தில்லு முல்லு கட்சி என்பதை நிரூபித்த திமுக – பிரேமலதா விஜயகாந்த் பேச்சு

தில்லு முல்லு கட்சி என்பதை திமுக நிருபித்துள்ளதாக தேதிமுக பிரேமலதா விஜயகாந்த் பேசியுள்ளார். விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் தேமுதிக சார்பில் முப்பெரும் விழா, தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நடைபெற்று விழாவில் பல நலத்திட்டங்களை அவர் வழங்கினார். அதனை தொடர்ந்து முப்பெரும் விழா மேடையில் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், தன்னுடைய வாழ்க்கையை சிஸ்டமேட்டிக்காக கொண்டு மக்களுக்காக தன் வாழ்க்கையை அர்பணித்தவர் தான் தலைவர் விஜயகாந்த் என்று தெரிவித்தார். மேலும் திமுக ஒரு … Read more

ஸ்டாலின் தொடங்கி வைத்த ‘சிற்பி’: மாணவர்களுக்கு எப்படி உதவுகிறது?

Chennai Tamil News: சமூகத்தில் நடக்கின்ற குற்றங்களுக்கு எதிராகவும், மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கு தேவையான அரசு விதிகளை, பள்ளி மாணவர்களுக்கு கற்பிக்க ஆரம்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு ஒரு புதிய முயற்சி எடுத்துள்ளது. சிறார் குற்றச்செயல்களை செய்யாமல் தடுக்கவும், விதிமீறல்களில் மாட்டிக்கொள்ளும் சிறுவர்களைக் கண்டறிந்து வழிகாட்டவும் மாநகர காவல்துறை ‘சிற்பி’ என்ற திட்டத்தை அறிமுகம் செய்து வைக்கிறது. சென்னையில் உள்ள 100 தமிழக அரசு சார்ந்த பள்ளிகளில் தலா 50 மாணவர்கள் என்று மொத்தம் சுமார் … Read more

அண்ணா பிறந்தநாள் | மதுரையில் முதல்வர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை

மதுரை: முன்னாள் முதல்வர் அண்ணாவின் 114-வது பிறந்தநாளையொட்டி, மதுரை நெல்பேட்டை சந்திப்பில் உள்ள அண்ணாவின் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த புகைப்படத்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். தமிழக முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்ததினத்தையொட்டி, அரசுப்பள்ளி மாணவர்களுக்கான காலை சிற்றுண்டித் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று மதுரையில் தொடங்கி வைத்தார். முன்னதாக மதுரை நெல்பேட்டை சந்திப்பு பகுதியில் உள்ள அண்ணாவின் திருவுருவச்சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த அவரது படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை … Read more

பேரறிஞர் அண்ணாவின் பயணத்தை நாங்கள் தொடர்கிறோம் – மக்கள் நீதி மய்யம்

திராவிட முன்னேற்ற கழகத்தை உருவாக்கியவர் பேரறிஞர் அண்ணா. இரண்டு வருடங்கள் மட்டுமே தமிழ்நாட்டை அவர் ஆட்சி செய்திருந்தாலும் பல தரமான செயல்களை செய்தார். இதனால் அவர் மக்கள் மனதில் நிரந்தரமாகிவிட்டார். இன்று பேரறிஞர் அண்ணாவுக்கு 114ஆவது பிறந்தநாள் ஆகும். இதனையொட்டி தமிழ்நாடு முழுவதும் அவரது பிறந்தநாள் விமரிசையாக கொண்டாடப்பட்டு அவரை பலர் நினைவுகூர்ந்துவருகின்றனர். இந்நிலையில் அண்ணாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ள மக்கள் நீதி மய்யம், “’பல்வேறு மக்கள் வாழும் பரந்த நிலப்பரப்பான இந்தியாவில் ஒரே ஆட்சி … Read more

குவைத் நாட்டில் சுட்டுக்கொல்லப்பட்ட திருவாரூரை சேர்ந்த முத்துக்குமரன் உடல் நாளை தமிழகம் வருகிறது..!!

குவைத்: குவைத் நாட்டில் சுட்டுக்கொல்லப்பட்ட திருவாரூரை சேர்ந்த முத்துக்குமரன் உடல் நாளை திருச்சி விமான நிலையம் கொண்டு வரப்படுகிறது. திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் அருகே உள்ள லெட்சுமாங்குடி பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமரன். இவருக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர். சொந்த ஊரில் சிறு கடை வைத்து, தொழில் செய்து வந்த நிலையில், நட்டம் ஏற்பட்டதால் கடையை மூடிவிட்டார். வறுமையில் சிக்கித் தவித்த முத்துக்குமரன் வெளிநாடு சென்று வாழ்வாதாரத்தை தேடி கொள்ளலாம் என்று முடிவு செய்து, தனியார் முகவரிடம் … Read more

இந்துக்கள் குறித்து அவதூறு பேசியதாக திமுக எம்பி ஆ.ராசா மீது எஸ்பியிடம் பாஜக புகார்

இந்துக்கள் பற்றி தரக்குறைவாக பேசியதாக திமுக எம்பி ஆ.ராசா மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமநாதபுரம் மாவட்ட பாஜக சார்பில் அதன் மாவட்ட பொதுச்செயலாளர் ஆத்ம கார்த்திக், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.தங்கதுரையிடம் புகார் மனு அளித்தார். பாஜக மாவட்டத் தலைவர் கதிரவன், நகராட்சி கவுன்சிலர் குமார் உள்ளிட்ட கட்சியினர் உடனிருந்தனர். இதுகுறித்து பாஜக மாவட்டத் தலைவர் கதிரவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திமுக எம்பி ஆ.ராசா, தொடர்ந்து இந்து மதத்தை பற்றி … Read more

ஆவடி: விமானப்படை வீரர் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை

ஆவடி அருகே முத்தாபுதுப்பேட்டை பகுதியில் இந்திய விமானப்படை பயிற்சி மையம் அமைந்துள்ளது. இங்கு வீரர்களுக்கு டெக்னீசியன் மற்றும் சட்டம் தொடர்பான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இங்கு ஆண்டுக்கு இரு முறை பயிற்சி முடித்த வீரர்களை இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு பாதுகாப்பு பணிக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். இங்கு குஜராத் மாநிலம், கொடிநூர் மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயதான நீரோவ் சௌஹான் என்ற வீரர், Assistant air craft man பதவியில் கடந்த ஆண்டு பணிக்கு சேர்ந்துள்ளார். இவருக்கு … Read more

உணவு எடுத்து செல்லும் வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

மதுரை: அரசுப்பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு வழங்கும் திட்டத்தில் உணவு எடுத்து செல்லும் வாகனங்களை கொடியசைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மதுரை நெல்பேட்டையில் உள்ள மைய சமையல் கூடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.

இந்து மதத்தினரை சர்ச்சைக்குறிய வகையில் பேசிய ஆ.ராசாவை கைது செய்யக்கோரி பாஜகவினர் புகார்

இந்து மதத்தை குறித்து சர்ச்சைக்குரிய விதமாக பேசியதாக திமுக எம்.பி ஆ.ராசாவை கைது செய்யக்கோரி பாஜக சார்பில் மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், திமுக எம்.பி யும், திமுக துணை பொது செயளாலருமான ஆ.ராசா இந்து மதத்தை கொச்சைப்படுத்தும் விதமாக இந்து மதத்தை சேர்ந்தவர்கள் அனைவரும் வேசிகளின் மகன்கள் என சர்ச்சைக்குரிய விதமாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் இந்துக்களை கொச்சைப்படுத்தும் விதமாக சர்ச்சைக்குரிய வகையில் … Read more

இந்தி தினம்: இந்தியின் அந்தஸ்து குறித்த விவாத வரலாறு

இந்தியை சுதந்திர இந்தியாவின் அலுவல் மொழியாக மாற்றுவதற்கான வாய்ப்பு, பல்வேறு மொழிகள், எழுத்து வடிவங்கள் மற்றும் பேச்சுவழக்குகளைக் கொண்ட நாட்டில் ஒருங்கிணைக்கும் சக்தியைக் கண்டறிய வேண்டியதன் அவசியத்தில் வேரூன்றியுள்ளது. ஆண்டுதோறும் இந்தி தினம் கொண்டாட்டம் செப்டம்பர் 14, 1949 அன்று, இந்திய அரசியலமைப்புச் சபை இந்தியை மத்திய அரசின் அலுவல்பூர்வமான மொழியாக்க முடிவெடுத்த நாளை நினைவுகூருகிறது. அதே நேரத்தில், அதில், ஆங்கிலம் 15 ஆண்டுகளுக்கு இணை மொழி என்ற அந்தஸ்த்தில் வைத்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளது. முன்ஷி-அய்யங்கார் … Read more