குவைத், சவுதியில் 2 தமிழர்கள் உயிரிழப்பு | உரிய நீதியும், இழப்பீடும் கிடைக்க நடவடிக்கை தேவை – தினகரன்

சென்னை: குவைத், சவுதியில் உயிரிழந்த இரு தமிழர்களின் குடும்பங்களுக்கு உரிய நீதியும், இழப்பீடும் கிடைக்க மத்திய, மாநில அரசுகள் இந்தியத் தூதரகத்தின் வழியாக துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ”திருவாரூர் மாவட்டம், லட்சுமாங்குடியைச் சேர்ந்த முத்துக்குமரன் என்பவர், வேலைக்குச் சென்ற சில தினங்களிலேயே குவைத் நாட்டில், சித்ரவதை செய்து சுட்டுக்கொல்லப்பட்டதாக வரும் செய்தி பெரும் அதிர்ச்சியையும் … Read more

ஆசிரியர்கள், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்க! – ஓபிஎஸ் வலியுறுத்தல்!

பழுதடைந்த நிலையில் உள்ள பள்ளிக் கட்டடங்களில் மாணவ, மாணவிகளுக்கு வகுப்புகள் எடுப்பதை நிறுத்துவதுடன், விபத்துகள் ஏற்படுவதை தடுக்கும் வகையில், ஆசிரியர்கள், மாணாக்கர்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய உரிய நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும் என, வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் எனக் குறிப்பிட்டு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது: கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள வி.மாமாந்தூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மேற்கூரை இடிந்து விழுந்து மூன்று மாணவிகள் உள்பட … Read more

ஆரணி அடுத்த விளைசித்தேரி, துந்தரீகம்பட்டில் கி.பி.8 மற்றும் 10ம் நூற்றாண்டு கொற்றவை சிலைகள் கண்டெடுப்பு

ஆரணி :  ஆரணி அடுத்த விளைசித்தேரி, துந்தரீகம்பட்டு கிராமங்களில் கி.பி.8 மற்றும் 10ம் நூற்றாண்டு கொற்றவை, பல்லவர் கால சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.ஆரணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆரணி – சேத்துப்பட்டு செல்லும் சாலையில்  விளைசித்தேரி, துந்தரீகம்பட்டு ஆகிய கிராமங்கள் உள்ளது. இந்த கிராமங்களில் மிக பழமையான  காளியம்மன் கோயில்  உள்ளது. இக்கோயிலில் பல்லவர் கால சிலைகள் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், சம்புவராயர் ஆய்வு மைய பேராசிரியர் அ.அமுல்ராஜ், வரலாற்று ஆய்வாளர் ஆரணி ஆர்.விஜயன் ஆகியோர் ஆய்வு … Read more

தனியார் பள்ளிக்கு 2-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் – திருவள்ளூர் அருகே பரபரப்பு!

பொன்னேரி அருகே தனியார் பள்ளிக்கு 2-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பள்ளிக்கு விடுமுறை அளித்து வெடிகுண்டு நிபுணர்கள் நள்ளிரவு முதல் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பஞ்செட்டியில் வேலம்மாள் மெட்ரிக் பள்ளி வளாகம் உள்ளது. இதில், 4 பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்த பள்ளிகளில் சுமார் 4000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில், நேற்று காலை வழக்கம் போல பள்ளி செயல்பட தொடங்கிய நிலையில், வேலம்மாள் பள்ளியில் வெடிகுண்டு … Read more

பள்ளிக் கட்டிடங்களை சீரமைத்து மாணவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும்: ஓபிஎஸ்

சென்னை: பாதுகாப்பற்ற நிலையில் உள்ள பள்ளிக் கட்டிடங்களை சீரமைத்து மாணவ, மாணவியரின் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார் இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள வி.மாமாந்தூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மேற்கூரை இடிந்து விழுந்து மூன்று மாணவிகள் உள்பட நான்கு பேர் படுகாயம் அடைந்துள்ளதாக வந்துள்ள செய்தி பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, மாணவ, மாணவியரின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் இல்லாத சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. … Read more

காங்கிரஸ் பிரமுகரின் சர்ச்சை கருத்து… திமுக ஆ.ராசாவின் எம்பி பதவிக்கு சிக்கல்?

பாஜகவின் ஹெச்.ராஜாவை போன்றே சர்ச்சை பேச்சுக்களுக்கு பெயர் போனவர் திமுக எம்பி ஆ.ராசா. திமுகவின் சார்பில் நாமக்கல்லில் அண்மையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இந்துக்கள் குறித்து அவர் பேசியுள்ளது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ‘பெரியாரை ஏற்றுக்கொண்ட திமுக, தனித் தமிழ்நாடு என்ற அவரது இந்த கோரிக்கையில் இருந்து விலகி, இந்திய ஒருமைப்பாட்டுக்காக, இந்தியா வாழ்க என்று சொல்லிக் கொண்டிருக்கிறது. ஆனால் இந்துவாக இருக்கும் வரை நீ சூத்திரன்…’ என்று வழக்கமான தமது பாணி பேசிக் கொண்டிகுந்த ஆ.ராசா, … Read more

எஸ்டிபிஐ அலுவலகத்தில் வருமானவரித்துறை சோதனை; சீமான் கடும் கண்டனம்

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், “எஸ்.டி.பி.ஐ கட்சியின் கோவை மாவட்ட தலைமை அலுவலகத்தில் வருமானவரித்துறை சோதனை நடத்தி அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையை அரங்கேற்றியுள்ள பாஜக அரசின் எதேச்சதிக்காரச் செயல் வன்மையான கண்டனத்திற்குரியது. தன்னாட்சி அமைப்புகளைத் தனது கைப்பாவையாக மாற்றி சனநாயக அமைப்புகளையும், இயக்கங்களையும் அச்சுறுத்தி, அழித்தொழிக்கும் முயற்சியில் மோடி அரசு தொடர்ந்து ஈடுபட்டுவருவது நாட்டினை பேரழிவினை நோக்கி இட்டுச்செல்லவே வழிவகுக்கும். இதுபோன்ற அதிகார அத்துமீறல்களைத் தொடர்வதை இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு நிறுத்திக்கொள்வதோடு, அதலபாதாளத்திற்குப் … Read more

பள்ளம்பட்டி கிராமத்தில் போதிய வகுப்பறையின்றி தவிக்கும் அரசு தொடக்க பள்ளி மாணவர்கள்

*கூடுதல் கட்டிடம் கட்டித்தர கிராம மக்கள் வலியுறுத்தல் அரூர் : பள்ளம்பட்டி கிராமத்தில் போதிய வகுப்பறை இன்றி பாடம் படிக்கும் மாணவர்களுக்கு புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அடுத்த கே.ஈச்சம்பாடி ஊராட்சி பள்ளம்பட்டி கிராமத்தில் 200 மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் 50 ஆண்டுகளாக அரசு தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி தொடங்கிய காலம் முதல் 2 வகுப்பறைகள் கொண்ட ஒரு கட்டிடத்தில் … Read more

2 ஆண்டுகளுக்குப்பின் எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் வேகமாக நிரம்பும் படுக்கைகள்-ஏன்?

எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் இரண்டு வருடங்களுக்கு பிறகு ப்ளு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் அதிகமாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று மட்டும் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் புளூ காய்ச்சலினால் பாதிக்கப்பட்டதால் மருத்துவ படுக்கைகள் வேகமாக நிரம்பி வருகிறது. கோடைக்காலம் முடிந்து மழைக்காலம் மெல்ல மெல்ல ஆரம்பிக்கிற மாதங்களில், திடீர் பருவநிலை மாற்றம் காரணமாகத்தான் குழந்தைகளுக்கு சளி, காய்ச்சல் இரண்டும் ஏற்படுகிறது. இரண்டு வருடங்களாக கொரோனா தொற்று காரணமாக மழைக்காலங்களில் ஏற்படும் பிளு காய்ச்சல் பரவல் குறைவான அளவில் … Read more

“நில வழிகாட்டி மதிப்புகளை 200% உயர்த்த திட்டம்… இதுதான் திராவிட மாடல் ஆட்சியா?” – தமாகா

சென்னை: “அரசு நில வழிகாட்டி மதிப்புகளை 200 சதவீதம் வரை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. இதனால் ஏழை, எளிய நடுத்தர மக்கள் வீடு கட்ட நினைப்பதும், விவசாய நிலம் வாங்க நினைப்பதும் கனவாகிவிடும்” என்று தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞரணி தலைவர் எம்.யுவராஜா கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “தமிழகத்தில், 2012-ல் அப்போதைய அதிமுக ஆட்சிக்காலத்தில் நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்பு ஒட்டு மொத்தமாக சீரமைக்கப்பட்டது. இதில் காணப்பட்ட குறைபாடுகளை சரி செய்து, 2017-ல் அதிமுக அரசு … Read more