கொடைக்கானல்-பழநி மலைச்சாலையில் 25 நாட்களுக்குப் பிறகு பஸ் போக்குவரத்து தொடக்கம்

கொடைக்கானல்: கொடைக்கானல்-பழநி மலைச் சாலையில் 25 நாட்களுக்குப் பிறகு பஸ் போக்குவரத்து தொடங்கப்பட்டது. இதனால் பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கொடைக்கானல்-பழனி மலைச்சாலையில் கடந்த மாதம் மலைப்பகுதியில் பெய்த தொடர் கனமழை காரணமாக மண்சரிவு ஏற்பட்டு சவரிக்காடு அருகே சாலை துண்டிக்கப்பட்டது. பின்னர் தற்காலிக சீரமைப்பு பணிகள் மேற்கொண்டதை அடுத்து சிறு ரக வாகனங்கள் சென்றுவர அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த பகுதியில் போக்குவரத்துக்கு தடையாக இருந்த பாறை வெடிவைத்து தகர்க்கப்பட்டது. இதையடுத்து 25 தினங்களுக்குப் … Read more

`இந்த ஆட்சியில் பெண்கள் வீட்டிலிருந்து வெளியில் செல்லவே அச்சப்படுகின்றனர்'- இபிஎஸ் அறிக்கை

தமிழகத்தில் வெடிகுண்டு கலாசாரத்தைத் தடுத்து நிறுத்தி, மக்கள் அச்சமின்றி வாழத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். தனது அறிக்கையில், “அதிமுக ஆட்சியில் தமிழகம் அமைதிப் பூங்காவாய் திகழ்ந்தது; சட்டத்தின் ஆட்சி நடைபெற்றது. தமிழகக் காவல்துறை சட்டப்படி, நியாயமாக, சுதந்திரமாக செயல்பட்டது. குற்றவாளிகள் இரும்புக் கரம் கொண்டு அடக்கப்பட்டனர்; மக்கள் அச்சமின்றி வாழ்ந்தனர். ஆனால், இந்த அரசு ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், தமிழகம் போதைப் பொருட்களின் கூடாரமாக மாறி உள்ளது. கொலை, கொள்ளை, பாலியல் … Read more

Flipcart- கிரெடிட் கார்டு மூலம் ஆர்டர் செய்த நபருக்கு.. டெலிவரியின் போது ஏற்ப்பட்ட அதிர்ச்சி.! 

ஸ்ரீபெரும்புதூரில் மொய்தீன் 35 வயது என்ற நபர் சிவன் தாங்கல் பகுதியில் வசித்து வருகிறார். இவர் ஒரு ஏசி மெக்கானிக் இவருக்கு ட்ரோன் கேமரா வாங்க வேண்டும் என்பதால் பிலிப்கார்ட் செயலியில் 790,64 ரூபாய்க்கு ஒரு ட்ரோன் கேமராவை ஆர்டர் செய்துள்ளார். இந்த கேமராவை அவர் வாங்க கிரெடிட் கார்டு மூலமாக பணம் செலுத்தி ஆர்டரை பிளேஸ் செய்துள்ளார். இன்று அவருக்கு பார்சல் டெலிவரி ஆகியுள்ளது. டோன் கேமரா கணமாக இருக்குமே இது என்ன மிகவும் லேசாக … Read more

மிஸ் தமிழ்நாடு பட்டம் வென்ற கட்டட தொழிலாளியின் மகள்!!

செங்கல்பட்டை சேர்ந்த கட்டிட தொழிலாளியின் மகள் மிஸ் தமிழ்நாடு பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார். திருக்கழுக்குன்றம் பகுதியை சேர்ந்த கட்டட தொழிலாளியான மனோகருக்கு ரக்ஷயா என்ற மகள் உள்ளார். கல்லூரி படிப்பை முடித்திருக்கும் அவருக்கு சிறுவயதில் இருந்தே அழகிப் போட்டியில் பங்கேற்று பட்டம் பெற வேண்டும் என்பது லட்சியம். பெற்றோர் கொடுத்த ஊக்கம் காரணமாக பகுதி நேர வேலை செய்தும் படித்தும் இதற்காக அவர் தன்னை தயார்ப்படுத்தி வந்துள்ளார். அதன்படி கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த மோனோ … Read more

சீமை கருவேல மரங்களை அகற்ற அனைத்து பஞ்சாயத்துகளுக்கும் அறிவுறுத்தல்: ஆட்சியர்களுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டுமென அனைத்து பஞ்சாய்த்துகளுக்கும் அறிவுறுத்தல்களை பிறப்பிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ள சென்னை உயர் நீதிமன்றம், மரங்கள் அகற்றியது தொடர்பாக மாதந்தோறும் அறிக்கை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் சீமை கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் தாக்கல் செய்த வழக்குகளை, வன பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் இரு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றி, தலைமை நீதிபதி தலைமையிலான மூன்று நீதிபதிகள் அடங்கிய முழு அமர்வு … Read more

ஆன்லைன் சூதாட்டம்: அவசர சட்டத்திற்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல்!

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய அவசரச் சட்டத்திற்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை, அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில், ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்ய அவசர சட்டம் இயற்றுவது உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. இந்நிலையில், ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய அவசரச் சட்டத்திற்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு … Read more

ஆட்சியை கலைத்தால் ரத்த ஆறு ஓடும் என்றார் – கருணாநிதியுடனான நினைவுகள் பகிரும் சு.சாமி

மதுரை காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க கட்டடத்தில் வைத்து பாரதிய ஜனதா கட்சியின் மூத்த நிர்வாகியான சுப்பிரமணியன் சுவாமியின் 83ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. பல்வேறு கட்சி நிர்வாகிகள், பிரமுகர்கள், தொழிலதிபர்கள் அவரை வாழ்த்தி பேசினர். இதையடுத்து மேடையில் பேசிய சுப்பிரமணியன் சுவாமி, “இரண்டு மூன்று ஆண்டுகளுக்குள் நாட்டில் மிகப்பெரிய மாற்றம் வர உள்ளது. நாட்டின் கலாசாரத்தை வெள்ளைக்காரர்கள் எரித்ததால் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கி சென்றோம். தற்போது அதிலிருந்து மீண்டு சொந்த காலில் … Read more

அய்யலூர் கோயில் அருகே குட்டையில் தேங்கும் கழிவுநீரை அகற்ற கோரிக்கை

வடமதுரை: திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகே உள்ள அய்யலூரில் திண்டுக்கல்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீ வண்டிகருப்பணசாமி கோயில் உள்ளது. இந்து சமய அறநிலைத்துறையின் கீழ் உள்ள இக்கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து கிடாவெட்டி பூஜை செய்கின்றனர். பின்னர் விருந்து முடிந்ததும் பாத்திரத்தை கழுவும் கழிவுநீர் அருகில் உள்ள குட்டையில் தேங்குகிறது. இதனால் அந்த குட்டையில் இருந்து துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் கழிவுநீர் தேங்கும் குட்டையில் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் இலை கழிவுகள் கொட்டப்படுவதால் கொசு  … Read more

`ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்துக்கு வழங்கிய அனுமதியை திரும்பப் பெறுக’ – திருமாவளவன் மனுதாக்கல்

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கிய உத்தரவை திரும்பப் பெறக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். தமிழகம் முழுவதும் 50க்கும் மேற்பட்ட இடங்களில் அக்டோபர் 2ம் தேதி அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி கோரி ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், பல்வேறு நிபந்தனைகளை விதித்து அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்கும்படி காவல் துறைக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை திரும்ப பெற … Read more

சாண்ட்விச் ஆபத்து? ராணிப்பேட்டையில் 3 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி

சாண்ட்விச் ஆபத்து? ராணிப்பேட்டையில் 3 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி Source link