அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி டிஜிபி அலுவலகத்தில் புகாா்

வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ராமச்சந்திரன் தீண்டாமை செயலில் ஈடுபட்டதாகவும் அவர்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறவர் சமுதாய மக்கள் சார்பாக டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தமிழக டிஜிபி அலுவலகத்தில் வனவேங்கைகள் கட்சியின் தலைவர் இரணியன் என்பவர் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் தான் குறவர் சமுதாயத்திற்கு தமிழக அரசிடம் சமூக பிரதிநிதித்துவம் வேண்டி உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தி வந்துள்ளதாக அதில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மனு ஒன்றை கடந்த 23 ஆம் … Read more

முக்கிய நட்பு நாடு பட்டியலில் இருந்து ஆப்கானிஸ்தான் நீக்கம்! ஜோ பைடன் அறிவிப்பு

கடந்த 2012-ம் ஆண்டு, அமெரிக்கா ஆப்கானிஸ்தானை ஒரு முக்கிய நேட்டோ அல்லாத (எம்என்என்ஏ) நட்பு நாடாக அறிவித்திருந்து. இதனால் இரு நாடுகளுக்கும் பாதுகாப்பு மற்றும் பொருளாதார உறவைப் பேணுவதற்கான வழியை உருவாக்கியது. இந்த பதவி ஆப்கானிஸ்தானுக்கு பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பான உதவி மற்றும் உபகரணங்களின் அடிப்படையில் பல வசதிகள் மற்றும் சலுகைகளை வழங்கியது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் வெளியேறின. அதன் பின்னர் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். … Read more

10 டன் ஆப்பிரிக்கன் கெளுத்தி ரக மீன்கள் காரிமங்கலம் அருகே அழிப்பு

தருமபுரி: ஆப்பிரிக்கன் கெளுத்தி என்ற ரகத்தை சேர்ந்த மீன்கள் நீர்வாழ் பாரம்பரிய உயிரினங்களை மொத்தமாக உண்டு அழிக்கும் குணம் கொண்டவை. மேலும், இவ்வகை மீன்களை உணவாக உட்கொள்வோருக்கும் பல்வேறு ஆரோக்கிய பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. எனவே, இவ்வகை மீன்களை வளர்ப்பது, விற்பனை செய்வது ஆகியவற்றுக்கு தமிழக அரசு தடை அறிவித்துள்ளது. அதன்படி, தருமபுரி மாவட்டத்தில் இவ்வகை மீன்கள் வளர்ப்போரை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதன்பேரில், மீன்வளத்துறை, வருவாய் துறை, காவல்துறை உள்ளிட்ட அரசுத் துறையினர் … Read more

தாம்பரத்தை சேர்ந்த பிரபல ரவுடி சச்சின் துப்பாக்கியால் சுட்டு கைது!

தாம்பரம் அருகே உள்ள சோமங்களம் பகுதியில் துப்பாக்கி முனையில் சரித்திர பதிவேடு குற்றவாளி சச்சின் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். முழங்காலக்கு கீழே இரண்டு முறை போலீசார் சுட்டதில் காலில் காயம் ஏற்பட்டு சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டுள்ளார்.  தாம்பரத்தை சேர்ந்த பிரபல ரவுடி சச்சின் இவர் சென்னை மீனம்பாக்கம் பகுதியில் உள்ள கல்லூரியில் படித்து பட்டம் பெற்ற பட்டாதாரி ஆவார். இவர் மீது சோமங்கலம் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்கள் இரண்டு … Read more

முதல் பெண் பிரதமராகிறார் ஜார்ஜியா மெலோனி!!

இத்தாலியில் கூட்டணி கட்சிகளில் ஆதரவோடு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பிரதமராக மரியோ டிராகி நியமிக்கப்பட்டர். எனினும், பொருளாதார நிலை மோசடைந்து வருவதாக எழுந்த குற்றச்சாட்டுகளை தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் பதவி விலகினார். இதனைத் தொடர்ந்து இத்தாலியில் பொதுத்தேர்தல் நடத்த முடிவானது. அதன்படி 600 உறுப்பினர்கள் கொண்ட இத்தாலி நாடாளுமன்றத்துக்கு நேற்று தேர்தல் நடந்தது. நாடு முழுவதும் அமைக்கப்பட்டிருந்த 60 ஆயிரம் வாக்கு சாவடிகளில் மக்கள் ஆர்வமுடன் தங்களது வாக்குகளை செலுத்தினர். இரவு 11 மணி … Read more

மின்வாரிய பொறியாளர் முதல் அரசியல் ஆலோசகர் வரை: பண்ருட்டி ராமச்சந்திரனின் அரசியல் பயணம்

சென்னை: ‘பண்ருட்டி’ என்றால் பலாப்பழம் என்பது பிரபலம். ஆனால், அரசியல் வட்டாரத்தில் ‘பண்ருட்டி’ என்றாலே அறியப்படுபவர் பண்ருட்டி எஸ்.ராமச்சந்திரன். கடலூர் மாவட்டம் புலியூரில் 1937-ம் ஆண்டு நவம்பர் 10-ல் பிறந்தார் ராமச்சந்திரன். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் முடித்த அவர், மின்வாரியத்தில் இளநிலை பொறியாளராகப் பணியாற்றினார். பேரறிஞர் அண்ணா மீதான ஈர்ப்பில் திமுகவில் இணைந்த பண்ருட்டியார், 1967-ல் தனது 30-வது வயதில், பண்ருட்டி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு சட்டப்பேரவை உறுப்பினரானார். அதன்பின், திட்டமதிப்பீட்டுக் குழு … Read more

காலாண்டு விடுமுறையில் மாற்றம்.. பள்ளி கல்வித்துறை அதிரடி உத்தரவு..!!

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்து இயல்பு நிலை திரும்பியதால், நடப்பு கல்வி ஆண்டில் வழக்கம் போல், ஜூன் மாதம் முதல் நேரடி முறையில், வகுப்புகள் செயல்படத் தொடங்கியது. அது மட்டுமல்லாமல் மாணவர்களின் கல்வித்திறனை கருத்தில் கொண்டு அரசு பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளில் காலாண்டு தேர்வுகள் தொடங்கப்பட்டுள்ளன. தற்போது 1 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலாண்டு தேர்வுகள் தொடங்கி நடந்து வருகின்றன. இதற்கான வினாத்தாள்கள் பள்ளி அளவிலேயே … Read more

மோசடி, போலி பத்திர பதிவை ரத்து செய்யும் நடைமுறை: மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்

சென்னை: தமிழகத்தில் மோசடி, போலி பத்திரப் பதிவுகளை ரத்து செய்யும் வகையில் கொண்டுவரப்பட்ட சட்டம் அமலாகியுள்ள நிலையில், பதிவு ரத்தை இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். தமிழகத்தில் மோசடி, போலி, பத்திரப் பதிவுகளை தடுக்கும் வகையில், கடந்தாண்டு செப்டம்பர் மாதம் சட்டப்பேரவையில் மத்திய பதிவுச்சட்டத்தில் தமிழக அளவில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. இதன் மூலம், பதிவாளரே போலிபதிவுகள் குறித்து ஆய்வு செய்துஅவற்றை ரத்து செய்ய முடியும். இந்த சட்ட மசோதா சட்டப்பேரவையில் அறிமுகம் செய்யப்பட்ட அன்றே ஆய்வு … Read more

முதல்வரை அவதூறாக சித்தரித்து சுவரொட்டி: ஜாமீன் வழங்கி உத்தரவு!

முதல்வர் மு.க.ஸ்டாலினை அவதூறாக சித்தரித்து சுவரொட்டி ஒட்டிய விவகாரத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி பிரமாண பத்திரம் தாக்கல் செய்த இரண்டு நபர்களுக்கு நிபந்தனை முன்ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது. வடசென்னை பகுதியில் கடந்த 11ஆம் தேதி முதல்வர் ஸ்டாலினை அவதூறாக சித்தரிக்கும் வகையில் சுவரொட்டி ஒட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக துறைமுகம் கிழக்கு பகுதி கிளை செயலாளர் ராஜசேகர் அளித்த புகாரில் வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முன் ஜாமீன் … Read more

ஒரகடம்: தனியார் நிறுவனத்தின் இரவு உணவில் சுண்ணாம்புக்கல்… மயங்கி விழுந்த தொழிலாளர்கள்!

ஒரகடம் சிப்காட்டில் ஸ்டீல் ஸ்டிரிப்ஸ் வீல்ஸ் லிமிடெட் தனியார் நிறுவனத்தில் இரவு உணவு சாப்பிட்ட பத்து ஊழியர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் சிப்காட்டில் அமைந்துள்ள ஸ்டீல் ஸ்ட்ரிப்ஸ் வீல்ஸ் லிமிடெட் என்ற கார் உதிரி பாகம் தயாரிக்கும் தனியார் நிறுவனத்தில் 500க்கும் மேற்பட்டோர்  பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் இந்நிறுவனத்தில் செகண்ட் ஷிப்டில் வேலை செய்பவர்கள் 8 மணி அளவில் இரவு உணவு வழங்கப்பட்டுள்ளது. அப்போது முதலில் … Read more