கனமழையால் தண்டவாளத்தில் மண்சரிவு ஊட்டி மலை ரயில் சேவை ரத்து: பயணிகளுடன் மேட்டுப்பாளையம் திரும்பி வந்தது

மேட்டுப்பாளையம்: கனமழையால் தண்டவாளத்தில் மண் சரிந்து விழுந்ததால் ஊட்டி மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டு பயணிகளுக்கு கட்டணம் திருப்பி வழங்கப்பட்டது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் காலை 7.10 மணிக்கு ஊட்டிக்கு மலை ரயில் புறப்பட்டது. 180 பயணிகள் உற்சாகமாக பயணம் செய்தனர். இந்நிலையில், நேற்றி முன்தினம் இரவு கல்லார் பகுதியில் கனமழை பெய்தது. இதனால், கல்லார்-ஹில்குரோவ் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் மண் சரிந்தது. ராட்சத பாறைகளுடன் தண்டவாளம் … Read more

பிடுங்கி நடும் தொழில்நுட்பம் இருக்கும் போது மரங்களை ஏன் வெட்டுகிறீர்கள்? திருச்சி ஆட்சியருக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

திருச்சியை சேர்ந்த கண்ணன் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொது நல மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார்.அதில், “திருச்சி திருவனைக்கோயில் முதல் சுங்கச்சாவடி சாலை வரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சாலையின் இருபுறமும் சாலை விரிவாக்கம் மற்றும் வடிகால் நடைபாதை அமைப்பதற்காக மரங்கள் வெட்டப்பட்டு வருகின்றன. திருவனைக்கோயில் முதல் சுங்கச்சாவடி சாலை வரை உள்ள பகுதி முக்கிய சாலை அல்ல, இந்த சாலையில் அமைந்துள்ள மரங்கள் 40 ஆண்டுகள் பழமையானவை இதனை வெட்டுவதால் காற்று … Read more

“ஹெச்.ராஜா போகிற போக்கில் பேசிவிட்டு செல்வார்… உண்மை இருக்காது” – அமைச்சர் ரகுபதி

புதுக்கோட்டை: தமிழகத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பை உளவுத்துறை அதிகாரி ஒருவர் பலப்படுத்தி வருகிறார் என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவின் குற்றச்சாட்டுக்கு தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மறுப்பு தெரிவித்துள்ளார். தமிழக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, “தமிழகத்தில் ஒரு குறிப்பிட்ட உளவுத்துறை அதிகாரி, விடுதலைப் புலிகளை மீண்டும் பலப்படுத்துகிற வேலைகளிலே ஈடுபடுகிறார். சமூக ஊடகங்களில் ஒரு மாதமாக இந்தச் செய்தி பரவி வருகிறது. அந்த அதிகாரியின் பெயர்தான் எழுதப்படவில்லை. ஆனால் ஆங்காங்கே விடுதலைப் புலிகள் இயக்கம் … Read more

உத்திரமேரூர் அருகே புனித ஆரோக்கிய அன்னை ஆலய விழா தொடக்கம்

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த கருவேப்பம்பூண்டி ஊராட்சிக்குட்பட்ட மடம் கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த புனித ஆரோக்கிய அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் 322ம் ஆண்டு பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவையொட்டி நேற்று மாலை ஆலய வளாகத்தில் புதியதாக அமைக்கப்பட்ட கொடி கம்பத்தில் கொடியேற்று விழா நடைபெற்றது. விழாவில், செங்கல்பட்டு மறை மாவட்ட ஆயர் நீதிநாதன் கலந்து கொண்டு தன்னார்வலர் செல்வம் ஆலய வளாகத்தில் அமைத்து கொடுத்த புதிய கொடிக்கம்பத்தில் புனித ஆரோக்கிய அன்னை உருவம் … Read more

இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளிய இந்தியா: நாட்டின் ஜிடிபி வளர்ச்சியை எப்படி பார்ப்பது?

நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கு இரண்டு நல்ல செய்திகள் உள்ளன. ஒன்று, நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் (Q1 – ஏப்ரல், மே மற்றும் ஜூன் காலாண்டில்) மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்தியா 14% வளர்ச்சியைப் பதிவு செய்தது.இரண்டு, ஒட்டுமொத்த ஜிடிபியின் அடிப்படையில், இந்தியா இங்கிலாந்தை முந்தியது மற்றும் அமெரிக்கா, சீனா, ஜப்பான் மற்றும் ஜெர்மனிக்கு பின்னால் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக ஆனது. எவ்வாறாயினும், அவை பாராட்டத்தக்கவை, முதலில், இங்கிலாந்தை இந்தியா எப்படி முந்தியது என்பது குறித்து … Read more

கார் ‘பார்க்கிங்’ ஆக மாறும் வைகை கரை நான்கு வழிச்சாலை: குறைபாடு எங்கே?

மதுரை: ரூ.380 கோடியில் அமைந்த நான்கு வழிச்சாலை மதுரை வைகை கரையில் இரு புறமும் முழுமையாக போடப்படாததால் தற்போது பயன்பாடில்லாமல் அருகில் உள்ள வணிக நிறுவனங்களுக்கு வருவோர் கார்களை நிறுத்தும் ‘பார்க்கிங்’ ஆக மாறியுள்ளது. மதுரை நகர் பகுதியில் அதிகமாகும் போக்குவரத்து நெரிசலை குறைக்க தொலைநோக்குப் பார்வையில் வைகை கரையின் இருபுறமும் ரூ.380 கோடியில் நெடுஞ்சாலை துறை மற்றும் மாநகராட்சி இணைந்து 50 அடி அகலத்திற்கு பிரமாண்டமான நான்கு வழிச்சாலை அமைத்துள்ளது. இந்த சாலை முழுமையாக அமைந்தால் … Read more

எதிரிக்கும் வலிக்க வேண்டும் என்ற வெறியுடன் நண்பனின் காரியம் முடிவதற்குள் வாலிபரை தீர்த்துக் கட்டினோம்; ஊத்துக்கோட்டை கொலையில் கைதான மூவர் பகீர் தகவல்கள்

ஊத்துக்கோட்டை: நண்பனின் 16வது நாள் காரியம் முடிவதற்குள் எதிரியை கொலை செய்யவேண்டும் என்று முடிவு செய்து வாலிபரை கொலை செய்தோம் என்று ஊத்துக்கோட்டை கொலையில் பிடிபட்ட மூவர் போலீசில் பகீர் வாக்குமூலம் கொடுத்து உள்ளனர். ஊத்துக்கோட்டை அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ராபின் (26). இவர் கடந்த 31ம் தேதி இரவு தனது பைக்கில் நண்பர் கமலுடன் ஊத்துக்கோட்டை- திருவள்ளூர் சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகில் செல்லும்போது ராபின் வெட்டிக்கொல்லப்பட்டார். ஊத்துக்கோட்டை டிஎஸ்பி சந்திரதாசன் தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் … Read more

மழையால் பயன்படுத்தவே முடியாத நிலையில் மதுரை சாலைகள்: தண்ணீரில் தத்தளிக்கும் வாகன ஓட்டிகள்

மதுரை: மதுரையில் தற்போது பெய்யும் மழையால் முக்கிய சாலைகள் முதல் குடியிருப்பு சாலைகளை இருசக்கர வாகன ஓட்டிகள் பயன்படுத்தவே முடியாத படி தண்ணீரில் தத்தளித்து செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. மதுரை மாநகராட்சியில் 13 கி.மீ., தேசிய நெடுஞ்சாலைகளும், 74.4 கி.மீ., மாநில நெடுஞ்சாலைகளும், 1,545 கி.மீ., மாநகராட்சி சாலைகளும் உள்ளன. இதில், 265 கி.மீ., சாலைகள் பஸ்கள், கனரக வாகனங்கள், கார்கள் சென்று வருகின்றன. 1,253 கி.மீ., சாலைகள் குடியிருப்பு சாலைகளாக உள்ளன. இதில், 75 சதவீதம் … Read more

அரசுப் பேருந்து பயணிகளுக்கு ஜாக்பாட் அறிவி்ப்பு!

தலைநகர் சென்னையில் இருந்து நெல்லை, கோவை, திருச்சி உள்ளிட்ட தொலைத்தூரங்களுக்கு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் விரைவுப் பேருந்துகள் (SETC)இயக்கப்பட்டு வருகின்றன. அண்டை மாநிலங்கள் உட்பட மொத்தம் 250க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் இப்பேருநதுகள் நாள்தோறும் இயக்கப்பட்டு வருகின்றன. இப்பேருந்துகளில் பயணிப்போரை ஊக்குவிக்கும்விதமாக 10% கட்டண சலுகை அமல்படுத்தப்படும் என்று ஏற்கெனவே தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி இந்த அறிவிப்பு இனறு முதல் அமலுக்கு வருவதாக தமிழக போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. அதேசமயம் ஆன்வைனில் இருவழிப் பயண டிக்கெட்டுகளை (UP … Read more

சூலூர் அருகே மது குடித்த விவசாயிகள் 2 பேர் பலி

சூலூர்: சூலூர் அருகே மது குடித்த 2 விவசாயிகள் இறந்தனர். கோவை மாவட்டம் சூலூர் அருகே பொன்னாக்கணகானி பகுதியில் வசித்தவர்கள் வேலுச்சாமி (55), அவரது உறவினர் மனோகரன் (50). விவசாயிகள். நேற்று மாலை தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த இருவரும் அங்கு மது குடித்தனர். ரூ.310 விலையுள்ள மது பானத்தை ஒரு குவாட்டர் வாங்கி இருவரும் குடித்துள்ளனர். மது குடித்த சிறிது நேரத்திலேயே வேலுச்சாமி சம்பவ இடத்திலேயே இறந்தார். மனோகரன் நடந்து செல்ல முயன்றபோது மயங்கி விழுந்துள்ளார். … Read more