நித்தியானந்தா சொத்துக்களை அபகரிக்க ரஞ்சிதா முயற்சி?

பாலியல் குற்றச்சாட்டு உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாமல் இருந்து வருபவரும், தன்னை தானே சாமியார் என்று கூறிக் கொள்பவருமான நித்யானந்தா, கடந்த 2019ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து தலைமறைவானார். இந்தியாவில் இருந்து தலைமறைவான நித்யானந்தா, தனித்தீவு ஒன்றை விலைக்கு வாங்கி அதனை தனி நாடாக அறிவித்தார். அதற்கு கைலாசா என பெயரிட்ட அவர், அவ்வப்போது வீடியோ மூலம் காட்சியளித்து தனது சீடர்களுக்கு சத்சங்கங்களையும் வழங்கி வந்தார். இதனிடையே, அண்மைக்காலமாக அவர் பற்றிய தகவல் வெளி வராமல் இருந்தது. … Read more

அண்ணியுடன் தகாத உறவின் விபரீதத்தால் இருவரும் தற்கொலை

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ள சிலவாட்டம் கிராமத்தில் வயல்வெளி பகுதியில் உள்ள வேப்ப மரத்தில் ஆண் மற்றும் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக மதுராந்தகம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி மதுராந்தகம் போலீசார் சிலாவட்டம் கிராமத்திற்கு சென்று மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் இருந்த ஆண் மற்றும் பெண் பிரேதங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இது குறித்து மதுராந்தகம் போலீசார் வழக்கு பதிவு செய்து … Read more

திருவானைக்காவல், திருப்பைஞ்சீலி நீலிவனநாதர் கோயில்களில் சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்த வைபவம் கோலாகலம்

திருச்சி: திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர், திருப்பைஞ்சீலி நீலிவனநாதர் கோயில்களில் சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்த வைபவம் கோலாகலமாக நடைபெற்றது. திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயிலில் நேற்று சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்த வைபவம் நடைபெற்றது. இதையொட்டி நேற்று மாலை உற்வசர் ஜம்புகேஸ்வர் வெள்ளி குதிரை வாகனத்திலும், உற்சவர் அகிலாண்டேஸ்வரி பல்லக்கிலும் கோயிலில் இருந்து புறப்பட்டு திருவானைக்காவல் வெள்ளிக்கிழமை சாலை அருகே உள்ள திருமஞ்சன காவிரி கரையை அடைந்தனர். அங்கு திரிசூலத்திற்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. … Read more

`பால் பாக்கெட்க்கு Yes; தண்ணீர் பாக்கெட்க்கு No’- பிளாஸ்டிக் தடைக்கு தமிழக அரசு விளக்கம்

தமிழகத்தில் அனைத்து வகையான பிளாஸ்டிக் பொருட்களையும் தடை செய்ய கோரிய வழக்கை முடித்து வைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் அனைத்து வகையான பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கும் தடை விதிக்கக் கோரி பலர் பொதுநல வழக்குகளைத் தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில் “சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலர் 2018-ல் பிறப்பித்த அரசாணை எண் 84-ன் படி பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் எந்த விதமான பிளாஸ்டிக்குகளை பயன்படுத்தலாம், எவற்றை பயன்படுத்தக் கூடாது என்ற வரைமுறைகள் தெளிவாக … Read more

‘இதுவரை நடவடிக்கையே இல்லை’ – அதிமுக அலுவலக வழக்கில் டிஜிபிக்கு உத்தரவு பிறப்பிக்கக் கோரி ஐகோர்ட்டில் கூடுதல் மனு

சென்னை: அதிமுக தலைமை அலுவலகம் சூறையாடபட்ட விவகாரத்தில் சிபிசிஐடி உரிய விசாரணை நடத்த தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்க டிஜிபிக்கு உத்தரவிடக் கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளார். ஜூலை 11-ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் நடந்தபோது, ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே தகராறு ஏற்பட்டு கலவரமாக மாறியது. பின்னர் அதிமுக அலுவலகத்திற்குள் நுழைந்த ஓபிஎஸ் ஆவணங்களை … Read more

அதிமுக அலுவலக வழக்கு: டிஜிபிக்கு உத்தரவிட கோரி கூடுதல் மனு!

அதிமுக தலைமை அலுவலகம் சூறையாடபட்ட விவகாரத்தில் உரிய விசாரணை நடத்துவதற்கு சிபிசிஐடி காவல்துறைக்கு தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்க டிஜிபி-க்கு உத்தரவிடக் கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளார். கடந்த ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் நடந்தபோது, ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் ஓ.பி.எஸ். – இ.பி.எஸ். ஆதரவாளர்கள் இடையே தகராறு ஏற்பட்டு கலவரமாக மாறியது. பின்னர் அதிமுக அலுவலகத்திற்குள் நுழைந்த … Read more

தமிழகத்தில் கலவரத்தை ஏற்படுத்த பாஜக திட்டம்; எச்சரிக்கும் கி.வீரமணி

சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் திராவிட கழக தலைவர் கி வீரமணி தலைமையில் திராவிடர் கழக தலைமை கூட்டம் நடைபெற்றது. இதில் 15 தீர்மானங்கள் உள்பட சிறப்பு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி, ” தந்தை பெரியார் 144-வது ஆண்டு பிறந்தநாள் செப்டம்பர் 17ஆம் தேதி அன்று  சிறப்பாக கொண்டாடப்படுவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் பெரும் கொள்கை பிரச்சார விழாவாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளோம்.  பெரம்பலூர் … Read more

ராமநாதபுரம் அருகே வெறிநாய் கடித்த 20 ஆடுகள் உயிரிழப்பு.

ராமநாதபுரம்: உச்சிப்புளி எடுத்த வெள்ளமாசி வலசையில் வெறிநாய் கடித்த 20 ஆடுகள் உயிரிழப்பு. நல்ல முத்து என்பவர் வளர்த்து வந்த 50-க்கும் மேற்பட்ட ஆடுகளில் வெறிநாய் கடித்து 20 ஆடுகள் உயிரிழந்துள்ளது.

கோவை: திருவாதிரை களி நடனம் ஆடி ஓணம் கொண்டாடிய கல்லூரி மாணவிகள்

பி.ரஹ்மான் கோவை மாவட்டம் கேரளாவில் ஓணம் பண்டிகை 10 நாட்கள் நடைபெறும். இந்த விழாவில் திருவாதிரை களி நடனம் கைகட்டி களி நடனம், புலி களி ஆகிய நடனங்கள் கொண்டாடப்படும். அதேபோல ஓணம் பண்டிகை ஒட்டி வீட்டிற்கு முன்பாக ஒவ்வொரு நாளும் மகாபலி வரவேற்க பூக்காலம் போட்டு வைப்பார்கள் ஓணம் பண்டிகை ஒட்டி சாப்பாடு – சாம்பார் கூட்டு – கறி அவியல் காளான் – புலி இஞ்சி – மாங்காய் ஊறுகாய் – பாயாசம் – … Read more

தனியார் மருத்துவமனையில் நூதன முறையில் 40 லட்சம் ரூபாய் பணத்தை திருடிவிட்டு தலைமறைவான ரிசப்சனிஸ்ட் பெண்ணுக்கு வலைவீச்சு

கோவை சாய்பாபா காலனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நூதன முறையில் 40 லட்சம் ரூபாய் பணத்தை திருடிவிட்டு தலைமறைவான ரிசப்சனிஸ்ட் பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். ஒன் கேர் மருத்துவமனையில் நடத்தப்பட்ட வரவு செலவு சரிபார்ப்பு பணியில், 2019 முதல் 2021 வரையிலான காலகட்டத்தில் கோவிட் சிகிச்சையின்போது, பல்வேறு நோயாளிகளிடம் இருந்து பெறப்பட்ட 40 லட்சம் ரூபாய் வரவில் வைக்கப்படாதது கண்டுபிடிக்கப்பட்டது. இரவு நேரத்தில் ரிசப்சனிஸ்டாக பணியாற்றிய லதா, நோயாளிகள் செலுத்தும் கட்டணத்தை, வரவு கணக்கில் பதியாமல் … Read more