பள்ளியின் சுற்றுச் சுவரை இடிக்க கிராம மக்கள் எதிர்ப்பு

திருவண்ணாமலை: நீலந்தாங்கல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ரூ.5.83 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட சுற்று சுவரை இடிக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் ஒன்றியம் நீலந்தாங்கல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், மாணவர்களின் பாதுகாப்புக்கு சுற்றுச்சுவர் அமைத்து கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அதன்படி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.5.83 லட்சம் மதிப்பில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சுற்றுச்சுவர் கட்டப்பட்டது. இதற்கிடையில் கிராம … Read more

கல்வித்துறை திடீர் உத்தரவு; பள்ளி ஆசிரியர்கள் ஹேப்பி!

தமிழ்நாடு முழுவதும் பள்ளி கல்வித் துறை மூலம் எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. இதன் நிர்வாகம் பள்ளிக் கல்வி துறையிடம் இருந்தாலும் பள்ளிகளின் வளாகங்களில் உள்ள அங்கன்வாடி மையங்களில் தான் எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் நடைபெற்று வந்தது. அந்தவகையில் தமிழ்நாடு முழுவதும் 2,381 எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. இதற்கிடையே இந்த ஆண்டு முதல் எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் மூடப்படுவதாக கடந்த ஜூன் மாதம் திடீரென அறிவிக்கப்பட்டது. தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு கடுமையான … Read more

காரைக்கால்மேடு மீனவ கிராமத்தில் வீட்டு மாடியில் இயற்கை விவசாயம்: காய்கறி, பழம், பூக்கள் பயிரிட்டு இன்ஜி. பட்டதாரி அசத்தல்

காரைக்கால்: புதுச்சேரி யூனியன் பிரதேசம், காரைக்கால் மாவட்டத்தில் உள்ள மீனவ கிராமங்களில் ஒன்றான காரைக்கால் மேடு கிராமத்தைச் சேர்ந்தவர் சிவில் இன்ஜினியரிங் பட்டதாரி குணபாலன்(23). குணபாலனுடன் பள்ளி மற்றும் கல்லூரியில் படித்த அப்பகுதியை சேர்ந்த மாணவர்கள் பெரும்பாலும் தனது மூதாதையர்களின் பூர்விக தொழிலான மீன்பிடி தொழிலிலேயே ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் குணபாலன் சிவில் இன்ஜினியரிங் படித்து முடித்துவிட்டு திடீரென விவசாயத்தின் மீது ஆர்வம் ஏற்பட்டுள்ளது. ஆனால் குனபாலனிடம் விவசாயம் செய்யும் அளவிற்கு தேவையான நிலம் அவரிடம் இல்லை.அவர் … Read more

காதலிப்பதை நிறுத்தியதால் தாக்கப்பட்ட 10ம் வகுப்பு மாணவி சோக முடிவு! இளைஞர் கைது

திருவாரூர் அருகே காதலிக்க மறுத்ததால் பொது இடத்தில் தாக்கப்பட்ட பத்தாம் வகுப்பு மாணவி மனமுடைந்து தற்கொலை செய்துக்கொண்ட நிலையில், அதற்கு காரணமான இளைஞர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார். திருவாரூர் மாவட்டம் காட்டூர் அருகே விலாகம் பகுதியைச் சேர்ந்த 14 வயதான சிறுமி ஒருவர், அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவரும் அதேப் பகுதியைச் சேர்ந்த பாலிடெக்னிக் படித்த தீன தயாளன் (18) என்பவரும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இவர்களின் காதல் விவகாரம் … Read more

மத்திய அரசின் திட்டங்களை தமிழக அரசு முறையாக செயல்படுத்தி வருகிறது: மத்திய அமைச்சர் பாராட்டு

மதுரை: மதுரையில் இன்று மத்திய உரம் மற்றும் ரசாயனத் துறை அமைச்சர் பக்வந்த் குபா தலைமையில் அரசு பயணியர் விடுதியில் மத்திய அரசின் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன்ஜித் சிங் காலோன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மத்திய அரசின் திட்டங்கள் பயனடைந்த பயனாளிகளிடம் மத்திய அமைச்சர் கலந்தாலோசனை செய்தார். அவர்களின் கருத்துகளை கேட்டறிந்தார். மற்றும் பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார். பின்னர் … Read more

இபிஎஸ் சொன்ன ஸ்ட்ராங்க் மெசேஜ்… ஓபிஎஸ் அன்கோ செம அப்செட்!

ஒற்றை தலைமை யுத்தத்தின் விளைவாக இபிஎஸ் அணி, ஓபிஎஸ் அணி என ரெண்டுபட்டு கிடக்கிறது அதிமுக. இந்த யுத்தத்தில் அரசியல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் இன்றைய தேதியில் வெற்றி பெற்று அதிமுகவின் இடைககால பொதுச் செயலாளராக இருந்து வருகிறார். ஆனால், ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஓபிஎஸ்சின் மேல்முறையீட்டு வழக்கு, கட்சி் தலைமை பொறுப்புக்கு உரிமை கோரி இருதரப்பினரும் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ள மனு … Read more

சாலையோர முட்செடிகளால் விபத்து அபாயம்

பட்டிவீரன்பட்டி: திண்டுக்கல்லிருந்து 36 கிமீ தொலைவில் வத்தலக்குண்டு உள்ளது. கடந்த 2010ல் ரூ.333.18 போடி மதிப்பில் திண்டுக்கல்-குமுளி வரையிலான இருவழிச்சாலை அமைக்கும் பணி தொடங்கியது. தற்போது இப்பணி பெருமளவில் முடிவடைந்துள்ளது. இந்நிலையில் திண்டுக்கல்-வத்தலக்குண்டு இடையே சாலையின் இருபுறமும்  சீமைக்கருவேல முட்செடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இதனால் முட்செடிகளுக்கு பயந்து டூவீலர் ஓட்டுனர்கள் சாலையின் நடுவில் செல்ல வேண்டியுள்ளது. இதன் காரணமாக கனரக வாகனங்களில் சிக்கி டூவீலர் ஓட்டுனர்கள் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சேவுகம்பட்டி பிரிவு பகுதியில் முட்செடிகள் … Read more

நித்யானந்தா போல தோற்றம் அளிக்கும் சாமியாருக்கு வந்த ‘சோதனை’

திருப்பூர்: நித்யானந்தா என நினைத்து, அவரது தோற்றத்தில் இருந்தவரின் ஆசிரமத்தை சேதப்படுத்தியதாக கூறி பல்லடம் காவல் நிலையத்தில் பாஸ்கரானந்தா எனபவர் இன்று புகார் அளித்தார். திருப்பூர் மாவட்டம் பல்லடம் காவல் நிலையத்துக்கு நேற்று சொகுசு காரில் நித்யானந்தா தோற்றத்தில் சாமியார் ஒருவர் வந்திறங்கினார். அவர் பெயர் பாஸ்கரானந்தா. கோவை செல்வபுரத்தை சேர்ந்த இவர், தமிழகம் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு இடங்களுக்கு சென்று ஆன்மிக பணி மேற்கொண்டு வந்துள்ளார். திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த கரணம்பேட்டை அருகே செல்வகுமார் … Read more

பருவ மழையினால் சென்னை கடுமையாக பாதிக்கப்படும்; பகீர் கிளப்பும் ஈபிஎஸ்

சேலம் எடப்பாடி நகராட்சி 12 வது வார்டு திமுக உறுப்பினர் ரவி தலைமையில் 150க்கும் மேற்பட்டோர் பல்வேறு மாற்று கட்சிகளில் இருந்து விலகி எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். அதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது; அதிமுகவிற்கு எதிராக செயல்படும் நபர்களுக்கு கட்சியில் 100 சதவீதம் இடமில்லை. அதிமுகவை முடக்க வேண்டும் என நினைப்பவர்கள் காற்றில் கரைந்து போவார்கள் என கூறினார். மேலும், ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய கொண்டுவரப்பட்டுள்ள அவசர சட்டத்தை விரைந்து செயல்படுத்த … Read more

திருப்பூரில் கெட்டுப்போன உணவு உட்கொண்டு சிகிச்சை பெற்று மாணவர்களை செய்தி துறை அமைச்சர் மு.பெ சாமிநாதன் நேரில் கண்டு நலன் விசாரிப்பு

திருப்பூர்: திருப்பூரில் கெட்டுப்போன உணவு உட்கொண்ட 3 சிறுவர்கள் உயிரிழந்ததையடுத்து சிகிச்சை பெற்று மாணவர்களை செய்தி துறை அமைச்சர் மு.பெ சாமிநாதன் நேரில் கண்டு நலன் விசாரித்தார்.இதுகுறித்து அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது; ‘மூன்று மாணவர்கள் உடல் நலக்குறைவால்  உயிரிழந்தனர். நான்கு மாணவர்களுக்கு மட்டும் இன்னும் காய்ச்சல் குறையாத நிலையில் தனியாக சிகிச்சை பெற்று வருகின்றனர். நல்லமுறையில் சிகிச்சை வழங்கபட்டு குணமடைந்து வருகின்றனர். மீதுமுள்ள சிறுவர்கள் நல்லமுறையில் வீட்டுக்கு செல்லகூடிய அளவில் உள்ளனர்.. உயிரிழந்த மூன்று சிறுவர்களின் … Read more