பெற்றோரின் அலட்சியம்.. எமனாக வந்த விசில்… பறிபோன பிஞ்சு உயிர்.! 

சென்னையில் வீட்டில் விளையாடும் போது விசிலை விழுங்கிய குழந்தை உயிரிழந்துள்ளது.  சென்னை பூந்தமல்லி லட்சுமிபுரம் ரோடு பத்மாவதி நகர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தராஜ் (38) , மற்றும் அவரது மனைவி வனஜா வசித்து வருகின்றனர். அவர்கள் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார்.  இவர்களுக்கு தர்சன் என்ற 3 வயது மகனும், கயல்விழி என்ற 1 வயது பெண் குழந்தையும் உள்ளனர். வழக்கம் போல் குழந்தை வீட்டில் விளையாட்டு பொருட்களை வைத்து விளையாடி கொண்டிருந்தது.  அக்குழந்தை விளையாட்டின் போது … Read more

புதுச்சேரியில் நடைபாதை கடைகள் அகற்றத்துக்கு எதிர்ப்பு: வியாபார உரிமங்களின் நகல் எரிப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் நடைபாதை கடைகள் அகற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு தந்த வியாபார உரிமங்களில் நகல்களை எரித்தனர். புதுவையில் அரசு மற்றும் நகராட்சி அளித்த உரிமங்களுடன் சாலையோர வியாபாரிகள் சாலையோரங்களில் கடை வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். இதனிடையே, மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் அனைத்து இடங்களிலும் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன. குறிப்பாக, புதுவை நகரப்பகுதிகளில் உள்ள சாலையோர, நடைபாதை வியாபாரிகளின் கடைகள் தீபாவளி வரும் சூழலில் அகற்றப்பட்டு வருகிறது. இதற்கு நடைபாதை வியாபாரிகள் கண்டனம் … Read more

இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயம்: தமிழக அரசு என்ன செய்ய வேண்டும்?

மரவகை இனத்தைச் சார்ந்த தேவாங்குகள் சிறிய, இரவு நேர பாலூட்டிகள். சுற்றுச்சூழல் மற்றும் நிலப்பரப்பு சுற்றுச்சூழல் அமைப்பில் முக்கிய பங்காற்றும் இந்த தேவாங்கு இனங்கள், விவசாய பயிர்களுக்கு சேதம் உண்டாக்கும் பூச்சிகளை வேட்டையாடி விவசாயிகளுக்கு நன்மை பயக்கின்றன. ஆனால், மாறிவரும் வாழ்வியல் முறைகளால், தேவாங்கு இனம் தொடர்ச்சியாக அழிந்து வருகின்றன. இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம், (IUCN) தேவாங்கு இனத்தினை அழிந்து வரும் இனமாக பட்டியலிட்டுள்ளது. எனவே, இவற்றை பாதுகாத்து இவைகளின் எண்ணிக்கையைப் பெருக்க வேண்டிய அவசியம் … Read more

பெற்றோர் திட்டியதால் வீட்டை விட்டு வெளியேறிய மாணவனை ஒன்றைரை ஆண்டுகளுக்கு பிறகு மீட்பு

திருவாரூர்: திருவாரூர் அருகே பெற்றோர் திட்டியதால் வீட்டை விட்டு வெளியேறிய மாணவனை ஒன்றைரை ஆண்டுகளுக்கு பிறகு மும்பையில் போலீசார் பத்திரமாக மீட்டனர். திருவாரூர் அருகே இளவங்கார்குடி பகுதியைச் சேர்ந்த விறகு வியாபாரி அறிவழகன். இவரது மகன் மாதேஷ் அரசு உதவிபெறும் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் மாதேஷை, அவரது பெற்றோர் படிக்காமல் இருந்ததற்காக அடிக்கடி திட்டியுள்ளனர். இதனால் படிக்க விருப்பமில்லை என நினைத்த அவர், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வீட்டை விட்டு வெளியேறினார். … Read more

கேள்விகளுக்கு பதிலளிக்காமல் செய்தியாளர்களை பார்த்து ‘ கெட் அவுட்’ எனக் கூறிய ஹெச்.ராஜா

திருவண்ணாமலையில் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட முன்னாள் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்காமல், செய்தியாளர்களைப் பார்த்து ’கெட் அவுட்’ என்று கூறி கோபமாக வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலையில் பாஜக சார்பில் ஆன்மிகம் மற்றும் ஆலய மேம்பாட்டுப் பிரிவு மாநில செயற்குழு கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கலந்து கொண்டார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ஹெச்.ராஜா செய்தியாளர்களின் கேள்விக்குப் பதில் அளித்தவாறு … Read more

#Breaking : ஆ.ராசா மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் புகார்.! "மத விரோதத்தை தூண்டிய ஆ.ராசா"- குற்றச்சாட்டு.!  

சமீபத்தில் திக தலைவர் வீரமணியின் பாராட்டு விழாவில் ஆ.ராசா பேசிய போது, “உச்சநீதிமன்றம் இந்துவாக தான் இருக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறது. இப்படிப்பட்ட கொடுமை வேறு எந்த நாட்டிலாவது இருக்கிறதா? ஹிந்துவாக நீ இருக்கும் வரை நீ ஒரு சூத்திரன். இந்துவாக இருக்கும் வரை நீ ஒரு விபச்சாரியின் மகன். இந்துவாக இருக்கும் வரை நீ ஒரு பஞ்சவன். தீண்ட தகாதவன். எத்தனை பேர் விபச்சாரியின் மகனாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்கள்? தீண்டத்தகாதவர்களாக இருக்க வேண்டும் … Read more

விராட் கோலி, ரோகித் சர்மாவுக்காக கொலை: அரியலூரில் அதிர்ச்சி சம்பவம்..!

அரியலூரில், இந்திய கிரிகெட் வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி குறித்து தவறாக பேசிய தனது நண்பனை இளைஞர் ஒருவர் கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம் பொய்யூர் கிராமம் வடக்கு தெருவை சேர்ந்தவர் விக்னேஷ். ஐடிஐ படித்துள்ள இவர் சென்னையில் பணியாற்றி வந்த நிலையில் வெளிநாட்டில் பிளம்பிங் வேலை செய்வதற்கான டெஸ்டு எடுத்துள்ளார். இந்நிலையில், நேற்று முன் தினம் இரவு விக்னேஷின் நண்பரான பிரபாகரன் போன் செய்து அழைத்துள்ளார். … Read more

நளினி, ரவிச்சந்திரன் விடுதலை கோரிய வழக்கில் நீதிமன்ற உத்தரவுக்கு அரசு கட்டுப்படும்: தமிழக அரசு பதில் மனு

புதுடெல்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்து வரும் தங்களை விடுதலை செய்யக் கோரி நளினி, ரவிச்சந்திரன் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு வழக்கில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருந்த 7 பேரில் ஒருவரான பேரறிவாளனை கடந்த மே மாதம் 18-ம் தேதி உச்ச நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது. உச்ச நீதிமன்றம் தனது தனிப்பட்ட … Read more

நயன்-விக்கி மீது நடவடிக்கை? அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்!

மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் சுகாதாரத்துறை சார்பில் அரசு நடைபெறும் நிகழ்வில் பங்கேற்பதற்காக தமிழக மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னையிலிருந்து விமான மூலம் மதுரை வந்தடைந்தார். தொடர்ந்து, மதுரை விமான நிலையத்தில் தமிழக அரசு சார்பாக விமான நிலைய வளாகத்தில் கொரோனா தடுப்பூசி முகாமை அமைச்சர் சுப்பிரமணியன் துவக்கி வைத்தார். சுகாதாரத்துறை இணை இயக்குநர் அர்ஜுன் குமார், மதுரை மருத்துவக் கல்லூரி டீன் ரத்தினவேலுவுடன் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரில் … Read more