வறுமையில் வாடும் கலைமாமணி விருதாளர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் பொற்கிழி – முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: இயல் இசை நாடக மன்றம் சார்பில், வறுமையில் வாடும் கலைமாமணி விருதாளர்களுக்கு தலா ரூ.1 லட்சம் பொற்கிழி தொகை, 500 கிராமியக் கலைஞர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் நிதியுதவியை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பில், இளம் கலைஞர்களை ஊக்குவித்தல், வெளிநாடுகளில் தமிழக கலைகளை பரப்புதல், கலைச்சேவை புரிந்த கலைஞர்களுக்கு மாநில அளவில் கலைமாமணி விருது வழங்குதல், அரிய கலை வடிவங்களை … Read more

வரும் நவ.12-ல் இமாச்சல பிரதேசத்தில் சட்டசபை தேர்தல்…!

தேர்தல் தேதி அட்டவணையை டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்தார். இமாச்சல பிரதேச மாநிலத்தில் நவம்பர் 12-ம் தேதி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும்.இமாச்சல பிரதேச சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் அக்டோபர் 17ல் தொடங்குகிறது. அக்டோபர் 25ம் தேதி வேட்புமனுத் தாக்கல் நிறைவுபெறுகிறது. வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை அக்டோபர் 27ம் தேதி நடக்கும். வேட்புமனுவை திரும்பபெற அக்டோபர் 29ம் தேதி கடைசி நாள். பதிவான வாக்குகள் டிசம்பர் 8ம் தேதி எண்ணப்படும். … Read more

அக்.17, 18-ம் தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் வரும் 17-ம் தேதியும், தென் மாவட்டங்களில் 18-ம் தேதியும் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் 4 நாட்களுக்கு இடி, மின்னலுடன் லேசானது … Read more

சிறுத்தை உயிரிழப்பு: ரவீந்திரநாத் எம்.பி-யை விசாரிக்க அனுமதி கோரி சபாநாயகருக்கு வனத்துறை கடிதம்

சிறுத்தை உயிரிழப்பு: ரவீந்திரநாத் எம்.பி-யை விசாரிக்க அனுமதி கோரி சபாநாயகருக்கு வனத்துறை கடிதம் Source link

ராசிபுரம் அருகே ஆயிரக்கணக்கான அட்டை பூச்சிகள் வீடுகளுக்குள் படையெடுப்பதால் பொதுமக்கள் கடும் அவதி..!!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த மங்களபுரம் ஊராட்சியில் தாண்டாகவுண்டம் பாளையம் உள்ளது. இங்கு சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ராசிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதிகள் எங்கும் பச்சைபசேலென பச்சை நிற போர்வை போல காட்சியளிக்கிறது. இதற்கிடையே, தொடர் மழை காரணமாக தண்டாகவுண்டம் பாளையம் அருகில் உள்ள மலைப் பகுதியிலுள்ள மரங்களில் இருந்து மர அட்டைகள் எனப்படும் சிவப்பு அட்டை … Read more

சாலையின் மறுபக்கம் செல்ல முயன்ற நபர் தவறி விழுந்து லாரியின் சக்கரத்தில் சிக்கி உயிரிழப்பு..!

திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையத்தில் சென்டர் மீடியனில் ஏறி, சாலையின் மறுபுறம் செல்ல முயன்ற நபர், கால் இடறி தவறி விழுந்ததில், லாரியின் சக்கரத்தின் சிக்கி உயிரிழந்த பதைபதைக்கும் காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது. பனியன் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வந்த காங்கேயத்தைச் சேர்ந்த மகாதேவன், நேற்று மதியம் தனது நண்பருடன், சாலை விதிகளை மீறி, சென்டர் மீடியனில் ஏறி சாலையின் மறுபக்கம் செல்ல முயன்றார். அப்போது கால் இடறி கீழே விழுந்த மகாதேவன் மீது அவ்வழியாக வந்த லாரியின் … Read more

எம்ஏஎம்ஆர்.முத்தையாவை சுவீகாரம் எடுத்தது செல்லாது – இளையாத்தங்குடி கைலாசநாதர் சுவாமி கோயில் டிரஸ்ட் அறிவிப்பு

செட்டிநாடு குழும தலைவரான எம்.ஏ.எம்.ஆர்.முத்தையாவை மறைந்த எம்.ஏ.எம்.ராமசாமி செட்டியார் சுவீகாரம் எடுத்தது செல்லாது என இளையாத்தங்குடி ஸ்ரீகைலாசநாத சுவாமி நித்யகல்யாணி அம்மன் தேவஸ்தானம் முறைப்படி மீண்டும் அறிவித்திருக்கிறது. செட்டிநாடு குழுமத்தின் முன்னாள் தலைவரான எம்.ஏ.எம்.ராமசாமி செட்டியார் ஒக்கூரைச் சேர்ந்த ஐயப்பன் செட்டியார் என்பவரை சுவீகாரம் எடுத்திருந்தார். செட்டிநாட்டு நகரத்தார்கள் (செட்டியார்கள்) சுவீகாரம் எடுப்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால், இதற்கென கண்டிப்பான சில விதிமுறைகளை அவர்கள் வைத்திருக்கிறார்கள். அதில் முக்கியமானது, சுவீகாரம் எடுப்பவரும் கொடுப்பவரும் ஒரேபிரிவைச் சேர்ந்தவர்களாக இருக்க … Read more

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை எதிரொலி மேட்டூர் அணையில் நீர்திறப்பு 55,000 கனஅடியாக அதிகரிப்பு

மேட்டூர்: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை வலுத்துள்ளதால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் காலை, விநாடிக்கு 28,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று பிற்பகல் 55,000 கனஅடியாக அதிகரித்தது. அணையின் நீர்மட்டம் 120 அடியாகஉள்ளது. அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால், உபரிநீர் அப்படியே காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது. காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி, வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.