நாமக்கல்: தனியார் பேருந்து மோதி தொழிலாளி உயிரிழப்பு.!

நாமக்கல் மாவட்டத்தில் தனியார் பேருந்து மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்துள்ளார். நாமக்கல் மாவட்டம் வேப்பநந்தம்புதூர் பகுதியை சேர்ந்தவர் தச்சு தொழிலாளி பொன்னுசாமி (வயது 59). இவரது மனைவி காமாட்சி. இவர்களுக்கு இரண்டு மகன்களும், இரண்டு மகள்களும் உள்ளனர். இந்நிலையில் பொன்னுசாமி நேற்று பி.மேட்டூரில் நடந்த உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்று விட்டு, இரவு வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்பொழுது சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலை ஆண்டகளூர் கேட் அருகே வந்தபோது, பின்னால் வந்த தனியார் பேருந்து … Read more

அரசுப் பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம், வரும் 15ஆம் தேதி மதுரையில் துவக்கம்

காலை சிற்றுண்டி திட்டம் – 15ந் தேதி துவக்கம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்கிறார் அரசுப் பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம், வரும் 15ஆம் தேதி மதுரையில் துவக்கப்பட உள்ளதாக தகவல் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையிலான காலை சிற்றுண்டி திட்டத்தை, செப்.15ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்க உள்ளார் Source link

சுத்துது… சுத்துது… சுத்திக்கிட்டே இருக்கு – பத்திரப்பதிவு துறையில் தொடரும் சர்வர் பிரச்சினை

தமிழகம் முழுவதும் தொடரும் சர்வர் பிரச்சினையால் பத்திரப்பதிவு தாமதமாகி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழகத்தில் மாநில அரசுக்கு அதிக வருவாய் ஈட்டித் தரும் முக்கிய துறை பத்திரப்பதிவு துறையாகும். இத்துறையில் வீட்டுமனை விற்பனை பதிவு, விவசாய நிலம் விற்பனை பதிவு, திருமண பதிவு, வில்லங்க சான்றிதழ் விண்ணப்பம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆன்லைன் வழியாக நடைபெறுகின்றன. பத்திரப்பதிவு துறையில் பதிவுக்காக பயன்படுத்தப்படும் சர்வரின் வேகம் கடந்த சில நாட்களாக குறைந்துள்ளது. பதிவுத்துறை சர்வருக்குள் நுழைந்தால் அடுத்தடுத்து பக்கங்களுக்குள் … Read more

தட்டி தூக்க போகும் ஓபிஎஸ்; தரமான சம்பவம் காத்திருக்கு!

அதிமுக தலைமை பதவியை பிடிப்பதில், மற்றும் எடப்பாடி பழனிச்சாமி இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக இதுவரை இலைமறை காயாக இருந்து வந்த பனிப்போர் மோதலாக வெடித்துள்ளது. இந்த மோதல் விவகாரம், உச்சநீதி மன்றம் வரை சென்று உள்ளது. இந்த சட்ட போராட்டத்தில் யாருக்கு வெற்றி கிடைக்கும் என்பது புரியாத புதிராக உள்ளதால், எந்த பக்கம் சாய்வது? என தெரியாமல் தொண்டர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். ஏற்கனவே கீழமை நீதிமன்றத்தில் ஓ.பி.எஸ்சுக்கு சாதகமாக தீர்ப்பு வெளியான நிலையில் … Read more

10 திமுக எம்எல்ஏக்கள் எங்களிடம் பேச்சு வார்த்தை: குண்டை தூக்கி போடும் இபிஎஸ்

திருவள்ளூர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் கே.எம்.எஸ். சிவக்குமார் இல்ல காதணி விழாவிற்கு வருகை தந்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கிரேன் மூலம் மாலை அணிவித்து சாலைகளில் பெண்கள் வரிசையாக நின்று மலர் தூவி வரவேற்பு அளித்தனர்.  அதன் பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கூறுகையில், திமுகவைச் சேர்ந்த 10 எம்எல்ஏக்கள் தன்னுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர் எனக்கூறி பரபரப்பை ஏற்படுத்தி … Read more

பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வினியோகம்: திருவண்ணாமலையில் இன்று முன்னோட்டம்

திருவண்ணாமலை: பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் வரும் 15ம் தேதி தொடங்க உள்ள நிலையில், முன்னோட்டமாக திருவண்ணாமலையில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு இன்று காலை உணவு வழங்கப்பட்டது. தமிழகத்தில் உள்ள தொடக்க பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி, சத்தான உணவு பள்ளி நாட்களில் தினமும் காலை 8.15 மணி முதல் 8.50 மணிக்குள் வழங்கப்பட உள்ளது. அதையொட்டி, நகர பகுதிகளில் தொகுப்பு சமையல் கூடமும், ஊரக … Read more

”உங்களது 10 எம்எல்ஏக்கள் எங்களுடன் பேசி வருகின்றனர்” – திமுகவுக்கு ஷாக் கொடுக்கும் இபிஎஸ்!

திமுகவின் 10 எம்.எல்.ஏ-க்கள் தங்களுடன் பேசி வருவதாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் கட்சி நிர்வாகி ஒருவரின் இல்ல விழாவில் கலந்துகொண்ட பின் இவ்வாறு தெரிவித்தார். அதன்பின் நடந்த செய்தியாளர் சந்திப்பில், அவரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டன. அவற்றுக்கு பதிலளித்த அவர், “திமுகவின் 10 எம்எல்ஏக்கள் எங்களோடு பேசி வருகின்றனர். மேயரை பின் வரிசையில் அமர வைத்தது தான் திராவிட மாடல். திமுக என்பது திராவிட மாடல் மட்டுமல்ல… கார்ப்பரேட் கட்சி, குடும்ப … Read more

சூதாட்டத்திற்கு ஸ்டாலின் அரசு துணை போகிறது: திருச்சியில் இ.பி.எஸ் பேட்டி

திண்டுக்கல்லில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட எடப்பாடி பழனிசாமி, சென்னை செல்வதற்காக திருச்சி விமான நிலையம் வந்தார். திருச்சி மாவட்ட எல்லையான வையம்பட்டியில்,500க்கும் மேற்பட்ட அதிமுகவினர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளித்து விமான நிலையம் வரை வந்து வழியனுப்பினர். விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: “அதிமுக பொதுக்குழு தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றுள்ளனர். நாங்களும் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளோம் என்றார். திமுக ஆட்சியில் உள்ளாட்சி தேர்தல் எப்படி … Read more

நீட் தேர்வு முடிவுகள் | மாணவர்களைக் கடிந்து கொள்ள வேண்டாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள்

சென்னை: “நீட் தேர்வெழுதிய உங்கள் குழந்தைகள் மருத்துவப் படிப்பிற்கு தேர்வாகவில்லை என்றால் அவர்களைக் கடிந்து கொள்வது போன்ற விஷயங்களைப் பெற்றோர் தவிர்க்க வேண்டும்” என்று தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். சென்னை சைதாப்பேட்டையில் உள்ள சந்தையை ஆய்வு செய்த பின்னர், தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், ” பெற்றோர்களுக்கு ஒரு வேண்டுகோள். நீங்கள் விரும்பியது போல, உங்கள் குழந்தைகள் மருத்துவப் படிப்பிற்கு … Read more

ஸ்டாலினுக்கு விமானத்தில் சர்ப்ரைஸ் கொடுத்த பெண்… அப்படியே கொட்டிய 90ஸ் வசனங்கள்…!

தமிழக முதல்வர் இன்றைய தினம் விமானத்தில் பயணித்த போது நடந்த நிகழ்வு மிகுந்த சுவாரஸியத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரியில் ராகுல் காந்தியின் நடைபயணத்தை தொடங்கி வைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் புறப்பட்டு சென்றுள்ளார். இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு சென்றார். அவருடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, திமுக எம்.பி டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் சென்றனர். விமான பயணத்தின் போது தனது இருக்கையில் அமர்ந்திருந்த போது முதல்வர் மு.க.ஸ்டாலின் அருகில் பெண் ஒருவர் வந்தார். அவர் வங்கி … Read more