ராகுல் காந்தி நடந்தாலும், ஓடினாலும் காங்கிரசை காப்பாற்ற முடியாது: வானதி சீனிவாசன்

இறந்து போன காங்கிரஸ் கட்சிக்கு ,ராகுல் காந்தியின் நடைபயணத்தின் மூலம்  உயிரோட்ட முடியுமா, என்று முயற்சி செய்து பார்க்கிறார்கள். ஆனால், காங்கிரஸ் கட்சி ஒரு மூழ்கிய கப்பல்,ராகுல் காந்தி நடந்தாலும் சரி ,ஓடிபோனாலும் சரி ,மாரத்தான் செய்தாலும் சரி அது எந்த பயனையும் தராது என பாஜக தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் தெரிவித்தார். தேசிய கைத்தறி நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு, கோவை மக்கள் சேவை மையத்தின் சார்பாக, கோவை குனியமுத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் … Read more

புலிக் குட்டி விற்பனை செய்ய முயன்ற இரண்டு பேர் கைது; வனத்துறையினர் அதிரடி விசாரணை!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியை சேர்ந்த பார்த்திபனும், சென்னை அம்பத்தூரை சேர்ந்த தமிழ் என்பவரும் புலிக் குட்டி விற்பனை செய்ய முயன்ற விவகாரத்தில்  கைது செய்யப்பட்டுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன். இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது வாட்ஸ்ஆப் ஸ்டேட்டசில் புலிக் குட்டி விற்பனைக்கு உள்ளது என்றும், அதன் விலை ரூ.25 லட்சம் என்றும் தெரிவித்துள்ளார். இது குறித்து தகவலறிந்த தலைமை வனத்துறையினர், வேலூர் மாவட்ட வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதன்படி … Read more

“இந்தியாவை ஆதிக்கத்தில் இருந்து விடுவிக்கும் அரும்பணி” – ராகுல் பயணத்துக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: “ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமைப் பயணம் வெற்றிபெற வாழ்த்துகள்” என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி, அகில இந்திய அளவில் கட்சியை பலப்படுத்தவும், தொண்டர்களை உற்சாகமடையச் செய்யவும் ‘பாரத் ஜோடோ யாத்ரா’ என்ற இந்திய ஒற்றுமை நடைபயணத்தை மேற்கொள்கிறார். கன்னியாகுமரியின் காந்தி மண்டபம் நுழைவுவாயிலில் இருந்து தொடங்கும் இந்த நடைபயணத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின், தேசியக் கொடியை வழங்கி தொடங்கி வைத்தார். இதற்காக காந்தி மண்டபம் வந்த முதல்வர் ஸ்டாலின், … Read more

ஓணம் பண்டிகை… பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வெளியான ஷாக் அறிவிப்பு!

கேரள மாநிலத்தின் பாரம்பரிய திருவிழாவான ஓணம் பண்டிகை நாளை (செப்., 8) கொண்டாடப்பட்டுள்ளது. இந்த விழாவையொட்டி கேரள தேசம் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. கேரள- தமிழக எல்லை மாவட்டங்களான கோவை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் ஓணம் திருவிழா களைகட்டி உள்ளது.மலையாள மக்கள் குறிப்பிட்ட அளவு வசிக்கும் தலைநகர் சென்னையில் ஓணம் கொண்டாட்டங்கள் இப்போதே தொடங்கிவிட்டன. இந்த விழாவை முன்னிட்டு சென்னை, கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு ஏற்கெனவே நாளை (செப்.,8) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. அதனை … Read more

தமிழக பள்ளி கல்வித் துறைக்கு 4 ஆண்டுகளுக்கு ரூ 7000 கோடி ஒதுக்கீடு: கல்வி அமைச்சர்

தருமபுரி: பள்ளி கல்வித் துறைக்கு வரும் நான்கு ஆண்டுகளுக்கு ரூ 7000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். தருமபுரியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் இவ்வாறு தெரிவித்தார். முன்னதாக, தருமபுரி அரசு மருத்துக் கல்லூரி கலையரங்கில் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள கல்வி அதிகாரிகளுடனான மண்டல அளவிலான இரண்டாம் கட்ட ஆலோனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக வேளாண்மை துறை அமைச்சர் … Read more

சேலத்தில் பிரசித்தி பெற்ற சுகவனேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

சேலம்: சேலத்தில் பிரசித்தி பெற்ற சுகவனேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர். சேலம் டவுனில் பழமைவாய்ந்த பிரசித்தி பெற்ற சுகவனேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் கடந்த 1998ம் ஆண்டுக்கு பின்னர், 24 வருடங்கள் கழித்து நடப்பாண்டு கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக கடந்த 2018 மற்றும் 2019ம் ஆண்டுகளில் இருகட்டமாக பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணிகள் தொடங்கியது. இதனையடுத்து கிழக்கு, மேற்கு ராஜகோபுரங்கள், மூலவர் விமானங்கள், … Read more

கல்லூரி மாணவி கொடுத்த பாலியல் புகார்: 13 வயதிலிருந்தே மாணவியை துன்புறுத்திய எஸ்.ஐ கைது!

சென்னையில் சிறுமி ஒருவருக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்தப் புகாரில், காவல் உதவி ஆய்வாளர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். சென்னை ஆலந்தூர் காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் உதவி ஆய்வாளர் பாண்டியராஜ் (50). சென்னை மாநகர காவல் துறையில் விஐபிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் பாதுகாப்பு பிரிவில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவர் வில்லிவாக்கத்தைச் சேர்ந்த கணவனை பிரிந்தப் பெண் ஒருவருடன், கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக திருமணத்தை மீறிய உறவில் இருந்து … Read more

யார் பிளவு சக்தி? – ராகுல் பயணத்தை விமர்சித்த அண்ணாமலைக்கு ப.சிதம்பரம் பதிலடி

திண்டுக்கல்: “அன்று வெள்ளையனே வெளியேறு என்று சொல்வதிலும் ஆர்வம் கிடையாது. இன்று இந்தியாவை ஒற்றுமைப்படுத்த வேண்டும் என்று சொல்வதிலும் ஆர்வம் கிடையாது. யார் பிளவு சக்தி என்று இதிலிருந்து தெரிகிறது” என்று ராகுல் காந்தியின் ஒற்றுமைப் பயணத்தை விமர்சித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் பதிலடி தந்துள்ளார். திண்டுக்கல்லில் காங்கிரஸ் நிர்வாகியின் இல்ல திருமண விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் … Read more

‘வெள்ளையனே வெளியேறு’ என்று சொன்னது போல், பாஜக-வை ஆட்சியில் இருந்து வெளியேற்ற வேண்டும்..! – ப.சிதம்பரம் பேச்சு..!

தேச ஒற்றுமை யாத்திரை பொது கூட்டத்தில் பாஜக வை விமர்சித்து காங்கிரஸ் எம்.பி. ப.சிதம்பரம் பேசியுள்ளார். இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவும், காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தவும் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை `பாரத் ஜோடோ யாத்ரா’ என்ற பெயரில் நடைபயணம் மேற்கொள்கிறார். கன்னியாகுமரியில் பாதயாத்திரை தொடங்கும், ராகுல் காந்தி 12 மாநிலங்கள் 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக மொத்தம் 150 நாட்கள் 3,500 கிலோ மீட்டர் தூரம் … Read more

காங்கிரஸ் மூழ்கிய கப்பல்: ராகுலின் பாதயாத்திரை கட்சியை காப்பாற்றாது: வானதி சீனிவாசன்

கோவை: காங்கிரஸ் கட்சி ஒரு மூழ்கிய கப்பல், ராகுல் காந்தி நடந்தாலும், ஓடினாலும் சரி எந்த பயனையும் தராது என்று பாரதிய ஜனதா கட்சியின் எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் காங்கிரஸ் கட்சியை சாடியுள்ளார். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை பயணத்தை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கன்னியாகுமரியில் காந்தி மண்டபத்திலிருந்து தொடங்கினார். காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவும், தொண்டர்களிடையே எழுச்சியை ஏற்படுத்தவும்  ‘பாரத் ஜோடோ யாத்ரா’ என்ற பெயரில் இந்த … Read more