பாழடைந்த கட்டிடத்தில் இஎஸ்ஐ டிஸ்பென்சரி வேலூரில் நோயாளிகள் வேதனை

வேலூர்: வேலூரில் பாழடைந்த கட்டிடத்தில் போதிய இடவசதியின்றி இயங்கும் இஎஸ்ஐ டிஸ்பென்சரியை இடம் மாற்ற வேண்டும் என்று தொழிலாளர்களும், இஎஸ்ஐ டிஸ்பென்சரி டாக்டர்கள், பணியாளர்களும் கேட்டுக் கொண்டுள்ளனர். வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் மொத்தம் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இஎஸ்ஐ திட்டத்தில் இணைந்துள்ளனர். இவர்கள் வேலூரில் தலைமையிட இஎஸ்ஐ மருத்துவமனை மற்றும் அரக்கோணம், சோளிங்கர், ராணிப்பேட்டை, மேல்விஷாரம், வேலூர், குடியாத்தம், பள்ளிகொண்டா, பேரணாம்பட்டு, ஆம்பூர், வாணியம்பாடி என 10 டிஸ்பென்சரிகள் மூலம் மருத்துவ சிகிச்சை பெறுகின்றனர். … Read more

கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக சென்ற தாய் மகன் பலி..!!

ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதியில் வசித்து வருபவர் கண்ணன் (56). இவரது மனைவி முத்துலட்சுமி (55). இவர்களது மகன் மௌலி (25). இவர்கள் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வதற்காக வாடகை காரில் புறப்பட்டு சென்றனர். அந்த காரை குணசேகரன் (27) என்பவர் ஓட்டி சென்றார். இந்த கார் விருதுநகர்-சாத்தூர் இடையே உள்ள அக்ரஹாரப்பட்டி அருகே சென்று கொண்டிருந்த போது கார் எதிர்பாராதவிதமாக ரோட்டின் நடுவில் உள்ள தடுப்புச்சுவர் மீது மோதியது. இதில் கார் … Read more

ஐஓபி வங்கி 'வணிகத் தொடர்பாளர்கள்' தனியார்த் துறை ஊழியர்களாக மாற்றமா? – வேல்முருகன் கண்டனம்

சென்னை: இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் வணிகத் தொடர்பாளர்களை தனியார்த் துறை ஊழியர்களாக மாற்ற திட்டம் கொண்டுவந்துள்ள வங்கி நிர்வாகத்தின் நடவடிக்கை சர்வாதிகாரத்தின் உச்சம் என்று தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இந்திய ஒன்றிய அரசின் பொதுத்துறை வங்கிகளின் வளர்ச்சியிலும், மக்கள் சேவையிலும், வணிகத் தொடர்பாளர்களின் பங்கு மிக மிக இன்றியமையாதது. ஏழை, எளிய மக்களுக்கும், மிகவும் பின்தங்கிய கிராமப்புற மக்களுக்கும் வங்கிச் சேவை கிடைப்பதில், வணிகத் … Read more

லோக்சபா தேர்தல்: தமிழகத்தில் பாஜக குறி வைக்கும் தொகுதிகள்?

பாரதிய ஜனதா கட்சி 2014, 2019 மக்களவை தேர்தல்கள் என இரண்டு முறையும் மத்தியில் ஆட்சியை பிடித்துள்ளதுடன், பல்வேறு மாநிலங்களையும் கைப்பற்றியுள்ளது. எதிர்வரவுள்ள 2024 மக்களவை தேர்தலிலும் வெற்றி பெற்று மீண்டும் பாஜக ஆட்சியமைக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் சூளுரைத்துள்ளார். கடந்த இரண்டு முறை போன்று இல்லாமல், தொடர்ந்து ஆட்சியில் இருக்கும் அரசு மீது இயல்பாகவே மக்களிடம் ஏற்படும் அதிருப்தி உள்ளிட்டவைகளால் 2024 தேர்தல் பாஜவுக்கு சவால் நிறைந்ததாகவே இருக்கும் என தெரிகிறது. எனவே, அதற்கான … Read more

பழைய பொருட்களை கொண்டு 8 மணி நேரத்தில் மாதிரி விமானத்தை உருவாக்கிய வாலிபர்

மூணாறு: கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் நெடுங்கண்டம் ஊராட்சியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் பூங்கா கட்டப்பட்டு வருகிறது. இந்த பூங்காவிற்கு அழகு சேர்ப்பதற்காக சிறிய மாதிரி விமானத்தை வடிவமைக்குமாறு, நெடுங்குண்டம் அருகே உள்ள இடத்தற முக்கு பகுதியை சேர்ந்த பிரின்ஸிடம் பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து அவர் பழைய இரும்பு பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக், பழைய தகரங்களை சேகரித்து 12 அடி நீளம், 11 அடி அகலம், 6 அடி உயரம் கொண்ட விமான ஒன்றின் மாதிரியை … Read more

சொந்த அக்காவை.. தம்பியே பல வருடமாக பலாத்காரம்.. 48 வயதில் போலிஸ் ஸ்டேஷனுக்கு வந்த அக்கா.!

சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த ஒரு 48 வயது பெண் மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில் 20 ஆண்டுகளுக்கு முன் கணவனுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதனால் அவரை பிரிந்து பிறந்த வீட்டில் வசித்து வந்துள்ளார். அவருடைய இளைய சகோதரர் திருமணம் செய்து கொள்ளாமல் அவர்களுடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். தனது சொந்த அக்கா என்றும் பார்க்காமல் அந்த திருமணமாகாத தம்பி அக்காவிடம் அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். ஒரு … Read more

கணவன் கண்முன் மனைவி கூட்டு பாலியல் வன்கொடுமை!!

கணவர் கண்முன் இளம்பெண்ணை ஆறு பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலம் பலாமு மாவட்டம் சத்பாவ்ரா என்ற பகுதியில் வசித்து வரும் 22 வயது இளம் பெண்ணுக்கு சம்பவ தினத்தன்று கணவர் வீட்டாருடன் சண்டை ஏற்பட்டது. கோபத்தில் அந்த பெண் பக்கத்து மாவட்டத்தில் உள்ள தனது வீட்டிற்கு கிளம்பி சென்றார். மனைவியை காணவில்லை என்பதால் இளம் பெண்ணின் கணவரும் அவரது உறவினரும் இரவு எட்டு மணி அளவில் வண்டி … Read more

சென்னையை பாதுகாப்பான நகரமாக மாற்ற 3,000 பெண்களிடம் கருத்து கேட்டு ஆய்வு நடத்த திட்டம்

சென்னை: சென்னையை பெண்களுக்கு பாதுகாப்பான நகரமாக மாற்ற 3000 பெண்களின் கருத்துகளை கேட்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. சென்னையை பெண்களுக்கு பாதுகாப்பான நகரமாக மாற்ற நிர்பயா திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சி, காவல் துறை, போக்குவரத் துறை, சமூக நலத் துறை உள்ளிட்ட துறைகள் இந்தத் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன. இந்தத் திட்டத்தில் பாலினக் கொள்கை மையம் சென்னை மாநகராட்சியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தின் மூலம் சென்னையை பெண்களுக்கு பாதுகாப்பான … Read more

'முடிந்தால் என்னை கைது செய்யுங்க..!' – திமுகவுக்கு அண்ணாமலை சவால்!

“முடிந்தால், என்னை கைது செய்யுங்கள்,” என, அரசுக்கு, தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை சவால் விடுத்துள்ளார். திண்டுக்கல் அடுத்துள்ள குடைப்பாறைப்பட்டி பகுதியில், கடந்த 25 ஆம் தேதி, பாஜக மாநகர மேற்கு மண்டல தலைவர் செந்தில் பால்ராஜ் குடோனில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மற்றும் ஐந்து இருசக்கர வாகனங்களுக்கு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் தீ வைத்து எரித்தனர். இது தொடர்பாக தெற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் … Read more

கொட்டாம்பட்டி பகுதியில் இடிந்து விழுந்த தொகுப்பு வீடுகள்

மேலூர்: கொட்டாம்பட்டி பகுதியில் பெய்த சிறு மழைக்கு தாங்காத தொகுப்பு வீடு இடிந்து விழ, 4 வீடுகள் கடும் சேதமாகின. கொட்டாம்பட்டி ஒன்றியம் கம்பூர் ஊராட்சியில் உள்ளது அலங்கம்பட்டி. இங்கு அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட ஆதி திராவிடர் காலனி தொகுப்பு வீடுகள் மிகவும் சேதமாக, ஒழுகி கொண்டிருந்தது. இதுகுறித்து பல முறை கடந்த ஆட்சியின் போது, புகார் கூறியும் மராமத்து பணிகள் நடைபெறவில்லை. இங்கு குடியிருப்பவர்களுக்கு மாற்று வீடுகள் கட்டி தரப்படும் என அப்போது உறுதி அளிக்கப்பட்டதும், … Read more