மாணவர்களின் ஹெல்த் எப்படி இருக்கு? -ஆய்வு செய்ய ஆசிரியர்களுக்கு ஆர்டர்!

மாணவர்களுக்கு பாடம் சொல்லி கொடுக்கும் தலையாய பணியுடன் தேர்தல் பணி, மக்கள்தொகை கணக்கெடுப்பு, வாக்காளர் விவரம் சேகரிப்பு உள்ளிட்ட பணிகளும் பள்ளி ஆசிரியர்களுக்கு அவ்வப்போது தரப்பட்டு வருகிறது. இவற்றி்ன் வரிசையில் மாணவர்களின் உடல்நலம் சார்ந்த பல்வேறு தகவல்களை சேரிக்க ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதன்படி வைட்டமின் குறைபாடு, ரத்த சோகை, கண் பார்வை பாதிப்பு, காசநோய், தைராய்டு பிரச்னை, பல் நோய்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து அந்த தகவல்களை பட்டியலாக அனுப்ப மாநிலம் முழுவதும் … Read more

மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் எப்போது தொடக்கம்?

தமிழகத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு அனைத்துப் பள்ளி நாட்களிலும் காலை உணவு வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் கிராமப்புறங்களில் உள்ள ஆயிரத்து 545 பள்ளிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக தமிழக அரசு ரூ.33.56 கோடி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் 1.14 லட்சம் மாணவ, மாணவியர்கள் பயன்பெறுவர். படிப்படியாக இந்தத் திட்டம் தமிழகம் … Read more

புதுக்கோட்டையில் நாளை கோயில் குடமுழுக்கு விழாவை ஒட்டி உள்ளூர் விடுமுறை: ஆட்சியர் கவிதா ராமு அறிவிப்பு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அறந்தாங்கியில் உள்ள வீரமாகாளி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவை ஒட்டி நாளை உள்ளூர் விடுமுறை என ஆட்சியர் கவிதா ராமு அறிவித்தார்.

சாவியை ஆன் செய்தபடி பழுது பார்த்த மெக்கானிக்; திடீரென வெடித்து சிதறிய எல்.பி.ஜி ஆட்டோ!

ஆவடி அருகே ஆட்டோ பழுது நீக்கம் செய்து கொண்டிருக்கும் பொழுது திடீரென தீ பற்றியதால் பரபரப்பு சென்னை அருகே ஆவடியை அடுத்த கோவில் பதாகை திருமுல்லைவாயல் சாலையில் பிரசாந்த் என்பவர் ஆட்டோ பழுது நீக்கம் கடை நடத்தி வருகிறார். வழக்கம்போல் , இன்று பாண்டியன் என்பவருக்கு சொந்தமான ஆட்டோவை பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டபோது ஆட்டோ சாவியை ஆன் செய்து வைத்துக் கொண்டு பழுது நீக்கம் செய்து கொண்டிருந்தார். அப்பொழுது எதிர்பாராத விதமாக ஆட்டோ திடீரென தீப்பற்றி … Read more

ரூ.25 லட்சத்திற்கு புலிக்குட்டி விற்பனை என வாட்ஸ் அப் ஸ்டேடஸ் – வனத்துறை அதிகாரிகளிடம் சிக்கிய இளைஞர்..!

வேலூரில், 25 லட்சம் ரூபாய்க்கு ஆன்லைனில் புலிக்குட்டி விற்பனை செய்யப்படுவதாக விளம்பரம் செய்து வாட்ஸ் அப் ஸ்டேடஸ் வைத்த இளைஞரை வனத்துறை போலீசார் கைது செய்தனர். வாட்ஸ் ஆப் வாயிலாக விளம்பரம் செய்யப்பட்ட செல்போன் எண்ணை கொண்டு விசாரித்ததில், வேலூர் சார்பனா மேடு பகுதியில் வசித்து வரும் ஆரணியை சேர்ந்த பார்த்திபன் என்பவர், சென்னையில் வளர்ப்பு பிராணிகளை விற்பனை செய்யும் கடை நடத்தி வரும் தமிழ் என்பவருடன் இணைந்து விலங்குகள், பறவைகள் உள்ளிட்ட செல்லப் பிராணிகளை விற்பனை … Read more

மாணவியரின் இடைநிற்றலை ‘புதுமைப்பெண்’ திட்டம் முழுமையாக தடுக்கும்: அன்பில் மகேஸ் நம்பிக்கை

தருமபுரி: புதுமைப்பெண் நிதியுதவி திட்டம், மாணவியர் இடைநிற்றலை முழுமையாக தடுக்கும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். பள்ளிக் கல்வித் துறை சார்பில் இன்று (7-ம் தேதி) தருமபுரியில் மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் நடந்தது. தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல் ஆகிய 4 மாவட்டங்களுக்கான இந்த ஆய்வுக் கூட்டத்தில் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் … Read more

ராகுல் காந்தியின் 'இந்திய ஒற்றுமை பயணம்': மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின், இந்திய ஒற்றுமை பயணத்தை, தமிழக முதலமைச்சர் தேசியக் கொடி வழங்கி தொடங்கி வைத்தார். கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை சுமார் 3,500 கி.மீ. தூரத்துக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இந்திய ஒற்றுமை பயணம் என்ற பெயரில் நடைபயணம் செல்கிறார். இதற்காக தமிழகம் வந்துள்ள ராகுல் காந்தி காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தந்தை ராஜிவ் காந்தி நினைவிடத்தில் இன்று காலை மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த பாதயாத்திரையில் காங்கிரஸ் … Read more

6 பேர் கொண்ட கும்பலால் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வெட்டி படுகொலை

தஞ்சாவூர் மாவட்டம் நாச்சியார் கோவிலைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவருக்கு சாமிநாதன், மாரியப்பன் என இரண்டு மகன்களும், தையல்நாயகி என்ற ஒரு மகளும் உள்ளனர். இதில் மகள் தையல் நாயகிக்கு அரியலூர் மாவட்டம் அணைகுடம் கிராமத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் திருமண நடைபெற்றது. திருமணத்திற்கு வந்திருந்த சாமிநாதன் மண்டபத்திற்கு எதிரே இருந்த பெட்டி கடைக்கு வந்துள்ளார்.  அப்போது மூன்று இருசக்கர மோட்டார் சைக்கிளில் வந்த ஆறு பேர் கொண்ட கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் சாமிநாதனை சரமாரியாக … Read more

ஈரோடு அந்தியூர் அருகே அரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: படுகாயமடைந்த 35 பேர் மருத்துவமனையில் அனுமதி

ஈரோடு: அந்தியூரில் இருந்து கொங்கடை மலை கிராமத்துக்கு சென்ற அரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பேருந்தில் பயணித்த 35 பேரும் படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 

தேசிய நெடுஞ்சாலையில் உருண்டோடிய ஆட்டோ: சிதறி விழுந்த பயணிகள் – அதிர்ச்சி சிசிடிவி காட்சி

உளுந்தூர்பேட்டை அருகே தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த ஆட்டோ திடீரென சாலையில்  கவிழ்ந்து உருண்டோடியது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த செங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பாதூர் கிராமத்திற்கு துக்க நிகழ்ச்சிக்காக ஆட்டோவில் சென்றுவிட்டு வீடு திரும்பினர். இந்த ஆட்டோவை அப்பு என்பவர் ஓட்டிக்கொண்டு வந்தார். அப்போது தனியார் திருமண மண்டபம் அருகே வந்த ஆட்டோ திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தேசிய நெடுஞ்சாலையில் தலைகீழாக கவிழ்ந்து உருண்டோடியது. அப்போது அதே திசையில் வந்த இருசக்கர வாகனம் அந்த … Read more