ஐசிசி-ன் தலைவர் பதவிக்கு போட்டியிடும் கங்குலி.. அப்போ பிசிசிஐ-யின் புதிய தலைவர் யார் ?

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக கடந்த 2019-ம் ஆண்டு சவுரவ் கங்குலியும், செயலாளராக அமித்ஷாவின் மகன் ஜெய் ஷாவும் தேர்வானார்கள். இவர்களது பதவிக்காலம் முடிவுக்கு வந்துள்ளது. இந்த நிலையில், இந்தப் பதவிகளுக்கான தேர்தல் வரும் 18-ம் தேதி பிசிசிஐ-யின் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் நடத்தப்பட உள்ளது. இதில் புதிய தலைவராக கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த 67 வயதான ரோஜர் பின்னி, பிசிசிஐ-யின் 36-வது தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார். அதேவேளையில், ஜெய் ஷா 2வது முறையாக பிசிசிஐ … Read more

கடந்த 5 மாதங்களில் ரயில் பயணிகளிடம் திருடப்பட்ட ரூ.1.30 கோடி மதிப்பு பொருட்கள் மீட்பு: டிஜிபி உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார்

சென்னை: கடந்த 5 மாதங்களில் ரயில் பயணிகளிடம் திருடப்பட்ட ரூ.1.30 கோடிமதிப்பிலான பொருட்களை ரயில்வே போலீஸார் மீட்டனர். அவற்றை டிஜிபி சைலேந்திரபாபு உரிமையாளர்களிடம் நேற்றுஒப்படைத்தார். தமிழகம் முழுவதும் ரயில் பயணிகளிடம் திருடப்பட்ட நகைகள், செல்போன்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு சென்னை பெரம்பூர் ரயில்வே திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. திருச்சி, சென்னை ரயில்வே காவல்மாவட்டங்களில் கடந்த 5 மாதங்களில் ரூ.96 லட்சம் மதிப்புள்ள தங்கநகைகள், ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 156 செல்போன்கள், ரூ.1லட்சத்து … Read more

எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமான கான்ட்ராக்டர் வீட்டில் ஐ.டி. ரெய்டு: பல கோடி மதிப்பிலான ஆவணங்கள் சிக்கின

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் எடப்பாடி பழனிச்சாமியின் நெருங்கிய ஒப்பந்ததாரரின் பாண்டித்துரையின் புதுக்கோட்டை வீடு, அலுவலகத்தில் 10 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.புதுக்கோட்டையை சேர்ந்தவர் பாண்டித்துரை (47). நெடுஞ்சாலைத்துறை அரசு ஒப்பந்ததாரர். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் அவரது தந்தை மாணிக்கம் நெடுஞ்சாலை துறையில் பணியாற்றி வந்தார். இதில் அவர் உயிரிழந்ததை தொடர்ந்து வாரிசின் அடிப்படையில் பாண்டித்துரை நெடுஞ்சாலை துறையில் இளநிலை உதவியாளராக பணியில் சேர்ந்தார். பின்னர் புதுக்கோட்டையில் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட அலுவலகத்தில் … Read more

தமிழகத்தில் இந்த 16 மாவட்டங்களிலும் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் இன்று 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரிக்கடல் பகுதிகளில் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், மதுரை, கரூர், ஈரோடு, நாமக்கல், சேலம், திருச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், … Read more

5G software update on phones: ஆப்பிள் முதல் சாம்சங் வரை.. எப்போது சாப்ட்வேர் அப்டேட் கிடைக்கும்? விவரம் உள்ளே!

5G software update on phones: ஆப்பிள் முதல் சாம்சங் வரை.. எப்போது சாப்ட்வேர் அப்டேட் கிடைக்கும்? விவரம் உள்ளே! Source link

டிஎன்பிஎஸ்சி-யில் சிறைத்துறையில் வேலைவாய்ப்பு .. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.!

சிறைத் துறையில் காலியாக உள்ள சிறை அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும். தமிழக சிறைத் துறையில் காலியாக உள்ள சிறை அதிகாரி பணியிடங்களுக்கு தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி இன்று அக்டோபர் 13-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவித்துள்ளது. இதில் காலியாக உள்ள சிறை அதிகாரி ஆண் 6 மற்றும் சிறை அதிகாரி பெண் 2 பணிக்கு டி.என்.பி.எஸ்.சி. தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கான … Read more

மக்களே கவனம்..!! தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு 16 மாவட்டங்களில் கனமழை..!!

குமரிக்கடல் பகுதிகளில் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று (அக். 13) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், மதுரை, கரூர், ஈரோடு, நாமக்கல், சேலம், திருச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை அக்டோபர் … Read more

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு | மாணவர்களுக்கான ‘குட்டி காவலர்’ திட்டம் – முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார்

சென்னை: சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை பெற்றோர், குடும்பத்தினர், நண்பர்களிடம் பரப்பும் வகையில், கோவையில் ‘ குட்டி காவலர் ’ திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொலி வாயிலாக தொடங்கிவைத்தார். இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: இளம் பள்ளிக் குழந்தைகளுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து, நன்கு வடிவமைக்கப்பட்ட பாடத் திட்டத்தின் மூலம் கற்பித்து, அவர்களை சாலை பாதுகாப்பு தூதுவர்களாக மாற்றுவதே குட்டி காவலர் திட்டத்தின் நோக்கமாகும். தமிழக அரசு மற்றும் கோவை … Read more

50 ஆண்டுகளுக்கு முன்பு திருடுபோன தமிழக சிலைகள் அமெரிக்காவில் கண்டுபிடிப்பு: மீட்டு கொண்டு வர நடவடிக்கை

தஞ்சாவூர்: மன்னார்குடி அருகே 50 ஆண்டுகளுக்கு முன்பு திருட்டு போன 2 சிலைகள் அமெரிக்காவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சிலைகளை மீட்டு கொண்டு வர போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே ஆலத்தூர் கிராமத்தில் வேணுகோபாலசாமி கோயில் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோயிலில் விஷ்ணு, ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய 3 சிலைகள் திருடப்பட்டு உள்ளதாக கடந்த 2017ம் ஆண்டு விக்கிரபாண்டியம் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கு விசாரணை சிலை கடத்தல் … Read more