தனுஷ்கோடி அருகே 3 குழந்தைகளுடன் 2 நாட்களாக தவித்த அகதிகள் மீட்பு..!

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தை அடுத்த தனுஷ்கோடி அருகில் உள்ள 5-வது மணல் திட்டையில், 3 குழந்தைகள் உட்பட 5 பேர் இன்று நின்று கொண்டிருந்தனர். இதனைக் கண்ட மீனவர்கள், மண்டபம் கடலோர காவல் படை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கடலோர காவல் படை போலீசார், 5 பேரையும் மீட்டு அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது, அவர்கள் கடந்த 5-ம் தேதி தனுஷ்கோடி அருகில் உள்ள 5-வது மணல் திட்டையில் … Read more

ஆர்எஸ்எஸ் பேரணி பதிவை ரீ-ட்வீட் செய்த சென்னை போக்குவரத்து காவல் துறை: நெட்டிசன்கள் கண்டித்த பிறகு நீக்கம்

சென்னை: ஆர்எஸ்எஸ் பேரணி தொடர்பான ட்வீட்டை சென்னை போக்குவரத்துக் காவல் துறை ரீ-ட்வீட் செய்தது, நெட்டிசன்கள் மத்தியில் கடும் விமர்சனத்திற்கு உள்ளானதைத் தொடர்ந்து அந்த ட்வீட் நீக்கப்பட்டது. தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும், அளிக்கக் கூடாது என்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் கருத்து தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், திருவனந்தபுரத்தில் கடந்த 5-ம் தேதி ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடைபெற்றது. இது தொடர்பான வீடியோவை ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்களும், அதன் ஆதரவாளர்களும் பகிர்ந்து … Read more

அக்., 17ல் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர்… ரெடியாகும் எதிர்க்கட்சிகள்!

தமிழக சட்டமன்றத்தின் சபாநாயகர் அப்பாவு இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 17ம் தேதி காலை 10 மணிக்கு கூடுகிறது. சட்டப்பேரவை கூட்டத்தில் மறைந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்படும். சட்டப்பேரவை கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்தலாம் என அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தார். அதிமுகவில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் யாரென்பதில் குழப்பம் நீடித்து வருகிறது. எடப்பாடி தரப்பு தனியாக, ஓபிஎஸ் தரப்பு தனியாக சபாநாயகரிடம் மனு அளித்துள்ளனர். … Read more

ஆசிரியர்களுக்கு தினக்கூலிகளைவிட குறைந்த ஊதியமா?… ராமதாஸ் கண்டனம்

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழ்நாட்டில் 2381 பள்ளிகளில் மழலையர் வகுப்புகளை நடத்துவதற்காக மாதம் ரூ.5,000 ஊதியத்தில் பள்ளிக்கு ஒரு சிறப்பு ஆசிரியர் நியமிக்கப்படுவார் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. மழலையர் வகுப்புகளுக்கு சிறப்பு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில் தினக்கூலிகளை விட குறைந்த ஊதியத்தில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதை ஏற்க முடியாது. தமிழ்நாட்டில் தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளி வளாகங்களில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையங்கள் கடந்த 2018-ம் … Read more

பெரம்பூர் தொகுதியில் மழைநீர் கால்வாய் தூர்வாரும் பணிகள் தீவிரம்: எம்எல்ஏ ஆய்வு

பெரம்பூர்: பெரம்பூர் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் மழைநீர் கால்வாய் தூர்வாரும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை நாள்தோறும் ஆர்.டி.சேகர் எம்எல்ஏ மாநகராட்சி அதிகாரிகளுடன் நேரில் ஆய்வு செய்து வருகிறார். சென்னை நகரில் பருவமழை துவங்குவதற்கு முன், அனைத்து நீர்நிலைகள் மற்றும மழைநீர் கால்வாய்களை தூர்வாரி சீரமைக்க வேண்டும். அதன் வழியே மழைநீர் தடையின்றி வெளியேற வழிவகை செய்ய வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் சென்னை மாநகராட்சி அனைத்து பகுதிகளிலும் முக்கிய கால்வாய்களை … Read more

மாநில தொழிலாளர்களின் வீடுகளில் மரத்தில் கட்டியது பாகிஸ்தான் கொடியா?.. பல்லடத்தில் பரபரப்பு

பல்லடம் அருகே தொழிலாளர்கள் கட்டிய கொடியை, பாகிஸ்தான் கொடி என நினைத்து காவல் நிலையத்திற்கு பொதுமக்கள் தகவல் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த கரடிவாவி அருகே செட்டிபாளையம் சாலையில் உள்ள கதிர்வேல் தோட்டம் என்றப் பகுதியில் தனியார் பனியன் நிறுவனத்தில் பணி புரியும் வடமாநில தொழிலாளர்கள் 50-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்தக் கூட்டத்தில் சில இஸ்லாமிய இளைஞர்களும் உள்ளனர். இந்நிலையில் இன்று காலை அவர்கள் வசிக்கும் அறையின் மேல்பகுதி மற்றும் தென்னை … Read more

காதலிக்க மறுத்ததால் பொது இடத்தில் தாக்கப்பட்ட 10-ம் வகுப்பு மாணவி மனமுடைந்து தற்கொலை..!!

திருவாரூர் மாவட்டம் காட்டூர் விளாகம் பகுதியில் வசித்து வந்த பெண்ணின் கணவர் 5 ஆண்டுகளுக்கு முன்பு மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். அப்பெண் தனது 10ம் வகுப்பு படிக்கும் மகளுடன் வசித்து வந்துள்ளார். மற்றொரு மகள் பெண்ணின் தம்பி வீட்டில் படித்து வருகிறார். 10ம் வகுப்பு மாணவி காலாண்டு விடுமுறை காரணமாக வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் காட்டூர் விளாகம் பகுதியைச் சேர்ந்த மூர்த்தி என்பவரின் மகன் தீனதயாளன் (19), டிப்ளமோ முடித்துவிட்டு வீட்டில் உள்ளார். தீனதயாளன் … Read more

ஒரே வாரத்தில் கள்ளச்சந்தையில் விற்க முயன்ற 2765 குவிண்டால் ரேஷன் அரிசி பறிமுதல்: தமிழக அரசு 

சென்னை: செப்.26 முதல் அக்.2 வரையுள்ள ஒரு வார காலத்தில் கள்ளச்சந்தையில் விற்பதற்காக கடத்த முயன்ற, ரூபாய் 15,62,367 மதிப்புள்ள 2765 குவிண்டால் பொது விநியோகத்திட்ட அரிசியும், அக்கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட33 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி: “அனைவருக்கும் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்யும் பொருட்டு தமிழக அரசு பொது விநியோகத் திட்டம் / சிறப்பு பொது விநியோகத் திட்டம் ஆகியவற்றின் மூலம் … Read more

பெருசா ஒரு மழை வந்தா போச்சு… சென்னையில் இவ்ளோ பெரிய சிக்கல் இருக்குதாம்!

வடகிழக்கு பருவமழை வந்தாலே சென்னை தத்தளிக்க ஆரம்பித்து விடும். கடந்த சில ஆண்டுகளில் சென்னைவாசிகள் பெற்ற அனுபவம் இதைத்தான் சொல்கின்றன. இந்த ஆண்டாவது அப்படி எதுவும் நடக்காமல் பார்த்துக் கொள்ளுமா திமுக அரசு? என்ற கேள்வி பலரது மனங்களில் தோன்றி மறைவதை தவிர்க்க முடியவில்லை. பருவமழைக்கு முன்பாகவே ஆலோசனைக் கூட்டம் நடத்தி மழைநீர் வடிகால் பணிகளை சென்னை மாநகராட்சியும், தமிழக அரசும் முடுக்கி விட்டது. இதற்கான பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இங்கு தான் சிக்கலே … Read more

டிஜிட்டல் நீரிழிவு புரட்சி: அடுத்த தலைமுறைக்காக செயற்கை செயல்தளத்த அறிமுகம் செய்த டாக்டர் மோகன்ஸ்

Diabetes Specialities Centre: நீரிழிவு சிகிச்சை மையங்களில் மிகப்பெரிய சங்கிலித்தொடர் நிறுவனமான டாக்டர் மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு சிகிச்சை மையம், “3D முனைப்பு திட்டத்துடன் கூடிய டாக்டர் மோகன்ஸ் டிஜிட்டல் நீரிழிவு புரட்சி (Dr. Mohan’s Digital Diabetes Revolution)” என்ற பெயரில் டிஜிட்டல் புத்தாக்க திட்டத்தை தொடங்கியிருக்கிறது. அதன் டிஜிட்டல் உருமாற்ற நடவடிக்கையின்கீழ் செயற்கை நுண்ணறிவால் செயல்படுத்தப்படும் திட்டமாக இது இருக்கிறது. இந்த மூன்று டிஜிட்டல் செயல்பாடுகள் கீழ்கண்டவற்றைக் கொண்டிருக்கும்:  1. ‘DIA’, தானியியக்க செயல்பாடாக … Read more