மதுரை மலர் சந்தையில் ஒரு கிலோ மல்லிப் பூ ரூ.3000க்கு விற்பனை

மதுரை: மதுரை மலர் சந்தையில் ஒரு கிலோ மல்லிப் பூ ரூ.3000க்கு விற்பனை செய்யப்படுகிறது. தொடர் முகூர்த்த தினம், ஓணம் பண்டிகையை முன்னிட்டு பூக்களின் விலை கடுமையாக உயர்வு உயர்ந்துள்ளது. மாட்டுத்தாவணி மலர் சந்தையில் மல்லிகைப்பூ கிலோ ரூ. 3000 க்கு விற்பனை, முல்லை ரூ.1500, சம்பங்கி ரூ. 750 பிச்சிப்பூ, ரூ.1000 ரூபாய், பட்டன் ரோஸ் ரூ.250, செண்டுமல்லி ரூ.100 என விற்பனை செய்யப்படுகிறது.

நீலகிரி: சாலையில் உலாவரும் காட்டு யானைகள் – வாகனங்களை வழிமறிப்பதால் அச்சம்

கோத்தகிரி மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக வாகனங்களை வழிமறிக்கும் யானைகளால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் அண்மைக் காலமாக வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் கூட்டம் சாலையில் உலா வருவது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில் கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் நெடுஞ்சாலையில் நான்காவது கொண்டை ஊசி வளைவில் பகல் நேரத்தில் தனது குட்டியுடன் இரண்டு யானைகள் சாலையில் உலா வந்து வாகனங்களை மறித்தன. இதனால் அச்சமடைந்த வாகன ஓட்டிகளும் … Read more

பல லட்சம் ஹவாலா பணத்தை ஏடிஎம்மில் டெபாசிட் செய்த இளைஞர்: சுற்றிவளைத்து பிடித்த போலீஸார்

சென்னை: வங்கி ஏடிஎம் இயந்திரத்தில் தினமும் லட்சக்கணக்கில் ஹவாலா பணம் செலுத்திய இளைஞர், போலீஸாரிடம் பிடிபட்டுள்ளார். அவரது பின்னணியில் உள்ளவர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சென்னை கீழ்ப்பாக்கம் டாக்டர் அழகப்பா சாலையில் உள்ள வங்கி ஏடிஎம் மைய இயந்திரத்தில் பணம் செலுத்தும் வசதியும் உள்ளது. இந்த ஏடிஎம் மூலம் கடந்த ஒரு மாதமாக தினமும் காலை 6 மணி அளவில் ஒரே வங்கிக் கணக்குக்கு ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை பணம் … Read more

ராக்கெத்லான் போட்டியில் அண்ணன், தங்கை தங்க பதக்கம் வென்று சாதனை!

‘டேபிள் டென்னிஸ், ஸ்குவாஸ், லான் டென்னிஸ் மற்றும் இறகுபந்து ஆகிய நான்கு விளையாட்டுகளையும் உள்ளடக்கிய ராக்கெத்லான்’ சாம் பியன்ஷிப் – 2022 ஆண்டுக்கான போட்டி ஆஸ்திரியா நாட்டில் நடைபெற்றது. ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ஒற்றையர், இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் ஆகிய பிரிவுகளில், நடைபெறும் போட்டிகளில் இந்திய அணி சார்பாக கோவை சூலூர் பகுதியை சேர்ந்த எம்.டி.என்., பியூச்சர் பள்ளியில் பயிலும் ஒரே குடும்பத்தை  சேர்ந்த அண்ணன் ஆதித், தங்கை ஆதிரை ஆகியோர் இந்திய அணியில் இடம் … Read more

ஊத்துக்கோட்டை பேரூராட்சி முழுவதும் புகைபோக்கி மூலம் கொசு ஒழிக்கும் பணி மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை பேரூராட்சி பஸ் நிலையத்தில் ரூ.20 லட்சத்தில் கழிவறை கட்டிடம் கட்டவும் மற்றும் தினகரன் செய்தி எதிரொலியால் பேரூராட்சி முழுவதும் கொசு மருந்து தெளிக்கவும் பேரூராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. ஊத்துக்கோட்டை பேரூராட்சி மன்ற கூட்டம் பேரூராட்சி தலைவர் அப்துல் ரஷீத் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் துணைத்தலைவர் குமரவேல், செயல் அலுவலர் கலாதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஊத்துக்கோட்டை பஸ் நிலையத்தில் ரூ.20 லட்சத்தில் பொதுக்கழிப்பிடம் கட்டுதல், பேரூராட்சி முழுவதும் புகைபோக்கி … Read more

விற்பனைக்கு வருகிறதா வேதா நிலையம்? ஜெ தீபா விளக்கம்

மிக விரைவில் போயஸ் தோட்டத்து இல்லத்தில் குடியேற இருப்பதாக மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தெரிவித்துள்ளார். வேதா நிலையம் விற்பனைக்கு வருவதாக வரும் தகவல்களை நம்ப வேண்டாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். வாட்ஸ் அப்பில் ஆடியோ வெளியிட்டுள்ள அவர், போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா நிலையம், ஜெயலலிதாவின் தாயார் சந்தியாவின் பூர்வீக இல்லம் எனவும், அவர் மறைந்த பிறகு ஜெயலலிதா வசம் ஒப்படைக்கப்பட்டதாகவும், அந்த வீட்டில் ஜெயலலிதாவும், தனது தந்தையான ஜெயராமனும் வாழ்ந்து வந்ததையும், … Read more

சென்னையில் செப்.9-ல் விழா: இசைக் கலைஞர்களுக்கு கல்கி அறக்கட்டளை விருது

சென்னை: கர்னாடக இசைப் பாடகி ஐஸ்வர்யா வித்யா ரகுநாத், கடம் வித்வான் சந்திரசேகர சர்மா ஆகியோருக்கு கல்கி நினைவு அறக்கட்டளை விருது வழங்கப்பட உள்ளது. சென்னை மயிலாப்பூரில் வரும் 9-ம் தேதி நடக்கும் விழாவில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. இதுதொடர்பாக கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் இசைக் கலைஞர்களுக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான விருது விழா, சென்னை மயிலாப்பூர் ராகசுதா அரங்கில் … Read more

பலத்த மழை காரணமாக ரயில் பாதையில் மண்சரிவு; மேட்டுப்பாளையம் – ஊட்டி மலை ரயில் சேவை 2வது நாளாக ரத்து

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் பலத்த மழை காரணமாக மேட்டுப்பாளையம் -ஊட்டி மலை ரயில் பாதையில் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டது. மேட்டுப்பாளையம், நீலகிரி மாவட்டம் குன்னூர், பர்லியாறு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக மேட்டுப்பாளையம்- ஊட்டி மலை ரயில் பாதையில் கல்லாறு- ஹில்குரோவ் ரெயில் நிலையங்கள் இடையே மண் சரிவு ஏற்பட்டது. இதனால் ரயில் தண்டவாளத்தில் பெரிய, சிறிய பாறாங்கற்கள் உருண்டு … Read more

'ரூ.85 லட்சம் வரை கிடைக்கும்'- இழப்பீட்டு தொகை அறிவிப்பால் ஃபோர்டு ஊழியர்கள் அதிருப்தி

சென்னை மறைமலைநகர் ஃபோர்டு தொழிற்சாலை கார் உற்பத்தியை நிறுத்தியுள்ள நிலையில், ஊழியர்களுக்கான இழப்பீட்டு தொகையை ஃபோர்டு நிர்வாகம் அறிவித்துள்ளது. நிர்வாகம் அறிவித்துள்ள இழப்பீட்டுத் தொகை போதுமானதாக இல்லை எனக்கூறி நிரந்தர தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். சென்னை அடுத்த மறைமலை நகரில் ஃபோர்டு தொழிற்சாலை சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வந்தது. இந்த ஆலைகளில் வருடத்திற்கு 4 லட்சம் கார்கள் உற்பத்தி செய்யமுடியும் என்ற நிலையில், கடந்த சில ஆண்டுகளாக 80 ஆயிரம் கார்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டு வந்தன. இதனால் ஃபோர்டு … Read more