வேலுமணி, விஜயபாஸ்கரை குறிவைத்த லஞ்ச ஒழிப்புத் துறை: எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, சி.விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்கள், அவர்களுக்கு நெருக்கமானவர்களின் இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “இன்றைய திராவிட மாடல் ஆட்சியாளர்கள், திராவக மாடல் ஆட்சியாளர்களாக மாறி, தமிழக மக்களின் நலன்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார்கள். வரிகளை விதிப்பது, அதிமுக ஆட்சியின்போது செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை மூடுவது, ஊழல் ஆட்சிக்கு … Read more

'பழிவாங்குவதில் கருணாநிதியை மிஞ்சிய ஸ்டாலின்' – ரெய்டு குறித்து சீறிய சி.வி. சண்முகம்

சென்னை: அதிமுக முன்னாள் சட்டத்துறை அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி. சண்முகம், சென்னை அடையாரில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர்  சி. விஜயபாஸ்கர் வீட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கும், லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையை பார்வையிட்டார். அதனை தொடர்ந்து,செய்தியாளரை சந்தித்த அவர்,”இந்த சோதனை, அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக நடத்தப்படுகிறது. இது ஒரு பழி வாங்கும் நடவடிக்கை. ஏற்கனவே இதுபோன்று இரண்டு முறை சோதனை நடத்தினார்கள். ஆனால், அதில் எந்த ஆவணமும் கைப்பற்ற முடியாத நிலையில், இன்று மீண்டும் புதிதாக வழக்குகள் போடப்பட்டு, … Read more

அதிமுக ஆட்சியில் 10 ஆண்டாக காத்திருக்கும் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் பணி தீவிரம்

வலங்கைமான் : அதிமுக ஆட்சியில் 10 ஆண்டாக காத்திருக்கும் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கம் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதைதொடர்ந்து வலங்கைமான் விவசாயிகள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்துள்ளர்.டெல்டா மாவட்டங்களில் பெரிய அளவில் நெல் சாகுபடியை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நெல் சாகுபடிக்கு விதைத்த நாள் முதல் அறுவடைக்கு ஒரு வாரம் வரை தொடர்ச்சியாக தண்ணீர் தேவைப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக தென்மேற்கு பருவமழை குறைவின் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து … Read more

”ஒட்டகம் மேய்க்கவிட்டார்கள்”.. குவைத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர்.. பகீர் சம்பவம்!

காய்கறி கடைவைத்து நஷ்டமடைந்து அந்தக் கடனை அடைக்கவும் தம் பிள்ளைகளுக்கு நல்ல கல்வியை கொடுக்கவும் குவைத் நாட்டிற்கு வேலைக்குச் சென்ற தமிழர் சுட்டுக் கொல்லப்ப்பட்டது பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் தாலுகா லட்சுமாங்குடியில் வசித்து வரும் ராஜப்பா என்பவரின் ஒரே மகன் முத்துக்குமரன் (42). இவருக்கு வித்யா என்ற மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர். இதில், ஒரு மகன் 12 ஆம் வகுப்பும் ஒரு மகன் மூன்றாம் வகுப்பும் படித்து வருகிறார்கள். இந்த நிலையில் … Read more

எத்தனை பொய் வழக்குகள் போட்டாலும் சட்டப்படி எதிர்கொள்வோம் – எடப்பாடி பழனிசாமி!

முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில் மூன்றாவது முறையாக நடைபெற்ற சோதனைக்கு, அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். 39 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தியது குறித்து அறிக்கை வெளியிட்ட அவர், எத்தனை பொய் வழக்குகள் போட்டாலும் , அதனை சட்டப்படி எதிர்கொள்வோம் என குறிப்பிட்டார். Source link

சிறுநீரக சிகிச்சையில் அலட்சியம்- பாதிக்கப்பட்டவருக்கு ரூ.18 லட்சம் வழங்க உத்தரவு

கரூர்: சிறுநீரக கல்லுக்கு சிகிச்சை அளித்தபோது சிறுநீர்க் குழாயில் ஏற்பட்ட துவாரத்தை நோயாளியிடம் தெரிவிக்காமல் மறைத்த தனியார் மருத்துவமனை மருத்துவர், நோயாளிக்கு ரூ.18 லட்சம் இழப்பீடு வழங்க மாவட்ட நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கரூர் சுங்கவாயில் பகுதியைச் சேர்ந்தவர் நல்லாத்தாள்(47). இவருக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இவருக்கு இடுப்பு பகுதியில் தீராத வலி இருந்ததால் கரூர் பிரம்மதீர்த்தம் சாலையில் உள்ள தனியார் சிறுநீரக சிறப்பு மருத்துவமனைக்கு கடந்த 2015ம் ஆண்டு ஜனவரி 22ம் தேதி சிகிச்சைக்கு … Read more

கோயில் திருவிழாவில் அதிர்ச்சி தந்த ஆபாச ஆடல் பாடல் நிகழ்ச்சி!

கோயில் திருவிழாக்களில் நடைபெறும் கலை நிகழ்ச்சிகளில் ஆபாச நடனமோ, பேச்சுக்களோ இருக்கக் கூடாது என மதுரை உயர்நீதிமன்ற கிளை கடந்த 3 நாட்களுக்கு முன்பு உத்தரவிட்டது. இவ்வாறு உத்தரவு பிறப்பித்து மூன்று நாட்களே ஆன நிலையில், நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் பகுதியில் கோவில் திருவிழாவில் ஆபாச நடன நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள பழைய பள்ளிபாளையம் பிரதான சாலையில் அமைந்துள்ள பெரிய மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கடந்த வியாழக்கிழமை அன்று … Read more

ஒன்றிய அரசை கண்டித்து முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்து நூதன போராட்டம்

மதுரை : சாதிவாரி கணக்கெடுப்பு, பொருளாதார இடஒதுக்கீடு உத்தரவை ரத்து செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சமூகநீதி கூட்டமைப்பினர் மதுரையில் முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் நூதன போராட்டம் நடத்தினர்.ஒன்றிய அரசு சாதி வாரி கணக்கெடுப்பு எடுக்கவில்லை. புள்ளிவிவர சேகரிப்பு இல்லாமலும், எந்த ஒரு பரிந்துரையும் இல்லாமலும், பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்காக அறிவிக்கப்பட்ட 10 சதவீத இட ஒதுக்கீடு சட்டத்தை உடனே ரத்து செய்ய வேண்டும். பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், ஆதிதிராவிடர், பழங்குடியின மக்களின் கோரிக்கையை உடனடியாக ஒன்றிய … Read more

திருப்பாசேத்தி கோயில் காளை உயிரிழப்பு: லீவ் போட்டு காளையை நல்லடக்கம் செய்த கிராம மக்கள்!

திருப்பாசேத்தி அருகே கோயில் காளை உயிரிழந்ததால், அந்த கிராம மக்கள் அனைவரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே அமைந்துள்ளது காணுர் கிராமம். சுமார் 500 குடும்பத்தினர் வசிக்கும் இக்கிராமத்தில் அமைந்துள்ளது சமய கருப்பர் சுவாமி திருக்கோயில். ஊர் மக்களின் குலதெய்வமாகவும், காவல் தெய்வமாகவும் போற்றப்படும் இத்திருக்கோயிலில், கடந்த 2009 ஆண்டு முதல் கோயில் காளையொன்று வளர்க்கப்பட்டது. நாட்டு இனத்தை சேர்ந்த இக்கோயில் காளை, பல்வேறு மஞ்சுவிரட்டுப் போட்டிகளில் வெற்றி வாகை சூடியுள்ளது. ஊர் மக்களின் … Read more

கோவையில் எந்தெந்த இடங்களில் ரெய்டு?

கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வீட்டில் இலஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தி வருவதை கண்டித்து, அவரது வீட்டின் முன்பு திரண்டு போராட்டம் நடத்திய அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் எஸ்.பி.வேலுமணி உள்ளாட்சித் துறை அமைச்சராக பதவி வகித்தார்.தற்போது கோவை தொண்டாமுத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்து வருகிறார். இதனிடையே கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் வருமானத்திற்கும் அதிகமாக சொத்து சேர்த்த புகார் மற்றும் ஸ்மார்ட் … Read more