இரண்டாம் ஆண்டு பருவத் தேர்வுகளில் இனி தமிழ் மொழி பாடம் கட்டாயம் – உயர்கல்வித்துறை அதிரடி உத்தரவு..!

பி.காம், பிபிஏ, பிசிஏ உள்ளிட்ட படிப்புகளில் இரண்டாம் ஆண்டு பருவத் தேர்வுகளில் இனி தமிழ் மொழி பாடம் கட்டாயம் இருக்க வேண்டும் என்று உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.  இதுகுறித்து, உயர் கல்வித்துறை முதன்மை செயலாளர் கார்த்திகேயன் பல்கலைக்கழகங்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, “பாரதிதாசன் பல்கலைக்கழகம், அன்னை தெரசா பல்கலைக்கழகம் மற்றும் பெரியார் பல்கலைக்கழகம் உள்ளிட்ட இந்த மூன்று பல்கலைக்கழகங்கள் தவிர மற்ற பல்கலைக்கழகங்களில் பிகாம், பிபிஏ, பிசிஏ பாடப்பிரிவுகளுக்கு இரண்டாம் ஆண்டில் தமிழ் … Read more

மாணவி ஸ்ரீமதியை அந்த கோலத்தில் படம் எடுத்து பரப்பிய பெரியப்பா..! செல்போனை கைப்பற்றிய போலீசார்

கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளியில் உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியின் சடலம் பிணவறையில் வைக்கப்பட்டிருந்தபோது சட்டவிரோதமாக புகைப்படம் எடுத்து பரப்பியதாக மாணவியின் பெரியப்பா செல்போனை சிபிசிஐடி போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். சிம்கார்டு கிடைத்தாலும் செல்போன் கிடைக்கவில்லை என்று மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்த பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த சம்பவத்தின் தொடர்ச்சியாக நடந்த பெரும் கலவரத்திற்கு , மாணவி ஸ்ரீமதி  பிரேத பரிசோதனை அறையில் கேட்பாரற்று கிடப்பது … Read more

எத்தனை நாளுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்படும்? – ஆர்டிஐ கேள்விக்கு மதுரை மாநகராட்சி கொடுத்த அதிர்ச்சி பதில்

மதுரை: வார்டு மக்கள் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ், எத்தனை நாளுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்று கேட்ட கேள்விக்கு மதுரை மாநகராட்சி 7 நாள் அல்லது அதற்கு மேல் ஆகும் என்று பதில் அளித்துள்ளது பொதுமக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. மதுரை தாசில்தார் நகர் 37வது வார்டில் சித்திவிநாயகர், வ.உசி.1, 2, 3 தெருக்கள், சித்தி விநாயகர் காயில் தெரு, அண்ணா தெரு, அன்னை அபிராமி தெரு, எழில் வீதி, கலைஞர் தெரு, … Read more

மாணவியை கொலை செய்த இளைஞனுக்கு இந்த தண்டனைதான் சரி… விஜயகாந்த ஆவேசம்!

சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் பட்டப்பகலில் கல்லூரி மாணவி ரயில்வே தண்டவாளத்தில் தள்ளிவிடப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட சதீஷ் என்ற இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், திரை நட்சத்திரங்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து தலைவர் விஜயகாந்த வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், ‘கல்லூரிக்கு செல்வதற்காக பரங்கிமலை ரயில் நிலையத்தில் காத்திருந்த சத்யபிரியா … Read more

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் கைது

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளார். ராஜேந்திரன் (60), சந்திரன் (65), தமிழ்ச்செல்வனிடமிருந்து 100-க்கு மேற்பட்ட லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்துள்ளார்.

தமிழகத்தை உலுக்கிய மாணவி சத்யா கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்! – தமிழக டிஜிபி

கல்லூரி மாணவி சத்யா பரங்கிமலை ரயிலில் தள்ளிவிடப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். காதலிக்க மறுத்ததாக கூறி ஆதம்பாக்கத்தை சேர்ந்த கல்லூரி மாணவி சத்யாவை, அதே பகுதியை சேர்ந்த சதீஷ் என்பவர் பரங்கிமலை ரயில் நிலையத்தில் ஓடும் ரயில்முன்பு சத்யாவை தள்ளிவிட்டு படுகொலை செய்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. மாணவி சத்யா கொலை செய்யப்பட்ட துயரத்தில் அவரது தந்தை மாரடைப்பால் உயிரிழந்தார். இந்த வழக்கு பரங்கிமலை காவல்துறையினர் மற்றும் ரயில்வே காவல்துறையினர் … Read more

கோவையில் தனியார் ரசாயன கிடங்கில் பயங்கர தீ விபத்து!

கோவை மாவட்டம் சரவணம்பட்டி அடுத்த கரட்டுமேடு விசுவாசபுரத்தை சேர்ந்த ரங்கசாமியின் மகன் குமார் அப்பகுதியில் ஆர்பிகே கெமிக்கல்ஸ் என்ற கம்பெனியை நடத்தி வருகிறார். அதில் பெயிண்டில் கலக்கக்கூடிய தின்னரை மொத்தமாக பேரலில் வாங்கி தனி பாட்டிலில் அடைத்து கோயம்புத்தூர் முழுவதும் பெயிண்ட் கடைகளுக்கு சப்ளை செய்து வருகிறார். இந்நிலையில் இன்று மாலை அவரது கம்பெனியில் திடீரென விபத்து ஏற்பட்டுள்ளது.   இந்த தீ விபத்தில் கம்பெனியின் மேல் கூரை உடைந்து விழுந்து உள்ளது. கம்பெனியில் வேலையில் இருந்த … Read more

தொடர் மழை காரணமாக கிராமத்திற்குள் படையெடுக்கும் சிவப்பு அட்டை பூச்சிகள்..

நாமக்கல் மாவட்டம் மங்களபுரம் ஊராட்சியில் உள்ள தாண்டா கவுண்டம் பாளையம் கிராமத்தில்  தொடர் மழை காரணமாக அருகில் உள்ள மலைப்பகுதியில் இருந்து சிவப்பு நிற மர அட்டைகள் ஆயிரக்கணக்கில் ஊருக்குள் படையெடுத்துள்ளன. உணவு பொருட்களில் இந்த அட்டை பூச்சிகள் விழுந்து விடுவதாலும், உடலில் ஒட்டிக்கொண்டு ரத்தத்தை உறிஞ்சுவதாலும், தூங்கி கொண்டிருக்கும் போது காதுக்குள் நுழையும் தன்மையை கொண்டுள்ளதாலும், கிராம மக்கள் கடும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். . Source link