சட்டவிரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்ட கும்பலில் மர்ம மரணம் – வீட்டு உரிமையாளர் கைது

செங்கம் அருகே சட்டவிரோதமாக ஒரு வீட்டில் சூதாட வந்தவர் திடீரென மரணமடைந்ததால், அதில் சந்தேகம் உள்ளதாக உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.  திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த சாத்தனூர் பகுதியில் மோகன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் சட்டவிரோதமாக சூதாட்டம் விளையாடி வந்துள்ளனர். இந்நிலையில் முத்தனூர் பகுதியைச் சேர்ந்த முனுசாமி மகன் வெங்கடேஷ் என்பவர் வழக்கம்போல் சூதாட சாத்தனூர் வந்துள்ளார். மாலை 5 மணி அளவில் வெங்கடேசன் மாரடைப்பால் உயிரிழந்ததாக அவரது உறவினருக்கு தொலைபேசி மூலம் தகவல் கொடுத்துள்ளனர். தகவல் … Read more

எஸ்.பி.வேலுமணி தொடர்புடைய இடங்களில் ரூ.32.08 லட்சம் பறிமுதல்

சென்னை: முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடர்புடைய இடங்களில் ரூ.32.08 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியின்போது, கிராமப்புறங்களில் உள்ள தெருவிளக்குகளை எல்இடி விளக்குகளாக மாற்றும் திட்டத்தில் அரசுக்கு ரூ.500 கோடி இழப்பை ஏற்படுத்தியதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களுக்கான இடங்கள் என மாநிலம் முழுவதும் மொத்தம் 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் இன்று (13ம் தேதி) காலை முதல் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில் … Read more

அமித் ஷாவுக்கு அண்ணாமலை எழுதிய ரகசிய கடிதம்… திமுக முக்கிய புள்ளிகளை குறிவைக்கும் என்ஐஏ!

குட்கா, பான்மசாலா, கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. முந்தைய அதிமுக ஆட்சியில் இருந்தே இந்த தடை அமலில் இருந்தாலும் இன்றைக்கும் மாநிலத்தில் பரவலாக அனைத்து இடங்களில் போதைப்பொருட்கள் கிடைத்துக் கொண்டுதான் உள்ளன. அதுவும் பள்ளி, கல்லூரி வளாகங்கள், லிடுதிகளில் போதைப்பொருட்கள் சர்வசாதாரணமாக புழங்கி வருவதால் இளைய சமுதாயமே சீரழியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. தமிழகததில் இன்றைக்கு மிகப்பெரிய சமூக பிரச்னையாக உருவெடுத்துள்ள போதைப்பொருட்கள் புழக்கத்தை தடுப்பது குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் … Read more

Mr,Miss, Mrs. Tamilnadu: இம்முறை கோவையில் பிரம்மாண்டமாக நடக்கிறது

Mr, Miss, Mrs. Tamilnadu அழகுப்போட்டி தொடர்பாக,  ஃபாஷன் இயக்குநர்கள் கருண் ராமன், வினோத், ஆல்ஃபிரெட் ஜோஸ், அபர்னா (Mrs.Tamizhagam 2022) உள்ளிட்டோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, ஜான் அமலன் ஆதரவுடன் யுகியோ நிறுவனத்தின் சார்பில்  2022ஆம் ஆண்டுக்கான Mr, Miss, Mrs. Tamilnadu கோவை விஜய் எலன்சா நட்சத்திர விடுதியில், வரும் அக். 16ஆம் தேதி நடை பெற உள்ளதாக அவர்கள் அறிவித்தனர்.  சென்னையில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் ஏராளமாக நடப்பதால் இம்முறை கோவையை தேர்வு செய்ததாக … Read more

தென்மாவட்டங்கள் வழியாக வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் தொடர்ந்து இயக்கப்படுமா?.. பயணிகள் எதிர்பார்ப்பு

நெல்லை: தென்மாவட்டங்கள் வழியாக திருவிழாவை ஒட்டி இயக்கப்பட்ட வேளாங்கண்ணி எக்ஸ்பிரசை தொடர்ந்து இயக்கிட வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர். வேளாங்கண்ணி ஆலய திருவிழாவை முன்னிட்டு தமிழகம் மற்றும் கேரளாவில் இருந்து சில சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவில், நெல்லை, மதுரை, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் வழியாக வேளாங்கண்ணிக்கு சிறப்பு வாராந்திர ரயிலை ரயில்வேத்துறை அறிவித்து இயக்கியது. இந்த ரயில் ஒவ்வொரு புதன்கிழமையும் திருவனந்தபுரத்திலிருந்து புறப்பட்டு வியாழக்கிழமை வேளாங்கண்ணி சென்றது. மறுமார்க்கமாக வேளாங்கண்ணியிலிருந்து வியாழக்கிழமை புறப்பட்டு … Read more

எஸ்.பி வேலுமணி தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற சோதனை – சிக்கிய முக்கிய ஆவணங்கள்.!

முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற சோதனையில் 32.98 லட்சம் ரொக்க பணம், 1228 கிராம் தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்கள், மற்றும் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி, அமைச்சராக பணியாற்றிய 2015 முதல் 2018 வரையான காலகட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறையில் கிராமப்புறங்களில் ஏற்கனவே இருந்த தெருவிளக்குகளை எல்இடி விளக்குகளாக மாற்றும் திட்டத்தில் மேற்கொண்ட பணிகளுக்கான ஒப்பந்தங்களில் மிகப்பெரிய … Read more

தமிழிசை நடத்திய பிரஜா தர்பார்.. ஆளுநர்- முதல்வர் மோதல் பின்னணி!

திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் கவர்னர்களின் தலைவிதி என கட்டுரை ஒன்று வெளியானது. அந்தத் கட்டுரையில் தெலங்கானா மாநில ஆளுநர் மருத்துவர் தமிழிசை சௌந்தரராஜன் குறித்தும் கூறப்பட்டிருந்தது.இது மாநிலத்தில் ஆளுநர்- முதல்வர் உறவு மோசமாகியிருப்பதை காணலாம். முன்னதாக கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் தெலங்கானா மாநில ஆளுநராக தனது 4ஆம் ஆண்டு தொடக்க விழாவில் பேசினார். அப்போது, “75ஆவது சுதந்திர தினத்தன்று தேசியக் கொடியை ஏற்ற அனுமதிக்கவில்லை. கவர்னர் உரைக்கு எனக்கு அனுமதி இல்லை. நான் எங்கு சென்றாலும் … Read more

புளிய மரத்தின் மீது இருசக்கர வாகன மோதி விபத்தில் ஒருவர் பலி.!

செங்கல்பட்டு மாவட்டத்தில் புளிய மரத்தின் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் அணு ஆராய்ச்சி மைய ஊழியர் உயிரிழந்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் வெங்கப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சிற்றரசு(41). இவர் கல்பாக்கத்தில் உள்ள இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் இவர் அணுபுரம் சென்று விட்டு திருக்கழுகுன்றம் சாலை வழியாக வெங்கம்பாக்கம் பகுதி நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்பொழுது நிலைதடுமாறிய இருசக்கர வாகனம் சாலை ஓரத்தில் இருந்த புளிய மரத்தில் மோதியது. … Read more

சி.விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில் ரூ.18.37 லட்சம், ஆவணங்கள் பறிமுதல்

சென்னை: முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில் ரூ.18.37 லட்சம் ரொக்கப் பணம், ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை மஞ்சக்கரனை பகுதியில் தனியார் மருத்துவக் கல்லூரியின் புதிய மருத்துவமனைக்கு விதிமுறைகளுக்கு மாறாக சான்றிதழ் வழங்கியதாக எழுந்த புகாரில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு சொந்தமான 13 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் இன்று (13ம் தேதி ) சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் ரூ.18.37 லட்சம் … Read more

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் ரெய்டு… சிக்கியவை என்னென்ன?

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை இன்று அதிரடி சோதனை மேற்கொண்டது. சென்னை, கோவை, திருச்சி ஆகிய நகரங்களில் எஸ்.பி.வேலுமணி சொந்தமான 31 இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது. ‘இந்த சோதனையில் எந்த பொருளும், ஆவணங்களும் சிக்கவில்லை. வெறும் 7,500 ரூபாய்தான் கண்டெடுக்கப்பட்டது. அதனையும் போலீசார் தன்னிடம் திருப்பி கொடுத்துவிட்டு சென்றுவிட்டனர்’ என்று எஸ்பி வேலுமணி கெத்தாக கூறியிருந்தார். இந்த நிலையில் அவருக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட ரெய்டில் … Read more