பூச்சிமருந்து பாட்டிலில் தண்ணீர் ஊற்றிக் குடித்த 3 சிறுமிக்கு நேர்ந்த நிலை ..!!

விருதுநகர் மாவட்டம், காரியாப்பட்டி அருகே உள்ள அரசகுலம் கிராமத்தில் வசித்து வருபவர் ராமு (33). விவசாயியான இவருக்கு மனைவி மற்றும் சஞ்சனா (3) என்ற பெண் குழந்தை உள்ளது. சம்பவத்தன்று தோட்டத்தில் பயிர்களுக்கு பூச்சிக்கொல்லி மருந்தினைத் தெளிக்க தன் மனைவி மற்றும் மகள் சஞ்சனாவுடன் சென்றார். அப்போது பூச்சிக்கொல்லி மருந்தில் தண்ணீர் சேர்த்து ஸ்பிரேயரில் ஏற்றி முதுகில் கட்டிக்கொண்டு ராமு பயிர்களுக்கு தெளிக்கச் சென்றார். பூச்சிக்கொல்லி மருந்தின் காலி பாட்டிலை அங்கேயே போட்டுவிட்டுச் சென்றதாக தெரிகிறது. அப்போது … Read more

தூய்மைப் பணியாளர்களின் வருகை பதிவேட்டில் மோசடி: திருப்பூர் மாநகராட்சி சுகாதார அலுவலர் பணியிடை நீக்கம்

திருப்பூர்: தூய்மைப் பணியாளர்களின் வருகை பதிவேட்டில் குளறுபடி செய்த திருப்பூர் மாநகராட்சி 2-வது மண்டல சுகாதார அலுவலரை, மாநகராட்சி ஆணையர் கிராந்திகுமார்பாடி பணியிடை நீக்கம் செய்தார். திருப்பூர் மாநகராட்சியின் 60 வார்டுகளில் உள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப, நிரந்தரம் மற்றும் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு வருகை பதிவேடுகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. திருப்பூர் மாநகராட்சி 2-வது மண்டல சுகாதார அலுவலர் பிச்சை (56) என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் 2-வது மண்டலத்திற்கு உட்பட்ட … Read more

திமுக ஆட்சியை கலைக்க திட்டம்? குண்டை தூக்கிப் போடும் கூட்டணி கட்சி!

கோவை காந்திபுரத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கோவையை பதட்டமான இடமான மாற்றி விடக்கூடாது எனத் தெரிவித்த அவர், கோவையில் பாஜக நடத்திய ஆர்ப்பாட்டம் மூலம் இந்த மாநகரம் அமைதியாக இருக்க ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க விரும்பவில்லை என தெரிவதாகவும், நேற்று கூட்டத்தில் பேசிய பேச்சிற்காக மாநில பாஜக தலைவர் அண்ணாமலையை கைது செய்ய வேணடும் என்றும் பாலகிருஷ்ணன் தெரிவித்தார். அண்ணாமலை காவல் துறை அதிகாரிகளை … Read more

பாழடைந்த கட்டிடத்தில் இஎஸ்ஐ டிஸ்பென்சரி வேலூரில் நோயாளிகள் வேதனை

வேலூர்: வேலூரில் பாழடைந்த கட்டிடத்தில் போதிய இடவசதியின்றி இயங்கும் இஎஸ்ஐ டிஸ்பென்சரியை இடம் மாற்ற வேண்டும் என்று தொழிலாளர்களும், இஎஸ்ஐ டிஸ்பென்சரி டாக்டர்கள், பணியாளர்களும் கேட்டுக் கொண்டுள்ளனர். வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் மொத்தம் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இஎஸ்ஐ திட்டத்தில் இணைந்துள்ளனர். இவர்கள் வேலூரில் தலைமையிட இஎஸ்ஐ மருத்துவமனை மற்றும் அரக்கோணம், சோளிங்கர், ராணிப்பேட்டை, மேல்விஷாரம், வேலூர், குடியாத்தம், பள்ளிகொண்டா, பேரணாம்பட்டு, ஆம்பூர், வாணியம்பாடி என 10 டிஸ்பென்சரிகள் மூலம் மருத்துவ சிகிச்சை பெறுகின்றனர். … Read more

கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக சென்ற தாய் மகன் பலி..!!

ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதியில் வசித்து வருபவர் கண்ணன் (56). இவரது மனைவி முத்துலட்சுமி (55). இவர்களது மகன் மௌலி (25). இவர்கள் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வதற்காக வாடகை காரில் புறப்பட்டு சென்றனர். அந்த காரை குணசேகரன் (27) என்பவர் ஓட்டி சென்றார். இந்த கார் விருதுநகர்-சாத்தூர் இடையே உள்ள அக்ரஹாரப்பட்டி அருகே சென்று கொண்டிருந்த போது கார் எதிர்பாராதவிதமாக ரோட்டின் நடுவில் உள்ள தடுப்புச்சுவர் மீது மோதியது. இதில் கார் … Read more

ஐஓபி வங்கி 'வணிகத் தொடர்பாளர்கள்' தனியார்த் துறை ஊழியர்களாக மாற்றமா? – வேல்முருகன் கண்டனம்

சென்னை: இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் வணிகத் தொடர்பாளர்களை தனியார்த் துறை ஊழியர்களாக மாற்ற திட்டம் கொண்டுவந்துள்ள வங்கி நிர்வாகத்தின் நடவடிக்கை சர்வாதிகாரத்தின் உச்சம் என்று தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இந்திய ஒன்றிய அரசின் பொதுத்துறை வங்கிகளின் வளர்ச்சியிலும், மக்கள் சேவையிலும், வணிகத் தொடர்பாளர்களின் பங்கு மிக மிக இன்றியமையாதது. ஏழை, எளிய மக்களுக்கும், மிகவும் பின்தங்கிய கிராமப்புற மக்களுக்கும் வங்கிச் சேவை கிடைப்பதில், வணிகத் … Read more

லோக்சபா தேர்தல்: தமிழகத்தில் பாஜக குறி வைக்கும் தொகுதிகள்?

பாரதிய ஜனதா கட்சி 2014, 2019 மக்களவை தேர்தல்கள் என இரண்டு முறையும் மத்தியில் ஆட்சியை பிடித்துள்ளதுடன், பல்வேறு மாநிலங்களையும் கைப்பற்றியுள்ளது. எதிர்வரவுள்ள 2024 மக்களவை தேர்தலிலும் வெற்றி பெற்று மீண்டும் பாஜக ஆட்சியமைக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் சூளுரைத்துள்ளார். கடந்த இரண்டு முறை போன்று இல்லாமல், தொடர்ந்து ஆட்சியில் இருக்கும் அரசு மீது இயல்பாகவே மக்களிடம் ஏற்படும் அதிருப்தி உள்ளிட்டவைகளால் 2024 தேர்தல் பாஜவுக்கு சவால் நிறைந்ததாகவே இருக்கும் என தெரிகிறது. எனவே, அதற்கான … Read more

பழைய பொருட்களை கொண்டு 8 மணி நேரத்தில் மாதிரி விமானத்தை உருவாக்கிய வாலிபர்

மூணாறு: கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் நெடுங்கண்டம் ஊராட்சியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் பூங்கா கட்டப்பட்டு வருகிறது. இந்த பூங்காவிற்கு அழகு சேர்ப்பதற்காக சிறிய மாதிரி விமானத்தை வடிவமைக்குமாறு, நெடுங்குண்டம் அருகே உள்ள இடத்தற முக்கு பகுதியை சேர்ந்த பிரின்ஸிடம் பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து அவர் பழைய இரும்பு பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக், பழைய தகரங்களை சேகரித்து 12 அடி நீளம், 11 அடி அகலம், 6 அடி உயரம் கொண்ட விமான ஒன்றின் மாதிரியை … Read more

சொந்த அக்காவை.. தம்பியே பல வருடமாக பலாத்காரம்.. 48 வயதில் போலிஸ் ஸ்டேஷனுக்கு வந்த அக்கா.!

சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த ஒரு 48 வயது பெண் மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில் 20 ஆண்டுகளுக்கு முன் கணவனுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதனால் அவரை பிரிந்து பிறந்த வீட்டில் வசித்து வந்துள்ளார். அவருடைய இளைய சகோதரர் திருமணம் செய்து கொள்ளாமல் அவர்களுடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். தனது சொந்த அக்கா என்றும் பார்க்காமல் அந்த திருமணமாகாத தம்பி அக்காவிடம் அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். ஒரு … Read more