சூளைமேனி கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையமாக மாறிய சமுதாய நலக்கூடம்

ஊத்துக்கோட்டை:  சூளைமேனி கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையமாக சமுதாய கூடம் மாறியுள்ளது.  இதனால் இப்பகுதியில் புதிய நெல் கொள்முதல் நிலையம் அமைத்து, சமுதாய கூடத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஊத்துக்கோட்டை அருகே எல்லாபுரம் ஒன்றியம் சூளைமேனி ஊராட்சியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த கிராமத்தில் உள்ள ஏழை, எளிய மக்கள் தங்கள் வீடுகளில் நடைபெறும் திருமணம், நிச்சயதார்த்தம், காதணி விழா, மஞ்சள் நீராட்டு விழா போன்ற … Read more

காணாமல்போனதாகக் கூறப்பட்ட மாணவி கிணற்றில் சடலமாக மீட்பு: கொலையா தற்கொலையா?- போலீஸ் விசாரணை

காணாமல்போனதாக கூறப்பட்ட பள்ளி மாணவி கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் விழுப்புரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் தாலுகா கொடுக்கன்குப்பம் கிராமத்தில் வசித்து வருபவர் கலைச்செல்வன். இவருடைய மகள் ராஜேஸ்வரி (15) மேல்மலையனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருவதாகவும், அவரை கடந்த ஐந்தாம் தேதி முதல் காணவில்லை எனவும் 6ஆம் தேதி செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்திருந்தார். இந்நிலையில் காணமல் போன ராஜேஸ்வரி இன்று கொடுக்கன்குப்பம் கிராமத்தில் … Read more

சென்னையில் எங்கு தண்ணீர் தேங்கினாலும் அப்புறப்படுத்த மோட்டார் பம்புகள் தயார்: அமைச்சர் கே.என்.நேரு

சென்னை: “சென்னையில் மழைநீர் தேங்குவதைத் தடுக்க 741 இடங்களில் மோட்டார் பம்புகள் தயார் நிலையில் இருப்பதாகவும், எந்த இடத்தில் தண்ணீர் தேங்கினாலும் அதனை அப்புறப்படுத்த பம்புகள் தயாராக இருக்கிறது” என்றும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார். சென்னை ராயபுரம் மண்டலம், வார்டு 52 மற்றும் 53 போஜராஜன் நகர், கண்ணன் தெருவை இணைக்கும் வகையில் ரூ13.40 கோடி மதிப்பில் ரயில்வே வாகன சுரங்கப் பாதை அமைக்கும் திட்டப் பணியினை தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு … Read more

உணவு மற்றும் குடிநீரின்றி தனுஷ்கோடி மணல் திட்டில் 2 நாளாக தவித்த குடும்பம் மீட்பு

ராமேஸ்வரம்: இலங்கையில் இருந்து தனுஷ்கோடி மணல் திட்டு பகுதியில் இறக்கி விடப்பட்டு 2 நாட்களாக தவித்த குடும்பத்தினர் 5 பேரை மரைன் போலீசார் மீட்டனர். இலங்கை, தலைமன்னார் கடற்கரையில் இருந்து படகில் வந்த ஐந்து இலங்கை தமிழர்கள், தனுஷ்கோடி கடலில் உள்ள நான்காம் மணல் திட்டில் தவித்துள்ளனர். தகவலறிந்து மரைன் போலீசார் நாட்டுப்படகில் சென்று அவர்களை மீட்டு வந்தனர்.  விசாரணையில் இலங்கை மன்னார் தாழ்வுகாடு பகுதியை சேர்ந்த சபரி கூறுகையில், நான் எனது மனைவி ராதிகா, 7 … Read more

அல்லாடும் மீனவக் குடும்பம் – சிறுநீரகம் செயலிழந்த மகளை காப்பாற்ற உதவிக்கரம் நீட்டுமா அரசு?

ராமேஸ்வரத்தில் இரண்டு சிறுநீரகம் செயலிழந்து உயிருக்கு போராடிவருகிறார் இளம்பெண். மகளின் உயிரைக் காப்பாற்ற தனது சிறுநீரகத்தை தானமாக கொடுக்க தந்தை முன்வந்துள்ளார். ஆனால் மருத்துவ செலவிற்கு பணம் இன்றி இந்த மீனவ குடும்பம் தவித்து வருவதாகவும், அரசு உதவிக்கரம் நீட்டவும் கோரிக்கை விடுத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த கரையூர் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமா – பிரியா தம்பதியருக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி இரண்டு வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் மீனவர் … Read more

“திருப்பூர் காப்பகம் மூடல்; நிர்வாகி மீது குற்ற நடவடிக்கை” – நேரில் ஆய்வு செய்த அமைச்சர் கீதா ஜீவன்

திருப்பூர்: “திருப்பூர் தனியார் காப்பகத்தின் அஜாக்கிரதையாலும், மெத்தனப்போக்கினாலும், குழந்தைகள் மீது சரியாக கவனம் செலுத்தாத காரணத்தினாலும்தான் குழந்தைகள் இறப்பு ஏற்பட்டிருக்கிறது. காப்பகத்தை மூடவும், நிர்வாகி மீது சட்டப்படி குற்ற நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் தமிழக சமூக நலத் துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். திருப்பூர் குழந்தைகள் காப்பகத்தில் தமிழக சமூக நலத் துறை அமைச்சர் கீதா ஜீவன் இன்று நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “குழந்தைகள் இறந்த அந்தக் … Read more

’’கர்ப்பிணிகள் வீடுகளில் பிரசவம் பார்த்தால்…’’ – மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா எருக்கூர் கிராமத்தை சேர்ந்த ஜான் கிருஸ்டோபர் மனைவி பெலுசியா கடந்த 4-ஆம் தேதி வீட்டிலேயே பிரசவித்ததால், தாய் மற்றும் சேய் உயிருக்கு ஆபத்து விளைவிக்;கும் வகையில் செயல்பட்டதாக ஜான் கிருஸ்டோபர், அவருக்கு உதவிய இயற்கை நலம் தன்னார்வ தொண்டு நிறுவனர் ஆகியோர் மீது கொள்ளிடம் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ள நிலையில், வீடுகளிலேயே பிரசவம் பார்ப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா … Read more

பணிநீக்கம் செய்யப்பட்ட சுங்கச்சாவடித் தொழிலாளர்களுக்கு பதிலாக வடமாநிலத் தொழிலாளர்கள்: சீமான் கண்டனம்

சென்னை: “பல ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் சுங்கச்சாவடித் தொழிலாளர்களை விதிகளுக்கு மாறாக, நீக்கி அறிவித்துவிட்டு, அவர்களுக்குப் பதிலாக வடமாநிலத் தொழிலாளர்களைப் பணியமர்த்த முனைவதென்பது கடும் கண்டனத்திற்குரியது” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “உளுந்தூர்பேட்டையிலுள்ள செங்குறிச்சி சுங்கச்சாவடி, பெரம்பலூரிலுள்ள திருமாந்துறை தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடி ஆகியவற்றில் பணிபுரிந்து வந்த தொழிலாளர்கள் 54 பேரை தான்தோன்றித்தனமாக பணிநீக்கம் செய்திருக்கும் சுங்கச்சாவடி நிர்வாகத்தின் நடவடிக்கை அப்பட்டமான விதிமீறலாகும். பல … Read more

கொலை வழக்கில் பிரபல ரவுடி ராக்கெட் ராஜா கேரளாவில் கைது – நெல்லை காவல்துறை அதிரடி!

தென் மாவட்டங்களில் பிரபல ரவுடியான ராக்கெட் ராஜா திருவனந்தபுரம் விமான நிலையத்தில் வைத்து நெல்லை மாவட்ட போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே மஞ்சங்குளத்தைச் சேர்ந்த முத்து என்பவரின் மகன் சாமித்துரை (26) என்பவர், கடந்த 29.07.2022-அன்று முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் குறித்து நாங்குநேரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில் நடுநந்தன்குளத்தைச் சேர்ந்த விக்டர் (23), கோதைசேரியைச் சேர்ந்த முருகேசன் (23), தச்சநல்லூர், தாராபுரத்தை சேர்ந்த சஞ்ஜிவ்ராஜ்(25), ஶ்ரீராம்குமார் … Read more

பிரபல WWE வீராங்கனை திடீர் மரணம்!! ரசிகர்கள் அதிர்ச்சி..!!

அமெரிக்காவை சேர்ந்த சாரா லீ, 2015-ல் டபிள்யூடபிள்யூஇ ரியாலிட்டி காம்பிடிஷன் சீரிஸில் Tough Enough பட்டத்தை வென்றார். அதன்பிறகு NXT தொடரிலும் ஒப்பந்தமானார். அடுத்தடுத்த வெற்றிகள் மூலமாக சாரா ஏராளமான ரசிகர்களை கவர்ந்தார்.கடந்த 2017-ம் ஆண்டு முன்னாள் மல்யுத்த வீரர் வெஸ்டின் பிளேக்கை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், நேற்று சாரா மரணமடைந்திருப்பதாக அவரது தாய் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த அறிவிப்பில்,”கனத்த இதயத்துடன் இந்த செய்தியை உங்களிடம் பகிர்கிறேன், … Read more