பூப்பறிக்கச் சென்று கிணற்றில் தவறி விழுந்த பெண்- 32 மணி நேரத்திற்குப் பிறகு சடலமாக மீட்பு

அரியலூரில் பூப்பறிக்கச் சென்றபோது 90 அடி ஆழமுள்ள கிணற்றில் பெண் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம் கோக்குடி கிராமத்தைச் சேர்ந்த லாரன்ஸ் என்பவருடைய மகள் ஹெல்வினா சைனி (18). இவர், நேற்று (11 ஆம் தேதி) மதியம் அவர்களின் கொல்லையில் பூப்பறிக்கச் சென்றுள்ளார். இதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில், லாரன்ஸ் கொல்லையில் சென்று பார்த்த போது கிணற்றில் செப்பல் மற்றும் துப்பட்டா கிடந்துள்ளது. மழை பெய்ததால் மகள் கிணற்றில் … Read more

தமிழகத்தில் இன்று (அக்டோபர் – 13) இந்த பகுதிகளில் மின்தடை அறிவிப்பு.!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (அக்டோபர் 13) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. சென்னை  சென்னை ஆவடி பகுதிகளான சி.டி.எச்.ரோடு, காந்தி நகர், கவரபாளையம், பெரியார் தெரு புழல் கதிர்வேடு முழுவதும், சீனிவாசா நகர், ஜே.பி.நகர், புத்தகரம், சூரபேட்டை மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது. திருவேற்காடு … Read more

உலகக்கோப்பை டி20 தொடரில் இந்திய அணியில் ரிசர்வ் வீரராக இடம்பெற்ற தீபக் சாஹர் விலகல்..!!

ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் 16-ம் தேதி முதல் நவம்பர் 13-ம் தேதி வரை டி20 உலக கோப்பை தொடரானது நடைபெற உள்ளது. இந்த தொடரில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து உள்பட 16 அணிகள் பங்கேற்று விளையாடுவதால் கோப்பையை கைப்பற்றி சாம்பியன் பட்டம் வெல்லப்போவது யார் என்பது குறித்த எதிர்பார்ப்பு தற்போதைய ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. மேலும் இந்த உலககோப்பை தொடரானது இம்முறை ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெறவுள்ளதால் ஏகப்பட்ட எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதில் நேரடியாக சூப்பர்12 … Read more

மெட்ரோ சுரங்க பணி: முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்

சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், மாதவரம் பால்பண்ணை அருகே சுரங்கம் தோண்டும் பணியை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். சென்னையில், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், ரூ.63,246 கோடி செலவில் நடைபெறுகிறது. இந்தப் பணிகளை2026-ம் ஆண்டுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, பல்வேறுஇடங்களில் சுரங்கப்பாதை, உயர்மட்டப் பாதைக்கான பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன. அதிலும், சுரங்கப்பாதைப்பணிக்காக, மொத்தம் 23 சுரங்கம் துளையிடும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இதுவரை 5 சுரங்கம் துளையிடும் … Read more

வைத்திலிங்கம் தூது… ஓபிஎஸ் போட்ட சீக்ரெட் பிளான்; ஆட்டம் காணும் எடப்பாடி டீம்!

தமிழகத்தில் எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுகவில் உட்கட்சி பூசல் உச்சம் தொட்டுள்ள நிலையில், தரப்பு சற்று பலம் பெற்று விளங்குவதாக கூறப்படுகிறது. இதனை முறியடிக்க தரப்பு பல்வேறு வகைகளில் முயற்சித்து வருகிறது. அதிமுக யார் கையில்? என்பதை இறுதியாக தீர்மானிக்கும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திடமே உள்ளது. இந்த இடத்தில் தொண்டர்கள் ஆதரவு என்று வெறுமனே வாய் வார்த்தையாக சொன்னால் பலனில்லை. கட்சி நிர்வாகிகள், மக்கள் பிரதிநிதிகளின் ஆதரவு பட்டியலை, அவர்கள் கையெழுத்து போட்ட படிவங்களை சமர்பிக்க வேண்டும். அதாவது, … Read more

இது நியாயமா!!.. இரு கிராமங்களிடையே ஆன பிரச்னையில் மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாத அவலம்!

திருப்புத்தூர் அருகே இரு கிராமங்கள் இடையே வரி வசூலிப்பதில் ஏற்பட்ட பிரச்னையால் அரசுப் பள்ளி மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் கோயிலில் வைத்து படிக்க வைத்த அவலம் அரங்கேறியுள்ளது. திருப்பத்தூர் அடுத்த கந்திலி ஒன்றியத்திற்குட்பட்ட நார்சம்பட்டி கிராம பஞ்சாயத்துக்குச் சொந்தமான இடத்தில் அமைந்துள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் சுமார் 230 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், இதுநாள் வரை கும்மிடிகான்பட்டி கிராம பஞ்சாயத்திற்கு அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் தொழில் வரி செலுத்தி வந்ததாகவும், தற்போது இந்த பள்ளி … Read more

ஐசிசி-ன் தலைவர் பதவிக்கு போட்டியிடும் கங்குலி.. அப்போ பிசிசிஐ-யின் புதிய தலைவர் யார் ?

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக கடந்த 2019-ம் ஆண்டு சவுரவ் கங்குலியும், செயலாளராக அமித்ஷாவின் மகன் ஜெய் ஷாவும் தேர்வானார்கள். இவர்களது பதவிக்காலம் முடிவுக்கு வந்துள்ளது. இந்த நிலையில், இந்தப் பதவிகளுக்கான தேர்தல் வரும் 18-ம் தேதி பிசிசிஐ-யின் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் நடத்தப்பட உள்ளது. இதில் புதிய தலைவராக கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த 67 வயதான ரோஜர் பின்னி, பிசிசிஐ-யின் 36-வது தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார். அதேவேளையில், ஜெய் ஷா 2வது முறையாக பிசிசிஐ … Read more