எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் வீடுகளில் ரெய்டு: இந்த முறை என்னென்ன சிக்கும்?

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான கோவை சுகுணாபுரம், தொண்டாமுத்தூர், வடவள்ளி உள்ளிட்ட இடங்களில் உள்ள வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது. கிராமப்புறங்களில் தெருவிளக்குகளை எல் இ டி விளக்குகளாக மாற்றியதில் 500 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக வழக்கு பதிவு செய்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சென்னை, கோவை, புதுகோட்டை, சேலம், தேனி, மதுரை, திருவள்ளூர், திருச்சி, செங்கல்பட்டு … Read more

திருத்தணி அரசு பள்ளி பழைய கட்டிடத்தில் சமூக விரோத செயலால் மக்கள் அச்சம்

திருத்தணி: திருத்தணி ஆறுமுகசுவாமி கோயில் பகுதியில் செயல்படாமல் உள்ள அரசு பள்ளி கட்டிடத்தில் சமூகவிரோத செயல்கள் நடப்பதால் மக்கள் அச்சத்துடன் உள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஆறுமுகசுவாமி கோயில் தெரு பகுதியில் கடந்த 45 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 10 ஏக்கர் பரப்பளவில், அப்போதைய முதல்வர் கருணாநிதியால் அரசு பொது மருத்துவமனை திறக்கப்பட்டது. இதன் பின்னர் இந்த மருத்துவமனையின் பழைய கட்டிடத்தில் டாக்டர் ராதாகிருஷ்ணன் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பள்ளியின் கிளை பள்ளி தொடங்கப்பட்டு மாணவர்களுக்கு பாடம் … Read more

"அதிமுக-வை அழிக்க நினைக்கும் திமுகவிற்கு இடம் கொடுத்துவிடக் கூடாது" – சசிகலா

”முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறப்புக்கு பின் கட்சியின் இக்கட்டான சூழலில் ஆட்சியை காப்பாற்ற உங்கள் பகுதியைச் சேர்ந்த கழக நிர்வாகியை முதல்வர் ஆக்கினேன்” என ஆத்தூரில் நடைபெற்ற புரட்சி பயணம் பிரச்சாரத்தின் போது சசிகலா பேசினார். புரட்சி பயணம் என்ற தலைப்பில் இரண்டு நாள் சுற்றுப் பயணமாக சேலம் மாவட்டத்திற்கு வி.கே.சசிகலா வருகை தந்துள்ளார். அப்போது மாவட்ட எல்லையான தலைவாசலில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து ஆத்தூர் மணிக்கூண்டு பகுதியில் வேனில் இருந்தபடி பொதுமக்களிடையே பேசினார். … Read more

சமூக ஆர்வலர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்,.. தமிழக அரசுக்கு மக்கள் நீதி மய்யம் கோரிக்கை..!

கரூரில் சட்டவிரோதமாக நடைபெறும் கல்குவாரிகளை மூட கோரி போராட்டத்தில் ஈடுப்பட்ட சமூக ஆர்வலரை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், சமூக ஆர்வலர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என மக்கள் நீதிமையம் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,  கரூர் மாவட்டம் க.பரமத்தி, குப்பம் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஜெகநாதன், சட்டவிரோத கல்குவாரிகள் தொடர்பாக கனிமவளத் துறை அதிகாரிகளிடம் புகார் அளித்து, நடவடிக்கை எடுக்கச் செய்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த கல் … Read more

தமிழகத்தில் பிறக்க ஆசை – உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி உருக்கம்

‘சென்னை: ‘தமிழக மக்களின் பாசமிகு நினைவுகளைச் சுமந்து செல்கிறேன்; என்னை மறந்துவிட வேண்டாம்’’ என தனது பிரிவுபசார விழாவில் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக கடந்த ஆண்டு நவ.22-ம் தேதி நியமிக்கப்பட்ட நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, கடந்த பிப்ரவரி மாதம் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார். அதன்படி, சுதந்திர இந்தியாவில் சென்னை உயர் நீதிமன்றத்தின் 32-வது தலைமை நீதிபதியானார். சென்னை … Read more

கும்மிடிப்பூண்டியில் கன்னிகா பரமேஸ்வரி ஆலய தீ மிதி திருவிழா

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி பேருராட்சி, 15வது வார்டுக்கு உட்பட்ட மேட்டு காலனி கிராமத்தில் உள்ள ஸ்ரீகன்னிகா பரமேஸ்வரி திருக்கோயிலில் நேற்றுமுன்தினம் மாலை 7ம் ஆண்டு தீ மிதி திருவிழா நடைபெற்றது. காப்பு கட்டிய 72 பக்தர்கள் வேப்பிலை அணிந்து, நாக்கில் வேல் தரித்து ஆலயத்தை வலம் வந்தனர். இதைத் தொடர்ந்து, ஒவ்வொரு பக்தராக தீக்குண்டத்தில் இறங்கி, தங்களின் நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் மேட்டு காலனி உள்பட சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை … Read more

மதுரை || கணவருடன் ஏற்பட்ட பிரச்சனையில் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை.!

மதுரை மாவட்டத்தில் கணவருடன் ஏற்பட்ட பிரச்சனையில் மனைவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் சின்ன பாலமேடு பகுதியை சேர்ந்தவர் பிரபு. இவரது மனைவி கருப்பாயி(25). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் இந்நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு காரணமாக பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனமுடைந்த கருப்பாயி வாழ்க்கையில் வெறுப்படைந்து, சம்பவத்தன்று இரவு வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதையடுத்து இந்த … Read more

பணத்துக்காக கணவனுக்கு திருமணஜோடி தேடிய களவாணி மனைவி கைது..!

கோவையில் சுங்க இலாக்கா அதிகாரி எனக்கூறி மனைவியின் துணையுடன் நகை பணத்துக்காக வேறொரு பெண்ணை திருமணம் செய்ய முயன்ற சம்பவத்தில் மோசடி கணவன் மனைவி போலீசாரால் கைது செய்யப்பட்டனர்… கோவை அருகே உள்ள வீரபாண்டி பகுதியை சேர்ந்தவர் ராமு. ஒரு தனியார் நிறுவனத்தில் மென் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். ராமு திருமண தகவல் மையம் மூலம் கிடைத்த தகவலின் பேரில் 31 வயது பெண்ணின் கைபேசி எண்ணை தொடர்பு கொண்ட ராமு, தான் சுங்க இலாகாவில் அதிகாரியாக … Read more

135 கோயில்களில் திருப்பணிகள் – வல்லுநர் குழு ஒப்புதல்

சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்தில் தொன்மையான கோயில்களை பழமை மாறாமல் புதுப்பித்தல் தொடர்பான மாநில அளவிலான வல்லுநர் குழு கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில், திருப்பணி இணை ஆணையர் பொ.ஜெயராமன், தலைமை பொறியாளர் கே.தட்சிணாமூர்த்தி, ஆகம வல்லுநர் குழு உறுப்பினர் கோவிந்தராஜ பட்டர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தேனி மாவட்டம், பெரியகுளம் வெங்கடாஜலபதி கோயில், உப்புக்கோட்டை செல்லாண்டியம்மன் கோயில், தூத்துக்குடி மாவட்டம், கிளவிப்பட்டி விநாயகர் கோயில், திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி, இசக்கி … Read more

கும்பாபிஷேகம்

பொன்னேரி: பொன்னேரி அருகே பெரும்பேடு கிராமத்தில் புகழ்பெற்ற மிகப் பழமையான  ஸ்ரீசௌந்தரவல்லி சமேத ஸ்ரீஹரிகிருஷ்ண பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் நேற்று பிரகஸ்பதி ஸ்ரீஊ.வே.சந்தான பட்டாச்சாரியார் தலைமையில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பி.வி.வெங்கடரங்கம், பி.வி.கோவிந்தராஜ பட்டாச்சாரியார் முன்னிலை வகித்தார். இதன் தொடர்ச்சியாக நைமித்தக ஆராதனம், திருமஞ்சனம், யாகசாலை, நித்ய ஹோமம் உள்ளிட்ட கலச பூஜைகளுடன் புண்ணிய நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் கொண்டு கோபுர கலசங்களுக்கும் சௌந்தரவல்லி சமேத ஹரிகிருஷ்ண பெருமாளுக்கும் புனிதநீர் ஊற்றி … Read more