2050-க்குள் கார்பன் சமநிலை: சென்னை காலநிலை மாற்ற செயல் திட்ட வரைவு அறிக்கையின் முக்கிய அம்சங்கள்

சென்னை: சென்னை காலநிலை மாற்ற செயல் திட்ட வரைவு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொதுமக்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காலநிலை மாற்றதை எதிர்கொள்ள உலகின் அனைத்து நகரங்களும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அனைத்து பெரு நகரங்களும் காலநிலை மாற்ற செயல் திட்ட அறிக்கையின் அடிப்படையில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னைக்கான காலநிலை மாற்ற செயல் திட்ட அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பருவநிலை மாறுபாடு பிரச்சினையை எதிர்கொள்ள கடந்த 2005 அக்டோபரில் தொடங்கப்பட்ட ‘சி40 மேயர்கள்’ … Read more

முதல்வர் ஸ்டாலின் அதிமுகவை அழிக்க பார்க்கிறார்: ஜெயக்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு!

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. எஸ்.பி.வேலுமணி தொடர்புடைய 26 இடங்களில், விஜயபாஸ்கர் தொடர்புடைய 13 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ஏற்கெனவே எஸ்.பி.வேலுமணி தொடர்புடைய இடங்களில் இரண்டு முறை லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியது தற்போது மூன்றாவது முறையாக இந்த சோதனை நடைபெறுகிறது. கிராமப்புறங்களில் தெருவிளக்குகளை எல்இடி விளக்குகளாக மாற்றியதில் 500 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக வழக்கு பதிவு … Read more

பண்டிகை காலத்தை முன்னிட்டு சுங்குடி சேலை உற்பத்தி தீவிரம்

சின்னாளபட்டி: தீபாவாளி உள்ளிட்ட பண்டிகை நெருங்கி வருவதால், சின்னாளபட்டியில் சுங்குடி சேலை உற்பத்தி தீவிரமாக நடந்து வருகிறது. திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி சுங்குடி சேலைக்கு பிரசித்தி பெற்றது. சுங்குடி நகரம் எனவும் அழைக்கப்படுகிறது. இங்கிருந்து பிற மாவட்டங்கள், மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு சுங்குடி சேலைகள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. 40 வருடங்களுக்கு முன்பு வட்டம் மற்றும் சதுர வண்ண புள்ளிகளை சேலைகளில் பதித்து சுங்குடி சேலை என  பெயர் வைத்து விற்பனை செய்து வந்தனர். வயதானவர்கள் மட்டுமே … Read more

சத்தியமங்கலத்தில் அதிமுக, திமுக தனித்தனியே நடத்திய விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா

சத்தியமங்கலம் அடுத்த பனையம்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் அதிமுக, திமுக என தனித்தனியாக விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பவானிசாகர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பனையம்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் திமுக ஒன்றிய செலாளர் மகேந்திரன் தலைமையில் முதலில் நடைபெற்ற விழாவில் தேசியகீதம் பாடப்பட்டு 99 மாணவ, மாணவியருக்கு சைக்கிள் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக தேசிய கீதம் பாடப்பட்டு அதே மாணவியரிடம் பவானிசாகர் அதிமுக சட்டமன்ற … Read more

காவிரி பாலத்தில் ஸ்தம்பிக்கும் டூவீலர்கள்: போக்குவரத்தை சீர்செய்ய என்ன வழி?

காவிரி மேம்பாலத்தில் இரு சக்கர வாகன போக்குவரத்தை அனுமதிப்பதில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும், வழக்கறிஞருமான எஸ்.ஆர்.கிஷோர்குமார் மாவட்ட நிர்வாகத்திற்கும், காவல்துறைக்கும் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது; திருச்சியின் அடையாளங்களின் ஒன்றாக இருக்கும் திருச்சி மலைக்கோட்டையையும்-ஸ்ரீரங்கத்தையும் இணைக்கும் காவிரி ஆற்றுப்பாலம் கட்டி 40 ஆண்டுகளாகும் நிலையில் அதன் மேற்பரப்பு சாலையில் பழுது ஏற்பட்டு வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால், தற்பொழுது காவிரி மேம்பாலம் … Read more

மாணவியரிடம் அத்துமீறல்: தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி உதவிப் பேராசிரியர் பணியிடை நீக்கம்

தருமபுரி: தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவியரிடம் அத்துமீறி நடந்துகொண்ட உதவிப் பேராசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் சட்டம் சார்ந்த மருத்துவப் பிரிவின் உதவிப் பேராசிரியராக பணியாற்றியவர் மருத்துவர் சதீஷ்குமார். இவர் மீது, மருத்துவக் கல்லூரி இரண்டாம் ஆண்டு மாணவியர் சார்பில் அண்மையில் கல்லூரி முதல்வரிடம் புகார் மனு ஒன்று அளிக்கப்பட்டது. அந்த மனுவில், ‘உதவிப் பேராசிரியர் சதீஷ்குமார் வகுப்பறையில் மாணவியரிடம் அத்துமீறும் வகையில் நடந்து கொள்கிறார். இவரது நடவடிக்கைகள் மற்றும் … Read more

அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்ட வழக்கு: சிபிசிஐடி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!

ஜூலை 11ஆம் தேதி அதிமுக தலைமை அலுவலகம் சூறையாடப்பட்டதாக கூறி அளித்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை சிபிஐ அல்லது வேறு தன்னிச்சையான விசாரணை அமைப்புகளுக்கு மாற்ற கோரி அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு விசாரணைக்கு வந்த போது, இந்த சம்பவம் தொடர்பான மூன்று வழக்குகளையும் சிபிசிஐடிக்கு மாற்றி இருப்பதாக டிஜிபி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வழக்கின் விசாரணை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய … Read more

உசிலம்பட்டியில் சந்தை கடைகளை பூட்டிய ஊராட்சி நிர்வாகத்தினர்: பூக்களை விற்க முடியாமல் விவசாயிகள் தவிப்பு

உசிலம்பட்டி: மதுரைக்கே மல்லிகை பூக்களை அதிகம் உற்பத்தி செய்யும் பகுதியாக உசிலம்பட்டி பகுதி உள்ளது. இந்த பகுதியில் விளையும் பூக்களை உசிலம்பட்டி பேருந்து நிலையத்தின் பின்புறமுள்ள ஊராட்சி ஒன்றியத்திற்கு சொந்தமான வணிக வளாக கடைகளில் இயங்கி வந்த பூ மார்க்கெட்டிற்கு விவசாயிகள் கொண்டு வந்தனர். இந்நிலையில், ஊராட்சி ஒன்றிய கடைகளை ஏலம் விடுவது தொடர்பாகவும், ஏலம் எடுத்தவர்களுக்கு கடைகளை கையகப்படுத்தி ஒப்படைக்கும் நோக்கத்திலும், ஊராட்சி ஒன்றிய நிர்வாகிகள் பூ மார்க்கெட் உள்ளிட்ட சுமார் 240 கடைகளை இன்று … Read more

பிற நாடுகளிலுள்ள புராதன சிலைகளை மீட்டுவர தனிப்படை – டிஜிபி தலைமையிலான குழு முடிவு

அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ள பழமை வாய்ந்த புராதன சிலைகளை பத்திரமாக மீட்டு தமிழகம் கொண்டு வர தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. புராதன சிலைகளை மீட்டுவர ஆய்வுக் கூட்டம் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவின் சிறப்பு கூட்டம் இன்று மாலை டிஜிபி அலுவலகத்தில் நடைபெற்றது. அதில், தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் செ.சைலேந்திர பாபு, அவர்கள் தலைமையில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவின் காவல்துறை இயக்குனர் முனைவர் கி. ஜெயந்த் முரளி, … Read more

இளைஞர்கள் ஏன் பூஸ்டர் தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும்.. 5 காரணங்கள்!

உலகை உலுக்கிய கோவிட் பெருந்தொற்று பாதிப்பில் இருந்து நம்மை நாமே தற்காத்துக் கொள்ள கோவிட் தடுப்பூசிகள் பெரிதும் உதவிக் கரமாக இருந்தன.இந்தத் தடுப்பூசிகள் போட்டப் பிறகு பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என அரசு அறிவுறுத்திவருகிறது. இதற்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துவருவதே காரணம். இந்த நிலையில் இங்கிலாந்தில் உள்ள 70 வயதுக்கு மேற்பட்ட 90 சதவீத முதியோர்கள் மூன்றாவது தடுப்பூசியான பூஸ்டர் போட்டுள்ளனர் என ஆய்வுகள் கூறுகின்றன.வெளிநாடுகளில் பூஸ்டர் தடுப்பூசி முதலில் பாதிக்கப்படும் வயதினருக்கு வழங்கப்படுகிறது. … Read more