பிணி போலீஸ் உயிரிழந்தார். அவரது வயிற்றில் இருந்த குழந்தையும் இறந்தது. பணி முடிந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நடந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே உள்ள அம்மாண்டிவிளை கட்டைக்காடு பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர் (38). தனியார் கம்பெனி ஊழியர். இவரது மனைவி உஷா (37), வெள்ளிச்சந்தை காவல் நிலையத்தில் போலீசாக பணியாற்றி வந்தார். 7 வயதில் மகன் உள்ளான். தற்போது … Read more