டெல்டாவில் விடிய விடிய கனமழை 11,500 ஏக்கர் குறுவை நெற்பயிர்கள் நீரில் மூழ்கியது: மின்னல் தாக்கி தந்தை, மகன் பலி
தஞ்சாவூர்: டெல்டா மாவட்டங்களில் விடிய விடிய கனமழையால் அறுவடைக்கு தயாரான 11,500 ஏக்கர் குறுவை நெற்பயிர்கள் மூழ்கி பாதிக்கப்பட்டது. காவிரி டெல்டா மாவட்ட பாசனத்துக்கு இந்த ஆண்டு மே மாதத்திலேயே மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் குறுவை சாகுபடி பணியை விவசாயிகள் மும்முரமாக செய்தனர். இதன் மூலம் தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் 72 ஆயிரத்து 816 ஹெக்டேரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது. தற்போது பயிர்கள் வளர்ந்துள்ள நிலையில், மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இன்னும் … Read more