கலசபாக்கம் தொகுதி திமுக முன்னாள் எம்எல்ஏ பெ.சு.திருவேங்கடம் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

திருவண்ணாமலை: கலசபாக்கம் தொகுதி திமுக முன்னாள் எம்எல்ஏ பெ.சு.திருவேங்கடம் நேற்று முன்தினம் காலமானார். அவரது குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ பெ.சு.திருவேங்கடம் (89). இவர், உடல் நலக்குறைவால் சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு இறந்தார். அதைத்தொடர்ந்து, அவரது சொந்த ஊரான கலசபாக்கம் அடுத்த பெரியகிளாம்பாடி கிராமத்தில் அவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இவர் 4 முறை … Read more

பதிவு செய்யாத பள்ளி விடுதி, இல்லம் குறித்து ஆளுநரிடம் அறிக்கை சமர்ப்பிப்பு – குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் வழங்கியது

சென்னை: பதிவு செய்யப்படாத பள்ளி விடுதிகள் மற்றும் இல்லங்கள் குறித்து தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் சரஸ்வதி ரங்கசாமி, ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து அறிக்கை சமர்ப்பித்தார். சென்னை ராயப்பேட்டையில், பதிவு செய்யப்படாமல் இயங்கி வந்த தனியார் பள்ளி விடுதியில் தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் சரஸ்வதி ரங்கசாமி தலைமையில் ஆணைய உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் அண்மையில் ஆய்வு நடத்தினர். ஆய்வை தொடர்ந்து, அந்த விடுதியில் தங்கியிருந்த சில மாணவிகளை சமூக … Read more

காதல் திருமணத்தை பெற்றோர் ஏற்காததால் கர்ப்பிணி மனைவி, கணவர் தற்கொலை: சிவகாசி அருகே சோகம்

சிவகாசி: விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே கங்காகுளத்தைச் சேர்ந்தவர் ஜெயமுருகன் (27). திருவில்லிபுத்தூர் அருகே கம்மாபட்டியை சேர்ந்தவர் மாலதி (24). வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்த இருவரும், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். அதன் பிறகு இருவரும் கங்காகுளத்தில் வீடு எடுத்து தங்கி, திருவில்லிபுத்தூரில் உள்ள தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தனர். மாலதி 6 மாத கர்ப்பிணியாக இருந்தார். இவர்களது காதல் திருமணத்தை, இரு வீட்டாரும் ஏற்காததால், குடும்ப தகராறு ஏற்பட்டு … Read more

மது குடிப்பதற்கு தாய் பணம் கொடுக்காததால் மகன் எடுத்த விபரீத முடிவு.!

கடலூர் மாவட்டத்தில் மது குடிப்பதற்கு தாய் பணம் கொடுக்காததால் மகன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். கடலூர் மாவட்டம் ஆண்டி குப்பம் பகுதியை சேர்ந்த காசி என்பவரது மகன் வினோத்குமார் (27). இவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையானதால், மது குடிப்பதற்கு தாயிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால் தாய் பணம் கொடுக்க மறுத்து விட்டதால், ஆத்திரமடைந்த வினோத்குமார் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதைப் பார்த்த குடும்பத்தினர் அதிர்ச்சடைந்த நிலையில், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வினோத் … Read more

வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையம் – மின்வாரியம் தீவிரம்

சென்னை: நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவதால் பலர் மின்சார வாகனங்களை வாங்கிப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். ஆனால், மின்சார வாகனங்களை சார்ஜ் செய்வதற்கு போதிய அளவு சார்ஜிங் மையங்கள் இல்லை. இதனால், சிலர் மின்சார வாகனங்களை வாங்க தயக்கம் காட்டுகின்றனர். எனவே, தேசிய நெடுஞ்சாலைகளில் ஒவ்வொரு 25 கிமீ தொலைவுக்கும், மாநகரங்களில் ஒவ்வொரு 3 கிமீ தொலைவுக்கும் சார்ஜிங் நிலையங்களை அமைக்குமாறு மாநில அரசுகளை மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. முதற்கட்டமாக தமிழகத்தில் 100 … Read more

திண்டுக்கல்- பழநி இடையே மின்சார ரயில் சோதனை ஓட்டம்

திண்டுக்கல்: திண்டுக்கல் – பழநி இடையே புதிய மின் பாதையில் சோதனை ரயில் ஓட்டம் நேற்று நடந்தது. திண்டுக்கல் – பழநி இடையே 58 கிமீ தூரம் உள்ள ரயில்வே பாதை மின் மயமாக்கும் பணி நடைபெற்று வந்தது. பணிகள் முடிந்த நிலையில் 25 ஆயிரம் வோல்ட் மின்சாரம் இணைப்பு செலுத்தி, மின்சார ரயில் இன்ஜின் மற்றும் பயணிகள் பெட்டிகளுடன் சோதனை ஓட்டம் நேற்று நடந்தது. இந்த சோதனை ரயில் ஓட்டத்தில் தலைமை மின்சார பொறியாளர் சித்தார்த் … Read more

பள்ளி வகுப்பில் குட்டி மாணவன்- ஆசிரியை முத்தம் சரியா? அதகளமாகும் ட்விட்டர்

ஆசிரியர்கள் தாங்கள் கற்பிக்கும் குழந்தைகளுடன் ஒரு சிறப்புப் பிணைப்பைப் பகிர்ந்து கொள்கிறார்கள். அவர்களுக்குப் பாடம் சொல்லித் தருவது, அவர்களைச் சரியான பாதையில் அழைத்துச் செல்வது முதல் அறிவுரை கூறுவது, கவனித்துக் கொள்வது வரை குழந்தையின் வளர்ச்சியில் ஆசிரியர்கள் முக்கியப் பங்காற்றுகிறார்கள். ஒரு ஆசிரியருக்கும் குழந்தைக்கும் இடையேயான அபிமானமான உரையாடலைக் காட்டும் வீடியோ ஆன்லைனில் வெளிவந்துள்ளது. அவர்களின் பாசத்தை வெளிப்படுத்தும் அந்த வீடியோ ஆன்லைனில் இதயங்களை வென்றுள்ளது. சிறுவனின் கீழ்ப்படியாமையால் ஆசிரியர் கோபமடைந்ததாகத் தெரிகிறது, மேலும் வீடியோவில் குழந்தை … Read more

மதுரை: மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி விபத்து – வாலிபர் பலி

மதுரை மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்துள்ளார். தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்தவர் முத்துக்குமார். இவர் நேற்று மோட்டார் சைக்கிளில் மதுரைக்கு சென்றுள்ளார். அப்பொழுது வண்டியூர் சுங்கச்சாவடி அருகே வேகமாக வந்த கார் ஒன்று எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட முத்துக்குமார் படுகாயமடைந்த நிலையில், அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் முத்துக்குமார் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே … Read more

விழுப்புரம் அருகே அரசுப் பேருந்தும், ஆட்டோவும் நேருக்கு நேர் மோதி விபத்து – 2 பேர் உயிரிழப்பு..!

விழுப்புரம் அருகே அரசுப் பேருந்தும், ஆட்டோவும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்த நிலையில், 3 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மரக்காணம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு ஆட்டோவில், அதன் ஓட்டுநர், அவரது நண்பர்கள் என 5 பேர் சென்றுகொண்டிருந்தனர். கூனிமேடு பகுதியில் வேகமாக சென்ற அந்த ஆட்டோ, வாகனம் ஒன்றை முந்த முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது, எதிர்பாராவிதமாக எதிரே அரசு பேருந்து வந்த நிலையில், ஆட்டோ நேருக்கு … Read more

சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக எம்.துரைசாமி பொறுப்பேற்பு

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி எம்.துரைசாமி இன்று (செப்.13) பொறுப்பேற்றுக் கொண்டார். சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்த வந்த முனீஷ்வர்நாத் பண்டாரி நேற்றுடன் பணி ஓய்வு பெற்ற நிலையில், உயர் நீதிமன்ற மூத்த நீதிபதியான எம்.துரைசாமி பொறுப்பு தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார். கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் 22-ம் தேதி சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, … Read more