ஓய்வுபெற்ற ஆசிரியர் தொடர்ந்த வழக்கு: பள்ளிக்கல்வித்துறை ஆணையர் ஆஜர்!

உயர் நீதிமன்ற மூன்று நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் பணப்பலன் வழங்காததை எதிர்த்து ஓய்வு பெற்ற ஆசிரியர் தொடர்ந்த வழக்கில், தமிழக பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கும் ஒரே மாதிரியான ஊதியம் நிர்ணயம் செய்து, 1993ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையை 2017 மார்ச்சிலிருந்து அமல்படுத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மூன்று நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவின்படி, பண பலன்கள் வழங்கவில்லை என ஹரிஹரன் … Read more

சேலம் அருகே தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் கனரக லாரி மீது பேருந்து மோதி விபத்து

சேலம்: சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் கனரக லாரி மீது பேருந்து மோதிய விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பேருந்து  ஓட்டுநர், நடத்துனர் உள்பட 15பேர் காயமடைந்தனர்.

நான்குவழிச் சாலையில் எதிர் திசையில் பைக்கில் சென்ற இரு சிறுவர்களுக்கு நேர்ந்த பரிதாபம்

நான்குவழிச் சாலையில் எதிர் திசையில் வந்த பைக் மீது லாரி மோதிய விபத்தில் 2 சிறுவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். நெல்லை மாவட்டம் கூட்டப்புளி கடற்கரை கிராமம் சுனாமி நகரைச் சேர்ந்த ஆரோக்கியம் என்பவரின் மகன் ஆல்சன் (16), தினேஷ் என்பவரின் மகன் பிரமோத் (16), மற்றும் சாமி என்பவரின் மகன் ஆஸ்வின் பிரகாசம் (17), ஆகிய மூவரும் ஒரே பைக்கில் வள்ளியூர் சென்றனர். இந்நிலையில், வள்ளியூரில் தங்களது பணிகளை முடித்து விட்டு கூட்டப்புளிக்கு திரும்பி சென்று … Read more

ரயிலில் தள்ளிவிட்டு இளம் பெண் கொலை.. அதிர்ச்சியில் தந்தை மாரடைப்பால் உயிரிழப்பு.!

சென்னை  ரெயில் நிலையத்தில் கொலை செய்யப்பட்ட மாணவியின் தந்தை மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். காதல் என்ற பெயரில் வற்புறுத்தல், கொலை, பலாத்காரம் என்று பல்வேறு கொடுமைகள் அரங்கேறி வருகின்றன. தான் காதலிக்கும் பெண் தனது காதலை ஏற்காவிட்டால் கூட ஆசிட் அடிப்பது, வெட்டி கொலை செய்வது என்று பல்வேறு கொடூரங்கள் அரங்கேறி வருகின்றன. அத்துடன், கொலை செய்வது மட்டுமல்லாமல் அவர்களை பாலியல் பலாத்காரம் செய்தும், நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யும் கொடுமையும் அரங்கேறி வருகின்றது. அப்படிப்பட்ட … Read more

8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபருக்கு 23 ஆண்டுகள் சிறை..!!

நீலகிரி மாவட்டம் கொளப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் ஜெயராம் என்கிற மனோஜ் (வயது 25). கடந்த 2017-ம் ஆண்டு இவருடைய தங்கை 8-ம் வகுப்பு படித்து வந்தார். இவருடைய தங்கை அதே பகுதியை சேர்ந்த ஆதிதிராவிட பிரிவை சேர்ந்த 8-ம் வகுப்பு படித்து வந்த சக தோழியின் வீட்டுக்கு சேர்ந்து படிப்பது தொடர்பாக அவ்வப்போது சென்று வருவது வழக்கம். அப்போது தங்கையின் தோழி வீட்டுக்கு ஜெயராமும் நட்பாக சென்று வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் … Read more

ஐயா நான் தான் கொலைகாரன்: போலீசாரிடம் உண்மையை சொன்ன திருட்டு இளைஞர்

திருவள்ளூர் மாவட்டம் கும்முடிப்பூண்டி அருகே திருட்டு வழக்கில் கைதாகி நீதிமன்றத்திற்கு சென்ற இளைஞர் ஒருவர்  கடந்த 20 நாட்களுக்கு முன்பு தாம் ஒருவரை கொலை செய்ததாக காவல் துறையிடம் தெரிவித்துள்ளார்.  திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வாகனங்களின் பேட்டரிகள் அடிக்கடி திருடு போவதாக வந்த புகாரை அடுத்து திருப்பாலைவனம் விஜி என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக போலீசார் அழைத்து சென்ற போது, கடந்த 20 நாட்களுக்கு முன்பு சின்ன … Read more

கட்சியினரை என் நிகழ்ச்சிக்கு வரவிடாமல் திமுகவினரே தடுக்கிறார்கள்: விருந்து நிகழ்ச்சியில் பழனிவேல் தியாகராஜன் குற்றச்சாட்டு

மதுரை: எனது விருந்து நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டாம் என்று நிர்வாகிகளை தடுக்கிறார்கள் என்று நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குற்றம் சாட்டினார். திமுக தலைவராக ஸ்டாலின் 2-வது முறையாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்காக மதுரை மாநகர கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுக்கு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மடீட்சியா அரங்கில் நேற்று மதியம் சைவ மற்றும் அசைவ விருந்து வைத்தார். இதில் மேயர் இந்திராணி, மிசா பாண்டியன், மண்டலத் தலைவர்கள், திமுக கவுன்சிலர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். … Read more

அதிகாரிகளின் டார்ச்சர் தாங்க முடியல: 108 ஆம்புலன்ஸில் சென்ற பேருந்து ஓட்டுநரால் பரபரப்பு

அதிகாரிகள் டார்ச்சர் செய்வதால் மன உளைச்சல் ஏற்பட்டு, ரத்த அழுத்தம் அதிகரித்துவிட்டதாகக் கூறி 108 ஆம்புலன்ஸை வரவழைத்து மருத்துவமனைக்குச் சென்ற ஓட்டுநரால் பரபரப்பு ஏற்பட்டது. அரசு போக்குவரத்து கழக கும்பகோணம் கோட்டம் புறநகர் பேருந்தில் ஸ்ரீகாந்த் என்பவர் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவர், கும்பகோணத்தில் இருந்து திருச்சிக்கு நேற்று பேருந்தை ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது பேருந்து திடீரென பழுதானதால் பயணிகளை வேறு பேருந்தில் ஏற்றிவிட்டு கும்பகோணம் டெப்போவிற்கு பேருந்தை ஸ்ரீகாந்த் ஓட்டிச் சென்றுள்ளார். இதையடுத்து கும்பகோணம் … Read more