மாமன்னன் படப்பிடிப்புத் தளத்தில் சேலம் மக்களுக்கு உதவித்தொகை வழங்கினார் உதயநிதி ஸ்டாலின்

சேலம்: உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை சார்பில் சேலம் மாவட்டம், சேலம் வட்டம், ஜருகுமலையில் உள்ள அரசு பள்ளிக் கட்டிடம் ‘நமக்கு நாமே’ திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்படுகிறது. இதற்கு உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை பங்களிப்பு தொகையாக 13 லட்சத்து 60,000 ரூபாயை, நேற்று ‘மாமன்னன்’ படப்பிடிப்புத் தளத்தில் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். அவருடன் கூடுதல் கலெக்டர் பாலசந்தர், சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன், ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணை தயாரிப்பாளர் எம்.செண்பகமூர்த்தி, இயக்குனர் மாரி செல்வராஜ், … Read more

தடை செய்யப்பட்ட ‘ப்ரீ ஃபயர்’ கேமை எப்படி விளையாட முடிகிறது? – காவல் துறைக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

மதுரை: “முழுமையாக தடை செய்யப்பட்ட ஃபிரீ ஃபயர் விளையாட்டை எப்படி தொடர்ந்து விளையாட முடிகிறது? போலீஸார் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?” என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. நாகர்கோவிலைச் சேர்ந்த ஐரின் அமுதா, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: என் மகள் இதாஸ் செலானி வில்சன் (19). நாகர்கோவில் பெண்கள் கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம் 2ம் ஆண்டு படித்து வந்தார். அவரை செப்.6 முதல் காணவில்லை. விசாரித்த போது என் மகள் நண்பர்கள் சிலருடன் … Read more

தாய், தந்தைக்கு கோயில் கட்டி வழிபடும் ஓய்வு எஸ்ஐ: மதுரையில் நெகிழ்ச்சி சம்பவம்

அவனியாபுரம்: மதுரை, சிந்தாமணியை சேர்ந்தவர் ரமேஷ்பாபு (57). தமிழ்நாடு காவல்துறையில் தனிப்பிரிவு எஸ்ஐயாக பணிபுரிந்து, விருப்ப ஓய்வு பெற்றவர். மனைவி ரேணுகாதேவி, மகன் பொன்மணி, மகள் திவ்யபாரதி. இவரது 5 சகோதரிகள் மற்றும் ஒரு சகோதரர் அருகருகே வசித்து வருகின்றனர். ரமேஷ்பாபு, மறைந்த தனது தாய், தந்தையை போற்றும் வகையில் குடும்பத்தினருடன் ஆலோசனை செய்து, சிலை வைக்க முடிவெடுத்தார். இதற்காக தனது வீட்டருகே தந்தை பொன்னாண்டி, தாயார் மீனாம்பாள் ஆகியோர் நினைவில் ஒரு கோயில் எழுப்பினார். இந்த … Read more

துரைமுருகன் மேடையில் பேசும்போது பவர் கட்; 2 மின்வாரிய அதிகாரிகள் டிரான்ஸ்ஃபர்

காட்பாடியில் பள்ளி நிகழ்ச்சியில் மேடையில் பேசிக்கொண்டு இருக்கும்போது, திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், அமைச்சர் துரைமுருகன் பேச முடியாமல் தவித்த விவாகரத்தில் மின் வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது. வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இலவச மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பங்கேற்று மாணவிகளுக்கு மிதிவண்டிகளை வழங்கினார். இதையும் படியுங்கள்: என்னை மிரட்டிப் பார்க்க ஸ்டாலின் நினைத்தால் முடியாது: ரெய்டுக்கு பிறகு எஸ்.பி வேலுமணி பேட்டி முன்னதாக நிகழ்ச்சியில் … Read more

சுசீலாவை மிஞ்சும் தேயிலை தொழிலாளியின் குரல்.! தீயாக பரவும் வீடியோ.! 

நீலகிரி மாவட்டத்தில் பிரதான தொழிலாக இருப்பது தான், தேயிலை விவசாயம். இதை அப்பகுதி மக்கள் அதிக அளவில் செய்து வருவார்கள். அன்றாடம் காலை முதல் மாலை வரை கடும் குளிரில் இந்த மக்களின் பணி தொடரும். இத்தகைய சூழலில், கோத்தகிரி பகுதியில் இருக்கும் தேயிலை தோட்டத்தில் ஒரு பெண் தொழிலாளி பணிபுரியும் போது வேலை களைப்பு தெரியாமல் இருக்க பாடலை பாடி தேயிலை பறிக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.  தேயிலை தோட்டத் தொழிலாளியின் … Read more

“18-ம் ஆண்டில் தேமுதிக… யாரிடமும் பணம் வசூல் செய்யாமல் கட்சியை வளர்க்கிறோம்” – விஜயகாந்த்

சென்னை: “கட்சி துவங்கிய நாள் முதல் இன்று வரை யாரிடமும் பணத்தை வசூல் செய்யாமல், சொந்த உழைப்பில் வியர்வை சிந்தி சம்பாதித்த பணத்தைக் கொண்டுதான் கட்சியை வளர்த்து வருகிறோம். இதற்கு நமக்கு கிடைத்த கழகத்தின் நரம்புகளாகவும், ரத்த நாளங்களாகவும் செயல்படும் தொண்டர்கள்தான் காரணம்” என்று தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “பல்வேறு சவால்களைத் தாண்டி நல்ல நோக்கத்திற்காகத் தொடங்கப்பட்ட கட்சி நமது தேசிய முற்போக்கு திராவிட கழகம். நமது கட்சி … Read more

சி.விஜயபாஸ்கர் ரெய்டு விவகாரம்: 13 இடங்களிலும் கிடைத்தது இவைதான்!

விராலிமலை சட்டப்பேரவை உறுப்பினரும், அதிமுக முன்னாள் அமைச்சருமான சி. விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களிலும், அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நேற்று (செப். 11) சோனை நடத்தினர். விஜயபாஸ்கருடன் தொடர்பில் இருந்த மருத்துவர்கள் பலரது வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. குறிப்பாக, வேல்ஸ் பல்கலை., வேந்தரும், பிரபல தயாரிப்பாளருமான ஐசரி கணேஷ் தொடர்பான சில இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.    மேலும் படிக்க | முடிந்தது ரெய்டு… எஸ்பி வேலுமணியிடம் சிக்கியது என்னென்ன?   2020ஆம் ஆண்டில், … Read more

தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை உதவி பேராசிரியர் ‘சஸ்பெண்ட்’: அமைச்சர் மா.சுப்பிரமணியன் நடவடிக்கை

தர்மபுரி: தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரியில் 2ம் ஆண்டு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த உதவி பேராசிரியரை சஸ்பெண்ட் செய்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நடவடிக்கை எடுத்துள்ளார். தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரியில், சட்டம் சார்ந்த மருத்துவ பிரிவில் உதவி பேராசிரியர் சதீஷ்குமார், 2ம் ஆண்டு படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து சென்னை மருத்துவக்கல்லூரி இயக்குநருக்கு மாணவிகள் புகார் அளித்தனர். அதன்பேரில், முதல்கட்டமாக மருத்துவமனை குழந்தைகள் வார்டுக்கு சதீஷ்குமார் இடமாற்றம் செய்யப்பட்டார். இதுதொடர்பாக டாக்டர்கள் … Read more

அரை கப் பலாப் பழம்… இவ்வளவு சத்து இருக்கு; சுகர் பேஷன்ட்ஸ் சாப்பிடலாமா?

உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, நீரிழிவு நோய் ஒரு நாள்பட்ட, வளர்சிதை மாற்ற நோய் ஆகும், இந்தியாவில் 20 மற்றும் 70 வயதுக்குட்பட்ட 8.7 சதவீத மக்கள்தொகை நீரிழிவு நோயுடன் போராடி வரும் நிலையில், எண்ணிக்கை இன்னும் அதிகரித்து வருகிறது. இந்த நிலை இரத்தத்தில் சர்க்கரையின் அளவை உயர்த்துவதற்கு வழிவகுக்கிறது, இது சிகிச்சையளிக்கப்படாவிட்டால், கண்கள், இதயம், சிறுநீரகம் மற்றும் பல உடல் பாகங்களை பாதிக்கலாம். இதையும் படியுங்கள்: சூடான நீரில் தினமும் 10 கிராம் ஊறவைத்து…. சுகர் … Read more

கைது செய்யப்பட்ட அதிமுகவினரை சந்தித்துப் பேசிய முன்னாள் அமைச்சர்கள்

கோவை: கோவையில் எஸ்.பி.வேலுமணி வீடு முன்பு திரண்டு லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு எதிராக போராட்டம் நடத்தியதால் கைது செய்யப்பட்டு, மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள அதிமுக தொண்டர்களை முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், தங்கமணி, ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் சந்தித்துப் பேசினர். முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீடு உள்ளிட்ட மாநிலம் முழுவதும் 31 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் இன்று (செப்.13) சோதனை நடத்தினர். லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் சோதனையை அறிந்து எஸ்.பி.வேலுமணி வீட்டின் முன்பு திரண்டு திமுக அரசைக் … Read more