இங்கிலாந்து பிரதமரானார் லிஸ் ட்ரஸ்.. நாளை ராணியுடன் சந்திப்பு.. ரிஷி சுனக் பின்னடைவு ஏன்?

நடப்பாண்டின் ஜூலை 7ஆம் தேதி, பிரிட்டன் பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்தார். கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஜாலியான பிறந்தநாள் பார்ட்டி, தொடர் பாலியல் கிசுகிசு என ஜான்சன் சிக்கியதே இதற்கு காரணம். சொந்தக் கட்சியிலேயே போரிஸ் ஜான்சனுக்கு எதிர்ப்பு எழுந்தது. இந்திய வம்சாவழியினரான ரிஷி சுனக் உள்ளிட்ட சொந்த கன்சர்வேடிவ் கட்சியின் அமைச்சர்களே தொடர்ச்சியாக ராஜினாமா செய்தனர்.ஒருகட்டத்தில் நெருக்கடி அளவுக்கு அதிகமாக முற்றவே அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து … Read more

வானமுட்டி பெருமாள் கோயில்: குடமுழுக்கையொட்டி யானை மீது புனித நீர் கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜை!

பிரசித்தி பெற்ற வானமுட்டி பெருமாள் கோயிலில் வரும் 9-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதனையொட்டி, இன்று மாலை தொடங்க உள்ள யாகசாலை பூஜைக்கு காவிரி ஆற்றில் இருந்து யானை மீது புனித நீர் எடுத்துவரப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டம், கோழிகுத்தி கிராமத்தில் பிரசித்தி பெற்ற வானமுட்டி பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஒரே அத்தி மரத்தில் 14 அடி உயரத்தில் நின்ற கோலத்தில் வானமுட்டி பெருமாள் அருள்பாலிக்கிறார். இக்கோயிலில் வரும் 9-ம் ம் தேதி மகா கும்பாபிஷேகம் … Read more

எல்லா உயர்வுகளுக்கும் அடித்தளம் ஆசிரியர்கள்தான்: டிடிவி தினகரன் ஆசிரியர் தின வாழ்த்து

சென்னை: ஒரு மனிதர் தன் வாழ்நாளில் பெறும் எல்லா உயர்வுகளுக்கும் அடித்தளமிடுவது ஆசிரியர்கள்தான் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆசிரியர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ”அறப்பணியாம் ஆசிரியர் பணியில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டுள்ள ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் ஆசிரியர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். ‘வகுப்பறைகளில்தான் நாட்டின் எதிர்காலம் தீர்மானிக்கப்படுகிறது’ என்று சொன்ன முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த நாள் ஆசிரியர் தினமாகக் … Read more

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட கோயில்களில் கும்பாபிஷேக விழா கோலாகலம்; ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில் உள்ள தன்வந்திரி பகவான் கோயிலில் கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். திருக்கழுக்குன்றம் அடுத்த திருக்குமரன் நகர் பை – பாஸ் சாலை அருகே ஆரோக்கிய லட்சுமி உடனுறை தன்வந்திரி பகவான் கோயில் புதிதாக கட்டப்பட்டு  கோயிலுக்கான மகா கும்பாபிஷேகம் நேற்று வெகு விமர்சையாக நடந்தது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நான்கு கால பூஜைகள் மற்றும் துவார பூஜைகள், பாலிகா பூஜை, அக்னி பிரதிஷ்டைகளுடன் நடைபெற்றதை தொடர்ந்து … Read more

மாணவிகளுக்கு ரூ.1000 வழங்குவது இலவசம் அல்ல: 'புதுமைப் பெண்' திட்ட தொடக்க விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

சென்னை: “மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குவதை அவர்களுக்கு இலவசமாக வழங்குவதாக அரசு கருதவில்லை. அதை வழங்குவதை அரசு தன் கடமையாக நினைக்கிறது. பள்ளியுடன் படிப்பை நிறுத்திவிடும் பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் கிடைப்பதால், கல்லூரியில் நுழைகிறார்கள். இதன்மூலம் தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சி அதிகமாகும்” என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை ராயபுரத்தில் தமிழக அரசு சார்பில், புதுமைப்பெண் மற்றும் 26 தகைசால் பள்ளிகள் மற்றும் 15 மாதிரிப் பள்ளிகள் தொடக்க விழா இன்று நடைபெற்றது. இந்த … Read more

அகரம்தூளி கிராமத்தில் அபாயகரமான சாலை வளைவில் வேகத்தடை அமைக்க வேண்டும்; எச்சரிக்கை பலகை வைக்கவும் வலியுறுத்தல்

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அருகே அகரம் துளி கிராமத்தில் அபாயகரமான சாலை வளைவில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்றும் எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் என்று கிராம மக்கள் வலியுறுத்துகின்றனர். உத்திரமேரூர் அடுத்த அகரம்தூளி, அத்தியூர், மேல்தூளி ஆகிய கிராமம் முதல் காவனூர்புதுசேரி செல்லும் சாலை உள்ளது. சுமார் 6 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட இந்த சாலை கிராம மக்களின் முக்கிய சாலையாக உள்ளது. இந்த சாலை வழியாகத்தான் கிராம மக்கள் மகளிர் சுயஉதவிக்குழுவினர் மற்றும் முதியோர் … Read more

நிலத்தடி நீர்வளம் காக்க ஆற்று மணல் குவாரிகளை மூட வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: நிலத்தடி நீர்வளத்தைக் காக்க ஆற்று மணல் குவாரிகளை மூட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழகம் முழுவதும் மணல் கொள்ளை வரலாறு காணாத வகையில் தலைவிரித்தாடத் தொடங்கி இருக்கிறது. தமிழகத்தின் சுற்றுச்சூழலையும், நிலத்தடி நீர்வளத்தையும் பாதுகாப்பதற்கான தேவைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதற்கு முற்றிலும் எதிரான வகையில், பெருகி வரும் மணல் கொள்ளையை அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது தமிழகத்திற்கு பெருங்கேட்டை … Read more

எதிர்க்கட்சி துணைத் தலைவர் யார்? சட்டப்பேரவை நடக்கும் போது தெரியும்: சபாநாயகர் அப்பாவு பேட்டி

நெல்லை: எதிர்க்கட்சி துணைத் தலைவர் யார் என்பது பேரவை நடக்கும் போது தெரியவரும் என தமிழக சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். நெல்லையில் சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு நேற்று நிருபர்களிடம் கூறியதாவது, ‘‘சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவிக்காக அதிமுக ெகாறடா அளித்துள்ள மனு குறித்து இப்போது எதுவும் சொல்வதற்கில்லை. சட்டப்பேரவை நடக்கும் போது அது குறித்து தெரியவரும். இவ்விவகாரத்தில் சரியான முறையில் ஜனநாயக அடிப்படையில் முடிவுகள் இருக்கும்’’ என்றார்.

சென்னை மாநகரை தூய்மையாக வைக்க பொது மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் – மாநகராட்சி தகவல்..!

பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில், சிங்கார சென்னை 2.0 உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ், நகரை தூய்மையாகவும், அழகுடனும் பராமரிக்க பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன் அடிப்படையில், பொது இடங்களில் குப்பைகள் மற்றும் கட்டிட கழிவுகளை கொட்டுபவர்கள் மீது அபராதம் வழங்கப்பட்டு வருகிறது.  மேலும், பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள், வரையப்பட்டுள்ள கலர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டு, அந்த இடங்களில் தமிழக கலாச் சாரத்தையும் வரலாற்று சிறப்புகளையும் போற்றும் வகையில், வண்ண ஓவியங்கள் வரையப்பட்டு அழகுப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கடந்த … Read more

தமிழக மாணவர்களுக்கு ஆந்திராவில் ரயில்வே தேர்வு மையம்: அன்புமணி கண்டனம்

சென்னை: இந்திய ரயில்வேயில் குரூப் டி பணியிடங்களுக்கான போட்டித் தேர்வை எழுத தமிழக மாணவர்களுக்கு ஆந்திராவில் மையம் ஒதுக்கப்பட்டுள்ளதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ”இந்திய ரயில்வேயில் குரூப் டி பணியிடங்களை நிரப்புவதற்காக வரும் 8ஆம் தேதி நடைபெறும் போட்டி தேர்வுகளை எழுதுவதற்காக தமிழக மாணவர்களுக்கு ஆந்திராவில் மையம் ஒதுக்கப்பட்டுள்ளது. இது கண்டிக்கத்தக்கது. தமிழக மாணவர்கள் ஆந்திர தேர்வு மையத்திற்கு செல்ல 700.கி.மீ.க்கும் கூடுதல் தொலைவு … Read more