திருப்பதி ஏழுமலையானுக்காக தயாரிக்கப்பட்ட அதிசய காஞ்சிபுரம் பட்டுச்சேலை !

பட்டுச்சேலைகளுக்கு உலகப் பிரசித்தி பெற்ற காஞ்சிபுரத்தில் விளக்கொளி பெருமாள் கோயில் தோப்புத் தெருவில் வசிப்பவர்கள் குமரவேலு கலையரசி தம்பதியினர். பட்டுச்சேலை வடிவமைப்பு தொழில் செய்து வரும் இவர்கள், வாடிக்கையாளர்கள் விரும்பும் உருவங்களை பட்டு சேலையில் வடிவமைத்து கைத்தறியில் நெசவு செய்து தயாரித்துக் கொடுப்பதில் கைதேர்ந்தவர்கள்.  இவர்களிடம் சென்னையைச் சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர், திருமலை திருப்பதியில் புரட்டாசி மாத பிரம்மோற்சவ விழாவில், பெருமாளுக்கு சமர்ப்பிக்க வித்தியாசமாகப் பட்டுச்சேலை தயாரித்து வழங்கக் கேட்டுக்கொண்டார். வாடிக்கையாளர் வேண்டுகோளின்படி பட்டுச்சேலையில் பெருமாளின் முகங்களையும், … Read more

திருச்சுழியில் சாலையோரம் குவிக்கப்படும் குப்பையால் சுகாதாரக்கேடு-ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

திருச்சுழி : திருச்சுழியில் சாலையோரம் குவிக்கப்படும் குப்பையால் பொதுமக்களுக்கு சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. இது குறித்து ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.திருச்சுழியிலிருந்து காரியாபட்டிக்கு செல்லும் சாலையில் தனியார் மேல்நிலைப்பள்ளி உள்ளது.இதன் அருகே ரயில்வே மேம்பாலம் அமைந்துள்ளது. இந்நிலையில், திருச்சுழியில் உள்ள ஓட்டல்களில் சேகரமாகும் கழிவுகள், வீடுகளிலில் சேகரமாகும் குப்பைகள், கோழி இறைச்சிக் கழிவுகளை சாலையோரம் கொட்டுகின்றனர். மேலும், அதில் தீ வைக்கின்றனர். இதனால், துர்நாற்றம் வீசி பொதுமக்களுக்கு சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. காரியாபட்டியிலிருந்து திருச்சுழி … Read more

சென்னை: ஜி.என்.செட்டி சாலையில் உள்ள எம்ஜிஆர் சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்கள்

சென்னை ஆயிரம் விளக்கு ஜி.என்.செட்டி சாலையில் உள்ள எம்ஜிஆர் சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்களை கைது செய்ய வேண்டும் என அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை ஜி.என்.செட்டி சாலையில் ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 117-வது வார்டில் உள்ள எம்ஜிஆர் சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்திச் சென்றுள்ளனர். இந்த சிலை கடந்த 2006-ஆம் ஆண்டு அதிமுக தொண்டர்களால் வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்றிரவு எம்ஜிஆர் சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தி உள்ளனர். … Read more

#அரியலூர் : 13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 57 வயது நபர்.. தப்பியோடி வந்து பெண்ணாடத்தில், திடீர் முடிவு.!

அரியலூர் மாவட்டம் வங்காரம் கிராமத்தைச் சேர்ந்த அன்பழகன் என்ற 57 வயது நபர் 13 வயது சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கி இருக்கிறார். இதை அறிந்த வங்காரம் கிராம மக்கள் அன்பழகனை கட்டி வைத்து அடித்து உதைத்துள்ளனர். அவர் அங்கிருந்து தப்பியோடி இருக்கிறார். நான்கு நாட்களுக்கு முன்பாக அந்த சிறுமியின் பெற்றோர் அரியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த … Read more

இவர்தான் அதிமுக அரசியல் ஆலோசகர்.. ஓபிஎஸ் அதிரடி அறிவிப்பு..!

அதிமுகவின் அரசியல் ஆலோசகராக மூத்த அரசியல் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பண்ருட்டி ராமச்சந்திரனை ஓ.பன்னீர்செல்வம் நியமித்துள்ளார். இதுதொடர்பாக ஓ.பனீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் ஆலோசகராக மூத்த அரசியல் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பண்ருட்டி ராமச்சந்திரன் இன்று முதல் நியமிக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் அனைவரும் அரசியல் ஆலோசகருக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என … Read more

சென்னையில் எம்ஜிஆர் சிலை சேதம்: இபிஎஸ் கண்டனம்

சென்னை: சென்னையில் எம்ஜிஆர் சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவத்திற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அனைத்திந்திய அண்ணா திமுகவின் நிறுவன தலைவர், தமிழக மக்கள் இதயங்களில் நீக்கமற நிறைந்திருக்கும் நீங்கா புகழ் கொண்டிருக்கும், சென்னை தேனாம்பேட்டையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆரின் திருவுருவச் சிலையை சமூக விரோதிகள் சிலர் சேதப்படுத்தியதை மிகவும் வன்மையாக கண்டிக்கிறேன். எம்ஜிஆரின் புகழுக்கு களங்கம் விளைவிக்கவும், பொது அமைதியை சீர் குலைக்கவும் … Read more

ஸ்டாலினுக்கு புது நெருக்கடி… தனியாரிடம் இருந்து கைமாறுமா காலை சிற்றுண்டி திட்டம்?

தமிழகத்தில் நீதிக்கட்சி ஆட்சியில் இருந்த 1920ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது தான் மதிய உணவுத் திட்டம். முதல்கட்டமாக சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள மாநகராட்சி பள்ளியில் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு காமராஜர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரால் மதிய உணவுத் திட்டம் படிப்படியாக மேம்படுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது ஆட்சியில் இருக்கும் முதல்வர் தலைமையிலான திமுக அரசு காலை சிற்றுண்டி திட்டம் என்ற மகத்தான திட்டத்தை அமல்படுத்தியுள்ளது. இதில் வாரத்தின் ஐந்து நாட்களும் உப்புமா, கிச்சடி, கேசரி, … Read more

காதலி பேசாத அதிர்ச்சியில் தற்கொலை செய்துகொண்ட இளைஞர்: சோகத்தில் குடும்பம்

காதலி பேசாத விரக்தியில் டிப்ளமோ படித்த இளம் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த ஒரகடம் அருகே வடக்குப்பட்டு கிராமத்தில் வசித்து வருபவர் வீரபத்திரன். இவரது மகன் அன்பு செல்வன். இவருக்கு வயது 19. இவர் டிப்ளமோ முடித்து விட்டு வேலை தேடி வந்து உள்ளார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணை அன்புச்செல்வன் காதலித்து வந்துள்ளார். இந்த விஷயம் அந்த பெண்ணின் அண்ணனுக்கு … Read more

முதுகுளத்தூர் அருகே மின்சாரம் தாக்கி பெண் பலி

ராமநாதபுரம்: முதுகுளத்தூர் அருகே எஸ்.பி.கோட்டை கிராமத்தில் மின்சாரம் தாக்கி ராமலெட்சுமி என்பவர் உயிரிழந்தார். வீட்டு மாடியில் நின்ற ஆடுகளை கீழே விரட்டி விட முயன்றபோது தாழ்வாக சென்ற மின்கம்பியில் காய் பட்டதால் மின்சாரம் தாக்கியது

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மருத்துவமனையில் அனுமதி

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, காய்ச்சல் காரணமாக ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் காய்ச்சல் மற்றும் சளியால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருந்து வந்தது. இதனால் மருத்துவமனைகள் தயார்நிலையில் இருக்குமாறு சுகாதாரத்துறையால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், தலைமைச் செயலகத்தில் நேற்று அமைச்சரவை கூட்டம் நடந்து முடிந்தப் பிறகு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து, ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் … Read more