‘இந்து தமிழ் திசை’ செய்தி எதிரொலி: கோவை வாலாங்குளத்தில் கரையில் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்

கோவை: ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் வெளியான செய்தியைத் தொடர்ந்து, கோவை வாலாங்குளத்தின் கரையில் இருந்த பிளாஸ்டிக் கழிவுகளை மாநகராட்சி தூய்மைப்பணியாளர்கள் இன்று (செப்.5) அப்புறப்படுத்தினர். கோவை வாலாங்குளத்தின் கரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் கான்கிரீட் தளங்கள் அமைக்கப்பட்டன. அதோடு, கரையை அழகுபடுத்துவதற்காக குளத்துக்குள் பல இடங்களில் மண்கொட்டி அதன் பரப்பளவை சுருக்கினர். குளத்துக்குள் நேரடியாக கழிவுநீர் கலப்பதை தடுக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அழகுபடுத்தும் பணியில் மட்டும் கவனம் செலுத்தியற்கு, அப்போது சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு … Read more

தப்பிய ஓபிஎஸ்… சிக்கிய விஜயபாஸ்கர்: புலம்பல் பின்னணி!

ஆறுமுகசாமி அறிக்கை பற்றிய விவகாரம்தான் தற்போது அதிமுகவினுள் ஹாட்டாப்பிக்காக ஓடிக் கொண்டிருக்கிறது. அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஜெயலலிதா 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ஆம் தேதி காலமானார். அவரது மரணம் குறித்து ஏராளமான சர்ச்சைகள் கிளம்பின. அந்த சமயத்தில் தர்மயுத்தம் மேற்கொண்ட ஓபிஸ், ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதி விசாரணை தேவை என்று வலியுறுத்தினார். சசிகலா உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் ஓரங்கட்டப்பட்டு, இபிஎஸ் – ஓபிஎஸ் அணிகள் இணைப்பின்போதும் இதே நிபந்தனையை அவர் முன்வைத்தார். அதன்படி, … Read more

அரிஸ்டாட்டில், அம்பேத்கரை மேற்கோள்காட்டி ஆசிரியர் தின வாழ்த்துகளை கூறிய சீமான்

அவர் விடுத்திருக்கும் வாழ்த்துச் செய்தியில், “ஒரு சிறிய நாட்டின் இளவரசன் அலெக்சாண்டரை உலகம் வெல்லும் அரசனாக மாற்றிய அரிஸ்டாட்டில் போல, எளிய குடும்பத்தில் பிறந்த பீமாராவை உலகமே வியக்கும் பேரறிஞராக மாற்றி, தன் பெயரையே தன் மாணவனுக்கு அளித்த ஆசிரியர் அம்பேத்கரைப்போல, உலகத்தின் மகத்தான மனிதர்களை உருவாக்கும் உலைக்களங்களாக ஆசிரியர்கள் திகழ்கிறார்கள். ஒரு தாய் தன் பிள்ளையைப் பத்து மாதங்கள்தான் கருவறையில் சுமக்கிறாள். ஆசிரியப்பெருமக்கள் அறிவுக்கருவறையில் பல ஆண்டுகள் சுமக்கிறார்கள். தாய் தன் குழந்தைக்கு இந்த உலகைக் … Read more

வெள்ளமோடியில் பரபரப்பு: வாகனம் மோதியதில் கோயில் இடிந்தது

குளச்சல்: மணவாளக்குறிச்சி அருகே உள்ளது வெள்ளமோடி. இங்கு மெயின்ரோட்டில் ஊய்க்காட்டு சிவசுடலைமாட சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலின் முன் பகுதியில் மாசானசுவாமி மண்டபம் கட்டப்பட்டு உள்ளது. இன்று காலை மண்டபம் இடிக்கப்பட்டு கிடந்தது. இதனை பார்த்த ஊர்மக்கள் அங்கு திரண்டனர். கோயிலை இடித்தவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மறியலில் ஈடுபட முயன்றனர். பின்னர் அங்கு அடையாளம் தெரியாத லாரி ரிவர்ஸில் திரும்பும்போது எதிர்ப்பாராமல் கோயிலில் மோதியதில்  இடிந்தது என்பது தெரிய வந்தது. இதனால் … Read more

"செங்கலை வைத்து அரசியல் செய்த உதயநிதி ஒரு செங்கலையாவது நட்டுள்ளாரா?" – விஜய பிரபாகரன்

சேலம் – சென்னை தேசிய நெடுஞ்சாலை வீடியோ கேம் போல் வளைந்து நெளிந்து உள்ளது என சேலம் ஆத்தூரில் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் விஜய பிரபாகரன் பேசினார். சேலம் மாவட்டம் ஆத்தூர் பழைய பேருந்து நிலையம் அருகில் தேமுதிக சார்பில் நதிநீர் இணைப்பு, ஆத்தூரை தலைமை இடமாகக் கொண்டு புதிய மாவட்டம், சேலம் சென்னை நான்கு வழிச்சாலையாக மாற்ற வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக தேமுதிக நிறுவன தலைவர் … Read more

“என் மீது வழக்கு போட வேண்டும் என்ற அழுத்தமே சிபிஐ அதிகாரியை தற்கொலைக்கு தூண்டியது”- மணீஷ் சிசோடியா

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலும், துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவும் தனியார் நிறுவனங்களுக்கு பலன் அளிக்கும் வகையில் பல நூறு கோடி ரூபாய் கமிசன் பெற்றுள்ளதாக பாஜக ஸ்டிங் வீடியோவை வெளியிட்டது. இது நடந்த சில மணி நேரங்களில், மத்திய அரசை சிசோடியா கிழித்தெறிந்தார். இது குறித்து சிசோடியா, கடந்த இரு தினங்களுக்கு முன்பு சிபிஐயில் ஊழல் தடுப்பு பிரிவில் பணியாற்றிய சட்ட அதிகாரி் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவரது பெயர் ஜிரேந்திர குமார். என் மீது … Read more

"கப்பலோட்டிய தமிழன்" திரைப்படம் நவீன தொழில்நுட்பத்தில் திரையிடப்பட்டது!

கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரனாரின் 151-வது பிறந்த நாளினை முன்னிட்டு, கப்பலோட்டிய தமிழன் திரைப்படம் நவீன தொழில்நுட்பத்தில் மீட்டுருவாக்கம் செய்து திரையிடப்பட்டது. வ.உ.சிதம்பரனாரின் 150-வது பிறந்தநாளினை முன்னிட்டு, சென்னையில் அன்னாரின் திருவுருவச் சிலை நிறுவப்படும் என்றும் வ.உ.சிதம்பரனாரின் வாழ்க்கை வரலாற்றை அனைவரும் அறியும் வகையில் ஒலி-ஒளி காட்சி அமைக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில், வ.உ.சிதம்பரனாரின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் கப்பலோட்டிய தமிழன் திரைப்படம் நவீன … Read more

“அண்ணா நூற்றாண்டு நூலகம்… இந்தியாவின் பெருமை” – பார்வையிட்ட கேஜ்ரிவால் புகழாரம்

சென்னை: சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தைப் பார்வையிட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், “அண்ணா நூற்றாண்டு நூலகம் தமிழகத்தின் பெருமை மட்டுமல்ல, இந்தியாவின் பெருமை” என்று கூறியுள்ளார். சென்னை வந்துள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கோட்டூர்புரத்தில் அமைந்துள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தினை தமிழக முதல்வர் ஸ்டாலினுடன் சென்று பார்வையிட்டார். அதன்பின்னர், அரசு மாதிரிப் பள்ளி மாணவர்களுடன் அரவிந்த் கேஜ்ரிவால் கலந்துரையாடினார். பின்னர், அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் முதல் தளத்தில் குழந்தைகளுக்கான பிரிவு, அங்கு … Read more

எஸ்.பி.வேலுமணி மனு விசாரணைக்கு உகந்ததல்ல: தமிழக அரசு வாதம்!

டெண்டர் முறைகேடு வழக்கை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல எனவும், மத்திய அரசு வழக்கறிஞர் எப்படி வேலுமணிக்கு ஆதரவாக ஆஜராகலாம் எனவும் தமிழக அரசு த்தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. முந்தைய அதிமுக ஆட்சியில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் வழங்கியதில் நடந்த முறைகேடு தொடர்பாக முன்னாள் அமைச்சர் வேலுமணி உள்ளிட்டோருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த … Read more

ஆதரவாளரை சந்தித்து பண உதவி அளித்த முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி!

முன்னாள் மத்திய உரத்துறை அமைச்சராகவும், கலைஞர் கருணாநிதியின் மூத்த மகனுமான மு.க.அழகிரி கட்சியில் இருந்து நீக்கப்பட்டதில் இருந்தே அமைதியாக இருந்து வருகிறார். இந்நிலையில் கடந்த திமுக ஆட்சியின் போது மதுரை மாநகராட்சி முன்னாள் வடக்கு மண்டல தலைவராகவும், மு.க.அழகிரியின் தீவிர ஆதரவாளருமான இசக்கி முத்து என்பவர் விபத்து ஒன்றில் சிக்கி உடல்நலக்குறைவு காரணமாக வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.  இந்நிலையில் தனது ஆதரவாளரான இசக்கி முத்துவை முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மதுரை கொடிக்குளம் பகுதியில் உள்ள அவரது … Read more